அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 8, 2012

நல்லூர் முருகனின் 15ஆம் நாள் திருவிழாவில் பிறந்த பிறப்பின் பயனைப் பெற்றேன்!

நேற்று 07.08.2012 செவ்வாய்க் கிழமை நல்லைக் கந்தனுடைய 15ஆம் நாள் திருவிழா. மாலைத் திருவிழாவில் வேற்பெருமானும் தேவியர் இருவரும் அடியார்களின் திருமுறைப் பாராயணத்துடன் உள்வீதியில் எழுந்தருளியபோது அடியேனுக்கும் அதில் பங்குபெறும் பாக்கியம் கிடைத்தது!
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து முன்னம் நீ புரி நல்வினைப் பயனி......என்ற சம்பந்தரின் தேவாரப் பாடலுக்கு ஒப்ப வாழ்க்கையிலே என்றும் கிடைக்கப்பெறாத அந்த அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. நல்லூர்க் கந்தனுடைய திருவருளினையும் அத்தலத்தின் பெருமையையும் நாம் தொடர்ந்தும் அனுபவித்தும் கட்டிக்காத்தும் வருவோமாக!
நன்றி - நல்லூரான்.கொம்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வுக்கு நன்றி ஐயா...