அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, March 28, 2009

மூளாய் அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்

இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும், புராண இதிகாசங்கள் பெருமையுடன் எடுத்தியம்பிய, இலங்காபுரி என்னும் அழகுறு தீவின் தலையென விளங்கும் வட திசையாம் யாழ்ப்பாணம் என்னும் அழகுறு நகரில் நீர்வளமும் நிலவளமும் மட்டுமல்ல கலைவளமும் கல்விக்கூடங்களும் கற்றவர் பலரையும் கல்வியில் சிறந்த கனதனவான்களையும் கொண்ட கிராமமாக விளங்கும் “மூளாய்” என்னும் பதியினிலே வதிரன்புலோ என்னும் திவ்விய ஷேத்திரத்தில் அழகு பொழியும் திருவீதிகளுடன் அண்ணனும் தம்பியும் வாழ்ந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் என எடுத்துக்காட்டாக தம்பிக்கு துணையாக அண்ணனும் அண்ணனுக்குத் துனையாக தம்பியுமாக ஓரே வீதியில் வானளாவ உயர்ந்து நிற்கும் இராஜகோபுரத்துடன் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயமும் அருகில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலயமும், இந்தஇரு ஆலயங்களுக்கும் பொதுவான சித்திரத் தேரும் அமையப் பெற்றமை சிறப்புக்குரியதாகும். இப்பதியில் வீற்றிருந்து திருவருள் பாலித்து வரும் எம்பிரான் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 30.03.2009 திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும்.

03.04.2009 வெள்ளிக்கிழமை மாலை சப்பறத் திருவிழா

07.04.2009 செவ்வாய்க்கிழமை காலை தேர்த் திருவிழா

08.04.2009 புதன்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிக்கமும்

09.04.2009 வியாழக்கிழமை மாலை பூங்காவனத் திருவிழா

இவ்வேளையில் நாட்டில் சாந்தியும் சமாதானமும் கிடைக்க எல்லாம்வல்ல முருகப் பெருமானைப் பிரார்த்திப்போமாக.

“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

செய்தியை அனுப்பிய கா. பார்த்தீபன் அவர்களுக்கு எமது நன்றிகள்.

No comments: