அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, August 28, 2008

நல்லூர்க் கந்தன் தேர் நாளை (29.08.2008) வெள்ளிக்கிழமை



(கடந்த வருடம் நடைபெற்ற நல்லூர் முருகப் பெருமானுடைய தேர்த் திருவிழாவின்போது எடுக்கப்பட்ட படம் - 09.09.2007 நன்றி –தமிழ் நெற்)
நல்லை நகர் வீற்றிருக்கும் கந்தா உன் சரணம்
தொல்லைகளைத் தீர்த்தருள்வாய் கந்தா உன் சரணம்

இல்லை உனக்கு ஈடு என்றோம் கந்தா உன் சரணம்
இடரகற்றக் குரல் கொடுத்தோம் கந்தா உன் சரணம்

பார்வதியாள் பெற்றெடுத்த பாலா உன் சரணம்
பார்த்தருள்வாய் பைந்தமிழைக் காத்தருள்வாய் சரணம்
(இப்பாடல் வரிகளை நாம் 1978 1979 காலப் பகுதிகளில் தேர்த் திருவிழாக்களின்போது பாடியது ஞாபகம்)
கடல் கடந்த நிலையில் எம்மக்களின் இன்னல்களைத் தீர்த்து அவர்கள் செம்மையாக வாழ வழிகாட்டுவாயாக என்று ஆத்மார்த்தமாகப் பிரார்த்திக்கின்றோம்.



Wednesday, August 27, 2008

நான் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி -– விசுவின் மக்கள் அரங்கம்.

ஆரம்பத்தில் அரட்டை அரங்கமாக நடந்த நிகழ்ச்சி தற்போது மக்கள் அரங்கமாக நடத்தப்படுவது உண்மையிலேயே மனதுக்கு மிகவும் நிம்மதியைத் தரும். நடிகர் திரு. விசு அவர்கள் நடித்த வீடு மனைவி மக்கள் மிகவும் பிடித்த ஒரு திரைப்படம். கதை இருக்கும் என்றால் அது அவரது படம் குறிப்பிடலாம். எனக்கு நேரமிருக்கும்போது அவரது மக்கள் அரங்கம் முன்னைய அரட்டை அரங்கம் போன்றவற்றை ஒளிப்பதிவுப் பிரதி பண்ணப்பட்ட ஊனுக்களை வாங்கி வந்த பார்ப்பது வழக்கம். ஏற்கனவே இலங்கையிலிருந்தபோது 2 தடவைகள் செய்தியை மின்னஞ்சலில் இட்டேன். எனது மடல் கிடைத்ததா என்ற சந்தேகத்தில் தற்போதைய நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு எழுதவேண்டும் என்ற ஆதங்கத்தால் எனது வலைப் பதிவில் தனியான ஒரு இடத்தை ஒதுக்குகிறேன்.

வீண்வார்த்தைகள் ஒரு சிலர் பேசினாலும் - சிரிக்கவும் சிந்திக்கவும் இந்நிகழ்ச்சி வழிசமைக்கிறது. ஒரு சிலரது மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் மேடையாகவும் இதில் பல உண்மைச் சம்பவங்களுக்கு இடமளிப்பது வரவேற்கத் தக்கது. குறிப்பாகத் தேர்வுக் குழுவில் உள்ள அனைத்து மனிதத்துவம் கொண்ட அத்தனை நல் இதயங்களுக்கும் எமது பாராட்டுக்களும் நன்றிகளும்.

மன்னார்குடியில் நடந்த மக்கள் அரங்கத்தில் அவர் ஒரு தாய்மைக்காகப் பிச்சை எடுத்ததும் மன்னார்க்குடி மக்கள் வழங்கிய பெரு நிதிக்கும் ஆத்மார்த்தமான நன்றிகள்.
அந்த நிகழ்வில் திரு. விசு அவர்களுடைய மனம் வெதும்பியதை ஆத்மார்த்த உணர்வுடன் நோக்கிய எனக்கு இறுதியாக அவர் குறிப்பிட்ட வரிகள் என்னை மிகவும் உருகச் செய்தது. அதாவது மனித ரூபத்தில் தெய்வம் இங்கே வெளிப்பட்டு நிற்கிறது என்ற அர்த்தப்பட உரைத்தது.

ஒரு பாடல் வரியில் பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை – குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை என்று வருகிறது. பழமொழி எமக்குப் பொருந்தினாலும் மன்னார்க்குடி மக்கள் தமக்கு குணமும் பணமும் இருப்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். அதைவிட மக்கள் அரங்கத்திற்கு உதவிபுரியும் அத்தனை அறக் கொடையாளர்களும் குணத்தினாலும் பணத்தினாலும் சிறந்த விளங்குவதுபோல அனைவரும் மனிதாபிமானம் கொண்டு இப்படியான பொதுக் காரியங்களுக்குத் தம்மாலான உதவிகளைப் புரிய வேண்டும் எனத் தயவாக வேண்டுவதுடன் நாமும் முடிந்த உதவியைச் செய்யவுள்ளோம் என்பதையும் இத்தால் தெரியப் படுத்துகின்றோம்.

வாழ்க தமிழ்!!!
வளர்க விசு அவர்கள் குழுவின் பணி!!!

Tuesday, August 26, 2008

தமிழினத்தின் உரிமை காத்த தானைத் தலைவன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்

மனிதருள் மாணிக்கங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அரசியல்வானிலும் இப்படியான மாணிக்கங்கள் பளிச்சிடுவதுண்டா? உன்னிப்பாக நோக்கின் சிற்சில இடங்களில் கண்களில் படும்…

ஆழி நனைந்து மூழ்கி முத்துக்களைத் தோண்டி எடுப்பது போல் ஒரு சிலர் தாரகையாய் அரசியல் வானில் மின்னி ஒளிர்வதை நாம் பார்க்கின்றோம். அந்த வரிசையில் புகழோடு வாழ்ந்து புகழோடு மறைந்த தலைவர்களுள் ஒரு தனிப்பெரும் இடம் அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களுக்குண்டு.

ஆங்கிலேய ஆட்சியாளர் காலம் தொடங்கி பாராளுமன்ற சுயாட்சி முறை வரை ஏற்பட்ட அரசியல் அரசியலமைப்புச் சீர்திருத்தக் களத்தில் தங்கமாகத் தடம் பதித்த அப்பழுக்கற்ற தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் என்றால் அது மிகையாகாது.

அமிர்தலிங்கம் ஒரு ஜனநாயகவாதி. ஜனநாயகத்தோடு ஒத்துப்போகும் கருத்துக்கள் அவரது சிந்தனையில் இழையோடின.

யாழ்ப்பாணக் குடா நாட்டில், தென் பண்ணாகத்தில் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி பிறந்த அமிர்தலிங்கம், தான் பிறந்த மண்ணின் மீது அசையாத காதல் கொண்டிருந்தார். அவர் நல்ல நாட்டுப் பற்றுடையவர்; தேசப்பற்றாளர்.

இந்தப் பற்றுதல்களை அடிநாதமாகக் கொண்டு அவர் தன் இனத்தின் விடிவுக்காகவும் - விமோசனத்துக்காகவும் - தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தார். அஹிம்சா தர்மத்தில் அசையாத பற்றுக் கொண்டிருந்தார். அதனால்தான் தந்தை செல்வநாயகத்தோடு இணைந்து அவர் வழியில் நின்று அரசியல் நடைபயின்றார்.

இந்த ஆளுமைமிகு தமிழ்த் தலைவரை நான் முதன்முதலாக எனது மிகவும் நெருங்கிய நண்பர் செனட்டர் மஷ_ர் மௌலானா அவர்களோடுதான் சந்தித்தேன்.

நேர்த்தியான நெற்றி, படர்ந்த புருவம், சற்று வழுக்கலான முன் தலை, கூர்மையான பார்வை, அதற்கு மேலும் கூர்மையைப் பாய்ச்சும் மூக்குக் கண்ணாடி, செயலில் வேகம், நடையில் விறுவிறுப்பு, அஞ்சா நெஞ்சம், எதிரியையும் அரவணைக்கும் பண்பு, கொண்ட கொள்கை மீது அசையாத பற்று, ஆழமான சிந்தனை, நல்ல மொழி வளம், தேனிலும் இனிய தமிழோடு ஆங்கிலத்திலும் சொல்லாடல், வாதத்திறமை - இத்தியாதி அணிகலன்களின் ஒட்டுமொத்த உருவம்தான் அண்ணன் அமிர்தலிங்கம்!

அவரோடிணைந்து மேடையேறி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உரையாற்றும் பாக்கியம் பெற்றவன் நான். 1967ம் ஆண்டு கல்முனையில் நடைபெற்ற உப – தேர்தலில், அன்று பதவி வகித்த டட்லி சேனநாயக்காவின் தேசிய அரசாங்கத்தின் தோழமைக் கட்சியாகவிருந்த இலங்கைத் தமிரசுக் கட்சி அதன் வேட்பாளராக அல்ஹாஜ் எஸ்.இஸட்.எம்.மஷ_ர் மௌலானா அவர்களை நிறுத்தியது.

இத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லிம்கள் விவகாரத்தில் தெளிவான போக்கைக் கடைப்பிடித்தவர் அமிர்தலிங்கம் என்பதை நாம் அன்று தெளிவாக உணர முடிந்தது. உண்மையில் சொல்லப்போனால், அவர் ஒரு முஸ்லிம் நேசன். எனவேதான், கல்முனை முஸ்லிம்கள் மத்தியில் அவருடைய பேச்சு எளிதாக – எழிலாக – எடுபட்டது. அவர் வான் அதிரப் பேசினார். அவரது மேடைப் பேச்சில் ஆக்ரோஷம் அரசோச்சும். மேடைப் பேச்சுக்குரிய இலட்சணங்களோடு பேசினார். அவர் சொல் பட்ட உள்ளங்கள் புண்படவில்லை; புன்னகைத்தன. மேடைகள்தோறும் அமிர்தலிங்கம் ஐயா பேசுவார்; அவர்தம் அருமை மனைவி மங்கையர்க்கரசி பாடுவார். தமிழ் பேசும் மக்களின் விடுதலைத் தாகம் அவர் பாட்டில் ஓங்காரமாக ஒலிக்கும்!

அமிர்தலிங்கம் - மங்கையர்க்கரசி தம்பதிகள் மேடையை அலங்கரித்தபோது பின்னாலிருந்து அமைதியோடு கேட்டுக்கொண்டிருப்பார் தந்தை செல்வநாயகம். தந்தையோடு பல தனயன்கள் - பட்டிருப்பு ராசமாணிக்கம், மட்டு நகர் நாவலர் இராசதுரை, வடமாநிலம் ஈன்ற தர்மலிங்கம், துரைரட்ணம், யோகேஸ்வரன், திருகோணமலை ரீ. ஏகாம்பரம், மு.சிவசிதம்பரம், டாக்டர் ஈ.எம்.வீ. நாகநாதன், ஸ்தலஸ்தாபன அமைச்சர் எம்.திருச்செல்வம், மன்னார் வீ. அழகக்கோன், சாவகச்சேரி வீ.என்.நவரத்தினம், ஊர்காவற்றுறை வீ. நவரத்தினம் போன்ற தமிழ்த் தலைவர்களோடு முஸ்லிம் தலைமையும் ஒன்றிணைந்திருந்த - இன ஒற்றுமையின் இங்கித ஓசையெழுப்பிய - அருமையான ஒரு காட்சியை அன்று கல்முனை உப - தேர்தல் உலகுக்குச் சிருஷ்டித்துக் காட்டியது.

முஸ்லிம்களின் தானைத் தலைவர் டாக்டர் எம்.ஸீ.எம்.கலீல், அமைச்சர் எம்.எச்.முஹம்மத், ஏ.ஸீ.எஸ்.ஹமீட், எம்.ஏ.பாக்கீர் மாக்கார், இளைப்பாறிய சட்டமா அதிபர் ஏ.ஸீ.எம். அமீர், இராணி வழக்குரைஞர் இஸ்ஸதீன் முஹம்மத், கொழும்பு மா நகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.நஸீர், எம்.அமீர் ஷரீப், பண்டாரவளை நகர சபை உறுப்பினர் கே.ஐ.ஜமால்தீன், கல்பிட்டி சிம்மக் குரலோன் எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார், லயன்ஸ் கழக முக்கியஸ்தர் நஸீர் ஹம்து}ன் (இவர் அண்மையில்தான் அமெரிக்காவில் காலமானார்), கொழும்பு – கிராண்டபாஸ் ஸ்டேஸ் ரோட் ஏ.ரீ.எம்.உவைஸ் (ழுழளைண)இ கதீப் எம்.ஜஸ_லி ஸலாஹ{த்தீன் போன்றவர்களும் அன்று கல்முனை மண்ணைச் சிறப்பித்தனர். அங்கே பேதம் இருக்கவில்லை - விபரீதம் நடக்கவில்லை. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையின் ரீங்கார ஓசை ஒன்றுதான் அன்று கூட்டங்களில் ஒலித்தது.

அமைதிக் கடல் போல் நிலவிய இன ஒற்றுமையைக் குலைக்கும் வண்ணம் பல வேண்டாத அலைகள் மேலெழுந்தபோது அமிர்தலிங்கம் அவர்களும் பல போராட்டங்களுக்குள் அமிழ நேர்ந்தது. இதனால் அன்று சமஷ்டி ஆட்சிகோரி ஆர்;பாட்டம் நடாத்தியபோது பனாகொடை இராணுவ முகாமில் அடைக்கப்பட்ட சமஷ்டிக் கட்சித் தலைவர்களோடு அமிர்லிங்கமும் சிறைப்பிடிக்கப்பட்டார்.

காலப்போக்கில் சிங்கள – தமிழ் உறவில் விரிசல் ஏற்பட்டு அது ஒரு போராட்டமாக வெடித்தபோது தமிழ் நாட்டில் அடைக்கலம் புக அமிர்தலிங்கம் - மங்கையர்க்கரசி தம்பதியினருக்கும் விதியாச்சு. இவர்கள் இருவரும் சென்னையில் அரசினர் விடுதியில் தங்கியிருந்தபோது அங்கும் சென்று நான் அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னைக் கண்டதும் அமிர்தலிங்கம் தம்பதிகளுக்கு ஏற்பட்ட மனமகிழ்ச்சியை நான் இன்றும் பூரிப்போடு எண்ணிப்பார்க்கின்றேன். என்னை என்றும் ஒரு நல்ல தம்பியாகவே அவர்கள் மதித்தனர். இவ்விடத்தில் ஒரு சுவையான சம்பவத்தைச் சொல்ல நினைக்கின்றேன் -

அன்று சபாநாயகராகவிருந்த தேசமான்ய எம்.ஏ. பாக்கீர் மாக்கார் அவர்களின் பாரியார் ஜெஸீலா, அவர்களின் மகள் ஹஸீபா இவர்களோடு ஒரு திருமண வைபவத்தில் கலந்துகொள்ள சென்னை சென்றிருந்தேன். சென்னைக்குப் பெண்கள் சென்றால் சாரி வாங்காமல் வருவரோ? சாரி செலக்ஷனுக்கு உதவி செய்ய மங்கையர்க்கரசி அக்கா உவப்போடு எம்முடன் தியாகராஜர் நகருக்கு வந்தார். அங்கே பலவண்ணச் சாரிகளை ஜெஸீலா அம்மையார் தேர்ந்தெடுக்கும்போது, “அந்தச் சாரியைத்தான் நான் செலக்ட் பன்னினேன்” என அருகிலிருந்த ஒரு பெண்மணி கடைக்காரரிடம் சொன்னார். திரும்பிப் பார்த்தேன். அழகான உருவம், வட்ட முகம். எங்கோ பார்த்த மாதிரி எனக்குப்பட்டது. ‘செம்மீன்’ படத்தில் ஷீலா மாதிரி இவ இருக்கிறா” என்று ஜெஸீலா அம்மையாரிடம் நான் சொன்னேன். முகம் மலர என்னை நோக்கிப் பார்வையைச் செலுத்திய அந்த அம்மணி, “ஓ! அந்த ஷீலா நானேதான்” என்றார், பாருங்கோ. அருகே நின்ற அக்கா மங்கையர்க்கரசி புன்னகைத்தார். அரச விடுதிக்குத் திரும்பியதும் திரும்பாததுமாக இந்த சம்பவத்தை அண்ணன் அமிர்தலிங்கத்திடம் சுட்டித்தனமாகச் சொன்னார் திருமதி அமிர்தலிங்கம். மூக்கின் மேலிருந்த கனத்த கண்ணாடி ஊடாக என்மீது ஒரு மாதிரியாக பார்வை செலுத்திய அண்ணன் அமிர்தலிங்கம் “என்ன.. என்ன... ஆச்சரியம். எப்போதோ ஒரு படத்தில் பார்த்த ஷீலா இவர்தான் என்று சரியாகச் சொல்ல உங்களுக்கு அவ்வளவு து}ரம் ஞாபகமா! நல்ல வேளை உங்கள் மனைவி அருகில் இருக்கவில்லை… இருந்திருந்தால் விபரீதமல்லவோ நடந்திருக்கும்” என்று மிகவும் குறும்புத் தனமாகக் கூறிவிட்டு, அவருக்கே உரிய இயற்கையான சுபாவத்தில் வாய்விட்டுச் சிரித்தார். “அண்ணனுக்கு ஜோக் அடிக்கவும் தெரியும், போங்கள்…” எனக்கோ சற்றுக் கூச்சமாகத்தான் இருந்தது.

முஸ்லிம்களை நேசித்தவர்

அமிர்தலிங்கம் ஐயா அவர்கள் முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த பாசத்தை வெளிப்படையாகக் காட்டுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் அவருக்கு ஏற்பட்டது.

அன்று மூதவையில் தமிழரசுக் கட்சியில் உறுப்பினராகவிருந்த நடராஜா இராஜினாமாச் செய்தபோது, அவ்விடத்தை ஒரு முஸ்லிமுக்கே கொடுக்க வேண்டும் என்று தந்தையிடமும், தனயர்களிடமும் ஒரே முச்சாக வாதாடியவர் அமிர்தலிங்கம். அதிலும், சமஷ்டிக் கட்சி வரலாற்றில் தன்னை முனைப்போடு இணைத்துக்கொண்ட மஷ_ர் மௌலானாவுக்கே அவ்விடம் வழங்கப்பட வேண்டுமென்றும் அடித்துச் சொன்னார்.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரமல்ல, யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒவ்வொரு குக்கிராமங்களிலும் தமிழரசுக் கட்சியின் கொள்கைப் பிரச்சாரகராக மஷ_ர் மௌலானா அன்று ஆற்றிய சேவைகளுக்குத் தமிழினம் அளிக்கக்கூடிய ஒரு சிறு கைமாறு இது ஒன்றேதான் என அப்போது அமிர்தலிங்கம் செய்த முடிவை இன்றும் முஸ்லிம் சமூகம் எளிதில் மறந்துவிடாது.

இந்தியாவிலிருந்து பலமுறை இலங்கை வந்தபோது இந்த அற்புதத் தலைவர் அமிர்தலிங்கம் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து என் காரில் ஏற்றிக்கொண்டு சபாநாயகரின் ‘மும்தாஜ் மஹாலுக்கும்’, முஸ்லிம் சமூகத்தின் தலைவர் டாக்டர் கலீல் அவர்களின் ‘நு}ராணியா விலாவுக்கும் நான் பலமுறை காரில் சென்றிருக்கின்றேன் என்பதும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாகும்.

உலகம் அபூர்வமானதுதான்! நாம் வாழும் இவ்வுலகின் கண் பிறந்த அமிர்தலிங்கமும் ஓர் அபூர்வமானவர்தான். நீதி, நியாயம் என்று வரும்போது அமிர்தலிங்கம் யாரையும் விட்டுவைக்கவில்லை.

தேசமான்ய எம்.ஏ.பாக்கீர் மாக்காருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் அவர். முன்னவர் பாராளுமன்ற சபாநாயகர். அடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவர். அந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்துக்கு மெருகூட்டி, தமிழினத்துக்குப் பெருமை சேர்த்து, தமிழர் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தைத் தோற்றுவித்தவர் அமிர்தலிங்கம்.

அமீர் – பாக்கீர் மோதல்

ஒருமுறை –பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்றும் தமிழர்களின் உரிமை காக்கும் காவலனாக விளங்கிய அமிர்தலிங்கம் தமிழர்கள் சம்பந்தமான ஒரு சட்டப் பிரமாணத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதைக் கடுமையாக எதிர்த்தார். “சபாநாயகரே! நீங்கள் இதற்கு இடம் கொடுக்கக் கூடாது” அமிர்தலிங்கம் சபாநாயகர் மீது சீறிப்பாய்ந்தார். விட்டாரா...? அரேபியர் வழிவந்தவரல்லவா பாக்கீர் மாக்கார்: “நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? அதனையும் பார்ப்போமே!” என்று ஆக்ரோஷத் தொனியில் பதில் கொடுத்தார் சபாநாயகர். “பார்;ப்போமா? உங்களுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவேன்” என கனல் தெறிக்கும் தொனியில் அமிர்தலிங்கம் கர்ச்சித்தார். “சரிதான் அதையும் பார்த்திடுவோமே” என்றார் பதிலுக்கு சபாநாயகர். அங்கு பிரசன்னமாகியிருந்த ஏனைய தலைவர்கள் ஒரு கணம் பிரமித்தேபோயினர்.

அடுத்த நாள் சபாநாயகர் வெளிநாடு சென்றுவிட்டார். அவரின் அந்தரங்கச் செயலாளராகிய நானும் அவரோடு சென்றிருந்தேன்.

நாடு திரும்பிய பிறகு சபாநாயகர் பாராளுமன்றத்துக்குச் சென்று உள்வாசலில் நுழையும்போது என்ன ஆச்சரியம்! அங்கே அவரை வரவேற்க விரிந்த கையோடு நின்றிருந்தார் அமிர்தலிங்கம். “பாக்கீர், லுழர யசந அல பழழன கசநைனெ...! உங்களுக்கெதிராகத் தனிப்பட்ட முறையில் நான் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர நினைக்கவில்லை. தமிழினத்தின் உரிமைகளைப் பெரும்பான்மை இனத்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே அவ்விதம் சற்றுக் கோபமாக உங்களிடம் பேசினேன்” என்றார் அமிர்தலிங்கம்.

“அது உங்கள் உரிமை; அதற்குத் தடையாக நான் நிற்கமாட்டேன். ஆகவேதான், நான் நாட்டில் இல்லாதபோதும் அப்பிரேரணையைச் சமர்ப்பிக்க உங்களுக்கு அனுமதியளித்துவிட்டு வெளிநாடு சென்றேன்” என்றார் சபாநாயகர்.

பழைய நண்பர்கள் இருவரினதும் பழுதுபடா இணக்கத்தையும், அவர்கள் வாய்விட்டுச் சிரித்து வறாந்தையில் நடந்ததையும் கண்டு பாராளுமன்ற ஊழியர்கள் ஆச்சரியமாக உற்றுப் பார்த்தனர். இதுதான் நல்ல பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிசயிக்கத்தக்க குணங்கள்! என்ன.

வாதிடலாம் - மோதிடலாம். எனினும் வாக்கின் இனிமை இழையோட பாராளுமன்றத்திலும் ஒழுகிடலாம். இந்த உண்மையை இவ்விரு தமிழ் – முஸ்லிம் தலைவர்களும் அன்றே எடுத்துக் காட்டியவர்கள்.

அண்ணன் அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் தம் இன மக்களின் பிரச்சினைகளை எடுத்தாண்டு உரைநிகழ்த்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆவேசம் பீறிட்டுப் பாயும். ஆனால், வாதப் பிரதிவாதங்களின்போது உயர்ந்த வாதப் பண்புகள் சிதைந்துவிடாமல் அடக்கத்தைப் பேணுவார். இன்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவரின் இந்தப் பேச்சு முறையும் - பேச்சுக் கலையும் - நல்ல உதாரணங்களாகும். இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமிர்தலிங்கத்தின் பேச்சுக் கலையை – விவாதத் திறமையைப் - பின்பற்ற முடியுமென்றால் - பாராளுமன்ற விவாதங்களை உயிரோட்டமுள்ளதாக ஆக்க முடியும் - மாற்ற முடியும். அப்படிச் செய்யின் பாராளுமன்றத்துக்கும் நன்று - நாட்டுக்கும் நன்றே. இல்லையா?

மஷ_ர் நல விரும்பி

அமிர்தலிங்கம் ஐயா அவர்கள் இறுதியாகத் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்து அமர்ந்தபோது, நான் அன்று முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சராக எதிரணி வரிசைக்குச் சென்று, அவர் கையைப் பிடித்து முத்தமிட்டு வாழ்த்துக் கூறினேன். அவரும்; என் உச்சி மோர்ந்து, ஆரத் தழுவி, நிமிர்ந்து என்னை ஊன்றிப்பார்த்துச் சொன்னார்: “தம்பி அஸ்வர்! எனக்கு ஒரு கவலை... நீங்கள் இருக்கின்ற இந்த பாராளுமன்றத்தில் நான் மிகவும் மதிப்புவைத்திருக்கின்ற உங்கள் அன்பர் மஷ_ர் இல்லையே!” அவர் வெளிப்படுத்திய ஆதங்கத்தில் தம்பி மஷ_ர் மௌலானாவை அவர் எவ்வளவு து}ரம் மதித்தார் என்பது மட்டுமல்ல, அதன் மூலம் முஸ்லிம் சமூகததின் மீது எவ்வளவு நேசம் வைத்திருந்தார் என்பதையும் உணர்ந்தேன்.

பிரேமதாஸ அதிர்ந்தார்

அன்று 1989ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் திகதி –அம்பாரை மின்சார சபை சுற்றுலா விடுதியில் இராப்போசனம். மேசையின் தலைமை ஆசனத்தில் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ. இருமருங்கிலும் மஷ_ர் மௌலானாவும், நானும். இரண்டு கவளம் சோறு உண்டிருக்கமாட்டார் ஜனாதிபதி, வேகமாக மேசையருகே வந்த பாதுகாப்பு மேலதிகாரி அவரிடம் தொலைபேசியைக் கொடுத்தார். “ஹலோ!” என்ற ஜனாதிபதி அதிர்ந்துபோனார். மொனவத? அமிர்தலிங்கம் மஹத்மயாட்ட வெடி திப்பாத? என்றவர், தனது வேஷ்டியைச் சரி செய்துகொண்டு குதித்தெழுந்தார். மஷ_ர் மௌலானா வாயில் போட்ட சோறு பீங்கானில் நழுவி விழுவதைக் கண்டேன். எனக்கோ மேல் மூச்சு கீழ் மூச்சடைத்தது.
மறுநாள் ஜனாதிபதி பிரேமதாஸ எம்மிருவரையும் அழைத்துக்கொண்டு ஹெலிகொப்டர் மூலம் நேராக திருகோணமலை பறந்து சென்று, அங்கு மாநகர சபை மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அமரர் அமிர்தலிங்கத்தின் பூடலுக்கு அஞ்சலி செலுத்தினோம்.

“உயிரோடிருக்கும்போதும் ஜீவ பலம்பொருந்தியவராகக் காணப்பட்டவர் அமிர்தலிங்கம். அமரத்துவம் பெற்றுத் துயிலுறும்போதும் அதே அமீரைத்தான் பார்க்கிறேன்…” என்று கூறி மிக்க மனம் வருந்தினார் ஜனாதிபதி பிரேமதாஸ.

அமிர்தத்தை விட இனிமையானவர் அமிர்தலிங்கம் என்றால், பிரேமைக்கு (அன்புக்கு) அடிமையானவர் (தாஸர்) பிரேமதாஸ. இரு வேறு இனங்கள் - மொழிகள் - மதங்கள் - அரசியல் வேறுபாடுகள் - இவை அத்தனையும் இருவருக்கிடையிலும் இடைவெளியாக இடம்பெற்றிருந்தாலும், இவர்கள் இருவரும் கொண்டிருந்த இலட்சியங்கள் ஒன்றே என்பதை அருகிலிருந்த என்னால் உணர முடிந்தது.

தளபதி அமிர்தலிங்கத்தின் சொல்லிலும், செயலிலும் வீர,தீரமும் விவேகமுமிருந்தது. தம்மினத்தின் விமோசனத்துக்காகப் பாராளுமன்றத்தின் உள்ளும், வெளியிலும் அவர் மிகவும் தீவிரமாகப் போராடினார். ஆனால், தீவிரவாதத்துக்கோ, அழிவிற்கோ அவர் கிஞ்சித்தும் இடங்கொடுக்கவில்லை. அவர் ஆயுதத்தின்மீது நம்பிக்கை வைத்தவரல்லர்; ஆன்மீகத்தின்மீது பற்றுறுதி கொண்டவர்.

எனினும், இக்காலகட்டத்தில் அஹிம்சைத் தத்துவத்தின்மீது பற்றுதலோடு தமது சாத்வீக வழிகளை ஆயுதமாகக் கொண்டு, தம்மினத்தின் விமோசனத்துக்காகப் போராடிய தமிழ்த் தலைவர்களின் வேகம் தளர்ந்து வலுவிழந்து போவதாக வடபகுதி வாலிபர்கள் உணரத் தலைப்பட்டனர். இந்த சிந்தனை தீவிரவாதமாக உருமாறி ஆயுதத்தைக் கையிலேந்த தமிழ் வாலிபர்கள் பல பின்னணிச் சக்திகளினால் உந்தப்பட்டனர். இதற்கு எதிராக சிங்கள வாலிபர்கள் மத்தியிலும் புரட்சிகரமான சிந்தனைகள் தோன்றி, அவர்கள் அரசுக்கெதிராக ஆயுதமேந்தத் து}ண்டப்பட்டனர். இதன் பெறுபேறே தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியின் தோற்றமாகும்.

ஆகவே, வடக்கிலும், தெற்கிலும் ஏக காலத்தில் தீவிரவாதம் முற்றி வெடித்தது. இதனால், அரசாங்கம் திடுக்கிட்டது – நடுநடுங்கியது - ஆட்டங் கண்டது. ஜே.வி.பியின் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட அரசாங்கம் பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்பட்டது. இரு பக்கங்களிலும் ஆயுதம் ஆயுதத்தோடு மோதியபோது உயிர்ப்பலி முன்னெப்பொழுதுமில்லாத அளவுக்குப் பெருகியது. நாடு இரத்த வெள்ளத்தில் தத்தளித்தது.

ஆயுதப்போராட்டம்தான் தமிழினத்தின் விமோசனத்துக்கு ஒரே வழி என வடபுலத்திலும் வன்செயல்களுக்கான சமிக்ஞை காட்டப்பட்டது. “ஆயுதம் ஏந்தித் தமது இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள இனி நீங்கள் எமக்கு வழிவிட வேண்டும்” எனுமாப்போல் தமிழ் வாலிபர்கள் தம் அரசியல் தலைவர்களை வலியுறுத்தலாயினர். இதனால் அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர். அழுத்தங்களுக்கு மேல் அழுத்தங்கள் எழுந்ததன் காரணமாக ஒருவாறு தம்மைச் சுதாகரித்துக்கொண்டு அன்றைய தமிழ் தலைமைகள், தம்மினத்தின் விடுதலைக்கு தமிழ் ஈழம் அமைப்பதுதான் ஒரே வழி என்ற கருத்துக்களை அவர்களும் வெளிப்படுத்தலாயினர்.

இத்தொனியின் சாயல்பட இந்தியாவின் பிரபல முன்னணிப் பத்திரிகையான ஐனெயைn நுஒpசநளள இற்கு 1981.01.05ம் திகதி அமிர்தலிங்கம் ஒரு செவ்வி வழங்கியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்களத் தலைமைகள் அமிர்தலிங்கத்தின் கருத்துக்கள் தேசத் துரோகமானவை எனச் சொல்லலாயினர். எனவே, “காங்கேசந்துறை பாராளுமன்ற உறுப்பினரும், சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவேன்” என அப்போதைய பாணந்துறை பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த டாக்டர் நெவில் பெர்னாண்டோ சூளுரைத்தார். அதன்பிரகாரம் 1981.07.23ம் திகதி சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டது. பிரேரணை வாக்கெடுப்புக்குவிடப்பட்டபோது பிரேரணைக்கு ஆதரவாக 121 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இரு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். எவரும் எதிராக வாக்களிக்கவில்லை. ஏனெனில், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் உட்பட ஏனைய உறுப்பினர்கள் ஏலவே சபையிலிருந்து வெளிநடப்புச் செய்துவிட்டனர்.

இலங்கைப் பாராளுமன்றத்தில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஒரு புது வரலாறு உருவானது. அரசாங்கத்துக்கோ அல்லது பிரதம அமைச்சருக்கோ அல்லது ஏனைய அமைச்சர் ஒருவருக்கோ எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதே இதுகாலவரையும் இருந்த நடைமுறையாகும். ஆனால், ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது இதுவே முதற் தடவையாகும்! இந்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு தமிழர் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இதுவே முதற் தடவையாகும்.

இவ்விரு நிகழ்வுகளுக்குமுரிய வரலாற்று நாயகராக விளங்குபவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் என்பதை இந்நாட்டு வரலாற்று ஏடுகள் என்றும் பறைசாற்றிக்கொண்டிருக்கும்!

ஆம்! 19-வருடங்கள், 09-மாதங்களும், 27-நாட்களும் பாராளுமன்றத்தில் அங்கம்வகித்த இத்தனிப்பெரும் தலைவனின் - அந்த தானைத் தளபதியின் - உயிர் 1989ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் திகதி, கொழும்பு பௌத்தாலோக மாவத்தை இல்லத்தில் வைத்து யாரும் எதிர்பார்த்திராத வகையில் - மிகவும் துக்ககரமாகன முறையில் - நல்லதை விரும்பாத தீயோர் சிலரின் துப்பாக்கி ரவைகளுக்கு இலக்காகி தம் இன்னுயிரை நீத்தார். தமிழ் இனம் கண்ணீர் சாகரத்தில் மூழ்கியது. நாடு ஒரு அதீத தலைவனை இழந்தது…!

இலங்கை அரசியல் வரலாற்று வானில் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்த அற்புதத் தாரகை மறைந்தது. அமரர் அமிர்தலிங்கம் அனைவர் மனதிலும் என்றும் வாழ்வார்!

அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்
ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகர்
ஊடக ஆலாட்சி அதிகாரி
(முன்னாள் முஸ்லிம் சமய - பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்.)

மறக்க முடியாத நண்பர் அமிர்தலிங்கம் - கலைஞர் மு.கருணாநிதி




(இன்று (26.08.2008) தமிழர் விடுதலைக் கூட்டணின் செயலாளர் நாயகமும் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமாகிய மறைந்த தலைவர் அ. அமிர்தலிங்கம் அவர்களுடைய 81வது பிறந்த நாள் நினைவையொட்டி இக்கட்டுர பிரசுரமாகின்றது.)

நாவலர் என்றவரிசையில் அந்த நாவலர் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்ட பெருமகன்தான் ஈழுத்தமிழர்களுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்டு உழைத்து இறுதியிலே அந்தப் பணி காரணமாக சகோதர யுத்தத்தில் தம் உயிiயே தியாகம் செய்த திரு. அமிர்தலிங்கம் அவர்கள். 1972 ஆம் ஆண்டிலே ஈழத்தமிழர் தந்தை செல்வநாயகம் அவர்கள் சென்னைக்கு வந்த என்னைச் சந்தித்தபோது செல்வா அவர்களுடன் திரு. அமிர்தலிங்கம் அவர்களும் வந்திருந்தார்கள். அதுதான் நான் அவர்களைச் சந்தித்த முதல் சந்திப்பு. அப்படி வந்தபோது செல்வா அவர்களால் உரக்கப் பேச இயலாது. மெலிந்த குரலில்தான் பேச இயலும். அப்படி மெலிந்த குரலிலே பேசுவதையெல்லாம் அமிர்தலிங்கம் அவர்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து ஓர் ஒலிபெருக்கியைப்போல எங்களுக்கு உரத்த குரலில் கூறியதோடு தந்தை செல்வா அவர்களுக்கு ஓர் அணுக்கத் தொண்டராக அத்யந்த சீடராக விளங்கியதை நான் கண்டேன்.

மிகுந்த எளிமையும் அமைதியும் கொண்டவராக மென்மையாக அதே நேரத்தில் உறுதி தொனிக்கின்ற அளவிற்கு பேசக் கூடியவராக பேசும்போதே அன்பும் பாசமும் வெளிப்படுகின்ற அளவிற்கு இதயத்தைத் திறந்து காட்டுபவராக பழகிய அவரை எப்படித்தான் மறக்க முடியும்? 1977 ஆம் ஆண்டு தந்தை செல்வா அவர்கள் மறைந்த பிறகு அமிர்தலிங்கம் மற்ற நண்பர்களோடு இணைந்து தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணி இயக்கத்தை அண்ணல் காந்தியடிகளைப் போல அமைதி வழியிலே நடத்திட அரும்பாடுபட்டார்.

செல்வா அவர்களின் மறைவுக்குப்பிறகு அமிர்தலிங்கம் அவர்களால் நடத்தப்பட்ட இயக்கம் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக தாங்கள் ஏற்றிருந்த பாராளுமன்றப் பதவிகளைக் கூட உதறி எறியத்தயாராக இருந்தது என்பதும் அப்படியே உதறி எறிந்தது என்பதும் சரித்திரத்திலே இடம்பெற்றுவிட்ட உண்மைகளாகும்.
13-7-1989 அன்று மாலையில் தான் அருமை நண்பர் அமிர்தலிங்கம் அவர்களும் அவருக்கும் எனக்கும் இனிய நண்பர்களாக இருந்த யோகேஸ்வரன் சிவசிதம்பரம் ஆகியோரும் அமிர்தலிங்கம் அவர்களின் இல்லத்திலே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது போலிஸ் காவலையும் மீறி மூன்றுபேர் இயந்திரத் துப்பாக்கிகளோடு வீட்டுக்குள் புகுந்து சரமாரியாகச் சுட்டதில் அமிர்தலிங்கம் அவர்களும் யோகேஸ்வரன் அவர்களும் அந்த இடத்திலேயே இயற்கை எய்தினார்கள். இந்தக் கொடுமையான செய்தி எனக்கு அறிவிக்கப்பட்டதும் இதயத்திலே வேல் பாய்ந்ததைப் போன்ற நிலைக்கு நான் ஆளானேன். மறுநாள் 14ஆந் தேதியன்று சென்னைத் தலைமைச் செயலகத்திலே மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டுக்கு நான் தலைமை தாங்கிய போதுகூட திரு. அமிர்தலிங்கம் அவர்களுக்கும் திரு. யோகேஸ்வரன் அவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து விட்டுத்தான் நிகழ்ச்சிகளைத் தொடங்கினேன்.

அமிர்தலிங்கத்தின் இறுதிச் சடங்கிற்கு இந்திய அரசின் சார்பில் இந்தியாவிலிருந்து செல்லும் விமானத்தில் தி.மு.க. சார்பில் நானோ அல்லது வேறு யாரோ செல்வது குறித்து என்னுடன் மத்திய அமைச்சர் நட்வர் சிங் பேசுவார் என்று காலையில் டெல்லியிலிருந்து தொலைபேசி மூலம் செய்தி வந்தது. நான் அதனை எதிர்பார்த்து அன்று காலை முதல் மாலை வரையில் தலைமைச் செயலகத்தில் இருந்தேன். ஆனால் காலையில் வந்த தகவலின் படி யாருமே தொடர்பு கொள்ளவில்லை. எனவே அந்தப் பெருமகனாரின் இறுதி நிகழ்ச்சியிலே தி.மு.கழகத்தின் சார்பில் யாரும் கலந்து கொள்ள முடியாமலே போய்விட்டது.
19.7.1989 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த இரண்டு தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னையிலே அமைப்புச் செயலாளராக இருந்த நீலநாராயணன் தலைமையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதிலே நானும் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் கலந்துகொண்டு இரங்கல் உரையாற்றினோம்.

நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோதும் இல்லாதபோதும் திரு. அமிர்தலிங்கம் எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் ஒவ்வொரு முறையும் தமது துணைவியாரோடும் குடும்பத்தினரோடும் என்னை வந்த சந்திக்காமல் சென்றதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் எங்கள் குடும்பமும் அவர்கள் குடும்பமும் ஏதோ உறவுக்காரக் குடும்பம் என்பதைப் போல பாச உணர்வோடு பழகி வந்தார்.
அமிர்தலிங்கம் அவர்களும் அவரது துணைவியாரும் தம்பதிகள் என்பதைவிட உற்ற தோழர்கள் என்ற முறையிலே பழகி வந்த நிலைகளை எல்லாம் நான் நன்கறிவேன். துணைவியார் இல்லாமல் அவர் எந்த நிகழ்ச்சிக்கும் தனியாகப் பெரும்பாலும் செல்வதில்லை. என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் கூட தம்பதியர் இருவரும் சேர்ந்து தான் வருவர்கள்.
1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் கடைசி நாளன்று மும்பாய் நகரில் தமிழ்ப் பேரவையின் சார்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நாவலர் அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி நான் எடுத்துக் கூறிய வார்த்தைகள் இன்னமும் என் நினைவில் இருக்கக் கூடியவை. அது - இதோ –
அமிர்தலிங்கம் இலங்கையில் இருக்கின்ற ஈழத் தமிழகம் வேண்டுமென்று கோருகின்ற தமிழர்களுடைய தலைவர். அமிர்தலிங்கம் மிக மென்மையான இதயம் படைத்தவர். முரட்டுக் குணம் வாய்ந்தவர் அல்லர்.அவர் மீது கண்டனத் தீர்மானம் இலங்கை ஆளுங்கட்சியின் சார்பிலே அளிக்கப்பட்டு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள். என்ன பேசுகிறார்கள்? இந்த அமிர்தலிங்கத்தைக் கொலை செய்ய வேண்டும் எங்கே நாடாளுமன்றத்திலே பேசுகிறார்கள். இந்த அமிர்தலிங்கத்தை இரண்டு பாக்கு மரங்களுக்கிடையே கட்டி இரண்டாகக் கிழித்தெறிய வேண்டும் என்று பேசுகிறார்கள். இந்தப் பேச்சை பத்திரிகைகளிலே படித்துப் பார்த்துவிட்டும் நாம் ஆமைகளாய் ஊமைகளாய்த்தான் வாழவேண்டுமென்று சொன்னால் தமிழன் சோற்றாலடித்த பிண்டம் அல்ல என்பதை இலங்கைக்கு உணர்த்திட வேண்டாமா?

1981 ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி நான் இவ்வாறு பேசினேன். ஆனால் 1989ல் அவரை இல்லாமல் செய்துவிட்டார்கள்.

அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறும்போது புதிதாக இணைக்கப்பட்டு ஆதான்றியுள்ள வடகிழக்கு மாகாணத்தில் தற்போது தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை காணப்படவில்லை. அங்கு கவர்னர் ஆட்சியை நிறுவும்படி அதிபர் ஜெயவர்த்தனேயை கேட்டுக்கொள்வேன். மாகாணக் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்துவது என்ற ஜனநாயக முறையை எங்கள் கட்சி எதிர்க்கவில்லை. அதே சமயத்தில் இத்தகைய சூழ்நிலையில் தேர்தல் நடத்துவது என்பது குறித்த காலத்துக்கு மிகவும் முந்தைய செயலாகும். அப்படி தேர்தல் நடத்தினால் தமிழர் வாழும் பகுதிகளில் ரத்த ஆறு ஓடும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன் என்று சொன்னார். ஆனால் அவருடைய ரத்தமே ஆறாக ஓடிய செய்தியைத்தான் கேள்விப்பட்டோம்.

ஆயுதங்களை ஒப்படைத்தவிட்டு பேச்சு வார்த்தைக்கு வருவதற்கு விடுதலைப் புலிகளுக்கும் இதர போராளிகளுக்கும் மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றார் அமிர்தலிங்கம். அவரின் வார்த்தைகளின்படிதான் தற்போது நீண்ட அவகாசத்திற்குப் பிறகு அவரின் எண்ணப்படி பேச்சுவார்த்தைக் கட்டத்திலே இப்போது ஈழத்தமிழர் பிரச்சினை உள்ளதை நேரடியாகக் காண்கிறோம். அந்தப் பெருமகன் போன்றவர்கள் செய்த தியாகத்திற்கு தற்போது வெற்றி கிடைக்கும் நிலையில் இந்த மலர் அவர் பெயரால் வெளிவரவிருப்பது முற்றிலும் பொருத்தமான ஒன்றாகும்.

(22.08.2002ல் அவரது வரலாற்றின் மனிதன் (பவழ விழா) மலருக்கு வழங்கிய கட்டுரை.)

Thursday, August 21, 2008

உன்னதமானவர்களே விழித்தெழுங்கள் - சுவாமி விவேகானந்தர்.

சகோதரி நிவேதிதைக்கு சுவாமிஜியின் எழுச்சிய10ட்டும் கடிதம்

ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயம் தை – 2007 இதழில் வெளியானதை காலத்தின் தேவை கருதி பதிவிடுகிறேன்.

லண்டன்
7 ஜூன் 1896.

அன்பார்ந்த மிஸ். நோபிள்

எனது லட்சியத்தை ஒரு சில வார்த்தைகளில் கூறி விடலாம். அது இதுதான்.
மனித இனத்திற்கு அவர்களின் தெய்வீகத் தன்மையைப் போதிப்பதும் வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் அத்தன்மை வெளிப்படுமாறு செய்வது எப்படி என்பதைச் சொல்வதும்தான்.

மூட நம்பிக்கைகளாலான ஒரு சங்கிலியால் இந்த உலகம் கட்டப்பட்டுள்ளது. ஆணானாலும் பெண்ணானாலும் துன்பப்படுபவர்களிடம் நான் அனுதாபம் கொள்கிறேன். துன்புறுத்துபவர்களிடம் இன்னும் அதிகமாக அனுதாபம் கொள்கிறேன்.

துக்கத்திற்கு காரணம் அறியாமையே. வேறு எதுவுமல்ல என்பதைப் பட்டப்பகல் போல் தெளிவாகக் காண்கிறேன்.

உலகத்துக்கு யார் ஒளி தருவார்? பண்டைக்காலத்தில் தியாகமே வாழ்க்கை நியதியாக இருந்தது. வரப்போகின்ற யுகங்களுக்கும் அதுவே நியதியாக இருக்கும். எல்லோரின் நன்மைக்காகப் பூமியின் சிறந்த வீரர்கள் தங்களைத் தியாகம் செய்தேயாக வேண்டும். நிலைத்த அன்புடனும் இரக்கத்துடனும் நூற்றுக்கணக்கான புத்தர்கள் தேவை.

தீவிர வீரியம் கொண்ட அன்புள்ள சுயநலமற்ற வாழ்க்கை உடையவர்களே உலகிற்குத் தேவை. அத்தகைய அன்பு ஒவ்வொரு சொல்லையும் இடிபோன்று இறங்கச் செய்யும்.

உன்னிடம் மூட நம்பிக்கை இல்லை என்பது நிச்சயம். உலகையே அசைக்கவல்ல ஆற்றல் உன்னிடம் உள்ளது என்பதும் எனக்கு உறுதியாகத் தெரியும். வேறு ஆற்றல்களும் உன்னிடம் வந்து சேரும். தைரியமான சொற்கள் அவற்றைவிட தைரியமிக்க செயல்கள் இவையே வேண்டியவை.
உன்னதமானவர்களே விழித்தெழுங்கள். விழித்தெழுங்கள்.

துன்பத் தீயில் உலகம் வெந்து கொண்டிருக்கிறது. நீங்கள் தூங்கலாமா?
தூங்குகின்ற தெய்வங்கள் விழித்தெழும்வரையில் உள்ளேயுள்ள தெய்வம் நமது அழைப்பிற்குச் செவிசாய்க்கும் வரையில் கூவி அழைப்போம். இதை விட வாழ்வில் வேறு என்ன உள்ளது? இதை விடப் பெரிய செயல் வேறு எது?
நான் வேலை செய்யச் செய்ய விவரங்கள் வந்து சேர்கின்றன. நான் ஒரு போதும் திட்டங்கள் தீட்டுவதில்லை. திட்டங்கள் தாமாக உருவாகின்றன. தாமாகச் செயல்படுகின்றன. விழித்தெழுங்கள் விழித்தெழுங்கள் என மட்டுமே நான் கூறுகிறேன்.

எல்லா ஆசிகளும் உன்மீது பொழியட்டும்.

அன்புள்ள
விவேகானந்த.

ஹிந்துக்களுக்கு ஒரு வேண்டுகோள்


இன்று பார்வையிட்ட தமிழ் பூங்கா வலைத்தளம் என் மனதை மிகவும் பாதித்து விட்டது. நான் இலங்கையிலிருந்து வரும்போது எடுத்துவந்த மதுரை காந்திய இலக்கியச் சங்கம் வெளியிட்ட அண்ணலின் நிர்மாணத் திட்டம் (மகாத்மா காந்தியின் 18 அம்சத் திட்டம்) என்ற நூலை மீண்டும் இன்று ஒரு தடவை வாசித்துவிட்டு அதிலிருந்த சில சில குறிப்புக்களை ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் பதிவிடுகிறேன்.

இந்நூலில் மகாத்மா காந்தி தனது முகவுரையில்

……ஹிம்சை முறையில் முதன்முதலாக அழிவது சத்தியம்தான். அஹிம்சை முறையிலோ என்றும் சத்தியமே வெல்கிறது. மேலும் அரசாங்கத்தில் பதவிபெற்று வேலை செய்பவர்களை விரோதிகள் என்று கருதலாகாது. அப்படிக் கருதுவது அஹிம்சைத் தத்துவத்துக்கே முரணாகும். அவர்களை விட்டு நாம் பிரியத்தான் வேண்டும். நண்பர்களாய்ப் பிரிய வேண்டுமேயொழிய பகைவர்களாய்ப் பிரிய வேண்டியதில்லை.

முகவுரையாகச் சொல்லிய இக்குறிப்புக்களை வாசகர் செவ்வையாய் உணர்தல் வேண்டும். உணர்ந்தால் இந்த நிர்மாணத் திட்டம் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் என்பது நிச்சயம். அரசியல் என்று சொல்லுகிறார்களே அதுவும் மேடைப் பிரசங்கமும் எப்படி உள்ளத்தைக் கவர்கின்றனவோ அப்படியே இத்திட்டமும் உள்ளத்தைக் கவரும். அவற்றைவிட இது மிகவும் முக்கியமானதாயும் உபயோகமுள்ளதாயும் இருக்கும் என்பது உறுதி.

வகுப்பு ஒற்றுமை

…..நான் கூறகிற வகுப்பு ஒற்றுமையானது எந்த விதத்திலும் பிளவுபடுத்த முடியாத இதய ஒற்றுமையாகும். காங்கிரஸ்காரர் ஒவ்வொருவரும் தாம் எந்த மதத்தைச் சார்ந்தவராயினும் சரி தம்முடைய வாழ்க்கையில் தாமே ஒரு ஹிந்துவாகவும் முஸ்லிமாகவும் கிறிஸ்தவராகவும் பார்ஸியாகவும் யூதராகவும் மற்ற மதத்தினராகவும் இருந்துவர வேண்டும். சுருங்கச் சொன்னால் அவரே ஹிந்துவல்லாத பிற மதத்தினராகவும் இருந்தவரவேண்டும். இப்படி இருப்பது மேற்சொன்ன இதய ஒற்றுமை உண்டாவதற்கு முக்கியமான முதல் விஷயமாகும். காங்கிரஸ்காரர் ஹிந்துஸ்தானத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களில் ஒவ்வொருவருடைய இதயத்தையும் நேரே உணர்தல் வேண்டும். இவ்விதம் உணரும் பொருட்டு அவர் தம்முடைய மதமல்லாத பிற மதத்தினரோடு நட்புரிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தம்மதத்தில் அவருக்கு எவ்வளவ பக்தி இருக்கிறதோ அவ்வளவு பக்தி மற்ற மதங்களிடத்திலும் இருத்தல் வேண்டும்……..

தீண்டாமை ஒழிப்பு

ஹிந்துமதத்தில் ஏற்பட்ட மாசு என்றும் சாபம் என்றும் சொல்லத்தக்கது. இதை ஒழிப்பது எவ்வளவு அவசியம் என்பதுபற்றி இவ்வளவு காலத்துக்குப் பின் விஸ்தரித்துச் சொல்லத் தேவையில்லை. இது சம்பந்தமாய்க் காங்கிரஸ்காரர் அரிய சேவை செய்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆயினும் இன்றைய அரசியல் நிலை காரணமாகச் செய்யவேண்டியிருக்கும் வேலைகளுள் ஒன்று என்று தான் காங்கிரஸ்காரர்கள் அனேகர் தீண்டாமையொழிப்பைக் கருதுகிறார்கள். ஹிந்துக்கள் சம்பந்தப்பட்ட வரையில் ஹிந்து மதமே அழியாமல் நிலைத்து நிற்பதற்கு இன்றியமையாத காரியம் என்று அவர்கள் இதைக் கருதுவதில்லை. இதைச்; சொல்ல எனக்கு மிக்க வருத்தம் உண்டாகிறது. காங்கிரஸில் ஹிந்துக்களாயுள்ளவர் அரசியலைக் காரணமாகக் கொண்டு தீண்டாமையொழிப்பில் ஈடுபடாமல் முக்கியமாய்ச் செய்ய வேண்டிய சேவை என்ற எண்ணத்தோடு இதில் ஈடுபடவேண்டும். அவ்விதம் ஈடுபட்டால் இன்று சனாதனிகள் மனத்தை எவ்வளவு தூரம் மாற்ற முடிந்திருக்;கிறதோ அதைவிடப் பலமடங்கு அதிகமாக மாற்றமுடியும்…….

மது விலக்கு

கதர்

கிராமக் கைத்தொழில்கள்

துப்பரவு

ஆதாரக் கல்வி

வயது வந்தோர் கல்வி

பெண்ணுரிமை

உடல்நலம்

தாய் மொழி

நாட்டுப் பொதுமொழி

பொருளாதார சமத்துவம் விவசாயிகள்

தொழிலாளர்

ஆதிக்குடிகள்

…..நம் நாடு எவ்வளவோ விசாலமானது. இங்குள்ள மக்கள் வௌ;வேறான இனத்தவர்கள். எனவே மக்களனைவரையும் அவர்கள் நிலைமையையும் பற்றிய எல்லாச் செய்திகளையும் நம்முள் எவரும் அறிந்ததாகச் சொல்லமுடியாது. எவ்வளவு சிறந்த மனிதராலும் அறிந்திருக்கமுடியாது. நாம் ஒரே மக்கட் சமுதாயம் என்று சொல்லிக் கொள்ளுகிறோமே இந்தச் சொல்லை நிலை நாட்டுவது எவ்வளவோ கஷ்டமானது. சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு தொகுதியும் மற்ற ஒவ்வொரு தொகுதியோடும் தான் ஒன்றியிருப்பதாக உண்மையுணர்வு பெற்றால்தான் இது சாத்தியம். நம் மக்களைப்பற்றிய மேற் கூறிய செய்திகளை ஒருவர் தாமே உணரும் போதுதான் இந்தக் கூற்றையும் அவர் நன்றாக உணர முடியும்……

குஷ்ட ரோக நிவாரணம்

…. இந்தியாவின் ஒவ்வோர் அங்கத்திலும் புத்துயிர் எழுந்து பொங்குமானால் சத்தியத்தையும் அகிம்சையையும் கடைப்பிடித்து மிக்க விரைவில் சுதந்திரமடைய வேண்டும் என்ற உணர்ச்சி நம்மிடம் உண்மையாகவே இருக்குமானால் இந்தியாவில் ஒரு குஷ்டரோகியேனும் பிச்சைக்காரரேனும் பராமரிப்பில்லாமலோ எண்ணுவாரற்றோ இருக்க முடியாது.

மாணவர்

கட்சி அரசியலில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது…..

அரசியல்பற்றி மாணவர் வேலைநிறுத்தம் செய்யக் கூடாது……

மாணவர்களெல்லோரும் சாஸ்திரோக்தமான முறையில் நூல் வேள்வி
செய்ய வேண்டும்……

எப்போதும் அவர்கள் கதரே உடுத்த வேண்டும்…..

வந்தே மாதரம் பாடும்படியோ தேசியக் கொடியை வணங்கும்படியோ மற்றவர்களை நிர்ப்பந்தப்படுத்தக் கூடாது……….

அவர்கள் மூவர்ணக் கொடியின் தத்துவத்தைத் தங்கள் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்துச் சாதி வேற்றுiமையோ தீண்டாமையுணர்ச்சியோ தங்கள் இதயத்தில் ஒரு சிறிதும் இல்லாதபடி அகற்ற வேண்டும் மற்ற மதங்களைச் சேர்ந்த மாணவர்களையும் ஹரிஜனங்களையும் தங்களுடைய சொந்த உற்றார் உறவினர்போல் எண்ணி அவர்களுடன் நட்பு பூண்டு ஒழுக வேண்டும்.

அயலில் வாழ்பவர்களுக்கு ஏதேனும் நோயோ காயமோ ஏற்பட்டவிடத்து அவர்கள் வேண்டிய முதலுதவி செய்ய வேண்டும். பக்கத்துக் கிராமங்களில் சென்று குப்பை வாரித் துப்பரவு வேலை செய்து கிராமத்துச் சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் சுத்;தமாயிருக்கக் கற்பிக்க வேண்டும்.
தேசிய மொழியாகிய ஹிந்துஸ்தானி மொழி பேச்சிலும் எழுத்திலும் இப்போது இரண்டு உருவமுடையதாயிருக்கிறது. இரண்டையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஹிந்தி பேசினாலும் உருது பேசினாலும் அவர்கள் எளிதாய் அறிந்து கொள்ள முடியும். நாகரி எழுத்தோ உருது எழுத்தோ எழுதினாலும் படிக்கவும் முடியும்.

தாங்கள் கற்பதில் புதிதாயுள்ளதெல்லாவற்றையும் அவர்கள் தங்கள் தாய்மொழியில் பெயர்த்தெழுத வேண்டும். அயலூர்களுக்கு வாரந்தோறும் போகும்போதெல்லாம் இப்படிக் கற்ற அறிவை அங்கு பரப்ப வேண்டும்.
ரகசியமாக அவர்கள் ஒன்றும்; செய்யலாகாது. எல்லா விவரங்களிலும் சிறிது சந்தேகத்துக்கும் இடம்கொடுத்தலாகாது. புலன்களைக் கட்டுப்படுத்தித் தூய வாழ்க்கை வாழ வேண்டும். அச்சத்தை அடியோடு அகற்ற வேண்டும்.

தங்களோடு படிக்கும் மாணவர் யாரேனும் பலவீனராயிருந்தால் அவரைப் பாதுகாக்க எப்போதும் சித்தமாயிருக்க வேண்டும். …..

தங்களுடன் படிக்கும் பெண்களோடு பழகுவதில் முறை தவறாமலும் பெருந்தன்மையாகவும் நடந்த கொள்வதில் மிக்க கவனத்தோடிருக்க வேண்டும்.

இப்படியான அரிய கருத்துக்களைச் சொல்லிய மகானுடைய நாட்டிலா இத்தனை அக்கிரமங்கள் என மனம் வெதும்புகிறேன். இன்றைய ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சமயத் தலைவர்களுக்கும் சமூகத்தில் அக்கறையுடைய அனைவருக்கும் இது சமர்ப்பணமாகிறது.
சுத்தானந்த பாரதி என நினைக்கிறேன். ஏதோ ஒரு பாடலில் தான் தான் திருந்தச் சமூகந் திருந்தும் என்று சொல்லியுள்ளார். எனது வலைப்பதிவில் தொடக்கத்திலிருந்து அனேகமாக அனைத்துக் கட்டுரைகளிலும் பொதுவாக நீதிக் கருத்துக்கள் மற்றும் சமத்துவம் பேணும்தன்மை ஊடுருவியிருப்பதை உணர முடியும்.


இதை நான் ஏற்கனவே தமிழ்ப் பூங்கா வலைப்பதிவின் - எனது சமூகத்தின் ஒரு கோரப் பக்கம் என்ற தலைப்புக்கு பின்னூட்டம் பதித்துள்ளேன்.

Wednesday, August 20, 2008

மனிதத்துவம் - 2

14.08.1990.

அதியுயர் மேன்மைதங்கிய ஐனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் கவனத்திற்கு

கடந்த வெள்ளிக்கிழமை மாலை கிழக்கு நிலவரம் தொடர்பாக நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின்போது தங்கள் அரசாங்கத்தின் பெருந்தோட்டத்தொழிற்துறை அமைச்சரும், பாதுகாப்புக்கான இராஐhங்க அமைச்சருமான கௌரவ ரஞ்சன் விNஐரத்ன அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக யாழ் குடா நாட்டு மக்களை வவுனியா முகாம்களில் தங்கவைத்து புலிகளுடன் சண்டையிட யோசனை தெரிவித்தமையையிட்டு நாம் வேதனையும் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சரின் நடத்தை குறித்து வெட்கமும் அடைகின்றோம். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 1981ல் முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்ட யாழ் பொது நூலகம் இன்றுவரை எந்தவிதமான திருத்தமும் இன்றி மேன்மேலும் தாக்குதலுக்குள்ளாகி வருவதையும், 1983, 1984, 1985, 1986, 1987 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற
தாக்குதல்களில் அழிவாகிய அரச தனியார் உடமைகளுக்கும் இதுவரை எந்தவித நிவாரணமும் அளிக்க முடியாத அரசிற்கு மேலும் மக்களைத் துயரப்படுத்துமுகமாகவே இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். மக்களைக் காப்பாற்ற முடியாத அரச வாழ்க்கையை ஏன் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டு இருக்கின்றீர்களோ எவருக்குமே புரியாமலிருக்கிறது. அகிம்சையைப் போதித்த கௌதம புத்தரின் பெயரைக்கூடச் சொல்லுவதற்கு எந்தவிதமான யோக்கியதையும் எந்த ஒரு பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவருக்கும் இல்லை. பிணி மூப்பு சாக்காடு என்ற காரணிகளால் உலகவாழ்வு நிலையற்றது என்று அரச போகத்தையும் குடும்பத்தையும் விடுத்து துறவறத்தை நாடிய சித்தார்த்தன் அவர்கள் மீது இந்துப் பெருமக்கள் மிக்க மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக இந்து சமயத்தில் யாகங்களில் இடம்பெற்ற உயிர்க்கொலைகளைக் கண்ணுற்று ஏனைய உயிர்களின் மீது இரக்கமும் அன்பும் பேணிய மகான் கௌதம புத்தர் ஆவார். அவருடைய போதனையைப் பின்பற்றுபவர்கள் இன்று நடைபெற்றுக்கொண்டீருக்கும் கொலைகளுக்கு எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாது, மேலும் நாட்டிற்கும் ஆயுதப் படையினருக்கும் நல்லாசி வேண்டி பிரார்த்தனை நடாத்துவது வேதனையோடு கோபத்தை ஏற:படுத்தவும் காரணமாகிறது.

தங்களால் நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கான விசேட ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஏதாவது பயனுள்ள நடவடிக்கைகளை நீங்கள் இன்றுவரை ஏற்படுத்தாமையும் இன்றைய நிலைக்கு உரிய காரணமாகும். கடந்த 5 வருடங்களுக்குமேலாக வடக்கில் பொலிசாரோ அன்றி இராணுவமோ சேவையில் இருந்ததை நான் அறியவில்லை. திடீரென அரசு ஏன் இவற:றை அங்கு அனுப்பிவைக்கின்றதோ தெரியவில்லை. நாட்டு மக்களைக் காக்க இலங்கை அரசாங்கங்கள் யாவும் (சுதந்திரத்தின் பின்பு) தவறியமையைத் தங்கள் விசேட ஆணைக்குழுவே ஒத்துக்கொண்டு அறிக்கை சமர்ப்பித்ததையும் நினைவுபடுத்தி மக்களைக் காப்பாற்றவும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை அமைத்துக் கொடுப்பதுமே அரசின் கடமையென்பதையும் நினைவுபடுத்தி தமிழ்மக்கள் மீதான இப்படுகொலைகளை முடிவுக்கு கொண்டுவரும்பொருட்டு உடனடியாக சண்டைகளை நிறுத்தி அகிம்சை வழியில் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென பௌத்தசமய தாபகரான புத்த பெருமானின் நம்பிக்கையின் பேரால் கேட்டு அமைகிறேன்.

கொல்லாமை பெரிது.

என்றும் பணியில்
தங்க. முகுந்தன்

--------

07.05.1992

மாண்பமிகு ஐனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களுக்கு:
வணக்கம்.

இராணுவத்தாக்குதல்களை மக்கள் பகுதிகளில் நிறுத்தல்

இன்றைய வீரகேசரிப் பத்திரிகையின் கடைசிப் பகுதியில் (பக்கத்தில்) ஷெல் அடி என்ற தலைப்புpன் கீழ் வெளியான செய்தியில் பலாலி இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட ஷெல்கள் விழுந்து வெடித்து இருவர் காயமடைந்ததாகவும், நான்கு வீடுகளும் ஒரு கோயிலும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28.04.1992இல் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகளை அழித்து சமாதானத்தை நிலைநாட்ட தங்கள் அரசு மேற்கொள்ளும் படைகளின் தாக்குதல்களினால் பொதுமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் ஏற்படும் அனர்த்தங்களே அதிகமாக உள்ளது. விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் அப்பாவி மக்களே அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள்.

தயவுசெய்து மக்கள் வாழும் குடிமனைப் பகுதிகளில் இராணுவத் தாக்குதல்கள் நடைபெறாதிருக்க தாங்கள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பளிக்கும் வண்ணம் தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை.

என்றும் பணியில்,உண்மையுள்ள பிரஜை
தங்க. முகுந்தன்

பிரதி – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

Tuesday, August 19, 2008

மூளாய் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பரிபாலன சபை விபரம்

மூளாய் ஸ்ரீ வதிரன்புலோ சித்திவிநாளகர் தேவஸ்தான பரிபாலன சபை விபரம்



தலைவர்-க.செல்வராசா

உப-தலைவர்-ம.சிவசுப்பிரமணியம்

உப-தலைவர்-சி.ஜெந்திரகுமார்

செயலாளர்-வி.தனலிங்கம்

உப-செயலாளர்-க.பாலச்சந்திரன்

பொருளாளர்-மு.முத்துக்குமாரசூரியர்



எனைய பன்னிரண்டு நிர்வாக சபை உறுப்பிணர்கள்

மனிதத்துவம் - பகுதி 1

அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட எமது தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியின் உண்மையான உறுப்பினன் என்ற வகையில் அப்பாவிப் பொதுமக்களாயிருந்தாலும் சரி மக்கள் பணிபுரிந்த எமது தலைவர்களாயினும் சரி அரச படையினராலும் எம்மவர்களாலும் கொல்லப்பட்ட வேளைகளில் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களையும் பத்திரிகைச் செய்திகளையும் இப்பகுதியில் முடியுமானவரை சேர்க்கவுள்ளேன். கையெழுத்தாயுள்ளதையும் பதிவு பண்ணப்படாத தட்டச்சுப்பண்ணிய தாள்களையும் திரும்ப கணனியிலிட்டு வெளிக்கொண்டுவர போதிய கால அவகாசம் வேண்டுவதால் பதிவில் பகுதி பகுதியாக இடப்படும் என்பதை வாசகர்களுக்கு முன்பே சொல்லிவைக்க விரும்புகிறேன்.

06.01.2000.

பத்திரிகைச் செய்தி

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் சிறந்த சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களைப் பற்றி பலரும் பேசியும் பத்திரிகைகள் மூலமும் அறிந்து கொண்ட நான் அவரது தாயாரின் மரணச்சடங்கின்போது முதன்முதல் அவரது இல்லத்துக்குச் சென்று பேசக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் இனிமையாகவும் உரிமையுடனும் பழகிய அண்ணர் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு மிகவும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். கொலை செய்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!
மிகவும் துணிச்சலுடன் தனது கருத்துக்களைப் பகிரங்கமாக வெளியிடுவதில் அவருக்கு நிகரானவர்கள் எவருமேயில்லை. முன்னைய ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க அவர்கள் செடிகொடி என சிறுபான்மையினரை விமர்சித்த வேளையிலும் சரி, தற்போதைய ஜனாதிபதி தென்னாபிரிக்காவில் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தமிழர்களை வந்தேறு குடிகள் என விமர்சித்ததையும் மிகவும் துணிவுடன் சுட்டிக்காட்டி எதிர்த்த வீர மறவனை கோழைத்தனமாகச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் மன்னிக்க முடியாதது.
கடந்த 1994 பொதுத்தேர்தலில் சுயேட்சைக்குழுவாக போட்டியிட்ட சமயத்தில் மிகவும் அன்னியோன்னியமாகப் பழகிய அண்ணரின் பிரிவினால் துயருறும் அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அவரது சகாக்களுக்கும் இறைவன்தான் சாந்தியை அளிக்க வேண்டும்.
நிறைந்த கடவுள் நம்பிக்கை கொண்ட அண்ணரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இச் செய்தியை வீரகேசரி தமிழர்கள் விமர்சிக்கப்பட்ட வேளைகளில் குரல் கொடுத்தவர் குமார் - யாழ் மாநகரசபை உறுப்பினர் முகுந்தன் என்ற தலைப்பிலும் தினக்குரல் மாநகரசபை உறுப்பினர் அனுதாபம் என்ற தலைப்பிலும் செய்தியை (முழுவதுமல்ல) பிரசுரித்தன.
----------------------------

பத்திரிகைச் செய்தி

புதிய நீதி அமைச்சர் பற்றி வீரக்கோன் அவர்களின் பயங்கரவாதச் சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகள் எதுவுமின்றி நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் யுவதிகள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தி வெளிவந்த இரண்டு தினங்களுக்குள் அப்பாவித் தமிழ்க் கைதிகள் 25பேர் படுகொலை செய்யப்பட்டதும் 20 பேர் படுகாயமடைந்ததும் இந்நாட்டில் நீதிக்கும் உயிர் வாழும் அடிப்படை உரிமைக்கும் இடமிருக்கிறதா என்ற சந்தேகத்தை எழ வைக்கின்றது.
சுதந்திரமடைந்த நாள் முதல் ஆட்சிபுரிந்த அரசுகளின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளால் பாதிப்படைந்துவரும் தமிழ்ச் சமூகம் சொல்லொணாத வேதனைகளையும் சோதனைகளையும் தொடர்ந்து முகம் கொடுத்து வருகின்றது.
புதிய நாடாளுமன்றத் தேர்தலின்பின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் விமலராஜனின் கோரக் கொலையும் பின் பண்டாரவளை பிந்துனுவௌவில் இடம்பெற்ற கொன்றொழிப்பும் இந்நாடு பழிச்சொல்லுக்குள்ளாக்கப்படுவதற்கும் நம்பகத்தன்மையற்ற நிலைக்கு இந்த அரசு உதாசீனப்படுத்தப்படும் அளவிற்கும் உலக அரங்கில் திகழ்கிறது.
நாட்டின் தலைவி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சுக்குப் பொறுப்பானவர் என்ற வகையிலும் ஜனாதிபதி இந்தப் பாவச் செயலுக்கு என்ன காரணம் கூறப் போகின்றார்? என அறிய விரும்புவதுடன் இறந்தவர்களின் உறவினர்களுக்கும் அப்பாவித் தாய் தந்தையருக்கும் எந்த வகையில் நியாயம் வழங்க இருக்கின்றார் என்பதையும் அறிய விரும்புகின்றேன்.
கடந்தகால ஆட்சியில் காணாமற்போன அல்லது கொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு எதுவித நியாயமான பதிலும் அளிக்காத ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்தும் இப்பதவியில் இருந்தால் நாடு மிகவும் மோசமான நிலைக்குப் போவதுடன் மக்களின் உயிர்வாழும் உரிமையும் கேள்விக்குறியாகிவிடுமென அஞ்சுகின்றேன்.
பௌத்த தர்ம போதனைகளை தெளிவாக அறிந்தவர்கள் ஒருபோதும் இப்பேர்ப்பட்ட அரக்க செயல்களைச் செய்ய முன்வரமாட்டார்கள். இனவாதத்தைத் தூண்டிவிடும் பௌத்த மகா சங்கங்களும் தலைவர்களும் இதற்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகின்றார்கள்?அடிப்படை உரிமைகள் மீதே அராஜகம் பண்ணும் அரசும் மக்களும் அவர்களுக்குத் துணைபோவோரும் என்றோ ஒருநாள் நீதிக்கும் தர்மத்துக்கும் பதில் கூறியே ஆகவேண்டும்.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற முதுமொழியை நினைவுபடுத்தி உயிரிழந்த அனைவருக்கும் நல்லூரான் முத்தியை அளிக்கவும் படுகாயமடைந்தவர்களுக்கு பூரண சுகத்தை அளிக்கவும் பிரார்த்திக்கின்றேன்.
(இந்த அறிக்கையின் கடைசிப் பந்தி தவிர்ந்த ஏனைய பகுதியை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை வெளியிட்டது.)
------
27.12.1998

பத்திரிகைச் செய்தி

மக்கள் மத்தியில் அன்பையும் சேவையையும் வாரிவழங்கிய நேர்மையான சேவகன் ஒருவனை கயவர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளமை நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு துக்ககரமான நிகழ்வாகும். யாருக்கும் எந்தக் கெடுதலையும் நினைக்காமல் முடிந்தவரை இயன்ற உவிகளைச் செய்து வந்த அண்ணன் மதிமுகராசாவின் பிரிவு ஈடுசெய்ய முடியாதது. இலக்கணச் செறிவு நிரம்பிய தொடரான பேச்சாற்றல் மிக்க ஒருவரை நாம் இழந்தது மட்டமல்ல தமிழுலகம் சிறந்த ஒரு தமிழ் மகனை இழந்துள்ளது.
எந்நேரமும் சிரித்த முகமும் தம்பி அல்லது கண்ணா என்று அன்புததும்ப அழைக்கும் அவரது குரல் எம்iமையெல்லாம் மறந்துவிட்டது.
தனது தலைவனுக்கு விழா எடுத்த நேரத்தில் அவர் மறைக்கப்பட்டுள்ளார். நன்றியைக் கொன்ற பாவிகள் எம்மவர்கள் என்று நாளை எம்மையே கேட்பதற்கு ஆள் எவருமில்லாமல் அனைவரையுமே கொன்றொழிக்கும் இக்கொடிய செயல் வீரர்கள் எவராயினும் அவனுக்கு மன்னிப்பே கிடையாது.
கடந்த ஏழு மாதங்களில் எமது தமிழர் விடுதலைக் கூட்டணியின் நான்கு துணிவும் இலட்சியமும் எளிமையாகப் பழகும் இயல்பும் கொண்ட மாமேதைகள் அழிக்கப்பட்டுள்ளார்கள்.
மக்களுடன் மக்களாக இருக்கும் மனிதருக்கு இதுதான் பரிசென்றால் அப்பரிசை நாம் விரும்பி வரவேற்கிறோம். ஆனால் செய்பவன் ஏன் எதற்காக என்று ஒரு பதில் தந்தால் நன்றாக இருக்கும்.
ஒரு புல்லையோ பூண்டையோ உருவாக்கத் தெரியாத மனிதன் எந்த ஒரு உயிரையும் கொல்லுவதற்கு அருகதையற்றவன்.
தமிழ் மக்களுக்கு நேர்மையுடனும் உண்மையுடனும் பலனை எதிர்பாராது பணிபுரியும்; எமது தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இப்படியான நிகழ்வுகள் ஏற்படும் என்பதை அறிந்துதான் தந்தையவர்கள் தமிழர்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினாரோ எனச் சிந்திக்கத் தோன்றுகிறது.
மதியண்ணனின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மன ஆறுதலையும் தைரியத்தையும் இறைவன் அளிக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்.
(குறிப்பிட்ட பொன். மதிமுகராசா அவர்கள் எம். ஜி. ஆர் பேரவையின் தலைவராக இருந்து அவருக்கு விழா எடுத்த போதே நல்லூர் முருகனுடைய வீதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த அறிக்கையை தினகரன் யாழ் மாநகர உறுப்பினர் முகுந்தனின் அனுதாபம் என்றும் வீரகேசரி ஏழு மாதங்களில் நான்கு நல் இதயங்களை இழந்து விட்டோம் கூட்டணிப் பிரமுகர் இரங்கல் என்றும் தினக்குரல் மதிமுகராசா கொலைக்கு தமிழ்க் கட்சிகள் கண்டனம் என்றும் தலைப்பிட்டுப் பிரசுரித்தன.)

காந்திவழியில் போராடிய மாபெரும் தலைவர் உடுப்பிட்டி சிவா

எனக்கு அரசியல் வழிகாட்டிய ஆசான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அமரர் மு. சிவசிதம்பரம் அவர்களை விழித்து 16.12.2001ல் ஞாயிறு தினக்குரலின் 10ம் பக்கத்தில் வெளியான சிவாவுக்கு ஒரு மடல் என்ற சத்யனின் கடிதத்துக்கு 21.12.2001ல் நான் எழுதிய பதில் இன்றுவரை பிரசுரிக்கப்படாத நிலையில் அக்கடிதத்தையே இங்கு சமர்ப்பிக்கின்றேன். கடந்த 20.07.2008 அவரது 85வது பிறந்த தினம் செய்தி பிந்தியமைக்கு மன்னிக்கவும்

செய்தி ஆசிரியர் - தினக்குரல் - கொழும்பு.
அன்புடையீர் - கடந்த ஞாயிறு சிவாவுக்கு ஒரு மடல் என்ற சத்யனின் கடிதம் சார்பாக, அவரது உதவியாளன் என்ற வகையிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் விசுவாசமான தொண்டன் என்ற வகையிலும் இப்பதில் கடிதத்தை எழுதுகின்றேன். தர்மப்படி பிரசுரிப்பீர்கள் என நம்புகின்றேன்.

எதையும் குறிப்பிட்டு எழுதவேண்டிய தேவை எனக்கு இருப்பதாக இல்லை. ஏனெனில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் தான் தொடர்ந்தும் தலைவராக இருக்கின்றார். இது மக்கள் குறிப்பாக வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவருக்கும் தெளிவாக - அறிவுபூர்வமாகத் தெரியும். கடந்த வருடம் பொதுத்தேர்தலின்போது மட்டுமல்ல, சகலதேர்தல்களிலும் ஏன் முக்கிய விடயமான தற்போதைய நான்கு கட்சி கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட முன்பும் - பின்னரும் எமது சிரேஷ்ட துணைத் தலைவர், செயலாளர் நாயகம் ஆகியோர் இந்தியா சென்று தலைவர் அவர்களின் ஆலோசனைகளைப்; பெற்றுவந்தமை நீங்கள் அறியாதிருக்கலாம். ஆனால் எமது கட்சியினர் மற்றும் பலருக்கு இது தெரி;ந்த ஒரு விடயம். கடந்த தேர்தலின்போதும், அதற்குமுன்னரும் தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு கேட்டு விடுத்த செய்திகளையும்(ஒலிப்பதிவுநாடா, துண்டுப்பிரசுரம்) நாம் மறந்துவிடலாகாது. இம்முறை வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகள் காலம்காலமாக பாதுகாக்கப்படக்கூடிய ஆவணங்களில் ஒன்றாகும். ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுந்தமான முறையில் ஒரு தலைவரைப்பற்றி விமர்சனம் செய்கையில் அவரது கடந்தகால செயற்பாடுகளையும் எடுத்து நோக்குவது சிறப்பாக இருக்கும். 1956ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பருத்தித்துறையில் போட்டியிட்டு தோல்வியடைந்த திரு. மு.சிவசிதம்பரம் அவர்கள் சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் மற்றும் அரசுக்கு எதிரான வேலைநிறுத்த எதிர்ப்புப் போராட்டங்;களில் கட்சிவேறுபாடின்றி ஆதரவு அளித்துவந்தார். 1960 மாhர்ச் தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் 7365 வாக்குகளைப் பெற்றுத் தெரிவானார். பின் 1960 ஜூலையில் அதே உடுப்பிட்டித் தொகுதியில் 9080 வாக்குகளைப் பெற்று மீண்டும் தெரிவானார். 1965ல் 12009 வாக்குகளைப்பெற்றுத் தெரிவாகிய சிவசிதம்பரம் அவர்கள் 1970ல் 11662 வாக்குகளைப் பெற்று தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட ஜெயக்கொடி அவர்களினால் தோற்கடிக்கப்பட்டார். 1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்பினை எதிர்த்து தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கியவேளையில் அதன் இணைச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார். 1977ல் நல்லூரில் 29858வாக்குகளைப் பெற்று (28137 வாக்கு வித்தியாசத்தில் - இலங்கையில் தனிஉறுப்பினர் தொகுதியில் அதிகூடியது) வெற்றிபெற்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரானார். 1989ல் யாழ் மாவட்டத்தில் 8359 வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார். 1989ல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று மயிரிழையில் தப்பி சிகிச்சைபெற்ற வேளையிலும்கூட தமக்குக் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்காது விட்டவர். 1994ல் வன்னியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னரும் கட்சிப் பணிகளில் தீவிரமாகப் பங்குகொண்டவர். 1998ல் சுகவீனமுற்றபோது இந்தியாவுக்குச் சென்று தனது குடும்பத்தவர்களுடன் இருந்து கட்சியின் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதை நான் குறிப்பிட்டேயாகவேண்டும்.
கடந்த 5.12.2001ல் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்னரே தேசியப்பட்டியலில் முதலிடம் வழங்கப்பட்ட எமது தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களை எந்தவித ஆட்சேபனையுமின்றி 4 கட்சிகளும் ஏற்றுக்கொண்டபின்னரே தங்கள் பத்திரிகை உட்பட அனைத்துப் பத்திரிகைகளும் செய்தியைப் பிரசுரித்தன. இந்த 4 கட்சிகளின் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் எந்தக் குறிக்கோளை எட்ட முற்படுகிறதோ அதுவே அந்த அமைப்பின்மூலம் தெரிவாகியுள்ள 15 உறுப்பினர்களின் கடமையாகும்
1989ல் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களின் மறைவுக்குப்பின் 1990ல் திரு. க.யோகசங்கரியின் மறைவுக்குப்பின் 1994ல் தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகியிருக்கக்கூடிய வேளையிலே அவற்றை ஏற்காது ஒதுக்கிய திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் இன்றும் தமது ஆதரவாளர்களின் வேண்டுகோளைஏற்று தேசியயப்பட்டியலில் இடம்பெற ஒத்துக்கொண்டுள்ளார். அவரது தேவை இன்றைய நிலையில் அவசியமானது. பலரும் எதிர்பார்க்கும் அவரது ஆலோசனைகளை சிதறடிக்க வேண்டாம் என்பதே எனது பணிவாhன வேண்டுகோளாகும்.

நன்றி

அன்புடன் பணியிலுள்ள
தங்க. முகுந்தன்

அவரது நினைவாக இலண்டனில் வெளியிடப்பட்ட முதலாவது ஆண்டு மலரிலிருந்து சில வரிகள்.
சொகுசான வாழ்க்கையைத் தேடாமல் சாதாரணமான ஒரு மனிதராக வாழ்ந்தார்.
தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின் அவரது பணிகளை ஏற்று செயற்பட்ட செயல்வீரர் காசுக்கு ஆசைப்படாத ஒரு மனிதர்
காந்தியைப்போல வாழ்ந்த சட்ட வல்லுனர் - அரசியல் தலைவர் - ஆன்மீகவாதி

இந்து சமய ஒற்றுமைப் பேரவையின் மாதாந்த செய்தி இதழுக்கான அறிவித்தல்.

செய்தி இதழ் 1

ஓம்

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”

இந்து சமய ஒற்றுமைப் பேரவையின் மாதாந்த செய்தி இதழுக்கான அறிவித்தல்.

மேற்படி பேரவையால் அடுத்தமாதம் தொடக்கம் ஒரு செய்தித் தொகுப்பை வெளியிட எண்ணியுள்ளமையால் தங்களின் கருத்துக்களையும், தங்கள் அமைப்பின் செய்திகள் - பணிகள் என்பவற்றை எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்கும்வண்ணம் தயவாக வேண்டிக் கொள்வதோடு, எமது பணிகளில் தங்களுடைய ஒத்துழைப்பு எத்தகையது என்பதையும் வினவ விரும்புகின்றோம். ஏனெனில் நாம் கடந்த மாதம் அனுப்பிய இரு கடிதங்கள் காரணமாக - பூனாகலை இந்து கலாசாரப் பேரவை, தலவாக்கொல்லை இந்து சமய கலை கலாச்சாரப் பேரவை, களுத்துறை இந்து இளைஞர் மன்றம், கேகாலை குருப்பிரவேச ஸ்தாபனம் என்பன மாத்திரம் எமக்கு இதுபற்றிய தகவல் அளித்துள்ளன. “பிற உயிர்களின்மீது இரக்கம்கொண்ட உண்மையான இந்து தத்துவத்தின் மீது பணிபுரிய பூனாகலை இந்து கலாசாரப் பேரவையின் 13 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் மாத்திரம் கிடைத்தமை பற்றியும் குறிப்பிட வேண்டும். பொகவந்தலாவ இந்து மா மன்றமும் அகதிகளுக்கான பணிகளுக்கு உதவுவதாக கடிதம் அனுப்பியுள்ளார்கள்.

தனித்துப் பணிபுரிவதைக் காட்டிலும் சங்கம், சபை, மன்றம் அமைத்துப் பணிபுரிவது சிறப்பு என்ற ரீதியில் நாங்கள் அமைத்துச் செயற்படுகின்ற கொழும்பில் ஏற்கனவே (கொழும்பில் மாத்திரம் சுமார் 30 அமைப்புக்கள் இருந்தும்) எம்முடன் தொண்டு மனப்பாங்கில் பணிபுரிய ஒரு இளைஞர்கூட முன்வராதமையையிட்டு மிகவும் மனவருத்தமடைகின்றோம். சென்ற 31.08.90 அகதிகளுக்காக ஒழுங்கு செய்திருந்த நிவாரணப் பொருட்களை ஏற்றி அதனை ஒழுங்கு செய்துகொள்ள நாம் பணம்கொடுத்து வேலையாட்களை அமர்த்த வேண்டியிருந்ததனைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. தனித்து இயங்கும் அமைப்புக்களை நாம் எந்தவிதமான குற்றம் கூற விரும்பவில்லை. அதற்கு எமக்கு அதிகாரமோ - உரிமையோ இல்லை. ஆனால் இந்து சமயத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் தாமாக உணர்ந்து இப்பணிகளில் எம்முடன் மட்டுமல்ல எந்தவொரு அமைப்பினது பொதுப் பணிகளில் ஈடுபடவேண்டும் என்பது எமது பணிவான வேண்டுகோளாகும். குறிப்பாக இளைஞர்களுக்கு இது ஒரு கடமையாக அமைய வேண்டும்.

இவ்வறிவித்தல் மூலமாகத் தங்களை வேண்டுவது யாதெனில் தயவுசெய்து எமக்கு தங்கள் கருத்தை அறிவியுங்கள். நாம் மாத்திரம் கடிதம் எழுதிக்கொண்டிருக்கின்றோம். உங்களுக்கு இவை சேரும் நிலை தெரியாமலுள்ளது. பேரவை பதிவுசெய்யப்படும் பொழுது அங்கத்துவ அமைப்புக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டியுள்ளமையை நினைவுபடுத்த விரும்புகிறேன்.


தற்போது கொழும்பில் தங்கியுள்ள விஸ்வ ஹிந்து பரிசித்தின் ஆரம்பகால உறுப்பினரும், ஸ்தாபகருமாகிய சிவத்திரு. குருபரன் அவர்கள் எதிர்வரும் ஐப்பசி மாதமளவில் இந்து அமைப்புக்களுக்கான செயற்திட்டங்கள் மற்றும் இதர பணிகள் பற்றிய கருத்தரங்கு ஒன்றினை ஏற்படுத்த இருப்பதால் இவைபற்றியும் எமது தொடர்கள் வலுப்படுத்தப்பட்டு அவருடைய முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதோடு வெளிநாட்டு அமைப்புக்களுடன் தொடர்பு கொள்ளவும் வழியமைக்க ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். சிவத்திரு. குருபரன் அவர்கள் கனடாவில் இருந்துவந்து தங்கியுள்ளார். அவருடன் சென்ற 2.9.90 ஞாயிற்றுக்கிழமை இது குறித்து கலந்து ஆலோசிக்க எமக்குத் திருவருள் கிட்டியது. அன்னாரது பணிகளை நாம் ஊக்குவிப்பதன்மூலமாக எமது சமூகத்தில் இந்து சமய வளர்ச்சியை நாம் ஏற்படுத்த முடியும் என்பது திண்ணம். தங்களின் சிறப்புமிக்க ஒத்துழைப்பினை நாடி, தங்கள் பதிலை எதிர்பார்த்து அமைகின்றேன்.

‘ஒற்றுமை இந்த ஊரிடை ஓங்குக’


என்றும் பணியில் உண்மையுள்ள
த. முகுந்தன்.அமைப்பாளர்,இந்து சமய ஒற்றுமைப் பேரவை.
146/19, Havelock Road, Colombo - 5. 4/9/90
----

ஓம்

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”


சமயநெறி


உயிர்கள் உய்திபெறவே ஒரு பெருங்கடவுள். உயிர்கள் உய்திபெறப் பயிலும் கலையே வாழ்க்கை. உயிர்கள் உய்யும் நெறியே சமய நெறி. அந்த நெறியில் தலைப்படின் சிந்தையிவே தெளிவு - அறிவிலே ஆக்கம் - ஆற்றலின் கொள்கலம் - அயரா அன்பு - எங்கும் இன்பம் என்ற சூழல் உருவாகும். இதுவே சமய நெறி வழிப்பட்ட சமுதாயம். களவு - காவல், உயர்வு - தாழ்வு, உடையார் - இல்லாதார், என்ற அமைப்பு சமய நெறி சாராதார் அமைப்பு. ஆனால் இன்றைய சமுதாயத்தில் நிலை தடுமாற்றம். சமயம் இயக்க நியதிகளினின்றும் விலகி, நிறுவனங்களாகி அதுவே களவுக்கும் - காவலுக்கும் ஆளாகி, உயர்வு - தாழ்வு என்ற போராட்டத்தின் களமாகி, உடையாரை உவந்தாக்கியும் இல்லாரை எள்ளி நகையாடி ஒதுக்கியும் பேயாட்டம் ஆடுகிறது. பேயாட்டம் பிரானாட்டம் ஆகமுடியுமா? ஆதலால் உய்யும் நெறி அறிந்து உய்தலே சமயநெறி.


ஆலயங்கள் சமய - சமுதாயப்பணி மன்றங்களே!


ஆலயங்கள் நமது சமுதாயத்தின் பொது இடங்களாக விளங்கி மக்கட்பணி செய்தன என்பதை தமிழகத் திருக்கோயில்களில், கல்வெட்டுக்களில் இருந்து அறியக் கூடியதாக இருக்கிறது. தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. தமிழறிஞர்கள் இருந்து தமிழாராய்ந்தனர். கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள், கலைபயில் கழுகங்கள், நாடக அரங்குகள், மருத்துவமனைகள், ஏன் பிணக்ககளைத் தீர்த்து வைக்கும் முறை மன்றங்களும் இருந்தன. கிராமச் சமுதாயத்தை வழிநடத்தும் கிராம சபைகள் - ஊர்ச்சபைகள் திருக்கோயில்களில் அமைந்திருந்தன. இன்று நம்முடைய திருக்கோயில்கள் அந்த அமைப்பில் இல்லை. இவை முற்றாகச் சமுதாயத்தினின்றும் விலகிவிட்டன. சமுதாயப் பணிகளை அவை மறந்துவிட்டன. சமய நிறுவனங்கள் சமயத்தைப் பாதுகாத்து, சமயநெறி வழிப்பட்ட சமுதாயத்தை அந்த நெறியில் நிறுத்துதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சாதி, குல, இன, அரசியல் வேறுபாடுகளை அறவே களைந்து, அவற்றிற்கு அப்பாற்பட்டதாக அமைதல் வேண்டும். ‘தெரிதல் முறை’ அவசியம். சமய நிறுவனங்களுடைய தலைவர்கள், ஆலய மதகுருமார்கள் இடத்தினால் மட்டுமன்றி இதயத்தினாலும் தலைவர்களாயிருக்க வேண்டும். (இன்னும் வளரும்)


கேகாலை - குருப்பிரவேச ஸ்தாபனம்

கேகாலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பிரதம குருவும், குருப்பிரவேச ஸ்தாபனத்தின் ஆசிரியரும், தலைவரும், ஸ்தாபகருமாகிய சிவஸ்ரீ மணி ஸ்ரீ நிவாஸ ஸர்மா ஐயா அவர்கள் மலையகப் பகுதிகளில் மிகச்சிறப்பான முறையுடன், பல இலவச வெளியீடுகளையும் வெளியிட்டு இந்து சமய மறுமலர்ச்சியில் பணிபுரிவதையிட்டு பேரவை மகிழ்ச்சி மெரிவித்துள்ளது. கடந்த 26.08.90 ஞாயிற்றுக்கிழமை தெரணியாகலை இந்து இளைஞர் மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மேற்படி ஸ்தாபனத்தின் தலைவருடைய அழைப்பின்பேரில் பேரவையின் சார்பாக அமைப்பாளராகிய அடியேனும் கலந்து அப்பகுதி இளைஞர்களின் ஆர்வத்தையும், செயற்பாடுகளையும் தெரிந்து கொண்டமையையும் இவ்வறிவித்தலில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.


த.முகுந்தன்,
அமைப்பாளர், இந்து சமய ஒற்றுமைப் பேரவை, 146/19,ஹவ்லொக் வீதி, கொழும்பு - 5. தொலைபேசி இல. 503831.
T.Mukunthan, The Organizer, Hindu Religious United Federation, 146/19, Havelock Road, Colombo -5. Telephone No. 503831.

-----

செய்தி இதழ் 2

ஓம்

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”


இந்து சமய ஒற்றுமைப் பேரவை

விசேட செய்திக் குறிப்பு

1. ஒற்றுமையின் அவசியம்

எம்மிடத்தில் ஒற்றமையின்மையால் நாம்படும் வேதனைகளும் சோதனைகளும் கொஞ்சநஞ்சமல்ல. சகல வழிகளிலும் நம்மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கல்வி, பொருளாதார, சமூக, அரசியல் நிலைகளில் ஒற்றுமையைப் பேணி வளர்க்க அனைவரும் முன்வரவேண்டும். ‘மானிட வாழ்வு’ - அரியது. எம் உயிர் உடலைவிட்டு நீங்கு முன்னர் ஒவ்வொருவரும் தம்மை அறிந்து, “தன்னைப் போலச் சகலமம் ஓம்புக” என்ற யோகர் சுவாமிகளின் வாக்கிற்கு ஒப்ப - பணிபுரியவும் - அன்பு செலுத்தவும் எமது பேரவையின் பணிகளில் இணையும் வண்ணம் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

எமது நாட்டில் தனித்தனியாக இயங்கும் சமய ரீதியான அமைப்புக்கள் அனைத்தையும் வெளிக்கொண்டுவந்த எம்முடன் தொடர்புபடுத்தி ஓர் உறுதியான - ஒற்றுமையான அமைப்பாகி செயற்பட நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும்வண்ணம் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஆலயங்களில் நடைபெறும் நிர்வாகக் குறைபாடுகளினாலும், அதிகாரப் போக்கின் காரணமாகவும் ஆன்மாவை ஒரு நிலைப்படுத்தி அமைதிகாக்க வழிபடச் செல்பவர்களுக்கு - மனதில் வேதனையும் குழப்பமும் ஏற்படுகிறது. இதனால் எமது மக்கள் மத்தியில் சமயம் ஆலய வழிபாடு கேள்விக் குறியாக்கப்படுகிறது. மேலும் பஞ்சாங்கங்கள் ஏற்படுத்தும் முரணான தகவல்களும், கணிப்புக்களும் ஒருபுறம் தாக்கத்தையும் ஏளனத்தையும் ஏற்படுத்துகிறது.

“நாம் எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும்” என்ற முறையில் சமய நெறிப்படி வாழ உறுதிபூண்டு எமது பேரவை மேற்கொள்ளும்பணிகளில் உங்களைத் தொடர்புபடுத்தி சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் பாகுபாடின்றி ஒன்றுபட்டுப் பணிபுரிய ஆவலோடு உங்களனைவரையும் வரவேற்கின்றோம்.

2. இந்து சமய போதனைகளைத் தபால்மூலம் நடாத்துதல்

பல இளவயதுடையவர்களின் ஆர்வத்தைக் கண்டு தபால்மூலமான போதனைகளை நடாத்தவுள்ளோம். வினா விடை போன்றதாகவுள்ள இக்குறிப்புக்களைப் பெற விரும்புவோர் மன்றப் பிரதிநிதிகள் எமது பேரவையின் செயலாளருடன் தொடர்பு கொள்க. மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை இக்குறிப்புக்களிலிருந்து பொதுப் பரீட்சை நடாத்தவும் ஏற்பாடாகியுள்ளது.

3. புதிய நிர்வாக சபை

பதினொருபேர் கொண்ட நிர்வாகம் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டு பணிகள் பரவலாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதேசங்களிலும் ஒவ்வொரு தொடர்பாளர்களை நியமிக்கவும் முடிவுசெய்யப்பட்டு இதற்கான கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தலைவரும் பிரதான அமைப்பாளரும் த. முகுந்தன்உப தலைவர் செ. ராஜமோகன்கௌரவ செயலாளர் செ. ஆனந்தராஜாதுணைச் செயலாளர் சு. தேவராஜ் பொருளாளர் சு. இரா. சபாபதிகணக்குப் பரிசோதகர் ப. தங்கராஜ்
செயற்குழு உறுப்பினர்கள் சு. யோகேஸ்வரன் க. நடராஜ் சி. மோகன் சி. யோகராஜ் செ. ராதாகிருஸ்ணன்

4. சர்வதேச இந்து இளைஞர் சங்கம் நடாத்திய கரத்தரங்கில் பேரவையின் நிலைப்பாடு

கருத்தரங்கை நடத்தவேண்டிய பணிகளை மாத்திரமே நாம் பொறுப்பேற்றோம். கருத்தரங்கில் இறுதிவரை கலந்துகொண்டவர்களில் திரு. குமரகுருபரனின் உரையைக் கேட்டவர்களுக்கு எமது பங்கு என்ன என்பது தெரியும். இதற்குப்பின்னர் அவர் தமிழர் இயக்கம் ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவம் அதனால் கனடாவுக்க திடீரெனத் திரும்பிய விடயங்கள் தெரியாதிருக்கலாம். எம்மால் முடிந்தளவு அவருக்கு வேண்டிய உதவிகளை அளித்தோம். அவரிடமிருந்த தகவல்வரும்வரை எமக்கு அக்கருத்தரங்குத் தீர்மானங்கள் - செயற்பாடுகள் குறித்து எதுவும் சொல்ல முடியாது. எனினும் பங்குபற்றிய சகலரிடத்திலும் தொடர்புகொண்டு எம்மால் முடிந்தளவு பணிகளை உங்களுடன் இணைந்து ஆற்ற ஆவலாக உள்ளோம். இதற்காக எம்முடன் அடிக்கடி தொடர்பு கொள்ளும்படி தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

5. சகல அமைப்புக்களுடைய கவனத்திற்கு

தங்கள் அமைப்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் இக்குறிப்பைத் தெரிவிக்கும் வகையில் இதனை அல்லது இதன் பிரதியைத் தங்கள் விளம்பரப் பலகையில் பார்வைக்கு வைக்கவும். சமயப் பிரச்சாரங்கள், அறநெறி வகுப்புக்கள் நடாத்த எம்மால் முடிந்தளவு ஊக்கமளிக்கவும் ஆவன செய்வோம்.

தங்களமைப்பில் மொத்தமாகவுள்ள உறுப்பினர்கள் நிர்வாக சபை விபரங்கள் என்பவற்றை எமக்குத் தெரியப்படுத்தவும்.


“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற அப்பர் சுவாமிகளின் வாக்கிற்கமைய ஒன்றுபட்டுப் பணிபுரிவோமாக.


அமைப்புக்கள் பணத்தின்மீது கவனம் செலுத்தாது பணிசெய்ய வேண்டும் என்பதே எமது பணிவான வேண்டுகோள்.



“தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை”

த. முகுந்தன். தலைவரும் பிரதம அமைப்பாளரும்,
No. 146/19, Havelock Road, Colombo - 5.

சு. இரா. சபாபதி பொருளாளர்.

செ. ஆனந்தராஜா, செயலாளர்
No. 76/6B, Third Cross Street, Colombo - 11.

Monday, August 18, 2008

இலண்டன் தமிழர் தகவல் என்ற மாதாந்திர செய்திச் சஞ்சிகைக்கு எழுதியது

சுவிற்சர்லாந்து,13.08.2008
சிவத்திரு. அரவிந்தன் அவர்கள்
ஆசிரியர் - தமிழர் தகவல்
இலண்டன்.

பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய ஆசிரியர் சிவத்திரு. அரவிந்தன் அவர்களுக்கு,வணக்கம்.

தங்களின் புத்தாண்டு இதழை முதற் தடவையாகப் பார்வையிட்டேன். அட்டையில் வெளியான மற்றொரு அரவிந்தன் எனது பெறாமகன். ஏன ஒன்றுவிட்ட அண்ணன் பகீரதன் அவர்கள் தனது நண்பரொருவர் மூலம் அனுப்பிய இதழை நேற்று வாசித்தபின் இன்று நேரடியாகப் பேசுவதற்கு தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனில்லாத காரணத்தால் இதனை மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கின்றேன்.

முதலில் உங்கள் தமிழ் எழுத்துத் தகவல்பணிக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
வாசிப்பதில் ஆர்வமுடைய எனக்கு தகவல் இதழை அனுப்பிய அண்ணனுக்கும் கொண்டுவந்து சுவிஸில் சேர்ப்பித்த நண்பன் உதயனுக்கும் எனது நன்றிகள்.

மிக அருமையான சஞ்சிகை. சகலதையும் அடக்கி வருவது சிறப்பு. 5வது வயதில் நான் கண்டு ரசித்தது காலம் பிந்தியதாயினும் வரவேற்கத்தக்கது. தொடர்ந்து வாசிக்க முன்னர் பழைய இதழ்களைப் பெற முடியுமா என்ற ஒரு ஆதங்கம்.

இந்த இதழுக்கு முன்னைய இதழ் கட்டாயம் தேவை. காரணம் பக்கம் 2ல் அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியருடைய கட்டுரையில் குறிப்பிட்ட …புத்தகத்தில் சுவாமியைப்பற்றி எழுதியிருந்த விஷயம் என்னைக் கவர்ந்தது.அந்த விஷயத்தை மார்ச் மாத இதழில் மறுபிரசுரம் செய்தேன்…..ஆனால் எந்த மார்ச் என்று குறிப்பிடவில்லை. அந்த இதழ் கண்டிப்பாக எனக்குத் தேவை. மேலும் கட்டுரையைப் படிக்கும் போது எமக்கும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. அதற்கு தகவல் தேவை. அவரது தொடர்பு முகவரி தொலைபேசி இல. மின்னஞ்சல் முகவரி போன்றன. உதவ முடியுமா?

ஏனைய சகல கட்டுரைகளும் மிகவும் சிறப்பு. குறிப்பாக ஆத்மீகத்தில் அதிக நாட்டமுடைய எனக்கு படித்ததில் பிடித்ததிலிருந்து, ராமானுஜ தாத்தாச்சாரியருடைய கட்டுரை, ஜகந்நாதன் அவர்கள், சிவயோகம் கும்பாபிஷேகமலர் பற்றிய தகவல், சைவநீதி கட்டுரை மாதம் ஓர் ஈழத்துச்சிவாலயம், 50 சுய முன்னேற்ற வழிகள், மதுரை சைவ சித்தாந்த மாநாட்டுச் செய்திகள் படங்கள் சிவானந்தசோதியின் அன்னதானம் தஞ்சைப்பெரிய கோவில் அபிஷேகப் படங்கள் அருமையிலும் அருமை. முதன்முதல் தங்கள் தகவலில் வெளியான (பின்னரும்) சிவலிங்கம் ஏனைய ஆலயங்களில் பரிவார மூர்த்தியாக அமைவது சம்பந்தமான சகல கட்டுரைகளையும் வாசிக்க ஆவலாயுள்ளேன். சிவயோகம் கும்பாபிஷேக மலரை வெளியிட்டவர்களுடைய முகவரி மற்றும் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன முதல்வருடைய முகவரி என்பனவற்றை எனக்குத் தெரிவிப்பதுடன் ஏனையவர்களும் அறிந்து கொள்ள வசதியாக அவரவர் பற்றி நீங்கள் எழுதும் போது அந்தந்தப் பக்கங்களிலேயே அவர்களது சகல தொடர்பு விடயங்களை வெளிப்படுத்துவதுகூட ஒரு தகவலே.

தமிழர்களே! தமிழர்களுடன் தமிழில் பேசுங்கள் - அருமையிலும் அருமையான சொல்லடி.

என்றும் தமிழுக்காக
மறவாதநன்றியுடன்
தங்க. முகுந்தன்.

மின்னஞ்சலில் அனுப்புவதும் பிரச்சனையாயிருந்த காரணத்தால் புத்தகத்தில் இருந்த முகவரிக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டது. இலவச சஞ்சிகையான இவ்விதழ் திருமுருகன் அறிவகம் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுவருகிறது.

முகவரி சரியானது என்று உறுதியான பின்பு வாசகர்களுக்கு முகவரியை வழங்கலாம் என்று நினைக்கின்றேன்.
அவர்களது தொலைபேசி இல. 0044 208 480 3320
மின்னஞ்சல் - jothy5@yahoo.co.uk

அறநெறிப் பாடசாலை அவசியத் தேவை - சுவாமி சைதன்யானந்தா.

HINDU DHARMA VIDYA PEEDAM
SRI VIVEKANANDA ASRAM
Vellimalai, Kalpadi P.O.
Kayakumari Dist. 629 204.

Date : 27.03.1996.

அறநெறிப் பாடசாலை அவசியத் தேவை


சோஷலிஸ அரசியல் கருத்துக்களைப் பரப்புமுன் ஆன்மீகக் கருத்துக்களின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்யுங்கள். நம் உபநிடதங்களிலும் மதநூல்களிலும் புராணங்களிலும் பொதிந்து கிடக்கிற அற்புதமான கருத்துக்களை வெளிக் கொணர்ந்து நாடு முழுவதும் வாரி இறைக்க வேண்டும் என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர்.
ஆம். இவ்வாறு ஆன்மீகம் போதிக்கப்பட்டால் அதனை உணர்ந்து மக்கள் அதன்படி வாழத் தலைப்பட்டால் நாட்டில் கள்ளம் கபடு சூதுவாது மறையும் அமைதி அன்பு சேவை நிறையும்.

இத்தகைய நிலை நாட்டில் ஏற்படும்பொழுது நாட்டுமக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வர். போட்டி பொறாமை அடக்கியாளும் முயற்சி லஞ்சம் ஊழல் என அனைத்துத் தீக்குணங்களும் மக்கள் மனதை விட்டு அகலும். ஒருவருக்கொருவர் உதவி புரிந்து இன்பமாய் வாழ்க்கை நடத்தும் நிலைமை ஏற்படும்.
எனவே ஆன்மீகக் கருத்துக்களை நாம் பரவச் செய்ய வேண்டும்.

மாணவச் செல்வங்கள் பொதுவாக உருவாக்குவது போல் உருவாவார்கள். எனவே சிறந்து விளங்கும் மாணவச் செல்வங்களை உருவாக்க அவர்களுக்கு அறநெறி பாடசாலைகள் நடத்தி ஆன்மீகமும் ஒழுக்க நெறிகளும் போதிக்கப்பட வேண்டும். இது ஒரு மிகச் சிறந்த புனிதப் பணியாகும். இதனைச் செய்வதில் நாம் மிகவும் ஆர்வமும் ஊக்கமும் உடையவர்களாக மாற வேண்டும். இதற்காக நாம் சில தியாகங்களைச் செய்ய வேண்டி வரும். பொருட் செலவு வரும். உடல் உழைப்பு நல்க வேண்டிவரும். ஆனால் இது போன்ற தியாகங்கள் நமக்கு இறையருளைப் பெற்றுத்தருவதுடன் முத்தி நிலைக்கும் வழிவகுக்கும். தியாகத்தாலன்றி அமரத்துவம் அடையப் படமாட்டாது என்பது வேதவாக்கு.

எனவே தியாகமும் சேவையுமே கொள்கையாகக் கொண்டு ஆன்மீகப் பணி செய்து இறையருள் பெறுவோமாக. இதற்கு எம் பெருமான் அருள் செய்யப் பிரார்த்திக்கிறோம்.

இசைஞானி இளையராஜா அவர்கள் திருவாசகத்தின் - சிவபுராணத்தில் தவறு இழைக்கலாமா?

நான் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கும் இசைஞானி சிவத்திரு. இளையராஜா அவர்களின் திருவாசகம் ஒலிப்பதிவு நாடாவை அண்மையில் கேட்டேன். மிக ஆத்மார்த்தமாகப் பாடியிருக்கும் சைவத் திருமுறையில் 8ஆந் திருமுறையிலடங்கிய மணிவாசகப் பெருமானுடைய திருவாசகம் அவரது இசையினுடைய ஆற்றலை வெளிப்படுத்திநிற்கிறது. அதற்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எனினும் சைவ சமயத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு உண்மையான சமயநம்பிக்கையுடையவன் என்ற வகையில் மணிவாசகப் பெருமானுடைய திருவாசகத்தில்

சிவபுராணத்தை தனது இசை மெட்டுக்காக வெட்டியும் முறையற்ற வகையில் மாற்றியும் ஒரு சொல்லை மேலதிகமாக இணைத்தும் பாடியது மிகவும் மனவேதனையை அளிக்கிறது.

சைவ சமயத்தவர்களே எமது சனாதன மார்க்கத்தையும் அதன் அடிப்படையையும் மாற்றுவதும் திரிவுபடுத்துவதும் கவலையளிக்கிறது. அதிலும் மிகுந்த இறைபக்தியுடைய இசைஞானியினுடைய இச் செய்கை அவர் தெரிந்து செய்தாரா? அல்லது தெரியாமல் செய்தாரா? தெரியவில்லை.

சிவபுராணம் முழுவதையும் முழுமையாகப் பாடியிருந்தால் மிகவும் அருமையாயிருந்திருக்கும். அதை விடுத்து இடையில் ஆரம்பித்து முறை தவறி முன்னுக்குப் பின்னாக தனது இசை ஆலாபரணத்துக்காகவும் தனது வித்வத்துவத்தை வெளிப்படுத்தவும் சமய குரவர் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமானுடைய திருவாசகத்தில் சிவபுராணத்தை துண்டிப்புச் செய்ததே மனக் கவலையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் சமயம் எந்த வகையில் கைக்கொள்ளப்படுகிறது என்பது யாவரும் அறிவர். ஆனால் இலங்கையில் நாம் சிவபுராணத்தை ஒவ்வொரு சைவ சமயத்தவனும் மனப் பாடம் செய்து தினமும் இல்லாவிடினும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளில் பாடசாலைகளில் - கல்லூரிகளில் - ஆலயங்களில் பாடி வருவதும் அதனால் எமக்கு மனப்பாடமாயிருக்கும் இச் சிவபுராணம் இசைஞானி அவர்களால் எங்கே மாற்றமடைந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகவே இவ் வேண்டுகோள் சமர்ப்பிக்கப்படுகிறது.

நீண்ட நாள் ஆத்ம விசாரணையின் பின்னர் இதனை வாசகர்களின் கவனத்துக்கும் கொண்டுவர விரும்புவதுடன் இதை நேரடியாக இசைஞானி சிவத்திரு. இளையராஜா அவர்களுக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அதற்கு அவருடைய முகவரியும் தொலைபேசி இலக்கமும் தேவை. யாராவது இதற்கு உதவவேண்டும். அவரது இரசிகர்கள் அபிமானிகள் இதனால் கோபமடைந்தால் அதற்கு நான் காரணமாயிருக்க மாட்டேன். காரணம் சைவ சமயம் அல்லது இந்து சமயம் தழைத்தோங்கிய இடத்தில்தான் இன்றும் அதற்கு எதிரான வாதங்களும் எதிர்ப்புக்களும் தாராளமாக இருக்கின்றன. எமக்கு (சைவ சமயத்தவர்களுக்கு) நாயன்மார்கள் அருளாளர்களுடைய தோத்திரங்களுடன் ஆழ்வார்கள் போன்றோர் பாடிய பாடல்கள் இருக்கின்ற அதே வேளையில் புதிதாக தோன்றியிருக்கும் சத்சங்க - குரு பரம்பரைப் பாடல்களும் அதிகரித்துவரும் வேளையில் பழமைபேணும் அடியார்கள் மனதில் இது ஒரு மன வேதனையை மேலும் அழுத்தி கனமான பாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே பல தேவார திருவாசகப் பாடல்கள் சினிமாப் பாடல்களுள் புகுத்தப்பட்டு எமது சமயத்தை கொச்சைப்படுத்துவதற்கு மேலாக நாம் இலங்கையர்கள் பெரிதும் போற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுடைய சிவபுராணத்தை மூன்றிலொரு பங்கு நீக்கி – அடிப்படை ஒழுங்கான வரிகளை மாற்றிப் பாடியதுடன் கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க என்ற வரியில் இன்னொரு வாழ்க என்ற சொல்லை மேலும் புகுத்தி எம்மை மனம் நோகப் பண்ணியிருப்பது தான் வேதனை.

சகிப்புத் தன்மையை அதிகமாகக் கொண்டதன் காரணமோ அல்லது தென்னாடுடைய சிவனே போற்றி – எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற பரந்த மனப்பாங்கோ எமக்கு சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

எமது வேண்டுகோள் தயவுசெய்து சிவபுராணத்தை முழுமையாக இதே ஆலாபரணத்துடனும் வித்வத்துவத்துடனும் ஆங்கில பொருள் வசன இசை நடையுடன் திருப்பித் தரவேண்டும் என்பதே! இதை இசைஞானி இளையராஜா அவர்கள் செய்வாரா?

நற்சிந்தனை – குருநாதன் அருள்வாசகம் - பகுதி 1


சிவமயம்
நீ உடம்பன்று. மனமன்று. புத்தியன்று. சித்தமன்று. நீ ஆத்மா. ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்களுடைய அனுபவ சித்தாந்தம். இந்த உண்மை உனது உள்ளத்தில் நன்றாய்ப் பதியக்கடவது. ஆனால் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. அதாவது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய். கடவுள் உள்ளும் புறமும் உள்ளவர்.

இப்படிக்கு
அவனே நான்.

குறிப்பு - (தவத்திரு சிவயோக சுவாமிகளின் கைப்பட எழுதிய மகா வாக்கியம்.)

ஒரு குறைவுமில்லை

நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே.
ஆகையால் நாம் அவருடைய உடைமை.
அவருடைய அடிமை.
நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே.
நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது.
நமக்கு ஒரு குறைவுமில்லை.
நாம் என்று முள்ளோம்.
எங்கு மிருக்கிறோம்.
எல்லா மறிவோம்.

இப்படியே நாம் இடையறாது சிந்தித்துச் சிந்தித்துக் கீழ்மையான குணங்களைப் போக்கி மேலான தெய்வ தத்துவத்தை அடைவோமாக.

சந்ததமு மெனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மை
நினையன்றி யில்லாத்
தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
சமரச சுபாவமிதுவே.
என்னுந் தாயுமானவர் அருமைத் திருவாக்கே இதற்குப் போதிய சான்று.

-------------

சிவதொண்டு

1


நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவுமில்லை. சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற்காகவே நாங்கள் பூமியில் வாழுகிறோம்.

சந்திரன் சிவதொண்டு செய்கிறது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர்களும் அசுரர்களும் கின்னரர் கிம்புருடர் வித்தியாதரர்களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர்.

அனைத்துஞ் சிவன் செயல். அவனன்றி அணுவும் அசையாது. நாம் இழந்து போவதுமொன்று மில்லை ஆதாயமாக்கிக் கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக்கின்றோம்.

நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அகிதம் இல்லை. மரணம் பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமை இல்லை. மண்ணாதி ஆசையில்லை. மனமான பேய் இல்லை. காலதேச வர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத்துக்குஞ் சாட்சியாக விளங்குகின்றோம்.

ஓம் தத் சத் ஓம்.

2

நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவுமில்லை. சிவதொண்டு ஆற்றுவதே எங்கள் தொழில். அதற்காகவே நாம் உயிரோடிருக்கிறோம். உண்பதும் உறங்குவதும் அதற்காகவே. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் எல்லாம் அதற்காகவே செய்கிறோம். நமக்கு ஆதியுமில்லை. அந்தமுமில்லை. பிறப்புமில்லை இறப்புமில்லை. நாம் விளையாட்டுக்காகினும் பிறர்பொருளைக் கவரோம். பிறர்வசை உரையோம். எல்லாஞ் சிவன்செயலென்பதை மறவோம். பசித்தாற் புசிப்போம். பிறர் செய்யும் நிட்டுரத்தையாவது கிருபையையாவது பொருளாகக் கருதமாட்டோம். எப்பொழுதும் தூய்மை உடையோம். துன்பத்திலும் இன்பத்திலும் கவலை அடையோம். முழுதும் உண்மை.

ஓம் தத் சத் ஓம்.

3.

நாங்கள் சிவனடியார். நாங்கள் சிவனடியார். நாங்கள் சிவனடியார். நாங்கள் சிவனடியார். இது சரியை. இது கிரியை. இது யோகம். இது ஞானம். இது மந்திரம். இது தந்திரம். இது மருந்து.

இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிட்டை. இந்த நிட்டையுடையோர்க்குச் சீலமில்லை. தவமில்லை. விரதமில்லை. ஆச்சிரமச் செயலில்லை.

இவர்கள் தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந்தார்கள். வாழுகிறார்கள். வாழ்வார்கள். இவர் பெருமை யாவருமறியார். கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிபவர்க்கே தெரியும்.

ஒரு பொல்லாப்பு மில்லை.

எப்பவோ முடிந்த காரியம்.

நாமறியோம்.

முழுதும் உண்மை.

-------

ஒழுக்கமுடைமை


ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்தது ஒழுக்க முடையார் எல்லாமுடையார். ஒழுக்கங்களாவன கொல்லாமை கள்ளாமை பிறர் வசை உரையாமை பிறர் பொருள் கவராமை தாழ்மை பொய்யுரையாமை முதலியனவாம்.


எக்கருமத்தைச் செய்யும்பொழுதும் ஊக்கத்தோடுஞ் சிரத்தையோடுஞ் செய்து பழகுதல் வேண்டும். அப்படிச் செய்துபழகிவந்தால் மனஉறுதி உண்டாகும். அதாவது மனம் ஏகாக்கிர சித்தத்தைப் பொருந்தும். பொருந்தவே ஆன்மசக்தி அதிகரிக்கும். நினைத்த காரியம் நினைத்த மாத்திரத்தில் உண்டாகும். இவர் பகைவர், உறவினர் என்ற பாகுபாடு சித்தத்திற் புகுந்து கவலையை உண்டாக்காது.

எல்லாம் என்னிடத்தே உண்டாகின்றன. எல்லாம் என்னிடத்தே ஒடுங்குகின்றன என்ற தூய்மையான எண்ணம் உடையவராய் இருத்தல் வேண்டும். மேலும் எனக்கொரு குறைவுமில்லை. என்னிடத்தில் எல்லோரும் அன்பாய் இருக்கிறார்கள். நானும் எல்லாரிடத்திலும் அன்பாய் இருக்கிறேன் என்று அடிக்கடி நினைந்து நினைந்து சாதிக்க வேண்டும். இப்படியே இடைவிடாமற் பழகிவந்தால் எல்லாமறியும் ஆற்றலும் எல்லாஞ் செய்யும் வல்லமையும் எளிதிற்கைவரும்.

ஓம் தத் சத் ஓம்.

----------

சன்மார்க்கம்


குரங்குபோல் மனங் கூத்தாடுகின்றதே.

இதன் கூத்தை எப்படி யடக்குவதென்று தெரியவில்லையே.
நன்று சொன்னாய். இதற்கு நல்ல மருந்துன்னிடமுண்டு. நீ அதை மறந்து போனாய். சொல்லுகிறேன் கேள்.

சிவத்தியான மென்னும் மருந்தைத் தினந்தோறுஞ் சாப்பிட்டு வா. மனக்குரங்கின் பிணி மாறும்.

அதைச் சாப்பிடும்போது அனுபானத்தை கூட்டிச் சாப்பிடு. அதுவுமுன்னிடமுண்டு.

அது என்ன வென்றால் நாவடக்கம் இச்சையடக்கமென்னுஞ் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.

இதுவும் போதாது. பத்திய பாகத்திலே தான் முற்றுந் தங்கியிருக்கிறது. அதுவு முன்னிட முண்டு.

அது என்னவென்றால் மிதமான ஊண் மிதிமான நித்திரை மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன்ம லாபத்தின் பொருட்டிதைச் செய்.

மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழுமனத்தோடு விரும்புவானானால் சிவத்தியானத்;தைத் தினந்தோறும் செய்து வரக் கடவன்.

படிப்படியாhக அவன் மனமொடுங்கி வருவதை அவன் கண் கூடாகக் காணுவான்.

சாந்தம் பொறுமை அடக்கம் முதலிய நற்குணங்கள் அவனிடத்துதிக்கும்.

அவன் மனமெந்தநேரமும் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். இகழ் புகழிரண்டினாலும் இழிவடையான். அந்தராத்மாவிலே சுகிப்பான். பிறர் சுகந் தன் சுகமென்ற எண்ணம் பெருகும்.

கைவிளக்கை யொருவன் கொண்டு செல்வானால் இராக்காலத்தில் அவன் மனங் கலங்குவானா? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானானால் மாயவிருள் அவனை அடையுமா? அடையா.

போதனையிலுஞ் சாதனை சிறந்தது. ஒரு பொல்லாப்பு மில்லை.

ஆன்ம இலாபமே பொருளெனக் கண்ட அறிஞர் அநித்தியமான இந்த உலக இன்ப துன்பத்தில் மயங்காது தாமரையிலையில் நீர் போற் சகத்துடன் கூடிவாழ்வார். ஆன்ம இலாபத்தைப் பெற நினையாதவர் இந்த உலகத் துன்ப இன்பத்தினாற் கலங்கித் தியங்கித் திரிவார்கள். ஆன்ம இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு நன்மை தீமையை வென்று நான் எனதென்னும் அகங்கார மமகாரங்களைக் களைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறப் பிறப்பற்றுப்; பேரின்பத்துடன்; வாழ்வார்.

அது அறியா அறிவிலிகளே துன்பக் கடலிலே வீழ்ந்து எரிவாய் நிரயத்துக்; காளாவார்.

வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்று மறியாது கிடப்பதுபோல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினால் கிண்டி ஆங்குவரு மானந்தத்தேனையுண்டு ஒன்று இரண்டு நன்று ததீதென்றறியாமற் தேக்கிக் கிடக்கிறான்.

ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்ல வித்தையிட்டு அதிலுண்டாகுங் களையைக் களைந்து விளையுந் தானியத்தை யொன்று சேர்க்கிறான்.

அதுபோல பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தியென்னும் வித்தை வித்திக் காமக்குரோத மோக மதமாச்சரியமென்னுங் களையைக் களைந்து சிவபோக மென்னுந் தானியத்தைச் சேர்த்து வைத்துப் புசிக்கிறான்.

பூலோகமாகிய நந்தன வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக் கண்டு மகிழ்கிறான்.

பொற்கொல்லன் பொன்னை யெடுத்துப் பல பூண்களைப் படைக்கிறான்.

சிவனாகிய பெரிய பொற்கொல்லன் ஆன்மாவாகிய பொன்னை யெடுத்துச் சீவர்களாகிய பல பணிகளையுமாக்குகிறான்.

வைத்தியன் பல மூலிகைகளையுமெடுத்து ஒன்றாக்கி நோய்க்கு மருந்து கொடுத்து நோயை மாற்றுகிறான்.

பெரிய ஞான வைத்தியனும் தனு கரண புவன போகங்களை ஆன்மாவுக்குக் கொடுத்து அதன் நோயை மாற்றி இன்ப வீட்டில் வைக்கிறான்.

தாய் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான்களைக் கொடுத்து மகிழ்விக்கிறாள்.

சிவபெருமானுந் தன் குழந்தைகளாகிய எங்களுக்குப் பல விதமான இன்பங்களையுந் தந்து மகிழ்விக்கிறான்.

பொறி வழியே போந்து மனம் அலைய அறிஞர் இடங்கொடார். ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள் ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.

அவர்தம் பெருமையை வேத சிவாகமங்களும் புகழ்கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங்கரையும்.

அனைத்தினும் வெற்றி யுண்டு.

Wednesday, August 13, 2008

சைவமஞ்சரி

மூளாய் இந்து இளைஞர் மன்றத்தின் (இந்து சமய மன்றம் பின்னர் இந்து சமய மன்றத்துடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.)சார்பில் சைவமஞ்சரி என்ற ஒரு கையெழுத்துப் பிரதியை 1984 - 1985ஆம் ஆண்டுகளில் எழுதிவந்தோம். அதில் எழுதப்பட்ட ஆசி – வாழ்த்துக்கள் - ஆசிரியர் கருத்துக்கள் என்பவற்றில் என்னிடமிருக்கும் ஆதாரங்களைப் பதிவுக்காகவும் - இன்றைய காலகட்டத்திற்கு ஓரளவு உபயோகமானது என்பது கருதியும் இதனைப் பதிவிடுகிறேன்.


குருபாதம்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்
இரண்டாவது குருமஹா சந்நிதானம் - ஆதீன முதல்வர்
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த
பரமாச்சார்ய ஸ்வாமிகள்
மனமுவந்தளித்த
ஆசியுரை

அன்புடையீர்,
மூளாய் இந்து இளைஞர் மன்றம் ‘சைவ மஞ’சரி’ என்ற சஞ்சிகையை வெளியிடுவதறிந்து பெருமகிழ்ச்சியடைகிறோம். இக்கால கட்டத்தில் மனிதமனம் நாடுவது அமைதி, சுகம், சாந்தி. இதற்கேதுவான வழி ஒன்றே ஒன்று. மனம், வாக்கு, காணம் இவற்றை இறை சிந்தனையில் ஒருவழிப்படுத்துவதான வழிபாடாகும். லௌகிக இன்பங்களில் மனதைச் சிதறுறவிடாமல் எல்லாம் ஈசன் செயல், எம் செயலாலாவது ஒன்றுமில்லை எனப் பரம்பொருளின் பாதாரவிந்தங்களில் சரணடைவதே, மானுடப் பிறப்பின் முழுநோக்கமாக இருக்கவேண்டும்.

இளைஞர்களின் உள்ளங்களிலே தெய்வ நம்பிக்கை, தெய்வ உணர்வு வளர வேண்டும். இதற்கான கட்டுரைகள், அருள்வாக்குகள், கதாரூபமான தத்துவக் கருத்துக்கள் ‘சைவ மஞ்சரி’யில் வெளிவரவேண்டும்.

தெய்வ நம்பிக்கை இல்லாத உள்ளத்தில் மனச்சாட்சி வேலைசெய்யாது. நீதி உயிரற்றுப் போகும். பண்பாடு புதைந்துவிடும். தங்களது சைவப்பணி மேன்மேலும் வளர்ந்தோங்க வேண்டுமென இறையருளைச் சிந்தித்து உளமார ஆசீர்வதிக்கின்றோம்.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.

11.01.85. ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரியசுவாமிகள்

-----
ஓம்

Balar Gnanothaya Sabai பாலர் ஞானோதய சபை
(Estd: 1946) (ஆரம்பம்: 1946)
Kasivinayaga Devasthanam காசிவிநாயக தேவஸ்தானம்
Tellippalai தெல்லிப்பழை
Sri Lanak ஸ்ரீலங்கா
President தலைவர்
Bramma Sri S Ganeshalinnga Kurukkal பிரம்மஸ்ரீ சி. கணேசலிங்கக்குருக்கள்
30.05.1984

ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன்ஞான குரு வாணிபதம் நாடு.

ஆசிச்செய்தி

மூளாய் இந்து மா மன்றம் பயனள்ள பல சைவப்பணிகள் செய்து வருவது போற்றத்தக்கது. அதன் கையெழுத்துப்பிரதியாகச் சைவமஞ்சரி வெளிவர இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். சமய வளர்ச்சிக்குச் சஞ்சிகைகள் அருந்தொண்டாற்ற முடியும். ஆந்த வகையில் சைவமஞ்சரியும் சமய விஷயங்களை எடுத்து விளக்கவேண்டும். செல்வன் த. முகுந்தன் அவர்களின் சமயப்பற்றும் அயராத உழைப்பும் போற்றத்தக்கது. மன்ற உறுப்பினர்கட்கும் தலைவர் செயலாளர் ஆகியோருக்கும் எமது பாராட்டுக்கள். மேலும் சைவமஞ்சரி நல்லவிஷயங்களுடன் சிறப்பாக வெளிவருவதற்கு விநாயகப் பெருமானை வேண்டுதல் செய்து எனது நல்லாசிகளைத் தெரிவிக்கின்றேன்.

சி. கணேசலிங்கக்குருக்கள்
தலைவர்

------



தேவி துணை
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்தெல்லிப்பழை
Sri Durka Devi Devasthanam, Tellippalai, Sri Lannka.
T’phone: 243 Chunnakam

ஆசியுரை

இன்று நம் நாட்டிலே திருக்கோயில்களும் சமய மன்றங்களும் சைவ சமய வளர்ச்சியில் பெரும்பங்கெடுத்து வருவதை யாபேரும் அறிவர். இவ்வடிப்படையில் மூளாய் இந்து சமய மன்றம் கடந்த 1978ம் ஆண்டிலே ஆரம்பமாகி பல சிறப்பான பணிகளை ஆற்றி வருகிறது. இப் பணியின் ஒரு சின்னமாக சைவமஞ்சரி என்னும் சஞ்சிகை கையெழுத்துப்பிரதியாக வெளி வருவது பாராட்டுக்குரியது. இம்மன்றத்தின் புனிதமான சேவைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

இம்மன்றத்தையும் சஞ்சிகையையும் வாழ்த்துவதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் மன்றப் பணியில் மிக ஈடுபாடு கொண்டுள்ள செல்வன். த. முகுந்தன் அவர்களைப் பாராட்டுவதும் எனது கடனாகும்.

தன் கடன் அடியேனையுந் தாங்குதல்ஏன் கடன் பணி செய்து கிடப்பதே என்பதற்கிணங்கப் பணிபுரிந்து பக்தி செலுத்தி வாழ்வது மன்றத்தினரது தலையாய கடனாகும்

தங்கம்மா அப்பாக்குட்டி
தலைவர் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை

நிர்வாகசபை Managing Committee

தலைவர் துர்க்காதுரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி JP
உப தலைவர்கள் திரு. நம. சிவப்பிரகாசம் திரு. ந. பொன்னம்பலம்
இணைக் காரியதரிசிகள் திரு. சு. சிவவாகீசர் டீயு திரு. க. தணிகாசசலம்
தனாதிகாரி திரு. அ. சண்முகநாதன்
உப தனாதிகாரி திரு. ச. ஆறுமுகநாதன்

----

“மில்க்வைற் செய்தி ஆசிரியர்”
சைவப் புலவர், பண்டிதர்
திருவாளர் க.சி. குலரத்தினம் அவர்கள்
ஆசிச் செய்தி

மூளாய் சித்தி விநாயகப் பெருமான் திருவருளால் அங்கே சைவப்பிரகாச வித்தியாசாலை மலர்ந்து பெருமளவில் சைவத்தமிழ் பரந்து வளர்ந்தோங்க வசதியும், வாய்ப்பும் செய்தது எனலாம். சைவத் தமிழ்ப் பண்ணையாகச் செழித்த அந்தவூ10ரிலே பாரம்பரியமாகப் புலவர்கள், பண்டிதர்கள், வித்துவான்கள் தோன்றி முத்தமிழ் வளர்த்து வந்துள்ளனர். அந்தப் பரம்பரையில், இன்று முளைகொண்ட சமுதாயம் இளம்பருவத்திலேயே நல்லமுறையில் செந்தமிழ்ப் பற்றுக்கொண்டு சிறந்த சேவை செய்வது கண்ணாற் காணக்கூடியதாகவுள்ளது. குழந்தைகள், சிறுவர்களுக்கான பத்திரிகைகள், நு}ல்கள் அதிகம் நிலவாத எங்கள் நாட்டில், கையெழுத்துப் பிரதியாக ஆங்காங்கே சில ஊர்களில் இளைஞர்கள் பத்திரிகைகள் தயாரித்துத் தங்கள் உள்ளக் கருத்தை வெளியிட வாய்ப்புச் செய்தமை பெருமகிழ்ச்சிக்கு உரியதாகும். இவர்களை நாம் வெகுவாகப் பாராட்டுவதோடு எம் ஆசிச் செய்தியாக இதனை அவர்களுக்காக எழுதுகிறோம். இவர்கள் முயற்சி நன்றாக எல்லாம் வல்ல சித்தி விநாயகப் பெருமான் திருவருள் முன்னிற்பதாக.

கந்தர்மடம், இவண்,
யாழ்ப்பாணம், க.சி.குலரத்தினம்.
11.1.85.

-----

ஆசிரியர் முகவுரை

சமய நம்பிக்கை நாளடைவில் பின்செல்லப்படுவதை நான் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. நாட்டின்நிலை ஒருபுறமும், கேளிக்கை நிகழ்ச்சிகள் ஒரு புறமும் மனதை சலனப்படுத்துகிறது. மனம் சாந்தி பெறுவதற்கு சமய அறிவு நு}ல்களை வாசித்து அமைதி பெறல் அவசியம். கந்த புராணம், திருவிளையாடற் புராணம், பெரிய புராணம போன்ற புராணங்கள் மிகவும் அறிவு பொருந்திய நு}லாகும். நாட்டின் நிலை மோசமடைவது ஏனெனில் உலகில் அநீதி தாண்டவமாடுவதையே குறிக்கிறது. நாடு செழிக்க வேண்டுமாயின் ஒவ்வொரு ஊரும் சிறக்கவேண்டும். ஊர் சிறக்க வேண்டுமாயில் ஆலயங்கள் சிறக்க வேண்டும். மூளாயைப் பொறுத்தவரை சுமார் இரண்டாயிரம் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் ஆலய வழிபாடு செய்வோர் மிகமிகக்குறைவு. ஆதலால் யாவரும் ஆலய வழிபாடு செய்தல் அவசியம்.தவறாது ஆலய தரிசனம் செய்துவரல் மனதிற்கு அமைதி மட்டுமல்லாது பாவங்களைப் போக்கவும் உதவும். மக்கள் தினமும்ஆலய வழிபாடு செய்யமுடியாது விடின் விசேட தினங்களிலாதல் சென்று வழிபாடு செய்து மனச்சாந்தி பெறுவீர்களாக.

த. முகுந்தன் (ஆசிரியர்)

-----

ஆசிரியர் அரங்கு - இதழ் 5 (17.10.1984) இரத்தா~p ஆண்டு ஐப்பசி மீ

ஆங்கில மாதந்தோறும் வெளிவந்த இதழை திடீரென தமிழ்மாதந்தோறும் வெளிவர ஏற்பாடு செய்தமை, “வாணி விழா” நடைபெற்றமையால் ஏற்பட்ட சில நிகழ்ச்சிகளால்தான். அத்துடன் தமிழ்மாதம் சமய வைபவத்திற்கு ஏற்றது எனக் கருதியமையாலும்.

சைவமஞ்சரி இதழை மாணவர்களைவிட அதிகமாகப் பெரியோரே அக்கறையாக வாசிப்பதை எமது குழு கண்கூடாகப் பார்க்க முடிந்துள்ளது. தற்போதைய காலகட்டத்திலே சமய, கலை கலாச்சாரப் பண்புகள் மாறிவருவதும் ஓர் எடுத்துக்காட்டு. எனவே அப்பண்புகளை மாறாது நாமே பேணிப்பாதுகாத்தல் மட்டுமல்லாது ஏனைNயுhரையும் அவ்வழியிலே செயற்பட நல்லுரை கூறவேண்டும்.

மலர் தனது நலத்தைத் தனக்கென்று வைத்திராதது போல நல்லவர்கள் தம்மிடமுள்ள நற்குணங்களை மற்றயவருக்கும் தெரியப்படுத்தி நல்லுரை வழங்கலவசியம்.

த. முகுந்தன் (ஆசிரியர்)

-------

ஆசிரியர் கருத்து - இதழ் 8 (14.01.1985) இரத்தாசி ஆண்டு தை மீ


“குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்று அருணகிரிநாதர் கந்தரநுபூதியிலும்,
“இறவாமற் பிறவாமல் எனையாள் சற்குருவாகிப் ...” என்று திருப்புகழிலும்,
“கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க” என்று மாணிக்கவாசகர் சிவபுராணத்திலும் குருவினுடைய அருளை மிகவும் திறமையாகக் கூறுகின்றார்கள்.

திருப்பெருந்துறையிலே, குருந்தமர நிழலிலே குரு அருளைப்பெற்ற மணிவாசகர், அவர்தம் புகழைத் தம் திருவாசகத் தேனிலே மிகச் சிறப்பாகச் செப்புகின்றார். இதே போலத்தான் குமரக் கடவுளாகிய முருகனிடம் அருணகிரிநாதரும் தமது குருவைச் சிறப்பாகத் திருப்புகழில் இயம்புகிறார்.

அப்படியான ஒரு குருவை நாம் தேடி எமது அறியாமை என்னும் கொடிய இருளை நீக்கி மெய்யுணர்வை அறிதல் அவசியம். இந்த விடயத்தில் மாணிக்கவாசகரது திருவாசகத் தேனிலுள்ள சிவபுராணத்தின் ஒரு சில அடிகளை நாம் விளங்கிக் கொள்ளல் அவசியம்.

“மறைந்திட மூடிய மாய இருளை அறம், பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி ...” என்னிடத்தே வெளிப்பட்டும் மறைந்தும் இருக்கின்ற மாயா இருளாகிய மலங்களை அழித்து, எளியேன் அறம், மறம் என்பவற்றைப் பயின்று, அறஞ் செய்தலினால் விருப்பமும், மறம் செய்தலில் வெறுப்புமுடையவனாகி, அந்நல்வினை தீவினைகளை ஒத்த பண்பினவாக்கிக் குரு தரிசனம் பெற்றுத் தன் திருவடிக் காட்சி பெற்று, ஆனந்தத்தில் மூழ்கிய விதத்தைத் தம் நாவினால் செப்புகிறார் மணிவாசகர். மணிவாசகப் பெருமான் இறைவனால் பலமுறை சோதிப்புக்குள்ளானார். எனினும் அவர் இறைவனை அடையும் வழியிலே மிகுந்த அக்கறையுடையவராகவே இருந்தார். ஆனால் எம்மைப் பொறுத்தவரையிலே எம்மவரிற் பலர் இடர்களையும், துன்பங்களையும் கண்டு அஞ்சி தமதியல்பினை மாற்றுகின்றனர். “எல்லாம் அவன் செயல்” என்றும், “அவனன்றி அணுவும் அசையாது” என்பதற்கும் ஏற்றவகையிலே, எம்மை இரட்சிக்கும் அந்தப் பரம் பொருளை அடைதலே இவ்வாழ்வின் நோக்கம் என்பதற்கேற்ப அதற்கேற்ற சுலபமான வழியாகிய குருவருளைப் பெற்றுய்வோமாக!

அப்படிப்பட்ட ஒரு குருதேவரை நான் இதுவரை என்கண்களாலே காணவில்லை. ஆயினும் எனது மெய்யுணர்வினாலே ஒருசிலரின் உதவியோடு எனது குருவின் தீர்க்கமான தரிசனத்தை அறிய முடிந்தது. அந்த ஒரு சிலர் வேறுயாருமல்ல, அளவையூர் ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமத்தினரும், கோப்பாய் ஸ்ரீ சுப்பிரமுனிய கோட்டத்தினருமேயாவர். குருதேவர் ஸ்ரீ சுப்பிரமுனிய சுவாமிகளுடைய வழியிலே சைவசமயத்தை வளர்க்கவும், அதன்வழியிலே செல்லவும் நான் என்றென்றும் உறுதி செய்வேன் என்று நான் சென்ற 5ந்திகதி (05-01-1985) அளவெட்டியில் எனது அங்கத்துவப் படிவத்தை நிரப்பியும், யோப்பாயில் சத்தியப் பிரமாணஞ் செய்தும் ஏற்றுக்கொண்டேன். அன்றிலிருந்து நான் விடுதலை பெற்ற ஒரு மனிதனாக வாழ்கிறேன் என்பதில் சற்றேனும் ஐயமில்லை.

எனது வாழ்விலே என்றும் மறக்கமுடியாத இச்சம்பவம் உங்களுக்கும் தெரிய வேண்டும் என்ற வகையில் எனது கருத்தாக சமர்ப்பிக்கின்றேன்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

த. முகுந்தன் (ஆசிரியர்)

குருஸ்வாமி சிவத்திரு. எம். என். நம்பியார் அவர்கள் கருத்தும் எமது கடிதங்களும்

நாம் குருஸ்வாமி சிவத்திரு. எம். என். நம்பியார் அவர்களுக்கு எழுதிய கடிதத்தையும் அவரது பதிலையும் இங்கு அனைவருக்காகவும் இணைக்கின்றேன்.

25.01.2007

திருவருளும் குருவருளும் முன்னிற்க!

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய குருஸ்வாமி எம். என். நம்பியார் அவர்களுக்கு,

வணக்கம். இலங்கையிலிருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களில் அடியேனும் ஒருவன். தங்களை நேரில் சந்திக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை. எனவே இக்கடிதமூலமாக தங்களிடம் எமது கோரிக்கையை முன்வைக்கின்றோம். தயவுசெய்து இந்நூலில் 41ஆம் பக்கத்தில் உள்ள 18 வினாக்களுக்கு தங்களிடமிருந்தும் பதில்களை எதிர்பார்க்கின்றோம். தயவுசெய்து சிரமத்தைப் பாராமல் நேரமுள்ள வேளையில் பதிலை எழுதி அனுப்பி வைக்குமாறு தயவாக வேண்டுகின்றேன்.

நன்றி.

என்றும் பணியிலுள்ள
தங்க. முகுந்தன்.

----

07-02-2007.

உயர்திரு. தங்க. முகுந்தன் அவர்கள்

-ஸ்வாமி சரணம்-

பேரன்புடையீர் வணக்கம். தாங்கள் அனுப்பிய ஜோதி நிதர்சனம் புத்தகமும் தங்கள் கடிதமும் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி.

ஐயனின் 18 படிகள் போல் 18 கேள்விகள் கேட்டு இருக்கிறீர்கள். நான் 60 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலை சென்றாலும் இன்னமும் என்னை கன்னி சாமியாகத்தான் பாவிக்கிறேன். என்னை விட அனுபவமும் ஆற்றலும் மிக்க பல குருசாமிகள் தங்கள் கருத்துக்களை மிக அழகாக கூறியுள்ளார்கள். அவர்களின் பல கருத்துக்கள் என் கருத்துகளோடு ஒத்துப் போவதால் நான் தனியாக கூற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

என்னை பொறுத்தவரை சபரிக்கு செல்லும் வழிகளும் பாதைகளும் இப்போது வசதியாக செய்து விட்டார்கள். வசதி பெருகிவிட்டது. பக்தி குறைந்து விட்டது. ஐயப்பமார்கள் விரதகாலத்தில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது – நல்லதையே நினைத்து நல்லதையே பேசி நல்லதையே செய்து வரவேண்டும். ஒரு மண்டலம் இவ்வாறு விரதம் மேற்கொண்டால் அதன் பிறகும் அதையே கடைப்பிடிக்க சிரமமிருக்காது.

எல்லாம் நல்லதாக செய்தால் தவறு இழைக்க வேண்டிய சந்தர்ப்பமே வராது.

தங்கள் தொண்டு சிறக்கட்டும். தாங்களும் தங்கள் குழுவினரும் எல்லா நலனும் பெற்று வாழ எல்லாம்வல்ல ஐயப்பனை வேண்டுகிறேன்.

ஸ்வாமி சரணம்

அன்புடன்
M.N.நம்பியார்

-----

19.02.2007.

குருஸ்வாமி சிவத்திரு. எம். என். நம்பியார் அவர்கள்,
இல. 4, கோபாலபுரம் 6வது தெரு,
சென்னை – 86.

திருவருளும் குருவருளும் முன்னிற்க,

பேரன்புக்கும், மதிப்புக்குமுரிய குருஸ்வாமி அவர்களுக்கு,

வணக்கம். தங்களின் மிகவும் பொறுமையுடன் - குருஸ்வாமிக்குரிய பண்புகளுடன் எழுதிய 07.02.2007 திகதியிட்ட கடிதம் 12.07.2007ல் கிடைத்தது. தங்களுடைய வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடிதம் கிடைத்ததுபற்றி தங்களின் அருமைத் துணைவியாரிடம் செய்தி கூறினேன். பதில் எமுத தாமதித்தமைக்கு மன்னிக்கவும். சிரமத்தைப் பாராது பதில் எழுதியமைக்கும் எமது பணிவான மனம்நிறைந்த நன்றிகள்.

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நாம் ஸ்ரீ தர்மஸாஸ்தாவினுடைய படிப்பூஜையை எமது ஆலயத்தில் செய்து வருகின்றோம். தங்களின் கடிதம் கிடைத்த செய்தியறிந்து தங்களை நேரடியாகவே தரிசித்த உணர்வடைவதாக எமது குழுவினர் தங்களுக்குத் தெரியப்படுத்தச் சொன்னார்கள். தாங்கள் சிறிது உடல் நலம் குன்றியிருப்பதாக அறிகிறோம். தங்களின் உடல்நலம் பூரணமடைய எல்லாம்வல்ல காந்தமலை வாசனை மனதார இங்கிருத்தவண்ணம் இறைஞ்சுகின்றோம்.

தாங்கள் குறிப்பிட்ட பிரகாரம் நல்லவற்றைப் பேசி, நல்லவற்றை நினைந்து, நல்லவற்றையே பேசி வருவோமாயின் எமது மனம் வாக்கு காயம் என்ற திரிகரணங்களும் சுத்தமடையும். இதுவே த்தவமஸி என்ற தத்துவத்தை எமது ஆத்மா அடையக்கூடிய எளிய படிமுறை.

அடுத்த தடவை நாம் எமது யாத்திரையின்போது எல்லாம்வல்ல ஸ்ரீ சபரிகிரீஸன் தங்கள் பாதகமலங்களை தரிசிக்கும் வாய்ப்பைத் தரவேண்டும் என்று வேண்டுவதுடன், தாங்களும் கங்கள் குடும்பத்தவரும் எல்லாம்வல்ல ஸ்ரீ ஹரிஹரசுதனின் கிருபையால் தேகாரோக்கியத்துடன் விளங்கவேண்டும் எனவும் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.

ஏதேனும் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.

நன்றி.

என்றும் பணியிலுள்ள,


தங்க. முகுந்தன்.

" சுவிற்சலாந்து காட்டும் பாதை" - தந்தை செல்வா

கொழும்பு வெள்ளவத்தை சைவமங்யைர்கழக மண்டபத்தில் நடைபெற்ற மொழிமாநாட்டில் பேசியது. 29. ஜனவரி 1956.

தமிழன் இந்நாட்டில் உரிமையுடன் வாழ வழிவகுக்கப்பட வேண்டும். நமது ஜீவாதார உரிமையான மொழி உரிமையைப் பாதுகாக்க முனைந்திருக்கிறோம். எமது சமூகம் மொழி ஆகியன ஒதுக்கப்படுவதை எதிர்த்துப் போராட்டம் நடாத்த முன்வந்திருக்கிறோம். இந்த நாட்டில் உள்ள தமிழ்ப்பேசும் மக்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விபரத்தைச் சிங்களவர் என்றும் குறைத்தே கூறுகின்றனர். இலங்கையில் 24 இலட்சம் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 81 இலட்சம் மக்கள் ஜனத்தொகையை உடைய இந்நாட்டில் அவர்கள் 30 சதவீதமானவர்களாகத் திகழ்கின்றனர். இலங்கையில் இரண்டு மொழிகள் உத்தியோக மொழிகளாக இருக்க முடியாது என்று கூறிவருவோர் இதர நாடுடகளின் முன்மாதிரியைப் பின்பற்றிச் செயலாற்றுவது சிறந்ததாகும். சுவிற்சலாந்து தேசத்தில் 4 மொழிகள் உத்தியோக மொழிகளாக இருக்கின்றன. இலங்கையில் சிங்களம் போல் அந்நாட்டில் ஜெர்மன் மொழியை 72.7 சத விகிதமானோர் பேசி வந்த போதிலும் பிரெஞ்சு இத்தாலியன் ஆகிய இரு மொழிகள் உட்பட 1.2 சத விகிதமானோர் பேசிவரும் ரொமனிஸ் மொழியும் ஜெர்மன் மொழியுடன் சமஅந்தஸ்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை சிறிய ஒரு நாடெனவும் எனவே இங்கு இரு மொழிகள் உத்தியோக பாசைகளாக இருக்க முடியாதெனவும் கூறுகின்றனர.; சுவிற்சலாந்து 14 ஆயிரம் சதுர மைல் விஸ்தீரணத்தை உடையது. ஆனால் இலங்கையோ 25 ஆயிரம் சதுர மைல் விஸ்தீரணமாகவிருக்கிறது.

ஒரு நாட்டில் தேசியம் வளர்வதுடன் மக்கள் ஐக்கியமாக வாழ்வதற்கு அந்நாட்டில் பெரும்பான்மையினராக விருக்கும் மக்கள் தங்களின் ஆதிக்கத்தை சிறுபான்மையினர் மீது நீதியுடன் செலுத்தவேண்டும். இதைச் சிங்களவர் முற்றாக மறந்து விட்டார்கள். இதன் விளைவாகத்தான் சிங்களம் மாத்திரம் கூச்சல் எழுந்திருக்கிறது. தமிழ் மொழி இலங்கையில் இல்லாவிட்டாலும் இந்தியாவில் பாதுகாக்கப்படுமென்றும் சிங்களமோ அப்படியல்ல வென்றும் ஒரு சில சிங்கள அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இதைப் பார்த்தால் இந்தியாவில் வாழும் தமிழர் உணவு உட்கொள்ளுகிறார்கள். ஆகவே இலங்கையில் வாழும் தமிழர்கள் சாப்பிட வேண்டியதில்லை என்று கூறுவதைப் போல இருக்கிறது.

(இக்கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கம் - தந்தை செல்வா அவர்களின் தீர்க்க தரிசனத்திற்காகவே - இந்நாட்டில் மக்கள் மக்களாக மனிதர்களாக மதிக்கப்படுகிறார்கள். மித உரிமை பேணப்படுகிறது. சுத்திரமான வாழ்க்கையை ஒவ்வொருவரும் மேற்கொள்ள முடியும். இந்நாட்டிலுள்ள பிரசையாக இருந்தாலும் சரி வெளிநாட்டவர்களாயிருந்தாலும் சரி முதன்முதல் அவர்களது கைவிரல் அடையாளங்கள் காவல்துறையினரால் பதிவுசெய்யப்பட்டு கணனி முறைப் படுத்தப்படும். நாட்டில் சகல பொறுப்புக்களும் காவல்துறையின் கீழ் இருப்பதால் அநீதி என்ற சொல்லுக்கு அனுமதி கிடையாது. யாராயிருந்தாலும் சகலரையும் விசாரணை செய்யும் அதிகாரம் காவல் துறையிடம் உண்டு. சகல விபரங்களும் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. அனைவரும் நீதியாக வாழுவதால் பிரச்சனைகள் பெரிதாக ஏற்பட வாய்ப்பில்லை. 26 மாநிலங்களுடைய இந்நாட்டில் அவரவர் தாய்மொழியைக் கட்டாயம் அறிந்திருக்கக் கூடியவகையில் அரசு சகல உதவிகளையும் செய்கிறது. எமக்கு தமிழ் பாடசாலைகள் நடக்கக் கூடிய வகையில் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பாடசாலைகள் மாலைநேரம் தமிழர்களின் பாவனைக்கு வழங்கப்படுகிறது. (மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.)

பத்திரிகைச் செய்திகள் (இன்றுவரை எவரும் பிரசுரிக்காதவை)

04.09.2006

பத்திரிகை செய்தி

கடந்த 01.09.2006 தினக்குரல் பத்திரிகையில் முதற்பக்கத்தில் நோர்வே அத்துமீறுவதாக அரசாங்கம் குற்றச்சாட்டு என்ற ஒரு தலைப்பிலும், ஏழாம் பக்கத்தில் கண்காணிப்புக்குழுவின் குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் நிராகரிக்கின்றனர் என்ற தலைப்பிலும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே முன்னைய ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் ஆட்சியிலும் நவாலி தேவாலய படுகொலைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம் தெரிவித்தபோது அதற்கு அன்றைய வெளிவிவகார அமைச்சர் மறைந்த திரு. லக்ஸ்மன் கதிர்காமர் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்துடன் நியூயோர்க்கில் கருத்துத் தெரிவித்த சமயத்தில் இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா சபையாகினும்சரி, வேறெந்த நபர்களாயினும்சரி தலையிடுவதைத் தவிர்க்கவேண்டும் எனக் கூறியிருந்தார். அதனடிப்படையில்தான் தற்போதும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் நோர்வேயின் செயற்பாடுகளுக்கும், போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைவர் தெரிவித்த கருத்துக்களுக்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று, ஏன் மேதகு ஜனாதிபதியும் கூட (முன்னைய ஆட்சிக்காலங்களிலும்சரி, இப்போதும்சரி) விடுதலைப் புலிகளைத் தடை செய்யவேண்டும் என கோரிக்கைவிடுவதுபோலவே, இந்நாட்டில் பல மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா சபையின் அகதிகளுக்கான புனரவாழ்வுக் கழகம், இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு, சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்கள் இந்நாட்டில் நடைபெறும் படுகொலைகளை – அம்பலப்படுத்தி மனிதாபிமான முறையில் வெளிக்காட்டுகிறார்கள். மக்கள்மத்தியில் பிரிவினையை எற்படுத்தி ஒருதலைப்பட்சமாக சிங்கள் மக்களுக்கு கூடிய சலுகைகளை வழங்கும் அரசின் நடவடிக்கை நியாயமற்ற செயல் என்பதையே மனிதாபிமான அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதைப் புரிந்துகொள்ளாத அரசு ஒருபோதும் நியாயமான ஆட்சியை வழங்காது.

இதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள்மீதும் கண்காணிப்புக்குழு குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ள வேளையில் அதற்கும் விடுதலைப்புலிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

மாவிலாறு அணைக்கட்டு சம்பந்தமான பிரச்சனை ஏன் ஏற்பட்டதென இன்றுவரை தெரியாத நிலையில், அரசு பொறுமை காக்காது விமான, எறிகணைத் தாக்குதல்களை ஆரம்பித்ததும், அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தியதும், பின்னர் அப்பாவி முஸ்லீம்கள் அதிகமாகவாழும் மூது}ர் பிரதேசத்தின்மீதும், வடக்கு இராணுவ நிலைகள்மீதும் தேவையற்ற முறையில் தாக்குதல்களை ஆரம்பித்தமையும், தற்போது இதனால் பல இன்னல்கள் ஏற்பட்டதும் - அவை தொடர்ந்த வண்ணம் இருப்பதுவும் மிகவும் வேதனைதரும் விடயங்களே. சம்பந்தப்பட்டவர்கள் இதில் ஆராய்ந்து முடிவெடுக்கத் தவறியமையே பிரதான காரணமாகும்.

பலகாலமாக தமிழ்மக்களை ஏமாற்றிவந்த அரசின்மீதிருந்த நம்பிக்கையற்றதன்மை -தற்போது விடுதலைப் புலிகளின்மீதும் - கடந்த மாவிலாறு சம்பந்தமான பிரச்சனையின்பின் ஏற்பட்ட தாக்குதல்களினால் ஏற்பட்டிருக்கிறது என்றே கூறலாம். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் மட்டுமன்றி, போக்குவரத்து, மற்றும் முக்கிய அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவேண்டிய தேவை மிகமிக முக்கியமான தேவையாயிருக்கிறது. இதனை கருத்தில் வைத்து மனிதாபிமான அடிப்படையில் அப்பாவி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டியது இலங்கை அரசினதும், அதே நேரத்தில் ஏகப் பிரதிநிதிகள் என தெரிவாகிய தமிழீழ விடுதலைப் புலிகளினதும் தாற்பரிய கடமையாகும்.

தங்க. முகுந்தன்.

------------------

18.08.2007.

செய்தி

எப்போது புரிந்துணர்வுடன் செயற்படக்கூடிய அரசியல்நெறிதெரிந்தவர்கள் வருகின்றார்களோ அன்றுதான் எமது நாட்டில் அமைதி தோன்றும்
மனிதாபிமானப் பணிகளைப் பார்வையிடச் சென்று கருத்துத் தெரிவித்த ஐ.நாவின் மனிதாபிமானப் பணிகளுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் அவர்களைப் பற்றி இலங்கை அரச அமைச்சர் ஐெயராஐ; பெர்னாண்டோபிள்ளே தெரிவித்த கருத்து முட்டாள் தனமானதுடன் அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் தலைகுனியச் செய்யும் செயலாகிறது.
இவர் மாத்திரமல்ல இதற்கு முன்னர் நானறிந்தவரையில் இரு சந்தர்ப்பங்களில் முன்னைய வெளியுறவு அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களும் இப்படியான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார். மரணமடைந்த பின்னர் ஒருவரைப்பற்றி அவதூறாகப் பேசக்கூடாது என்ற ஒரு தர்மம் இருப்பினும் உண்மையின் தேவை கருதி இதை நான் குறிப்பிட விரும்புகின்றேன் (நான் முன்னர் எழுதிய கடிதங்களின் பிரதிகளை இணைத்துள்ளேன்)

09.07.1995 நவாலி தேவாலயத்தின் மீதான விமானத்தாக்குதலைக் கண்டித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை விடுத்தபோது அதைக் கண்டித்தவர்: இதேபோல 1999 செப்ரெம்பரில் நியூயோர்க்கில் இலங்கையின் உள் விவகாரங்களில் ஐ.நா. சபையாகினும் சரி வேறெந்த நபர்களாயினும் சரி தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.

எமது நாட்டில் ஐனநாயகம் மீது மதிப்பு வைத்திருப்பவர்களுக்குத் தெரியும் சிங்களப் பேரினவாத அரசியல் தலைவர்களில் எத்தனைபேருக்கு அரசியல் அறிவு இருக்கிறது என்பது? இவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கருத்து வெளியிடுவதும் எழுதிய ஒப்பந்தங்களை முறிப்பதும் சர்வசாதாரணமாகிய விடயங்களே! இப்படியான அரசியல் நாகரீகம் தெரியாதவர்கள் அகன்று எப்போது புரிந்துணர்வுடன் செயற்படக்கூடிய அரசியல் நெறி தெரிந்தவர்கள் வருகின்றார்களோ அன்றுதான் எமது நாட்டில் அமைதி ஏற்படும்.

தங்க. முகுந்தன்
முன்னாள் மாநகர சபை உறுப்பினர்.
தங்க. முகுந்தன்

நான்முகன் உபதேசம்

தேவர்களுக்கு அருளியது - தமனம் (கட்டுப்பாடு)

சுகபோகங்கள் நிறைந்த சுவர்க்கலோகத்தில் அளவோடு சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு அவைகளுக்கு அடிமையாகாமல் வாழ்வீர்களாக!

மனிதர்களுக்கு அருளியது - தானம்

செல்வம் சேர்ப்பதில் அதிகமான மோகம் கொண்ட நீவிர் சம்பாதிக்கும் பொருள்களில் குறிப்பிட்டளவு பங்கை இல்லாதாருக்கும் இயலாதவர்க்கும் தானமாக அளியுங்கள்!

அசுரர்களுக்கு அருளியது – தயா (இரக்கம்)

கோபங்ககளும் கொலைவெறியும் ஆதிக்கமோகமும் கொண்ட நீவிர் தயா எனும் நல்வழிகாட்டும் இரக்க குணத்தை திடமாகக் கடைப்பிடித்து வாருங்கள்!

தேவர்களும் மனிதர்களும் அசுரர்களும் பிரம்மதேவரின் உபதேசத்தைக் கடைப்பிடிக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் பெற்றார்கள். பெரும்பாலும் இவர்கள் பிரம்ம வாக்கை மீறிச் சென்று சீர்குலைவு கண்ட நிகழ்ச்சிகள் தான் அதிகம். முறையும் முறைகேடும் கலந்த வாழ்க்கை தான் இன்றும் மனிதர்களையும் மற்றவர்களையும் அல்லற்படுத்திக் கொண்டு இருக்கின்றன.