




நன்றி - வலம்புரி
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.







ஒரு தடவை சரியாக எந்த ஆண்டு என்று ஞாபகமில்லை 1985 அல்லது 1986 ஆக இருக்க வேண்டும் தீர்த்த நாளன்று அதிகாலை 4மணிக்கு எழுந்து காலைக்கடன் முடித்து கோவிலுக்கு வந்தால் கோவிலின் பிரதான வாசற்கதவு பூட்டப்பட்டிருந்தது! பக்தர்கள் கோவிலின் வாசற்கதவை முண்டியடித்தபடி இருந்தனர்! உள்ளே பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இயக்க இளைஞர்கள் சிலர் கோவில் கூரையின் மேல் எதையோ தேடுவதுபோல இருந்தது! நாங்கள் ஒரு 5,6 தொண்டர்கள் என்னவென அறிவதற்கு முயற்சி எடுத்தோம். கோவிலினுள் யாரோ குண்டு வைத்துவிட்டார்கள் என்ற கதை அடிபட்டது! நானும் ஓரிரு தொண்டர்களும் வாயிற்கதவுக்கு போய் பக்தர்களை அமைதிப்படுத்துவது என முடிவு செய்தோம். மிகவும் சிரமப்பட்டு நெரிசலுக்கு மத்தியில் வாயிற் கதவையடைந்தோம். இரும்புக் கதவை தள்ளியபடி கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது! நாங்கள் அவர்களுக்கும் கதவுக்கும் இடையில் சென்று கூட்டத்தை சற்றுப் பின்னகர்த்தி இருக்கும்படி சொன்னோம்! பக்தர்களில் பலர் எமது கருத்தை ஏற்று அமர்ந்திருந்தனர். ஒரு சில வயதான ஆண்கள் இருத்தி என்னத்தைச் சாதிக்கப் போகிறீர்கள் என்று கோபமாகக் கேட்டனர். நீங்கள் நின்று என்ன சாதிக்கிறீர்கள் என்று நான் பதிலுக்குக் கேட்டேன். முருகன் மீது உண்மையான பக்தி வைத்து விரதமிருந்தால் எப்படியும் தீர்த்தம் நாம் பார்க்கலாம்! என்று சொல்லி அடக்க முடியாத கோபத்தால் எனக்கு அழுகையும் வந்து விட்டது. ஒரு சில வயதானவர்கள் தம்பி இவர்களைத் திருத்த முடியாது நீர் ஏன் இவர்களுடன் சண்டையிடுகிறாய் என எனக்குப் பரிந்து பேசினார்கள்! இப்படி நாமும் அவர்களும் சண்டைபிடித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே கோவிலினுள் ஒன்றும் இல்லை என கோவிற்கதவையும் திறந்து விட்டார்கள்! தீர்த்தம் மிகச் சிறப்பாக நடைபெற்றது!
யாழ் மாநகர சபையால் மிகத் துரிதமாகப் புனரமைக்கப்பட்ட சங்கிலி மன்னனின் உருவச்சிலை இன்று 03.08.2011 புதன்கிழமை காலை 7.15மணியளவில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது!
யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி வரவேற்பு நடனத்தையும் வழங்கினர். உருவச் சிலையைத் திரைநீக்கம் செய்து மலர்மாலை சாற்றிய கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பின்னர் சிலையின் கீழிருந்த நினைவுப் பெயர் நடுகல்லையும் திறந்து வைத்தார்.

பிரதம விருந்தினர் உரையில் அமைச்சர் - இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான நாளாகும். யாழ்ப்பாணத்தில் சங்கிலிய மன்னனின் உயிரோவியச் சிலை மட்டுமன்றி மந்திரிமனை, நுழைவாயில், ஜமுனாரி தேக்கம் என்பனவும் தமிழர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் விரைவில் புனரமைக்கப்படுமெனவும், தலைவர்கள் சமயப் பெரியார்கள் சமூகத்தின் முன்னோடிகள் ஆகியோரின் சிலைகளும் யாழ்.மாநகர எல்லைக்குற்பட்ட பகுதிகளில் நிறுவப்படுமெனவும் மந்திரி மனையில் கலைக்கூடமொன்றை நிறுவி அதனூடாக கலை நுணுக்கங்களை வெளிக்கொணரும் கலைச்சேவை செய்யப்படவுள்ளதுடன் பண்பாடுகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் உறுதிபடத் தெரிவித்தார். 
இந்நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் சமயத் தலைவர்களுட்பட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ் பல்கலைக்கழகத் துணை வேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம், ஈபிடிபியின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ முருகேசு சந்திரகுமார், கௌரவ. சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), மாநகரசபை ஆணையாளர் திரு.மு.செ.சரவணபவ ஆகியோருட்பட மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், யாழ். செயலக அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


