அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, August 11, 2013

நல்லை நகர்க் கந்தனுக்கு நாளை கொடியேற்றம்!

நல்லை நகரில் வீற்றிருக்கும் அலங்காரக் கந்தனுக்கு நாளை 12.08.2013 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இன்று காலை கொடிச்சீலை ஆலயத்திற்கு இரதத்தில் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து 25 நாட்களுக்கு திருவிழா நடைபெற இருக்கிறது. வழமைபோல இன்றே நாமெல்லோரும் நல்லூர் முருகப்பெருமானுடைய திருவிழாவுக்கு ஆயத்தமாகிவிட்டோம்! இனி என்ன 25 நாட்களும் சகலதையும் மறந்து தமிழ்த் தெய்வமான ஆறுமுகப் பெருமானை பல்வேறு அழகான தோற்றங்களில் காண ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்! நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி என்பது யோகர் சுவாமிகள் வாக்கு!