அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label வேண்டுகோள். Show all posts
Showing posts with label வேண்டுகோள். Show all posts

Tuesday, April 12, 2011

புதுவருடக் கொண்டாட்டங்களில் பங்குபற்றுமாறு மக்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!

மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க,
கட்டளை அதிகாரி,
பலாலி.

அன்புள்ள ஜெனரல்,

உங்களுக்கு என்னை நான் அறிமுகப்படுத்த தேவையில்லை என நினைக்கின்றேன். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த நாட்டு பிரஜையாக நான் வாழ்ந்திருக்கின்றேன். எனக்கு தற்போது 78 வயதாகி அரைநு}ற்றாண்டுக்கு மேல் அரசியலில் ஈடுபாடுகொண்டு 17 ஆண்டுகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன். நான் அரசியலையும் நிர்வாகத்தையும் கலந்து பேசுபவன் அல்ல என்பதை தாங்கள் அறிய வேண்டும். இடம்பெயர்ந்து துன்பத்தில் வாழ்ந்த மக்களுக்கு எத்தகைய மனிதாபிமான சேவையை இராணுவத்தினர் ஆற்றியுள்ளனர் என்பதை நான் மிகவும் பாராட்டியிருக்கின்றேன். இராணுவத்தையும் பொலிஸையும் சேர்ந்த பெண் அதிகாரிகள் அங்கவீனர்கள், கடும் நோயாளிகள், முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்களை எவ்வாறு பராமரித்தனர் என்பதை நான் அறிவேன். அண்மைகாலத்தில் தங்களுக்கு நடந்ததை பிள்ளைகள் மறக்கக்கூடிய வகையில் எவ்வாறு பெண் அதிகாரிகள் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என்பதையும் நான் அறிவேன். இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் கூட இவர்களை வெகுவாக பாராட்டியுள்ளனர். படையினர் தமது கடமையை திறமையாக செய்துள்ளனர். தற்போது அவர்கள் ஓய்வெடுக்க வேண்டிய நேரம்.

வடகிழக்கு மக்கள் ஒரு ரக இராணுவத்தை ஒத்த ஆட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேல் கஷ்டப்பட்டார்கள் என்பதை நான் தங்களுக்கு கூறத்தேவையில்லை. அவர்கள் போதியளவு அவமானம், சங்கடம், அச்சுறுத்தல். மிரட்டல் ஆகியவற்றுக்கு ஆளாகியிருந்;தனர். இந்த நிலைமை மீண்டும் திரும்புவதை மக்கள் விரும்பவில்லை. இச் சம்பவங்கள் அவர்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளமையால் குறிப்பாக பெண்கள் ஒரு துப்பாக்கியை கண்டதும் பைத்தியம் பிடித்தவர்கள் போல் கடந்த காலத்தை நினைத்து மிரண்டு ஓடுகின்றனர்.

நடந்து முடிந்த நல்ல சம்பவங்கள் தற்போது இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன. வடகிழக்கில் வாழ்கின்ற மக்கள் ஒரு துப்பாக்கியையோ, சீருடை அணிந்த இராணுவத்தினரையோ காண விரும்புகின்றார்கள் இல்லை. அவ்வளவுது}ரம் மிக மோசமாக அவர்கள் கடந்த காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். அவர்கள் தமது உடமைகள் அத்தனையையும் இழந்துள்ளனர். யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகிய பின்னரும் முன்பு வசதியாக வாழ்ந்த வீடுகள் போலன்றி ஆதிகால மனிதர்களின் வீடுகளையொத்த வீடுகளில் வாழ்கின்றனர். ஆண்கள் தனது மனைவியரையும், மனைவியர் தமது கனவரையும் இழந்துள்ளனர். சிலர் தமது பிள்ளைகளை இழந்தும், வேறு சிலர் தம் பிள்ளைகளை தடுப்பு முகாமிலும் எதுவித குற்றமும் புரியாமலே தடுத்து வைக்கப்பட்டுள்ளதை பாhக்கின்றனர். பலர் குடும்பத் தலைவரை இழந்துள்ளனர். பிள்ளைகள் பலர் பாடசாலைக்கோ, வேறு வேலைக்கோ போக முடிவதில்லை.

இவ்வாறான சு10ழ்நிலையில் இம் மக்கள் புதுவருடத்தை கொண்டாடுவது அவர்களுடைய கற்பனைக்கு எட்டாத விடயமாகும். அவர்கள் தமது வாழ்வில் சந்தோஷம் பற்றி நினைக்க முடியாமல் உள்ளனர். சிறு பிள்ளைகள் சில தமாஷாக்களால் கவரப்படலாம். ஆனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாகவும், குது}கலமாகவும் இருக்கக்கூடிய நிலைமை இல்லை. அவர்கள் தனிமையில் விடப்படுவதையே விரும்புகின்றனர். அவர்கள் இயல:பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு இன்னமும் காலம் உண்டு. பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளில் பலவந்தமாக இவர்களை சேர்ப்பதை தவிர்க்குமாறு தயவ செய்து தங்கள் அதிகாரிகளுக்கு கட்டளையிடுங்கள். மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு கடந்தகாலத்தில் நடந்ததை மறக்க அவர்களின் உற்றார் உறவினர்கள் திரும்பி வரும்வரை அன்றேல் அவர்களுக்கு என்னகதி ஏற்பட்டது என்பதை தெரியும் வரை கால அவகாசம் வழங்குங்கள். தயவு செய்து கச்சேரிக்கும், விளையாட்டு கழகங்களுக்கும் புதுவருட கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு மக்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாமென அறிவுறுத்தவும்.

வாழ்க்கையை கொண்டாடுவதற்கு முன்பு அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான நினைவுகளை மறக்க அவகாசம் கொடுங்கள். பெருமளவில் ஓட்டாண்டியாக்கப்பட்ட வன்னி மக்களுக்காக அனுதாபப்படுங்கள் என யாழ் குடாநாட்டு மக்களை விநயமாக கேட்டுக்கொள்கிறேன்.

வீ. ஆனந்தசங்கரி,
தலைவர் - தமிழர் விடுலைக் கூட்டணி.
11.04.2011.

Saturday, March 27, 2010

சொல்வேந்தர் சுகிசிவம் கருத்து - உண்மைகளை ஏற்காதோர் பழியுரை!

சன்தொலைக்காட்சியில் - தமிழ் மாலை -இந்த நாள் இனிய நாள் நிகழ்வில் இலங்கைத் தமிழர்படும் இன்னல்கள் குறித்து கருத்துத் தெரிவித்த சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களை - தமிழ் மன்னன் எல்லாளனின் பெயர் கொண்ட ஒரு பதிவர் தனது இணையத்தளத்தில் அறிவற்ற தனமாக விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இந்து கலாசார அலுவல்கள் அமைச்சராக பி.பி.தேவராஜ் அவர்கள் பணிபுரிந்த காலப்பகுதியிலிருந்து சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களும் வேறும் பலரும் இலங்கைக்கு விஜயம் செய்து தமது அறிவு சார்ந்த ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்பி வருவது யாவரும் அறிந்ததே! அவர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்குள்ள உண்மை நிலைகளைக் கண்டறிந்தபின் வெளியிட்ட இத்தகவல்கள் அனைத்தும் உண்மையே!

மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வெளியேறவிடாமல்(Pass கொடுக்காமல்) தங்களுடன் வைத்திருந்து - கொன்றொழித்தபிறகு பல ஏகப் பிரதிநிதிகள் தம் உயிரைக் காப்பாற்ற - ஒளித்து - ஓடி இன்று பல நாடுகளிலும் தஞ்சமடைந்துள்ள நிலையில், வாழும் மக்களுக்காக நியாயமான - நடைமுறைக்கு ஏற்ற கருத்துச் சொன்ன சொல்வேந்தரின் கருத்துக்கு - ஆட்டையும் ஓநாயையும் முன்னிறுத்துவது தங்களின் மிருகத்தனத்தையே (இனம் இனத்தைச் சாரும் என்பதுபோல) ஒப்புவிக்கிறது போலாகிறது.

யாராவது எமக்கு நியாயமான கருத்துக்களைச் சொன்னால் எங்களில் சிலர்(உங்களைப் போன்றோர்) அதை ஏற்க முடியாத நிலையிலல்லவா இருக்கிறோம்.

வெளிநாடுகளில் பல இன,மத,நிற,மொழி வேறுபாடுகொண்ட - மனிதர்களோடு வாழும் நீங்கள் - சராசரி மனிதராக - உண்மைத் தமிழுணர்வுள்ளவராக - வாழ முதலில் முயற்சி செய்யுங்கள்!

Wednesday, March 17, 2010

யாழ் மாநகர சபை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது?

கடந்த 22.2.2010இல் சுற்றுலா வரும் பெரும்பான்மையினப் பயணிகளால் யாழ் பொது நூலகத்தின் அமைதி பாதிப்பு – வாசகர்கள் படிப்பதில் சிரமம் - நூலகர் நெஞ்சம் குமுறுகிறார்! என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதினேன்.

1998 முதல் 2003வரை தமிழர் விடுதலைக் கூட்டணி(9) - புளொட்(6) -ஈபிடிபி(6) - ஈபிஆர்எல்எப்(2) ஆகிய நான்கு கட்சிகளும் மாநகரத்தை மிகவும் கெடுபிடிகளுள்ள நிலையில் ஏதோ நிலமைக்குத் தகுந்தபடி பராமரித்து வந்தோம்.

இன்று மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி(13), தமிழரசுக் கட்சி(8), சுயேட்சை(1), தமிழர் விடுதலைக் கூட்டணி(1) என இயங்குகிறது.

அன்றைய காலகட்டத்தில் நடைபாதை வியாபாரிகள் மீதும், யாழ்ப்பாணப் பேரூந்து நிலையத்தின் அருகிலிருந்த மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல், டீசல் வியாபாரிகளை வேறு இடங்களுக்கு அப்புறப் படுத்தி வீதியை நிர்வகிக்க நாம் போதிய பெரும்பான்மைப் பலமின்றி ஏனைய கட்சிகளின் ஆதரவோடு - பலத்த விமர்சனங்களுடன் செயற்பட்டோம். நாம் அன்று விடுதலைப் புலிகளுடைய பலத்த தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த நிர்வாகத்தை நடத்தி வந்தமை யாவரும் அறிந்ததே. அன்றைய பொழுது மிகவும் அவலநிலையிலிருந்தது. மாநகரத்துக்கு அறவிடும் வரியைக்கூட நாட்டு நிலைகருதி அறவிடுவதிலும் தளர்வுநிலை காட்டப்பட்டது. தமிழ் வியாபாரிகளை நாம் நிர்வாக ஒழுங்குக்காக தனியாக ஒதுக்கி நடவடிக்கை எடுத்தமையை - தற்போதைய நிர்வாகத்தினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இன்று முன்னரைப் போல ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லை. யாரும் வரலாம் போகலாம். அழிந்து போயிருக்கும் மாநகர சபையை மீள நிர்மாணிக்க இப்போது ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கொழும்பில் மாநகர சபை வரிகள் அறவிடுவதுபோல - யாழ் மாநகரத்துள் பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் - வியாபாரிகளிடம் வரி அறவிடவும், நல்லூர் ஆலய சுற்று வட்டாரத்தை துப்பரவாக வைத்திருக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.


யாழ்ப்பாணத்திற்கு(மாநகர சபை எல்லைக்கு) வெளியிலிருந்து ஒருவர் தனது பொருட்களை நடைபாதையில் விற்க ஒரு காலத்தில் பெரிய சட்டம் பேசிய நாம் எதற்காக இன்று தென்னிலங்கையிலிருந்து வருபவருக்கு எதுவும் செய்ய முடியாதுள்ளது. நிர்வாகம் அரசகட்சிப் பெரும்பான்மை என்பதாலா என்ற ஒரு வினா எழுகிறது.


பண்ணையில் மீன்சந்தை - றீகல் தியேட்டருக்குப் போகும் ஒழுங்கையில் நடைபாதை வியாபாரிகளுக்கு கடை அமைத்துக் கொடுத்ததுபோல - திறந்த வெளியரங்குக்கு அருகில் அல்லது பண்ணை தொலைத் தொடர்பு நிலையத்திற்கு முன்பாக இருக்கும் வெளியான பகுதிகளில் அவர்கள் தமது விற்பனையை நடத்த ஏதேனும் ஒழுங்குகளைச் செய்து குறுகிய யாழ்ப்பாண நகர வீதிகளில் இன்னும் மக்கள் அல்லது வாகன நெருக்கத்தை அதிகரிக்காது குறைக்க முறையான ஒரு ஒழுங்கைச் செய்வது அவசியமென அங்கு நடைபெறும் நிகழ்வுகளிலிருந்த அறிந்து கொண்டு இந்தக் கருத்தை முன்வைக்கின்றேன்.

இராணுவக் கெடுபிடிகள் - ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த ஒரு கால கட்டத்தில்தான் வீதிப் போக்குவரத்து பற்றிக் கலந்துரையாட ஏற்பாடு செய்த கூட்டமொன்றில் அன்றைய முதல்வர் பொன். சிவபாலன் மற்றும் மாநகர ஊழியர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலர் கொல்லப்பட்டதையும் நினைவுபடுத்தி இன்று இப்படியானதொரு ஏற்பாடு கட்டாய தேவை என்பதையும் உரியவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

எங்கிருந்தாலும் நான் யாழ்ப்பாண நகரின்மீது ஒரு தனியான அக்கறையோடுதான் இருக்கிறேன் என்பதையும் சொல்லி இதை முடிக்கிறேன்.

என்றும் யாழ் நகரின்மீது அக்கறையுள்ள
தங்க. முகுந்தன் (முன்னாள் மாநகர சபை உறுப்பினன் - TULF)

Monday, February 22, 2010

சுற்றுலா வரும் பெரும்பான்மையினப் பயணிகளால் யாழ் பொது நூலகத்தின் அமைதி பாதிப்பு – வாசகர்கள் படிப்பதில் சிரமம் - நூலகர் நெஞ்சம் குமுறுகிறார்!


நாடு கடந்து இருப்பினும் அடிக்கடி யாழ்ப்பாண மாநகர விடயங்களில் அதிகளவு கவனம் செலுத்தும் நான் கடந்த வாரமும் இன்றும் யாழ்ப்பாண பொது நூலகருடன் தொடர்பு கொண்டபோது அவரது பேச்சில் விரக்தி தொனித்தது. என்ன என்று விலாவாரியாக விசாரித்தேன்.

Friday, February 19, 2010

இதுவரை காலமும் எமக்குள் முட்டிமோதிய நாம் இனிமேலாவது ஐக்கியப்படுவது அவசியம்! இதுவரை நடந்தவற்றுக்குப் பின்பாவது தமிழ்க்கட்சித்தலைவர்கள் இதை உணர்வார்களா?


தற்போது தேர்தல்கள் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 66 அரசியல் கட்சிகளில் 18 தமிழ்க் கட்சிகள் இருக்கின்றன. இவற்றின் தலைவர்கள் ஒன்றுபட்டு மக்களுடைய பிரச்சனைகளுக்கு கௌரவமான தீர்வைக் காண முன்வரவேண்டும்!

Friday, November 27, 2009

இந்து சமுத்திரத்தின் முத்தெனத் திகழும் எம் ஈழத்திருநாட்டை அமைதிப் பூங்காவாக மாற்ற முன்வாருங்கள்!



ஜனாதிபதித் தேர்தல் வருகிறது!
மீண்டும் அதற்கு மக்கள் தயாராகிவருகிறார்கள்!
இம்முறை யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்!
யாராவது ஒருவர் நாம் பிறந்த இந்நாட்டில் பூரண சுதந்திரத்தோடு வாழ வழியமைத்துத் தருவார்களா என நாம் ஆராயவேண்டும்!
எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பிறந்த நாடுதான் என் பொன் நாடு!
அந்த ரீதீயில் யாவரும் சரிசமமாக சுதந்திரமாக அனைத்து உரிமைகளோடும் வாழ எம் நாட்டில் முதல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

வடக்கு கிழக்குடன் ஏனைய பகுதிகளில் வாழும் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி கண்டிப்பாக ஆராயவேண்டும்!

சுவிற்சர்லாந்தின் அரசியலமைப்பு முறையை இளம் அரசியல் ஆர்வம் மிக்கோர் படிக்க வேண்டும் - உலகின் அமைதியான - அழகான நாடெனத் திகழும் இந்நாடு எம் நாட்டை விடச் சிறியது! 4 மொழிகளுக்கு அரச அந்தஸ்து அளித்து ஜனநாயகப் பண்புகளைப் பேணிவரும் நாட்டை உதாரணமாகக் கொண்டு எம்நாட்டையும் அமைதிப் பூங்கவாக மாற்றி - அனைவரும் ஒரு தாய் மக்களென வாழும் நிலையைக் கொண்டு வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.



இன - மத - மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதத்தன்மையுடன் இந்நாட்டை கட்டியெழுப்ப இளையவர்கள் முன்வரவேண்டும்.


















Monday, November 9, 2009

ஈழத்தவருக்காக - ஜோதிஜியின் தேவியர் இல்லம் - இனிமேல் புதிதாக பிறக்கும் தமிழர்களின் எச்சமும் மிச்சமும் உணர்வு மிக்க தமிழ்மக்களாக மாற்றிவிட உதவுமானால்

ஈழத்தமிழர்களில் அதிக அக்கறைகொண்ட பதிவர்களில் அண்மையில் என்னுடன் அறிமுகமாகிய நண்பர் ஜோதிஜி அவர்களுடன் இன்று சில நிமிடங்கள் உரையாட முடிந்தது. ஈழத்தமிழர் பிரச்சனைகள் - அங்கு தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள் - தமிழர்களுக்கிடையில் ஓற்றுமையின்மை பற்றி பேசினோம். ஈழத்தமிழர்கள் அகதிகளாக தென் இந்தியாவில் மிகவும் அசௌகரியங்களை எதிர்கொள்ளுவதாகவும் அவர்களுக்கு அப்படியான ஒரு நிலை ஏற்படுவதற்கு தாம் மனம் வருந்துவதாகவும் என்னுடன் கவலையைப் பகிர்ந்துகொண்டார்.
இலங்கையினுள்ளே இருக்கும் பிரச்சனைகளை, வாழ்வியல் அவலங்களை, முடிந்தவரையிலும் அப்படியே அறிந்து கொள்ள ஆர்வம் அவருக்கு இருக்கிறது. அவர் விரும்புவது தொடர் இடுகையின் வாயிலாக - பின்னூட்டத்தின் வாயிலாக மொத்த தமிழனத்திற்கும் தெரிவிக்க வேண்டிய வியங்களை - தெரிந்தவர்கள், புரிந்தவர்கள், புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என அத்தனைபேரும் தனக்கு உணர்த்தினால் மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கும் என்றார் திரு. ஜோதிஜி.
நானோ தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சார்ந்தவன். அவரது குற்றச் சாட்டுகளில் எமது கட்சியும் உள்ளடக்கப்படுவதால் நான் மாத்திரம் இதில் கருத்துக்களைக் கூறுவது நடுநிலையாக அமையாது.

ஈழத்தமிழர்களில் அக்கறையுடைய சமூகசேவையாளர்கள் - குறிப்பாக எழுத்தாளர்கள் - பதிவர்கள் - அவரது தேடுதலுக்கு ஒத்துழைப்பு நல்கி அவரது விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தயவாக பதிவுலக வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி!

அவரது 2 இடுகைகளையும் இங்கு இணைத்துள்ளேன். பார்க்கவும்!

-------
வணக்கம் தங்க முகுந்தன்
நலமாய் இருக்கிறீர்களா?
உங்கள் குடும்பமும் உங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களும் என்றும் வளமாய் வாழ திருப்பூரில் இருந்து தேவியர் இல்லத்தின் ஆசிர்வாதம் கலந்த பங்களிப்பு என்றும் உண்டு.
உங்கள் இணைப்புக்கும் வாசிப்புக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.

http://deviyar-illam.blogspot.com

முழுமையாக உள்வாங்கிக்கொள்ளுங்கள். முடிந்தவரைக்கும் பகிர்ந்து கொள்வோம்
ஊடகம் மூலம் உண்மை எது பொய் எது என்று தெரியாமல் கலக்கத்தில் வாழும் என்னை போன்றவர்களுக்கு - உங்களின் வாழ்வியல் வெறும் சம்பவம் அல்ல.
அது வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் வரலாறு.
நன்றி வணக்கம்.
-----------

தங்கத்தை பெயரில் மட்டும் வைத்துக்கொண்டு தாய் நாட்டை விட்டு புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருக்கும் தங்கராஜா முகுந்தனுக்கு

திருப்பூரில் இருந்து தேவியர் இல்லம் ஜோதிஜி எழுதும் மடல்.

நலம். நலமறிய ஆவல் என்று கேட்கமாட்டேன்.

அது வெறும் வார்த்தை அலங்காரம் மட்டும் என்று நீங்கள் என்னுடன் ஸ்கைபே மூலம் பேசிய நீண்ட உரையாடல் உணர்த்தியது.

நான் தமிழன் என்றும் என்றைக்குமே சொல்ல விரும்பியது இல்லை. எனக்கும் எழுத தெரியும் என்று உணர்ந்த இந்த நிமிடம் வரைக்கும்.

காரணம் இங்கு கட்சி தமிழன், காட்சிகளை மட்டும் ரசிக்கும் தமிழன், திரையில் மட்டும் வாழும் தமிழன் என்று உணர்ந்த தமிழனத்தை இன்றைய வலைதளத்தில் அதிகம் பார்க்கும் "இடுப்புக்குள் நல்ல வ(ழி)ளிப்பு " என்று பார்த்துக்கொண்டுருப்பதால் சற்று பயமாக இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் தமிழனின் குணம் என்பது "தானே யார் துணையும் இல்லாமல் வலைக்குள் தான் போய்" சிக்கிக் கொள்கின்ற காரணத்தால்.

இன்று வரைக்கும் எனக்கு நல்ல வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுத்த காரைக்குடி மனிதன் என்று என்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்வதில் மகிழ்ச்சி.

உங்கள் உரையாடலின் மூலம் உணர்ந்த "கசிப்பு" என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. வாழ்ந்த தலைவனின் "குணம்" புரிந்து கொள்ள முடிந்தது. வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களின் "நிறம்" உணர்ந்து கொள்ள முடிந்தது.

சக மனிதனை கொன்ற விதமும், கொள்கையில் இருந்த பதவிக்கான வேறுபாடுகள் என்று அத்தனை நிறத்தையும் உணர்த்திய விதம் நான் உள்வாங்கிக்கொண்ட சமாச்சாரங்கள்.

சராசரியாக பார்க்கும் போது நீங்கள் உணர்த்தியது உணர்வு பூர்வமாக இருந்தாலும், இன்னமும் கூட எனக்குள் மிச்ச சொச்சமும் உள்ளே இருக்கும் அத்தனை புத்திக்குள்ளும் அந்த "ஆளுமை" யின் வியப்பு, உங்களைப் பொறுத்தவரையில் "விபரீதம்".

அதுவே என்னைப் பொறுத்தவரையிலும் "ஆச்சரியம் அல்லது தமிழனின் வீரம்".

நான் யார் என்று தெரியாமல் என்னிடம் பேச வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் ஆச்சரியமாய் இருந்தது. சரியான நேரத்தில் உள்ளே வந்து உரையாடிய போது உங்கள் மாறாத மொழி மகிழ்ச்சியையும் தந்தது.

இலங்கை உள்ள பதிவர்களுக்கு மொத்தமாய் இணைக்கும் ஒரு வலைதளம் இருப்பதையே நேற்று தான் உணர்ந்து கொண்டேன்.

நான் கொள்கை பிடிப்பாளனோ, குனக்குன்று என்றோ பொய் சொல்ல விருப்பமில்லை. ஆனால் தொடக்கம் முதல் இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்கள் தெரிந்தே செய்த தவறுகள், உருவான கொள்கை வேறுபாடுகளினால் கிடைத்த பாடங்கள்,பரிதாப வாழ்க்கை, என்று தொடர்ந்து தொடர்ந்து இன்று உள்ளே வாழ்ந்து கொண்டுருப்பவர்களும், தொலைவில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களும் மகிழ்ச்சியாய் இல்லை. உதவும் நிலையில் இருந்த இருக்கும் இங்குள்ள தலைவர்களும் தர"மான" வர்களாகவும் இல்லை.

தமிழீழம் என்ற கொள்கை தவறா சரியா என்று என்னுடைய தொடர் இடுகை எழுத்து எங்கு கொண்டு போய் என்னை நிறுத்தும்? என்பது இன்று என்னால் முழுமையாக சொல்ல முடியவில்லை. ஆனால் ஏன் முடியவில்லை? என்பதை ஆராய்வதே இந்த தொடர் இடுகையின் நோக்கம்.

"சகித்துக்கொண்டு இங்கு வாழ்ந்து தான் ஆகவேண்டும்" என்ற பொய்மையான சிகிப்புத்தன்மை என்ற இயலாமையில் வாழும் ஒரு தந்தையாக, கணவனாக, தொழிலுக்கு சொந்தக்காரனாக என்னை நெட்டித்தள்ளிக்கொண்டுருக்கும் சிந்தனைகள் அத்தனையும் மொத்த இலங்கை தமிழர்களுக்கும் இந்த எழுத்துக்களை சமர்ப்பணம் செய்வதில் பெருமை அடைகின்றேன்.

உணர்வு, உணர்ச்சி இந்த இரண்டு வார்த்தைகளில் கூட இரண்டாவது வார்த்தையில் தான் ஒரு எழுத்து அதிகமாக இருக்கிறது. அதனால் தான் 3000 ஆண்டு தமிழனத்தின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க தோன்றியது.

மொத்தத்தில் நீங்கள் என்னுடன் பேசிய பின்பு என்னுடைய படைக்கின்ற எழுத்து எதிர்காலத்தில் படிக்கின்ற, வாழ்கின்ற புலம் பெயர்ந்த தமிழினத்தை, நிறைவேறாத தமிழீழத்தை, ஒரு வேளை இனிமேல் புதிதாக பிறக்கும் தமிழர்களின் எச்சமும் மிச்சமும் உணர்வு மிக்க தமிழ் மக்களாக மாற்றி விட உதவுமானால் என்னுடைய இன்றைய ஆற்றாமையின் அழுக்கு கழுவப்பட்டதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அவலமாய் வாழ்க்கை நடத்திக்கொண்டுருக்கும் புலம் பெயர்ந்த தமிழனத்துக்கு, அழுக்குகளுடன் வாழும் தமிழனான தேவியர் இல்லத்து பூங்கொத்து.


ஜோதிஜி
தேவியர் இல்லம். திருப்பூர்
http://deviyar-illam.blogspot.com

Sunday, October 11, 2009

எனக்கு பிடித்த சாப்பாடு - அருகிவரும் மரங்கள் - நம்மவர்களின் கவலையீனம்


இன்று பதிவிட்ட சுவிற்சர்லாந்து உணவுகளைக் கண்டபின் பின்னூட்டமிட்ட நண்பன் ஜனா நல்ல சாப்பாட்டுப்படங்களைப் போட்டு வயிற்றை நன்றாக இறுக்கிறீங்களோ என மின்னஞ்சல் தொடர்பில் கேட்டுக் கொண்டார். இல்லையடா எனக்குப் பிடித்தது எங்கள் ஊர்ச் சாப்பாடு என்றேன். அப்போது தொடர்ந்தபோதுதான் தூதுவளைச் சம்பலில் ஆரம்பித்து கூழாம்பழம், இலந்தை என்று முள்ளுமுருக்கை வரை கதைபோய் பிறகு மட்டுவில் கத்தரிக்காயும் முள்ளுமுருக்கையும் யாழ்ப்பாணத்தில் இப்போது இல்லை என்ற தகவலைத் தெரிவித்தார். 2வாரங்களுக்கு முன்னர் உதயனில் கட்டுரை வந்ததாகவும் - யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மேல் நடுகைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருப்பதாகவும்த் தகவல் தந்தார். முன்னர் யாழ்ப்பாணத்தில் மில்க்வைற் தொழிலதிபர் அமரர் க: கனகராசா அவர்கள் இருந்தபோது ஊர்தோறும் மரங்கள் நடுவதற்கு தாமே முன்னின்று மரக்கன்றுகளை வழங்கி வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் அதற்கும் வழியில்லை. அவர் இறுதியாகச் சொன்னார் ஒரு வாக்கியம் அதாவது மரந்தான் - மனிதன் மறந்தான் என்று! அருமையான வாக்கியத்தைப் பிடித்துக்கொண்டு அவருக்குச் சொல்லிவிட்டு ஓர் பதிவை இட்டேன். இந்த விடயத்தில் புள்ளி விபரங்களுடன் அவர் அவரது நண்பர் திரு. ஜெயசீலனுடன் தொகுத்து ஒரு கட்டுரையைத் தருவார். அதற்கு முன்னர் நான் பதிவிட வேண்டும் என்று நினைத்ததைப் பதிவிலிட்டேன்.











Sunday, September 13, 2009

மொக்கு கேள்விப்பட்டிருக்கிறேன் - மொக்கை என்ற சொல்லை கேள்விப்படவில்லை - அது என்ன மொக்கைப் பதிவு! யாராவது தெரிந்தவர்கள் விளக்குங்கள்!

தற்போது இலங்கையிலும் இச்சொல் பயன்படுத்தப் படுகிறதுபோல தோற்றம் பெறுகிறது. தயவுசெய்து அகராதியில் இச் சொல்லுக்கான அர்த்தத்தை யாராவது எனக்கு விளக்கிச் சொல்ல முடியுமா? இதற்குரிய ஆங்கிலப் பதத்தையும் தந்தால் மிகவும் நன்றியாயிருப்பேன். எமது நாட்டில் மொக்குத்தனமாக, முட்டாள்தனமாக, லூசாக, பைத்தியக்காரத்தனமாக என்ற சொல்தான் பாவிக்கப்பட்டுவருகிறது.