Press Release
24 November 2009
Tamil Parties Recognize Need for Unity and Consensus for Durable Solution
After a three-day conference in Switzerland, the political parties of the Tamil speaking peoples of Sri Lanka, recognizing the need for unity and consensus, committed themselves to the engagement by all segments of society towards a just and durable political solution in the island through a dignified, respectful and peaceful process. The parties also agreed to continue the discussions.
The conference from 20 to 22 November 2009, titled “The role of the elected representatives of Sri Lanka’s Tamil and Muslim population in a process of national reconciliation, reconstruction and reform” was jointly organized by the Tamil Information Centre (TIC), the International Working Group on Sri Lanka (IWG) and the Initiative on Conflict Prevention through Quiet Diplomacy (ICPQD) at the University of Essex. It was hosted by the Swiss Federal Department of Foreign Affairs. The following Tamil parties were represented at the conference: All Ceylon Muslim Congress, All Ceylon Tamil Congress, Ceylon Workers Congress, Democratic Peoples Front, Eelam People’s Democratic Party, Eelam People’s Revolutionary Front, Eelam Revolutionary Organisation of Students, Ilankai Tamil Arasu Kadchi, Pathmanabha Eelam Peoples‘, Revolutionary Liberation Front, People’s Liberation Organisation of Tamil Eelam, Sri Lanka Muslim Congress, Tamil Eelam Liberation Organisation, Tamil Makkal Viduthalai Pulikal , Tamil National Alliance, Tamil United Liberation Front and Up-Country Peoples Front.
The conference was arranged in a climate of extreme unease in Sri Lanka and abroad in relation to the future of the Tamil speaking peoples in the island. Five months have elapsed since the Sri Lanka government announced the military defeat of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), but despite the assurances of the government, little visible progress has been made towards addressing minority rights and grievances. Some suspect that there is no serious intention to implement meaningful reforms in the long-term and fear further erosion of minority rights. The most egregious sign of a lack of progress is the treatment of 300,000 internally displaced Tamil civilians, many of whom continue to be held against their will in miserable inhuman conditions. The political opposition, civil society and journalists who call for the protection of the IDPS or minority rights are portrayed as enemies of the state and have been silenced through assassination, violence and imprisonment or forced to flee the country.
Under these circumstances it is essential for the representatives of the Tamil speaking peoples to unite to develop an effective common programme to hold the government accountable for the protection of minorities, and to act as a serious and dependable negotiating partner representing the demands of minorities in the development of meaningful proposals for reform in Sri Lanka.
In this light, the short and long-term aims of the conference were as follows:
To provide a safe and facilitated space for dialogue and engagement between the representatives of Sri Lanka’s main political parties of the Tamil-speaking peoples;
To build on preparatory discussions with and between the parties aimed at bridging divides and identifying common ground on substantive issues;
To explore the possibilities for future cooperation towards the development of a common political platform for the representation of Sri Lanka’s Tamil speaking peoples within the political framework of pre and post-election Sri Lanka;
In the long-term, to support Sri Lanka’s Tamil speaking political parties to play a meaningful role in a process of national reconciliation and a programme of political, institutional and constitutional reform aimed at addressing their grievances and preventing a return to armed conflict.
The meeting was conducted in a spirit of openness, mutual respect and constructive debate. The representatives expressed their full commitment to unity and to a common forum to seek a just and durable political solution. The participants obtained important clarifications and achieved common understanding. They also pledged commitment to continue their discussions in the interest of achieving full respect for the rights of the Tamil-speaking peoples and to building a peaceful, dynamic and prosperous society.
Among the issues discussed were shared concerns of the long, medium and short-term. These included an in depth discussion on the evolution of an acceptable, inclusive political solution to the conflict. Also discussed were principles for and solutions to urgent matters such as the situation of internally displaced persons, Muslim IDPs, detainees and the disappeared, demilitarisation and the rule of law. Also discussed was the urgent need for the facilitation of voluntary return of all internally displaced persons to their homes and land in conditions of safety and dignity, and to expeditiously provide for their housing and livelihood requirements under competent and independent civilian supervision.
At the end of the conference, the participating political parties issued the following joint statement:
Joint Statement
We, the representatives of the political parties of the Tamil-speaking peoples unanimously:
Affirm the historic meeting enabling an exchange of views, and express a full commitment to a common forum among representatives of all Tamil-speaking peoples;
Recognize 'Tamil-speaking peoples’ comprise three distinct peoples: Tamils, Muslims, and Tamils of Indian origin;
Respect the distinct and separate identities, interests and positions of the parties;
Recognize and affirm the need for unity and consensus among the Tamil-speaking peoples while acknowledging differences with regard to some issues and the paths to pursue them;
Commit to the engagement by all segments of society towards a just and durable political solution through a dignified, respectful and peaceful process;
Agree and commit to continuing our dialogue.
Names:
Mr. Veerasingham Anandasangaree, Tamil United Liberation Front
Mr. Periyasamy Chandrasekaran, Up-Country Peoples Front
Mr. Douglas Devananda, Eelam People’s Democratic Party
Mr. Abdul Rauff Hakeem, Sri Lanka Muslim Congress
Mr. Mohamed Hizbullah, All Ceylon Muslim Congress
Mr. Mano Ganeshan, Democratic Peoples Front
Mr. Kulasekaram Mahenthiran, Tamil Eelam Liberation Organisation
Mr. Sivasubramaniam Nanthakumar, Eelam Revolutionary Organisation of Students
Mr. Gagendrakumar Ponnambalam, All Ceylon Tamil Congress
Mr. Suresh Premachandran, Eelam People’s Revolutionary Front
Mr. R. Sampathan, Tamil National Alliance
Mr. Sivanesathurai Santhirakanthan, Tamil Makkal Viduthalai Pulikal
Mr. Mavai S. Senathirajah, Ilankai Tamil Arasu Kadchi
Mr. Dharmalingam Sithadthan, People’s Liberation Organisation of Tamil Eelam
Mr. Thirunavukarasu Sritharan, Pathmanabha Eelam Peoples‘ Revolutionary Liberation Front
Mr. Arumugan Thondaman, Ceylon Workers Congress
----------------------------------------------------------------------
Tamil Information Centre
Thulasi
Bridge End Close
Kingston Upon Thames KT2 6PZ
(United Kingdom)
Telephone: +44 (0)20 8546 1560
Fax: +44 (0)20 8546 5701
E-mail: admin.tic@sangu.org
Wednesday, November 25, 2009
Tamil speaking political parties' conference in Switzerland
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
சந்திப்பு,
சுவிற்சர்லாந்து
Monday, November 23, 2009
பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா அவர்களின் பிறந்த நாள் இன்று!

23 November 1926 இல் பிறந்த பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா அவர்களின் 83ஆவது பிறந்த நாள் இன்று!
குரு பரம்பரைமீது நம்பிக்கை கொண்ட எமது சமய பாரம்பரியத்தில் எமது அஞ்ஞானத்தை அகற்றும் அனைத்து வழிகாட்டிகளையும் மனப்பூர்வமாக ஏற்பது எனது கொள்கை!






பெரியபுராணத்தில் அதீத அன்புடையவன் நான்! மக்களுக்கான சேவையையும் இதிலிருந்துதான் என்னால் உணரமுடிந்தது!சிறு மரம் ஒன்றை முதலில் வளர்க்க வேலி போடுவதுபோல உலக வாழ்வியலுக்கு சமய வாழ்வு அவசியம் என்பதற்கு நான் உதாரணத்திற்கு இதை குறிப்பிடுகிறேன். தன்னை அறிந்தால் - ஏனையவரை தன்னைப்போல பார்க்கும் மனோ பக்குவம் உண்டாகும்!
5.1.1988இல் சென்னைக்கு நான் முதல்முதல் போன சமயத்தில் சேப்பாக்கம் அரச விருந்தினர் விடுதியிலிருந்து அங்கு தங்கியிருந்த ஒரு வரட காலத்திலும் அதன்பின் மண்ணடியில் அங்கப்ப நாயக்கன் தெருவில் அடுத்து வசித்த 7மாத காலப்பகுதியிலும் வாரத்தில் ஒவ்வொரு வியாழனும் ஞாயிறும் மாலையில் (சந்தியா கால வேளையில்)மயிலாப்பூரிலுள்ள சுந்தரம் - சென்னையின் பிரஷாந்தி நிலையமான இவ்விடத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் மனதுக்கு மிகவும் ரம்யமான அந்தப் பஜனையின் அமிர்தம் அதை அனுபவித்து உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும்.
பகவானுடைய படங்களில் நான் பெரிதும் விரும்புவது இந்த கையை இப்படி எமக்குக் காட்டுவதுதான்! இதில் பல சொல்லாமல் சொல்லும் விசயங்கள் இருக்கின்றன! புரிந்தவர்கள் தெரியட்டும்!
யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினராயிருந்த காலத்தில் அதுவும் சபரிமலை விரதம் அனுட்டிக்கும் காலப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் காலியிலுள்ள மாநர சபை மண்டபத்தில் நடைபெறும் சாயிபாபா பஜனைக்கு தவறாமல் கலந்து சிறப்பிப்பது வழக்கம். தற்போதுகூட அங்குள்ள அடியார்களோடு பேசிவிட்டுத்தான் இப்பதிவை எழுத ஆரம்பித்தேன். மக்களை ஒன்றுபட இவ்வைபவம் ஈழத்தில் அவசியமாகிறது. இன்று சிங்களப் பாடசாலைச் சிறுவர் பலர் இந்நிகழ்வில் சிவசின்னங்கள் அணிந்து பங்குபற்றியதாக அறிய முடிந்தது!


இங்கு சுவிற்சர்லாந்திலும் தமிழர்களாகிய நாமும் - சுவிஸ் நாட்டவரும் இன்று மாலையில் நடைபெறும் ஆனந்தமான பஜனையில் ஒன்றாக பாடல்கள் பாடுவது வேறு!
அல்லல்படும் - அலைபாயும் மனதுக்கு இன்று ஒரு அமைதியான பசுமையான நாள்!



அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
செய்திகள்,
ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா
நமக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது! நடக்கவும் கூடாது! நாம் தான் எல்லாம்!



தொடங்கீட்டாங்கைய்யா! தொடங்கீட்டாங்க!
பேனையெடுத்தவங்க - ரைப் பண்ணுறவங்க - அதுதான் நம்ம ஊடகக்காரருங்க!உதாரணத்துக்கு அவங்க மட்டுமல்ல - பதிவர்களும்தான்! இதில் ஒரு சிறிய வேடிக்கை தம்மைத் தாமே பிரபலப் பதிவர் என தம்பட்டம் அடிப்பவர்கள் சிலரும்(இலங்கையில் அல்ல!) இருப்பதை குறிப்பிட வேண்டும்.
நமக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது! நடக்கவும் கூடாது!நாம் தான் எல்லாம் என்ற கிறுக்குப் பிடித்த ஊடகக்காரர்கள் குய்யோ முறையோ என்று குளறத் தொடங்கிவிட்டார்கள்!
உதாரணத்துக்கு கொஞ்ச நாளைக்கு முதல்ல இந்தப் பிரச்சனை இருக்கிறம் சஞ்சிகையின் சந்திப்பில நடந்திச்சு! இப்ப இங்க அரசியலில நடக்குது! யாரைக் குத்தம் சொல்லுறதெண்டு தெரியல!
அப்பாவிப் பொது மக்களைக் காக்க வேண்டிய அரசியல் தலைவர்களும் சமூக நலனில் அக்கறை கொண்ட பொது நிறுவனங்களும் ஏன் நியாயமாகச் சொல்லப் போனால் அரச நிர்வாகத்தினரும் தமது பணிகளை மன நிறைவோடு - நியாயமாகச் செய்கின்றார்களா?
ஆனால் செய்திகளைப் பிரசுரிக்கும் அல்லது வெளியிடும் ஊடகங்கள் அனைத்தும் தமது ஊடக தர்மத்தை பின்பற்றுகிறார்களா என்பதே எனது கேள்வி!
எனது பதிவில் பல தடவை இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்!
திரும்பவும் அதை நினைவு படுத்துவது இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது!
ஒரு நல்ல பத்திரிகையாளனின் பணி ஆய்வில் ஈடுபடுவதல்ல. அதைச் செய்ய நிறையப் பேர் இருக்கிறார்கள். பத்திரிகையாளனின் பணி தான் மிக அருகே நின்று பார்த்தவற்றைப் பதிவுசெய்து வைப்பதே! பத்திரிகையாளனுக்குக் கிடைக்கும் அந்த அருமையான சந்தர்ப்பம் ஆய்வாளர்களுக்குக் கிடைப்பதில்லை.
இதை தமது தந்தை செல்வா என்ற ஓர் அரசியல் வாழ்க்கைச் சரிதையை எழுதிய மூத்த பத்திரிகையாளர் மதிப்புக்குரிய திரு. ரி. சபாரத்தினம் ஐயா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்றைக்கு ஈரஅனலில்(www.eeraanal.org/ வெளிவந்த செய்தியைப் பார்த்ததும் இதை எழுத வேண்டும் போல இருந்தது! அருமையாக தனது செய்தியில் குறிப்பிட்ட விடயங்கள் நிதானமாக சிந்திக்க வேண்டியவையே!(அப்படியே செய்தியை இணைத்துள்ளேன்! எனக்குப் பிடித்த அவரது எழுத்துக்களை நிறம்தீட்டியுள்ளேன்!)
சுவிற்ஸர்லாந்தின் ஷமஸ்டிக்குடியரசின் வெளிவிவகார
அமைச்சின் தலமையில் ஒன்றிணைக்கப்பட்ட இலங்கை
சிறுபான்மை கட்சி பிரமுகர்களின் பிரத்தியேகக் கூட்டம்
முக்கியமாக இக்கூட்டம் பற்றி „ஈரனல்“ எதையும் எழுதுவதாக இருக்கவில்லை. ஆனால் பல புலம் பெயர் ஊடகங்கள் பிழையான தகவல்களை மேற்கொண்டுவருவதாலும், கடந்தகாலத்தில் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை என்ற மாயவலையில் இன்றும் பலர் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களை போல் நாளை எம்மினம் மேலும் பலதுன்பங்களுக்குள் தள்ளப்படக் கூடாதுஎன்ற நோக்கத்தில் மட்டும் இங்கு இவைகளை தொகுத்துவழங்கும் தமிழ் ஏடு ஆசிரியர்.
சுவிற்ஸர்லாந்தின் றைன்நதி ஒரத்தில் உள்ள உல்லாச விடுதியில் கடந்த மூன்று நாட்களாக இலங்கை சிறுபான்மைகள் ஒன்று கூடல் ஒன்று மிகவும் காத்திரமாமாகவே நடந்தது. இது சுவிற்ஸர்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் தலமையில் ஒழுங்கு செய்யப்பட்ட திட்டமாக இருந்த போதிலும் மற்றும் ஒருசிலநாடுகளின் உதவியோடு நடந்து இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் எமக்கு இல்லை. எனினும் இது ஒரு பரமசிதம்பர இரகசியக் கூட்டம்!
அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் சிறுபான்மைக்கு சாதகமாக அமையவில்லை! இது பல ஏகாதிபத்திய மேலைய நாடுகளின் சூழ்ச்சி! புலிகளினால் மறைமுகமாக எடுத்துவரும் ஒரு கூட்டம்! மகிந்த அரசுக்கு எதிரான கூட்டம்! என்று பல புலம்பெயர் நாடுகளின் ஊடகங்கள் சித்தரித்தவருவது மனவேதனைக் குரியவிடையம். எனினும் ஊடகங்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை, என்பது உண்மை தான். ஆனால், அத்தினங்களில் வந்த சிறுபான்மை பிரதிகளின் ஒருசில ஆதரவாளர்கள் அந்த அழகான விடுதியில் அநாகரீகமாக நடந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதேசமயம் அங்கு வந்த பிரதிநிதிகளை யாரும் பார்க்கக்கூடாது என்ற எந்த ஒரு விதிமுறை களும் யாருக்கும், யாரும் வழங்கவில்லை!!! மேலும் அவர்களோடு தொடர்வுகளை அமைத்துக் கொள்ளும் முறையில் அங்கு தொலைபேசித்தொடர்புகள் துண்டிக்கப்படவில்லை.
இந்த நிலையில் எமது ஊடகசுதந்திரம் அங்கு எப்படி தடையாக இருந்தது??? என்ற கேள்விகள் ஐனறஞ்சித ஊடகங்களிடம் இருந்து எழுகின்றது.
சுவிற்ஸர்லாந்தின் ஷமஸ்டிக் குடியரசின் வெளிவிவகார அமைச் சின் தலமையில் ஒன்றிணைக் கப்பட்ட இலங்கை சிறுபான்மை கட்சிகள், நீண்ட இடைவெளிக்குப் பின் சிலதினங்கள் ஒரே மேசையில் தமது மனைதிறந்து கதைக்கும் வாய்ப்பைபும்! அவர்கள் மத்தியில் இருந்த „துரதிஷ்டவசமாக வளர்ந்த கசப்பான எண்ணங்கள்;“ மறைவதற்கான ஒருசந்தர்ப்பம் கிடைத்ததே சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக அமைந்தது.
மூன்று நாள் சந்திப்பில் எந்த ஒரு அமர்வும்வெற்றியை அளித்து விடாது! அதுவும் இலங்கை சிறுபான் மைக் களுக்கு இடையில் இருக்கும் மந்தமான தொலை நோக்குதன்மை! எமது தலமைகளில் யுத்தி யற்ற அரசியல் நிலைகள்! மக்களை அடகு வைத்து நடத்தும் அரசியல்! தொழிளாலர்களை விற்று வாங்கும் அரசியல்! முடியாத ஒருவிடையத்திற்கு முடிச்சுப் போட்டு நகர்த்தும் அரசியல் நகர்வுகள்! இதனை விட பேரம்பேசி விட்டுக் கொடுக்க முடியாத முரண்பாடுகள்!!! இவைகளை யுத்தியாக வென்று எமது சிறுபான்மை பிரதிகளை ஒன்று இணைப்பது என்றால் அது சுலபமான விடையம் அல்ல. ஆனால் இந்த முதல் அமர்வு எந்த அசம்பாவங்களும் இன்றி அமைதியான முறையில் வெற்றிகரமாக நடந்தது.
சுவிற்ஸர்லாந்தின் ஷமஸ்டிக்குடியரசின் வெளிவிவகார அமைச்சின் தலமையில் ஒன்றிணைக் கப்பட்ட இலங்கை சிறுபான்மை கட்சிகள், ஆரம்ப நாளான வியாழக்கிழமை கூட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்க்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன், கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலர் ஹசன் அலி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஆறுமுகம் தொண்டமான், அமைச்சர் ரிசாத் பதியுதீன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட சகல கட்சிகளின் பிரதிநிதிகளும் மற்றும் ஒருசில முக்கியமான பிரமுகர்களும், தமிழ் பிரியர்களும், ஆர்வாளர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சுவிற்ஸர்லாந்தின் ஷமஸ்டிக்குடியரசின் வெளிவிவகார அமைச்சின் தலமையில் ஒன்றிணைக் கப்பட்ட இலங்கை சிறுபான்மை கட்சிகள் கூட்டம் புலிகளின் ஏற்பாட்டர்களால் நடத்தப் படுகின்றது என்ற ஒருவந்தியை முடுக்கிவிட்டு இக்கூட்டத்திற்கு சென்ற பிரமுகர்களை தடுக்க பலர் எத்தனித்த போதிலும் இது வெற்றிகரமாக அமைந்தது. இன்று இலங்கை மகிந்த அரசு வடக்கில் மேற்கொண்டு செல்லும் அபிவிருத்திகளுக்கு பலவழிகளில் வெளிநாட்டு அமைப்புக் கள் உதவிகள் செய்து வருகின்றார்கள். முக்கியமாக வடக்கில் அனேக அபிவிருத்திகளும் புனரமை;புக்கான வீடுகளும் வெளிநாட்டு அமைப்புக்களால் அமைத்து கொடுக்கப்படுகின்றது அதனை வழங்கும் திட்டம் மட்டும் ஒருசில அதிகாரிகளால் வழங்கப்படுகின்றது.
சிறுபான்மையின் அபிவிருத்திகளுக்கு பொருளாதார அமைப்புக்கள் முன்னெடுக்கும் இவ்வேளையில் ஆயுதக்கலாச்சாரம் அழிக்கப்பட்டவிட்டது! என்றாலும், மகிந்தரசில் இருக்கும் ஒருசில துரதிஷ்டவாதிகளால் கையாளபடும் அரசியல் யுத்திகள், மேலும் தமிழர்களை அழிவுக்குள் தள்ளிவிடும என்ற ஐயம் வடக்கில் எழுந்துள்ளது. இதனை போக்க மனிதயுரிமை மையம் அதிகவனம் எடுக்கவேண்டும். என்ற, முடுக்கள் மக்கள் மத்தியில் மறைமுகமாக அதிகரித்து வருகின்றது. அங்கு மீண்டும் துர்பாக்கிய நிலையாகவே காணப்படுகின்றது என்று சர்வதேசம் ஒருசில புகார்களை வெளிக்கொண்டு வருகின்றது.
இன்று பொருளாதாரத்தை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு பணிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் துர்ப்பாக்கியமான செயல்கள் வடக்கில் உடனடியாக நிறுத்தத்தவறினால் மேலும் மகிந்த அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் நிலை உருவாகும்.
பலதரப்பட்ட சிறுபான்மைத் தலைவர்கள் ஒன்றிணைந்து தமது இதயசுத்தியோடு பல விடையங்களை மக்களுக்காக மனம் விட்டு கதைத்து, சேர்ந்து செயல்பட முன்வந்த முதல் கூட்டம் என்ற வகையில் இதனை சின்னாபின்னமாக்க எண்ணாது பொறுத்திருந்து அவர்களின் நடவடிக்கைகளை வரவேற்று, நாம் எல்லோரும் தெரிந்தும் தெரியாது விட்டபிழைகளை மன்னித்து “மனிதர்களாக“ ஒன்றிணைந்து மீண்டும் ஒரு ஆரோக்கிய அரசியலையும் வருங்காலத்து சமூகத்தையும் கட்டிக்காக்க ஊடகங்கள் தான் முன்வரவேண்டும். இதன்றி “செத்த மாட்டின் பல்லைப் பிடித்து பதம் பார்க்கும்“ ஊடகங்களின் கீழ்தரமான செயலை, நான் வலுமையாகக் கண்டிக்கின்றேன்.
சந்திப்பும் கலந்துரையாடலும் ஈழத் தமிழ் பேசும் மக்களுக்கு ஏதேனும் விமோசனத்தைத் தருமா?

நேற்றுடன்(22) கடந்த 4 நாட்கள்(19-11-2009 தொடங்கியது) நடைபெற்ற தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின் கருத்தரங்கு முடிவுற்றது!
நண்பரொருவருடைய புண்ணியத்தினால் நேரடியாக குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று கலந்துரையாடலின் இறுதியில் பங்குபற்றிய அத்தனை தலைவர்களையும் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது!
ஏதோ! நடப்பவை - நடக்க இருப்பவை - அப்பாவிப் பொது மக்களுக்கு - நல்லதாக - அமைய பிரார்த்தனைகள்!
Saturday, November 21, 2009
சுவிசில் இன்று 3ஆம் நாளாகவும் ..... ஏதோ பேசுகிறார்கள்!....... என்னமோ நடக்குது!.......... நாமறியோம்!



பேசினார் ... பேசினார்கள் ......சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் இதுக்கொரு குறையுமில்லை!
ஜீ.ஜீ 50க்கு 50!

தந்தை செல்வா வடக்கு கிழக்கு இணைந்த மாநிலம்! பேசினார் - பண்டாவுடன் - டட்லியுடன் - சிறிமாவோவின் அரசுடன்!
பின்னர் சர்வகட்சி மாநாடு - திம்பு - பூட்டான் -பெங்களுர் - நோர்வே ஒஸ்லோ -சுவிஸ்!
தமக்குள் பேசினார்கள் - வெவ்வேறு அரசுகளுடன் பேசினார்கள் - மத்தியஸ்த்துடன் பேசினார்கள்....






பேசியபிறகு தனித்தனியே சென்றார்கள் .... பிறகும் சேர்ந்து பேசினார்கள்....
மற்றவர்கள் பேசியதைக் கொச்சைபடுத்திவிட்டு தாம் மட்டும் ஏகப் பிரதிநிதிகள்!
தம்முடன் மட்டும் பேசவேண்டும் என்ற ஆணை! சரி - பேசினார்கள்!
பேசியவர்களை இன்று காணோம்!
பேசியவர்களைக் கொன்றும் தீர்த்தார்கள்! யார் யாரெனப் பட்டியல் போடத் தேவையில்லை!
இப்போது புதியதொரு திருப்பம்!கண்கெட்ட பின்பு ....ஏதோ ஒரு நமஸ்காரம்!
அரை இலட்சம் மக்களுக்குமேல் மாண்டொழிந்து போன பின்னர்.....
3 இலட்சம் மக்களுக்குமேல் நாதியற்றுப் போனபின்னர்......
ஏனைய அனைவரும் இன்று பேச வருகிறார்கள்! என்னப்பா உலகம்! உருண்டைதானே! திரும்பி திரும்பி அதே சுற்றில்!
யோகர் சொன்னார் - சுத்திச் சுத்திச் சுப்பற்ற கொல்லை எண்டு!
ஏதெனும் கதைச்சு சனத்துக்கு ஒரு முடிவைச் சொல்லுங்கப்பா!
மேல இருக்கிறவன் ஒருநாளும் வரமாட்டான்! அவன் வருவதற்கு எத்தனையோ பேர் எத்தனையோ சொன்னாங்க!
அறம் செய விரும்பு!
இணக்கம் அறிந்து இணங்கு!
கூடிப் பிரியேல்
கொள்ளை விரும்பேல்!
போர்த் தொழில் புரியேல்!
மூர்க்கரோடு இணங்கேல்!
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்!
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்!
இன்னும் நிறையக் கிடக்கு எழுதிக் கொண்டே போகலாம்
எல்லாம் படிச்சு முடிக்க முதல் மழை வந்து அழிக்கப்போகுது!
அதுக்கு முதல் ஏதாவது செய்யலாமே!.........யோசிக்க கொஞ்சம் நேரம் வேணும்!
அது சரி இப்ப எங்க பேசீனம்! என்ன பேசீனம்! தெரியுமோ?
உவங்கள் சொல்லுற மாதிரி சூரிச்சில இல்லையாம்! எங்கேயோ கன்டோன் துர்க்காவாம்!
இதுவும் கோரமான வடிவம்போல இருக்கோ!
எங்கயோ டீசன்கோபனாம்!(Diessenhofen)
சுவிற்சர்லாந்தின் பிரசித்தி பெற்ற நதிகளில் ஒன்றான றைன்(Rhein) நதிக்கரை ஓரத்திலமைந்த எழில்கொஞ்சும் அமைதியான இடமொன்றில்!
விரிவான செய்திகளுக்கு!
http://www.tamilnewsnetwork.com/tamilnewsnetwork.com/post/2009/11/19/Tamil-Muslim-political-parties-find-their-table-in-Zurich.aspx
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=30642
http://srilankawatch.com/index.php?option=com_content&task=view&id=393&Itemid=2
http://www.lankatimes.com/fullstory.php?id=22940
http://beta.thehindu.com/news/international/article52467.ece
Friday, November 20, 2009
2007 சபரிமலை யாத்திரையின்போது !
கொழும்பு - கொள்ளுப்பிட்டி ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஸ்ரீ ஐயப்ப திருக்கோவில் சபரிமலை யாத்திரைக் குழுவில் நாம் இந்தியாவில் பயணித்தபோது எடுத்த படங்கள் சில!



























Thursday, November 19, 2009
உன் திருநாமத்தை சொல்லிய பேருக்கு துன்பங்கள் என்னைக்கும் தொடாது! - ஐயப்பன் பாடல்!

டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுடைய பல ஐயப்பன் பாடல்களுள் - பிடித்த கருத்து நிறைந்த என் வாழ்வில் உண்மையாகிப்போன பாடல் இது!
ஆனை அலையுற நீலிமல! நம்ம ஐயப்பனோட சாமிமல!
ஏறிவருகிற தந்தானா தந்தானா
ஐயப்பமார்களை தந்தானா தந்தானா
ஏறிவருகிற ஐயப்பமார்களை ஏத்திவிடிற சபரிமல!
ஐயப்பன தொழுவோம்! கோயிலுக்கு வருவோம்!
சாமியப்பா சரணமப்பா பம்பா வாசனே சரணமப்பா!
சாமியப்பா சரணமப்பா பந்தள பாசனே சரணமப்பா!

வீட்டில நாட்டில காட்டில மேட்டில பாட்டில வாழும் பகவானே!
நல்ல தவத்தில உள்ள மனத்தில தோற்றி வணங்க வருவோனே!
கேட்ட வரங்களை நாட்டு நலங்களை காத்து இருந்து தருவோனே!
சாமி திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!
ஐயப்பன் திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!
உன்திரு நாமத்தை சொல்லிய பேருக்கு துன்பங்க என்னைக்கும் தொடாது!
பண்ணின பாவங்க பந்தள பாசனின் பார்வையில் பட படராது!
எண்ணின நன்மைங்க எப்போதும் தொலங்கும் என்னைக்குமே அது மாறாது!
சாமி திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!
ஐயப்பன் திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!
ரொம்ப நன்றி ரமேஸ்! நீர் சொல்லியபடி you tube இலிருந்து இதை எடுத்து இணைத்திருக்கிறேன்!(rmsundaram1948 அவர்களுடைய you tube இலிருந்த பாடல்)
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
ஐயப்பன் பாடல்
Subscribe to:
Posts (Atom)




