அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, June 12, 2010

மறுபிறவியாக 4 வருடங்கள் முடிகிறது இன்று!


கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் என்னுடன் கதைக்கவேண்டும் என்றுசொல்லி 3ஆவது தடவையாக வந்தவர்கள் சுட்டுவிட்டு நான் இறந்துவிட்டதாகவும் செய்தி வெளியிட்டார்கள்!

எந்த உயிரையும் கொல்வதற்கு எவருக்கும் உரிமையுமில்லை. யாருக்கும் அந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

பிறந்து, வளர்ந்து, நேசித்த - எனது ஊரவர்களால் காப்பாற்றப்பட்ட நான் - நம்பிக் கைக்கொள்ளும் கொள்கைகளால் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே உணர்கிறேன். சொந்த ஊரைவிட்டு வெகுதொலைவில் இருந்தாலும் பசுமரத்தாணிபோல மனதிலிருக்கும் எண்ணங்களை மீட்டுப் பார்ப்பதே தனியாக இருக்கும் எனக்கு பொழுதாக இப்போது இருக்கிறது!

சமயத்திற்கும் தமிழுக்கும் - அன்புக்கும் அமைதிக்குமாக ஊர்ஊராய்ப் போன நினைவுகளும் - பலருடன் பழகிய அனுபவங்களும் சொல்லமுடியாத அளவுக்கு மனதைக் கனமாக்குகிறது! பல இடங்களில் தங்கியிருந்த அனுபவங்களும் இதில் அடங்கும்.


கடந்த வருடம் நடந்த சம்பவத்தை முழுவதுமாக பதிவிட்டமையால் இவ்வருடம் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்ற சுவிற்சர்லாந்து நாட்டில் எனக்குப்பிடித்த சில புகைப்படங்களை பதிவிட எண்ணியுள்ளேன்!

எழுதுவதை நான் இப்போது பெரிதாக விரும்பவில்லை.

முழுதும் உண்மை
யாமறியோம்
ஒரு பொல்லாப்புமில்லை
எப்பவோ முடிந்த காரியம்
என் குருநாதர் யோகர்சுவாமியினுடைய வாக்கியங்கள்!








4 comments:

Paheerathan said...

மறு பிறவி எடுத்ததற்கு வாழ்த்துக்கள் :)

தங்க முகுந்தன் said...

நன்றிகள்!

Admin said...

மறு பிறவி எடுத்ததில் சந்தோசமே. வாழ்த்த்துக்கள்

தங்க முகுந்தன் said...

நன்றி சந்ரு!