அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label விசனம். Show all posts
Showing posts with label விசனம். Show all posts

Saturday, May 22, 2010

தமிழருக்கு ஏன் இந்த தலைகுனிவு!

சங்கம் வைத்த தமிழன் இன்று பல
சங்கங்கள் வைத்திருந்தாலும்
தரணியில் தாழ்வுற்றதும்
தலைகுனிந்ததும் காரணம் யாதோ?

சங்கிலியன் வன்னியன் விக்கிரமன் என
பாராண்ட மன்னர் நீதிக்காய் அரசியற்ற,
நீதியைப் புறந்தள்ளி - நிதிக்காக
கொள்ளையும் கொலையும்தான்
எம் கொடுங்கோல் என ஆட்சிசெய்து
குடிமக்களை குலைநடுங்கச் செய்த வீரமும் போய்
இருந்த இடம் தெரியாது அழிந்தொழிந்து போனோமே!

இருந்த ஆட்சியில் நியாயமற்ற காரணத்தால் இன்று
நாடுகடந்த அரசு என்னும் பெயர் சொல்லி
இருந்த மக்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு
இடம்பெயர்ந்து வாழவந்த தமிழரையும்
இடிபடச் செய்யும் கோணங்கித்தனமான
புத்தியை யார் ஏற்பார்?

பந்து விளையாட்டுக்காய்
பள்ளி அதிபரைக் கொன்றவரும்
பாசாங்கு செய்து பழி தீர்த்த வன்மையும்
மறுபேச்சு உரைத்திட்ட
மனிதரையும் கொன்றொழித்தவர்தான் நம்
தேசத்தின் தலைவர் என மதியிழந்த மனிதரும்
மறுபேச்சின்றி தேர்ந்தெடுத்த
மக்களும் இன்று படும்பாடு
மதியுள்ளவரே சிந்தனை செய்வீர்!

பொதுமறை தந்த வள்ளுவன் சொன்ன
கொடுங்கோன்மை அரசின் துன்பத்தால்
மக்கள் சிந்திய கண்ணீரும் சாபமும்
இருந்த ஆட்சியையே இல்லாமல் செய்ததா?

Thursday, February 25, 2010

தேர்தல் பம்மாத்துகள் - புதியவர்களின் வருகை - வாக்குகள் சிதறும் நிலை!

தேர்தல் நாள் நெருங்க நெருங்க – நடக்கின்ற – நடக்கப் போகின்ற செயல்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்ற நிலையில் இதை மிகவும் விரக்தி நிலையில் எழுதுகின்றேன்.

தற்போது கிடைத்துள்ள செய்திகளின்படி பார்த்தால் இந்தத் தடவை வடக்கு கிழக்கில் தமிழ் வாக்காளர்களின் வாக்குகள் சிதறி பாராளுமன்ற ஆசனங்கள் கடந்த 2004இல் பெற்றதில் அரைப் பங்காகுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

Sunday, July 26, 2009

இலங்கையில் என்ன நடக்கிறது - என்ன நடந்தது என்று அறியாமல் தமது எண்ணத்துக்கு எழுதும்......பகுதி 1

பதிவர்கள் எல்லோருக்கும் எவ்வாறு தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் தாற்பரியம் இருக்கிறதோ அதைப் போலவே வாசகர்களாகிய பொதுமக்களுக்கும் தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையும் விமர்சிக்கும் உரிமையும் இருக்கிறது! இதில் கோபமடையும் பதிவர்கள் அறிவற்றவர்களே! அறிவுடையவன் மனிதனாக வாழ விரும்புவான், மனிதத்துவத்துடன் நடந்து கொள்வான் - என்பது எனது அறிவுக்கு எட்டிய உண்மை!
இன்றைக்குப் பதிவர்கள் பலர் இலங்கையில் என்ன நடக்கிறது - என்ன நடந்தது என்று அறியாமல் தமது எண்ணத்துக்கு எழுதும் - குதர்க்கமான - அறிவற்ற தனமான - பதிவுகளை இட்டுவருவது வருத்தத்திற்குரியதே! ஒரு நாளைக்கு குறைந்தது 2 தடவையாவது நாட்டின் எப்பகுதிக்கோ கண்டிப்பாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளுபவன் என்ற வகையில் இன்றைய மிக இக்கட்டான நிலையில் இதை பதிவிட விரும்புகிறேன். கடந்த கால சம்பவங்களை விடுத்து இன்றைய மிக மொசமான நிலையில் இருக்கும் எமது வன்னி மக்கள் படும் அவலத்தை எவருமே கவனத்தில் எடுக்காமல் இருப்பதே எனக்குப் பெரிய வேதனை!
ஆயுதப் போராட்டம் இன்று நசுக்கப்பட்டு முடிவடைந்த நிலையில்(இப்படியான ஒரு கருத்துப்பட இன்று ஏகப்பிரதிநிதிகளின் வால்களாக தேர்தலில் போட்டியிட்ட சம்பந்தனே சொல்லியிருக்கும் நிலையில் ) மக்களை நட்டாற்றில் கொண்டு வந்து விட்டுவிட்ட இவர்கள் நாடு கடந்த அரசு அமைக்கும் பணியில் மேலும் தமது போராட்டங்களைத் தொடங்க இருக்கிறார்கள்!
துப்பாக்கிகளை மாத்திரம் நம்பியிருந்தவர்களை முற்றாக நம்பிய வன்னி மக்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இப்போது படும் அல்லற்படும் நிலைக்கும் அவர்கள் வன்னியில் பத்தோடு பதினொன்றாக செத்திருப்பதுமேல்!
285,000க்கும் அதிகமான மக்கள் எதற்காக ஏன் இப்படி அல்லல்பட வேண்டி வந்தது என்பதை எவருமே ஆராயாமல் இவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய 2 பகுதினரையும் விமர்சித்தும் பாராட்டியும் எழுதும் ஊடகங்களும் சரி பதிவர்களும்சரி விடுதலைப் புலிகளின் அநீதியான செய்கையைக் கண்டிக்காமல் சும்மா புகழ்பாடுவதிலும் வீரப்பிரதாபங்களை எழுதுவதிலும் தமது சக்தியைச் செலுத்துவதுதான் வேதனை! இதை நான் குறிப்பிடுகிறேன் என்பதால் என்னை அரச உளவுக்காரன் என்று நீங்கள் கருதினால் நான் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது - எனது பழைய இடுகைகளை மட்டும் பாருங்கள் என்றுதான் சொல்ல முடியும்.
(மீதி நாளை தொடரும்)

Thursday, July 23, 2009

சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லையில்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சர்கள் விஜயம் - அறிவுடன் யாரிருக்கின்றாரோ – நானறியேன் பராபரனே!

சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லையில்! யாழ் மாநகர சபை – வவுனியா நகர சபை – ஊவா மாகாண சபை தேர்தல்களில் மக்கள் தமது உண்மையான நியாயமான நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்!

நான் எதையும் அதிகமாக விளக்க வர விரும்பவில்லை! தற்போதய நிலையில் அது சாத்தியமும் இல்லை.

மலையக மக்கள் தமது வாழ்க்கையில் இதுவரை ஏதேனுமொரு முன்னேற்றத்தைக் கண்டிருந்தால் தாராளமாக உங்கள் மனச் சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள்!

வடக்கின் பிரதானமான நகரங்களில் இரண்டான யாழ்ப்பாண மாநகரமும், வவுனியா நகரமும் இதுவரை என்ன முன்னேற்றத்தைக் கண்டன! இப்போது யுத்தத்தை வெற்றி கொண்ட ஆணவத்தில் - அப்பாவி மக்களை கம்பி வேலிகளுக்குள் வைத்துக் கொண்டு – சிறுபான்மை இனம் என்ற ஒரு சாராரே இல்லை - இவர்கள் கேட்பதைக் கொடுக்க முடியாது – எதை எப்போது கொடுக்க வேண்டும் எனச் சொல்லிய ஜனாதிபதியின் தற்போதைய அரசின் முழு எதிர்பார்ப்பும் கிடைக்கவிருக்கின்ற உலகவங்கியின் நிதிதான். உலகை ஏமாற்றும் அதனோடு வாய்சவால்விடும் அரசுக்கு - பழையதை சுலபமாக மறந்து விட தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றும் …. இல்லை! எழுதிய ஒப்பந்தங்களுக்கு நடந்த கதி யாவரும் அறிவர்! சொல்லும் வாக்குறுதிகளை நம்ப நாம் தயாராக இல்லை! சட்டமாக்குங்கள் பின்னர் பார்க்கலாம்! அதையும் நம்ப முடியாது – சில சட்டங்களும் கிடப்பிலேதான்!
இன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சர்கள் விஜயம் - சாதாரண தேர்தல் ஒன்றுக்கு எத்தனை செலவு? இவற்றை அறிவிருப்போர் அந்த அபலையான மக்களின் தேவைக்குப் பயன்படுத்தலாமே! அறிவுடன் யாரிருக்கின்றாரோ – நானறியேன் பராபரனே!

Wednesday, July 22, 2009

யாரொடு நோவேன் யார்க்கெடுத்து உரைப்பேன்! - இது நியாயமா?

காட்டில் இருப்பவருக்கு வீட்டில் விருந்து! நாட்டில் - வீட்டில் இருந்தவர்களின் பரிதாப நிலை!

பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டின் ஜனாதிபதியின் நடவடிக்கை!