அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 26, 2009

காணாமற்போன யாழ் பொது நூலக நினைவுக்கல் - மறைந்த தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் மீள நினைவுகூரப் படுகிறார் - இன்றைய உதயனில் செய்தி!

இன்றைய(26.08.2009) உதயன் 2ஆம் பக்கச் செய்தியில் இந்த விடயம் வெளிவந்துள்ளது. மறைக்கப்படும் வரலாறுகளில் இதுவும் ஒரு முக்கிய செய்தி. எனது பதிவுக்காகவும் - சில விடயங்களுக்காகவும் உதயன் செய்தியை அப்படியே இங்கு பதிவிடுகிறேன்.

அமரர் அமிர்தலிங்கத்தினால் பொது நூலகத்தில் திரை நீக்கப்ட்ட நினைவுக்கல்லை மீளப் பொருத்துவதற்கு புதிய சபை முன்வரவேண்டும். யாழ் மாநகர சபையின் புதிய நிர்வாகத்திடம் முன்னாள் ஆணையாளர் சிவஞானம் வேண்டுகோள்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர். அ. அமிர்தலிங்கத்தினால் யாழ் பொது நூலகம் 1984ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் திகதி மீளவும் திறந்து வைக்கப்பட்டது. அந்த வைபவத்தின் ஞாபகச் சின்னமாக ஒரு நினைவுக்கல்லும் பொருத்தப்பட்டு அமரர் அமிர்தலிங்கத்தினால் திரை நீக்கம் செய்யப்பட்டது. எனினும் தற்போது அந்த நினைவுக்கல் அந்த இடத்தில் காணப்படவில்லை. எனவே அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு காலத்துத் தமிழினத் தலைவனுடைய வரலாற்று நிகழ்வு தொடர்பானது என்பதால், தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள மாநகர சபை நிர்வாகம் அதனை மீளப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அமிர்தலிங்கத்தின் பிறந்த தினமான இன்றைய (ஓகஸ்ட் 26) நாளில் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் சீ.வீ.கே. சிவஞானம்.

இதுதொடர்பாக அவர் யாழ் மாநகர ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு:
01.06.1981ஆம் திகதி நள்ளிரவில் சட்டத்தின் பாதுகாவலர்களாலேயே எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை மீள்வித்து இயங்க வைப்பதில் அப்போதிருந்த சபையும் நிர்வாகமும் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக பொதுநூலக வரைபடத்தின்படி மேற்குப்புறப் பகுதியை புதிதாக அமைக்கவென மாநகர முதல்வரால் 07.02.1982 ஆம் திகதி அத்திபாரம் இடப்பட்டது. இதற்கான நினைவுக்கல் அப்படியே பொருத்தப்பட்ட இடத்திலேயே உள்ளது.
01.06.1983ஆம் திகதி முதல் தெரிவு செய்யப்பட்ட சபையின் பொறுப்புக்களையும் நிறைவேற்றிய எம்மால் இக்கட்டிட வேலைகள் தொடரப்பட்டு 04.06.1984ஆம் திகதி முன்னாள் காங்கேசன்துறை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான அ. அமிர்தலிங்கத்தினால் வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. அந்த வைபவத்தின் ஞாபகச் சின்னமாக ஒரு நினைவுக்கல்லும் கட்டடத்தில் பொருத்தப்பட்டு அமரர் அமிர்தலிங்கம் அவர்களாலேயே திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

எனினும் அத்திபாரம் நாட்டிய நினைவுக்கல் அப்படியே இருக்கையில் 04.06.1984இல் நடைபெற்ற திறப்புவிழா நினைவுக்கல் இது பொருத்தப்பட்டிருந்த இடத்தில் காணப்படவில்லை. இது எமக்குக் குறிப்பாகவும் யாழ்ப்பாண மக்களுக்குப் பொதுவாகவும் மிகவும் வேதனையளிக்கும் விடயமாகவே கருதலாம்.

அமரர் அமிர்தலிங்கத்தைக் கொண்டு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை திறப்பிக்க அப்போதைய மாநகர ஆணையாளராக இருந்த நான் எடுத்த முடிவு எமக்குத் தனிப்பட்ட முறையில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தன.

அமரர் அமிர்தலிங்கத்தினால் இந்த நூலகத்தைத் திறந்து வைப்பதை அரசாங்கம் அறவே விரும்பவில்லை என்பதற்கு மேலாக அதை மிகவும் ஆணித்தரமாக எதிர்த்தமை தெளிவாகும். அரசு என்னிடம் கேட்ட ஒருகேள்வி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட இல்லாதவரை எவ்வாறு அழைக்கலாம் என்பதாகும். இவற்றிற்கு மத்தியிலும் அமரர் அமிர்தலிங்கத்தை நாம் இந்த வைபவத்திற்கு தெரிவுசெய்வதில் பல காரணங்கள் இருந்தன. முதலில் யாழ்ப்பாண பொதுநூலகத்தை திறந்து வைக்கும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டியதில்லை. அவர் யாழ்ப்பாண மக்களின் அங்கீகாரம் பெற்றவராக இருந்தாலே போதும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என்ற வகையில் அவருக்கு அந்த அங்கீகாரம் உண்டு. இது அரசுக்குச் சொல்லப்பட்டது.

தமிழ் இனத்தின் தன்மான தமிழ் தேசிய உணர்வுகளையும் அபிலாஷைகளையும் தெளிவாகவும் தைரியமாகவும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எடுத்துக்கூறும் தன்னிகரில்லாத் தலைவனாக அமரர் அமிர்தலிங்கம் விளங்கினார். ஜெயவர்த்தனபுரத்தில் புதிய நாடாளுமன்றம் திறந்து வைக்கப்பட்டபோது எதிர்க்கட்சித்தலைவர் என்ற ரீதீயில் அவர் ஆற்றிய உரை அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க உரைகளில் உன்னதமான ஒன்று.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலவைர் பதவி என்பது அமரர் அமிர்தலிங்கத்திற்கு முன்பும் இல்லை பின்பும் கிடைக்கப்போவதே இல்லையென்பது எமது யதார்த்தமான கருத்தாக இருந்தது. எனவே அவ்வாறான வரலாற்று ரீதியாக பதவி வகித்த அமரர் அமிர்தலிங்கத்தின் பெயர் யாழ்ப்பாணத்தில் ஏதாவது ஒரு இடத்திலாவது பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டுமென நான் கருதினேன்.

1977 முதல் 1979 நடுப்பகுதிவரை நான் ஆணையாளராகவும் விசேட ஆணையாளராகவும் இருந்த காலத்தில் பூர்த்தியாக்கப்பட்ட நவீன சந்தை இணர்டாம் கட்ட கட்டடத்தை தெரிவுசெய்யப்பட்ட சபை பதவியிலிருந்தபோது 1979இல் அமரர் அமிர்தலிங்கத்தைக் கொண்டு திறந்துவைப்பிக்க முயன்றேன். ஆனால் அது கைகூடவில்லை.

ஆகவே தான் ஐந்த வருடம் கழித்து மீண்டும் ஒருசந்தர்ப்பம் கிடைத்தபோது முன்னாள் காங்கேசன்துறை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி முதல்வருமாகிய அ. அமிர்தலிங்கம் மூலம் யாழ்ப்பாண பொது நூலகம் திறந்து வைக்கப்பட்டது. அவ்வாறே நினைவுக் கல்லும் எழுதப்பட்டது.

04.06.1984இல் திறந்தவைக்கப்பட்ட பொதுநூலகம் மீண்டும் 10.05.1985இல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானதால் பாவனை கைவிடப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளும் வரலாற்றுப் பதிவுகளிலிருந்து மறைக்கப்பட்டுள்ளமை தெளிவு. கருத்துவேறுபாடுகள் எதுவாயினும் வரலாற்று நிகழ்வுகள் வரலாற்றுப் பதிவுகளே! ஆவை மறைக்கப்படக்கூடாதவை. அதற்குப் பின்னர் இலங்கை அரசு நாம் நினைவுச் சின்னமாகப் பேண எண்ணிய தென்பகுதி கீழ்த் தளத்தையும் சேர்த்து திருத்தி அமைத்தபோது 04.06.1984ஆம் திகதிய நூலக திறப்பு நிகழ்வின் நினைவுக் கல்லை பொருத்தாது விட்டது ஒரு தற்செயல் நிகழ்வா அல்லது திட்டமிட்ட செயலா என்பது தெரியவில்லை.

நான் மீண்டும் ஆணையாளராகக் கடமையாற்றிய 2005 2006 காலப்பகுதியில் இந்த நினைவுக் கல்லை நானே பொருத்துவித்திருக்கலாம். ஆனால் அதில் எனது பெயரும் இடம்பெற்றிருப்பதால் ஒரு தெரிவுசெய்யப்பட்ட சபை மூலம் இதை செய்விப்பதால் அமரர் அமிர்தலிங்கத்தின் தமிழ்த்தேசிய உணர்வுகளின்பால் மக்கள் வைத்திருக்கும் கௌரவத்தையும் மதிப்பையும் மீள உறுதிப்படுத்தலாம் என்பதாலுமே நான் அவ்வாறு செய்யவில்லை.

இப்பொழுது அமரர் அ. அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்த நாளான ஓகஸ்ட் இருபத்தாறாம் திகதி அவரது நினைவாக இந்த வேண்டுகோளை தங்கள் மூலமாக புதிதாக தெரிவுசெய்யப்பட்ட மாநகர சபையிடம் முன் வைத்திருக்கின்றேன்.

இது ஒரு காலத்து தமிழினத் தலைவனுடைய வரலாற்று நிகழ்வு தொடர்பானது என்பதால் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று ஏகமனதாக குறிப்பிட்ட நினைவுக்கல்லை வெற்றிடமாக உள்ள அதே இடத்தில் பொருத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றேன் - என்றுள்ளது.

Tuesday, August 25, 2009

The Tamil Leader Amirthalingham to be remembered - Asian Tribune K.T.Rajasingham

The Tamil veteran leader, late Appapillai Amirthalingham is to be remembered in London, on his 82nd birthday. Late Amirthalingham who first contested unsuccessfully as an Ilankai Tamil Arasu Katchi(Federal Party) candidate at Vaddukoddai in 1952, and he continued to lead the Sri Lankan Tamils since his untimely demise in 1989. He was the General Secretary of the Tamil United Liberation Front and was the Leader opposition from 1977 to 1983 in the Sri Lanka parliament.
The July violence of 1983 and the sixth amendment to the constitution led to the TULF boycotting parliament, thereby rendering their seats vacant.
Amirthalingham, an eloquent orator, but never either practiced or preached violence and terror. He believed steadfastly in ahimsa - nonviolence.
Because of his unwavering non-violence stance, he won the wrath of the terrorists’ leader Velupillai Prabhakaran.
After the Indo-Lanka accord of 1987, the TULF contested elections to parliament again in 1989. Amirthalingham himself contested in the Batticaloa electoral district. He lost. But he managed to enter parliament as the nominated national list MP in what was then considered a controversial move.
In 1989 July, assassins sent by the terrorists’ leader Prabhakaran killed him in his official residence in Colombo.
He along with former TULF Jaffna MP. V. Yogeswaran were gunned down in cold blood. TULF president M. Sivasithamparam was too wounded seriously in the incident.Prabhakaran after assassinating Amirthalingham decreed that no Remembrance Day ceremonies of Amirthalingham should be held in the North and East of Sri Lanka, as well as in any Western capitals by the Tamil diaspora.
This time, the London branch of the TULF has organized a memorial lecture on 31st August, at the Indian YMCA hall, located in London.The keynote address is to be delivered by Rauff Hakeem M.P., who is also the leader of the Sri Lanka Muslim Congress.- Asian Tribune -

Sunday, August 23, 2009

தலைவர். திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுப் பேருரை! Mr. A. Amirthalingam Memorial Lecture!

மறைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னைநாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர். அ. அமிர்தலிங்கம் அவர்களின் 82ஆவது பிறந்த நாள்(26.08.1927) நினைவுப் பேருரை எதிர்வரும் 31.08.2009 திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் இல. 41, Fitzroy square, London W1P 6AQ இல் அமைந்துள்ள Indian YMCA மண்டபத்தில் நடைபெறும். பிரதம பேச்சாளராக பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொள்கின்றார்.

இலங்கைப் பதிவர்களின் சந்திப்புப் பற்றிய தகவல்களை உடனே தாருங்கள்!

இன்று காலையில் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கைப் பதிவர்களின் சந்திப்பு மிக நல்ல முறையில் நடந்ததாகவும் சுமார் 80 பதிவர்கள் கலந்து கொண்டதாகவும் தகவல் - வந்தியத் தேவனுடன் இதுபற்றி தற்போது கதைத்தபின் உடனடியாகப் பதிவிலிடுகிறேன்!பரிமாறப்பட்ட விடயங்கள் கலந்து கொண்ட பதிவர்கள் பற்றிய விபரங்களையும் புகைப்படங்களையும் பதிவிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் எம்போன்ற பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் நிகழ்வுகளை உடன் தெரியப்படுத்துமாறு அன்போடும் - பணிவோடும் வேண்டுகிறேன்!

Friday, August 21, 2009

நல்லூர்த் திருவிழா - 25நாட்களும் ஓடிவிட்டன!

20.08.2009 வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கொடியிறக்கத் திருவிழாப் படங்கள்!










படங்களுக்காக நல்லார்முருகன்.கொம் இணையத்தினருக்கு நன்றிகள்!

Wednesday, August 19, 2009

நல்லூரான் இவ்வருடம் வழமைக்கு மாறாக இரண்டரை மணி நேரத்துக்குமேல் வெளிவீதியில் இருந்து அருள் பாலித்தாராம்!

தேர்த்திருவிழாவின்போது வழமையாக ஒரு மணி நேரம் வெளிவீதியிலிருந்து அருள்பாலிக்கும் செந்தமிழ்க் கடவுளான நல்லூர் முருகப் பெருமான் இவ்வருடம் இரண்டரை மணித்தியாலயங்களுக்கு மேல் வெளிவீதியில் இருந்து அருள்பாலித்தாரென்று சற்று நேரத்துக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது செய்தி அறிந்து பேரானந்தம் அடைந்தேன்.












படங்களுக்காக நல்லூர்முருகன்.கொம் இணையத்தினருக்கு நன்றிகள்!

திருவிழாப் படங்களைப் பார்ப்பதற்கு http://nallurmurugan.com

பிரசித்திபெற்ற யாழ்ப்பாண நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழா இன்று!

நாட்டைவிட்டு வெகு தூரத்தில் இருந்தாலும் நல்லூர் அலங்காரக் கந்தனின் 25 நாள் திருவிழாக் காலத்தை எளிதில் மறக்க முடியாது! மகோற்சவ காலங்களில் நாம் யாழ் மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தொண்டராகவும் பின்னர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத் தொண்டராகவும் பணியாற்றிய காலகட்டங்களை சுலபமாக மறந்தவிட முடியாது! எம்முடல் இன்று இங்கிருந்தாலும் ஆன்மா அங்குதான் சுழன்று கொண்டிருக்கிறது!

இம்முறையும் திருவிழாக் காலங்களில் அடிக்கடி பலருடன் தொடர்பு கொண்டபடி அங்கு நடைபெறும் அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் தெரிந்து ஆன்மீக அனுபூதி கிடைத்தவண்ணமே இருக்கிறது! இன்று நடைபெறும் தேர்த் திருவிழாவை இங்கிருந்தபடியே மனமுருகித் தொழுது எம்மினத்தின் இடர் களைந்து - மக்களின் கௌரவமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த அனைவரும் பிரார்த்திப்போமாக!
இன்றைய நன்னாளில் தேரடிச் செல்லப்பரின் சீடர் சிவயோக சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடலில் குறிப்பிட்ட நல்லூரான் கிருபை வேண்டும் என்ற பாடல்கள் இரண்டையும் பதிவிலிட்டு எம்மக்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்.

நல்லூரான் கிருபை வேண்டும் - 1

நல்லூரான் கிருபை வேண்டும் - வேறென்ன வேண்டும்
நம்மைப் பிரியானென நம்பிட வேண்டும் - (நல்லூரான்)

எல்லாரிடத்தும் அவன் இருப்பதைக் காணவேண்டும்
கொல்லாமை கள்ளாமை கோபத்தை நீக்க வேண்டும் - (நல்லூரான்)

சொல்லும் பொருளுமற்றுச் சும்மா இருக்க வேண்டும்
அல்லும் பகலுமவன் அடியிணையே தொழவேண்டும் - (நல்லூரான்)

உல்லாசமாக உலகிற் றிரிய வேண்டும்
ஓம் சிவாய நமவென ஓதிக் கொள்ள வேண்டும் - (நல்லூரான்)

பல்லோர் புகழ் நல்லூர்ச் செல்லப்பன் பாதத்தை
பக்தியாய்க் கும்பிட்டுப் பாடிட வேண்டும் - (நல்லாரான்)

சொல்லும் யோகசுவாமி தோத்திரப் பாடலை
எல்லோரும் கேட்டு மகிழ்ந்திட வேண்டும் - (நல்லூரான்)


நல்லூரான் கிருபை வேண்டும் - 2

இராகம் - சுருட்டி தாளம் ஆதி

பல்லவி

நல்லூரான் கிருபை வேண்டும் - நாம் எந்நாளும்
பாட வேண்டும் - வேறென்ன வேண்டும் - (நல்லூரான்)

அநுபல்லவி

சொல்லும் பொருளுமற்றுச் சும்மா விருக்கவேண்டும்
தூய குருவின் பாதம் துணையாகக் கொள்ள வேண்டும் - (நல்லூரான்)

சரணங்கள்

அல்லும் பகலுஞ் சிவ நாமத்தைச் சொல்லவேண்டும்
ஆசை மூன்றையும் அடியோடு கொல்லவேண்டும்
கண்டு கண்டு மனங் குளிர்ந்திட வேண்டும்
காமக் குரோத மோகத்தைத் தீர்க்க வேண்டும் - (நல்லூரான்)

பொறிவழி போய் மனம் அலையாமை வேண்டும்
பூரண மான நிட்டையும் வேண்டும்
எல்லா ரிடத்துமன்பு செலுத்த வேண்டும்
எழில்பெறுஞ் சுழுமுனை வழிச்செல்ல வேண்டும். - (நல்லூரான்)

Saturday, August 15, 2009

இன்றைய வீரகேசரியின் இந்திய சுதந்திர தின சிறப்பிதழ் பக்கங்கள் - செய்தி - விளம்பரங்கள் சில!





வீரகேசரிக்கு எமது நன்றிகள்!

இந்திய சுதந்திர தினம் இன்று! எம் தாய் நாட்டின் சுதந்திரதினம் எமக்கும் ஒரு மகிழ்வைத் தருகிறது!

ஈழத்தவனாயிருந்தாலும் எம் தாய் நாட்டின் சுதந்திரதினம் என்ற செய்தியைக் கேட்கும் போது எமக்கும் ஒரு ஆனந்தமான உணர்வு ஏற்படுகிறது! முன்னைய காலங்களில் சுதந்திரப் போராட்டக் கதைகளையும் - வரலாறுகளையும் படிக்கும்போது முன்னைய தலைவர்களின் அப்பழுக்கற்ற தூய்மையான சமூகப் பணியை மிக எளிதாக அறிய முடிகிறது! இன்றைய சுதந்திரத் திருநாளில் என் பங்குக்கு சில புகைப்படங்களை தேடி எடுத்து தொகுத்து பதிவிலிட்டிருக்கிறேன். குறையிருந்தால் மன்னிக்கவும். வாழ்க பாரதம்!