அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, April 16, 2014

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 11)

நீண்ட இடைவெளிக்குப் பின் இத்தொடரை எதிர்வரும் 01.06.2014ஆந் திகதி 33வருடங்கள் நிறைவடைய முன் எழுதவேண்டியிருப்பதால் கிடைத்த தகவல்களைப் பதிவிட விரும்புகிறேன்.

1959.10.11இல் அன்றைய மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டபொழுது நூல்நிலைய வாசலில் இருந்த யாழ் நங்கையின் சிலை - எதற்காக, யாரால், எப்போது சரஸ்வதி சிலையாக மாற்றம் பெற்றது என்பது எனது தற்போதைய புதிய கேள்வி! ஏனெனில் யாழ் நங்கையின் சிலையை ஏன் அமரர் துரையப்பாவின் குடும்பத்தினர் நினைவு படுத்தி வருகின்றனர் என்ற கேள்வியும் எழுகிறது.
பண்ணைச் சந்தியில் அதை சிறிது காலத்தின் முன்
நிறுவியுமுள்ளனர்! அத்துடன் சுப்பிரமணியம் பூங்காவில் இந்தச் சிலை தண்ணீர்த் தொட்டிக்குள் இருப்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்! மாநகர சபைக் கட்டிடம் இருந்த இடத்தைப் பார்க்கத்தக்கதாக இந்தச் சிலை கண்டி வீதியை நோக்கி இருக்கிறது.

நூல் நிலையம் தற்போது நான் சேகரித்த தகவல்களின்படி 4 தடவைகள் சேதமாக்கப்பட்டுள்ளது.

1. 1981 ஜுன் 1ஆந்திகதி - இது எல்லோருக்கும் தெரிந்த விடயம்!

2. 1985.05.10 அரச படையினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது என 2010.ஜுலையில் திரு. சி.வீ.கே. சிவஞானத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இச்செய்தி எனது கிருத்தியத்தில் 6.7.2010 திகதியில் "நினைவுக்கல்லில் குறிப்பிடப்பட்ட திகதியில் யாழ்.பொது நூலகம் திறக்கப்படவில்லை முன்னாள் ஆணையாளர் தெரிவிக்கிறார் - உதயன் செய்தி" என்று பதியப்பட்டுள்ளது.

3.24.08.1986இல் கோட்டையிலிருந்து ஏவப்பட்ட ஷெல் தாக்குதல்களினால் நூலகக்கட்டிடத்தில் பாரிய சேதம் ஏற்பட்டதை அடுத்த நாள் (25.08.1986) ஈழமுரசு "யாழ் நூலகமும் சேதம் -நகரம் நேற்றிரவு முழுவதும் இருளில்" என்று செய்தி வெளியிட்டது.


4. 15.05.1987இல் எரிக்கப்பட்டது இதனை - யாழ் பொது நூலகம் எரிந்தது - என்று 17.05.1987 வார முரசொலி பத்திரிகை செய்தி வெளியிட்டது.


No comments: