அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, April 18, 2014

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 13)


எனது அறிக்கைகளும் கடிதங்களும்!

13.02.2003 - பத்தரிகைகளுக்கு அனுப்பியது (எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை!)

தமிழ் மக்கள் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் சரி இலங்கை முழுவதும் சரி உலகத்தின் எப்பாகத்திலும் சரி யாழ்ப்பாணப் பொதுசன நூல்நிலையம் எரிக்கப்பட்டதை மறந்திருக்க மாட்டார்கள். அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களின் பின்னணியில் காவல் புரிகின்ற பொலிசாரினால் 01.06.1981ல் அந்தக் கோரமான சம்பவம் நடைபெற்றது. ஆனால் அழிக்கப்பட்ட அந்த நூல் நிலையம் பொதுமக்கள் குறிப்பாக யாழ்ப்பாண அறிவு வளர்க்கும் பெருநோக்குடையவர்களுக்காக மீள நிர்மாணம் செய்யப்பட்டு நூலகத்தின் பிற்பகுதி கோலாகலமாக அன்றைய விசேட ஆணையாளர் தலைமையில் 3 வருடங்கள் 3 நாட்களின் பின் 4.6.1984ல் திறந்துவைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் வாசிகசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நூல்நிலையம் பாரிய வளர்ச்சி கண்டிருந்தது. நகர முதல்வராக இருந்த சாம். சபாபதி அவர்களினால் இருமாடிக்கட்டிடம் அமைக்கப்பட வண.பிதா.லோங் அடிகளின் ஆசீர்வாதத்துடன் அத்திவாரமிடப்பட்ட இந்நூலகம் பூர்த்தியாக்கப்படாத நிலையிலே மக்கள் தேவையறிந்து 1959ம் ஆண்டு பிற்பகுதியில் அன்றைய முதல்வர் அல்பிரட் துரையப்பா அவர்களால் குடிபுகப்பெற்று நூலகம் படிப்படியாக பூரணப்படுத்தப் பட்டது. இது வரலாறு.

ஆழ்ந்து நோக்கும் அறிவுத்திறன் கொண்டவர்கள் இன்று எமது சமூகத்தில் இல்லை என்று விமர்சிக்கும் அளவுக்கு 14.02.2003 நாளை நடைபெறவிருந்த நூலகத் திறப்பு விழா திட்டமிட்டு மக்களின் பெயரால் ஒரு சில அமைப்புக்களினால் நிறுத்தப்பட்டள்ளது. இது வரலாற்றில் ஒரு கறைபடிந்த நிகழ்வாக அமையும். யாழ்ப்பாணத்தமிழன் ஒரு காலத்தில் எவரையும் மிஞ்சி நிற்கும் அளவிற்கு அறிவில் உயர்ந்திருந்தான். ஆனால் கடந்த சில ஆண்டுகள் எமது கல்வியின் தரம் எப்படியிருந்தது என்பது சான்றோருக்குத்தான் தெரியும். நூல் நிலையத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒருபோதும் அது திறக்கப்படுவதை எதிர்க்கமாட்டார்கள். படிக்காத பண்பாடு தெரியாத அறிவில்லாத கூட்டம் ஒன்று இதைச் செய்தது. நூல் நிலையத்தை திறக்கக் கூடாது என்பதில் கங்கணம் கட்டிய வரலாறு என்றும் எமது வாழ்வில் மாறாத வடுவாகவே அமையும்.

தமிழாராய்ச்சி மாநாடு போன்ற சம்பவம் நிகழும் என்றும் ஹர்த்தால் பூரண மறியல் போராட்டம் என்றெல்லாம் எழுதிய குடாநாட்டுத் தமிழ்ப் பத்திரிகைகள் - பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடித்திருந்தால் இந்நிகழ்வை மாற்றியமைத்திருக்க முடியும். ஏம்மால் மாநகர சபை உறுப்பினர்களால் கூறப்பட்ட உண்மையான ஆதாரமான கருத்துக்களை சொற்பிழை தவறாது வரிக்குவரி எழுதியிருந்தால் நிலைமை வேறாயிருக்கும்.

பாதுகாக்கப்பட வேண்டிய நல்லூர் சங்கிலியன் தோப்பு மந்திரிமனை யமுனாரியைப் பற்றிப் பல கருத்தக்கள் முன்வைக்கப்பட்டபோதும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரின் நிதி ஒதுக்கீட்டில் இன்று மந்திரிமனை மாத்திரம் மீள பாதுகாக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன.

தாவீது அடிகளின் உருவப்படம் வைக்கப்பட வேண்டும் எரிந்த நிலையில் இருந்த பழைய நூலகத்தின் மாதிரியை நினைவாக வைக்க வேண்டும் என்று பல தீர்மானங்கள் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்த பின்னர் எம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை அங்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பத்திரிகைகளுக்கு தகவல் கொடுப்பவர்கள் முதலில் தமது கருத்துக்களை நூலகருக்கோ அல்லது ஆணையாளருக்கோ அல்லத முதல்வர் மற்றும் உறுப்பினர்களுக்கோ தெரிவித்திருக்கலாம். மேலும் பல மாதங்களுக்கு முன்பாகவே செய்தித் தாள்களில் வெளிவந்த நூலகத் திறப்பு விழா சம்பந்தமான செய்திகளுக்கு இன்று நேரில் வந்த அனைவரும் முன்னரே வந்திருந்தால் இவ்வளவு விரிசல்களையும் நீக்கி இருக்கலாம். காலம் கடந்த விட்டது. கடவுள் விட்ட வழி. இந்தக் காரணங்களில் நாம் கர்த்தர்களாகக் கூடாது என்பதற்காக எமது மாநகரசபை உறுப்பினர்கள் என்ற மக்கள் அளித்த பதவிகளிலிருந்து விலகிக் கொள்கின்றோம்.

நீதி நிலைக்கட்டும்.

தங்க. முகுந்தன். -------------------------

யாழ் பொது நூலக வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

யாழ் பொது நூல் நிலையம் சம்பந்தமாக வெளிவந்த பத்திரிகை அறிக்கைகள் மற்றும் செய்திகள் கையளிக்கப்பட்ட அல்லது வெளியிட்ட கோரிக்கைகள் பற்றி மாநகர சபை முதல்வரும் உறுப்பினர்களும் பத்திரிகைகளுக்கு கொடுத்த விளக்கங்கள் அறிக்கைகள் முழுமையாக அல்லது பகுதியாக யாழ்ப்பாணப் பத்திரிகைகளிலும் சரி கொழும்பிலும் சரி வெளிவரவில்லை என்பது ஒருபுறமிருக்க குறிப்பிட்ட ஒருசிலரது அறிக்கைகளும் கருத்துக்களும் தொடர்ந்தும் வெளிவந்து தமது நிலையை நியாயப்படுத்திக் கொண்டு இருப்பதுதான் வேதனையை அளிக்கின்றது. இன்று 22.02.2003 உதயனில் 9ம் பக்கத்தில் மாவட்டக் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அறிக்கை படித்த தமிழரையெல்லாம் முட்டாள்களாக்கச் செய்வதுபோலத் தெரிகிறது. இந்தச் செய்திகள் உண்மைச் சம்பவங்கள் பலவற்றை மறைக்கவும் மறக்கவும் ஏதுவாக அமைகிறது. எமது நியாயமான கருத்துக்கள் குறைந்தது நூலகத்தைப் பயன்படுத்தும் வாசகர்களுக்காவது தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக இதனை எழுதவேண்டியவனாக இருக்கின்றேன். நூலகத்தைப் பயன்படுத்தம் வாசகர்களாகிய நீங்கள் உங்கள் சுயமான கருத்தக்களை எனக்கோ அல்லது பிரதான நூலகருக்கோ அல்லது நூலக ஆலோசனைக் குழுவினருக்கோ தெரியப்படுத்தி இந்நூலகம் எவ்வளவு விரைவாகத் திறக்கப் படமுடியுமோ அவ்வளவு விரைவாகத் திறந்த வைக்கப்பட அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். மேலும் இதனை உபயோகப் படுத்துபவர்கள் நல்ல பலனை அடைய வேண்டும் என்பதே எனது உண்மையான ஆதங்கமும் தயவான வேண்டுகோளுமாகும்.

பூரணப் படுத்தப்படாத நிலையில் நூலகம் திறந்து வைக்கப்படுவதால் நூலகத்தின் எதிர்கால பணிகள் கேள்விக்குரியதாகிவிடும் என நினைப்பதே தவறாகும். நூலகம் திறக்கப்படுவது சம்பந்தமாக உதயன் பத்திரிகையில் கடந்த 10.11.2002ன் 12 ஆம் பக்கத்தில் யாழ் பொது நூலகம் எப்போது திறக்கப்படும் எனவும் 16.11.2002ன் 9ம் பக்கத்தில் யாழ் பொது நூலகம் ஜனவரியில் திறப்பு – அமைச்சர் ஜயலத் அறிவிப்பு எனவும் 06.12.2002ன் IIIம் பக்கத்தில் அடுத்த வருடம் ஜனவரியில் யாழ் நூலகம் திறக்கப்படும் அமைச்சர் ஜயலத் கூறுகிறார் என்றும் உள்ளது. இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள் முன்னரே தமது கருத்தக்களைத் தெரிவித்திருக்கலாம். ஏற்பாடுகள் செய்யப்பட்டு அழைப்பிதழ்கள் அச்சிட்டு திறக்கப்படவிருப்பதற்கு முதல்நாள் வந்து பொதுமக்களின் பெயரால் ஒவ்வொரு அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்ததுதான் விந்தையாயிருக்கிறது. 1974ல் நடந்தது போன்ற இரத்தக்களரி ஒன்று ஏற்படக் கூடாது – கல்விக்குப் பெயர்போன யாழ்ப்பாணத்தில் அப்படிப்பட்ட ஓர் சம்பவம் இடம்பெற்றதாக இருக்கக் கூடாது என்பதற்காகவே நாம் நிகழ்வை இரத்தச் செய்ததுடன் எங்கள் பதவிகளிலிருந்தும் ஒட்டுமொத்தமாக விலகிக்கொண்டோம்.

வாசிக்கும் பழக்கமுடையவர்களுக்குத்தான் நூலகம் தேவை. அதை விடுத்து வீணே கூக்குரலிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தம் மனிதருக்கு கடந்த தினமுரசு 500வது இதழில் காதில பூ கந்தசாமி சொன்னதுபோல "கன்ரீனில போய்க் குந்தியிருந்து அரட்டையடிக்கிறதுதான் உடனடி முக்கியமெண்டு நிக்குதுகள்."

ஆரம்பத்தில் 1959ம் ஆண்டளவில் நூலகத்தில் இடநெருக்கடி காரணமாக மாடியீறாகக் கட்டிமுடிக்கப்படாத நிலையிலேயே அன்றைய மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா குடிபுகும் வைபவத்தை நடாத்தினார். அதன் பின்னர் நூலகம் படிப்படியாகவே பூரணப்படுத்தப் பட்டது. இது இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தெரியாது.உலகப் புகழ் பெற்ற ஒப்பற்ற எமது உயிர்போன்ற நூலகம் ஆனி 1ம் திகதி இரவு பொலிசாரால் தீயிடப்பட்டது. ஏறத்தாள 97,000 பெறுமதிமிக்க நூல்கள் முற்றாக எரிந்து சாம்பலானது.

வணக்கத்திற்குரிய தாவீது அடிகள் சுவாமி ஞானப்பிரகாசரின் மாணவர் ஒப்பியல் ஆய்வாளர் பொது நூலகம் எரிகிறது என்ற தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்து மாரடைப்பால் உயிர் துறந்தார். புத்தகங்களின் பெறுமதி அவருக்குத் தெரியும் என பாராளுமன்றத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம் தெரிவித்தார். 04.06.1984ல் மீளளிக்கப்பெற்ற கட்டிடித்தை அவர் திறந்து வைக்கும் போதும் பகுதி பகுதியாகவே நூலகம் இருந்தது. அப்போது விசேட ஆணையாளராக இருந்த திரு. சி.வி.கே. சிவஞானம் அவர்கள் அன்று வெளியிட்ட மலரில் இந்த அழிவைக் கண்டு அசந்து விடாமல் அதையே ஆக்கமாக மாற்றி இந்நூலகத்தை மீளமைக்கவும் மூன்றாம் கட்டமாக மேற்குப்புறமாக இப்பொழுது திறந்து வைக்கப்படும் கட்டடத்தை அமைக்கவும்…… கீழ்த்தளத்தில் வாசிகசாலைப்பகுதி சிறுவர்பகுதி உடனுதவும்பகுதி ஆகியன இடைக்கால ஒழுங்காக 10.12.1982ம் திகதியிலும் 14.07.1983ல் இரவல் கொடுக்கும் பகுதியும் திறந்துவைக்கப்பட்டன….. இப்போது புதிய கட்டடமும் சிறுவர்பகுதியும் திறந்துவைக்கப்படுகின்றன. … இம்முயற்சியில் முக்கிய பங்கு கொண்டவன் என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைவது போல…. இந்நூல் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் உரிமையும் இந்த மாநகராட்சி மன்றத்திற்கு உரித்தாகியது பெருமைக்குரியது … என்கிறார். ஆனால் கடந்த 13.02.2003 உதயனில் ஒரு தடவையல்ல இருமுறைகள் யாழ்நூலகம் அழிக்கப்பட்டது என்ற தகவலைத் தெரிவித்து திறப்பு விழாவை ரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரினார்.

16.11.2002 உதயன் 5ம் பக்கத்தில் ஜீ.ஜீ யின் சிலையை நூலகத்தில் நிறுவ அனுமதி கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஆ. விநாயகமூர்த்தி அவர்கள் அதற்கு புலிகளின் ஆலோசனையைப் பெற்றாரா? 13.02.2003 உதயன் 2ம் பக்கத்தில் பத்திரிகை வாயிலாக திறப்புவிழா பற்றி அறிந்ததாக பொய் சொல்கின்றார். அதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் அவரால் எழுதப்பட்ட மேற்குறிப்பிட்ட கடிதம் ஆவணமாக இருக்கின்றது. நூலகம் திறக்கப்படவிருப்பதால்தானே அமரர் ஜீ.ஜீ யின் சிலை வைப்பதுபற்றி எழுதியிருப்பார். யாரை முட்டாள் என நினைக்கின்றாரோ தெரியவில்லை.

தந்தை செல்வா அறங்காவல் குழு மாநகராட்சி மன்றத்திற்குச் சொந்தமான இடத்தில் அதுவும் பொதுநூலகத்திற்கும் சமாதிக்குமிடையில் முன்னர் விளையாட்டு கிளப்பாக இருந்த இடத்தின் பிற்பகுதி தமக்கரியதெனவும் அதில் தந்தை செல்வா நினைவாக ஓர் நூலகத்தை அமைக்க அந்த இடத்தைத் தமக்கத் தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்ததைத் தொடர்ந்து நாம் கூட்டணி உறுப்பினர்கள் இதுபற்றி மாநகர சபைக் கூட்டத்தில் கூறிய கருத்துக்கள் குடாநாட்டுப் பத்திரிகைகளில் வெளிவராததும் கவலைக்குரியதே. அன்றைய கூட்டத்தில் நான் பொதுநூல் நிலையத்துக்கு அருகில் தனது பெயரில் நூலகம் அமைவதை பெரியவரின் ஆத்மாகூட ஏற்றுக்கொள்ளாது எனவும் அத்துடன் அவரது ஆவணங்களையும் அவர் சம்பந்தப்பட்ட சகல விடயங்களையும் தனியாக பொது நூலகத்தில் தந்தை செல்வாவின் பெயரில் ஒரு தனியான பகுதியாக ஏற்படுத்தவதற்கு சபை சகலவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் தெரிவித்தேன். மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றம் சென்றால் மாநகரசபையால் வழங்கப்பட்ட சமாதி அமைந்திருக்கும் பகுதியை மாநகர சபையே பொறுப்பெடுத்தச் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் கூறினேன்.

பத்திரிகைகள் தமது பத்திரிகை தர்மத்தை சரியாகக் கைக்கொள்ளவில்லை என்றும் நீதியாக நடக்கவில்லை என்றும் பகிரங்கமாகவே தெரிவிக்கின்றேன். இதைப்பற்றி கடந்த 13.02.2003ல் மாநகரசபையில் குடாநாட்டுப் பத்திரிகைகளின் நிருபர்களுடனும் கடந்த 16.02.2003ல் யாழ் தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் பீடத்தினருடனும் வாதப்பட்டதை யாரும் அறிய மாட்டார்கள். பத்திரிகைகள் நாம் கொடுத்த சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் 8 முக்கிய குறிப்புக்களுக்கான விளக்கங்களை பிரசுரித்திரித்திருக்கலாம். பத்திரிகையாளர் மாநாட்டில் நான் கூறியதுபோல யாராவது நூலகத்தை திறக்காமல் செய்வதற்கு ஏதேனும் விபரீதங்களை ஏற்படுத்துவார்கள் என எச்சரித்திருந்தேன். அதேபோல 12ஆந் திகதி நள்ளிரவு நூலகத் திறப்புக்கள் அபகரிக்கப்பட்டன. நடந்தது என்ன? 1981ல் நூலகத்தை தீக்கிரையாக்கிய இலங்கைப் பொலிசார் யாழ்ப்பாணத் தமிழர்களில் ஒருசிலரிடமிருந்து நூலகத்தைப் பாதுகாக்க காவலிருந்ததுதான். இவர்களுடன் இராணுவமும் இணைந்ததும் குறிப்பிடத் தக்கது. இதனை யாரிடம் கூறுவது?

14.02.2003 வீரகேசரி முற்பக்கத் தலைப்புச் செய்தியில் என்னையும் முதல்வரையும் விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் இளம்பரிதியையும் தொடர்புபடுத்தி பூட்டிய அறைக்குள் சில நிமிட நேரம் உரையாடினர் என்று செய்தி வெளியிட்டது. தொடர்ந்து முதல்வர் கூறியதாக த ஐலன்ட் பத்திரிகையும்(17.02.2003) தினமுரசும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

நூலகத்தின் மேல் எனக்கு தீராத பற்று இருக்கிறது. மாநகரசபை உறுப்பினர்களில் எத்தனைபேருக்கு வாசிக்கும் பழக்கம் இருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு சிறுவயதிலிருந்தே அந்தப் பழக்கம் இருப்பதுடன் எரிக்கப்பட்ட பெரிய நூல்நிலையத்தில் 1981க்கு முன்னரே அம்புலிமாமா நட்சத்திரமாமா போன்ற புத்தகங்களை வாசித்தவன் என்ற வகையிலும் நூலகத்தின் அருகிலிருந்த சுப்பிரமணியம் பூங்காவில் விளையாடியவன் என்ற ரீதியிலும் எனக்கு இவை மீண்டும் இருந்ததுபோல உடனேயே கட்டப்பட வேண்டும் என்ற ஆதங்கம் உண்டு. இதை நான் எமது மாநகரசபை பொன் விழா மலரின் வாழ்த்துச் செய்தியில் - மீண்டும் யாழ் நகர் தனது பழைய பொலிவைப் பெற்றால் அந்த மன நிறைவை நீண்ட நாட்கனவை அடையும் ஒருவனாக நானும் இருப்பேன். கனவு நனவாவது காலத்தின் கடமை. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற மூலரின் மந்திரத்தை தெய்வம்தான் நிலைநிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்துவது பொருந்தம் என நினைக்கின்றேன்.

நூலக வாசகர்கள் முடிந்தால்

யாழ்ப்பாண பொதுநூலகம் மீளளிக்கப்பெற்ற கட்டடத் திறப்பு விழா மலர், யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு, மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது என்ற புத்தகங்களை வாசித்தால் எமது நூல் நிலையத்தின் முன்னைய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்.

இன்று நூலகக் கட்டடத்தைப் பார்க்கும் எந்த ஒரு பாமரனும் கட்டி முடிக்கப்படாத கட்டடம் என்று சொல்ல மாட்டான். அப்படிச் சொன்னால் அது முட்டாள்தனமானதாகும். அப்படியானால் பிரான்ஸ் நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நூலகத்துக்கு வழங்கிய ஒரு தொகுதி நால்களை தற்பொழுது யாழ் கச்சேரிக்கு முன்னர் இயங்கும் பொது நூலகத்தில் அல்லது நல்லூரிலுள்ள மாநகர சபை அலுவலகத்தில் வைத்தே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் புதிய கட்டடத்திலேயே வழங்கினார். பத்திரிகைகளும் இதைப் படம்பிடித்து செய்திகள் வெளியிட்டிருந்தன. அதே பத்திரிகைகள் கட்டடத்தின் உட்பகுதியை அழகாகப் படம் எடுத்துப் பிரசுரித்திருக்கலாம். பத்திரிகைகள் இந்த விடயத்தில் நீதியாக – நடுநிலையாகச் செயற்பட்டிருந்தால் மறுப்பறிக்கைகள் வருவது நின்றிருக்கும். அத்துடன் நூலகத்தையும் திறந்து வைத்திருக்கலாம். ஆனால் எல்லாம் தலைகீழாக நடந்து முடிந்துவிட்டது. வரலாற்றில் கறைபடிந்த ஒரு நிகழ்வாக பொது நூல்நிலையத் திறப்புவிழா அமைந்து விட்டது. கல்வியறிவற்ற – பண்பாடு தெரியாத ஒரு கூட்டத்தின் கங்கணம் கட்டிய வரலாறு மாறாத உட்காயமாக அமையும். இவற்றையெல்லாம் தீர்க்கதரிசனத்தால் அறிந்தோ என்னவோ தந்தை செல்வா தமிழரைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நூலகம் எப்போது திறக்கப்படும் என ஏங்கும்

தங்க. முகுந்தன். முன்னாள் மாநகர சபை உறுப்பினன் தமிழர் விடுதலைக் கூட்டணி தந்தை செல்வா அகம் 57/48 ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம். 22.02.2003

------------------------------------

அமெரிக்கத் தகவல் நூலகமும் யாழ்ப்பாணப் பொதுசன நூலகமும் ஒன்று கலந்தமையையும் - அறிவுத் திறமைக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஸ்தாபிதமும் சிறப்பான பலனைக் கொடுத்திருக்கிறது. இன்றும் தொடர்கிறது. அமெரிக்க யாழ்ப்பாண நட்புறவு 140 ஆண்டுகளுக்கு மேலாக வந்த தொடர்பை மூதறிஞர் க. சி. குலரத்தினம் ஐயா அவர்கள் யாழ்ப்பாண நூல் நிலையம் என்ற நூலில் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார்.வீணாக அழிவைப்பற்றி எண்ணாது – ஆக்க பூர்வ அறிவின் அடிப்படையில் நோக்கும்போது அன்றைய அமெரிக்க ஸ்தானிகர் 104,000 ரூபாவையும் பின்னர் 1966ல் 11,000 ரூபாவையும் வழங்கியிருந்தார். இதைவிட இந்திய அரசும் பிரித்தானிய அரசும் கூடவே நன்கொடையளித்திருந்தன.எனவே யாழ்ப்பாண நூலக விடயத்தில் அனாவசியமான அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து அறிவு பூர்வமாக சிந்தித்து செயற்படுவதே சிறந்தது. இன்று யாழ் பொது நூலகம் கணனி மயப்படுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் செயற்படுவதுடன் தொடர்ந்தும் நவீன வசதிகளைப் பெறவும் வளரும் விஞ்ஞான தொழில்நுட்ப அறிவினை யாழ்ப்பாணத்திலும் ஊன்றச் செய்யும் நடவடிக்கையை ஊக்கம் அளித்து வெறுமனே கொழும்பில் மட்டும் எல்லா வசதிகளும் இருக்கின்றது என்ற நிலையை மாற்றி சகல பகுதிகளிலும் நவீனம் ஊடுருவ வகை செய்ய வேண்டும். இதுவே இன்றைய அறிவுத் தேவையாகும். இன்று இந்நாட்டில் சிங்களப் பகுதிகளில் இருக்கும் வசதிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணமோ அல்லது வவுனியா திருமலை மட்டக்களப்பு பகுதிகள் சரி கொழும்பு காலி மொரட்டுவை பேராதனை இறாகம போன்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் எந்த அளவு என்பதை நோக்கலாம். (இது ஒரு சிறு குறிப்பாக எழுதி 2003.02.22 அறிக்கையுடன் இணைத்து அனுப்பப்பட்டது.)

---------------------------------------

இந்த அறிக்கையை அனைத்துப் பத்திரிகைகளுக்கு கொடுத்திருந்தும் தினமுரசு மாத்திரம் தனது 502வது இதழில் யாழ் நூலகத் திறப்பு விழாச் சர்ச்சை – உண்மைகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டன – தங்க. முகுந்தன் யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் - (TULF) என்ற தலைப்பிட்டு திறப்புவிழா அழைப்பிதழையும் அக்கட்டுரையுடன் பிரசுரித்தது.அவர்களுக்கு 08.03.2003ல் எழுதிய கடிதம்

ஆசிரியர், தினமுரசு, கொழும்பு.

அன்புடையீர்,

வணக்கம். தங்களின் 502வது இதழில் எனது யாழ் பொது நூலக வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற அறிக்கையைப் பிரசுரித்திருந்தீர்கள். நன்றி. உண்மைகள் என்றோ ஒருநாள் வெளிவரும் என்பதைத் தங்கள் பத்திரிகை மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டியமைக்கு எனது இதய பூர்வமான நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொண்டு கடந்த இதழில் என்னால் குறிப்பிடப்பட்ட அறிக்கையின் இறுதிப் பந்தியில் ஒரு விடயம் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன் அதைப்பற்றி யாரும் வாசகர்கள் குறைப்படுவதற்கு முன்னர் நானே ஒத்துக்கொள்வது அழகாகும் என்பதற்காக இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகின்றேன். தயவுசெய்து பிரசுரிக்கும் வண்ணம் அன்புடன் வேண்டுகிறேன்.

அப்படியானால் பிரான்ஸ் நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நூலகத்துக்கு வழங்கிய ஒரு தொகுதி நால்களை தற்பொழுது யாழ் கச்சேரிக்கு முன்னர் இயங்கும் பொது நூலகத்தில் அல்லது நல்லூரிலுள்ள மாநகர சபை அலுவலகத்தில் வைத்தே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் புதிய கட்டடத்திலேயே வழங்கினார் என்றிருப்பது தவறு.

ஏனெனில் அன்று 11ந்திகதி. முதல்நாள் 10.02.2003 திங்கள் புதிய நூலகத்தில் வைத்தே இந்நிகழ்வு இடம்பெறும் என எமக்குக் கூறப்பட்டது. ஆனால் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் புத்தகக் கண்காட்சி ஒன்று நடத்த வேண்டும் எனவும் தாம் புத்தகங்கள் வழங்கும்போது நூலகத்தில் தமதுநாட்டுக் கொடி பறக்கவிடப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டதைத் தொடர்ந்து திறப்பு விழாவுக்கு முன் புதிய கட்டடத்தில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்பதற்காக கச்சேரியடி பொதுநூலகத்துக்கு முதல்வரால் இப்புத்தகக் கையளிப்பு மாற்றப்பட்டதும் இதனால் பிரான்ஸ் தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் முகம் சுழித்தார்கள் என்பதும் எனக்கு நேற்று 07.03.2003 எமது மாநகர சபை உத்தியோகத்தர்கள் கூறித்தான் தெரியும். ஏனெனில் சென்ற மாதம் 10ந்திகதி நண்பகலில் இருந்தே திறப்பு விழா குறித்த நெருக்கடிகள் எமக்குப் பெரிதும் தலையிடியாக இருந்தமையே. இதனால் பத்திரிகைகளைக் கவனமாக வாசிக்காமல் மேலோட்டமாக பார்த்தமையால் ஏற்பட்ட தவறு என்று கூறவேண்டியவனாகின்றேன். இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் குடாநாட்டுப் பத்திரிகைகளும் படங்களில் விளக்கமாகக் குறிப்பிடவில்லை. அருகருகே இருபடங்களில் குறிப்பிட்ட நபர்களை மட்டும் பிரசுரித்தபொழுது அவை வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டிருக்கும் என நான் அறிய முடியாது போய்விட்டது. எனவே இதனால் ஏற்பட்ட தவறான செய்திக்கு எனது மனம் வருந்துகிறேன்.

தயவுசெய்து மன்னிக்கவும். நன்றி. தங்களுண்மையுள்ள தங்க. முகுந்தன்.

----------------------

25.03.2003.

அதிஉத்தம இந்திய ஸ்தானிகர் ஸ்ரீ நிரூபம் சென் அவர்களே!

தங்களுக்கு முதலில் எனது இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இந்தக் கடிதத்தை எழுதத் தொடங்குகின்றேன்.

தாங்கள் - தங்கள் அரசு – எனது கட்சியின் தலைவர் தனது பேச்சின்போது குறிப்பிட்டவாறு எமது தாய்நாட்டைப் பிரதிநிதிப்படுத்தபவர்கள. எமது மாநகர சபை நிர்வாகத்திற்குப் பொறுப்பாக ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட சபையின் அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு சம்பிரதாயத்தினை தாயின் ஸ்தானத்திலிருந்து அந்த சம்பவத்தை உயிரூட்டி எமக்கு நூலகத் திறப்பு விழா நடைபெற்றிருந்தால் ஏற்படும் மகிழ்வைக் காட்டிலும் கூடிய மன நிறைவை அளிக்கத் தக்கதாக நேற்றைய நிகழ்வை ஏற்படுத்தியமைக்கு எமது சபையினர் சார்பாக, யாழ் மாநகரத்தில் நேர்மையையும் தர்மத்தையும் கைக்கொண்டுவாழும் மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன். முதல்வர் அவர்கள் பேசுகையில் அவர் கண்ணீர் சிந்தினார். ஆந்த நிகழ்வு முடிவடைந்ததும் இயற்கையும் கண்ணீர் சிந்தியது. நடப்பவை எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. தூங்கள் தங்கள் பேச்சின்போது மகாகவி பாரதியாரையும் சோமசுந்தரப் புலவர் துரையப்பாபிள்ளை போன்ற பலரையும் நினைவுபடுத்தியிருந்தீர்கள். நான் கல்விகற்ற தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியைத் ஸ்தாபித்தவர் துரையப்பாபிள்ளை அவர்கள். எமது கல்லூரிக் கீதம் இந்திய நாட்டின் தேசிய கீதத்தின் மெட்டிலமைந்தது. இந்திய நாட்டின் மீதும் இந்திய தேசபிதா மகாத்மா மீதும் நான் உயிரையே வைத்திருப்பவன். குhந்தி ஆங்கில திரைப்படத்தை குறைந்தது 20 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன். தோடர்ந்தும் பார்க்க ஆவலாயுள்ளேன்.

எமது காலத்தில் (கடந்த 5 வருடங்களில்) இணர்டு முதல்வர்களையும் ஒரு உறுப்பினரையும் இழந்து மிகவும் ஒரு அசாதாரண நிலையில் பல்வேறு விமர்சனங்களக்கு மத்தியில் பலர் உயிருக்குப் பயந்து பதவி விலகிய நேரத்தில் துணிந்து சபையை நடத்தியதுடன் அழிந்த நிலையிலிருந்த பொது நூலகத்தை மீளக் கட்டி எழுப்பப்பட்ட அந்த காலத்தில் நாம் செய்த சேவை நியாயமானது என்ற அறத்தை மெய்ப்பித்த இந்திய அரசின் தீர்க்க தரிசனத்தை நாம் மனதாரப் போற்றுகின்றோம்.

பொது நூலகத்தின் வரலாற்றில் இந்தியாவுக்கு முக்கிய பங்குண்டு. 1952ம் ஆண்டில் டெல்லிப் பல்கலைக் கழகத்து நூலகர் பேராசிரியர் கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து நூலக ஆரம்பப் பணிகளுக்கு கலந்துரையாடலைச் செய்தவர் வணக்கத்திற்குரிய பாதிரியார் லோங் அடிகள். அதேபோல முற்றவெளியில் கட்டடம் கட்டுவதை இடம்பார்த்து ஆமோதித்தவர் தமிழ்நாட்டுக் கட்டடக்கலை நிபுணர் நரசிம்மன் அவர்கள். இவர்களுக்கு மேலாக 29.05.1954ல் நகரபிதா சாம். சுபாபதி, வண. லோங் பிதா, பிரித்தானிய தூதுவர் செசில் சையேஸ், அமெரிக்கத் தூதுவர் பிலிப் குறோஸ், இந்தியத் தூதுவரின் முதற்காரியதரிசி சித்தார்த்த சாரி ஆகிய ஐவரும் அடிக்கல் நாட்டி வைத்ததும் இந்திய அரசின் நன்கொடையாக அன்றைய தினம் ரூபா 10,000.00 அன்பளிப்புச் செய்யப்பட்டதும் வரலாறு.

அந்த அடிப்படையில் இன்றைய நூலஇகள் வழங்கும் வைபவமும் வரலாறாகிவிட்டது. எமது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாக மனநிறைவை அளித்த விழாவாக இதை நான் நோக்குகின்றேன். 14.02.2003ல் திறக்கப்படவிருந்த நூலகத்திற்கு பங்காளியாக இருந்த எம்மை நேற்றைய விழாவில் முதன்மைப் படுத்தி கௌரவித்தமைக்காக எமது மனம் நிறைந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்து இதனை நிறைவு செய்கின்றேன். நன்றி. வணக்கம்.

என்றும் உண்மையுள்ள, தங்க. முகுந்தன் - முன்னாள் மாநகர சபை உறுப்பினன் - யாழ்ப்பாணம்.

குறிப்பு – 1. யாழ் பொது நூலகத்துக்கு பல அரிய நூல்களை அன்பளிப்பாக வழங்க முதல்வர் எம். ஜி. ஆர் ஏற்பாடு(ஈழநாடு 12.10.1981)

2. From India – With Love (Saturday Review Sri Lanka 1985-7-6)

3. யாழ் நூலகத்துக்கு இந்திய மத்திய, தமிழக அரசு நூல்கள் அன்பளிப்பு (வீரகேசரி 18.01.1998)

------------------

27.03.2003. (This ist he actual translation of the letter dated on 25.03.2003)

His Excellency Nirupam Sen, The High Commissioner of India in Sri Lanka, No. 36 - 38, Galle Road, Colombo -3.

Your Excellency,

I wish to express my sincere and heartiest gratitude to you at the very outset of addressing this letter to you.

As stated by our Leader Mr. V. Anandasangaree, MP during his speech, We endorse that Your Excellency and Your esteemed Nation are representing our motherland. I also tp avail of this opportunity to express my sincere thanks to you once again on behalf of the Jaffna Municipal Council and the people of Jaffna who lead a sincere life honesty and integrity for having come forward to conduct a unique function yesterday(24.03.2003) thus providing better mental satisfaction to all of us who were elected democratically for the administration of the Jaffna Municipal Council, than conducting the opening of the Library with your intervention in the capacity of Maternal Capacity, When our genuine attempts to open the Library were suppressed and oppressed.

When our former Mayor of the Jaffna Municipal Council delivered his speech he was moved by emotion thus could not control himself of shedding of tears. Immediately on conclusion of the function, nature too started shedding tears as per sayings of greatman, everything would conclude favourably.

During Your Excellency`s speech you called `Mahakavi Bharathi`, `Somasundarappulavar`Thuraiyappapillai`and others of this category. The Tellippalai Mahajana College, where I was educated was established by Thuraiyappapillai. I am proud to mention that our College anthem rhythms similar to that of Indian National Anthem.

It is indeed not an exaggeration to mention at this function that I love Mother India and Mahathma Gandhiji, the National Father of the Indian Nation more than my life. Through such love I had seen the English film Gandhi more than 20 times and still anxious to see that film more and more.

During our tenure of office as MMC, we lost two Mayors one after the other and a Member under tragic circumstances and when number of Members left their Membership due to uncertain and fear of adverse consequences, we stood steadfastly and continued the function of the Jaffna MC and engaged ourselves unremittingly to reconstruct the Library Building. We really appreciate the gesture of the farsightedness of the Indian Government in justifying our relenting service. In the history of the Jaffna Library, India has a prominent contribution. During the year 1952 Prof. Dr. S R Ranganathan, Librarian of the Delhi University came to Jaffna and conduct a Seminar regarding preliminary Library service. Similarly Rev. Fr. Long too identified the location fort he constuction of the Library at the Jaffna Esplanade. Apart from the foregoing facts the Tamil Nadu Architect Mr. Narasimman joined. His Lordship the Mayor of Jaffna Sam Sabapathy, Rev. Fr. Long, His Excellency Sisil Cyes the HC of Gt. Britain, His Excellency Phillip Cross the Ambassador of USA, Shri Siththartha Shari the First Secretary of Indian High Commission jointly laid the foundation stone and the contribution of Rs. 10,000.00 made by the Indian Govt. is also a significant historical event.

It is on this basis the donation of books to the Library by the Indian Govt. also was become a historical event.

I observe this occasion as an unforgettable event which has brought great contentment. We who were expected to be the participants of the opening of the Library scheduled to be held on 14.02.2003, have been provided prominence at the function and for which kind gesture I once again express my whole hearted gratitude and wish to conclude this letter.

Thanking you,

Yours truly,

Thanga. Mukunthan.Ex. MMC Jaffna.

Note 1. Arrangements of the CM, MGR to donate number of rare lot of books(Elanadu 12.10.1981)

2. From India with Love (Saturday Review, Sri Lanka 06.07.1985)

3. Donation of Books to Jaffna Library by the Central Govt. of India and the Govt. of Tamil Nadu(Veerakesari 18.01.1998)

--------------------

4.7.2003

சக்தியின் தேடலில் இன்று 4-7-2003 இரவு 8.00மணி தமிழிலும் 9.00 மணி ஆங்கிலத்திலும் வெளிவந்த செய்தி யாழ். நூலகம் பற்றியது.

திறப்பு விழாவுக்கு கொழும்பிலிருந்து செய்தி சேகரிக்க வந்த தங்கள் ஒளிப்பதிவுக் கூடத்தைச் சேர்ந்தவர்கள் அன்றைய தினம் 14.02.2003 நூலகத்தையும் உறுப்பினர்கள் விளக்கமளித்த பின் இராஜினாமாச் செய்த செய்திகள் மக்கள் அபிப்பிராயம் என்பவற்றை விரிவாகச் சேகரித்தார்கள்.

மேல்நாட்டுமுறைப்படி நாம் ஒருபோதும் திறப்புவிழா செய்வது கிடையாது. குடிபுகுதல் பால் காய்ச்சுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்ற பின்பே திறப்புவிழா இடம்பெறுவது வழக்கம். நூலகப் பிரதேசம் உள்ளேயும் வெளியேயும் வாஸ்து சாந்தி செய்யப்பட்ட பின்பே திறப்புவிழா நடாத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நானும் ஒரு ஏற்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்தேன்.

தொடர்ந்து நூலகம் பற்றிய அலசல் ஒளி பரப்ப ஏற்பாடு செய்தால் தயவுசெய்து எமது கருத்தையும் நீங்கள் ஏற்க வேண்டும். என்னால் எழுதப்பட்ட ஓர் அறிக்கையை இத்தடன் இணைத்துள்ளேன். இதில் ஒருசில பகுதிகள் தவிர்த்து தினமுரசு மட்டும் செய்தியைப் பிரசுரித்தது குறிப்பிடத் தக்கது. நன்றி உண்மையுள்ள தங்க. முகுந்தன்.

--------------------

27.10.2003

செய்தி

காலம் கடந்த நிலையில் எல்லோரும் மறந்த சிலரால் மறைக்கப்பட்ட செய்தியை மீண்டும் கிளற வேண்டிய கட்டாய நிலை – வாசிக்கும் பழக்கத்தையுடைய எனக்கு ஏற்படுத்தியுள்ளது. காரணம்இன்று யாழ் நூலகத்தைப் பற்றி எவரும் அக்கறைப்படாததே. துற்போது இந்த நூலகத்தைப் பயன்படுத்தாமலிருப்பதனால் அதற்கு கிடைக்க இருக்கின்ற அரச சார் பற்ற நிறுவனங்களின் மேலதிகமான உதவிகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக யுனெஸ்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நான் அறியக் கூடியதாக இருக்கிறது. சுங்கங்கள் நடத்துவோரும் அறிக்கைகள் விடுத்தோரும் இன்று சும்மா இருப்பதால் நாம் 14.02.2003ல் எந்த வேலைகளை முன்னெடுக்க திறப்பு விழாவை நடாத்த இருந்தோமோ அவையெல்லாம் நிறைவேறிய(யாருக்கும் தெரியாமல் குடிபுகுதல் வாஸ்து சாந்தி என்பன ) பின்னரும் நூலகம் திறக்கப்படாமலிருப்பதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மாநகர சபை நிர்வாகம் இயங்கிய வேளையில் திறக்கப்படவிருந்த நிகழ்வை தடுத்துநிறுத்திய பெருமையுடையவர்கள் இனியாகிலும் பூட்டப்பட்டிருக்கின்ற நூலகத்தைத் திறந்து மாணவர்களின் அறிவை விருத்தி செய்ய முன்வரவேண்டும் என வேண்டுகின்றேன். வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான் என்பது ஆன்றோர் வாக்கு. முன்னர் மில்க்வைற் அதிபர் அமரர் க. கனகராசா அவர்கள் இலவசமாக நூல் நிலையங்களுக்கு அன்பளிப்பாக வழங்கியது. இவ்வார்த்தைகளடங்கிய அட்டை இன்றும் எமது ஊரிலுள்ள (என்னால் ஓரிரு வருடங்கள் தலைவராகவும் செயலாளராகவும் பொறுப்பிலிருந்த இந்து இளைஞர் மன்றத்தினால் பரிபாலிக்கப்பட்டுவரும் மூளாய் இந்து இளைஞர் மன்ற) நூலகத்தில் இருப்பதை நினைவுபடுத்தி - பூரணமான மனித சமுதாயம் தோன்ற வழி ஏற்படுத்த கல்வியறிவை வளர்க்கும் பணியிலீடுபட்டவர்கள் முன்வரவேண்டும் என கல்விக்கு ஏற்றம் கொடுத்த யாழ்ப்பாணச் சமூகத்தின் சார்பில் தயவாகக் கேட்டுக்கொள்ளுகின்றேன். நூலக ஆலோசனைக் குழுவினரும் இந்த விடயத்தை துரிதமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் எனவும் தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

செய்தி ஊடகங்கள் சம்பந்தமாக சில தகவல்களையும் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது.

1. பொதுவாகவே பல செய்தி ஊடகங்கள் கடந்த வருடம் தொடக்கமே நூலகத் திறப்பு விழா சம்பந்தமாக செய்திகளை வெளியிட்டன. குறிப்பாக வீரகேசரி 25.08.2002 யாழ் தீபம் என்ற சிறப்பு வெளியீட்டில் (திறப்பு விழாவுக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்னரே) அழகுற புனரமைக்கப்பட்டிருக்கும் யாழ் நூலகம் அன்றுவரை திறக்கப்படாதது ஏன்? ஏப்போதுதான் திறக்கப்படுமோ? ஏன்று அழகான படத்துடன் செய்தி வெளியிட்டுவிட்டு 30.03.2003 ஞாயிறு வீரகேசரி வெளியீட்டின் முற்பகுதியில் புனரமைக்கப்பட்டு திறக்கப்படாதுள்ள யாழ் நூலகத்தின் உட்பக்க தூண்களில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதையும் நூலகத்தின் வெளிப்புற வேலைகள் பூர்த்தியடையாது இருப்பதையும் படங்களில் காணலாம் என்றும் படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கின்றது. மீண்டும் 28.06.2003ல் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட யாழ் நூலகத்திற்கு முன்னால் தமிழ் மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளில் செல்வதை படத்தில் காணலாம். இரண்டு தசாப்த காலத்திற்கு முன்னர் அழிக்கப்பட்ட இந்நூலகத்தைத் திறப்பதற்கு யாழ்ப்பாணம் மீண்டும் தயாராகின்றது என்றும் எழுதியது.

2. 22.05.2001ல் நடைபெற்ற நூலக ஆலோசனைக்குழு அறிக்கையில் பிரதம பொறியியலாளர் 80மூமான வேலைகள் முடிவடைந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். கூட்டம் திறப்பு விழாவுக்கு முன்னர் சுமார் 9 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றிருப்பதை அவதானிக்கவும். ஊங்களிடம் யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை என்பவற்றின் அறிக்கைகள் இருக்கும் என எண்ணுகின்றேன். இல்லாவிட்டால் என்னிடத்தில் இவற்றின் பிரதிகள் உண்டு.

3. சக்தி தொலைக் காட்சியில் 04.07.2003 இரவு செய்தியின் நடுவில் வெளிவந்த யாழ் நூலகம் பற்றிய தேடுதல் நிகழ்வைக் கண்ணுற்றபின்னர் எழுதிய கடிதத்தின் பிரதியையும் இணைத்தள்ளேன்.

4. எனது இராஜினாமாக் கடிதம் 13.02.2003 திகதியிட்டு 14.02.2003 நண்பகலில் ஆணையாளருக்கும் தேர்தல்கள் அலுவல்கள் யாழ்ப்பாண அலுவலகத்திற்கும் சென்று நேரில் கையளித்தேன்.

5. என்னால் சகல பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களில் தினமுரசு பத்திரிகையும் ஒரு சில விடயங்களை மாத்திரம் தவிர்த்தும், வலம்புரி பத்திரிகை கால்பங்கினையும் மாத்திரம் பிரசுரித்தன. சகல பத்திரிகைகளுக்கும் அனுப்பியிருந்தும் பிரசுரிக்காமை வருத்தத்திற்குரியதே. அத்துடன் முன்னர் அனுப்பிய கடிதப்பிரதிகள் தேவையாயின் 2347721 என்ற தொலைபேசியுடன் தொடர்புகொள்ளவும்.

பிரதிகள் - 1. வீரகேசரி, 2. தினக்குரல், 3. தினகரன், 4 . சுடர்ஒளி, 5. தினமுரசு, 6. வலம்புரி, 7. நமது ஈழநாடு, 8. உதயன், 9. யாழ் தினக்குரல், 10. சக்தி ஒலிபரப்பு, 11. சக்தி ஒளிபரப்பு, 12. சூரியன் ஒலிபரப்பு.

No comments: