அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, September 11, 2010

முன்னாள் யாழ் முதல்வர் அமரர் பொன் சிவபாலன் அவர்களின் நினைவு தினம் இன்று!



















நேரமின்மை காரணமாக எழுதுவதைத் தவிர்த்து படங்களை மட்டும் பிரசுரித்தேன். கனடாவிலிருந்து திரு. விக்னேஸ்வரன் தெய்வேந்திரம் அவர்கள் சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் - அதை அப்படியே இணைத்துள்ளேன்!

இன்று பொன் சிவபாலனின் யாழ் மேயர் 12 வது வருட நினைவு நாள். சிவபாலன் தமிழ் இனத்துக்கு மறைந்த தமிழன் தலைவன் அமிர்தலிங்கம் வழியில் தன் இளம் பருவதிலிருந்து சேவை செய்துவறும் வேளையில் 12.09.1998 தமிழ் கடவுள் முருகன் வீரூருந்து அருள்பாலிக்கும் நல்லூர் பதியில்

வைத்து கொலை செய்யபட்டர். இவரின் இழப்பு சித்தன்கேணி மக்களுக்கு மட்டுமல்லது தமிழ் மக்களுக்கும பெரும் இழப்பாகும் .

1989ஆண்டு மார்கழி மாதம் கட்டுனயாக்க சர்வதேச விமானநிலயத்தில் சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது. நாம் இருவரும் எம் இந்திய பயணம் தொடர்ப்பாக எயர் லங்கா விமானத்துக்கு (UL 303) UL "Usually Late" வழமை போல் அன்றும் late. எமக்கு கிடைத்த அந்த சந்தர்ப்பம் பலத்தரப்பட விடயங்களை பரிமாற வாய்ப்பாக இருந்தது.
முக்கிய விடயம் அரசியல், சிவபாலன் அன்றைய பயணம் கூட தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் மறைந்த திரு. சிவசிதம்பரம் அவர்களை சந்திக்கும் நோக்கமாக சென்னை செல்வதாக இருந்தது .

மிக மனவேதனையுடன் தலைவர் அமிர்தலிங்கம் 1989 July 13 இல் கொழும்பில் வைத்து கொலை செய்து ஒரு பெரும் தமிழ் தலைவரை இழ்ந்து விட்டோம் என்றார். இக் கொலையால் எதனை சாதிக்கபோகின்றோம் என்று அவர் அன்று கூறியமை இன்றும் என் மனதில் ஒலித்துக்கொண்டு இருகின்றது. .

Thursday, September 2, 2010

அமரர்கள் வி. தர்மலிங்கம் மு. ஆலாலசுந்தரம் ஆகியோரின் நினைவு தினம் இன்று!



1985.9.2இல் படுகொலைசெய்யப்பட்ட அமரர் வி. தர்மலிங்கம் அவர்களுடைய நினைவுத் தூபி

எமது அலுவலகத்தில் அஞ்சலி