அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, May 29, 2009

Fate of the lonely destitute elders in the IDP camps - பராமரிப்பின்றி தனிமையில் வாடும் முதியோர்கள் - TULF


29.05.2009
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,
இலங்கை ஜனாதிபதி.

அன்புடையீர்,

பராமரிப்பின்றி தனிமையில் வாடும் முதியோர்கள்

நான் முன்னர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இதுவரை பல முதியோர்கள் பராமரிக்கக்கூடியவாறு உறவினர்கள் பொறுப்பேற்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது, இருந்தபோதும் இன்னும் பலர் தனிமையில் வாடிவருகின்றனர். தம்மை இன்னார் என்று அறிவிக்க முடியாத வயதுகடந்த நிலையும்தாண்டி அங்கு உயிர்வாழ்கின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றார்கள். வசதி படைத்த அவர்களின் உறவினர்களும், பிள்ளைகளும் வெளிநாடுகளிலும் இலங்கையின் து}ர இடங்களிலும் வசித்துவருவதாலும், அவர்களின் உறவினர்கள் இவர்கள் நிலையை அறிந்துகொள்ள இயலாமல் துயரப்பட்டுக் கொண்டுள்ளார்கள். முகாம்களில் ஒலிவாங்கியில் கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களும் அவர்கள் செவியில் ஏறுவதில்லை. உணவினை பெற வரிசையில் நிற்க இயலாமல் படும் துன்பம் சொல்லில் அடங்காது. எனவே அவர்கள் தொடர்பான பெயர் விபரங்களை உடன் வெளியிடுவதுடன் தயவு செய்து தனியாக விடப்பட்டவர்களை ஒருங்கிணைக்குமாறும், தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது உங்களுக்கு இந்த கடிதத்தினை எழுதிக்கொண்டிருக்கும் போதும் எனக்குக் கிடைத்த தகவலின்படி தனது மைத்துனரை இராமநாதன் முகாமில் சந்திக்க பிரான்சில் இருந்து வந்த அவரின் 55 வயதுடைய வைரமுத்து செல்வராசா என்பவர் 27.05.2009இல் கொழும்பில் இறந்துவிட்டார் என்பதனையும் தங்களுக்கு வேதனையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இது போன்ற சம்பவங்கள் நிறைய நடந்து கொண்டிருக்கின்றன. இவை துயரப்படும் மக்களின் துயரத்தை மேலும் மேலும் அதிகரிப்பனவாகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 66 இனங்காண இயலாத வயோதிபரின் சடலங்கள் வவுனியா, பூந்தோட்டம் மயானத்தில் அனாதை பிணங்களாக புதைக்கப்பட்டன. இதுபோன்ற சிரமங்களை தவிர்ப்பதற்கும் இவ்வாறானவர்கள் உடன் அடையாளம் காண ஏற்பாடு செய்யுமாறும், பிரேத அறை ஒன்றை உடன் ஏற்பாடு செய்யுமாறும் நான் உங்களுக்கு முன்னர் விடுத்த வேண்டுகோளையும் தயவுகூர்ந்து கவனத்தில் எடுக்குமாறும் பணிவுடன் வேண்டிநிற்கிறேன்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள

வீ.ஆனந்தசங்கரி
தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி

29.05.2009
His Excellency Mahinda Rajapaksa,
President of Sri Lanka.

Your Excellency,

Fate of the lonely destitute elders in the IDP camps

A lot of elderly persons from the IDP camps had been handed over to the people who under-took to take charge of them. There are many still languishing in the camps alone, with no capacity to identify themselves. In this situation I do not hesitate to say that they are gradually dying. A good number of their children and other relations who are doing well and living in far off places and in foreign countries are living in agony, finding it difficult to know their whereabouts. Some who had become deaf do not respond to any call or announcement over the microphone. The difficulty some undergo while waiting in the “Q” to get their food, cannot be described in words. Hence please take immediate steps to re-unite them with their families and also order the release of a list of persons accommodated in the IDP camps with available details.

I regret to inform you that while writing this letter just now, I hear that a person named Vairamuttu Selvarajah aged 55 who came from France to see his brother-in-law in the Ramanathan Camp, died on 27.05.2009. This type of incidents occur frequently causing more worry for those who live in misery.

Last week alone bodies of 66 un-identified person were buried in a common grave in a highly decomposed state at the Vavuniya Poonthoddam cemetery. To avoid this type of unpleasant incidents, place take steps to have them identified and also to construct a large mortuary to accommodate more corpse. I had made this request earlier also.
Thanking you,
Yours Sincerely,

V. Anandasangaree,
President – TULF.

Copy to:- Hon. Basil Rajapakse, Chairman – STF

Tuesday, May 26, 2009

FREE THE DOCTORS WHO WERE ENGAGED IN HUMANITARIAN WORK - TULF


25.05.2009
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,

மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை விடுதலை செய்யவும்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பிரதேச சுகாதார சேவைகளின் பணிப்பாளர்களாக கடமையாற்றிய வைத்திய கலாநிதிகள் ரி. சத்தியமூர்த்தி, ரி. வரதராஜன், முல்லைத்தீவு வைத்திய அத்தியட்சகர் கலாநிதி வி. சண்முகராஜா ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சம்பந்தமாக தலையிட அனுமதிக்கவும். வன்னிப் பகுதி வைத்தியர்கள் தப்பி வர இம் மூவர் மட்டும் அங்கே தங்கியிருந்து இராணுவம் முன்னேற முன்னேற வைத்தியசாலையையும் நகர்த்திக் கொண்டு இரவு பகலாக நோயாளிகளுக்கும், காயமடைந்தோருக்கும் வைத்திய சேவையினை மேற்கொண்டிருந்தனர். தனி ஒருவரால் சமாளிக்க முடியாத பெரும் எண்ணிக்கையினரை இவர்கள் மூவரும் கவனி;த்து வந்தனர். பல நாட்கள் தேநீர் மட்டும் அருந்தி உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சிசு ஒன்றிற்கு வைத்தியம் செய்த ஒரு வைத்தியர், தனக்கு போதித்த ஒரு சிங்கள பேராசிரியரிடம் ஆலோசனை பெற்று அக் குழந்தையை காப்பாற்றியுள்ளார். இரவு பகலாக மோசமான காலநிலையையும், தம்மைச் சுற்றி பாய்ந்து கொண்டிருந்த துப்பாக்கிக் குண்டுகளையும் பொருட்படுத்தாது பணி புரிந்தார்கள்.

தொடர்ந்து செல் தாக்குதல் காரணமாக அரச நிர்வாகம் முடங்கிய நிலையி;ல் உணவுக் கப்பலுக்கு துணைபோவதையும் காயமுற்றோரை மீட்டுச் செல்வதையும் இதே காரணத்துக்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மறுத்திருந்த வேளை, வேறு வழியின்றி இவர்களும் தமது சேவையிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். இவர்களின் சேவையாலேயே இடம் பெயர்ந்தோரில் பெரும் பகுதியினர் உயிர் வாழ்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்கிய போதும் இனி மக்களுக்கு சேவை செய்யும் நிலை இல்லை என்பதை உணர்ந்த பின்பே தமது சேவையை நிறுத்திக் கொண்டனர். அவ்வேளை அவர்களுக்கு தோன்றிய ஒரேயொரு வழி, ஏனைய இடம்பெயர்ந்தவர்கள் போல தாமும் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறி நலன்புரி முகாம்களுக்கு வந்து சேர்வதே. அவர்கள் குற்றவாளிகளாக தப்பியோடவில்லை. ஆனால் பாதுகாப்புக்கருதி முகாமுக்கு வந்தவேளை முகாமில் வைத்து இருவரும், காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்றாவது வைத்தியரும் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் விடயத்தில் பின்வரும் உண்மைகள் கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1. இவர்கள் அரச ஊழியர்களாக வன்னிப் பகுதியில் நீண்டகாலம் சேவை செய்தவர்கள்.

2. அரச ஊழியரோ தனியார்துறை ஊழியரோ விடுதலைப் புலிகளின் கட்டளையை மீறிச் செயற்பட முடியாத நிலையில் அவர்களின் கட்டளைக்கமையவே, ஊடகங்களுக்கு அறிக்கை விடும் விடயங்கள் உட்பட, சகல விடயங்களிலும் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

3. இவ் வைத்தியர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமைய செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டால் அப் பகுதியிலே சேவை செய்த அரச ஊழியர் ஒருவர் தன்னும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

4. கடமை உணர்வுடன் அவர்கள் கடைசி நிமிடம் வரை கடமையாற்றியதால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

5. விசேடமாக மிக இக்கட்டான வேளையில் காயமுற்றோருக்கு பணியாற்றி அரசினுடைய பெயரையும் காப்பாற்றியமையால் அவர்கள் பராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட வேண்டியவர்களாவர். சுகாதாரத் திணைக்களம் இவர்களுடைய சேவையை பாராட்ட கடமைப்பட்டுள்ளது.


ஜனாதிபதி அவர்களே! இவர்கள் மீது எதுவித குற்றமும் இல்லையென இவர்களை விடுவிப்பீர்கள் என நம்புகிறேன். இன்றுவரை நான் அறிந்த வரையில் வன்னிப் பகுதியில் சேவை செய்த ஒரு ஊழியர் தன்னும் அரச கட்டுப்பாட்டுப்பாட்டு கோவையை மீறி செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.

எத்தகைய தண்டனை கொடுக்கப்பட்டாலும் அது சரித்திரத்தில் பெரும் தவறாகவே கணிக்கப்படும்.

நன்றி,



வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

25.05.2009
His Excellency Mahinda Rajapaksa,
President of Sri Lanka,
Temple Trees,
Colombo-03

Your Excellency,

FREE THE DOCTORS WHO WERE ENGAGED IN
HUMANITARIAN WORK


Permit me to intervene on behalf of the three Doctors named Dr. T. Sathiyamoorthy, Dr. T. Varatharajan and Dr. V. Shanmugarajah, the first two are Regional Directors of Health Services of Kilinochchi and Mullaitheevu respectively and the third, Medical Superintendent of Mullaitheevu. When most of the Doctors in Vanni fled, these three stayed back and worked round the clock, shifting the Hospital from place to place as the army moved forward, attending on patients mostly injured ones. They were in large numbers very much out of proportion to the number one can handle. In one instance one of them who attended on a baby who had been fed with only tea for a number of days and dying, contacted his Sinhala professor and saved that child on the medical advice given by that professor. They worked day and night braving the weather and firing around them.

They did their duty till the civil administration broke down due to heavy shelling and even the ICRC refused to bring food or take the injured for the same reason. Most of the IDPs owe their lives to these doctors. They faced all problems and worked and withdrew only when they were convinced that they could not help the people any longer. The only option they had at that time was to leave Mullivaikal and come to the welfare centres like other IDPs. They did not flee as offenders but fled to safety like others and had come to the IDP camp from where two of them were taken and the other who was injured, from the Hospital.

The following facts should be considered in dealing with their cases:-

1. They are employees of the Government and working in Vanni for a long time.

2. No employee whether in the Government Sector or Private Sector was in a position to defy the orders of the LTTE and were bound to obey their orders without questioning, including interviews to the media as directed by them.

3. If these doctors are punished for carrying out the orders of the LTTE hardly one officer who worked there will escape punishment.

4. They were so duty-conscious that they worked till the last minute and could save many, numbering several thousands.

5. They should be honoured with certificate of merit for the humanitarian services rendered by them, especially for treating the injured at the most crucial time and saved the name of the Government. The Health Department should comment the services of these Doctors.

I do hope that your Excellency will have them released exonerating them of the charges if any. So far not a single person who worked in Vanni had been charged for violating the Establishment Code. To my knowledge no one. I strongly feel that it will be a historical blunder to punish them in any form.

Thanking you,

Yours Sincerely,
V. Anandasangaree,
President – TULF.

Monday, May 25, 2009

RAMAKRISHNA MISSION (Ceylon Branch) RELIEF WORK FOR WAR VICTIMS - IDPs - REFUGEES & DISABLED




RAMAKRISHNA MISSION (Ceylon Branch)
RELIEF WORK FOR WAR VICTIMS - IDPs - REFUGEES & DISABLED.
Jaffna - Vavunia - Mannar — Trincomalee

========================================================
Rev. Swami Sarvarupanandaji Maharaj left for Jaffna on 22nd at 7.30 am and reached Thavady , Jaffna, at 4.30 pm.
He met the Government Agent of Jaffna on 23rd and discussed the plan of relief work.
GA has given the full particulars of the 12 refugee camps set up in Jaffna district. There are about 12000 IDPs in the camps.
To start the relief work , Swami has selected a Camp with 306 families (1320 members) for immediate distribution of relief materials and for providing spiritual support for the distressed.
They have planned to buy urgently needed relief materials (Food, Milk Powder, clothes, Oil, toothpaste, Soap, etc) from the Jaffna Market on 25th and 26th May 2009. Purchasing will be done with budget of LKR 3 Million (US$ 25000/-)
Depending on the family size and the need of the family, packing will be done on 27th in order to make the distribution easy.
Distribution will be on 28th & 29th directly to the refugees in the camps.

Volunteers of the Sri Ramakrishna Samity, Thavady, Jaffna, will provide needed help for the relief work.

INTERNALLY DISPLACED
Vavuniya: 25 camps, 255,000 people
Jaffna: 12 camps, 11,064 people
Mannar: Three camps, 845 people
Trincomalee: Two camps, 6,642 people
Source: Sri Lankan human rights ministry as of 22 May
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8062922.stm


RAMAKRISHNA MISSION
40, Ramakrishna Road, Colombo 6
Phone – 0094-11- 2588253 & 5013805, Fax - 0094-11-2361438
Email: rkmcey@gmail.com


Donations are can be sent Bank of Ramakrishna Mission, Colombo.

Bank Transfers to
Ramakrishna Misson, Colombo.
Current A/c No. 009010001222
SWIFT CODE: HBLILKLX

Hatton National Bank Ltd
Wellawatta Branch
100, 102, Galle Road,
Colombo 6.
Sri Lanka

Sunday, May 24, 2009

Pathetic plight of the expectant Mothers ......& Return of Lorries used to Transport .....- TULF president send 2 Lettters


24.05.2009
Major General G. A. Chandrasiri,
Competent Authority - IDP Affairs,
Security Forces Head Quarters,
Vavuniya.

Dear General,

PATHETIC PLIGHT OF THE EXPECTANT MOTHERS AND MOTHERS WITH INFANTS

I shall be very thankful to you if would kindly consider with sympathy the pathetic plight of the above category of IDPs and release them from the welfare centres for specified short periods.

I need not remind you that, till they were rescued from Mullivaikal they underwent immense hardships. With no proper food and rest and with limited supply of Triposa, they are much under-nourished and weak. They could have access to any of their requirements only after coming into the welfare centres.

I believe that there are about one thousand such cases in various camps in Vavuniya, Mannar and Jaffna. All of them have relations and friends in the North. Very special care and attention is needed for mothers in advanced stage of pregnancy and mothers and the infants for 31 days after delivery. Negligence can lead to so many complications such as death of the mother, the child or both. Deformity may occur to the child. Infection to the infants could also cause damage to their health. Possibilities of still-birth are also there. Some customary treatment is also given to the mother and the child. There are some caesarian cases also and their sufferings cannot be described in words. I do not think that this category of persons are of any security threat.

I shall consider it as a great favour if the mothers who had delivered babies and the expectant mothers in an advanced stage of pregnancy are handed over to the relatives or friends who are prepared to takes charge of them and look after them for a specified period, which you consider as reasonable.

Thanking you,

Yours Sincerely,


V. Anandasangaree,
President – TULF.



Copies to:-
1. His Excellency the President
2. Hon. Basil Rajapakse, Chairman – STF
3. Secretary, Ministry of Defence
4. Brigadier L. C. Perera, Chief Coordinator – IDP Affairs
5. Government Agent – Vavuniya
6. Government Agent – Mullaitheevu.
7. Government Agent – Kilinochchi
மேஜர் ஜெனரல் சந்திரசிறி
தகுதிவாய்ந்த அதிகாரி - இடம்பெயர்ந்தோர் முகாம்
இராணுவத் தலைமையகம் - வவுனியா.

அன்புள்ள தளபதி

கர்ப்பிணி தாய்மார்களினதும் குழந்தை பெற்ற தாய்மார்களினதும் பரிதாப நிலை

இடம் பெயர்ந்தோர் மத்தியில் மேலே கூறப்பட்ட தாய்மார்களின் பரிதாப நிலையை மிக அனுதாபத்துடன் பரிசீலித்து அவர்களை குறிப்பிட்ட சில காலத்திற்கு வெளியில் செல்ல அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

முள்ளிவாய்க்காலில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்படும் வரை அவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றி நான் கூறத்தேவையில்லை. போதிய உணவும் ஓய்வும் இன்றி மிகக் குறுகிய அளவு திரிபோசாவுடன் போசாக்கின்றி நலிந்து வாழ்கின்றார்கள். தமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை முகாமுக்கு வரும் வரை அவர்களால் அணுக முடியவில்லை.

அத்தகையோரில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வவுனியா, மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லோருக்கும் வடக்கே உறவினர்களும் நண்பர்களும் நிறைய இருக்கின்றனர். நிறைமாத கர்ப்பிணிகள் குழந்தை பெற்றவர்கள் குழந்தைகளுக்கும் முப்பத்தொரு நாட்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியது நீங்கள் அறியாததல்ல. இக் கட்டத்தில் அவர்கள் புறக்கணிக்கப்படுவார்களேயானால் பல அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அவையாவன

தாயோ பிள்ளையோ அல்லது இருவருக்கும் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. பிள்ளைக்கு அங்க குறைபாடு ஏற்படலாம். குழந்தைகளுக்கு தொற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படலாம். அத்துடன் குறைப்பிரசவம் கூட ஏற்படலாம், தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் சம்பிரதாயமான முறையில் வைத்தியங்களும் செய்யப்படுவதுண்டு. அத்துடன் சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் பலர் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்கின்றனர். இத்தகையோரால் பாதுகாப்புக்கு எதுவித அச்சுறுத்தலும் இருக்காது. ஆகவே குழந்தை பெற்ற தாய்மார்களையும், நிறைமாத கர்ப்பிணிகளையும் உறவினர்களிடம் அல்லது நண்பர்களிடம் அவர்கள் கையேற்க தயாரெனில் நீங்கள் கணிக்கின்ற குறிப்பிட்ட சில நாட்களுக்கு அவர்களை கையளிப்பீர்களேயானால் நன்றியுடையவனாக இருப்பேன்.

நன்றி

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ



24.05.2009
Major General G. A. Chandrasiri,
Competent Authority - IDP Affairs,
Security Forces Head Quarters,
Vavuniya.

Dear General,

RETURN OF LORRIES USED TO TRANSPORT GOODS TO VANNI AND
REQUEST OF PARENTS TO MEET CHILDREN DETAINED AS SUSPECTED LTTE CADRE

Representations had been made to me by the Vavuniya Lorry Service Cooperative Society Ltd to request you for the release of 132 Lories that had been engaged by the Government Agent of Vavuniya to transport goods from Vavuniya to the combatant area on 29.01.2009 and before. After discharge of goods the said Lories had not yet returned.

It is very unfortunate that apart from the Lories, the owners and drivers who drove the Lories and the cleaners got caught in the combatant area. The most unfortunate thing is that of these owners, drivers and cleaners some got killed and of the balance some got injured and all of them are now in one or the other of the welfare centres.

I also wish to bring to your notice the request of the IDPs in the welfare camps, a good numbers of whom had owned Lories, Vans, Tractors, Trailers, Three-Wheelers, Motor-Cars and Motor-Cycles etc, to have them salvaged.

There is also a very strong appeal from the parents in the IDPs camps to allow them to meet and advise their children detained, as suspected LTTE cadre.

I shall be very tank full to you if you would kindly have

1. All those involved in Lorry transport and now in IDP centres be released immediately.

2. Make arrangements to take the owners or their heirs and the drivers to have the Lories identified and brought back to Vavuniya.

3. Arrange transport for those in IDP welfare centres, who claim to have Vehicles in the combatant area where they lived before displacement, to identify and bring their Vehicles back to Vavuniya.

4. Permit parents of youths detained, to see them

Since the concerns of the owners of these Vehicles and the parents appear to be very reasonable kindly take immediate steps to redress their grievances.

Thanking you,

Yours Sincerely,


V. Anandasangaree,
President – TULF.



Copies to:-
1. His Excellency the President
2. Hon. Basil Rajapakse, Chairman – STF
3. Secretary, Ministry of Defence
4. Brigadier L. C. Perera, Chief Coordinator – IDP Affairs
5. Government Agent – Vavuniya
6. Government Agent – Mullaitheevu.
7. Government Agent – Kilinochchi

மேஜர் ஜெனரல் சந்திரசிறி
தகுதிவாய்ந்த அதிகாரி - இடம் பெயர்ந்தோர் முகாம்
இராணுவத் தலைமையகம - வவுனியா.

அன்புள்ள தளபதி

வன்னிக்கு பொதி ஏற்றிச் சென்ற வாகனங்கள் சம்பந்தமாகவும்.
விடுதலைப் புலி போராளிகள் என சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர்களின் கோரிக்கை


வவுனியா லொறி சேவையில் கூட்டுறவுச் சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய 29-01-2009 இல் வன்னிக்கு பொதிகளை ஏற்றிச் சென்ற 132 லொறிகளும், யுத்தப் பிரதேசத்திலிருந்து வராமையால் அந்த லொறிகளை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். துரதிஷ்டவசமாக லொறி சாரதிகளும், சாரதியாக செயல்பட்ட உரிமையாளர்களும், உதவியாளர்களும் யுத்தப் பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்டனர். மிகக் கவலைக்குரிய விடயம், உரிமையாளர்கள், உதவியாளர்களில் பலர் கொல்லப்பட்டும், காயப்பட்டவர்களில் எஞ்சியுள்ளவர்களும், தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். அத்துடன் முகாம்களில் தங்கியுள்ள வன்னியில் கைவிடப்பட்;ட லொறிகள், வேன்கள், ட்ரெக்டர்கள், டெய்லர், முச்சக்கர வண்டிகள், கார்கள் அவற்றின் சொந்தக்காரர்கள் அவற்றை மீட்டுத் தரும்படி கோரியுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் மிகவும் வற்புறுத்தி மேலும் கூறுவது புலி போராளிகள் என சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கும், அவர்களுடன் பேசவதற்கும் அனுமதி கோருகின்றனர். எனவே தயவு செய்து பின்வரும் விடயங்களை உடன் கவனத்திற் கொள்ளவும்

01. லொறி போக்குவரத்தில் சம்பந்தப்பட்டவர்களை விடுவித்தல்.
02. லொறி சொந்தக்காரர்களையோ, உரிமையாளர்களையோ தத்தம் லொறிகளை அடையாளம் கண்டு அவற்றை வவுனியாவுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்து தரவும்.
03. அதேபோல் இம் முகாம்களில் உள்ள வாகனச் சொந்தக்காரர்களை அவர்களின் பழைய இருப்பிடங்களுக்கு அனுப்பி அவரவர் வாகனங்களை அடையாளம் கண்டு அவற்றை வவுனியாவுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்தல.;
04. தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை பார்த்து பேச பெற்றோரை அனுமதித்தல்.

இவர்களின் வேண்டுகோள்கள் நியாயமான கோரிக்கையாக இருப்பதால் தயவு செய்து உடன் நடவடிக்கை எடுக்கவும்.
நன்றி
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

Saturday, May 23, 2009

யாரிடம் முறையிடுவது? தமிழர்களும் ஆயுதக்குழுக்களும் - சுரேஷ்

தமிழர்களும் ஆயுதக்குழுக்களும்

தமிழர்களின் விடுதலைக்காக தமிழ் இளைஞர்களினால் உருவாக்கப்பட்டதே ஆயுத இயக்கங்கள். ஆனால் இந்த ஆயுதக்குழுக்களின் இன்றைய செயற்பாடுகள் மிக கவலையளிக்கின்றது. யாருக்கு எதிராக போராடத் தொடங்கினார்களோ, அவர்களின் ஆதரவில் இருந்து கொண்டு கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, கொலை, கொலைமிரட்டல் போன்ற மிகவும் கீழ்தரமான செயற்பாடுகளை செய்வதன் மூலம் தமிழ் மக்களை ஆயுத அடக்குமுறைக்கு அடிபணிய வைக்க நினைக்கின்றார்கள்.
ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடும் அளவிற்கு தமிழ் மக்கள் மீது ஆயுத அடக்குமுறை கலாச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இப்பொழுது மன்னார் பகுதிகளில் இந்த செயற்பாடு அதிகரித்துள்ளது.
மிக பெரிய அவலத்தில் இருந்து தப்பி வந்து நலன்புரி நிலையங்களில் சுதந்திரமான நடமாட்டம் இன்றி நிர்பந்தத்தில் வாழும் சிறுவர்களை கூட இவர்கள் கடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதை யாரிடம் முறையிடுவது? இந்த ஆயுதக்குழுக்களை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கான காரணம், தனது செயற் திட்டங்களை எதிர்ப்புகள் இன்றி நடமுறைப்படுத்துவதற்கே!. அரசாங்கத்திற்கு எதிராக இவர்கள் செயற்படின் இவர்களது இருப்பிடம் கேள்விக்குரியதாகிவிடும். என்னதான் இவர்கள் செய்தாலும் என்றும் இவர்களை குற்றவாளியாகவே தமிழ் மக்கள் கருதுவார்கள்.
விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்திய ஜனாதிபதி, மற்றைய ஆயுதக்குழுக்களின் நடவடிக்கையை இன்று வரைக்கும் கட்டுப்படுத்த விரும்பவில்லை என்பது மிக கவலையான விடயம்.
எந்த ஒரு இனத்தையும் நீண்ட நாட்களுக்கு ஆயுத அடக்குமுறைக்கு அடிபணிய வைக்க முடியாது என்பது வெகு விரைவில் இவர்களுக்கு நன்கு புரியும்.

தி. சுரேஷ்.

தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - தந்தை செல்வா - இன்றும் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறேன்! பரிசில்காரனின் பதிவுக்கு எனது கருத்தும்!

எனது மானசீகமான தலைவர் ஈழத்துக் காந்தி என அழைக்கப்பட்ட தமிழர் தலைவர் தந்தை செல்வா சொல்லியதையே நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இதையிட்டுப் பதிவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை - 1947ல் பாராளுமன்றத்திற்குத் தெரிவானது முதல் தனது இறுதிமூச்சுவரை(1977 மார்ச்) தமிழ்ப்பேசும் மக்களின் உரிமைக் காவலானாக விளங்கியவர் தந்தை செல்வநாயகம் அவர்கள்.
அதீத காந்தீயக் கொள்கையுடைய தலைவரால் வன்முறைக் கலாச்சாரம் ஈழத் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்க்கைக்கு நியாயமாக இருக்க முடியாது - இதுவும் அடிக்கடி குறிப்பிடப்பட்டு வந்ததையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 70 சதவீதத்துக்கும் அதிகமான பேரினவாதிகளுடன் ஒருபோதும் வன்முறை மூலமாகத் தீர்வு எட்ட முடியாது என்பதில் அவரின் சிந்தனை அமைந்திருந்ததும் - இந்தியாவின் உதவியுடனேயே தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலை சாத்தியப்படும் என்பதில் அக்கறைகொண்டு 1972 பெப்ரவரியில் இந்தியத் தலைவர்களைச் சந்தித்தார் தந்தை செல்வா.
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமையில் 1970இல் தெரியப்பட்ட கூட்டரசால் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பை எதிர்த்து 1972-10-2இல் தனது பாராளுமன்றப் பதவியைத் துறந்தார். யாழ் மாநகர முதல்வர் துரையப்பா கொலை - வங்கிக் கொள்ளை - காவற் துறையின் கெடுபிடி - கைது - சித்திரவதை - சயனைட் அறிமுகம் போன்றவற்றை நினைத்தே இறுதிக் காலத்தில் தந்தை தமிழர்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் -அப்படிச் சொல்லியிருப்பார் - என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். ஏனெனில் அவர் தமிழரசுக்கட்சியைத் தொடங்கியதே மலையக மக்களின் குடியுரிமை பறிப்பில் மொழிப் பிரச்சனை ஏற்படும் என்று தீர்க்கதரிசனமாக யோசித்தது! இறுதிக் காலத்தில் இப்படிச் சென்னதற்குக் காரணம் தான் கட்டி வைத்திருந்த தமிழ் - முஸ்லீம் ஒற்றுமையும் ............ என்னால் எப்படி எழுதுவது என்று முடியவில்லை! தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்கள் தான் சொல்லிய வாக்குக்கு அமைய நடந்தார். ஏனையவர்கள் ? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பாராளுமன்றப் பதவியை வழங்கியதன் மூலம் அந்தப் பழி தீர்ந்துவிட்டதா?....
பரிசில்காரனின் "பிரபாகரன் மரணம் பற்றிய அதிர்ச்சி அறிக்கை வெளியாகும் - இலங்கை எம்.பி." என்ற பதிவுக்கு - எனது கருத்து

புகைப்படங்களுக்குக் கீழே எனது கருத்து இருக்கிறது - சில தேவைகள் கருதி இவை பிரசுரிக்கப்படுகின்றன.








காலங்கடந்தமை ஒரு காரணம்!
உலகம் அனைத்துமே இலங்கை அரசுக்குச் சார்பாக இருந்தமை இரண்டாவது காரணம்! விடுதலைப் புலிகள் மக்களுடைய நன்மையைக் கருதாமல் போரைத் தொடங்கியமை மூன்றாவது!
மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் - போரை ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று திட்டமிடப்படாதமையும் - மக்களை வெளியேற விடாமல் அனுமதி(பாஸ்) நடைமுறையைப் புலிகள் கடுமையாக வைத்திருந்தமை போன்ற அனைத்துக் காரணங்களுடன் ஒரு தெளிவான அரசியல் தீர்வை முன்வைக்காதமை போன்று அடுக்கிக் கொண்டே காரணங்களையும் குற்றங்களையும் சுமத்திக் கொண்டுபோகலாம்.
என்னைப் பொறுத்தவரையில் நான் கடந்த 2008 செப்டெம்பர் 10இல் விடுத்த மனிதாபிமான பகிரங்க வேண்டுகோளை (எனது கிருத்தியம் வலைப்பதிவில் குறிப்பிட்டதுபோல்) யாராவது செவிமடுத்து நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்! இனியும் தாமதிக்காமல் உடனடியான உருப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்! இதை யார் செய்வது - எப்படிச் செய்வது என்பதே எனது மனதில் எழும் தற்போதைய கேள்வி!

Friday, May 22, 2009

Ramakrishna Mission's Relief Work - இராமகிருஷ்ண மிஷனின் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவிடுக! - வேண்டுகோள்




RAMAKRISHNA MISSION RELIEF WORK
IDPs - REFUGEES & DISABLED
Jaffna - Vavunia - Mannar
22-05-2009


Rev.Swami Sarvarupanandaji Maharaj left for Jaffna on 22-5-2009 at 7.30 a.m to explore the possibilities of doing relief work among war victims.

He is expected reach the Sri Ramakrishna Samity, Thavady, Kokkuvil, Jaffna at 4.00 pm.

Sri Ramakrishna Samity, Thavady, is an Independent Centre managed by the Admirers of Sri Ramakrishna, Sri Sarada Devi and Swami Vivekanada.

Volunteers of the Ramakrishna Mission and GA of Jaffna will assist the relief work.

Hope to start the work immediately with whatever funds available in hand.

More information will be given later after the assessment of the condition of the refugees.

RAMAKRISHNA MISSION
40, Ramakrishna Road, Colombo 6, Sri Lanka.
Phone – 0094-11- 2588253 & 0094-11-5013805
Fax - 0094-11-2361438
Email: rkmcey@gmail.com

Thursday, May 21, 2009

இன்று (21-05.2009) முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம்



Wednesday, May 20, 2009

பிரபாகரனின் நிலை - எனது தலைவர் தந்தை செல்வா இறுதிக் காலத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல .....என் உள் உணர்வு சொல்கிறது!

கொஞ்சம் நீண்ட பதிவாக இருக்கலாம் - ஆனால் எனக்குத் தோன்றியதை உடனடியாக எழுதியிருக்கிறேன்.

எனது - தமிழ் மக்களின் உரிமைக் காவலனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் என்ற 26-04-1994 வீரகேசரி 2ஆம்பக்கக் கட்டுரையின் ஒரு பகுதியை முதலில் அப்படியே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

1977 மார்ச் நடுப்பகுதியில் தெல்லிப்பழையிலுள்ள தமது இல்லத்தில் காலை உணவருந்தியபின்னர் எழுந்து நடந்தபோது கால்தடக்கி பின்புறமாக விழுந்ததைத் தொடர்ந்து அவர் மூர்ச்சை அடைந்தார். அன்று மாலை யாழ்ப்பாணம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நள்ளிரவில் மூளையில் கட்டியிருந்த இரத்தத்தை மூளை நரம்புச் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் கப்ரால் மற்றும் இரு நிபுணர்களுடன் வந்து அவசர சத்திர சிகிச்சை செய்து வெளியே எடுத்தார்கள். உலகப் பிரசித்திபெற்ற மூளை நரம்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் வி. இராமமூர்த்தி இந்தியாவிலிருந்து வந்து பரிசோதித்தார். முப்பத்து நான்கு தினங்கள் நினைவின்றி இருந்த தலைவர் தந்தை செல்வா அவர்கள் 26.04.1977 செவ்வாய்க்கிழமை இரவு 9.50 மணியளவில் காலமானார்.

இதைப்போல இராமேஸ்வரத்தில் இலங்கை அகதிகளைப் பார்வையிட்ட பின்னர் சென்னையில் இரத்த அழுத்தம் அதிகரித்து மயங்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின் சுகமடைந்த மறைந்த கூட்டணித் தலைவர் அ. அமிர்தலிங்கம் அவர்களாகட்டும், யாழ் மாநகர முதல்வர் பொன் சிவபாலன் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இரா. ஜனார்த்தனன் சொல்லியவுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம் அவர்களும் சரி மக்களுக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்கள். இதைப்போல........இனித்தான் எனது கட்டுரை ஆரம்பமாகிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய எனது கருத்துக்கள் - வித்தியாசமான நோக்கல்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரைப் பற்றிய பல வதந்திகள் - இலங்கை அரச செய்திகள் வெளியிட்டுவரும் நேரத்தில் பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்கள். என்னுடைய எண்ணப்படி (ஒரு ஊகம் - நானும் அவர் உயிருடனிருக்கிறார் என்றுதான் இப்பொழுதும் நம்பியபடி இருக்கிறேன்) 3 கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

அரச செய்தி சொல்லுவதுபோல அவர் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் காட்டுவது அனைத்தும் பொய்யான படங்கள். சிங்கள இனத்தைத் திருப்திப் படுத்துவதற்கு ஒரு பொய்யான உடலைத் தயாரித்து வைத்திருக்கின்றார்கள். அவரது உடல் சிதறியிருக்கலாம் அல்லது எரிந்திருக்கலாம். கண்டெடுத்த அடையாள அட்டையை(LTTE வழங்கியதை) மட்டும் வைத்து(அதுவும் எப்படி புதிதாக இருக்கிறது என்பதிலும் ஒரு சந்தேகம்) முடிவு எடுக்க முடியாதுள்ளது!

நெற்றிப் பொட்டில் சுட்டபடியால் அடுத்த என்னுடைய இரண்டு கருத்துக்களை எதிர் எதிராகத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

முதலாவது நிலத்தின்கீழ் பங்கருக்குள் இருந்திருப்பவரை கைது செய்து கொன்றிருக்கலாம். ஆனால் அதுவரை அவர் சயனைட்டை உட்கொள்ளாமல் இருந்திருக்க முடியாது.

மற்றயது பிரச்சாரம் செய்யப்படுவது போல – உயிருடனிருக்கிறார். ஆனால் அவர் இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று சொல்லப்படுவதன் அர்த்தம் - என்னைப் பொறுத்தவரை நான் ஒரு தமிழர் விடுதலைக் கூட்டணியின் உண்மையான அங்கத்தவன் - இன்றும் என் கொள்கையை விட்டு விலகாதவன் என்ற வகையில் என்னுடைய மானசீகமான தலைவர் தந்தை செல்வா தனது இறுதிக்காலத்தில் முப்பத்து நான்கு தினங்கள் நினைவின்றி இருந்தார். அவரைப் போல தன்னுடைய போராட்டம் - ஆயுதப் போராட்டம் - செயலற்ற நிலையில் பல பொறுப்பானவர்களை இழந்த நிலையில் - இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன் - நான் பல பதிவுகளையும் பார்ப்பதால் யார்? எப்போது என்பதை நினைவில் வைத்திருக்க வில்லை – ஒரு பதிவர் குறிப்பிட்டது போல அல்லது ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டதுபோல – தற்போது அதிக பதட்டமடையும் தலைவருக்கருகில் அவரைப் பார்க்க தனியானதொரு மருத்துவர் எப்போதும் அருகில் இருக்கிறார். வேளாவேளைக்கு அவருக்கு மாத்திரைகள் கொடுக்கிறார் என்றிருந்தது. இதனடிப்படையில் எனது தலைவர் தந்தை செல்வா இறுதிக் காலத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல ஏதாவது மனநோய்வாய்ப்பட்ட நிலையில் - உணர்வற்ற நிலையிலும் அவர் உயிரோடிருக்கலாம் என்று என் உள் உணர்வு சொல்கிறது! ஏனென்றால் எனக்கு என்னுடைய மனம் இப்போது இருக்கும் நிலையை நான் உணர்ந்து இக்கட்டுரையை சுய சிந்தனையுடன் உண்மையான தமிழன் என்ற அடிப்படையில் எழுதியிருக்கிறேன். ஏற்பதும் ஏற்காததும் உங்களுடையது

ஆனால்!
குறிப்பாக இன்னொரு பதிவு
கடந்த 19.05.2009இல் எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம் என்ற தலைப்பிட்ட எல்லாளன் அவர்களின் தமிழ்த் தேசியம் பதிவில் போராளி கே. பி. அறிவனின் அறிக்கையிலும் தலைவரைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் அதில் குறிப்பிடப்படாதது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

முள்ளிவாய்க்காலில் உணவு, மருந்து நெருக்கடி - தமிழர் விடுதலைக் கூட்டணி


19-05-2009
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,

முள்ளிவாய்க்காலில் உணவு, மருந்து நெருக்கடி

விடுதலைப் புலிகளை தோற்கடித்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதன் மூலம் நாட்டில் சமாதானத்தை கொண்டு வந்தமைக்காக உங்களை வாழ்த்துகிறேன். இந் நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் பயங்கரவாதம் கடந்த கால் நு}ற்றாண்டு காலமாக வைத்திருந்தமையை யாரும் மறுக்கமாட்டார்கள். விடுதலைப் புலிகளின் தோல்விக்காக உழைத்த ஒவ்வொருவரையும் நன்றியுடன் நினைவு கூர வேண்டும் நீங்கள் இந்த நாட்டின் துப்பாக்கிக் கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்க வேண்டும். சட்ட விரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்போர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். சொத்து பறிமுதல் போன்ற தண்டனை உட்பட. விளையாட்டு துப்பாக்கி விற்பனை கூட தடை செய்யப்பட்டு சந்தையில் உள்ளவை வாபஸ் பெறப்பட வேண்டும்.

பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க எத்தகைய ஒத்துழைப்புக்களை நான் உங்களுக்கு தந்தேன் என நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் துரதிஷ்டவசமாக இது சம்பந்தமாக எந்த கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாமல் இருக்கின்றேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆகிய மாவட்ட மக்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுணியா ஆகிய பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் ஆகியோர் மீது கொண்ட அக்கறையால் அதனை செய்ய முடியவில்லை. கடைசியாக மிஞ்சியுள்ள இடம் பெயர்ந்த மக்களே மிக்க அபாக்கியவான்கள். அவர்களே மிக்க புறக்கணிக்கப்பட்டவர்களுமாவர். நான் அவ்வாறு கூறுவதற்கு என்னை மன்னிக்கவும். இறுதியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முள்ளி வாய்க்காலில் இருந்து பல மிக துயரமான செய்திகள் வருகின்றன. எனது நல்ல நண்பர்கள், உறவினர்கள் பலர் காயப்பட்டும், இறந்தும், பலரை காணவில்லை என்று நண்பர்கள் மூலமாக அறிகிறேன்.

உண்மையற்ற கதைகளை கூறி நான் உங்களைத் தப்பாக வழி நடத்துபவன் அல்ல. நான் உண்மையென நம்புவதையே கூறுவேன். துரதிஷ்டவசமாக நான் அறிந்த நம்பக் கூடிய ஓர் செய்தி யாதெனில் புலிகள் யுத்தத்தில் காயமடைந்த தம் போராளிகளாக இருந்தவர்களை ஒன்றுகூட வைத்து கொன்றும் உள்ளனர். அவர்களில் சிலர் தப்பி இருக்கக்கூடும். மேலும் பொது மக்கள் பங்கர்களில் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டனர். அவர்களில் சிலர் பங்கர்களுக்குள் அகப்பட்டிருக்கலாம். பல குடும்பங்கள் புதைந்து மடிந்தும் விட்டனர்.

யுத்தத்தின் கடைசி கட்டத்தில் ஒரு சமயம் அரச நிர்வாகம் சீர் குலைந்தும், வைத்தியர் தம் கடமையை நிறுத்தியும், உணவு கப்பலுக்கு பாதுகாப்பு கொடுக்க சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மறுத்ததும் தொடர்ந்து செல் அடிக்கப்பட்ட ஒரே காரணத்தினால்தான். அத்தோடு நோயாளிகள் கூட புல்மோட்டைக்கு ஏற்றிச் செல்லப்பட வில்லை. அதன் விளைவு முள்ளிவாய்க்காலுக்கும் உணவு எடுத்துச் செல்லப்படவில்லை. சொற்ப உணவு மிஞ்சி இருந்தால் அதை பங்கிட்டு கொடுக்க அரச நிர்வாகமும் இல்லை. காயமுற்று வைத்தியத்துக்காக காவல் இருந்த மக்களுக்கு வைத்திய வசதிகள் இல்லை. முதலுதவி கொடுக்ககக்கூட ஒருவரும் இல்லை. இந்நிலையில்தான் முள்ளியவாய்க்காலை அரச படைகள் கைப்பற்றின.
இக்கட்டத்தில் அங்கே ஒரு இலட்சம் மக்களுக்கு மேல் இருந்தனர். ஆனால் அத்தியாவசிய ஆணையாளர் நாயகம் 20,000 மக்கள் மட்டும்தான் அங்கே இருக்கின்றார்கள் என்றும் நான் கூறிய ஒரு லட்சம் தப்பான கணக்கெனவும் கூறினார். ஆனால் முள்ளிவாய்க்கால் கைப்பற்றப்பட்ட பின்பு 70,000 இற்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் வெளியே வந்ததோடு பலர் மேலும் வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது அந்த எண்ணிக்கைக்கூட ஒரு இலட்சத்தை தாண்டியிருக்கும் அங்கு இன்னும் பல மக்கள் கைவிடப்பட்டுள்ளனர் என நான் நம்புகிறேன். அவர்களில் காயமுற்றும், பட்டினியால் மரணத்தையும் எதிர் கொண்டுள்ளனர். நான் அறிந்தமட்டில் இதுதான் அங்கே உள்ள நிலை.

ஆகவே மிக விரைவாக ஓர் மருத்துவர் குழுவையும் காயமுற்றோரையும், பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கியிருப்பவர்களை தேடி பிடிக்க போதியளவு தொண்டர்களையும் அவர்களுடன் போதிய உணவு பொட்டலங்களையும் அனுப்புமாறு மிக்க பணிவாக வேண்டுகிறேன்.

இச் செய்தி உங்களுக்கும குழப்பத்தை உண்டு பண்ணலாம். உடன் நடவடிக்கைக்காக இச் செய்தியை நான் உங்களுக்கு தெரிவிக்க தாமதித்தால் அது மேலும் நஸ்டத்தையே உண்டு பண்ணும். இதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதன் மூலம் யாரோ செய்த பாவத்திற்கு நீங்கள் பரிகாரம் தேடிய பெருமையை அடைவீர்கள். முன்னோடியாக களநிலைமை அறிந்து வர ஓர் குழுவை முள்ளிவாய்க்காலுக்கு உடன் அனுப்பி வையுங்கள்.

நன்றி


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

மனநிலை உறுதிபெற எல்லோரும் வேண்டுவோமாக - சுரேஷ்

21.05.2009

அன்புடையீர்,

தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவாக தமிழர்கள் அகிம்சை ரீதியான போராட்டத்தை ஆரம்பித்தனர். அந்த போராட்டம் வெற்றியளிக்காத காரணத்தினால் தமிழ் ஈழத்திற்கான கொள்கையை முன்வைத்து ஆயுத hPதியில் தமிழ் இளைஞர்கள் போராட ஆரம்பித்தார்கள். கடைசிவரை ஈழத்திற்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் இப்பொழுது முறியடிக்கப்பட்டு விட்டது.

உரிமை கேட்டு அகிம்சை, ஆயுத ரீதியில் போராடியதினால் பல தலைவர்களையும், பல்லாயிரக்கணக்கான மக்களையும், பெறுமதிமிக்க சொத்துக்களையும் இழந்ததொழிய தமிழ் இனம் வேறு ஒன்றையும் சாதிக்கவில்லை.

இன்று மக்கள் நிம்மதியாக வாழ்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். இதற்கு பாதுகாப்புத் தரப்பில் இருந்து பெற்றுக்கொண்ட பாடமே ஒரு முக்கிய காரணம்.

எமக்கு நியாயமான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க நாங்கள் எல்லோரும் ஆண்டவனிடம் தான் வேண்டிக்கொள்ள வேண்டும்.

இந்த யுத்தத்தினால் இறந்த அனைவரினதும் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தோரின் மனநிலை உறுதிபெற எல்லோரும் வேண்டுவோமாக.

நன்றி,

தி. சுரேஷ்

Tuesday, May 19, 2009

நேரந்தாழ்த்தாது உடனடியாக LTTEயின் தலைவர் நேரடியாகத் தோன்றித் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும்!

வதந்திகள் - அரசாங்கச் செய்திகள் இவற்றின் குழப்பத்தை நீக்கவும் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பேசும் மக்களின் கலக்க நிலையைப் போக்கவும் நேரந்தாழ்த்தாது உடனடியாக LTTEயின் தலைவர் நேரடியாகத் தோன்றித் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும்! அரசியலில் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மனிதத்தின் பெயரால் எனது தனிப்பட்ட கருத்து இதுவாகும்.
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் எம்மை - நான் சார்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை - ஒரு பிசாசைப் பார்ப்பதுபோல - அல்லது ஒரு எதிரியைப் பார்ப்பதுபோலத்தான் கருதினார்கள் - இன்றும் கருதுகிறார்கள். - தந்தை செல்வா வழியில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் துரோகிகள் என்று குறைசொல்லி - அனைவரையும் தீர்த்துக்கட்டினார்கள். கொள்கை அடிப்படையில் இன்றும் நாம் மக்களுக்காகவே செயற்பட்டு வருகின்றோம். அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு முழுமையான அரசியல் தெரிந்தவர்களற்ற நிலையில் இருப்பது வேறு. நான் தேவையற்ற விடயங்களை இந்த செய்தியில் சேர்க்க விரும்பவில்லை.
எந்த உயிரையும் கொல்லும் உரிமை எவருக்கும் இல்லை என்ற எனது கோட்பாட்டின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அது எவராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே எனது 14.05.2009 திகதி இடுகையில் சொல்லியபடி ஈழத் தமிழரைக் காப்பாற்ற - சதாமை எப்படி அமெரிக்கா கைது பண்ணியதோ அதே போல மகிந்த ராஜபக்க்ஷவையும் கைது பண்ணுவதே ஒரேவழி! என்ற செய்திக்கு அமைவாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். போரினால் பாதிக்கப்ட்ட மக்கள் அனைவரிடமும் பூரணமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் எல்லோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீதியான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இதுவே எனது மனிதாபிமான பகிரங்க வேண்டுகோளாகும்.

FOOD AND MEDICAL CRISIS IN MULLIVAIKAL - TULF


19.05.2009
His Excellency Mahinda Rajapaksa,
President of Sri Lanka,
Temple Trees,
Colombo-03

Your Excellency,

FOOD AND MEDICAL CRISIS IN MULLIVAIKAL.

I wish to congratulate you for being responsible for the defeat of the LTTE and for bringing back peace to the country, by eradicating terrorism. No one can dispute the fact that the terrorist activities kept every one in this country under constant fear and tension for more than quarter of a century. Sri Lanka should remember with gratitude all those who contributed for the defeat of the LTTE. The country expects you to eradicate the “gun-culture” completely from the country. Make “unlawful possession” of fire arms punishable with heavy penalties and can even include confiscation of property. Even toy pistols should be withdrawn from the market.

I need not remind you of the extent of cooperation I gave you for the eradication of terrorism. But it is very unfortunate that I am not in a position to take part in any event, celebrating the defeat of the LTTE because of the concerns, I have for the people of Kilinochchi and Mullaitheevu and also for those IDPs from Jaffna, Mannar and Vavuniya. The last batch of IDPs are the worst affected and if I am permitted to say so, they are the worst neglected too. I hear a lot of distressing news coming from Mullivaikal, the last bastion of the LTTE. I heard from my friends that a number of my relations and many good friends, had either died or injured and several missing.

I am one who will never mislead you with untrue stories and tell out only what I believe as true. A very unfortunate story I heard from reliable sources is that all LTTE combatants who have become disabled had been asked to assemble at one spot and killed by their leaders, but there is every possibility of some surviving. Apart from this most of the civilians being used to living in bunkers, there is a possibility of many getting trapped inside. I am aware that in some instances the entire family got buried in bunkers.

During the last stages, at one point, the civil administration broke down, the Health Authorities withdrew and the ICRC refused to give escort to the food ship and therefore the injured could not be taken from Mullivaikal to Pulmoddai for treatment. All these were due to continuous shelling. The result is no food was taken to Mullivaikal and the civil administration was not functioning to regulate the supply of food, even if there was little food available. The Hospital staff did not report to work to attend on the thousands of patients, most of whom were injured, some seriously. In this situation the forces captured Mullivaikal.

At this point of time there were more than one hundred thousand people at Mullivaikal, but the commissioner General of Essential Services was insisting that there were only about 20,000, disputing my claim that there were more than one hundred thousand. But after the capture of Mullivaikal over 70,000 had come out and people are still coming. By this time the number would have swelled to one hundred thousand. I am sure there are still people left most of whom must be injured and starving. This is the situation there as I see.

Therefore I humbly urge you to send a strong medical team with substantial number of volunteers to help to find the casualties who are on the verge of starvation and facing death at any time. Along with the volunteers, please arrange to send food packets to meet the requirements.

This news may be very disturbing to you. But it will be more damaging if I do not bring this to your notice for immediate action. This will prove as a good gesture on your part for the sins of the others. As a prelude, you may send a team immediately to Mullivaikal to report to you on the ground situation there.

Thanking you,

Yours Sincerely,

V. Anandasangaree,
President – TULF.

Monday, May 18, 2009

என்ன சொல்வது? என்ன செய்வது? என்னத்தை எழுதுவது? ஒரே குழப்பம்! ஆனாலும் ......

என்ன சொல்வதென்று தெரியவில்லை – என்னால் எழுதவும் முடியவில்லை - யாருக்காக? என்பதும் ஒரு குழப்பமான கேள்வி! எல்லாமே முடிந்து விட்டதா? அப்பாவிப் பொதுமக்களுக்கு என்ன நடந்தது? அவர்களது எதிர்காலம் என்ன? யார் என்ன செய்யப் போகிறார்கள்? கருத்துரை சொல்லிய ஒபோமா - எரிக்சொல்ஹெய்ம் - ஐக்கிய நாடுகள் சபை - சர்வதேச மன்னிப்புச் சபை - ICRC மற்றும் பலரும் - முதலும் சொன்னார்கள் - காலங்கடந்தும் சொன்னார்கள் - இனி என்ன செய்வதாக உத்தேசம்?

எப்போதும் மக்களோடு இருந்தவன் என்ற வகையில் மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்தவன் என்ற வகையில் இந்தக் குறிப்பை (முடியாத நிலையிலும் எழுத வேண்டும்போல இருக்கிறது – அதனால்) எழுதுகிறேன்.

கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் 26.04.2009 ஞாயிறு மட்டும் எனது பதிவில் ஆறு (6) இடுகைகளை இட்டேன்.

1. இன்று ஈழத் தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களின் நினைவு தினம்.
2. மனம் நோக வேண்டாம். பதிவர்கள் சிலரின்…..
3. பூனைக்குக் கொண்டாட்டம். எலிக்குச் சீவன் போகிறது!
4. விடுதலைப் போராட்டத்தில் கொச்சைப்படுத்தப்பட்ட உண்ணாவிரதம் - மறந்து விட்ட உண்மைகள்.
5. பிந்திய செய்தி விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்பு
6. இன்றைய எனது இடுகைகள் அனைத்தும் அப்பாவி மக்கள் குறித்த மனப்பூர்வமான உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவையே!

பின்னர் 30.04.2009 இலும் நான்கு (4) இடுகைகள் இட்டேன்.

1. பரமேஸ்வரனுடைய உண்ணாநோன்பு முடிவுற்றது - செய்தி மனநிறைவைத் தருகிறது.
2. கடவுள் (தம்பி பரமேஸ்வரன்) இருக்கிறார்! - 5 நாட்களில் என் பிரார்த்தனை நிறைவேறப்பட்டுள்ளது.
3. எனது இறுதிப் பதிவு - ஈழப் போராட்டம் - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - தமிழ்ப் பழமொழி
4. வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கும் உதவி தேவை - மேலும் ஒரு வேண்டுகோள்

26.04.2009 இல் எழுதிய பூனைக்குக் கொண்டாட்டம். எலிக்குச் சீவன் போகிறது என்ற கட்டுரையில் மிக அவதானமாகவே எனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன் - காரணம் நான் நாட்டைவிட்டு வெளியேறி நாளையுடன் 25 மாதங்கள் மட்டும்தான்!

இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வந்தவன் என்ற வகையில் குறிப்பாக 10.10.2005 தொடக்கம் 13.10.2005 வரை 4 நாட்கள் ஒரு பயிற்சியின் நிமித்தம் கிளிநொச்சியில் CARITAS - HUDEC இல் தங்கியிருந்தவன் என்ற வகையிலும், அதற்கு முதல் எனது தந்தையார் கிளிநொச்சி அரச அதிபர் அலுவலகத்திலும் - மாவட்டச் செயலகத்திலும் வேலைசெய்த போது போய்வந்தது வேறு - அப்பாவி மக்கள் அனைவருடைய மன உணர்வுகளைப் புரிந்திருப்பதன் காரணமாகவுமே – சுதந்திரமாக எனது கருத்துக்களை இடுகிறேன். எனக்குச் சரியெனப்பட்டதை – நான் எனது மனச்சாட்சிப்படி இடுகிறேன். இதில் சரி பிழை இருக்கலாம். அதற்காக நியாயம் - தர்மத்தை மீறி என்னால் எதையும் செய்ய முடியாது! பிழை சொல்பவர்கள் தாராளமாக எதையும் சொல்லுங்கள் - உண்மைகளை ஒருபோதும் மறக்கவோ மறைக்கவோ முடியாது!

தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி வாழ்த்து!


17.05.2009

கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி
முதலமைச்சர் – தமிழ் நாடு
சென்னை.

பெரு மதிப்புக்குரிய ஐயா,

பாராளுமன்ற தேர்தல் - 2009

நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தங்களின் ஐக்கிய முற்போக்கு முன்னணி ஈட்டிய பிரமிக்கத்தக்க வெற்றியை இந்திய மக்களுடன், குறிப்பாக தமிழ் நாட்டு மக்களுடன் இனைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியும் பெருமகிழ்ச்சி அடைகின்றது.

தமிழ் நாட்டில் தங்கள் முன்னணி பெற்ற பெரும்பான்மை ஸ்தானங்கள், இலங்கை பிரச்சனையில் தங்களின் நிலைப்பாட்டிற்கு மக்கள் கொடுத்த ஆணையே. தங்களை வாழ்த்துவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

நம் மக்களின் நலன் கருதி 33 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் தங்களுக்கும் எதனால் உறவு ஏற்பட்டதோ, அதே போன்ற காரணத்திற்காக அவ் உறவை புதுப்பிக்க வேண்டிய காலம் வந்துள்ளது. நான் மிக விரைவில் தங்களை நேரில் வந்து வாழ்த்து கூறுவேன்.

நல் வாழ்த்துக்களுடன்,


வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.

Sunday, May 17, 2009

Rush medicine and food to Mullivaikal (முள்ளிவாய்காலுக்கு உணவும், மருந்தும் விரைந்து அனுப்புங்கள்) TULF


17.05.2009 Press Statement
Rush medicine and food to Mullivaikal

The curse of terrorism that was clinging on to Sri Lanka is no more and it is certainly a matter that everyone should feel happy about. But the wounds of war will take several months or even years to heal.

Today while the country is asked to celebrate the victory, there are thousands who are weeping for their kith and kin whom they left behind in Mullivaikal, with the hope that they too will be brought to Vavuniya safely. As time goes on the excitement of the people in the IDP Centres is also increasing. People are wanting to know as to what had happened to their kith and kin.

Daily reports from Mullivaikal brought only bad news. At one stage the Civil Administration broke-down there. The Hospital staff too withdrew for their own safety for fear of continuous shelling. The ICRC stopped its services for the same reason. According to the Commissioner General of Essential Service, the ship loaded with food items, could not reach them because the ICRC refused to escort the ship. There is no evidence of food parcels being dropped from the air. There are a large number of casualties reported to be waiting for treatment at the hospital but there is no one to give them even first aid.

This means that there are still people left behind with many injured persons. There is no food and no medical attention. I strongly urge the Government to rush by air, a medical team and food parcels for those still stranded or wounded or dying there. This is a matter that no one can take lightly but act without any delay.


V. Anandasangaree,
President – TULF.

பத்திரிகை அறிக்கை

முள்ளிவாய்க்காலுக்கு உணவும், மருந்தும் விரைந்து அனுப்புங்கள்.

பயங்கரவாதம் என்ற சாபக்கேடு இலங்கையை இறுகப்பிடித்திருந்து இன்று விடுவிக்கப்பட்ட பின்பு அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டிய விடயந்தான். ஆனால் யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள வடுக்கள் மாற பல மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம்.

இன்று நாட்டுமக்கள் இவ் வெற்றியை கொண்டாட அழைக்கப்பட்டுள்ள வேளை, முள்ளிவாய்காலில் விட்டுவிட்டு வந்த தமது உறவினர்களை அரசு பாதுகாப்பாக வவுணியாவிற்கு கொண்டுவரும் என எதிர்பாத்திருந்த உறவினர்கள், அவர்களுக்கு என்ன நடந்ததென தெரியாது கண்ணீர் விடுகின்றனர். நேரம் போகப் போக அவர்களின் பதகளிப்பு முகாம்களில் கூடுகிறது. தமது உறவினர்களுக்கு என்ன நடந்ததென அறிய ஆவலாய் உள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் இருந்து தினம் வரும் செய்திகள் துக்க கரமானதே. ஒரு கட்டத்தில் சிவில் நிர்வாகம் முற்றாக முறிந்து விட்டது. தொடர்ந்து மேற்கௌ;ளப்படும் எறிகணைத் தாக்குதலுக்கு பயந்து வைத்திய அதிகாரிகளும் தமது சேவையை நிறுத்திக்கொண்டனர். அதே காரணத்திற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் தமது சேவையை நிறுத்திக்கொண்டது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கப்பலில் நிறைய உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்ட நிலையிலும், வழித்துணை தர சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மறுப்பதனால் கப்பலை அங்கு அனுப்ப முடியவில்லை என கூறுகிறார். விமான மூலம் உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டதாக அறிகுறிகளும் இல்லை. பல காயமுற்றோர் வைத்திய உதவி நாடி வைத்தியசாலையில் காவல் இருப்பதாக தெரிகின்றது. ஆனால் முதல் உதவியை வழங்கக் கூட அங்கே யாரும் இல்லை.

இது அங்கே இன்னமும் மக்களும், பல காயமுற்றோரும் இருக்கின்றார்கள் என்பதைப் புலப்படுத்துகின்றது. அங்கே உணவோ வைத்திய வசதியோ இல்லை. நான் அரசை மிகவும் வற்புறுத்திக் கோருவது, உடனடியாக விமான மூலம் உணவும், ஒரு மருத்துவக் குழுவையும் அனுப்புமாறே. அங்கே அகப்பட்டு கொண்டவர்கள், காயமுற்றோர் இறந்து கொண்டிருப்போர் ஆகியவர்களுக்கு உதவ எனது மனிதாபிமான வேண்டுகோளை புறந்தள்ளாது உடன் செயற்படுத்துமாறு வேண்டுகின்றேன்.


வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி.

Congress - United Progressive Alliance Victory காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்து - TULF

பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு எழுதிய வாழ்த்துக் கடிதங்கள்!


17.05.2009

His Excellency Dr. Manmohan Singh, M.P.
Prime Minister of India,
New Delhi.

Your Excellency,

PARLIAMENTARY ELECTIONS – 2009

The Tamil United Liberation Front rejoices with the people of India at the tremendous performance of the United Progressive Alliance at the elections and congratulates you and Respected Smt. Sonia Gandhi, for leading the alliance to Victory and for bringing the Congress back to its past glory.

May god bless you with another term of Premiership of the world’s largest and greatest democracy and also give you the strength to eradicate poverty, the dream of Mahathmaji, Nehruji and other freedom fighters.

With best wishes,

Yours Sincerely,


V. Anandasangaree,
President – TULF.

17.05.2009

மேன்மை தங்கிய டாக்டர் மன்மோகன் சிங், பா.உ
பிரதமர்
இந்தியா.

மேன்மை தங்கிய ஐயா,

நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு முன்னணி ஈட்டிய பிரமிக்கத்தக்க வெற்றியை இந்திய மக்களுடன் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியும் பெருமகிழ்ச்சி அடைகின்றது. தங்களையும் மரியாதைக்குரிய சோனியா காந்தி அம்மையாரையும் கூட்டணி வெற்றி பெற வழிகாட்டியமைக்கும், காங்கிரசை அதன் பழைய பெருமைக்கு மீட்டெடுத்தமைக்காகவும் மிகவும் பாராட்டுகின்றது.

மீண்டும் ஒரு முறை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய பெருமைமிக்க இந்தியாவின் பிரதமராக தாங்கள் வரும் வாய்பு கடவுளின் ஆசீர்வாதமாகும். மகாத்மாஜீ, நேருஜீ மற்றும் சுகந்திர போராட்ட தியாகிகளின் கனவாகிய வறுமையை முற்றாக ஒழிக்க ஆண்டவன் தங்களுக்கு வேண்டிய சக்தியை கொடுக்கட்டும்.

நல் வாழ்த்துக்களுடன்,


வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.


17.05.2009

Hon. Smt. Sonia Gandhi, M.P.,
Chair-Person,
United Progressive Alliance,
No.10, Janpath,
New Delhi-01,
India.

Respected Soniaji,

PARLIAMENTARY ELECTIONS – 2009

The Tamil United Liberation Front rejoices with the people of India at the tremendous performance of the United Progressive Alliance at the elections and congratulates you and His Excellency Dr. Manmohan Singh, for leading the alliance to Victory and for bringing the Congress back to its past glory.

May the world’s largess and greatest democracy thrive under your guidance and leadership and march towards prosperity and total eradication of poverty.

With best wishes,

Yours Sincerely,


V. Anandasangaree,
President – TULF.

17.05.2009

கௌரவ சோனியா காந்தி, பா.உ
தலைவி
ஐக்கிய முற்போக்கு முன்னணி

மதிப்புக்குரிய சோனியாஜீ,

நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு முன்னணி ஈட்டிய பிரமிக்கத்தக்க வெற்றியை இந்திய மக்களுடன் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியும் பெருமகிழ்ச்சி அடைகின்றது. தங்களையும் மேன்மை தங்கிய டாக்டர் மன்மோகன் சிங் அவர்களையும் கூட்டணி வெற்றி பெற வழிகாட்டியமைக்கும், காங்கிரசை அதன் பழைய பெருமைக்கு மீட்டெடுத்தமைக்காகவும் மிகவும் பாராட்டுகின்றது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய பெருமைமிக்க இந்தியா தங்களின் தலைமைத்துவத்தினாலும், வழிகாட்டலினாலும் விருத்தியடைந்து நாடு வறுமையை முற்றாக ஒழித்து செழிப்புற வாழ்த்துகின்றேன்.

நல் வாழ்த்துக்களுடன்,


வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.

Saturday, May 16, 2009

CIVILIANS OF MULLIVAIKAL SHOULD BE SAVED AT ANY COST (என்ன விலை கொடுத்தேனும் முள்ளிவாய்க்கால் மக்களை காப்பாற்ற வேண்டும்.) - TULF

ஆங்கிலம் தமிழ் கடிதங்கள் இரண்டும் இணைக்கப்பட்டுள்ளன.
14.05.2009

His Excellency Mahinda Rajapaksa,
President of Sri Lanka,
Temple Trees,
Colombo-03

Your Excellency,

CIVILIANS OF MULLIVAIKAL SHOULD BE SAVED AT ANY COST.

Before coming to the subject, I once again reiterate that my love and devotion to my country is in no way second to any other person in Sri Lanka. I had been repeatedly emphasizing on the fact that a patriot is one who loves his country and its people whether they are Sinhalese, Tamils, Muslims or from any other ethnic group. The country won the war at high price. Apart from the financial implications, the destruction caused to the economy of the country, valuable lives lost and the unbearable human sufferings the people underwent, cannot be valued in terms of money.

People of two districts in full and from parts of three others, have lost everything. Many led luxurious lives. They had their own business, industry, mansions to live in and all what they wanted or needed and now all of them are paupers. They are put to starvation. They have to wait for long hours in queues to get a little “Kanchi” poured into their plates. They are all living on liquid diet. Postmortem held on many bodies of elders had revealed that death was due to starvation. A class-less society is now being created for the Tamils to live all alike as paupers.

Life in Mullivaikal is miserable. Even if a new Security Zone is created no one can prevent the LTTE from entering that area and mixing up with the civilians. It is my duty to bring to your notice whatever news I get and believe as true. On the 12th inst. due to shelling more than 36 patients died at the Mullivaikal Hospital with several others injured. Again on the 13th about fifty patients, waiting for treatment with very many others for two days without being attended on them due to shortage of staff, were killed and many more injured. In addition to this agony they are also subjected to starvation. This situation should stop forthwith. There is one-thing that you can do, to give some relief immediately to the people. Please arrange to send food-ships with sufficient food, based on the figures given by the officials and save the country from being accused of starving the people. For a Government that had been sending food to Vanni based on the figures prepared under the influence of the LTTE, for quarter of a centaury, supplying food for the remaining one hundred and fifty thousand people will not make the Government to go Bankrupt. It is only for some more time and may be a few days or a few months, that you are going to do it. People there have lost their strength even to walk. Children are starving without milk. You know what happened to the food that the Government sent to Vanni in the past. Ignoring that matter, please send ample food so that atleast the left-overs will be sufficient to fill the stomachs of the people there. This should continue till the war ends.

All the good name earned by the Security Forces and also by the Government should not be allowed to go with the wind. Enough lives had been lost during the last two to three weeks. Who is responsible for these deaths is not the question. “Why did these people die?”, is a question that will be repeatedly asked by the future generation. Please give strict instructions to the parties concerned that not a single life should be lost in the process of liberation. This request is made to you based on the undertaking you gave the country that no life should be taken by firearms.

I wish you all the best and assure you my unstinting support for all good actions taken by you and also urge you to send enough food by any means to Mullivaikal and also order to stop all shellings and save the innocent men, women, elders and children.

Thanking you,

Yours Sincerely,


V. Anandasangaree,
President – TULF.
--------------
14.05.2009

மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு - 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

என்ன விலை கொடுத்தேனும் முள்ளிவாய்க்கால் மக்களை காப்பாற்ற வேண்டும்.

முக்கிய விடயத்துக்கு வருமுன்பு இந்நாட்டில் எனக்குள்ள பற்றும் அபிமானமும் வேறு ஒரு இலங்கையருக்கு இருப்பதிலும் பார்க்க எவ்வகையிலும் குறைந்ததல்ல என்பதை மீண்டும் வலியுறுத்தி கூற விரும்புகின்றேன். தன் நாட்டை மட்டும் நேசிப்பவன் நாட்டுப்பற்றாளனாகிவிட முடியாது. நாட்டையும் அந்நாட்டு மக்களையும் அதாவது சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் அல்லது வேறு இனத்தவர் என்ற பாகுபாடு காட்டாத ஒருவர்தான் தேசபக்தனாவார். இந்த யுத்தத்தை வென்றெடுக்க அரசு பெரும் விலை கொடுத்தது. ஏற்பட்ட பொருள் நஷ்டத்துக்கு மேலாக நம் நாட்டு பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் நாம் இழந்த பெறுமதிமிக்க பல உயிர்கள், தாங்க முடியாத மக்கள் அனுபவித்த மனித உபாதைகள், ஆகியவற்றின் பெறுமதியை கணக்கிட முடியாது.

இரு முழு மாவட்டங்கள், மூன்று மாவட்டங்களின் பகுதிகள் ஆகியவற்றில் வாழ்ந்த மக்கள் தம் உடமைகள் அத்தனையும் முற்றாக இழந்து விட்டனர். அநேகர் தமது ஆடம்பர வாழ்க்கையை இழந்துள்ளனர். சொந்த வியாபாரம், கைத்தொழில், வாழ பெரு மாளிகைகளை ஒத்த வீடுகள், மேலும் தமக்கு விரும்பியவற்றையும் வேண்டிய வளங்களையும் பெற்றிருந்தனர். இன்று அவர்கள் அனைவரும் ஓட்டாண்டிகளாகி விட்டனர். அவர்கள் பட்டினியும் போடப்பட்டுள்ளனர். வன்னியில் அவர்கள் நீண்டநேரம் கியூ வரிசையில் தம் பாத்திரத்தில் கொஞ்சம் கஞ்சி ஊற்றப்படும் வரை காவல் நிற்கின்றனர். மொத்தத்தில் அவர்கள் நீராகாரத்துடன் வாழ்க்கையை நடத்துகின்றனர். முதியவர்கள் சிலரின் பிரேத பரிசோதனையில் அவர்களின் மரணத்துக்குரிய காரணம் பட்டினிச்சாவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தமிழர்களுக்கென அனைவரும் ஒரே தரத்தில் வாழக்கூடிய வர்க்க பேதமற்றதான சமூகமொன்று உருவாகியுள்ளது.

தற்போதைய முள்ளிவாய்க்கால் வாழ்க்கை மிகக் கொடூரமானது. புதிதாக ஓர் சு10னியப் பிரதேசம் உருவாக்கப்பட்டாலும் விடுதலைப் புலிகள் அதற்குள் புகுந்து மக்களுடன் கலந்து நிற்பதை யாராலும் தடுத்துவிட முடியாது. நான் அறியும் செய்திகளை உண்மையென நம்பினால் மட்டுமே அவற்றை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டிய கடமை எனக்குண்டு. இம் மாதம் 12-05-2009 அன்று முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் செல் வீழ்ந்து சிதறியதால் 36 நோயாளிகளுக்கு மேல் கொல்லப்பட்டும் பலர் காயமும் அடைந்துள்ளனர். மீண்டும் 13-05-2009 அன்று அதே வைத்தியசாலையில் செல் வீழ்ந்து வெடித்ததில் 50 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இவர்கள் இரு நாட்களாக நெருக்கடி காரணமாக சிகிச்சையளிக்க யாரும் இல்லாது துன்பப்பட்டுக் கொண்டிருந்த பெருந் தொகையினரில் ஒரு பகுதியினராவர். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். இந்த வேதனையோடு பட்டினியையும் அனுபவிக்கின்றனர். இந்த நிலை தொடராது உடன் நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு உடன் நிவாரணம் கிடைக்கக்கூடிய ஒரு விடயம் தங்கள் கையில் உண்டு. உடனடியாக அரச அதிகாரிகளால் தரப்பட்டிருக்கின்ற புள்ளி விபர அடிப்படையில் தேவையான உணவு வகைகளை கொண்ட கப்பல் வன்னிக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் மக்களை அரசு பட்டினி போடுகிறது என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. விடுதலைப் புலிகளின் அழுத்தத்தால் தயாரிக்கப்பட்ட புள்ளி விபர அடிப்படையில் கால் நு}ற்றாண்டுக்கு மேல் வன்னிக்கு உணவு அனுப்பி வந்த அரசுக்கு எஞ்சியுள்ள ஒன்றரை இலட்சம் மக்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கினால் அரசு வங்குரோத்து நிலையை அடைந்து விடாது. இந்த நிலை இன்னும் சில காலத்திற்கே. அது சில நாட்களாகவோ, அல்லது மாதங்களாகவோ இருக்கலாம். வன்னி வாழ் மக்கள் நடக்கும் சக்தியை இழந்து விட்டனர். குழந்தைகள் பாலின்றி பட்டினி கிடக்கின்றனர். வன்னிக்கு அரசு அனுப்பும் உணவு பண்டங்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை நீங்கள் அறியாததல்ல. அந்த விடயத்தை புறந்தள்ளி விட்டு எடுப்பவர்கள் தம் தேவைக்கு எடுத்ததன் பின் எஞ்சியவை அங்கே வாழும் மக்களுடைய வயிற்றை நிரப்பும் அளவுக்கு போதியதாக இருக்க வேண்டும். இந்நிலை யுத்தம் முடியும் வரை தொடர வேண்டும்.

அரச படைத்தரப்பினரும், அரசும் பல இழப்புக்களின் மத்தியில் சம்பாதித்த நற்பெயரை காற்றுடன் பறக்க விடக்கூடாது. கடந்த இரண்டு மூன்று வாரங்களாக பெருந்தொகையான உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இந் நிலை யாரால் ஏற்பட்டது என்பதல்ல முக்கியம் “இது ஏன் நடந்தது, எப்படி நடந்தது” என்று எதிர்கால சந்ததி மீண்டும் மீண்டும் குரலெழுப்ப இடமளிக்க கூடாது. தயவு செய்து சம்பந்தப்பட்டவர்களில் ஒரு உயிர் தன்னும் இந்த மீட்பு பணியால் இழக்கப்படக் கூடாதென கண்டிப்பானதொரு உத்தரவை பிறப்பிக்கவும். தாங்கள் அண்மையில் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில் ஓர் உயிர்தன்னும் துப்பாக்கிச்சு10ட்டுக்கு இலக்காகி பறிக்கப்படக்கூடாதென குறிப்பிட்டமைக்கு அமைவாகவே இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

தங்களால் மேற்கொள்ளப்படும் சகல நல்ல நடவடிக்கைகள் அனைத்துக்கும் எனது குறைவற்ற ஆதரவு கிடைக்குமென உறுதியளித்து எவ்விதத்திலேனும் தேவையான உணவை பசியால் வாடும் முள்ளிவாய்க்கால் மக்களுக்கு உடன் அனுப்பி வைப்பதோடு சகல விதமான ஆயுத தாக்குதல்கள் மக்கள் மீது தொடராது அவர்களை காப்பாற்றும்படி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

பாதுகாப்பு வலயத்துக்குள் நடப்பவை உலகை அதிர வைக்கும் - TULF


மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு - 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

பாதுகாப்பு வலயத்துக்குள் நடப்பவை உலகை அதிர வைக்கும்

விடுதலைப் புலிகள் ஒன்றரை இலட்சம் மக்களை பயணக் கைதிகளாக தடுத்து வைத்திருக்கும் முள்ளிவாய்க்கால் சூனியப் பிரதேசத்தில் நடக்கும் சம்பவங்கள் எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் தருகிறது. அவர்கள் தற்போது அனுபவிக்கும் நரக வேதனையை அவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பட்ட துன்பங்களிலும் பார்க்க மிகக் கூடுதலானதாகும். அவர்களுக்குக் கிடைக்கும் உணவு அவர்களுடைய தேவைகளுக்கு போதுமானதல்ல. அந்த நிலை குறைந்தளவு உணவுப் பண்டம் வருவதாலா அல்லது விடுதலைப் புலிகள் தம் பங்கை முன்கூட்டியே எடுத்து விடுவதாலா, இல்லாமல் இரண்டும் காரணமாக இருக்கலாம். அதன் பயனாக தாய்மாரும், வயோதிபர்களும் போதிய சத்துணவின்றி வாடுகின்றனர். இந் நாட்களில் நீண்ட வரிசையில் தம் பங்கு கஞ்சிக்காக காத்து நிற்கின்றனர். தாய்ப்பால் ஊட்டும் சக்தி இழந்த தாய்மார்கள் தம் பிள்ளைகளுக்கு புட்டி பாலுக்காக பல நாட்களாக காத்திருக்கின்றனர். பயத்துடனும், பீதியுடனும் வாழும் மக்கள் கூடுதலான நேரத்தை பங்கருக்குள்ளேயே செலவிடுகின்றனர்.

இக் கொடுமைக்கு மேலாக வெசாக் பண்டிகைக்கு மறுதினம் மாலை 5.00 மணிக்கு ஆரம்பித்த செல் தாக்குதல் மறுநாள் காலை 7.00 மணிக்கு அதாவது இன்று முடிவுக்கு வந்தது. இன்று மாலை 5.00 மணி வரை 378 சடலங்களுடன் 1122 படுகாயமுற்றோரும் காணப்பட்டனர். பல குடும்பங்கள் முற்றாக தம் பங்கருக்குள்ளே முடக்கப்பட்டு விட்டனர் எனவும் அறிய வருகிறது. படுகாயமுற்ற பலர் வைத்திய சேவை எதுவுமின்றி கவனிப்பாரற்று மடிந்தும் உள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 378 மட்டும்தானா? அல்லது விடுதலைப் புலிகள் தவிர்த்து வேறு சில ஊடகங்கள் கூறுவது போல் ஆயிரக்கணக்கானோரா என்பதல்ல பிரச்சினை. ஒரு நாளில் மிகக் கூடிய மரணங்கள் ஏற்பட்டது யுத்தம் ஆரம்பமானதின் பின்பு இந் நிகழ்வில்தான். விடுதபை; புலிகளை ஒழிக்க உதவிய மக்களின் எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றமாக முடிந்தது. அத்துடன் பாதுகாப்பாக இடம்பெயர்ந்தவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்றும் அவர்கள் நன்றாக கவனிக்கப்படுவார்கள் என்றும் அரசு கொடுத்த உத்தரவாதத்தை நம்பிய சர்வதேச சமூகத்துக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

முள்ளிவாய்க்கால் நிலைமை நாளுக்குநாள் கட்டுமீறி வருகின்றது. நாளுக்குநாள் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை கூடிக் கொண்டு வந்து இன்று அது உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. தயவு செய்து உடனடியாக செல் அடிப்பதையும், துப்பாக்கிச் சூட்டையும் நிறுத்துமாறு பணிக்கவும். விடுதலைப் புலிகளை யாராலும் கட்டுப்படுத்த முடிhயாது ஆனால் உங்கள் படையை நிறுத்தி வைக்க உங்களால் முடியும்.

விடுதலைப் புலிகள் தற்போது முற்று முழுதாக பொது மக்களுடன் கலந்துள்ளமையால் அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் பல பொது மக்களை கொல்வதோடு அதேவேளை பலர் காயமடையவும் செய்யும். கவனயீனமாக நடப்பதால் விடுதலைப் புலிகள் எதையும் இழந்து விடப்போவதில்லை. ஆனால் அரசு இழக்க பல உண்டு, அரசின் நாணயம் உட்பட. நான் மீண்டும் தங்களுக்கு வலியுறுத்தி கூறுவது யாதெனில் அவர்கள் மக்களோடு கலந்துள்ளமையால் தங்களுக்குள்ள ஒரே வழி விடுதலை புலிகளை தாக்குவதை நிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் உதவியோ அன்றி நீங்கள் விரும்பும் வேறு யாரின் உதவியோ பெற்று அகப்பட்டுள்ள மக்களை விடுவிக்கும் வரை காலத்தை கடத்துவதே. ஐ.நா சபையின் உதவியை நாடுவதில் எவ்விதத்திலும் தப்பு கிடையாது.

வன்னி மக்கள் மீது நான் அக்கறை காட்டுவதால் என்னை தப்பாக எண்ணக்கூடாது. நான் நன்கு தெரிந்து என் மீது அதிக பாசம் கொண்டுள்ள மக்கள் அநேகர் இறந்தும், கடுமையாக காயமடைந்தும் தம் கால், கைகளை இழந்தும் உள்ளனர். நான் உங்களுக்கு 10-04-2009 இல் எழுதிய ஓர் கடிதத்தின் ஒரு பகுதியை கீழே தருகிறேன்.

யுத்தத்தின் கடைசி கட்டத்தில் புலிகள் அப்பாவி பொது மக்களுடன் கலந்து நின்று அவர்களை மனித கேடயமாக பாவிப்பதால் ஆபத்துக்குள்ளாவோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது……. நாம் விடுதலைப் புலிகளை யுத்தக் கோட்பாடுகளுக்கு உட்பட்டு இயங்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது ஆனால் அரச படைகளால் அது முடியும். நாளுக்கு நாள் நிலைமை பயங்கரமானதாகவும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. ஆகவே உங்கள் தலையீடு மேலும் தாமதிக்கலாகாது. ஒரு நாள் உண்மைநிலை உலகறியும் காலம் வரும் போது முழு உலகும் அரசையும் மக்களையும் கண்டித்து நிற்கும். சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் இதுவரை கூறி வந்ததுபோல் எமது முழு அக்கறையும் மக்கள் மீதே.

பி.கு:- பெருந்தொகையான காயமுற்றோர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமையால் வைத்தியர்களால் அனைவருக்கும் வைத்தியம் பார்க்க முடியவில்லை. பல காயமுற்றவர்களுக்கு 24 மணித்தியாலங்களாக எதுவித சேவையும் வழங்கப்படவில்லை. வைத்தியசாலை ஊழியர்களில் அரைவாசியினரின் வீடுகளும் தாக்கப்பட்டமையால் கடமைக்கு வரவில்லை.

நன்றி


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

Friday, May 15, 2009

TULF statement - SOS ON BEHALF OF THE IDPs IN MULLIVAIKAL


15.05.2009

Press Statement

SOS ON BEHALF OF THE IDPs IN MULLIVAIKAL.

I want the Government of Sri Lanka and the International Community to take this message of mine as an SOS coming from the civilians of the so called No Fire Zone. Civil administration has broken down there, and the medical officers too had withdrawn. There is no one to regulate the activities there including the food supply and medical care. Hundreds, may be even thousands, are left to die on the streets and bunkers, without anyone to attend on them. There is no food and water and the people are starving.

I plead with the Government and the International Community to take my massage seriously and to do their best to rush a medical team to treat the injured and also to arrange to drop food parcels from the air and save the several thousands from death by starvation. If every thing fails and no response comes from anywhere, the Government of Sri Lanka or a friendly country can request India to rush a medical team and food for the unfortunate victims who are suffering for no fault of theirs. I strongly urge that this massage be taken seriously as one coming not from an insane man.


V. Anandasangaree,
President – TULF.

Thursday, May 14, 2009

ஊடகத்துறை நண்பன் நிலந்த இலாங்கமுவ குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்(CID) 4 மணிநேரம் விசாரணை

Tuesday, May 12, 2009 Sri Lankaguardian பிரதம ஆசிரியரை சிஐடி யினர் விசாரணைக்குட்படுத்தினர். இது இலங்கை நெற் இணையத்தளத்தின் நேற்றைய செய்தி



முன்னர் Sunday Standard, The Island, Divaina, Maubima போன்ற பத்திரிகைகளிலும் தற்போது Siyatha என்ற பத்திரிகையின் Foreign News Editor and defence correspondent ஆகவும் சிறிலங்கா கார்டியன் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் நிலந்த இலங்கமுவ அவர்களை - தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தின் பொறுப்பாளராக நான் கடமையாற்றிய காலத்திலிருந்து - தெரிந்தவன் என்ற வகையிலும், சற்று நேரத்துக்கு முன்னர் அவருடன் தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டறிந்தவன் என்ற வகையிலும் இந்த இடுகையை எனது பதிவிலிடுகின்றேன்.

நியாயமான – நடுநிலைப் பத்திரகையாளர் என்ற வகையில் தனது கருத்துக்களைத் தெரிவித்த இவரும் - சந்தேகக் கண்ணோடு நோக்கப்பட்டிருக்கிறார். இவரையும் சுமார் 4 மணி நேரங்கள் துருவித்துருவி விசாரித்ததாக அறிய முடிந்தது.

மேலதிக தகல்களுக்கு

http://www.ilankainet.com/2009/05/sri-lankaguardian.html

http://www.lankanewsweb.com/news/2009_05_11_001.html

http://colombotoday.com/english/articles/2269.htm

http://www.colombotoday.com/sinhala/articles/2276.jsp

http://www.lankatruth.com/index.php?option=com_content&view=article&id=1981:editor-lanka-guardian-questioned&catid=35:local&Itemid=50

EVENTS IN THE NO FIRE ZONE WILL SHOCK THE WORLD - TULF

11.05.2009

His Excellency Mahinda Rajapaksa,
President of Sri Lanka,
Temple Trees,
Colombo-03

Your Excellency,

EVENTS IN THE NO FIRE ZONE WILL SHOCK THE WORLD.

I am surprised, shocked and deeply grieved at the happenings in Mullivaikal where the LTTE is holding to ransom more then one hundred thousand people. They are undergoing worse hardships than what they underwent during the period in which they were held under the subjugation of the LTTE. The food they received did not meet their requirements either due to short supply or due to LTTE taking their requirements first or for both. As a result mothers and elders are severely mal-nourished. These days they wait in long queues to receive their quota of “Kanchi”. Mothers who are so weak to breast-feed their children wait for days in the hope of receiving a milk packet. They live in constant fear and tension. Most of the time the people spent in their bunker.

Added to these suffering, heavy shelling that started at 5 pm on the day following the Wesak ended at 7 am today. Several hundreds who got injured were rushed to hospital. Up to 5 pm 378 people were reported dead and 1122 were injured. It is understood that many families got buried in their bunkers. Very many people who got injured were left unattended to die. Whether the number killed is only 378 as recorded by the hospital or over thousand as claimed by certain sources and not the LTTE, the fact remains that the number killed is the highest for one day since the war started. These killings are contrary to the expectations of the people who co-operated for the eradication of the LTTE and will also certainly be a disappointment to the International Community to whom you have assured safe passage of the IDPs to Government controlled area and very fair treatment of the IDP’s in the Welfare Centres.

Things are going out of control in Mullivaikal and the casualties that were on the increase day by day reached its climax today. Please call for immediate stopping of shellings and firing. No one can prevent the LTTE from firing but you can order your forces to stop it forthwith.

I strongly urge you to consider the fact that the LTTE is now fully mixed up with the civilians and any attack on them by the forces will result in large number of civilians getting killed or injured. Failure to take cautious steps the LTTE has nothing to lose but the Government has many thing to lose including its credibility. I repeat once again, your Excellency, that the only option the Government has is not to attack the LTTE any more since they are now mixed up with the civilians, but to mark time till the assistance of the United Nations or any one else of your choice is obtained to bring the innocent civilians out safely. There is absolutely nothing wrong in seeking the assistance of the UN to save the people.

I hope you will pardon me for the concerns I have for the people of Vanni. Many of those who are known to me and much attached to me are either dead or seriously injured and many without their limbs. An extract from what I wrote to you in my letter of 10.04.2009 is reproduced below for your information. “Now that they are on the last lap of the war and the LTTE had taken their position in the midst of the innocent people using them as human shield, the casualty rate has increased many fold ……. We can’t expect the LTTE to conform to any norms but the forces can ……The situation is disastrous and deteriorating day by day and your intervention cannot be delayed any more. When the truth comes to light one day the whole world will condemn us, the Government and the people.

May I wind up your Excellency by saying that “Our main concern is the civilians”, as all the concerned parties had been telling the world all these days.

PS:- Due to huge number of injured civilians brought to hospital, the hospital is unable to give the service to all patients. Many wounded civilians are without treatment for more than 24 hours. More than 50% of the health staff have not reported for duty because their residences had been attack.

Thanking you,

Yours Sincerely,

V. Anandasangaree,
President – TULF.

ஈழத் தமிழரைக் காப்பாற்ற - சதாமை எப்படி அமெரிக்கா கைது பண்ணியதோ அதே போல மகிந்த ராஜபக்க்ஷவையும் கைது பண்ணுவதே ஒரேவழி!

இன்றுவரை நான் வன்முறையை ஆதரிக்கவுமில்லை. இனிமேல் ஆதரிக்கப் போவதுமில்லை. எவரையும் கொல்லும் அதிகாரம் எவருக்கும் யாரும் கொடுக்கவுமில்லை. பௌத்த தர்மம் கொலையையா ஆதரிக்கிறது? - என்ற கோட்பாட்டுடனேயே இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
ஈழத் தமிழரைக் காப்பாற்ற - இலங்கையில் அமைதி ஏற்பட ஒரேஒரு வழிதான் இருக்கிறது.

ஈராக்கில் சதாமை எப்படி அமெரிக்கா கைது பண்ணியதோ அதே நடைமுறையில் மகிந்த ராஜக்ஷவையும் கைது பண்ணுவதே தமிழரைக் காப்பாற்ற ஒரேவழி!
இந்த முயற்சியை யாரேனும் ஒருவர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்புச் சபை - போர் நிறுத்தம் என்ற பேச்சை விடுத்து தற்போது உடனடியாக செய்யவேண்டியது இலங்கை அரசை எந்த ஒரு நாடாவது தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவருவதே!
மனிதாபிமானம் - மனித உரிமை பற்றி பேசுவோர் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்! ஜனாதிபதியையும் அவரது சகோதரர்களையும் ஏன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர்களுட்பட சகல பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கைதுபண்ணுவதுடன் இவர்களுடைய சொத்துக்களையும் பரிசீலித்து மேலதிகமானவற்றை மக்கள் நிவாரணத்துக்கு செலவிட வேண்டும்! இதை யார் செய்வது? எப்படிச் செய்வது? எனக்கு இதுவே தற்போதைய கேள்வியாக இருக்கிறது! உங்களுக்கு எப்படி?

Arrest Sri Lankan President Mahinda & safe the innocent Sri Lankan Tamils! Who can do that? This is the question now! Don’t waste the time!

What happened in Iraq? why the whole world silence?

Wednesday, May 13, 2009

ஈழத் தமிழரின் நிலைக்கு இன்றைய காரணம் வேறு எவருமே இல்லை - நாமே தான்? நன்றி மறந்த எமக்கு இது ஒரு பாடம் - இந்தியாவும் வேண்டாம் நோர்வேயும் வேண்டாம்?

ஈழத் தமிழரின் நிலைக்கு இன்றைய காரணம் வேறு எவருமே இல்லை - நாமே தான்? நன்றி மறந்த எமக்கு இது ஒரு பாடம் - இந்தியாவும் வேண்டாம் நோர்வேயும் வேண்டாம்? ஏன் யாருமே வேண்டாம். ஒன்றாக நாம் அனைவருமே தற்கொலை செய்வோம்! எமக்கு எதற்கு ஒரு நாடு, மொழி, கலை, கலாச்சாரம் வேண்டும்! இன்னும் எத்தனைபேரை கொலை செய்தமைக்கு எமக்கு இது ஒரு தேவையான போராட்டமா! பழிகள் போதும் வினை விதைத்தவன் வினை அறுப்பான் - தினை விதைத்தான் தினை அறுப்பான்; தமிழ்த்
தலைவர்களுக்கான கடமை!

Tuesday, May 12, 2009

அவசரம் - அனைவரும் தயவுசெய்து அப்பாவித் தமிழ்மக்களுக்காக இந்த உதவியைச் செய்யவும்

இந்த இணையத்தளத்திற்குச் சென்று உங்கள் சிந்தனைக்கு ஏற்ப மனிதாபிமானப் பணியை மேற்கொள்ளவும்.

www.sostamils.com


“Knowledge is recognising the fact of what is said no matter who says it” ...."epporul yaryar vaikedpinum apporul meiporul kanpathu arivu" ............ "what all the world's great religions demand - that we do unto others as we would have them do unto us" " mattavar unaku ethai seiya vendum entru virumpukirayo athai matavanukku nee sei"

இந்தச் செய்தியை எனக்குதந்துதவிய சின்னையா சந்திரமௌலீசனுக்கு என்னுடைய நன்றிகள்

எங்களை உள்ளுக்கும் போக விடாங்களாம் - ஒரு தாயின் அலறல் நேரடியாகக் கேளுங்கள்

கீழே தரப்பட்ட ஒரு காணொளியில் அவதானமாக 35வது செக்கனில் இருந்து 1.00 (ஒரு நிமிடம் வரை)எங்களை உள்ளுக்கும் போக விடாங்களாம் - ஒரு தாயின் அலறல் நேரடியாகக் கேளுங்கள் http://www.youtube.com/watch?v=8IzFAAPmegM&feature=related

Sunday, May 10, 2009

இந்திய இலங்கை ஒப்பந்தம் - தமிழக மக்களுக்கும் நன்றி - சில கடந்த கால நினைவுகள்

இந்திய இலங்கை ஒப்பந்தம் வந்த வரலாறு - பலருக்குத் தெரியும்! சிலருக்குத் தெரியாது! - சில கடந்த கால நினைவுகளை மீட்டுப் பார்ப்பது காலத்தின் தேவையாக இருக்கிறது.

திரு. ஜே.என் டிக்ஷித் இந்தியத் தூதுவர் அவர்கள் எழுதிய Indian Foreign Policy 1947 - 2003 இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி சில பக்கங்களை ஒதுக்கியுள்ளார். அதில் அவர் இந்திரா காந்தியின்பின் திரு. ராஜீவ் காந்தி பிரதமராக வந்தபோது எவ்வாறு திரு. ரொமேஷ் பண்டாரியின் அணுகுமுறை இருந்ததெனத் தெளிவாகக் கூறியுள்ளார். இந்திய அரசு இலங்கைப் பிரச்சனையில் இந்திய கொள்கையுடன் அணுக எண்ணுகிறதே தவிர தமிழக அணுகுமுறையால் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்ட (1987இல்) இந்நூலின் இறுதியில் இருப்பதை தருவது பொருத்தமானதென்று கருதி பதிவிலிடுகிறேன்!

தம் உயிரையே பணயம் வைத்து இந்த ஒப்பந்தத்தைச் செய்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கும், இந்திய அரசுக்கும், இதற்குத் தூண்டுகோலாக இருந்த தமிழக முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும், தமிழக அரசியல் தலைவர்கள் கட்சிகள் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக எம்மை காக்கும் கேடயமாக அன்போடு பாதுகாத்த தமிழக மக்களுக்கும் எமது நன்றியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற கிளர்ச்சிகளில் தமது உயிரை அர்ப்பணித்த தமிழ்நாட்டுத் தியாகிகளை நாம் எப்போதும் மறக்க முடியாது. அதுபோலச் சிறை சென்றும் பதவிகளைத் துறந்தும் இன்னல் பல ஏற்ற தலைவர்கள், தொண்டர்கள் எல்லோருக்கும் இக்கட்டத்தில் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

ஒப்பந்தம் நிறைவேற்றப்படுமோ இல்லையோ என்று ஆரூடம் கூறத் தேவையில்லை.அரசியலில் எதுவும் சாத்தியமே. என்ன நடந்தாலும் தமிழக மக்களின் அன்பும் ஆதரவும், இந்தியாவின் மேலான ஆதரவும் பாதுகாப்பும் எப்போதும் எமக்கிருக்க வேண்டும். அதுவே எமது பாதுகாப்புக்கு உத்தரவாதம். அதற்குப் பாத்திரமானவர்களாக நாம் நடந்து கொள்வோம்.

Friday, May 8, 2009

பத்திரிகையாளருக்கு ஜே.வி.பி (JVP) விமல் வீரவன்சவின் வெருட்டல்

Reporters Without Borders/Reporters sans frontières
www.rsf.org

7 May 2009
SRI LANKA

Parliamentarian threatens online journalists

Reporters Without Borders is concerned about the telephone threats that have been made against reporter Santha Wijesuirya of the Lankaenews website and his editor, Bennet Rupasingha, by parliamentarian Wimal Weerawansa, the leader of the National Freedom Front.

Weerawansa reportedly called Wijesuirya on his mobile phone yesterday evening to complain about one of his stories and threatened to teach him “a good lesson.” Wijesuirya took the threats seriously and alerted the police. “I fear for my life,” he told Reporters Without Borders.

The press freedom organisation urges the interior ministry to take the necessary steps to guarantee Wijesuirya’s security. It also calls for a police investigation into Weerawansa’s threats.


Vincent Brossel
Asia-Pacific Desk
Reporters Without Borders
33 1 44 83 84 70
asia@rsf.org

Thursday, May 7, 2009

ஈழத் தமிழர் இன்னல் - பகுதி 1

பொது நல நாடுகளின் பாராளுமன்றச் சங்கத்தின் தமிழ்நாட்டுக்கிளையினரால் அன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் உயர்திரு. க. இராசாராம் அவர்களின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் 19.08.1983ல் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகமும் இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய உரை.

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய சட்டமன்றப் பேரவைத் தலைவர் மாண்புமிகு திரு. ராஜாராம் அவர்களே, சுதந்திரப் போராட்ட காலம் தொடக்கம் தமிழகத்தில் சிறப்புமிக்கத் தலைவராக விளங்கி வருகின்ற சட்டமன்ற மேலவைத் தலைவர் திரு. ம.பொ.சி அவர்களே, இங்கே வருகை தந்து இருக்கின்ற சட்டமன்ற பேரவை, மேலவை உறுப்பினர்களே, அமைச்சர் பெருமக்களே, இலங்கையிலிருந்த வருகை தந்திருக்கின்ற என்னுடைய சக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. நவரத்தினம் அவர்களே, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சம்பந்தன் அவர்களே, இங்கே திரளாக வருகை தந்திருக்கின்ற பெரிNயுhர்களே, தாய்மார்களே, என் அருமை தம்பி தங்கைகளே,

தமிழ் இனத்தினுடைய வரலாற்றில் எத்தனையோ துன்பங்களை நாம் கண்டு இருக்கின்றோம். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருசந்தர்ப்பத்தில் கூறினார்கள் - கடல் நீர் உர்ப்பாக இருப்பதற்குக் காரணம் கடல் கடந்த தமிழன் வடித்த கண்ணீர் தான் என்று கூறினார்.

இன்று இந்தக் கண்ணீர் கடலிலே தத்தளித்துக் கொண்டிருக்கின்ற ஈழத் தமிழ் மக்கள் சார்பிலே அவர்கள் நிலை மாத்திரமல்ல அவர்கள் வாழ்வு வளமாக நாம் எப்படி செயற்பட வேண்டும் என்பதையும் உங்கள் மத்தியிலே எடுத்துக் கூற நான் இங்கு வருகை தந்திருக்கிறேன்.

இந்தச் சந்தர்ப்பத்திலே பொது நல நாடுகளின் பாராளுமன்றச் சங்க தமிழ்நாட்டுக்கிளையினர் இந்த சிறப்பான கூட்டத்தை ஏற்பாடு செய்து, அறிஞர் பெருமக்கள் மத்தியில் வெறும் உணர்ச்சிப் பெருக்காக அல்ல, ஆழ்ந்த சிந்தனைக்குரிய சில கருத்துக்களைக் கூறுகின்ற வாய்ப்புக் கிடைத்தமைக்காக நான் இந்த தமிழ்க் கிளையினுடைய தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் எல்லோருக்கும் முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன்.

நண்பர்களே, சென்ற சனிக்கிழமை இரவு சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்கினேன். எப்படி வந்தேன் என்ற வரலாறே ஈழத் தமிழர்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் எல்லோரும் அறியச் செய்யும். யுhழ்ப்பாணத்திலிருந்து ஒரு மோட்டார் வண்டியிலே வவுனியாவிலே உள்ள இன்னொரு மோட்டார் வண்டியிலே வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் எம்மைப் பாதுகாக்கக்கூடிய நண்பர்களும் உடன்வர மேற்கு இலங்கையின் ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் சென்று அங்கிருந்து வேறு ஒரு பாதுகாவலருடைய வண்டியில் நான் மாறு வேடத்தில் ஏறிவந்து கொழும்பு சென்று யாருக்கும் தெரியாமல் அங்கு தங்கி விமான நிலையத்திற்கு நேரே சென்று விமான நிலையத்தில் பிரயாணிகள் தங்கும் இடத்தில் நான் இருக்கும் போதுதான் இலங்கை அரசினுடைய இராணுவ மேலதிகாரி ஒருவர் வந்து நீஙஇகள் சிறப்பு விருந்தினர் இருக்கைக்கு வருவீர்கள் என்றல்லவா நினைத்தோம் ஏன் இங்கு வந்து சேர்ந்தீர்கள்? என்று கேட்டார். நான் கூறினேன் நான் உங்கள் யாருக்கும் அறிவிக்கவில்லை. உங்கள் யாரையும் எதிர்பார்க்கவில்லை நான் என்னுடைய பாட்டில் போக நீஙஇகள் வந்து இங்கே வரவேற்கத் தேவையில்லை என்று கூறி அனுப்பிவிட்டு நேராக விமானத்திற்குச் சென்று இங்கே வந்;தேன்.

இலங்கை நாட்டின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையில் நான் நிற்கின்றேன். அந்த நாட்டின் தலைநகரிலே மாறுவேடத்திலே நுழைய வேண்டியவனாக இருக்கிறேன். விமானத்திலே திருட்டுத் தனமாக தீரடன் நுழைவதுபோல நுழைந்து என்னுடைய விமானச்சீட்டைக் கூட என்னுடைய தந்தையின் பெயரிலே வெற்று பிரயாணம் செய்கின்ற நிலையிலே இருக்கிறேன் என்றால் நாங்கள் எத்துணை நெருக்கடிக்கு மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறியக் கூடியதாக இருக்கும்.

நான் இங்கு வந்து இறங்கியவுடன் என்னை சந்தித்த பத்திரிகையாளர்களுக்கும் நண்பர்களுக்கும் நான் இரண்டு நாள் தமிழ்நாட்டில் தங்கி இங்குள்ள தலைவர்கள் பெரியார்களை எல்லாம் பார்த்து அவர்களுடைய ஆலோசனைகளை எல்லாம் பெற்றுத்தான் டெல்லிக்கு செல்லவேண்டும் கருதிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். ஆனால் அன்றிரவே நான் புறப்பட்டுச் சென்று அடுத்த நாளே பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரைப் பார்க்கவேண்டுமென்று டெல்லியிலிருந்த அறிவிப்பு வந்திருக்கிறது என்ற காரணத்தினால் நான் ஒருசில தலைவர்களை மாத்திரம் அவசரம் அவசரமாக இரவோடு இரவாகப் பார்த்து பேசிவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதைக்கூட சிலர் தப்பாக தவறாக நாம் தமிழகத்து தலைவர்களைப் பார்க்காமல் போய்விட்டேன் என்று கூறினார்கள்.

தமிழகம் இத்தனை கிளர்ச்சியை நடத்தியதே மத்திய அரசு எமக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்த நிலையில் மத்திய அரசு அழைக்கும்போது உங்களுடைய குரல் அங்கே அவர்கள் செவியிலே ஏறி அவர்கள் எம்மை அழைக்கும்போது நாம் அங்கு செல்வதா? இங்கே நிற்பதா என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டும். எனவே எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்க முற்படுபவர்கள் சிலர் இருக்கலாம். ஆனால் எமது இன்னல் மிகுந்த நேரத்தில் காரியப் பொறுப்பை சுமந்து இருக்கிற நான் எதை எப்படி செய்யவேண்டுமென்று ஆலோசித்தேன். நான் உங்களுடைய சட்டமன்ற பேரவைத் தலைவருடன் ஆலோசித்தேன். தமிழக முதலமைச்சருடனும் ஏனைய அமைச்சர்களுடனும் ஆலோசித்தேன். திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முரசொலி மாறன் முதலியோரை அழைத்து அவர்களுடன் ஆலோசனை செய்தேன். இன்னும் அன்றிரவே என்னைப் பார்க்க வந்த குமரிஅனந்தன் போன்ற தலைவர்களுடன் ஆலோசித்து விட்டுத்தான் நான் டெல்லிக்குச் சென்றேனே தவிர தமிழகத்தைப் புறக்கணித்து மதிக்காமல் நான் சென்றதாக யாரும் கூறினால் நிச்சயமாக தமிழ்நாட்டு பெருமக்கள் அதை நம்ப மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்.

நண்பர்களே, சட்டபேரவைத் தலைவர் அவர்கள் தன்னுடைய விரிவான உரையிலே இலங்கையில் தமிழ் மக்களுடைய சமீபகால சோக வரலாற்றை ஓரளவுக்கு உங்களுக்கு எடுத்துக் கூறி விளக்கினார்கள். இன்று சிங்கள சரித்திராசிரியர்கள் சிலரும் அரசியல்வாதிகள் பலரும் ஈழத்தில் வாழ்கின்ற தமிழர்கள் இடைக்காலத்திலே வந்தேறு குடிகளாக அங்கே சென்றவர்கள் என்று கூறுகிறார்கள். வேறு சிலர் ஆங்கில ஆட்சிக் காலத்திலே அங்கு தேயிலை இரப்பர் தோட்டங்களிலே வேலைசெய்யத்தான் சென்றவர்கள் என்று ஒரு தவறான படத்தை உலகின் முன்னாலே வைக்க முயற்சி செய்கிறார்கள். (தொடரும்)

கப்பம், கடத்தல், கொள்ளைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்தவேண்டும் - தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டன அறிக்கை.

06.05.2009
கண்டன அறிக்கை.

மட்டக்களப்பில் அண்மையில் எட்டு வயதுடைய பாடசாலை மாணவியான சதீஸ்குமார் தனுஷிகா என்ற சிறுமியைக் கடத்தி கப்பக் கோரிக்கை விடுத்து கொலை செய்யப்பட்டதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் அங்கு கடத்தப்பட்ட பாடசாலை சிறுவர்களான ஏரம்பமூர்த்தி ஜனார்த்தனன், வள்ளுவன் ஜீவகுமார் ஆகியோரை உடனடியாக விடுவிக்குமாறும் வேண்டுகிறது.

இச் சிறுமியின் கொலையுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டமையால் இதில் தொடர்புடைய பெரிய புள்ளிகள் சிலர் தப்பிவிடுவார்கள். இந்த சந்தேக நபர்களின் கொலைகள் திட்டமிட்டு நடைபெறுவதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது. ஏன் எனில் திருகோணமலைச் சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் கொலைகளும் இப்படியான முறையிலேயே நடந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டு ஜனநாயகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் இவ்வேளையில் இப்படியான சம்பவங்கள் கடந்த சில காலமாக நடைபெறுவதன் மூலம் அங்குள்ள தமிழ் மக்களை ஆயுத அடக்கு முறை கலாச்சாரத்திற்கு அடிபணிய வைக்கப்படுவதை எந்த ஒரு ஜனநாயக வாதியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் நடந்த, நடக்கின்ற கடத்தல்கள், கப்பம், கொலைகள், கொலைமிரட்டல்கள், கொள்ளைகள் என்பனவற்றை யார் செய்கின்றார்கள் எனபது மக்களுக்கு நன்கு தெரிந்தும் பயத்தின் நிமித்தம் எவரும் சாட்ச்சி சொல்ல முன்வரமாட்டார்கள். ஆனால் ஜனாதிபதி அவர்கள் விசாரனை குழு ஒன்றை நியமித்து அதற்கு சாட்ச்சி சொல்ல வருவோரின் இரகசியம் காக்கப்படும் என உத்தரவிடின் இச்செயலில் ஈடுபடுவோரை மிக எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், இப்படியான கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்கும், கப்பம், கடத்தல், கொள்ளைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் அத்துடன் இச்சம்பவங்களுக்கு ஆயுதக் குழுக்களே மூல காரணமென்பதனால் அனைத்து ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை முழுமையாக உடனடியாக களையவேண்டும் எனவும் நாங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். தேவை ஏற்படின் அவர்களுக்கு அரச பாதுகாப்பு வழங்கலாம்.

மேலும் சதீஸ்குமார் தனுஷிகாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் எனவும் அச்சிறுமியின் இழப்பால் துடிக்கும் அவரின் குடும்பத்தினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள் TULF PLOTE EPRLF(Pathmanaba) கோரிக்கை

05.05.2009
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு - 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள்

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்து பல்வேறுபட்ட கோரிக்கைகள் வருவதால் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகிறோம்.

01. நீர்

தந்போதைய காலநிலையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவது சகஜமே. வேறு பல்வேறு தேவைகளுக்கும் உதவும் நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நிற்கின்றனர். இடம் பெயர்ந்த மக்களுக்கு இதுவொரு பாரிய பிரச்சினையாகும். பலர் நீண்ட நாட்களாக குளிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளனர். இந் நீர் தட்டுப்பாட்டை நீக்க யுனுசுயு என்ற ஸ்தாபனத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப் பிரச்சினையை தீர்ப்பதற்கு போதிய வசதிகள் அவர்களிடம் இருப்பதாக நான் நம்புகின்றேன். 250 மீற்றர் ஆழத்திற்கு குழாய் கிணறை அடிக்கின்ற வாய்ப்பும் ஒரு நாளைக்கு இரண்டு கிணறுகள் அமைக்கக்கூடிய தகுதியும் அவர்களிடம் இருக்கிறது. 5000 கலன்கள் கொள்ளக்கூடிய கொள்கலன்களும் அவர்களிடம் உண்டு.

02. உணவு

அதிகமான முகாம்களில் உணவுப் பிரச்சினை இல்லாத போதும் சில முகாம்களில் சில வேளைகளில் உணவு வழங்கப்படுவதில்லை. முறையான திட்டமின்மையே இதற்குக் காரணமாகும்.

03 முதியோர்களை விடுவித்தல்

60 வயதுக்கு மேற்பட்ட முதியோரை விடுவிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இத் தீர்மானத்தை மாற்றி 60 இற்கும் 60 இற்கு அண்மித்துள்ள வயதுடையோரின் மனைவிமாரை அல்லது கணவன்மாரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

04. நோயாளிகள்

பல நோயாளிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தால் தம் செலவிலேயே நல்ல வைத்திய சேவையை பெற்றிருக்க முடியும். இதற்குக் காரணம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதுமே ஆகும்

05. வெளிநாட்டில் வைத்தியம் பெறுதல்

வெளிநாட்டில் வைத்தியம் பெற வசதியுடையோர் விரும்பிக் கேட்பின் அதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

06. அரச ஊழியர்கள்

கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் கடமையாற்றிய அரச ஊழியர்கள் அவரவர் குடும்பத்துடன் விடுவிக்கப்பட்டு அவர்களி;ன் சேவை முகாம்களில் பயன்படுத்தப்பட வேண்டும்.

07. அரசாங்க அதிபர்கள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்தோரை பொறுப்பெடுத்து வவுனியாவில் கச்சேரி அமைத்து செயற்படுவதோடு படிப்படியாக அப் பணிகளை தம் மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கலாம். இம் மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை கவனிக்க பணிக்கப்பட வேண்டும்.


08. குடும்பத்தினரை மீள ஒன்றிணைத்தல்

பல்வேறு முகாம்களில் சிதறுண்டு இருக்கும் ஓரே குடும்பத்தினரை ஒன்றிணைக்கும் பணியில் அனைவரும் ஒரு முகாமுக்கு மாற்றப்பட வேண்டும்.

09. தொலைபேசி இணைப்புக்கள்

தற்போது வழங்கப்படுகின்ற தொலைபேசி இணைப்புக்கள் போதாமையால் மேலும் சில இணைப்புக்கள் ஒவ்வொரு முகாமுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

10. உறவினர்களின் சந்திப்பு

முகாம்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரையும் ஒருவரேனும் வந்து பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

11. கர்ப்பிணி பெண்கள் பற்றியது.

கர்ப்பிணிகளும், குழந்தைகளின் தாய்மார்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் மடு தேவாலய முகாமில் அனுமதிக்கப்பட வேண்டும்.

12. ஊனமுற்றோர், அனாதை குழந்தைகள், முதியோர், சித்த சுயாதீனமற்றோர்.

ஓர் விசேட குழு அமைக்கப்பட்டு மேற் கூறப்பட்டவர்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய வகையில் வதி விடங்கள் ஏற்படுத்திக் கொடுத்தல்.

13. விதவைகள்

விதவைகள் அனேகர் உருவாக்கப்பட்டிருக்கின்றபடியினால் அவர்களை பொறுப்பேற்பதற்கும் புதிய ஆலோசனை வழங்குவதற்கும் மகளிர் நலன்புரி அமைப்புக்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

14. பிரேத அறை

முறையான ஒரு பிரேத அறை இன்மையால் நாம் மதிப்பு மரியாதையோடு எமது கலாச்சாரத்துக்கு அமைய அடக்கம் செய்ய முடியாமல் அழுகிய நிலையில் அண்மையில் உள்ள நோயாளிகளுக்கு பெரும் சங்கடத்தை உண்டு பண்ணியதோடு அப் பிரேத அறையிலிருந்து எழும் துர்நாற்றம் சுமார் 200 மீற்றர் விட்ட பிரதேசத்துக்கு பரவுகிறது. பிரேதங்கள் உறவினரிடமோ அல்லது நண்பர்களிடமோ கையளிக்கப்படும் வரை பாதுகாத்து வைக்கக்கூடிய ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்

புதுமாத்தளனில் வாரத்திற்கு 478 மெற்றிக் தொன் உணவு தேவைப்படுகிறது. எம்மால் கூறப்படுகின்ற ஆலோசனைகளை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி



வீ.ஆனந்தசங்கரி தலைவர்-த.வி.கூ
த.சித்தார்த்தன் புளொட்
தி.ஸ்ரீதரன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்