அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, December 19, 2013

1999இல் சபரிமலையில் நிகழ்ந்த அனர்த்தம் பற்றிய என் கருத்து!



(இக்கட்டுரை 1999 பெப்ரவரி மாதத்தில் எழுதப்பட்டது. வேலைப்பளு காரணமாக இதனை நான் கட்டுரையாக குறிப்பிட்ட தினகரன் பத்திரிகைக்கு அனுப்பவில்லை! ஆனால் தற்போது எனது மனத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்தில் எடுத்து இதனைப் பதிவிடுகிறேன்! தயவுசெய்து யாரும் மனம் நோக வேண்டாம்! ஏனக்குத் தோன்றுவதை நான் செய்வதற்கு எனக்கு உரிமை உள்ளது என்ற நிலைப்பாட்டில் இதனைப் பதிவிடுகிறேன்.)

"இந்தியா செல்லும் இந்து யாத்திரிகர்களின் நலன்காக்க இந்து கலாசாரத் திணைக்களம் ஏன் முன்வருவதில்லை?" என்றும், “சபரிமலை அனர்த்தத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வோம்” என்றும் தலைப்பிட்டு 07.02.1999 தினகரன் வாரமஞ்சரியிலும், அதற்குப் பதிலளிக்கத்தக்க முறையில் 'இந்து யாத்திரிகர்களும் இந்து கலாசாரத் திணைக்களமும்' "வளமும் அதிகாரமும் இருந்தால் செய்து காட்டுவோம்" என்று 14.02.1999 தினகரன் வாரமஞ்சரியிலும் வெளியான கட்டுரைகளுக்கு ஒரு விதத்தில் பதிலளிக்க வேண்டிய ரீதியிலேயே இக்கட்டுரையை எழுத விரும்புகின்றேன். இதனால் எவருக்கேனும் மனத்தாங்கல் ஏற்படுமாயின், அதற்காக ஐயனிடத்தில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற போது நானும் பம்பைக் கரையிலே மகர ஜோதியைப் பார்த்தவன். இன்று வரை சரியான செய்தி கிடைக்கவுமில்லை. எமக்கு அது பற்றி தெரிய வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படவில்லை என்றே வெளிப்படையாக உண்மையைக் கூற வேண்டும். குறிப்பிட்ட பகுதியிலே வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். தெளிவாக மகர ஜோதியைப் பார்ப்பதற்கு இந்தப் பகுதியில் கூட்டம் கூடுவது சர்வசாதாரணமானதே. ஆனாலும் இம்முறை அளவுக்கதிகமான பக்தர்கள் கூடியிருந்தமையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களது சோதனை நடவடிக்கை. மற்றும் பல்வேறுபட்ட காரணங்களின் நிமித்தம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலில் ஒரு உண்மையை நான் கூறவேண்டும். நான் சபரிமலை யாத்திரை மேற்கொண்டாலும் சரி. கூட்டமாகக் குழுவாக மேற்கொண்டாலும் சரி. யாத்திரிரை மேற்கொள்ள மாலை அணியும் போது எமது மனங்களிலே ஏற்படும் திடமான ஒரு நம்பிக்கையும், லட்சியமும் - நாம் சபரிமலை சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் கலியுக வரதனுக்கு நெய் அபிஷேகம் செய்வித்து அவன் திவ்ய தரிசனக் காட்சியைக் காணவேண்டும் என்பதுடன் மகர சங்கிராந்தியில் அன்று தோன்றும் ஜோதியையும் விளக்கையும் தரிசிக்க வேண்டும் என்பதே. இக்காட்சியைக் கண்டபின்பே நாம் எமது ஏனைய குடும்ப அல்லது தனிப்பட்ட விடயங்களைச் செய்ய முற்படுவோம். மேலும் யாத்திரை புறப்படும் வேளையில் சுவாமியே சரணம் என்று சொல்லித்தான் புறப்படவேண்டுமே அன்றி போய்வருகின்றேன் என்று கூறல் ஆகாது. நாம் இந்து சமயத்தவர்கள். சனாதன தர்மத்தின்படி, எமது பிறவிக் கோட்பாடுகளின்படி, நாம் செய்த வினைகளுக்கேற்ற முறையில் எமக்குப் பிறவிகள் உண்டு என்பதும், மரணம் என்பது என்றோ ஒருநாள் நிச்சயம் உண்டு என்பதும், அது எப்போது என்பதை நிர்ணயம் செய்பவன் தர்மவான் என்று சொல்லப்படும் யமனுடைய கடமை என்பதும் அறிந்த விடயம்.


சபரிமலைப் புனித யாத்திரை செய்கின்ற ஓர் சுவாமி தேவவியோகம் அடைந்தால் அந்த ஆத்மா நிச்சயம் ஐயனுடைய பரிப+ரண அருளுக்குப் பாத்திரமாகி பேரின்பப் பெருவாழ்வு அடையும் என்பது முடிந்த முடிபு. கடந்த வருடம் (1997-1998இல்)எமது குழுவினருடன் யாத்திரை செய்த இலட்சுமணண் சுவாமி கரிமலையில் தேகவியோகம் ஆகியதை நாம் நினைவு கூர வேண்டும். அவருக்கு மயக்கம் ஏற்பட்ட போது எமது குழுவில் இருந்த ஓரிரு சுவாமிகளும் வெளிநாட்டு சுவாமி ஒருவருமே அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்தனர். எனினும் அவரது உயிர் பிரிந்த பின்பும் கூட அவரது உடலை எப்படியாகிலும் இலங்கைக்கு எடுத்துவர வேண்டும் என்ற ஆதங்கத்துடன் பெரும் பிரயத்தனம் செய்து அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தொண்டர்களின் உதவியுடன் அவரது உடலை பம்பையில் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு வந்து பின்னர் இலங்கைக்குக் கொண்டுவர முடிந்தது. அவரது பூதவுடலைக் கொண்டு வர முடிந்தமைக்காக காரணம் அவருக்கு அருகில் அந்த நேரத்தில் எமது குழுவினர் இருந்தமையால்தான். இல்லாவிட்டால் அவரது உடலை அருகே பள்ளத்தில் தள்ளி விட்டிருப்பார்கள். இது ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் “எம்மவர்களில் பலர் மாலை அணிந்திருக்கும் போது சில விடயங்களைத் தவிர்ப்பதும் அவை தீட்டு ‘குற்றம்’ எனக் கருதுவதும் மனிதாபிமான அடிப்படையில் தவறாகும்” என்பது எனது கருத்து. இறைவன் கருணை வடிவானவன். சபரிமலை யாத்திரையின் போது ஏழை, பண்காரன், பெரியவன் சிறியவன், உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்ற எண்ணம் எல்லாம் மறையப் பெற்று நாம் அனைவரும் ஒரு குலம் என்ற ஒற்றுமை வலுப்பெறுகின்றது. மக்கள் அனைவரும் ஒரு குலம். இறைவன் அனைவருக்கும் பொதுவானவனே. அவனது சந்நிதியில் அனைவரும் சமமே. அதுவே உண்மையான ஜீவாத்மா, பரமாத்மா சங்கமம். அதுவே தத்வமஸி எனும் மகா வாக்கியத்தின் பொருளுமாகும்!


ரிஷி அவர்களின் கட்டுரையின் ஆரம்பத்திலேயே “பக்தர்களில் 52 பேர் தத்தமது வீடுகளுக்கு உயிருடன் திரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். வருடாவருடம் சபரிமலையில் பலர் மாரடைப்பினாலும் நெரிசலில் சிக்குண்டும் சரணமடைந்திருப்பினும் இம்முறை குறிப்பிட்ட அனர்த்தத்தால் பலர் சரணமடைந்துள்ளனர். இதற்கான காரணத்தை நாம் விரிவாக ஆராய வேண்டும்.

பிரார்த்தனை என்பது வீண்போவதில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு எமது பிரார்த்தனைகள் பக்தி ப+ர்வமாக அமைகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு பலன்களையும் நாம் எதிர்பார்க்க முடியும். உதாரணமாக எனது அனுபவத்தில் நான் கண்ட அனுபவங்களையும் பெற்ற பேறுகளையும் கண்டிப்பாக சொல்லியே தீர வேண்டும்.

முதலில் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டுமாயின் இலங்கை பக்தர்களுக்குக் கடவுச்சீட:டும், இந்தியா செல்வதற்கான அனுமதியும் “விசா”வும், குறிப்பிட்ட தினத்தில் யாத்திரை மேற்கொள்ள விமானப் பயணச் சீட்டும் அவசியம். இம்மூன்றையும் சரிவரப் பெற்றபின்னர் தான் இந்தியா சென்று எமது யாத்திரையைத் தொடர முடியும். கார்த்திகை முதலாம் நாள் மாலையணிந்த சபரிமலை யாத்திரையைத் தொடங்குவதே பண்டைய நெறிமுறை. அதற்கேற்ற வகையிலேயே ஸ்ரீஐயப்ப சன்னிதானமும் கார்த்திகை முதலாம் நாளில் இருந்து மண்டலப் பூர்த்தி வரை “41 நாட்கள்” ஆலயம் திறந்திருக்கும். அதன் பின் மகரஜோதி தரிசனத்திற்காக ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 20 நாட்களுக்கு 20ஆம் திகதிவரை திறந்திருக்கும்.

எனக்குக் கரிமலை இறக்கத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை நான் முக்கியமாக குறிப்பிட்டே ஆக வேண்டும். ஐயனின் திருவருளுக்கும் எனது பற்றற்ற வாழ்க்கைக்கும் இது உதாரணமாகும். ஸ்ரீபம்பா விக்னேஸ்வரா சத்தியாலாயா குழுவினரால் நடாத்தப்படுகின்ற அன்னதானத்தில் நானும் பங்குகொண்டு அடியார்களுக்கு உணவு பரிமாறுவதில் உதவ சீக்கிரமாக நடந்து சென்று உதவ வேண்டும் என்ற ஆதங்கப்பட்டு முன்பு இரு தடவைகள் பங்கேற்றது போலு இம்முறையும் வழக்கத்திற்கு மாறாக ஒரே நாளில் எருமேலியில் இருந்து பம்பைக்குச் செல்ல முடிவு செய்து இன்னோர் பழமலை சுவாமியுடன் யாத்திரையைத் தொடர்ந்தேன். முதல் தடவை நாம் எருமேலியில் இருந்து ஆரம்பித்து அழுதையிலும் கரியிலம்pதோட்டிலும் தங்கியே பம்பையை அடைந்தோம். இரண்டாவது முறை அழுதையில் தங்கி கரியிலந்தோட்டில் தங்காது பெரியாணை வட்டத்தில் மழையில் நனைந்து பம்பையை அடைந்து அன்றிரவு முழுவதும் நல்ல காய்ச்சலினால் அவதிப்பட்டு அடுத்தநாள் ஊசி மருந்து எடுத்ததன் மூலம் சுகமாகி முதன் முதல் அன்னதானத்தில் பங்கு கொண்டு பணிசெய்தேன். கடந்த தடவை எவ்வித தடங்கலுமின்றி அழுதையில் தங்கி கரிவலந்தோட்டில் சக்தி ப+சைக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்துதவி செய்தபின் பம்பையை அடைந்து அன்னதானத்தில் பங்கு கொண்டேன். இம்முறை அழுதையிலும் தங்காது புறப்பட்டு முக்குளித் தாவளத்தில் அம்மன் கோவிலில் வைத்து என்னுடன் கூடவே வந்த பழமலை சுவாமியைவிட்டுப் பிரிந்து அவரைத் தேடிக் காணாமல் எனது யாத்திரையைத் தொடரவும் மழை ஆரம்பிக்கவும் ஒரு தாவளத்தில் தங்கினேன். மழையையும் பொருட்படுத்தாமல் பலர் தமது யாத்திரையைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். நானும் தொடர ஆயத்தமான வேளையில் இரண்டு ஐயப்ப சேவா தொண்டர்கள் பெரிய தடியொன்றில் வேட்டியை மடித்துக் கட்டி “ஏணை போல” ஒருவரைத் தூக்கிச் செல்ல ஒரு வயதுபோன அம்மா சுவாமி தொடர்ந்து கண்ணீர் வடித்துச் செல்வதைக் கண்டு அங்கேயே தங்கிச் செல்ல முடிவு செய்தேன். பதினைந்து ரூபா தங்குவதற்கு வாடகை கொடுத்து விரிப்பு எடுத்தேன். அதிகாலை நான்கு மணிகெல்லாம் சரியாக யாத்திரையைத் தொடர்ந்து கரிவலந்தோடு தாண்டி கரிமலை ஏற்றமும் ஏறி பின் இறக்கத்தை அடைந்தேன். மழை பெய்திருந்த காரணத்தாலும் அந்த இறக்கம் மிகவும் ஆபத்தானதாக இருந்தமையாலும் மிகவும் அவதானத்துடன் மிக மெதுவாக இறங்கிச் சென்ற வேளையில் ஓரிடத்தில் கூட்டம் அதிகமாகி ஒவ்வொருவராக இறங்க கவனமாக நடந்து கொண்டிருந்த வேளையில் என்பின்னால் சரக் சரக் என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்ப்பதும் பின்பு கவனமாக இறங்குவதிலும் அவதானமாயிருந்தேன். பலர் இடிபட்டுக் கொண்டிருந்தார்கள். எனது சோல்னாப் பையை சரிசெய்து கொண்டு இறக்கத்தில் இறங்கி “இந்த வேளையில் நாம் எமது இரு கைகளாலும் இருமுடி சரிந்து விழாவண்ணம் பிடித்துக் கொண்டு கண்களைப் பாதையில் நிலைப்படுத்தி சரணம் விழித்துக் கொண்டு சமனிலையைப் பேணிபடி நடந்து செல்வோம். பெரியாணை வட்டம் தாண்டியப pன் சிறியாணை வட்டத்தில் வத்தகைப் பழத்தின் நீர் குடிப்பதற்காக இருமுடியை இறக்கி வைக்க எனது சோல்நாப் பையைக் கழற்றிய போது தாவளத்தில் இருந்த ஒரு மணிகண்ட சுவாமி எனது சோல்னாப் பையை யாரோ வெட்டியிருக்கிறார்கள் என்று கூறவும் அப்போதுதான் என்னிடம் குருசுவாமி தந்த ரூபா 10,000 இருப்பது ஞாபகத்துக்கு வந்தது. அவசரம் அவசரமாக இருமுடியை இறக்கி வைத்துவிட்டு சோல்னாப்பையைப் பார்த்தபோது பம்பா கணபதிக்கு அடிக்க வேண்டிய தேங்காயும் கற்ப+ரமும் முன்பாகத் தெரிந்தது. கைப்பையின் உள்ளே பத்திரமாக நூறு ரூபாத் தாள்கள் கட்டாக குருசுவாமி தந்த பணம் அப்படியே இருந்தது. பின்னர் அந்த சுவாமியின் கூற்றுப்படி தலையிலேயே வேட்டி ஒன்றினுள் சோல்னாப் பையை வைத்து அதன்மீது இருமுடியை வைத்து பம்பை நதிக்கரையை அடைந்த போது ஒருநாளும் இல்லாதவாறு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. கன்னிமூலகணபதிக்கு முன்பாக இருந்த படிக்கட்டினால் மாத்திரமே பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அதிலும் சந்தேகத்திற்கு இடமான பக்தர்களின் சோல்னாப் பைகள் சோதனையிடப்பட்டன. விமான நிலையத்தில் இருப்பது போல பம்பா கணபதி ஆலய சுற்றுவட்டத்தில் சோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அதனூடாகவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இது நடந்தது 13.01.1999 புதன்கிழமை. ஒருசில முக்கிய பிரமுகர்களுக்காக (“V.I.P”) வருகின்ற அத்தனை அடியார்களையும் சோதனையிடுவது ஒரு முறையான செயல் அல்ல. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்கள் ஒன்றுடனொன்று தொடர்புபடுத்திப் பார்க்கும்போது அனர்த்தத்துக்கு போதுமான காரணங்கள் பல கிடைக்கும்.

எமது யாத்திரைக் குழு மகர சங்கிராந்தி தினத்தன்று பம்பையில் தங்கி - ஜோதி பார்த்த மறுதினம் அன்னதானம் - பம்பா சக்தி மற்றும் பம்பா விளக்கு நிறைவு செய்து அடுத்த நாள் அதிகாலையிலேயே சுவாமி தரிசனத்திற்காக சபரிமலை சென்று நெய்யபிஷேகம் செய்வித்து அதன்பின் அலங்கார ரூபத்திலிருக்கும் ஐயனைத் தரிசித்து இரவு பம்பைக்கு வந்து புறப்படுவது வழக்கம்.


ஜோதி பார்த்தவுடனேயே பலர் மலைக்குச் செல்வதற்கும், பலர் வீடு திரும்புவதற்கும் ஆயத்தமாகி நெருக்கியடித்துக் கொள்ளுவது வழமை. மழைபெய்திருந்த காரணத்தாலும், தற்காலிகமாக வெட்டிச் சமப்படுத்திய மணற்திட்டிகள் கூட்டத்தின் பாரத்தால் சரிந்து கீழே இருந்தவர்கள் மீது விழுந்தமையாலேயே மூச்சுத் திணறி இப்பரிதாபகரமான நிகழ்வு நிகழ்ந்தது. மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படும் என்ற செய்தியுடன் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பினும் இன்றுவரை சரியான காரணத்தை எவரும் அறிவிக்க வில்லை. இந்தச் சம்பவத்திற்கும் இங்கு நம்நாட்டில் உள்ள இந்துக் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும் முடிச்சுப் போடுவதுதான் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆலயம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகப் பூசைகள் இன்றிப் பூட்டப்பட்டு இருக்கின்றது. இங்கு நடைபெறும் மார்கழிமாத இராமர் பஜனைப் பிரச்சினையால் இந்த ஆலயம் இந்நிலைக்க ஆளாகியது. ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் தான் நான் சபரிமலைக்குக் கொண்டுபோகும் தேங்காயை பூசையில் வைத்து எடுத்துச் செல்வது வழக்கம். கடந்த வருடத்திற்கு முன்னரே 1997 இல் சபரிமலை யாத்திரையை நிறைவு செய்து கொண்டு திரும்பிய பின் இந்த ஆலயத்தில் வைத்தே எனது பிரசாதத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஓடோடிச் சென்ற போது ஆலயம் பூட்டப்பட்டு இருந்தது. அதன்பின் கடந்த வருடமும் நான் உள்ளுராட்சித் தேர்தல் முடித்துக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வந்தபின் சென்றேன். அப்போதும் ஆலயம் பூட்டப்பட்டிருந்தது. கடந்த 16.04.1998 அன்று இவ்வலயத்தில் தீவிபத்து ஒன்று நடந்ததைச் சுட்டிக்காட்டி செயலாளருக்கு அவ்வாலயத்தின் அறங்காவலர் “தலைவர்” எழுதிய பிரதி இந்தத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தும் இதுவரை எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுத்தாகத் தெரியவில்லை. குறிப்பிட்ட ஆலயத்தின் அனுசரணையோடு நடைபெறும் அறநெறிப் பாடசாலையின் போசகராக நான் முன்னர் இருந்தேன். 23.10.1994 இல் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்டத்தில் இந்து சமயப் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த 7 அறநெறிப் பாடசாலைகள் பங்குபற்றாமல் பகிஸ்கரித்த காரணத்தால் அப்போட்டிகள் விசாரணையின் பின்னர் 5.03.1993 இல் மீண்டும் நடாத்தப்பட்டது. அதற்கான பரிசில்கள் இன்றுவரை வழங்கப்படவில்லை. இந்த வரைவிலக்கணத்தில் ஒழுங்காக இங்குள்ள கடமைகளைச் செய்ய முடியாத திணைக்களம் எவ்வாறு சபரிமலை யாத்திரையில் சம்பந்தப்பட்டு தீர்வுகாணப் போகின்றது. எனது மனக் கவலை யாதெனில் கடந்த 3 வருடங்களாக இந்த ஆலயத்தின் சுற்றுவீதியில் உள்ள மரங்களில் இருந்து பெற்ற தேங்காய்களையே ஒவ்வொரு தடவையும் நான் யாத்திரையின் போது நெய் நிரப்பி இருமுடியில் சுமந்து செல்வேன். இம்முறை மாலையிட்ட பின் இந்த ஆலயத்தை வந்து திறந்து பார்க்கவுமில்லை. இங்கு தேங்காய் பூசையில் வைக்கவுமில்லை. இந்தக் குறையும் இப்படிப்பட்ட அனர்த்தத்திற்குக் காரணம் ஆகுமா என்ற வினா என் மனதில் எழுகின்றது. கந்த 14.09.1992 சிவராத்திரி தினத்தன்று குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குச் சென்ற என்னை ஒரு ஆசிரியர் (எனது நெருங்கிய நண்பரும் கூட) சபரிமலை குறித்தும் இவ்வாலயம் குறித்தும் என்னைக் கேட்ட சில கேள்விகள் குற்றம் சுமத்துவது போல உள்ளுர என்னை உறுத்துகின்றது. குறிப்பிட்ட இந்த ஆலயத்தில் மிகச் சிறப்பாகப் பல தடவைகள் நவராத்திரி விழாவைச் சிறப்பாக நடாத்தி வந்தோம். கடந்த வருடம் நவராத்திரி நடக்கவுமில்லை. என்னை அழைக்கவுமில்லை. நானும் போகவுமில்லை. இங்குள்ள மக்கள் செய்கின்ற குறைகளால் அங்கு அனர்த்தம் ஏற்பட்டிருக்குமா என்றும் ஒரு வினா எழும்புகின்றது. காரணம் இங்கு மலையகத்தில் வாழுபவர்களுக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது.

குறிப்பிட்ட கட்டுரையில் பிஸ்னஸ் ஆகக் கருதுவோர் என்ற ஒரு சொல் இருக்கின்றது. உண்மைதான். சில பக்தர்கள் விமான நிலையத்தில் தீர்வையற்ற வியாபார நிலையங்களில் மதுபானப் போத்தல்களை எடுத்துச் செல்வதும் இங்கிருந்து போவோர் பலர் தமது பயணப் பொதிகளில் கராம்பு, ஏலம் போன்றவற்றை எடுத்துச் செல்வதும் சர்வசாதாரணமே. ஆனால் எமது யாத்திரைக் குழுவில் இப்படியான தேவையற்ற செயல்களை நாம் அனுமதிப்பதில்லை. ஆனால் பல குழுவினர் சுங்கப்பகுதியில் இதனால் பலமணிநேரம் தாமதப்படுவதை என் கண்களால் நேரடியாகப் பார்த்திருக்கின்றேன்.