அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, March 28, 2009

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வேண்டுகோள்!


இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்களுக்கு இந்து மாமன்றம் உதவிசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே!

என்ற திருமூலரின் திருவாக்கிற்கு அமைய தர்ம உள்ளம் கொண்ட அனைவரையும் இக் கைங்கரியத்தில் இணையுமாறு கிருத்தியத்தின் சார்பாக அன்புடனும் தயவுடனும் வேண்டுகிறோம். இக்கடிதத்தின் பிரதியை அனுப்பிவைத்த கொழும்பு ஸ்வாமிக்கு எமது நன்றிகள்!!!

No comments: