அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, February 28, 2010

1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு!

தமிழ்க்கட்சிகள் இவ்வளவு சோதனைகள் - வேதனைகள் - இழப்புக்கள் - அழிவுகள் - என்பவற்றுக்குப் பின்னும் திரும்பத்திரும்ப சிங்களக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதையும் தமக்குள் தனித்தனியாகப் பிரிந்தும் போட்டியிடுவதைப் பார்த்தால் தலையைக் கொண்டுபோய் எங்காவது சுவரில் மோதவேண்டும் போல இருக்கிறது.

கடந்தகால தேர்தல் முடிவுகளைப் பார்ப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது.

1977இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்

ஐக்கிய தேசியக்கட்சி 31,79,221 – 140 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி 4,21,488 – 18 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 18,55,331 – 8 ஆசனங்கள்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 62,707 – 1 ஆசனம்
லங்கா சமசமாஜக் கட்சி 2,25,317
கம்யூனிஸ்ட் கட்சி 1,23,856
மகாஜன எக்சத் பெரமுன 22,639
சுயேட்சைகள் 3,53,014 – 1 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய பெரும்பான்மை பலத்தைக் கொண்டு நாட்டின் 1972இல் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் தலைமையில் இருந்த கூட்டணியரசின் அரசிலமைப்பை மாற்றி விபுதியதொரு அரசியல் சாசனத்தை உருவாக்கி அதன்மூலம் – ஜனாதிபதி ஆட்சிமுறையை ஏற்படுத்தியது. பிரதமராயிருந்த ஜே.ஆர் ஜனாதிபதியாகவும் ரணசிங்க பிரேமதாச பிரமராகவும் தெரிவாகினர். மேலும் பாராளுமன்றத்தின் காலத்தை 6 ஆண்டுகளுக்கு மேலதிகமாகத் தொடர்ந்தும் தக்கவைக்க இந்த அரசு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை 22.12.1982இல் நடத்தியது.

அதில் அரசின் கொள்கைக்கு
சார்பாக 31,41,223 வாக்குகளும்
எதிராக 26,05,983 வாக்குகளும் கிடைத்தன.

ஜனநாயகத்திற்கு முரணாக மக்கள் பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களித்தது 6 ஆண்டுகளுக்கு மட்டுமே என மேலதிகமான 6 ஆண்டுகளை ஏற்காது தமிழர் விடுதலைக் கூட்டணியின் 16 உறுப்பினர்கள் தமது பதவிகளைத் துறந்தார்கள். இவர்களில் இருவர் தேர்தல் முடிந்த சில காலத்திலேயே ஆளும் கட்சியுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தனர். கூட்டணி இல்லாத நிலையில் அடுத்த 6 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்றது. அன்றைய நாளில் ஐ.தே.கட்சியினால் சுதந்திரக்கட்சித் தலைவி திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்காவின் பாராளுமன்ற உறுப்பினர் உரிமையையும் குடியுரிமையையும் பறிக்கப்பட்டதை நினைவுபடுத்த வேண்டும். அவரது மகன் அனுர பண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவரானார்.

20.10..1982இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. வெற்றிபெற்று ஜனாதிபதியானார் - ஜே.ஆர்.

ஜே.ஆர் ஜெயவர்த்தனா 34,50,811
ஹெக்டர் கொப்பேகடுவ 25,48,438
றோகண விஜேவீர 2,73,428
குமார் பொன்னம்பலம் 1,73,934
கொல்வின் ஆர்.டி.சில்வா 58,531
வாசுதேவ நாணயக்கார 17,005

19.12.1988இல் 2ஆவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற ஆர். பிரேமதாசா ஜனாதிபதியானார்.

ரணசிங்க பிரேமதாசா 25,69,199
சிறிமாவோ பண்டாரநாயக்கா 22,89,960
ஓஸி அபயகுணசேகர 2,35,719

1989 இல் நடைபெற்ற பாராறுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. ஐக்கிய சோசலிச முன்னணி என்ற கூட்டில் ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி -லங்கா சம சமாஜக் கட்சி – நவ சமசமாஜக் கட்சி - ஸ்ரீ லங்கா மகாஜன பக்சய என்பன இணைந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசு10ரியன் சின்னத்தில் ஈ.என்.டி.எல்.எப் - ஈ.பி.ஆர்.எல்.எப் - டெலோ – ரி.யூ.எல்.எப். டின்பன இணைந்தும் போட்டியிட்டன. ஈரோஸ் அமைப்பு சுயேட்சையாக போட்டியிட்டது.

ஐக்கிய தேசியக்கட்சி 28,37,961 – 125 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 17,80,599 – 67 ஆசனங்கள்
ஈரோஸ் அமைப்பின் சுயேட்சை 2,29,877 – 13 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி 1,88,593 - 10 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2,02,014 - 4 ஆசனங்கள்
ஐக்கிய சோசலிச முன்னணி 1,60,271 – 3 ஆசனங்கள்
மகாஜன எக்சத் பெரமுன 95,793 – 3 ஆசனங்கள்
சுயேட்சைகள் 1,01,210

(தொடரும்)

1 comment:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல தகவல்கள்

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்