அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, June 21, 2010

வன்னிமக்களின் உணர்வுகளை யாழ் மக்கள புரிந்து கொள்ள வேண்டும் - ஆனந்தசங்கரி

19.06.2010
பத்திரிகைச் செய்தி


யூன் மாதம் 22ம் திகதி தெடக்கம் 17 நாட்கள் நீடிக்கக் கூடியதாக மக்கள் களரி நாடகக் குழுவினர் நாடகக் கலைவிழா ஒன்றை ஆரம்பிக்க இருப்பது எனக்கு பெரும் ஆச்சரியத்தை தருகின்றது. தம் உறவினர் இறந்த சோகமும் பல சொத்துக்களை இழந்த கவலையிலும் மூழ்கியிருக்கும் வன்னி மக்கள் தமக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து மீள முன்பு யாழ் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபடுவது வருந்தத்தக்க விடயமாகும். குழு அங்கதினர் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ள இவ்வேளை இதுபற்றி அவர்களுக்கு கூறியமைக்கு அவர்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். ஒரு தடவை உறுப்பினர்கள் வன்னிக்குச் சென்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உளள வீதிகளுக்கூடாகச் சென்று அங்கே ஏற்பட்டுள்ள பெரு அழிவுகளையும், இடம் பெயர்ந்து மீள் குடியமர்ந்த மக்கள் ஒருவருடத்தின் பின்பும் எத்தகைய பரிதாப நிலையில் இருக்கின்றனர் என்பதையும் பார்க்கவேண்டும். அவர்கள் மீளக் குடியமர்ந்தவர்களாகத் தெரியவில்லை. மீண்டும் இடம் பெயர்ந்தவர்களாகவே தெரிகின்றனர்.

வன்னி மக்களின் முகத்தில் ஒரு புன்சிரிப்பையும் காணமுடியாது. கடந்த வருடம் வீட்டை விட்டு தம் குடும்ப அங்கத்தவர்கள் சுமக்கக் கூடிய பொருட்களோடு சென்றவர்கள் இன்றுவரை ஒரு நாளேனும் நிம்மதியாக உறங்கியதில்லை. தம் வீடுகளுக்கு அவர்கள் வந்து பார்த்த போது வீடுகள் தரை மட்டமாகவும் சில பெரிய அளவில் தகர்க்கப்பட்டும் சில வீடுகள் கூரை இன்றி யன்னல்கள் இன்றியும் உள்ளன. அவர்களின் வீடுகளில் எந்த ஒரு பொருளும் இருக்கவில்லை.

சொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஒட்டாண்டியாக வாழும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் மத்தியில் யாழ் மக்களுக்கு தம்மீது அனுதாபம் இல்லை என்று எண்ணம் பரவியுள்ளது. பலர் தமது உறவுகளை இழந்தும், சில குடும்பங்கள் முற்றாக அழிந்துமுள்ளன. சிலரை மக்கள் இன்னும் தேடிக் கொண்டுமிருக்கின்றனர். இரு கால்களையும் இரு கைகளையும் இழந்தவாகள் தம் வீடுகளை எவ்வாறு கட்டுவோம் என ஏக்கம் ஒரு புறம், புலி உறுப்பினாகள் என பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தம் பிள்ளைகளைப் பற்றி கவலை அவர்களுக்கு. இக்கட்த்தில் தான் அங்கு சென்று அவர்களுக்கு உதவ வேண்டும். இடிபாடுகள் நிறைந்த அவர்களின் கிணறுகளை சுத்தம் செய்து அவர்களின் உறைவிடம் திருத்த உதவ வேண்டும்.

இன்று அவர்களின் வீடுகளை கட்டுவோமா என்ற பயம். கட்டடப் பொருட்கள் உதவியாக கொடுத்தாலும் கட்ட முடியுமா என்ற பயம் அவர்களுக்கு. முழு அளவிலான நட்ட ஈடு பெறத்தகுதியுடையவர்கள். அரசோ சர்வதேச சமூகமோ அத்தனை நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. வெறும் விவசாயிகளுக்கு உதவியை மட்டுமே கொடுப்பதாகவே அரசு முன்வருகிறது, இந்த நிகழ்சியை நடத்துவதா, விடுவதா என்கின்ற விடயமாக முடிவை எடுக்க வேண்டியவர்கள் நாடகக் குழுவினர்ரே. நான் ஒரு நாடக கூத்து இரசிகன். இந்த விடயத்தில் வன்னி மக்களின் உணர்வுகளை யாழ் மக்களுக்கு உணரவைப்பேன். இதற்கு முன்பும் சில சங்கீத நிகழ்சிகள் நடந்துள்ளன. ஆனால் அவை அனைத்துமே வேறு நிறுவனங்களால் நடத்தப்பட்டவை. இந்த விடயத்தில் பொருத்தமான ஆலோசனையை பொருத்தமான நேரத்தில் வழங்கப்படாமை வருத்தத்திற்குரியதே. இவ்விடத்தில் இளைளுர்கள் மற்றும் மக்களும் ஒரு தீர்வை எடுக்கலாம். எந்த முடிவும் நல்ல முடிவாக தெரியவேண்டியது அவர்களே. இந்நிகழ்வில் பங்குபற்றுவோருக்கு எனது கருத்து பாதித்திருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

No comments: