அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 3, 2011

மிகத் துரிதமாகப் புனரமைக்கப்பட்ட சங்கிலி மன்னனின் உருவச்சிலை இன்று திறந்துவைக்கப்பட்டது!

யாழ் மாநகர சபையால் மிகத் துரிதமாகப் புனரமைக்கப்பட்ட சங்கிலி மன்னனின் உருவச்சிலை இன்று 03.08.2011 புதன்கிழமை காலை 7.15மணியளவில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது!
மங்கள வாத்திய சகிதம் அழைத்துவரப்பட்ட விருந்தினர்கள் மங்கல விளக்கேற்றி வைபவத்தை ஆரம்பித்து வைத்தனர்.யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி வரவேற்பு நடனத்தையும் வழங்கினர். உருவச் சிலையைத் திரைநீக்கம் செய்து மலர்மாலை சாற்றிய கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பின்னர் சிலையின் கீழிருந்த நினைவுப் பெயர் நடுகல்லையும் திறந்து வைத்தார்.
நிகழ்வுக்குத் தலைமைதாங்கிய மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்களின் உரையைத் தொடர்ந்து உயிரோவியமாக குறுகிய காலத்தில் உருவச்சிலையை மிகவும் அற்புதமாக வடித்த கலைஞர்கள் கௌரவிக்கப் பட்டனர். திரு.கலிகைப் பெருமாள் புருசோத்தமன்(ஸ்தபதி), திரு.கே.முரளிதரன்(சிற்பி), திரு.டி.கஜேந்திரன்(சிற்பி), திரு.ஜீ.முத்துக்கிருஸ்ணன்(சிற்பி), திரு.கே.கோபி(சிற்பி), திரு.பாஸ்கரன் ஆச்சாரியார் (ஸ்தபதி), திரு. பா.கஜேந்திரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் நினைவுரையாற்றினார்.

பிரதம விருந்தினர் உரையில் அமைச்சர் - இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான நாளாகும். யாழ்ப்பாணத்தில் சங்கிலிய மன்னனின் உயிரோவியச் சிலை மட்டுமன்றி மந்திரிமனை, நுழைவாயில், ஜமுனாரி தேக்கம் என்பனவும் தமிழர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் விரைவில் புனரமைக்கப்படுமெனவும், தலைவர்கள் சமயப் பெரியார்கள் சமூகத்தின் முன்னோடிகள் ஆகியோரின் சிலைகளும் யாழ்.மாநகர எல்லைக்குற்பட்ட பகுதிகளில் நிறுவப்படுமெனவும் மந்திரி மனையில் கலைக்கூடமொன்றை நிறுவி அதனூடாக கலை நுணுக்கங்களை வெளிக்கொணரும் கலைச்சேவை செய்யப்படவுள்ளதுடன் பண்பாடுகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் சமயத் தலைவர்களுட்பட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ் பல்கலைக்கழகத் துணை வேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம், ஈபிடிபியின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ முருகேசு சந்திரகுமார், கௌரவ. சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), மாநகரசபை ஆணையாளர் திரு.மு.செ.சரவணபவ ஆகியோருட்பட மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், யாழ். செயலக அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முக்கிய குறிப்பு -

wait - not finish

No comments: