அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 8, 2012

நல்லூர் முருகனின் 15ஆம் நாள் திருவிழாவில் பிறந்த பிறப்பின் பயனைப் பெற்றேன்!

நேற்று 07.08.2012 செவ்வாய்க் கிழமை நல்லைக் கந்தனுடைய 15ஆம் நாள் திருவிழா. மாலைத் திருவிழாவில் வேற்பெருமானும் தேவியர் இருவரும் அடியார்களின் திருமுறைப் பாராயணத்துடன் உள்வீதியில் எழுந்தருளியபோது அடியேனுக்கும் அதில் பங்குபெறும் பாக்கியம் கிடைத்தது!
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து முன்னம் நீ புரி நல்வினைப் பயனி......என்ற சம்பந்தரின் தேவாரப் பாடலுக்கு ஒப்ப வாழ்க்கையிலே என்றும் கிடைக்கப்பெறாத அந்த அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. நல்லூர்க் கந்தனுடைய திருவருளினையும் அத்தலத்தின் பெருமையையும் நாம் தொடர்ந்தும் அனுபவித்தும் கட்டிக்காத்தும் வருவோமாக!
நன்றி - நல்லூரான்.கொம்

Tuesday, August 7, 2012

சிறப்பாக நடந்த நல்லைக் குமரன் மலர் வெளியீடு!

நேற்றைய தினம் (06.12.2012 திங்கட்கிழமை) காலையில் நாவலர் கலாச்சார மண்டபத்தில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் திரு. செ . பிரணவநாதன் அவர்களின் தலைமையில் நல்லைக் குமரன் மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு பிரதம விருந்தினராக மாநகர சபை முதல்வர் திருமதி. யோ. பற்குணராசா கலந்துகொண்டார். நல்லை குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சின்மயாமிஷன் சுவாமி சைதன்யானந்தா மற்றும் பருத்தித்துறை சாரதா சேவாச்சிரம சுவாமிகள் சித்டூபானந்தா ஆகியோரின் ஆசியுடன் ஆரம்பித்த விழாவில் பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து வழமைக்கு மாறாக இம்முறை நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபையினருக்கு யாழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 20ஆவது நல்லைக் குமரன் மலரின் வெளியீட்டுரையை பதிப்பாசிரியரும் வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான திரு. ந. விஜயசுந்தரம் கழ்த்தி வெளியிட்டு வைத்தார். முதற்பிரதியை வழமைபோல தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தினர் பெற்றுக் கொண்டனர். ஆய்வுரையை பேராசிரியர் திரு. கி. விசாகரூபன் அவர்கள் நிகழ்த்தினார். பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.