அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 4, 2010

நாளை ஆடி 5 - தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் அ. தங்கத்துரையின் 13ஆவது நினைவுதினம்!

தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், த.வி. கூட்டணியின் அமைப்பு நிர்வாகச் செயலாளரும், திருகோணமலை சிவானந்த தபோவன சிறுவர் இல்லத்தைப் பரிபாலிக்கும் நாகரத்தினம்பிள்ளை தங்கம்மாள் நம்பிக்கை நிதியத்தின் பிரதான நம்பிக்கைப் பொறுப்பாளரும் - பொருளாளருமான மறைந்த அருணாசலம் தங்கத்துரை பா.உ அவர்களும் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. இராஜேஸ்வரி தனபாலசிங்கம், நாமகள் கல்லூரி அதிபர் திரு. சி. ஜோசப், கொழும்பு அதிபர் கா. சீவரத்தினம், பொறியியலாளர் திரு. வெ. ரட்ணராஜா சமூகசேவகர் பெ.சி. கணேசலிங்கம் ஆகிய அறுவரும் 05.07.1997 சனிக்கிழமை மாலையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புதிய 3 மாடிக்கட்டடத் திறப்புவிழா முடிவுற்ற பின்னர் இடம் பெற்ற குண்டுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் எனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாதது!

No comments: