அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, May 9, 2013

படுகாயமடைந்த சுவிஸ் சிறுவன் ஜனன் ஜவீன் அவர்களும் மரணம்!


செல்வன் ஜவீன் ஜனன்

அன்னை மடியில் 3 பெப்ரவரி 2001 இறைவன் அடியில் 8 மே 2013

கார் விபத்துக்குள்ளாகி அவசரசிகிச்சைப்பிரிவல் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஜனன்{11) அவர்களும் நேற்று மதியம் காலமானார். சுவிற்சர்லாந் - சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா தம்பதியினர் தம் பிள்ளைகளோடு இலங்கைக்கு சென்றிருந்தனர். இவர்களுடன் ஜவீனின் சகோதரியின் மகள் பாலசூரியன் வாரணியும் (29) இணைந்து பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா சென்ற பின்னர் கடந்த 5.5.2013 ஞாயிறு இரவு 10.00 மணியளவில் வெள்ளவத்தை விகாரை லேன் முன்பாக மஞ்சள் கடவையில் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் கார் ஒன்று மோதியதில் கோர விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தனர். இவ் விபத்தில் ஜவீனின் சகோதரியின் மகள் பாலசூரியன் வாரணி (29) உயிரிழந்ததுடன், ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, மேலும் படுகாயமடைந்த ஜவீனின் மகன் ஜனன் (13) கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிசைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மதியம் காலமானார்.

செல்வி ஜவீன் ஜனனி

அன்னை மடியில் 20 டிசெம்பர் 1996 ஆண்டவன் அடியில் 6 மே 2013


செல்வி வாரணி பாலசூரியன்

மண்ணில் : 22 நவம்பர் 1983 — விண்ணில் : 5 மே 2013

படங்களுக்காக நன்றி லங்காசிறீ

Monday, May 6, 2013

வெள்ளவத்தை வாகனவிபத்தில் இரு பெண்பிள்ளைகள் உயிரிழப்பு - 5.5.2013


சுவிசிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த திரு. திருமதி ஜவீன் ஜெயந்தி தம்பதியினரின் பிள்ளைகள் ஜனன், ஜனனி இருவருடன் எமது இலங்கைப் பதிவரும் வைத்தியருமான பாலவாசகனின் சகோதரியும் வாகனவிபத்தில் சிக்கி பாலவாசகனின் சகோதரியும் ஜனனியும் அகாலமரணமடைந்து விட்டதாகவும் ஜனன் கொழும்பு ஆதார வைத்தியசாலையில்­­ அவசர சிகிச்சைப்பிரிவ­­ில் அனுமதிக்கப்ட்டு­­ள்ளதாகவும் அறிந்துள்ளேன். நேற்றிரவு (05.05.2013) வெள்ளவத்தையில் இச்சம்பவம் நடந்துள்ளது.