Showing posts with label TULF. Show all posts
Showing posts with label TULF. Show all posts
Wednesday, April 30, 2014
தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஒதுங்குதல்!
Sunday, June 9, 2013
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 8)
6. "State Terrorism" in Jaffna - V. Yogeswaran Member of Parliambet for Jaffna
நாச்சிமார் கோவிலடியில் மே 31 இரவு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காவலுக்கு நின்ற நான்கு பொலிசாரில் இரண்டு பொலிசார் சுடப்பட்டதன் பின்னர் கலவரங்கள் ஆரம்பமாகியது.அன்றிரவு யாழ்ப்பாணமத்திலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகமும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வெ. யோகேஸ்வரன் அவர்களின் இல்லமும் எரிக்கப்பட்டன.இப்புத்தகம் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒருவரின் சாட்சியம். அது முக்கியமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
மொத்தம் 12 பக்கங்களை உள்ளடக்கியது அவரது கடிதம்.
7. ஒரு வரலாற்றுக் குற்றம் - NON
சுவிற்சர்லாந்தில் நான் இருந்த காலப்பகுதியில் எனது கரங்களுக்கு கிடைத்த இப்புத்தகத்தில் முழுவதுமே பிழையான தகவல்கள் - அவர்கள் தாமாகவே கற்பனை செய்து எழுதியுள்ளார்கள் போலத் தெரிகிறது. இதை நான் பின்பு விபரிக்கின்றேன்.

மொத்தம் 12 பக்கங்களை உள்ளடக்கியது அவரது கடிதம்.
சுவிற்சர்லாந்தில் நான் இருந்த காலப்பகுதியில் எனது கரங்களுக்கு கிடைத்த இப்புத்தகத்தில் முழுவதுமே பிழையான தகவல்கள் - அவர்கள் தாமாகவே கற்பனை செய்து எழுதியுள்ளார்கள் போலத் தெரிகிறது. இதை நான் பின்பு விபரிக்கின்றேன்.
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
TULF,
யாழ் பொது நூலகம்,
வரலாறு,
வெ. யோகேஸ்வரன்
Thursday, June 6, 2013
மாவை சேனாதிராஜா அவர்களுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடிதம்!
கடந்த இரண்டு தினங்கள் வீரசேகரியில் பிரசுரமான கடிதம் திடீரென இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.
09.05.2013
அன்புள்ள தம்பி சேனாதிராஜா,
அண்மைக் காலத்தில் நீர் என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி பேசுவதும், பத்திரிகைகளில் எழுதுவதும் எனக்கு மிக்க கவலையை தருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக உமது விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் விட்டமைக்கு ஒரே ஒரு காரணம் உங்கள் கூட்டு இனப்பிரச்சினை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு என் தலையீடு முட்டுக்கட்டையாக அமையக்கூடாது என்பதற்காகவே. அன்றேல் நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மறுப்பு கூற முடியும். என்னைப் பொறுத்த வரையில் உங்களது செயற்பாடுகள் எதுவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதவையே. எதுவித கருத்தும் வெளியிடாது பொறுத்திருந்தேன். எது எப்படியானாலும் இனி எதையும் பொறுக்க நான் தயாரில்லை. உம்மைப் போன்றவர்களின் செயற்பாட்டால் துரோகி என்ற பட்டத்தைச் சுமக்கின்றேன். உண்மைகளை மறைக்க முடியாது. அவை வெளிவந்தால் தான் மக்கள் மத்தியில் தெளிவு ஏற்படும். ஓர் ஆயுதக்குழு பற்றிய என் கருத்துக்கள், உங்களின் தந்திரத்தால் உங்களுக்கே சாதகமாக அமைந்தது. உங்களுக்கு அதிஸ்டமாகவும் அமைந்தது. விளைவு எம் மக்களுக்கு என் சேவை கிட்டாமல் போனதே.
நீங்கள் என்னைப் பற்றி நன்றி அறிதலுடன் சிந்திக்கத் தவறிய பல விடயங்களில் சிலவற்றையேனும் ஞாபகமூட்ட வேண்டுமென என் உள்ளம் குமுறுகிறது. ஆனால் என் பெருந்தன்மை அதைத் தடுக்கிறது. உங்களுக்கு 06.11.2003 தேதியிட்டு எழுதிய கடிதம் கையிலிருந்தால் ஒரு தடவை அதைப் படியுங்கள். அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் பெரும் அரசியல் தலைவர். இனத்துக்காகத் தன் உயிரைப் பலி கொடுத்தவர். இன்று வரை என்னால் அவரின் இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை. ஆனால் அவர் அமரத்துவம் அடைந்த ப+த உடலின் சாம்பல் சூடு ஆற முன்பு அவர் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியையும் உமக்கே தர வேண்டுமென நீர் கேட்டது ஞாபகம் இருக்கா? விக்கிரமாதித்தன் கதையில் வரும் சம்பவம் போல் இவ்வளவு தைரியம் உமக்கு எப்படி வந்தது என நாம் ஆச்சரியப்பட்டோம். அக்காலத்தில் நீர் கட்சியின் ஓர் ஊழியனாகவே இருந்தீர்.
தற்போது உம்முடன் செயற்படுபவர்கள் பலருக்கு என்னைப் பற்றித் தெரியாது. தெரிந்திருந்தால், என்னைப் பற்றி விமர்சிக்கும் உமது நண்பர்கள், சின்னச்சின்ன தம்பிமார்களுக்கும் அதற்குரிய தகுதி இல்லை என்பதை உணர்வர். எனது அரசியல் அவர்களது, உமது வயதிலும் பார்க்கக் கூடியதாக இருக்கும் என நான் நம்புகிறேன். பொய், புரட்டு, களவு, சதி, ஏமாற்று, கழுத்தறுப்பு, முதுகில் குத்துவது, இலஞ்சம் ஆகியவற்றுக்கு நான் அப்பாற்பட்டவன். நீதியாகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் அரசியலில் தீவிரமாக 53 ஆண்டுகளும், அதற்கப்பால் 7 ஆண்டுகளும் மொத்தமாக 60 ஆண்டு அனுபவம் உள்ளவன் நான். என் சேவை எம் மக்களுக்கு இல்லாமற் செய்த பெருமை உம்முடையதே. பொய் மூட்டைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் மக்கள் மத்தியில் என்னை ஓர் துரோகியாகக் காட்டின. மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம். அன்று நான் சொன்னவை எவ்வளவு நியாயமாக இருந்தாலும் என்னை திட்டித் தீர்த்தீர்கள். இன்று உங்களுக்குள்ளேயே குளம்புகிறீர்கள். இவற்றை மக்களுக்கு எடுத்து விளம்ப மாட்டீர்களா? அண்மையில் கூட ஒரு பிஞ்சு, உமது வாரிசு, விளாசித் தள்ளுகிறார் என்னைப் பற்றி. கொஞ்சம் அவருக்கு சொல்லக் கூடாதா? உமது முன்னேற்றத்துக்கு நான் என்றும் முட்டுக் கட்டை போட்டவன் அல்ல. உமக்காக எத்தனை விட்டுக் கொடுப்புக்களைச் செய்துள்ளேன் என்பதை எனது அரசியல் வாழ்விலிருந்து நீர் பட்டுணர்ந்திருப்பீர்.
தமிழர் ஐக்கிய முன்னணி உருவாகியது, தமிழரசுக் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்தே. இருசாராரும் சமமாக பதவிகளைப் பகிர்ந்து கொண்டோம். நானும் நண்பன் ஆலாலசுந்தரமும் பிரச்சார செயலர்கள். அமிர்தலிங்கம், சிவா ஆகிய இருவரும் செயலாளர்கள். கதிரவேற்பிள்ளை, திருநாவுக்கரசு பின்னர் தருமர் தனாதிகாரிகள் த.வி.கூ உருவாகிய போது நீர் தடுப்புக் காவிலில் இருந்தீர். நீர் தமிழரசு கட்சிக்கு முறை தவறி உயிர் கொடுக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி தான் செயற்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேல் உண்மையை மறைத்து, ஸ்தாபகராலேயே மூடி வைக்கப்பட்ட தமிழரசுக் கட்சியை, அவர் 1977 இல் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின், முறையற்ற விதத்தில் புத்துயிர் கொடுத்து மக்களை தப்பான வழியில் கொண்டு சென்றது யார்? 1977 இல் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை 26 ஆண்டுகள், தமிழ் அரசுக் கட்சி இயங்கியதா? எந்த ஆண்டு நடைபெற்ற மகாநாட்டில் நீங்கள் செயலாளராக தெரிவானீர்கள்? முற்று முழுதாக தந்தை செல்வாவை ஏன் அவமதிக்கின்றீர்கள். இல்லாத ஒன்றை ஏன் இருப்பதாகக் கூறி மக்களையும் வெளிநாட்டுத் தூதுவர்களையும் ஏமாற்றுகிறீர்கள்.
தந்தை செல்வாவால் 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, அவரின் இறுதி மூச்சு இருக்கும் வரை மட்டுமன்றி, தொடர்ந்து இன்று வரை, அதாவது 40 ஆண்டுகளுக்கு மேல் இயங்குவது தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். ஆனால் தமிழரசுக் கட்சியோ, தந்தைசெல்வாவின் மரணத்தின் பின், அதாவது 1977க்கு பின்னர் வெறும் செயலாளர் பதவியை எடுப்பதற்காக, அதற்கு 2004ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 25 ஆண்டுகளில் யார் யார் எவ்வெப்போது எந்தெந்தப் பதவியை வகித்தனர் என்பதைக் கூற முடியுமா?
முழுப் ப+சணிக்காயைச் சோற்றுக்குள்ளே புதைப்பது போல் அண்மையில் பின்வருமாறு கூறியுள்ளீர்கள். “ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பை நாங்கள் அமைத்திருந்த போது அதில் அங்கம் வகித்த ஓர் கட்சியினால் உயர் நீதிமன்றம் வரை சென்று தேர்தல்களில் சின்னம் கட்சி என்பன முடக்கப்பட்டிருந்தன” என்று. இது உண்மை இல்லையே. செய்யாத ஒரு குற்றத்திற்குப் பொய்யாக என்மீது ஓர் நம்பிக்கை இல்லாத தீர்மானம், புலிகளின் கட்டளைக்கமைய, கொண்டு வந்ததும் நான் கலந்து கொள்ள முடியாத ஓர் இடத்தில், அம்பாறையில் தலைவர் என்ற முறையில் என் அனுமதி பெறாமல், பொதுச்சபை கூட்டம் ஒழுங்கு செய்ததை ஆட்சேபித்து அதன் காரணமாகவே கோட்டுக்கு செல்ல வேண்டிவந்ததென கூற ஏன் பயப்படுகிறீர்கள்?
“இதே நிலைமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டால்” என்று பயப்படுகிறீர்களாமே இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா? தமிழர் ஐக்கிய முன்னணியோ, தமிழர் விடுதலை கூட்டணியோ உருவாகும் போது அதை உருவாக்கியவர்களில் ஒருவன் நான் அல்லவா நீர் அதில் சம்பந்தப்படவே இல்லையே. கடந்த 10ஆண்டுகளாக உமது விடயத்தில் நான் கடைப்பிடித்த மௌனம் உம்மைப்பெரும் உத்தமராகவும் கொள்கைப் பற்றுள்ளவனாகவும் உலகுக்கு எடுத்துக் காட்டுவதுகூட எனக்கு கவலையில்லை. ஆனால் என்னை மட்டம் தட்டி உலகுக்குக்காட்டி குறுக்கு வழியில் நீர் உயர முனைவதே எனக்கு வேதனை அழிக்கிறது. உமது திறமையாலும் தியாகத்தாலும் நீர் உயர்வதை நான் மனதார பாராட்டுவேன்.
தனது கடந்த காலத்தையும் ஏறிவந்த படிகளையும் ஒருவன் மறந்து செயற்படுவானேயானால் அவன் மானிடப்பிறவி எடுத்ததில் அர்த்தமில்லை. நான் கடந்தகாலத்தையோ ஏறிவந்த படிகளையோ என்றும் மறப்பதில்லை. மறக்கப்போவதுமில்லை. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு என் வீட்டுக்கு கல் வீசுவது உமக்கே கஷ்டமானதாக முடியும். இப்போது அது தான் நடக்கிறது. எனது கல்லறையில் சாம்ராஜ்யம் அமைக்க முயல்வது நல்லதுக்கல்ல. எனக்கு சமாதிகட்ட நீர் முனைவது எனக்கல்ல. எம் இனத்துக்குத்தான். இது நீர் செய்யும் பெரும் வரலாற்றுத் துரோகமாகும்.
எனது அரசியல் பாரம்பரியம்பற்றி நீர் அறிந்திருக்க நியாயமில்லை. தந்தைசெல்வாவை 1947ஆம் ஆண்டு முதல்முதல் புத்தூர் கிராமசபை மைதானத்தில் கண்டு அவரின் பேச்சைக்கேட்டு மகிழ்ந்தவன் நான். அப்போது நீர் சிறு குழந்தையாக இருந்திருப்பீர். கோப்பாய் தொகுதி வேட்பாளர் திரு.தம்பியப்பா அமரத்துவம் அடைந்த நாளும் அன்று தான். 1949ஆம் ஆண்டு தொட்டு தந்தைசெல்வா என்னாலும், எனது குடும்பத்தவராலும் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தவர். மாற்றுக்கட்சியில் நான் செயற்பட்டகாலத்திலும் அவருக்குரிய மதிப்பையும் மரியாதையும் நான் கொடுத்தே வந்துள்ளேன். தந்தை செல்வாவுடன் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தவர்களில் நான் மட்டும் தான் இன்று உயிருடன் இருக்கின்றேன். பாராளுமன்றத்தில் தந்தை. செல்வாக்குப்பின் இருந்த ஆசனத்திலேயே நான் இருந்தேன்.
தினமும் இரவு 8.00 மணிக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கும் வேளையில் என்னையும் தன்னுடன் தனது வாகனத்தில் அழைத்துக்கொண்டு தன் வீட்டையும் தாண்டிச்சென்று எனது நண்பன் திரு.தா.திருநாவுக்கரசு அவர்களின் வீட்டில் விட்டுவிட்டே தனது வீட்டுக்கு திரும்புவார். இப்படிப்பல நாட்கள் தொடர்ந்தன. ஒரு சமயம் நான் கிளிநொச்சி கரைச்சி கிராமசபைத் தலைவராக இருந்தவேளை எனது தலைவர் பதவியைப்பறிக்க சிலர் முற்பட்ட போது அதை தடுத்து நிறுத்தியவரும் தந்தை செல்வாவே. மனச்சாட்சிக்கு கட்டுப்பட்ட பெரியவரின் செயலால் அன்றைய உள்ளுராட்சி அமைச்சராயிருந்த திரு.மு.திருச்செல்வம் அவர்கள் (கலாநிதி நீலனின் தந்தை) ஒரு தடவையேனும் தனது அமைச்சர் பதவிக் காலத்தில் கிளிநொச்சிக்கு வரப்போக இந்த ஒரு சிலர் ஒருபோதும் விடவில்லை. அன்றும் உம்மைப்போன்ற சிலர் தழிழரசுக் கட்சியில் இருந்திருக்கிறார்கள்.
1970ல் சும்மா கை கட்டிக்கொண்டிருந்து கிளிநொச்சித் தொகுதியில் நான் வெற்றி பெறவில்லை. கால்கள் கொப்பளிக்க கால்நடையாக நடந்து சென்று வென்றவன். எனது வெற்றிக்குச் சவாலாக பல தமிழரசுகட்சித் தலைவர்கள் தந்தைசெல்வா. அமிர் போன்றோர் வந்து தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்தார்கள். 700 சதுரமைல் விஸ்தீரணம் கொண்ட கிளிநொச்சித் தொகுதியில் என் கால்கள் படாத வீடு கிடையாது. கிளாலி தொடக்கம் மாங்குளம் ஊடாக துணுக்காய் ஆலங்குளம் வரை ஏறக்குறைய 100 கிலோமீற்றரும், பரந்தன் தொடங்கி முழங்காவில் வரை 50 கிலோமீற்றரும் கால்நடையாக நடந்து சென்றே அத்தொகுதியை வென்றெடுத்தேன். கிளிநொச்சி மக்கள் இன்றும் சான்றுபகர்வார்கள். இலங்கையில் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் நான் பட்ட கஸ்டம் அனுபவிக்கவில்லை. அவ்வாறு பெறப்பட்ட பதவி என்பதால் தான் கர்வம் அடையாது அப்பதவியின் பெறுமதியை உணர்ந்து செயற்பட்டேன்.
1972ல் பாராளுமன்றத்தில் ( அரசியல் நிர்ணய சபையில்) புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டவேளை அதைக் கண்டித்து உரையாற்றியது மட்டுமல்ல அதை எதிர்த்து வாக்களித்த ஒரேயொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினன் நான் மட்டுமே. நான் அன்று பிரதிநிதித்துவப்படுத்திய அகில இலங்கைத் தழிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து தெரிவாகிய ஏனைய இருவரும் அரசுடன் சேர்ந்து ஆதரவாக வாக்களித்தும். தமிழரசுக்கட்சியினர் அரசியல் நிர்ணயசபையைப் பகிஷ்கரித்ததும் அனைவரும் அறிந்ததே. எனது இச்செயலால் பெரியவர் தந்தைசெல்வா உட்பட தமிழரசுக்கட்சி உறுப்பினர்களினதும் அன்றைய எனது கட்சித் தலைவரும், ஸ்தாபகருமாகிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களினதும் பாராட்டைப் பெற்றவன் நான்.
1972.05.14 தமிழர் கூட்டணியை உருவாக்கினோம். இக்கூட்டணியில் நான் என்னை இணைத்துக்கொண்டவனல்ல. கூட்டணியை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். நானும் எனது நண்பன் மு.ஆலாலசுந்தரமும் இணைப்பிரச்சாரச் செயலாளர்களாகத் தெரிவானோம். அந்தவேளை திருவாளர்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், தா.சிவசிதம்பரம் ஆகியோர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்திருந்தார்கள். குடியரசு தினத்திற்கு முதல்நாள் இரவு அல்லது ஓரிரு தினங்களுக்கு முன்னர் சரியாக ஞாபகமில்லை பல இளைஞர்களுடன் எனது மைத்துனர் ஜெயசீலன் உட்பட உம்மையும் கைதுசெய்து தடுப்புக்காவலில் இருந்த உமக்கு வெளியில் நடந்தவைபற்றி அதிகம் தெரிந்திருக்கமுடியாது. தெரிந்திருந்தால் இன்று என்னை முழுமூச்சாக ஆதரித்திருப்பதுடன், அர்த்தமற்ற நியாயமற்ற உண்மைக்குப்புறம்பான குற்றச்சாட்டுகளை நம்மவர் சிலர் வைக்கும் போது அவற்றைக் கண்டித்தும் இருப்பீர். அதற்குப் பதிலாக எனது உயிருக்கு உலை வைக்கும் பெரும் பணியில் அல்லவா நீர் ஈடுபட்டிருந்தீர். நீர் என் சார்பாக பேசவில்லை என நான் கவலைப்படவில்லை. ஆனால் எதுவித பலனையும் எதிர்பாராமல் புண்ணியத்திற்கு உழும் பன்றியை பல்லுக்குப் பதம் பார்ப்பதில் நீர் அல்லவா முன்னின்று செயற்படுகின்றீர்.
உம்மைப்போன்று ஏறக்குறைய 50 இளைஞர்கள் குடியரசு தினத்தை பகிஷ்கரிக்கத் தூண்டியதால் பொலிசாரர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்த அதேவேளை சகல தழிழரசுப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், ஏனைய திருவாளர்கள் அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், தா.சிவசிதம்பரம் ஆகியோருடன் நானும் இன்னும் பல தொண்டர்களும் இணைந்து பல்வேறு சட்டமறுப்பு நடவடிக்கைகளிலும், பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டோம்.
அப்படியான ஒரு சட்டமறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சித் தொண்டர்களும் நானும், என்னுடன் காலம் சென்ற ஜயம்பிள்ளை திருஞானம், லண்டன் பா.வை.ஜெயபாலன், ஜேர்மனி சுந்தரசாமி கண்ணன், இந்தியா ஞானப்பிரகாசம் ஞானராசா, வன்னேரிக்குளம் துரைராசசிங்கம் ஆகியோரும் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு யாழ். கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டோம். மறுநாள் காலை சிறைக்கைதிகளின் உடையில் பலாலி விமானநிலையத்தில் எனக்காக தயாராயிருந்த விசேட விமானத்தில் கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். பலாலி விமானநிலையத்தில் கொழும்பு செல்லவிருந்த பயணிகளும், திருச்சிக்கு செல்லவிருந்தவர்களும் மற்றும் அவர்களை வரவேற்கவும், வழியனுப்பவும் வந்திருந்த பலரும் பார்த்துக்கொண்டிருக்க நான் விமானத்தில் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். வெலிக்கடைச்சிறையில் நான் அடைக்கப்பட்டேன். தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சிகளின் வரலாற்றில் சிறைக்கைதி உடையணிந்து மக்கள் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் நான் மட்டுமே! என்னுடன் கைதான ஏனைய 6 இளைஞர்களும் இவ்வாறே சிறைக்கைதி உடையணிந்தே சிறை வைக்கப்பட்டிருந்தனர். திட்டமிட்டு என்னை அவமதிக்க அரசு செய்த செயல் இன்றைய இளம் தலைமுறைக்குத் தெரிந்திருக்கும். உமக்கும் இது தெரியாமலிருக்க நியாயமில்லை.
சிறைவாசம் முடிந்து கொழும்பில் விடுதலை செய்யப்பட்ட என்னை மாலை அணிவித்து வரவேற்ற தந்தை செல்வாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்ததை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை. அதேநேரம் யாழ்.கோட்டையில் விடுதலையாகிய இளைஞர்களை வரவேற்றகச்சென்ற அமிர் தம்பதியினருக்கு என்னநடந்தது என்பதையும் நான் குறிப்பிட வேண்டும். திருமதி.அமிர்தலிங்கம் காரினுள் இருக்க சில பொலிசார்கள் காரின் மேலே நின்று தூஷண வார்த்தைகளைப் பேசி பைலா நடனம் ஆடியதும், அமிர்தலிங்கம் அவர்களின் பிடரியில் யாரோ ஒருவன் அடித்ததும் இப்பொழுது நினைக்கும் பொழுதும் எனது கண்கள் பனிக்கின்றன. இது மட்டுமல்ல எத்தனையோ தடவைகள் அவர் அவமரியாதைப்பட்டதும், தாக்குதலுக்குள்ளானதும் உமக்கு தெரியாததல்ல. இன்று நீர் தமிழரசுக்கட்சியை மீளப்புதுப்பித்து தமிழர் விடுதலைக் கூட்டணியை கருவறுப்பதன் மூலம் அவருக்குச் செய்யும் துரோகத்தை எண்ணி நான் வேதனைப்படுகின்றேன். கடந்த 10ஆண்டுகளில் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை ஒரு தடவையேனும் உச்சரித்தீரா. அவர் எப்படி இறந்தார் என்பதையேனும் சொல்லியிருக்கிறீரா? அக்கொலையை கண்டித்திருக்கிறீரா?
அமிர் அவர்களின் வாரிசு போல, எடுத்ததெற்கெல்லாம் தந்தையையும், அமிரையும் சாட்சிக்கு கூப்பிடும் உமக்கு இச் சம்பவம் பற்றிப் படிக்கும் போது உள்மனம் உறுத்தவில்லையா? இந்தத் தியாகச் செம்மலுடன் எனது இறுதியான பயணம் கொழும்பில் இருந்து சென்றதே. அவரை விட்டுப்பிரியும் போது இனி அவரை உயிருடன் சந்திக்கமாட்டேன் என்பதை நான் உணரவில்லை. அவர் கூறிய இறுதி வார்த்தைகள் இன்றும் என் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அன்போடு என்னை அழைத்து “சங்கரி எம்மில் சிலருக்கு என்ன காத்திருக்கிறது என்று தெரியும். என்ன செய்வது? நாம் அதற்கு முகம் கொடுத்துத்தானே ஆகவேண்டும்” என்று கூறிவிட்;டு என்னை அண்ணா மேம்பாலத்திற்கு அண்மையில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தார் என்பதை அன்று நான் உணர்ந்திருந்தால் நிழல்போல அவரைத் தொடர்ந்திருப்பேன் அல்லவா? உம்மைத் தனது நிழல் என்று தானே அவர் எண்ணியிருந்தார். அதற்கமைய நீர் நடந்தீரா? நடக்கின்றீரா?
தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட்ட பின் ஒரு சந்தர்ப்பத்தில் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் கடும் சுகவீனமுற்றிருந்தபோது பலகாலம் பிரச்சாரத்தில் ஈடுபடாது ஏனைய கட்சிப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே காலத்தில் திரு.தா.சிவசிதம்பரம், அன்றைய வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் திரு.எக்ஸ்.எம்.செல்லத்தம்பு அவர்களுடன் முரண்பட்டுக்கொண்டு பிரச்சார வேலைகளுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். அந்த நாட்களில் தமிழர் கூட்டணியின் கூட்டமென்றால் நான் மேடையில் அமர்ந்தால் தான் அது கூட்டணிக் கூட்டமாயிருக்கும். அல்லது அக்கூட்டங்கள் தமிழரசுக் கட்சிக் கூட்டமாகவே மக்கள் பார்வைக்குத் தெரியும். காரணம் எத்தனை பேச்சாளர்கள் இருந்தாலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது இருந்தால் தான் கூட்டம் கலகலப்பாக இருக்கும். அந்தக் காலத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நான் மட்டுமே என்பதை மறந்துவிடவேண்டாம். கூட்டணி என்னால் தான் வளர்ந்தது என்று கூறவரவில்லை. இருகட்சிகளையும் சேர்த்த பிரமுகர்கள், தொண்டர்கள் அனைவரும் தம் பங்களிப்பை செய்தனர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. சட்ட மறுப்பு, பிரசாரக்கூட்டம், கிராம யாத்திரை என்று எந்த நிகழ்விலும் நான் கலந்து கொள்ளாது விடுவதில்லை. நெடுந்தீவு தொடக்கம் பொத்துவில் உகந்தைவரை எனது வாகனத்துடன் சமூகமளிப்பதை பெருமையாக என்னைப் பாராட்டி தன் மனைவிக்கும், கூடியிருக்கும் தொண்டர்களுக்கும் அமிர் அவர்கள் கூறுவது இந்தக்கணத்திலும் எனக்கு நினைவுக்கு வருகிறது.
அரசியல் கட்சிக்குள் உட்ப+சல் இல்லாத கட்சி எங்கும் கிடையாது. அமரர் அமிர்தலிங்கம் அவர்களுடன் பதவிப்போட்டியில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் போட்டியிடமுன்வந்ததும், தந்தை செல்வாவின் தலையீட்டால் அவை தடைப்பட்டதும் அனைவரும் அறிந்தவிடயம். அதேபோல நீர் பதவிக்கு என்னுடன் போட்டியிட்டதில் தவறில்லை. ஆனால் எதற்கும் ஓர் வழிமுறையுண்டு. பதவி கிடைத்தால் கட்சியை அழிக்க உடைக்க முயல்வது நீர் அடிக்கடி பெயர் குறிப்பிட்டுப் பேசும் தவைவர்களுக்குச் செய்யும் படுதுரோகமாக இன்று உமக்குத் தெரியவில்லையா?
நம் கட்சிக்குள் நடந்த சில கசப்பான சம்பவங்களைக் குறிப்பிடுவது அழகல்ல. இருப்பினும் உம்மைப்போன்ற சிலரின் விபரீதப் போக்கால் சிலவிடயங்களைப் பற்றிக் குறிப்பிட்டேயாகவேண்டும். 1977ம் ஆண்டுத் தேர்தலில் கூட்டணி அமோக வெற்றியீட்டிய வேளையில், அன்றைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கவேண்டிய ஒரு சந்தர்ப்பம் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கிடைத்தது. அந்தத்தருணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற பேச்சுக்கே இடமின்றி, பழைய காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த நாங்கள் நால்வரும், தமிழருசுக்கட்சியைச் சார்ந்த சிலரும் அமரர் அமிர் அவர்களையே விரும்பினோம். ஏனெனில் அவர் செய்த தியாகங்கள், இரவு பகல பாராது குடும்பமாக தன்னை அர்ப்பணித்து மக்களுக்காகச் செயற்பட்டவர் கட்சியிக்காக உழைத்தவர் என்ற காரணத்தால் தான். ஆனால் உம்மைப்போன்ற பாராளுமன்ற உறுப்பினர் சிலர் அன்றும் இருந்திருக்கிறார்கள். சரித்திரம் திரும்புகிறது என்பார்களே! அது இது தானா? திரு.மு.சிவசிதம்பரம் அவர்களை எதிர்க்கட்சித்தலைவராகப் பிரோரிக்க நடந்துகொண்டிருந்த சதியை அறிந்த திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் தானே முதலில் எழுந்து அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை எதிர்க்கட்சித் தவைவராக முன்மொழிந்து அவர் பெருந்தன்மையாக நடந்து கொண்டதை நீர் அறிந்திருக்காமல் இருக்கமுடியாது. அமிர் அவர்கள் தனது இறுதி நாட்களில் அடிக்கடி கூறும் ஓர்விடயம் திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் இன்றுகூடச் சான்று பகர்வார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்த உறுப்பினர்களின் விசுவாசம்பற்றி.
நீர் சிறையிலிருந்தவேளை அங்கு நடந்த விடயங்கள் குறித்து எந்த மேடையிலும் எடுத்துக்கூற நான் தவறவில்லை. ஆனால் உம்மைப் போல பல இளைஞர்களும் அரச தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டிருக்கிறார்கள். கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். உம்மையும், காசி ஆனந்தத்தையும் வண்ணை ஆனந்தத்தையும் அரசியலில் வளர்த்தெடுத்தது நாங்கள் தான். உமக்குச் செய்யவேண்டியதற்கு அதிகமாகவே எமது கட்சி செய்துள்ளது. எதுவித பலனையும் பெறாத எத்தனையோ இளைஞர்கள் அன்று இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். பல இடங்களில் இளைஞர் பேரவைக் கிளைகளை அமைத்தோம். எனது கிளிநொச்சித் தொகுதியில் மட்டும் 28 கிளைகள் இருந்தன. இளைஞர் பேரவைக் கிளைகளின் ஒன்றியத்தின் தலைவராக நீர் வாக்கொடுப்பு மூலம் என்றும் தெரிவுசெய்யப்படவில்லை. எப்போதும் அமிர்தலிங்கம் அவர்களின் நியமனத்தால்தான் உமக்குத் தலைவர் பதவி கிடைத்தது. அன்றெல்லாம் நீர் தேர்தல் மூலம் பதவிக்கு வரவேண்டும் எதிர்நோக்க வேண்டும் என்று எண்ணவில்லை. இவையெல்லாவற்றையும் மறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உடைத்தெறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளீர். இன்று உமக்கும், கட்சியில் வேறுசிலருக்கும் உள்ள நெருக்குதல் எனக்குத் தெரியாததல்ல. தமிழரசுக் கிளையையோ, கூட்டணிக்கிளையோ இன்று அமைக்கும் பட்சத்தில் யார் யார் அங்கத்தவர்கள் ஆவார்கள், எப்படிப்பட்டவர்கள் முக்கிய பதவியைக் கைப்பற்றுவார்கள் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? உமக்கு வேண்டியதெல்லாம் தலைமையில் மாற்றம். அதை முறைப்படி செய்திருக்கலாம்.
அகில இலங்கைத் காங்கிரஸ் கட்சி பிரிந்து சென்று தனித்து இயங்கலாம் என்றால் தமிழரசுக் கட்சி ஏன் தனித்து இயக்க முடியாது என்ற உமது வாதத்தை சிலர் முன்வைக்கின்றனர் என்பதை அறிந்து அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. வரலாறு தெரியாதவர்களுக்கு வரலாற்றை எடுத்துக் கூறவேண்டிய கடமைப்பாடு எனக்குண்டு.
1970ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்களின் பெருந்தலைவர்கள் குறிப்பாக திருவாளர்கள் ஜீ.ஜீ. பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் ஆகியோர் தோல்வியைத் தழுவிக் கொண்டார்கள். அன்றைய இக்கட்டான கட்டத்தில் புதிய அரசு அரசியல் சாசனம் உருவாக்க அரசியல் நிர்ணயசபையை அமைத்து செயற்பட்ட போது இப்பெரியார்களின் தோல்வி ஈடுசெய்ய முடியாது என உணர்ந்த தந்தை அவர்கள் தமிழ் கட்சிகள் ஒருசில சொற்ப வாக்குவித்தியாசத்தில் ஒருவரையொருவர் வெற்றிபெற்ற நிலையில் இனியும் நாம் பிரிந்து நின்றால் அழிந்துவிடுவோம் எனக்கூறி தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வேண்டினார். அன்றைய அரசின் சவாலுக்கு பெரியவருக்குப் புலப்பட்ட ஒரேவழி ஒற்றுமை தான். தனது அரசியல் பேதங்களை மறந்து வீடுதேடிவந்த தந்தையை ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் வரவேற்று, அவருடைய முயற்சிக்கு முழு ஆதரவு தருவதாகக் கூறி தன் கட்சித் தொண்டர்கள் அத்தனைபேரும் முழு ஒத்துழைப்புத் தருவார்கள் என்றும் உறுதியளித்தார். அன்றுதொட்டு இருகட்சிகளும் இணைந்தே செயற்பட்டன. பிரச்சாரக் கூட்டங்கள், குழுக்கூட்டங்கள் ஆகியவற்றில் காங்கிரஸின் செயலாளர் தா.சங்கரப்பிள்ளை, பிரபல வழக்கறிஞர் எஸ.ஆர். கனகநாயகம், முன்னாள் மேயர்.இராசா.விஸ்வநாதன், தனாதிகாரி தா.திருநாவுக்கரசு போன்றோர் தவறாது கலந்து கொண்டனர். இவையெல்லாம் நீர் தடுப்புக்காவலில் இருந்தகாலத்தில் நடந்தவை. தலைவர் ஜீ.ஜீ மட்டும் பிறிதொருநாளில் சேர்வதாக உறுதியளித்தார். வட்டுக்கோட்டை மாநாட்டில் 1976ல் தழிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கூட்டுத் தலைவர்களாக தந்தைசெல்வா, தலைவர் ஜீ.ஜீ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌ.தொண்டமான் ஆகியோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர். இறக்கும் வரை, தான் அப்பதவியை துறந்ததாக ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் தெரிவிக்கவில்லை. இது கூடவா உமக்கு மறந்து போய்விட்டது. கூட்டுச்சேருவது பற்றி நீர் தெரிவித்த கருத்து உமக்கு வேடிக்கையாக தெரியவில்லையா?
ஒரு சமயம் நான் இந்தியா போயிருந்தபொழுது தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களை தனது வழக்கொன்றில் ஆஜராகுமாறு கலைஞர் மு.கருணாநிதி என்னைக் கேட்டுகொண்டபோது, பலர் கேட்டு மறுத்தும் என் வேண்டுகோளை ஏற்று, ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவ்வழக்கில் ஆஜராகி ஒரு சதமேனும் ஊதியமாகப்பெறாது, வழக்கை வென்றும் கொடுத்தார் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். வேண்டுமானால் கலைஞரிடமும் அல்லது தமிழ்நாடு சட்டசபை முன்னாள் உறுப்பினர்களிடமும் கேட்டு அறியலாம். வெற்றிகரமாக வழக்கை முடித்துக்கொண்டு சென்னையிலிருந்து மலேசியா சென்று நாடு திரும்பியதும் தீவிரமாக செயற்படுவதாக உறுதியளித்துச் சென்ற தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் ப+தவுடலைத்தான் நானும், அன்னாரின் புதல்வர் குமார்.பொன்னம்பலம் அவர்களும், ஏனைய கட்சிப்பிரமுகர்களான தா.திருநாவுக்கரசு, கு.மோதிலால் நேரு, முன்னாள் பா.உ. சிவாஜிலிங்கம் அவர்களின் மாமனார் போன்றவர்களுடன் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் பொறுப்பேற்றோம். கூட்டணியுடன் இணைந்து தீவிரமாக உழைப்பதாக உறுதியளித்திருந்த ஜீ.ஜீ அவர்கள் என்னை மட்டுமல்ல, தமிழினத்தையே கலங்கவிட்டு விண்ணகம் சென்றார். சென்றவர் தந்தை செல்வாவையும் விரைவாக அழைத்துச் சென்றுவிட்டார். மறைந்த இரு தலைவர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்திலிருந்தே தமது இறுதி யாத்திரையை முடித்துக்கொண்டனர். இவ் இரு தலைவர்களின் இறுதிக்கிரியைகளும் அமரர் அமிர்தலிங்கத்தின் தலைமையிலேயே நடந்தது ஞாபகம் இருக்கா?
அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேரவில்லை என்று கூறுபவர்கள் இன்றும் இருப்பின் அவர்களுக்கு இன்னும் ஓர் சம்பவத்தை ஞாபகமூட்ட விரும்புகின்றேன். தலைவர் ஜீ.ஜீயைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் அவர் வேறு எந்த வழக்கறிஞர்களுக்கு கீழேயும் என்றும் தொழில் புரியவில்லை. எந்த வழக்குகளிலும் சரி முதன்மை வழக்கறிஞராகவே தோன்றுவார். அவரது வரலாற்றில் ஒரேயோரு சந்தர்ப்பத்தில் மட்டும்தான் வேறு ஒரு வழக்கறிஞருக்குக் கீழ் ஆஜரானார். அந்தவழக்குத் தான் திருவாளர்கள் அ.அமிர்தலிங்கம், வி.தருமலிங்கம் கா.பொ.இரத்தினம், வி.என்.நவரத்தினம் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட ட்ரயல் அட் பார் வழக்கு. தந்தை செல்வா அவர்கள் முதன்மை வழக்கறிஞராக கடமையேற்க, ஜீ.ஜீ அவர்கள் இரண்டாவது வழக்கறிஞராக ஆஜரானார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட முன்பு 70ஆம் ஆண்டில் தழிழ்க்காங்கிரஸ், தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் பெற்ற வாக்குகள் விவரத்தையும், 1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட்ட பின்பு அதே தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் வாக்குகள் விவரத்தையும் குறிப்பிடுகிறேன்.
1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி 18 ஸ்தானங்களைப்பெற்று அமோக வெற்றியீட்டியவேளை 1970 ஆம் ஆண்டு இவ்விரு கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குவித்தியாசங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் கூட்டணியில் தழிழ்க் காங்கிரசும், தமிழரசுக் கட்சியும் சங்கமமானது உண்மையா? இல்லையா? என்பது புரியும்.
1977ஆம் ஆண்டுத் தேர்தலில் திரு.குமார் பொன்னம்பலம் அவர்கள் யாழ்ப்பாணத் தொகுதியை தனக்குத் தரும்படி அடம்பிடித்தார். வட்டுக் கோட்டைத் தொகுதி அவருக்கு வழங்கப்பட அதை ஏற்கமறுத்து யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 6960 வாக்குகளை மட்டும் பெற்றார். தமிழர் விடுதலைக்கூட்டணியில் களமிறங்கிய திரு.வெ.யோகேஸ்வரன் அவர்கள் பெற்ற வாக்குகள் 16251. தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக 1970ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற திரு. மாட்டின் அவர்கள் பெற்ற வாக்குகள் 8,848 ஏறக்குறைய இருமடங்கு.
அகில இலங்கை தழிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் ஜீ.ஜீ அவாகள் தன்கட்சியை இயங்க விடாது முடக்கி வைத்திருந்தார். 1972க்குப் பின் அக்கட்சி இயங்கவில்லை. ஆனால் அவர் இறந்த பின் அவரது மகனான திரு.குமார் பொன்னம்பலம் அவர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோற்றதன் பின், தமிழர் மத்தியில் ஏற்பட்ட ஒற்றுமையை எவ்வாறு குழப்பலாம் என அன்றைய பிரதமரான திரு.ஜே.ஆர்.ஜெயவர்த்தனா திட்டமிட்டுக்கொண்டிருந்த வேளை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை மீளப்பதிவு செய்ய அவரின் உதவியை நாடினர். தமிழ்க் காங்கிரஸ் கட்சி மீளப் பதியப்படக் கூடாது என ஆட்சேபித்து எம்மால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தோற்றுப்போன விடயமும் நீர் அறியாததல்ல.
இதேபோன்றதோர் நிலை தமிழரசுக்கட்சிக்கும் வந்துவிடக்கூடாது என்பதை அறிந்திருந்த அமிர்தலிங்கம் அவர்கள் யாராவது கூட்டணிக்கும், தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்துவிடக்கூடாதென்பதற்காகவே தமிழரசுக் கட்சியைப் பதிவு செய்து வைத்திருந்தாரேயன்றி அதை யாரும் மீள இயக்கவைப்பதற்கல்ல. தந்தை செல்வா தான் உருவாக்கிய தமிழரசுக்கட்சி என்ற வீட்டினைப் ப+ட்டி அதன் திறப்பை திரு.அமிர்தலிங்கம் அவர்களிடம் பத்திரப்படுத்தி வைத்திருக்குமாறு கூறினாரேயன்றி அதை திறக்கும் அதிகாரத்தை யாரும் அபகரிக்க உடந்தையாக இருப்பதற்கல்ல. இக்கட்சியின் செயலாளர் நாயகம் நீர் என வெட்கமின்றிக் கூறுகின்றீர். உம்மை அவ்வாறு தெரிவுசெய்தவர்கள் யார்? என்ன நோக்கத்துடன் தமிழரசு கட்சி பதியப்பட்டிருந்ததோ அதற்கு விரோதமாக செயற்படுவது, அடிக்கடி தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்தவன். அமரரின் காலடியில் அரசியல் கற்றவன் என்று தம்பட்டம் அடிக்கும் நீர், இப்பெரும் தலைவர்களுக்குச் செய்யும் பெருந்துரோகமாகத் தெரியவில்லையா? நீர் செய்த மற்றுமோர் மோசடி பற்றிக் கூற வேண்டும். தந்தை செல்வா அறங்காவல் குழுவை உருவாக்கியது அன்றைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தந்தையின் சகோதரர் திரு.ஏர்ணஸ்ட் வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களும் ஆவார். நாம் அறங்காவலராக நியமித்தது தந்தை செல்வாவின் தீவிர ஆதரவாளர்கள் என்ற வகையில் பேராசிரியர் கு.நேசையா, பெரியவரின் ஒருபுத்திரனாகிய திரு.சந்திரகாசன், மாவட்ட சபைத் தலைவர் திரு.சு.நடராசா ஆகியோருடன் தமிழர் வீடுதலைக் கூட்டணியின் தலைவர், செயலாளர் நாயகம், தனதிகாரி ஆகிய திருவாளர்கள் மு.சிவசிதம்பரம், அ.அமிர்தலிங்கம், சி.கதிரவேற்பிள்ளை ஆகிய ஆறுபேரையும் தான் அவ்வுறுதியை எழுதியவர் வழக்கறிஞரும், பிரசித்த நொத்தாரிசுமாகிய திரு.சி.வி.விவேகானந்தன் அவர்கள். காலவோட்டத்தில் அறங்காவலர்களில் பலர் இறந்திருந்தும் இருவர் மட்டும் அன்று எஞ்சியிருந்தனர். அவர்கள் திரு.மு.சிவசிதம்பரம் அவர்களும் திரு.சந்திரகாசன் அவர்களுமே. அந்த இருவருக்கும் தெரியாமல், கூறாமல் பாதுகாப்பு நிதியத்தை உருவாக்கியவர்களில் அன்றிருந்த திருவாளர்கள் கா.பொ.இரத்தினம், இரா.சம்பந்தன், பி.சூசைதாசன், ஆகியோருடன் என்னையும் சேர்த்து ஒதுக்கிவிட்டு எவருக்கும் தெரியாமல் கூறாமல் உமது இஷ்டப்படி புதிய அறங்காவலர்சபையை நியமித்து உம்மையும் அதில் இணைத்துக்கொண்டீர். இதுபெரும் அரசியல் அயோக்கியத்தனமல்லவா? அதி.வணக்கத்திற்குரிய பிதாவையும் இப்பட்டியலில் உள்ளடக்கியதால் அவரின் கௌரவத்திற்கும் மதிப்பளித்தே அதுசம்பந்தமான நடவடிக்கை எதுவும் எடுக்காது தவிர்த்தோம். முன்பு வடக்கு கிழக்கு இணைந்த உறுப்பினர்கள் இருந்த அக்குழுவில் கிழக்கு மாகாணத்தில் இருந்து யார் புதிய குழுவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிய விரும்புகின்றேன். உமது இவ்வாறான செயல்களால் தந்தை செல்வா அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு மட்டும் உரியவரா? என்ற வினா தோன்றியுள்ளது. இப்படிப்பட்ட செயல்களை நீர் யாரிடம் கற்றுக்கொண்டீர்? அண்மையில் திரு.இரா.சம்பந்தனையும் இணைத்துக்கொண்டதாக அறிகின்றேன்.
அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுமலர் வெளியீட்டுக்கு உமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் 7பேர் அன்று இருந்தும் நானும் தம்பி இரவிராஜ் ஆகிய இருவருமே கலந்து கொண்டோம். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரில் தம்பி சிவாஜிலிங்கம் கலந்து கொண்டார். நீர் அதிமுக்கிய வேலையாக இந்தியா சென்றதாக அறிந்தேன். திரும்பி வந்தபோதும் சரி தமிழரசுக்கட்சியைப் புனரமைப்பது பற்றி அப்போது இங்கு இருந்த திருமதி.மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களிடமாவது ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். ஏனெனில் தனது கணவரோடு கட்சியின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தது மட்டுமல்ல, தந்தை தனது வாரிசு எனப் பிரகடனப் படுத்தியிருந்த ஒரு பெரியவரின் மனைவி என்ற காரணத்தால், நான் அவரை இலண்டனில், சந்தித்தபோது உமது இத்துரோகச் செயலை வன்மையாகக் கண்டித்தார்.
அமிர் அவர்கள் இறந்தபின்பு, நானும் நீரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சூசைதாசன் கலாநிதி நீலன் திருச்செல்வம் ஆகியோர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சூட்டுக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திரு.மு.சிவசிதம்பரம் அவர்களைப் பார்க்கப்போனோம். அவர் முன்பு நீர் கூறினீர், இனி ஒரு இளைஞன்தான் பாராளுமன்றம் போக வேண்டும் என்று. எங்களுக்குச் சிரிப்புத்தான் வந்தது. இருப்பினும் உமது ஆசையை நிறைவேற்றுவது என நான் தீர்மானித்தேன். அன்று இருந்த இளைஞர் நீர் மட்டும்தானா? அல்லது அமரர் அமிரின் இடத்திற்குத் தேசியப்பட்டியலின் பிரகாரம் தகுதியான வேறு உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லையா? அப்பதவிக்கு எத்தனைபேர் கண்வைத்திருந்தார்கள் என்பது உமக்கும் தெரியாததா? 1983ஆம் ஆண்டுக்குப்பின் கட்சி மாநாடு நடாத்தப்படாத நிலையிலும் அமரர் அமிர்தலிங்கம் அவர்களது இடத்திற்கு ஒருவரை நியமிக்கவென ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள மத்திய குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினால் ஆபத்து என்ற நிலையில் தம்பி சிவபாலன் நேரில் சென்று உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறி உறுப்பினர்களை வரவழைத்ததையும் இக்கடிதத்தில் நினைவுபடுத்தி இவ்வளவு காலமும் மறைத்து வைத்திருந்த சில இரகசியங்களையும் உமது செயலால் அம்பலப்படுத்த வேண்டிருப்பதையிட்டு மிகவும் மனவருத்தமடைகின்றேன். நிகழ்ச்சி நிரலில்கூட இவ்விடயம் குறிப்பிடப்படாத நிலையில் புதிய நியமனம் சம்பந்தமாக எதுவித தீர்மானமும் எடுக்கப்படக் கூடாது என ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதும் உமக்கு ஞபாகமிருக்கும். இருந்தும் உம்மை நாம் தெரிவுசெய்தோம். உமது பெயரைச் சிபார்சுசெய்தபோது மீளப்பரிசீலிக்க வேண்டும் என ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தபோது அதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்பதும் உமக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. இந்நிலையில் நியமனத்தைத் தாமதப்படுத்தி இதற்கென இடம்பெறும் கூட்டத்தில் இதனை ஆராய்ந்து முடிவு செய்வதாக அன்றைய சூழலில் அக்கூட்டம் பிற்போடப்பட்டு பின்னர் குறித்தநாளின் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் குறிக்கப்பட்டால் மேலும் பல எதிர்ப்புக்கள் வரும் எனக்கருதி நான் எவ்வாறு உம்மைப் பாராளுமன்ற உறுப்பினராக்க அர்ப்பணித்தேன் என்பது பலருக்குத் தெரியாவிட்டாலும் உமக்கு நன்றாக நினைவில் இருக்கும். இதற்கு மேல் இன்னுமொருவிடயத்தைக் கூறினால் சிலவேளைகளில் உமக்கு இன்று அது அவமானமாயிருக்கும். நீர் விரும்பிய பதவி கிடைக்காவிட்டால் உமது உடமைகளையும் எடுத்துக்கொண்டு நீர் கட்சியிலிருந்து வெளியேற ஆயத்தமாயிருந்ததையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். அன்று ஏனையோரைப் போன்று நானும் செயற்பட்டிருந்தால் இன்று உம்மால் எனக்கு இன்றைய நிலமையும் ஏற்பட்டிருக்காது. இதையே வளர்த்த கிடாய் மார்பில் பாய்வது என்று சொல்வதோ என நினைக்கின்றேன்.
திருமதி.மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களிடம் அமிரின் ப+தவுடல் அக்கினியுடன் சங்கமமாகி அவரது சாம்பல் சூடு தணிவதற்கு முன்னரேயே அமரரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும், அவர் வகித்த கட்சி;ச் செயலாளர் நாயகம் பதவியையும் உமக்குத் தரவேண்டி அவரிடமிருந்து சிபாரிசுக்கடிதம் பெற்றதையும் நீர் மறந்திருக்கமாட்டீர். இது விடயமாக நீர் என்னுடன் பேசியதும், நான் உமக்களித்த பதில் ஏதாவது ஒரு பதவியைத்தான் உம்மால் கோரமுடியும் என்பதும் பலருக்குத் தெரியாது. இதை நீர் மறக்கவோ, மறைக்கவோ முடியாது. முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவிருந்த நானும், இரா.சம்பந்தன், கலாநிதி.நீலன் திருச்செல்வம் ஆகியோரும் 1989 தேர்தலில் போட்டியிட்ட பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எதுவித எதிர்ப்புமின்றி அமரரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அன்றைய மத்திய செயற்குழு உறுப்பினர்களுடன் உமக்கு அளித்ததையும், எமது பெருந்தன்மையையும் மறந்துவிடவேண்டாம். பாராளுமன்ற உறுப்பினராக நீரும், செயலாளராக கலாநிதி நீலனும் தெரிவுசெய்த ஒரேயொரு குற்றத்திற்காக திரு.சு.நடேசு அவர்களுக்கும், திரு.செல்வராசா அவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை நீர் மறந்துவிட்டீரா? இவர்களை நீர் அதன்பின் சந்தித்துப்பேசினீரா, இப்படியான பெறுமதி கொண்ட நிகழ்வுகளையெல்லாம் எவ்வாறு இலகுவில் உம்மால் மறக்க முடிகிறது.
எமது கட்சி என்றும் பணவசதி படைத்த கட்சியாக இருக்கவில்லை. வேறுபல கட்சிகளின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் பெறும் வேதனத்திலிருந்து ஒரு பகுதி பணத்தையும் வழங்கப்படும் வாகனத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதியையும், வேறு பல வசதி வாய்ப்புக்களையும் கட்சியின் வளர்ச்சிக்;காக வழங்கப்பட்டு வந்த நிலையில் நாம் உமக்கு வழங்கிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் மூலம் - இரு ஊழியர்களையும், போட்டோகொப்பி இயந்திரம் ஒன்றும், தட்டச்சு இயந்திரம் மற்றும் தொலைபேசி ஆகியவை தவிர வேறு எதனையும் கட்சிக்காக நீர் கொடுக்கவில்லை. ஆனால் பக்ஸ் இயந்திரத்தை 35000.00 ரூபாவுக்கு கட்சிக்கே விற்று அந்தப் பணத்தைப் பெற்றக்கொண்டீர். இப்பதவி மூலம் கிடைக்கும் ஏனையவற்றை அனுபவிக்கும்போது கூட உமது மனச்சாட்சி உறுத்தவில்லை. ஏனைய கட்சிகளின் இவ்வாறான செயற்பாடுகள் ஒழுங்கு முறையாக இருந்தாலும் எமது கட்சியில் மட்டும் இது விதிவிலக்காக இன்றும் இருப்பது துரதிஷ்டமே.
1993ல் விசேட கூட்டத்தினை நடத்தி கூட்டணியின் புதிய தெரிவு இடம்பெற்றதையும் நீர் மறந்திருக்க முடியாது.
1994ல் இடம்பெற்ற தேர்தலில் அம்பாறை மாவட்ட வேட்பாளராக நின்று நீர் தோல்வியுற்ற நிலையில், இரண்டு வாகனங்களில் அம்பாறை ஆதரவாளர்களை ஏற்றி வந்து ஏற்கனவே தேசியப்பட்டியலில் இடம்பெற்றிருந்த கலாநிதி. நீலன் திருச்செல்வத்தின் பெயரை நீக்கி உமது பெயரை இடுமாறு ஆதரவாளர்களைக் கொண்டே வற்புறுத்தியதும், அதற்கு சிவா ஐயா உட்பட அனைவரும் மறுப்புத் தெரிவித்ததும் ஞாபகமிருக்கும் என நினைக்கின்றேன். கஷ்டமான சூழ்நிலையாலும் கட்சி நிதிநிலை இக்கட்டான போதும் சிவா ஐயாவின் சிபார்சின் பேரில் மாதாந்தம் உமது செலவுக்கும், சிராவஸ்தியைவிட்டு வெளியேறிய பின்னர் தங்கியிருந்த அறை வாடகைக்கும் கட்சி நிதியிலிருந்து மீண்டும் பா.உ ஆக நியமிக்கப்படும்வரை பெற்றுக்கொண்டதையும் மறந்திருக்க முடியாது. கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களின் மரணத்தின் பின்பு அந்த இடத்திற்கு மீண்டும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக எனது சிபார்சில் நியமிக்கப்பட்டிருந்தும் நீர் அப்போதுபொதுச் சபையைக் கூட்டும்படியும் மாநாட்டை நடத்தும்படியும் எவரிடமும் கேட்கவில்லை. அன்று எனது சிபார்சினை ஏற்று, என்னுடன் தீர்மானித்தவர்கள் திருவாளர் இரா.சம்பந்தன், ஜோசப் பராராஜசிங்கம், பொ.செல்வராசா, கி.துரைராசசிங்கம். எஸ்.ரி.ஆர் ஆகியோர் மட்டுமே. இந்த விடயத்தில் எனது பெருந்தன்மையை நேரடியாகவே கண்டிருப்பீர். இந்தியாவிலிருந்த தலைவர் சிவாவிடமும் இது பற்றித் தெரிவித்த போது அவர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்.
1983ல் இந்தியாவில் நாம் தங்கியிருந்த காலத்திலும் 2000ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் வரை கட்சி மூலமாகப் பெற்ற வருவாய் உமக்கு ஒழுங்காகவே கிடைத்து வந்தது. 1983 - 1989 வரை அமிர் அவர்கள் மரணிக்கும் வரைக்கும் உமக்கு மாதாமாதம் கட்சி வேதனம் தந்தது. கலாநிதி நீலன் அவர்களின் இடத்திற்கு உம்மைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்ததன் பேரில் மூன்று உத்தியோகத்தர்கள், போட்டோக்கொப்பி இயந்திரம் ஒன்றும் வழங்கப்பட்டன. வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டினை விற்ற நிலையில் அதன் மூலம் பெறப்பட்ட பெருந் தொகைபணத்தில் யாரும் பங்கு கேட்டார்களா? அல்லது நீராகவேனும் உணர்ந்து கட்சிக்குச் சிறுதொகையேனும் கொடுக்கத் துணிந்தீரா? அல்லது அப்படி ஓரு எண்ணம் இருப்பதையாவது வெளிப்படுத்தினீரா? இல்லையே! எல்லாவற்றையும் முழுமையாக அமுக்கிக்கொண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி தந்த பதவியினை வியாபாரமாக்கிய ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் நீர்தான் என்பதைமறுக்க முடியுமா? வாகனங்களால் மாத்திரம் உமக்கு வந்த வரவு ஏறக்குறைய 50 லட்சம் ரூபா வரும். இதை என்னால் நிரூபிக்க முடியும். இது 2004ம் ஆண்டு வரை அதன் பின்?
இவ்வாறான சூழ்நிலைகளில் உமது இன்றைய போக்கிற்கு காரணம் என்ன? சில சம்பவங்களை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. 2000ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளராக உம்மையே நியமிக்கும்படி நீர் நடவடிக்கைக் குழுவிற்கு மனுச் செய்தபோது, அக்குழு அதனை நிராகரித்தது. உமது மன உழைச்சலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்நிலையில் என்னால் அல்லது எனது அனுசரணையுடன் கிடைத்த சகல வாய்ப்பு வசதிகளையும் மறந்த நிலையில் அண்மைக் காலமாக உமது நடவக்கைகளை கண்டும், பார்த்தும், படித்தும் என்னையே நான் கோபித்துக் கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? இத்தனை துரோகங்களும் 2004 இற்கு முன்பு அதற்குப் பிந்திய துரோகங்கள் ஒன்றா இரண்டா?
மீண்டும் நினைவுபடுத்த விரும்புவது யாதெனில், நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேரவில்லை. நானும் ஒன்றுபட்டு உருவாக்கிய கட்சிதான் தமிழர் விடுதலை கூட்டணி. உருவாக்குவதற்கும் சேர்த்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களில் நான் மட்டுமே கூட்டணியின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவன் என்ற பெருமையைப் பெற்றுக்கொள்ளக் கூடியவன். வயதில், அனுபவத்தில், முதிர்ச்சியில் நான் உம்டைவிட பெரியவன் என்பதை நீர் எப்படியாகிலும் ஒப்புக்கொண்டேயாக வேண்டும். இந்நிலையில் 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் முதன்மை வேட்பாளராக வருவதற்கு முயற்சித்திருக்கக் கூடாது. இது சிறுபிள்ளை ஆசையென எண்ணி விட்டுவிடலாம். ஆனால் அத்தேர்தலில் மூலைமுடுக்கெல்லாம் சென்று பலரிடம் உமக்காக மட்டுமே வாக்களிக்கும்படி கேட்டதாகவும் பழைய இளைஞர் பேரவையினரைச் சந்தித்து உமக்காக வேலை செய்யுமாறு கேட்டதும் எனக்குத் தெரியும். ஆனால் பிரச்சார மேடையில் தம்பி சேனாதிராசா, என நான் விளித்துப் பேசும்போது நீர் உரையாற்ற எழும்பும் சந்தர்ப்பங்களில் என் பெயரை மட்டும் விளித்து உரையாற்றியதை நான் உமது புத்தி அவ்வளவுதான் என பொறுத்துக்கொண்டாலும், பலர் உமது சிறுமைத்தனத்தை என் முன்னாலேயே விமர்சிக்கக் கேட்டு வெட்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.
2001ஆண்டு தேர்தலில் நீர் மிகவும் சின்னத்தனமாக நடந்துகொண்டீர். தலைவன் என்ற நிலையில் எனக்கிருக்கும் பொறுப்பு உமக்கு இருக்காதுதான். ஆனால் கூட்டுப்பொறுப்பானவர்கள் என்ற தோரணையில் ஒத்திசைவாக நடந்திருக்க வேண்டும். இன்றைய நிலைமையில் எமக்குச் சாதகமாக வரவேண்டும் என்பதற்காக சில செயற்பாடுகள் தவிர்க்கப்படவேண்டியதும் அவசியமானதாகும். ஒரு காலம் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்பட்டவர்கள் இன்று அந்நிலைமையில் இருந்து தம்மை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளனர் என்பது எனது அனுபவம். ஏனெனில் நான் அடிப்படை இடதுசாரிக்கொள்கைப்பற்றுக் கொண்டவன்.
என்னுடன் பழகிய பலருக்கு நன்கு தெரியும். 2000 ஆண்டுத் தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்றவரைப் புறந்தள்ளி உமக்குச் சாதகமான வேட்பாளரை உட்புகுத்தியதால் பலரின் மனக்குரோதங்களையும், ஐயப்பாட்டினையும் தோற்றுவித்தீர். இது துரோகமல்லவா? நீரும் எம்முடன் இருந்தாலும் பல நல்லவற்றையும் எண்ணங்களையும் காலத்திற்கேற்ப செயற்படுத்த முடியாதவராகவே காணப்பட்டீர். இதனால் சில முரண்பாடுகள் தோன்றக் காரணமாக இருந்து. சமூக குரோதங்களையும், சமயக் குரோதங்களையும் இத்தனையாயிரம் உயிரிழப்புக்களின் பின்பும் பழைய குருடியின் நிலைக்குப் போவது வெட்கமானதாகத் தெரியவில்லையா?
உமக்கு ஞாபகமிருக்கும் என நினைக்கின்றேன். நீர் ஒரு வேட்பாளரின் பெயரினை சிபார்சு செய்திருந்தீர். 2000 ஆம் ஆண்டு தேர்தலின் போது அவரை மன்றாடி நாம் கேட்டோம். எங்கள் பட்டியலில் பெயரிடவா என்று. அன்று திரும்பிக்கூடப் பாராமல் என்னை விட்டால் போதும் என்று ஓடியவர். திருமதி யோகேஸ்வரன் இறந்துகிடக்க கிட்டவும் வராமல் எட்டத்தில் நின்றவர். மற்றவர் 2000ம் ஆண்டு தேர்தலில் கண்ணால்கூடக் காணாதவர். இக்கட்டான கட்டங்களில் கட்சியின் நன்மைக்காக தங்களையே தியாகம் செய்யத் துணிந்த பலரை ஓரங்கட்டி சுயநல அரசியல் நடத்தும் நிலைமைக்கல்லவா உமது செயற்பாடுகள் காரணமாயிருந்தன. தம்பி! பாலை மறந்தாலும் பால் வார்த்த பானையை மறக்கக்கூடாது. 1994, 2000 தேர்தல்களை ஒருகணம் நினைத்துப் பார்த்தால் அன்று எங்களுக்குக் கைகொடுக்க மக்கள், கட்சி அபிமானிகள் சகலரும் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்து எமக்கு வாக்களித்தார்கள் என்று. எங்கள் கட்சி தலைநிமிர முடிந்ததே யாரால்? நிச்சயமாக நானோ நீரோ உரிமை கோர முடியாது. எங்களின் துணிவு, அதை மீறிய கட்சித்தொண்டர்களின் துணிவு, மக்களின் பலம், அவர்களின் ஆதரவு ஆகியவையே! இவையே கட்சியை மீண்டும் துளிர்விடச் செய்தது என்பதை தினமும் நான் நன்றியுடன் நினைக்கின்றேன். ஆதலால் தயவு செய்து துளிரைக் கருக்கிவிட வேண்டாம்.
கடந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி உறுப்பினர்களும் தெரிவாகி சகலரும் ஒன்றுகூடுதவற்கு முன்பே தன்னிச்சையாக ஒரு முடிவெடுத்து யாழ்ப்பாண மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக் கிளை பாராளுமன்றக் குழுத் தலைவராக திரு.இரா.சம்பந்தன் தெரிவானதற்கும், தேசியப் பட்டியல் உறுப்பினராக திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் நியமிக்கப்பட்டமைக்கும் நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியதாக செய்தி வெளியிடப்பட்டதே! இது உண்மையில்லை. பொய் என்பது மட்டுமல்ல பெரும் மோசடியும் கூட. அதேநேரம் இதை நிறைவேற்ற உடந்தையாக இருந்தது மட்டுமல்லாது சில உட்கட்சிப் ப+சல்கள் எழவும் காரணமாக வழிவகுத்த சில சூத்திரதாரிகளே இன்றைய உமது தமிழரசுக் கட்சி அமைப்பாளர்களாக பெயர் குறித்துரைக்கப்பட்டுள்ளனர். இதனை மறுக்க முடியுமா?உமக்கு ஒன்று தெரியவேண்டும்.
பாராளுமன்ற சம்பிரதாயப்படி மிகப் பழைய உறுப்பினர் ஒருவர்தான் பாராளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்படுவார். இச்சம்பிரதாயம் எமது கட்சியில் மீறப்படுவதற்கு தெரிந்தோ தெரியாமலோ நீரும் உடந்தையாக இருந்துள்ளீர். அப்படி அல்ல நீரே காரணமாக இருந்திருக்கிறீர்.
1998ல் உமக்கு ஞாபகம் இருக்கும் என எண்ணுகின்றேன். யாழ் மாநகர சபைத் தேர்தல் பற்றிய அறிவித்தல் வெளியான சந்தர்ப்பம் அது. அத் தேர்தலில் எமது கட்சி போட்டியிடுவதே எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு சாதகமானதெனக் கருதி உம்மிடத்தில் கருத்துக்கேட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்த நீர் தேர்தலில் போட்டியிடக் கூடிய சூழல்; இங்கில்லை என்று அறிக்கையும் அனுப்பினீர். ஆனால் போட்டியிடாவிட்டால் யாழ்ப்பாணம் என்றுமே எமக்கு இனி இல்லை என்றாகிவிடும் எனக் கருதிய சிலர் எப்படியும் எங்களைத் தேர்தலில் போட்டியிடுமாறு தூண்டியதோடு பலர் தமது உயிரையும் மதியாது போட்டியிடவும் துணிந்தனர். இந்நிலையில் உம்மைத் தலைமை வேட்பாளராக போட்டியிடச் சம்மதமா எனக் கேட்டபொழுத நீர் மறுத்துவிட்டீர். இத்தருணத்தில் திருமதி.சரோஜினி யோகேஸ்வரன் விருப்பம் தெரிவிக்க அவரை முதன்மை வேட்பாளராக நியமிப்பதற்காக தம்பி சிவபாலன் தம்பதிகளுடன் முகுந்தனையும் திருமதி யோகேஸ்வரனையும் யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தோம். அவர்களுக்கு நீர் எதுவிதமான உதவிகளோ, ஒத்தாசையோ வழங்காததுடன் கட்சியின் உறுப்பினர்களைக் கூட அறிமுகம் செய்து வைக்கவில்லை. இதனால் திருமதி யோகேஸ்வரன் அவர்கள் எவ்வாறு மனம்நொந்து கொண்டார் என்பதும், அங்கிருந்த விடுதியை விட்டு வெளியே பயங்கரமான சூழ்நிலையிலும் தனது சொந்த வீட்டிற்குச் செல்வதுதான் சரியானதெனத் தீர்மானித்து உம்முடைய ஒத்துழைப்புக் கிடைக்காததன் காரணமே என்பதை பலரும் ஏற்றுக்கொள்வர்.
இவ்வாறான சூழ்நிலையில் அவர்களை நீர் பாதுகாப்பீர் என்று நாம் நம்பியிருந்த நிலைமையில் எவருக்கும் சொல்லாது நீர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்திருந்தீர். இது ஒரு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் செய்யும் கட்சி விசுவாசமாக ஏற்றுக்கொள்ள முடியுமா? இருந்தாலும் பல இடர்களுக்கு மத்தியில் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந் நியமனப் பத்திரம் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்த போது எமது வேட்பாளர்களின் மனங்களும் நிலைமையும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஒரு தடவை சிந்தித்துப் பார்த்தால் தெரியும். அவமானப்பட்டும் வேதனைப்பட்டும் மீண்டும் கொழும்பு திரும்பிய திருமதி யோகேஸ்வரன், சிவபாலன், முகுந்தன் ஆகியோர் நடந்தவற்றைக் கவலையுடன் தெரிவித்தனர். நிதி நிலைமை கட்சியில் எப்படி என்பது பலருக்குத் தெரியாதிருந்தாலும் உமக்குத் தெரியும். ஆனாலும் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டது கட்சிக்கு ஏற்பட்ட அவமானம் எனக் கருதிய நான் இதனை எதிர்த்து கலாநிதி நீலனின் முழு ஒத்துழைப்புடன் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்து, வழக்கில் வெற்றியும் பெற்றோம். அதன் பிரகாரம் எமது நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நானும் திருமதி.யோகேஸ்வரன், தம்பிகள் சிவபாலன், இரவிராஜ், அரவிந்தன், முகுந்தன் ஆகியோருடன் யாழ்ப்பாணம் சென்று குமரன் விடுதியில் தங்கியிருந்து தேர்தல் பிரச்சாரத்தை இறுதி 4 அல்து 5 நாட்கள் நடத்தினோம். இச்சந்தர்ப்பத்தில் இந்தியா சென்று நீர் எமது கட்சிக்கு ஆதரவான நிலைமை தேன்றியுள்ளத்தைத் தெரிந்து கொண்டு, நீரும் யாழ்ப்பாணம் வந்து தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவினீர். தேர்தல் முடிவுகள் வெளியாகி எங்களின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதன் பின்பு இத்தேர்தலில் உம்மைப் போட்டியிட வைக்காதது எனது குறையென நீர் குறைபட்டுக்கொண்டதாக செய்திகள் கசிந்தன. நான் உம்மை தலைமை வேட்பாளராக பெயரிடவா என்று கேட்டதும் அதற்கு நீர் மறுத்ததும் மெய். இதனையாவது நீர் ஏற்றுக்கொள்வீர் என நம்புகிறேன்.
இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையில் பாரம்பரியமும், பலவரலாறுகளைக் கொண்டதும் பல தியாகங்களைச் செய்த தியாகச் செம்மல்களால் கட்டி வளர்த்தெடுத்த எம் கட்சியினை ஆட்டம் காண வைத்தது உமக்கு தர்மமாகப்படுகிறதா? பிரிந்து நின்ற தமிழ்க் கட்சிகள் ஏன் ஒன்றிணைந்தன? ஒன்றிணைந்ததன் வெற்றியும், ஆட்சியாளர்களை திகிலடையச் செய்ததும் வரலாறாக இருந்து இன்று அவைகள் சரித்திரமாகி தீர்வின் வாசலில் நிமிர்ந்து நிற்கும் நிலையில், மீண்டும் பல தமிழ்க் கட்சிகளாக கூறுபோடுவதும், அதற்கான முயற்சியும், முன்னெடுப்பும், முடுக்கிவிடுவதும் மறைந்த தமிழ்த் தலைவர்களுக்கும், மக்களுக்கும் நீர் செய்யும் மாபெரும் மன்னிக்க முடியாத குற்றமென்பதும் தெரியவில்லையா? பெரும் துரோகம் இல்லையா?
தம்பி! தலையிடிக்கு தலையணை மாற்றுவது தீர்வல்ல. ஏன் தலையிடி வந்தது என்று கண்டு அதற்குப் பரிகாரம் காண்பதே சிறப்பு. குழம்பாமலும், குழப்பாமலும் நிதானமாக நின்று நேர்மையாக அரசியல் நடத்துவது தான் முறை. அதனை விடுத்து தானும் குழம்பி இருப்பவரையும் குழும்பி அரசியல் லாபம் பெற முற்படுவது அழகல்ல. தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. இதில் இரண்டாவது விடயத்தில் தான் மிகக் கவனமாக காய்நகர்த்துவதாக நீர் எண்ணுகின்றீர். ஆப்பிழுத் குரங்கின் கதை உமக்குத் தெரியாததல்ல. அவ்வாறான ஓரு நிலைமை உமக்கு வந்துவிடுமே என நான் வருந்துகின்றேன். இப்படியான சந்தர்ப்பத்தில் எவருமே துணைக்கு வரார். கண்ணிருந்தும் பாராது, காதிருந்தும் கேளாது, வாயிருந்தும் பேசாது மகாத்மாவின் மந்திகளாகவே நீர் துணைக்குக் கூப்பிடுவோர் இருப்பர். இது உமக்குத் தேவைதானா? தற்காலிகமாக நீர் சில பதவிகளை அனுபவிக்கலாம். நான் தாழ்ந்து போகலாம். ஆனால் என்றோ ஒருநாள் என்னை உலகம் போற்றும். அது உறுதி. ஆனால் அந்த நேரம் நான் இருக்கமாட்டேன்.
முன்பு ஒரு நாள் உதயன் பத்திரிகையில் பேட்டியொன்றில் உயர் பாதுகாப்பு வலயங்கள் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலில் கூறப்பட்ட உமது கருத்துக்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனையிறவு மீட்சிப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் மும்மரமாக தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் அதற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் பேசியது மட்டுமல்லாமல் ஆனையிறவை மீளவும் ஸ்ரீலங்கா அரசு கைப்பற்றுவது கனவில் கூடப் பலிக்காது எனத் துணிந்து கூறியவன் நான் ஒருவன் மட்டுமே. நீர் உட்பட பலர் அன்று பாராளுமன்றத்திலிருந்த போதும் நான் ஒருவனே பல விடயங்கள் குறித்துப் பேசியிருக்கின்றேன். அப்படியிருக்கும் நிலையில் மீண்டும் ஆனையிறவினை ஸ்ரீலங்கா அரச படைகளிடம் போவதை நான் ஏற்றுக்கொள்வேன் என எண்ணுவது முட்டாள் தனமானதாகும். அந்த முகாம் இருந்த காலத்தில் உம்மைவிட துன்பப்பட்டவனும், பாதிக்கப்பட்டவனும் நான் என்பதும், அன்றைய எனது கிளிநொச்சித் தொகுதி மக்களும் ஏனைய பயணிகளும் என்பதும் உமக்குத் தெரியாமல் போகலாம்.
இது விடயமாக நடந்ததென்ன? இதற்கான காரண கர்த்தா யார், தற்போதுள்ள அரச படைகள் வெளியேறி 1991ஆம் ஆண்டில் எங்கெங்கு நிலைகொண்டிருந்தார்களோ அந்த முகாம்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை திரு.அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் ஜப்பானிய விசேட தூதுவர் கௌரவ யசூசி ஆகாஷி முன்னிலையில் வைத்த வேளையில் திரு.விநாயகமூர்த்தி அவர்களைப் பார்த்து, அப்படியானால் ஆனையிறவைக் கேட்பார்கள் கொடுக்க முடியுமா? என்று கேட்டேன். இது பொல்லுக்கொடுத்து அடிவாங்கும் செயலல்லவா! உங்களின் கருத்துப்படி 1991ஆம் ஆண்டு இருந்த இடங்களுக்குப் படைகள் போகவேண்டும் எனக் கோருவது மீண்டும் அரச படைகளை ஆனையிறவு முகாமிற்குப் போகவைக்கும் முயற்சியாகவல்லவா இருக்கும். பல ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பலிகொண்டு பறித்தெடுத்த முகாமை மீளவும் அரச படைகளிடம் தாரை வார்ப்பது சரியானதா? இப்படித்தான் நான் திரு.விநாயகமூர்த்தியிடம் கேட்டிருக்கவேண்டும். ஆனால் அதனை புரிந்துகொண்ட விநாயகமூர்த்தி தனது புத்திசாதுரியமற்ற கோரிக்கையின் தாக்கத்தினை சமாளிப்பதற்காக என்மீது வீணான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார். தற்போது பல தடவை தான் அப்படியாருக்கும் கூறவில்லை என நண்பர் வினாயகமூர்த்தி கூறிவிட்டார். அவரோ அல்லது நீரோ அல்லது இருவரும் சேர்ந்தோ பகிரங்கமாக அறிக்கை விட்டு எனக்கு ஏற்பட்ட அபகீர்த்தியை போக்குவீர்களா? இந்தப் பொய்யான கூற்றே என்னை 2004 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திட்டமிட்டு தோற்கடிக்க உதவியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இப்படிப் பல நூறுபக்கங்களில் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். எம்மவர் சிலரின் துரோகச் செயலால் மனமுடைந்திருப்பவன் நானே. அமிர் காலமானதன் பின்பு நான் கட்சிக்காற்றியதொண்டு முன்னையதிலும் பார்க்கப் பலமடங்காகும். இதை உணராது செயற்படுவர்களில் நீர் முன்னணியில் நிற்பது வேதனைக்குரியதாகும். அமிர் அவர்களின் இறப்பால் பெரிதும் இலாபம் அடைந்தவர் நீர் மட்டுமே. அவர் பெயரை உச்சரிக்க தயங்குபவரும் நீரே.
நீர் இளைஞனாக இருந்தகாலம் தொட்டே அரசியலில் உம்மை வளர்க்க முயற்சித்திருந்தேனே தவிர, உமக்கு என்றும் கடுகளவேனும் துரோகம் செய்ய நான் நினைத்தவனல்ல. ஆனால் அன்று தொட்டு இன்றுவரை என்னை நீர் விரோதியாகவே கணித்து செயற்படுகின்றீர். எது எப்படியிருப்பினும் தம் உதிரத்தை சிந்தி பல தியாகங்களைச் செய்து உருவாக்கி கட்டிக்காத்து எம்மிடம் கையளிக்கப்பட்ட எமது தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியை காக்க வேண்டிய முக்கிய கடமை எனக்குண்டு. இதே கடமைப்பாடு உமக்கும் உண்டென உணர்ந்து என்னுடன் ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பு உமக்கும் உண்டு. எனது இறுதி மூச்சிருக்கும் வரை இப்பொறுப்பை உணர்ந்து செயற்பட்டே வருவேன். எமது கட்சிக்காக எனது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேன் என உறுதியளித்து இக்கடிதத்தை நிறைவு செய்கின்றேன். நீதி நியாயம் உமக்கு விளங்குவதாக தெரியவில்லை. இக்கருத்துக்களை வலியுறுத்தி பல கடிதங்கள் முன்பும் எழுதியுள்ளேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு சம்பந்தமாக நீர் பேசியும் எழுதியும் வரும் கருத்துக்களுக்கு இதை பதிலாக ஏற்றுக்கொள்ளவும். இன்றேனும் உமது தவறை உணர்ந்து நீர் பயப்படுவதற்கு யாரும் இல்லாத பட்சத்தில், தந்தை செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்டு இறுதிவரை அவரே தலைமை தாங்கிய தமிழர் விடுதலைக்கூட்டணியை காப்பாற்ற முன்வருவீரேயானால், கட்சியின் மிகப்பெரிய பொறுப்புகளில் ஒன்றை தரத்தயாராகவுள்ளேன். இவ்வழைப்பு திரு.இரா.சம்பந்தன் உட்பட கட்சியின் சகல முன்னைய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் சேர்த்து விடப்படும் பணிவான வேண்டுகோளாகும். தந்தை செல்வா நாமம் நீடூழி வாழ்க!
வணக்கம்
அன்புடன்,
என்றும் கட்சிப்பணியிலுள்ள
வீ.ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி
அண்மைக் காலத்தில் நீர் என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி பேசுவதும், பத்திரிகைகளில் எழுதுவதும் எனக்கு மிக்க கவலையை தருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக உமது விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் விட்டமைக்கு ஒரே ஒரு காரணம் உங்கள் கூட்டு இனப்பிரச்சினை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு என் தலையீடு முட்டுக்கட்டையாக அமையக்கூடாது என்பதற்காகவே. அன்றேல் நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மறுப்பு கூற முடியும். என்னைப் பொறுத்த வரையில் உங்களது செயற்பாடுகள் எதுவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதவையே. எதுவித கருத்தும் வெளியிடாது பொறுத்திருந்தேன். எது எப்படியானாலும் இனி எதையும் பொறுக்க நான் தயாரில்லை. உம்மைப் போன்றவர்களின் செயற்பாட்டால் துரோகி என்ற பட்டத்தைச் சுமக்கின்றேன். உண்மைகளை மறைக்க முடியாது. அவை வெளிவந்தால் தான் மக்கள் மத்தியில் தெளிவு ஏற்படும். ஓர் ஆயுதக்குழு பற்றிய என் கருத்துக்கள், உங்களின் தந்திரத்தால் உங்களுக்கே சாதகமாக அமைந்தது. உங்களுக்கு அதிஸ்டமாகவும் அமைந்தது. விளைவு எம் மக்களுக்கு என் சேவை கிட்டாமல் போனதே.
நீங்கள் என்னைப் பற்றி நன்றி அறிதலுடன் சிந்திக்கத் தவறிய பல விடயங்களில் சிலவற்றையேனும் ஞாபகமூட்ட வேண்டுமென என் உள்ளம் குமுறுகிறது. ஆனால் என் பெருந்தன்மை அதைத் தடுக்கிறது. உங்களுக்கு 06.11.2003 தேதியிட்டு எழுதிய கடிதம் கையிலிருந்தால் ஒரு தடவை அதைப் படியுங்கள். அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் பெரும் அரசியல் தலைவர். இனத்துக்காகத் தன் உயிரைப் பலி கொடுத்தவர். இன்று வரை என்னால் அவரின் இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை. ஆனால் அவர் அமரத்துவம் அடைந்த ப+த உடலின் சாம்பல் சூடு ஆற முன்பு அவர் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியையும் உமக்கே தர வேண்டுமென நீர் கேட்டது ஞாபகம் இருக்கா? விக்கிரமாதித்தன் கதையில் வரும் சம்பவம் போல் இவ்வளவு தைரியம் உமக்கு எப்படி வந்தது என நாம் ஆச்சரியப்பட்டோம். அக்காலத்தில் நீர் கட்சியின் ஓர் ஊழியனாகவே இருந்தீர்.
1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி 18 ஸ்தானங்களைப்பெற்று அமோக வெற்றியீட்டியவேளை 1970 ஆம் ஆண்டு இவ்விரு கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குவித்தியாசங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் கூட்டணியில் தழிழ்க் காங்கிரசும், தமிழரசுக் கட்சியும் சங்கமமானது உண்மையா? இல்லையா? என்பது புரியும்.
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
Anandasangaree,
TULF,
கடிதங்கள்,
மாவை சேனாதிராஜா
Tuesday, April 12, 2011
Leave the people alone during the New Year celebration!
Major General Mahinda Hathurusingh
Cmmander
Security Forces Headquarters
Jaffna
Dear General,
I hope I need no introduction to you. I had lived as a citizen of this country throughout the period since independence. I am now 78 years old and have completed more than half a century in politics and had served for more than 17 years as a Parliamentarian. For your information I do not mix up politics with administration. You may perhaps be aware how appreciative I had been of the humanitarian services rendered by the forces for the IDPs who were in distress. I know how soldiers and police, of the opposite sex nursed the disabled, the sick, the elders and the pregnant ladies. I am also aware how these ladies cared for the kids and played with them making them to forget the hard times they had before coming to the camps. The expatriate Tamils too are full of praise for them. The forces have done their job and it is now time for them to rest.
I need not tell you how the people of the North and the East have suffered for well over 30 years under a special type of military rule. They have had enough on the worst side, such as humiliation, embarrassment, threat, intimidation etc. Now they don’t want to see these again. They have become so allergic that, some women who had very bitter experience run away hysterically on the sight of a gun.
What had been done is now being undone. The people here in the North and the East do not want to see the sight of a gun or army personnel in uniform. They have undergone the worst in their life. They lost all their belongings and even two years after, is still living in primitive type of houses compared with the comfortable houses in which they lived for several years. Men had lost their wives and wive their husbands. Some lost their children and some others have their children in detention, many of whom had hardly committed any offence. Many had lost their breadwinners. Children idle at home without going to school or for work.
In a situation like this celebrating the New Year is far beyond their thinking. They can’t think of enjoying life. May be small children get attracted in thamashas. But the family as a whole is not interested in rejoicing or merrymaking. They want to be left alone. There is yet time for them to come back to normal life. Please instruct your officers to leave the people alone without compulsorily recruiting them to take part in various sports activities. Please give the people especially the youths some more time to forget all what had happened and also till their kith and kin return home or their fate is known. Kindly instruct the Kachchery and sports clubs etc to leave the people alone during the New Year celebration. Let them first get rid of their bitter memories before enjoying life. I strongly urge the people of the Jaffna Peninsula to feel for the people of vanni, most of whom have been reduced to the position of paupers.
Thanking You,
Yours Sincerely
V.Andasangaree
President - Tamil United Liberation Front
11.04.2011.
Cmmander
Security Forces Headquarters
Jaffna
Dear General,
I hope I need no introduction to you. I had lived as a citizen of this country throughout the period since independence. I am now 78 years old and have completed more than half a century in politics and had served for more than 17 years as a Parliamentarian. For your information I do not mix up politics with administration. You may perhaps be aware how appreciative I had been of the humanitarian services rendered by the forces for the IDPs who were in distress. I know how soldiers and police, of the opposite sex nursed the disabled, the sick, the elders and the pregnant ladies. I am also aware how these ladies cared for the kids and played with them making them to forget the hard times they had before coming to the camps. The expatriate Tamils too are full of praise for them. The forces have done their job and it is now time for them to rest.
I need not tell you how the people of the North and the East have suffered for well over 30 years under a special type of military rule. They have had enough on the worst side, such as humiliation, embarrassment, threat, intimidation etc. Now they don’t want to see these again. They have become so allergic that, some women who had very bitter experience run away hysterically on the sight of a gun.
What had been done is now being undone. The people here in the North and the East do not want to see the sight of a gun or army personnel in uniform. They have undergone the worst in their life. They lost all their belongings and even two years after, is still living in primitive type of houses compared with the comfortable houses in which they lived for several years. Men had lost their wives and wive their husbands. Some lost their children and some others have their children in detention, many of whom had hardly committed any offence. Many had lost their breadwinners. Children idle at home without going to school or for work.
In a situation like this celebrating the New Year is far beyond their thinking. They can’t think of enjoying life. May be small children get attracted in thamashas. But the family as a whole is not interested in rejoicing or merrymaking. They want to be left alone. There is yet time for them to come back to normal life. Please instruct your officers to leave the people alone without compulsorily recruiting them to take part in various sports activities. Please give the people especially the youths some more time to forget all what had happened and also till their kith and kin return home or their fate is known. Kindly instruct the Kachchery and sports clubs etc to leave the people alone during the New Year celebration. Let them first get rid of their bitter memories before enjoying life. I strongly urge the people of the Jaffna Peninsula to feel for the people of vanni, most of whom have been reduced to the position of paupers.
Thanking You,
Yours Sincerely
V.Andasangaree
President - Tamil United Liberation Front
11.04.2011.
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
Anandasangaree,
TULF
Monday, January 3, 2011
ஆனந்த சங்கரி ஐயாவிற்கு அன்பான ஒரு அறிவு மடல்.....க. சிவராசா.

முக்கியமான விடயங்களுக்கு முக்கியமான தலைவர்களுக்கு மடல் எழுதும் எனக்கே ஒரு மடலா? யார் அதை எழுதுவது? அப்படி எனக்குத் தெரியாத எண்ணத்தை எழுதப் போகிறார்கள்? என்று ஐயா நினைப்பது எமக்குப் புரிகிறது. உண்மையில் உங்களுக்கு மடல் எழுத இனியொருவர் பிறந்துதான் வரவேண்டும். ஆனாலும் இந்தச் சிறியோனின் இந்தச் சிறிய மடலை அரசியலில் ஊறித்திளைத்த மூத்தவர் நீங்கள் வாசிக்கத்தான் வேண்டும்.
தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகளால் இந்த நிலை வரும் என்பதை நீங்கள் பலதடவைகள் தெரிவித்த போது உங்களைப் பார்த்து ஏளனச் சிரிப்புச் சிரித்துவிட்டு வன்னி சென்று வாங்கிக் கட்டிக் கொண்டு, விழுந்தவன் மீசையில் மண் படாதது போன்று கொழும்பு வந்து நடமாடிய நமது தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் நீங்கள் ஒரு தீர்க்கதரிசியானவர்.
புலிகளிடம் நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் போன்று எவரும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அது உண்மை. அதனால்தான் தமிழ் மக்களுக்கான உங்களது எச்சரிக்கையை நீங்கள் வலுவாக துணிச்சலுடன் விட்டிருந்தீர்கள். அன்று புலிகளுக்கு வால் பிடித்துவந்த அனைவரும் இன்று நீங்கள் அன்று சொன்னவற்றை நிச்சயம் இரை மீட்டிப் பார்ப்பர்.
புலிகளுக்கும், அதன் மறைந்த தலைவருக்கும் அன்று நீங்கள் துணிந்து எழுதிய மடல்கள் பலரை வியப்பில் இன்று ஆழ்த்துகின்றது. தமிழ் மக்களை பகடைக் காய்களாக எண்ணி புலிகள் இஷ்டம்போன போக்கில் நடந்து கொண்ட விதம் இன்று தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்கிவிட்டது. அரசாங்கத்தின் ஆதரவுக் கரம் மட்டுமே அம் மக்களுக்கு ஒரு தெம்பைத் தருகின்றது.
நீங்கள் குறிப்பிட்டது போன்று புலிகள் உண்மையான இதய சுத்தியுடன் ஏதோ ஒரு அரசாங்கத்துடனாவது பேசியிருந்தால் இன்று அவர்களும் அழிந்திருக்கமாட்டார்கள். அவர்களால் தமிழ் மக்களும் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள். உங்களது தீர்க்கதரிசனமான யதார்த்தத்தை எவரும் புரிந்து கொள்ளவில்லை.
வயதாகிவிட்டது, யாருக்கோ வக்காளத்து வாங்குகிறார், தமிழினத் துரோகி என்றுகூட வாய் கூசாமல் விமர்சித்தவர்கள் இன்று வாயடைத்துப் போய் கூனிக் குறுகி நிற்கிறார்கள். அதுதான் சொல்வது, சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்று. அது எவ்வளவு தூரம் உண்மையாகிவிட்டது. புலிகளுக்கு உரமூட்டி வளர்த்து இறுதியில் அவர்களுடன் சேர்த்து அப்பாவி மக்களையும் இன்னலுக்குள்ளாக்கியவர்கள் இன்றும் திருந்துவதாக இல்லை.
ஐயா, உங்களது அரசியல் அனுபவம் முதுமையானால் ஒன்றும் குறைந்துவிடாது. இன்றும் அரசியலில் நீங்கள் துடிப்பான இளைஞனே. இன்றுள்ள பல அரசியல்வாதிகள் உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன. அரைகுறை அரசியல் அறிவை வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் தமிழில் கூட உரையாற்றத் தடுமாறும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு நீங்கள் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து ஞானத்தை ஊட்ட வேண்டும். அரசாங்கத்தின் குறைகளை மட்டும் கூறுவதையே அரசியல் என்று பல அரசியல்வாதிகள் இன்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளுடன் இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த முனைந்த போது, பல நல்ல விடயங்களை நீங்கள் முன்வைத்தீர்கள். எப்படியாவது இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் கண்டு தமிழ்பேசும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்த முனைந்தீர்கள். ஆனால் புலிகள் கேட்டால்தானே. மாவிலாற்றில் சண்டித்தனம், மணலாற்றில் ஆயுதம் இறக்குதல் என்று அரசாங்கத்தை வெறுப்பூட்டியது. புலிகளை அழிப்பது என்பது அரசுக்கு தவிர்க்க முடியாது போனது.
தாங்கள் இன்று புலிகள் அழிக்கப்பட்ட நிலையிலும் அரசாங்கத்தின் நல்ல விடயங்களை பாராட்டுவதுடன், குறைகள் காணப்பட்டால் தயக்கமின்றிச் சுட்டிக் காட்டுவதும் எவரையும் கவரும் ஒன்றாகும். தாங்கள் ஒரு அரசியலில் முதிர்ந்த ஒரு ஞானி என்பதால், தமிழ் மக்களது தீர்வு விடயத்தில் ஜனாதிபதி கூட உங்களது கருத்துக்களை உள்வாங்கிச் செயற்படுவதில் பின்நிற்கமாட்டார். பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி உங்களது கருத்துக்களுக்கு இடமளித்துச் செயற்பட்டுள்ளார்.
இத்தகைய அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல்வாதியான நீங்கள் இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்தே வருகின்aர்கள் என்பது தங்களது அறிக்கைகள் மூலமாகத் தெளிவாகிறது. ஆனால் அரசாங்கத்தின் மீது வெறுமனே குற்றச்சாட்டுக்களை மட்டுமே முன்வைக்கும் தமிழ்க் கட்சிகளுக்கு மத்தியில் நீங்கள் முற்றிலும் வித்தியாசமானவர். நல்லதை நல்லது என்று சொல்லும் பக்குவம் எல்லோருக்கும் வராது. ஆனால் அது உங்களுக்கு நிறையவே உள்ளது.
உங்களது முதிர்ந்த வார்த்தையைக் கேட்காது தமிழ் மக்களை இன்று நட்டாற்றில் கைவிட்டுச் சென்றுள்ள புலிகள் இன்னமும் மக்களை நிம்மதியாக வாழ விடுவதாக இல்லை. இன்று அக்கரைகளில் நின்று நடுக்கடலுக்கு வா என்று அழைப்பது போன்று புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து இங்குள்ள மக்களை குழப்பி வருகின்றனர்.
இறுதி யுத்தத்தில் மக்கள் கஷ்டப்பட்டாலும், இன்று அவர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் சுகமாக வாழ்ந்து வருகின்றார்கள். குறைகள் சில இருந்தாலும், அம்மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கம் அந்தளவிற்கு அவர்களை நன்றாகக் கவனித்து வருகின்றது. சுதந்திரமாக, நிம்மதியாக வாழ்வதையே இந்தப் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புகின்றனர். அவர்களில் தொண்ணூற்று ஒன்பது சதவீதமானோர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை, உதவிகளை வரவேற்றுள்ளனர்.
இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. அதனை அரசு வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது. வெளியாரது தலையீடுகள் மற்றும் வற்புறுத்தல்கள் இல்லாது சம்பந்தப்பட்ட மக்களது பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு இறுதித் தீர்வினைப் பெறுவதில் அரசாங்கம் முனைப்பாகவும், தீவிரமாகவும் உள்ளது.
எனவே காலத்தைக் கடத்துவதில் அர்த்த மில்லை. முன்னர் தீர்வு விடயத்தில் காலங் கடத்தி இழுத்தடிக்கிறது என அரசாங்கத்தைக் குறை கூறுவது பலரது அரசியலாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு. நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா என்பது போல அர சாங்கம் தயாராக உள்ளது. தமிழ் கட்சிகள்தான் ஒரு நிலைப்பாட்டுக்கு வரமுடியாது இழுத் தடிக்கிறது போலத் தோன்றுகிறது.
இதில் தங்களது பங்களிப்பு என்னவென்றால், தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்தி அவர்களுக்கிடையே ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, தங்களது முதுமையான அனுபவம் மூலமாக அவர்களை ஒற்றுமைப்பட வைப்பதே. இதில் நான் பெரியவன், எனக்குப் பிறகுதான் நீ, நீ ஆட்களைச் சுட்ட கட்சி என்று வாதிடுவதால் பலனில்லை. அரசாங்கத்தின் குறிப்பாக ஜனாதிபதியின் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ்க் கட்சிகள் ஒருமித்த கருத்தை முன்வைக்க வேண்டும். அதற்கு நீங்கள் வழிவகை செய்ய வேண்டும்.
லண்டனில் ஜனாதிபதிக்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திலுள்ள சிலர் அபகீர்த்தியை ஏற்படுத்த முனைந்த போதும், அவர் நாடு திரும்பிய பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தமிழ் மக்களது தீர்வு தொடர்பாக லண்டன் மாநாட்டில் தெரிவிக்க இருந்தேன். அவர்களுக்கு அதில் நாட்டமில்லை போலும், என்னைப் பேசவிடாது தடுத்துவிட்டனர் என மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.
எனவே இனியும் அவ்வாறானதோர் தரக்குறைவான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது, மக்களது விடிவுக்காக ஒன்றுபட்டு, இந்த அரசாங்கத்தின் மூலமாக ஒரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள எல்லோரையும் ஒன்றிணையுங்கள். நீங்கள் சொன்னால் கேட்கும் நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். எனவே அந்தத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் இவர்களும் கேட்கத்தானே வேண்டும். அதற்கான அனுபவமும், ஆற்றலும், அறிவும், சக்தியும், முதிர்வும் தங்களிடம் மட்டுமே உள்ளதால் இந்த மடலைத் தங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.
நன்றி: தினகரன்
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
Anandasangaree,
TULF
Monday, October 4, 2010
கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் திறந்துவைப்பு!
செய்தி - 03.10.2010
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகம் கடந்த02.10.2010 சனிக்கிழமை மாலை 4.00மணிக்கு தந்தை செல்வாவின் புதல்வர் திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். தலைவர் திரு. வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) உதய சூரியன் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் தந்தை செல்வாவின் திருவுருவச் சிலையினை மட்டக்களப்பைச் சேர்ந்த திரு மருதநாயகம் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார். பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகத்தை திரு செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் நாடா வெட்டி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய பலரும் கட்சியின் முக்கிய பொறுப்பை சந்திரகாசன் அவர்கள் ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் திரு. சந்திரகாசன் அவர்களை கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு சகல தமிழ்க் கட்சிகளும் ஒரு அமைப்பின் கீழ் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது எனக் குறிப்பட்டார். சகல தமிழ்க்கட்சிகளும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஒரே அமைப்பாக இயங்க முன்வரவேண்டும் எனவும், அதற்குத் தடையாக எனது கட்சியின் தலைமைப்பதவி இருக்கும் என எவராவது கருதினால் நான் எனது தலைவர் பதவியையும் இராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் எனவும் கூறினார். எனவே மக்களின் நலன் கருதி தான் எந்த தியாகத்தையும், செய்தாவது தமிழ்க்கட்சிகளின் ஒன்றிணைவிற்கு ஒத்தாசை நல்குவேன் எனவும் குறிப்பிட்டார்.
எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும் முகமாக இறுதியாக உரையாற்ற வந்த திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆயுட்கால உறுப்பினர் எனவும் எந்த சந்தர்ப்பத்திலும் வேறு கட்சிக்குப் போகவேண்டிய அவசியமில்லை எனவும் சரியான நேரத்தில் நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் உறுதிபடக்கூறினார். தற்போது தமிழகத்தில் தங்கியிருக்கும் எமது உறவுகளின் நலன்களில் முழுநேரமும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற படியால் நேரமின்மையே இதற்குக் காரணம் எனவும் கூறினார். அதுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியை வழி நடத்த வேண்டிய பொறுப்பு திரு ஆனந்தசங்கரிக்கு உண்டு எனவும் ஏனைய மத, இன தலைவர்களாலும், சர்வதேச தலைவர்களாலும் நன்கு மதிக்கப்படுகின்ற தலைவர் ஆனந்தசங்கரி எனவும், இவ்வாறான தலைவர்தான் இப்போதைய சூழ்நிலையில் மக்களுக்குத் தேவை எனவும் குறிப்பிட்டார். ஏனோ தொரியவில்லை நல்ல தலைவர்களைத்தான் அடுத்தவர்கள் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள் எனவும் மக்களும் அதை எளிதில் நம்பி மோசம் போய்விடுகிறார்கள் எனவும் இந் நிலை மாறி நல்லவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க மக்கள் முன்வர வேண்டும், எனவும் விசனத்துடன் குறிப்பிட்டார். ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதி திரு வீ.ஆனந்தசங்கரி என அவர் மேலும் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இறுதியாக திரு. ஏகாம்பரம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவிற்கு வந்தது.
ஊடகச் செயலாளர் - த.கஜன்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகம் கடந்த02.10.2010 சனிக்கிழமை மாலை 4.00மணிக்கு தந்தை செல்வாவின் புதல்வர் திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். தலைவர் திரு. வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) உதய சூரியன் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் தந்தை செல்வாவின் திருவுருவச் சிலையினை மட்டக்களப்பைச் சேர்ந்த திரு மருதநாயகம் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார். பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகத்தை திரு செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் நாடா வெட்டி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய பலரும் கட்சியின் முக்கிய பொறுப்பை சந்திரகாசன் அவர்கள் ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் திரு. சந்திரகாசன் அவர்களை கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு சகல தமிழ்க் கட்சிகளும் ஒரு அமைப்பின் கீழ் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது எனக் குறிப்பட்டார். சகல தமிழ்க்கட்சிகளும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஒரே அமைப்பாக இயங்க முன்வரவேண்டும் எனவும், அதற்குத் தடையாக எனது கட்சியின் தலைமைப்பதவி இருக்கும் என எவராவது கருதினால் நான் எனது தலைவர் பதவியையும் இராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் எனவும் கூறினார். எனவே மக்களின் நலன் கருதி தான் எந்த தியாகத்தையும், செய்தாவது தமிழ்க்கட்சிகளின் ஒன்றிணைவிற்கு ஒத்தாசை நல்குவேன் எனவும் குறிப்பிட்டார்.
எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும் முகமாக இறுதியாக உரையாற்ற வந்த திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆயுட்கால உறுப்பினர் எனவும் எந்த சந்தர்ப்பத்திலும் வேறு கட்சிக்குப் போகவேண்டிய அவசியமில்லை எனவும் சரியான நேரத்தில் நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் உறுதிபடக்கூறினார். தற்போது தமிழகத்தில் தங்கியிருக்கும் எமது உறவுகளின் நலன்களில் முழுநேரமும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற படியால் நேரமின்மையே இதற்குக் காரணம் எனவும் கூறினார். அதுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியை வழி நடத்த வேண்டிய பொறுப்பு திரு ஆனந்தசங்கரிக்கு உண்டு எனவும் ஏனைய மத, இன தலைவர்களாலும், சர்வதேச தலைவர்களாலும் நன்கு மதிக்கப்படுகின்ற தலைவர் ஆனந்தசங்கரி எனவும், இவ்வாறான தலைவர்தான் இப்போதைய சூழ்நிலையில் மக்களுக்குத் தேவை எனவும் குறிப்பிட்டார். ஏனோ தொரியவில்லை நல்ல தலைவர்களைத்தான் அடுத்தவர்கள் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள் எனவும் மக்களும் அதை எளிதில் நம்பி மோசம் போய்விடுகிறார்கள் எனவும் இந் நிலை மாறி நல்லவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க மக்கள் முன்வர வேண்டும், எனவும் விசனத்துடன் குறிப்பிட்டார். ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதி திரு வீ.ஆனந்தசங்கரி என அவர் மேலும் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இறுதியாக திரு. ஏகாம்பரம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவிற்கு வந்தது.
ஊடகச் செயலாளர் - த.கஜன்
Monday, June 7, 2010
ஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்கும் ஆனந்தசங்கரி அவர்கள் எழுதிய கடிதங்கள்
01-06-2010
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ச,
ஜனாதிபதி,
கொழும்பு.
இனப்பிரச்சினைக்கான தீர்வு.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,
இனப்பிரச்சினைக்கு ஓர் திருப்திகரமான தீர்வு காண்பதற்கு வேண்டிய பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வதை முன்னிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். முதற்கட்டமாக தாங்கள் புதுடில்லிக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தை மக்கள் வரவேற்கின்றார்கள். இத்தனை உயிரிழப்புகள்,சொத்திழப்புகளின் பின் காணப்போகின்ற தீர்வு பல்வேறு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமன்றி, எதிர் காலத்தில் ஏதாவது ஒரு சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் எவரும் தலையிடாது இருக்கக்கூடியதாக அமைய வேண்டும்.
இது சம்பந்தமான எனது நிலைப்பாடு தாங்கள் அறிந்ததே. ஓற்றையாட்சியின் கீழ் ஒரு தீர்வு காணமுடியாதென்ற கருத்தை நான் பல காலமாக கொண்டுள்ளேன். அதற்கு ஒரேயொரு மாற்றீடாக நாட்டுப் பிரிவினைக்கு இடமளிக்காது, அவசியமேற்படின் இந்தியாவின் உத்தரவாதத்துடன் இந்திய அரசியல் முறையிலான ஒரு தீர்வை ஏற்பதே பொருத்தமாக இருக்கும். சர்வகட்சி குழுவினரின் ஆலோசனையை பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தங்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சியில், 2008ம் ஆண்டு தை மாதம் 23ம் திகதி அலரி மாளிகையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கு தருகின்றேன்.
“இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எப்போதும் சமஸ்டி முறைமையே பொருத்தமான தீர்வாக வற்பறுத்தி வந்தமை ஓர் இரகசியமான விடயமல்ல. சமஸ்டி என்ற பதம் சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமையால், சமஸ்டி அடிப்படையிலான தீர்விற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய முறையிலான தீர்வை ஏற்பதாக கூறி வந்துள்ளோம். இந்த விடயத்திலும் வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திலும் எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. வன்முறையை வெறுத்துத் தள்ளி அகிம்சை முறையிலும், நட்புடனும் எமது நாட்டு மக்களை எமது நிலைப்பாட்டிற்கு சம்மதிக்க வைத்து ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தரமான ஒரு தீர்வை காணமுடியாது என்பதையும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அத்துடன் நாடு பிரிந்து விடக்கூடும் என்ற அச்சம் கொண்டவர்களுடைய பயத்தைப் போக்க முயற்சிப்போம். எமது மக்கள் மத்தியில் பிரிவினைப் பற்றிய சிந்தனை முற்றாக அழிக்கப்பட்டு, ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழக்கூடிய தன்மையை ஏற்க வைப்போம்”
நடந்தேறிய தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களுடைய தீர்ப்பை அரசும,; சர்வதேச சமூகமும் ஏற்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு பொருத்தமான பதிலை இத்துடன் இணைத்துள்ளேன். இத்தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65119 ஆகும். இது மொத்த வாக்காளர்களில் 9 வீதத்தினர் மட்டுமே. மேலும், பல்வேறு காரணங்களினால் இடம்பெயர்ந்த மக்கள் முறையாக வாக்களிக்க முடியவில்லை. ஆகவே, தயவு செய்து பாராளுமன்றத்தில் பிரதிநித்துவம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது சம்பந்தமாக சகல தமிழ் கட்சிகளையும் அழைத்து பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இத்துடன் 2008ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி ‘ஐலன்ட’ பத்திரிகையில் வெளியான எனது ஜனவரி 23ஆம் திகதிய உரையை இணைத்துள்ளேன். நன்றி.
அன்புடன்
வீ.ஆனந்தசங்கரி
தலைவர், தமிழர் விடுதலைக்கூட்டணி
01-06-2010
His Excellency Mr.Mahinda Rajapaksa
President of Sri Lanka.
Your Excellency,
Solution to the Ethnic problem
I am happy to note that you are taking the initiative to start negotiations to find a satisfactory solution for the ethnic problem. As a first step your impending visit to New Delhi shortly is very much welcomed by the people. Whatever solution found, after so much of loss of life and property, should be acceptable to all sections of the people and also should be a lasting one, that should not be meddled with, in the future, to the detriment of any group of people.
Your Excellency is very well aware of my views in this matter. I have been always of the view that a solution under a unitary system will never help to find a solution and as the only alternative the Indian model may be adopted, without leaving room for any division of the country, if necessary with guarantees by India. I wish to quote here an extract of my speech delivered on the 23rd of January 2008 at Temple trees, at the handing over ceremony of the APRC proposal by Prof.Tissa Vitharane, to you.
“It is no secret that we had been agitating for a solution based on the federal concept and also offered to accept the Indian Model as the only alternative, if the term federal is allergic to anyone. We have not changed our views in this matter and in the matter of merger of the North and the East. We assure everybody that while spurning violence, we will by non-violent means and in a friendly way, continue to persuade the citizens of our country to agree that no permanent solution can be found under a Unitary System. We will continue to dispel the fears of those who think that the country will be divided. We will take all steps to erase off the minds of our people the idea of separation and to strongly support the concept of a united Sri Lanka”
Annexed please find my response to Mr. Sampanthan’s appeal that the Government and the International community should accept the verdict given by the people of the North and the East, should be accepted. I strongly object to this request since the ITAK (TNA) polled only 65119 votes which is only 9% of the total voters in the electoral district of Jaffna. Furthermore the IDPs could not cast their votes properly due to various reasons. Hence kindly see that all Tamil parties are consulted whether they have representation in Parliament or not.
Also please find annexed a copy of my speech referred to here, as reported in The Island of 25th January 2008.
Thanking you
Your’s Sincerely
V.Anandasangaree
President- TULF
01-06-2010
அரசும் சர்வதேச சமூகமும் வடகிழக்கு மாகாண மக்களுடைய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற திரு. சம்பந்தனின் கோரிக்கைக்கான பதில்:
இலங்கைப் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடந்து ஏறக்குறைய இரண்டு மாதங்களாகி விட்டன. பொதுவாக இத்தேர்தல்; சம்பந்தமான எனது கருத்தை வெளிப்படுத்த விரும்பாத போதும், வடகிழக்கில் நடந்தேறிய தேர்தல் சம்பந்தமான எனது சில கணிப்புக்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நடந்து முடிந்த தேர்தல் சம்பந்தமாக தமிழரசுக் கட்சி தலைவரும், அக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவருமான திரு. இரா.சம்பந்தன் அரசும் சர்வதேச சமூகமும் மக்கள் தீர்ப்பை ஏற்கவேண்டுமென்றும் தவறின் தமிழ் மக்கள் இரண்டாந்தர பிரஜைகளாக கணிக்கப்படுவார்களென்றும் கூறியுள்ளார். இத்தகைய அறிக்கைகள் அவர்களின் மட்டத்தில் தேர்தல் காலங்களில் மட்டும் வருவது வழக்கம.; அரசும் சர்வதேச சமூகமும் தமது தேர்தலை அங்கீகரிக்க மாட்டார்களென்ற பயம் திரு. சம்பந்தன் அவர்களுக்கு ஏற்பட்டதன் காரணமென்ன? இலங்கைத் தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மேற்படி கூற்று கேலிக்குரியதே. கடந்த தேர்தலில் அவரது கட்சி யாழ் தேர்தல் மாவட்டத்தில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65.119 வாக்குகள் மட்டுமே. இது யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 9மூ மட்டுமே. திரு சம்பந்தனுடைய கட்சி 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் 90மூ வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாக அவர் தம்பட்டம் அடித்தாலும் அத்தேர்தலில் முற்று முழுதாக தமது “நாணயத்தை” இழந்து விட்டார். ஐரோப்பிய ஒன்றியம் பொதுநலவாய நாடுகள் உட்பட வருகை தந்திருந்த பல்வேறு தேர்தல் கண்காணிப்புக்குழு அறிக்கையை படித்துப் பார்க்கின்றவர்களுக்கு எவ்வளவு மோசடிகள், ஆள்மாறாட்டங்கள் தேர்தல் சட்ட மீறல்கள் எந்த அளவிற்கு நடந்தேறியுள்ளன என்பது புலனாகும். பவ்றல் மற்றும் ஊ.ஆ.நு.ஏ ஆகிய உள்ளிட்ட உள்நாட்டு தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் இரண்டும் இணைந்து வடகிழக்கில் நடைபெற்ற தேர்தல் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும், அப்பகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் விடப்பட்ட கோரிக்கையை தேர்தல் சட்டத்தில் இடமின்மையால் தேர்தல் ஆணையாளரால் அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட முடியவில்லை. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் தான் இலங்கை தமிழரசுக் கட்சி தமிழரை பெரும்பான்மையாகக் கொண்ட 23 ஸ்தானங்களில் 22 ஸ்தானங்களை கைப்பற்றினர். மேலும் மிகப்பிரபல்யமான தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை து~;ப்பிரயோகம் செய்து வாக்காளர்களை ஏமாற்றியுள்ளனர். 2004ம் ஆண்டு மாசிமாதம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஒன்றில் கலைக்கப்பட்டிருக்க வேண்டும், அன்றேல் செயலிழக்கப்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர்களுள் ஒருவராக செயற்பட்ட சு.ப. தமிழ்ச்செல்வன் அதே பெயரில் தமிழ்தேசிய கூட்டமைப்பை மீண்டும் ஆரம்பித்து இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 2 ஸ்தானங்களையும் ரெலோவிற்கு 2 ஸ்தானங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் நு.P.சு.டு.கு இற்;கும் தலா ஓரு இடத்தையும் கொடுத்து 06 இடங்களை தமக்கு எடுத்துக் கொண்டனர். இலங்கை தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரை மக்களுக்கு காட்டி 22 பாராளுமன்ற ஸ்தானங்களைக் கைப்பற்றி ஆறு ஆண்டு காலங்கள் பாராளுமன்றத்தில் ஆசனத்தில் வீற்றிருந்தனர்.
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் 2010ம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினராகவே தொடர்ந்து செயற்பட்டனர். விடுதலைப்புலி இயக்கத்தினரையும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியிரையும், ரெலோ இயக்கத்தினர் இருவரையும் மற்றும் வன்னி மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த சிலரையும் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்த பின்பும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை கலைக்காது கடந்த தேர்தல் வரையும் அதே பெயரில் செயற்பட்டனர். தொடர்ந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரில் இயங்குகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு இதுவே காரணம். தமிழ் மக்களை தொடர்ந்தும் தப்பாக வழிநடத்தாது இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் மிகக்கண்ணியமான முறையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். துரதிஸ்டவசமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உண்மையான வரலாறு அப்பாவி தமிழ்மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டு விட்டது. தெரிந்தோ, அப்பாவித்தனமாகவோ, சில புத்தி ஜீவிகள் அரசியல் ஆய்வாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள் போன்றோரால் தற்போதைய தமிழ்தேசிய கூட்டமைப்பே 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென நம்பவைத்து தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை தூண்டினர். உண்மையில் இத்தேசிய கூட்டமைப்பானது 2001ம் ஆண்டு எனது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை யாவரும் அறிவர். ஆனால் இப்போது “உண்மை” வெளிப்பட்டு விட்டது. கடந்த ஆறு ஆண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் தமக்குரிய கடமைகளைச் செய்யாதபடியினால் கடும் ஏமாற்றத்துடன் அவர்களுக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டவென காத்திருந்த மக்கள,; பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு வேண்டிய கடமைகளைச் செய்யத்தவறியது மட்டுமன்றி அவர்களது பல்லாயிரக்கணக்கான உறவினர்களையும் பலகோடி பெறுமதிமிக்க சொத்துக்களையும் பாதுகாக்க தவறிவிட்டனர் என்பதையும் உணருகின்றனர். செல்வாக்குமிக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வழிகாட்டியவர்களே இப்பேரழிவுகளுக்கும், சொத்துக்களின் இழப்புக்களுக்கும் பொறுப்பாளியாவார்கள். இழந்த உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பெற்றுத்தர வேண்டிய நட்ட ஈட்டை பெற்றுத்தருவதில் இவ் 22 பிரதிநிதிகளும் ஏன் மௌனம் சாதித்தனர். அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தக் கூடாதெனவும் அவர்களை விடுவிக்கும் படி சர்வதேசமே வேண்டி நின்ற போதும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும,; அவர்கள் மீது மிக மிக அக்கறை காட்டவேண்டிய இவர்கள் மௌனம் சாதித்தனர். திரு. சம்பந்தன் அவர்கள் தமிழரசுக்கட்சி தலைவராகவோ அன்றேல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகவோ இருந்தும், வடகிழக்கு மாகாண தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக தன்மையை இழந்து விட்டார். கடைசி நேரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கும் படி தப்பாக வழிகாட்டியவர்கள் தமது செயற்பாட்டை நியாயப்படுத்துவார்களா? திரு.சம்பந்தன் அவர்கள் கூட தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சில ஆசனங்களை வெல்ல வைத்தமைக்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், இவர்கள் அனைவரினதும் ஒன்றிணைந்த முயற்சியால் 65119 வாக்குகளுக்கு மேல்; பெற்றுக்கொள்ள முடியவில்லை. திரு. சம்பந்தன் அவர்கள் கூறியது போல தாம் சரத் பொன் சேகாவிற்கு பெற்றுக் கொடுத்த 113873 வாக்குகளோடு ஒப்பிடுகையில் சில உண்மைகள் தெரியவருகின்றன. கடும் வேதனைக்குரிய விடயமென்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பொறுப்பற்ற முறையில் பிரச்சாரம் செய்தவர்கள் நடந்து கொண்ட முறையே. புத்தி ஜீவிகள் எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் எனவும் சுதந்திர ஊடகவியாலாளர்கள் எனவும் கூறிக்கொண்டவர்கள் சில ஊடகவியலாளர்களுடன் இணைந்து யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் திரைமறைவில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தாது மறைத்துவிட்டனர். சுருங்கக் கூறின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் உல்லாசப் பயணத்திலும் சிலர் தமது பராளுமன்ற பதவிக்காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை இனப்பிரச்சினைகளை தெரியப்படுத்துவதாக எனக் கூறிக்கொண்டு சிலர் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்ச்சியுற வைப்பதில் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டும,; இன்னும் சிலர் சர்வதேச சமூகத்தை விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக இயங்க வைக்க போதியளவு அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கள் ஏற்படும் வரை காலத்தையும் செலவிட்டனர். காயமுற்ற விடுதலைப் புலி போராளிகளின் மரணங்கள், இறுதிக்கட்டப் போரின் போதும், சிறுவர்களைப் போராளிகளாக பலவந்தமாக சேர்க்கப்பட்டதையும் மக்களுக்கு முற்றுமுழுதாக மறைத்து விட்டனர். முல்லைத்தீவில் குடியிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு இவ்விடயங்கள கொண்டு வரப்பட்டபோதும் யுத்த காலத்தில் இப்பேர்பட்ட இழப்புக்கள் தவிர்க்க முடியாதென்று கூறியுள்ளார். இறுதியாக வன்னியில் அவர் நீரிறைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள் போன்றவற்றை வாக்காளர்களுக்கு வழங்கினார் என அறியப்படுகின்றது.
இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் சகல சக்திகளும் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் இருந்து என்னை ஓரங்கட்ட மாபெரும் முயற்சி செய்தனர் என்பதை யாரும் மறுத்திட முடியாது. பல்வேறு துறைகளிலும் உள்ள தமிழர்களின் ஒத்துழைப்பை கொண்டு திட்டமிட்டு என்னை ஏன் ஓரங்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர் என்பதைத்தான் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன தீங்கு செய்தேன்?; நான் எவருக்கும் எப்போதும் எந்த தீங்கும் செய்யாது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக சேவையாற்றி வந்தேன். நான் சொல்லக் கூடாத விடயமாக இருந்தாலும,; தேர்தலில் எனக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு தேசிய இழப்பு மட்டுமன்றி, இதற்கு பொறுப்பானவர்களும்; விரைவில் முழுநாடும் மக்களும் உணர்வதோடு மட்டுமன்றி தமிழ் மக்கள் கைவிடப்பட்ட அநாதைகள் என்பதையும் உணர்வார்கள். எனது அறிவுரைகளுக்கு தமிழ்மக்கள் செவிசாய்த்திருந்தால் பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்கும் சில சுயநலமிக்க தலைவர்கள் என் அறிவுரைகளுக்கு செவிசாய்க்கவோ, அதற்கேற்ப செயற்படவோ விரும்பவில்லை. மாறாக ஒரு மனிதனின் பொறுமையின் எல்லைக்கப்பால் சென்று விமர்சனங்களையும், வீண்பழிகளையும் என் மீது வாரி இறைத்தனர். எம் நாட்டில் அரசியல் விரோதிகளை அவமதிக்கும் ‘துரோகி’ என்ற சிறப்புப்பட்டத்தையும் தந்து மகிழ்ந்தனர்.
இனப்பிரச்சினைத் தீர்விற்கு இந்திய அரசியல் முறைக்கொத்த ஒரு தீர்வை முதன்முதலாக முன்மொழிந்ததும் முன்வைத்ததும் நானே. 2002ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் குறிப்பாக மிகமுக்கியமான இரு வேட்பாளர்களிடம,; தேர்தல் பிரசாரத்தின் போது இனப்பிரச்சினையை முன்வைக்காது தேர்தல் முடிந்த பி;;ன்னர் எல்லா வேட்பாளர்களும் இணைந்து இனப்பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கலாம் என ஆலோசனை வழங்கியிருந்தேன். பலராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதான இந்திய அரசியல் முறையை நான் முன்வைத்தேன். இது சம்பந்தமாக மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்~ அவர்கள் பிரதமராக இருந்தபோதும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் இது பற்றி பேசியுள்ளேன். அதுமட்டுமன்றி பலமட்டங்களிலும் உள்ள பலருடனும் இது பற்றி பேசினேன். நான் தொடர்பு கொண்டவர்களுள் பிரதம மந்திரி,; அமைச்சர்கள், கட்சித்தலைவர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள், சமயப்பெரியவர்கள், வணக்கத்திற்குரிய ஆண்டகைகள், மகா நாயக்கர்கள், பல்வேறு இனப்பிரமுகர்கள் போன்ற பலரும் அடங்குவர். என் ஆலோசனைக்கு எவ்வித எதிர்ப்பும் நான் எதிர்கொள்ளவில்லை. இந்திய அரசின் முறையை நான் முன்வைத்தமைக்கு முதற்காரணம் ‘சம~;டி’ ‘ஒற்றை ஆட்சி’ ஆகிய சொற் பிரயோகங்களை விரும்பாதவர்களை திருப்திப்படுத்தும.; இரண்டாவதாக பாக்கு நீரினைக்கு அப்பால் உள்ள 80000000 தமிழர்களை அமைதிப்படுத்தும். இன்னும் பலவற்றில் மூன்றாவதாக அன்று இந்தியாவில் அமைந்திருந்த இந்த அமைப்பு முறையாகும்.
பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட மிகப் பெரிய ஐனநாயக நாடான இந்தியாவில் அயல் நாடுகளான இஸ்லாமிய நாடுகளுடன் முரண்பாடு இருந்த போதும் மிக மதிக்கப்படுகின்ற ஓர் இஸ்லாமியர் அந்நாட்டின் ஐனாதிபதியாக விளங்கினார். இந்தியாவின் மக்கள் தொகையில் சீக்கியமக்கள் 2வீதமாக இருந்தும் சீக்கியர்களில் சிலர் காலிஸ்தான் நாட்டுப் பிரிவினையை கோரியிருந்தும் இன்று பிரதமராக இருப்பவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஒரு சீக்கியராவார். தவிரவும் தமிழர்இ இஸ்லாமியர் சிங்களவர் எமது மதங்களான பௌத்தமும் இந்து மதமும் எமது கலாச்சாரம,; பண்பாடு அத்தனையும் இந்தியாவில் இருந்து இங்கு வந்தவையே. எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டுப் பிரிவினையை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது. இன்னும் ஒரு முக்கிய விடயம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பிரிவினை கோரிய தமிழ் நாட்டில் அக் கோ~ம் நிறுத்தப்பட்டு இன்று பிரிவினை பற்றி பேசுவதை ஒட்டு மொத்தமாக எல்லோரும் நிறுத்தி விட்டனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டின் சூழ்நிலைக்கேற்ப சில மாற்றங்களோடு இந்திய முறையிலான அரசியலமைப்பை பல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாயிருந்தது. ஆனால், இலங்கை தமிழரசுக்கட்சி மட்டும் பொறுப்பேற்று விடுதலைப்புலிகளுடன் பேசியோ அல்லது அவர்களை இணங்கவோ வைத்திருந்தால் அந்தத்தீர்வை ஏற்றுக்கொள்ளக்கூடிய பொன்னான வாய்ப்பு கிட்டியிருக்கும். இலங்கை தமிழரசுக்கட்சியும் தமிழ்தேசியகூட்டமைப்பும் விடுதலைப்புலிகளின் முகவர்களாக செயற்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல சந்தர்ப்பங்களை இழந்தபின் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் கோடிக்கணக்கில் சொத்துக்களும் அழிக்கப்பட்ட பின்பு இந்திய அமைப்பு முறைபற்றி பேசுகிறார் திரு. சம்பந்தன் அவர்கள், அதுவும் கூட அரை மனதாக. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனது ஆலோசனையை எற்றிருந்தால் எமது மக்களின் பல்வேறு இழப்புக்களை தவிர்த்திருக்கலாம். இதுவரை காலமாக மௌனமாக இருந்துவிட்டு, ஐனவரி மாதம் 20ம் திகதி கல்முனையில் nஐனரல் பொன்சேகாவை ஐனாதிபதி தேர்தலில் ஆதரிக்கும் கூட்டத்தில் இவ் ஆலோசனை முதற்தடவையாக முன்வைத்தது. இத்திட்டம் என்னாலேயே முன்வைக்கப்பட்டதென்றோ அத்திட்டத்திற்கு எனது ஆதரவு உண்டென்றோ கூறவில்லை. மீண்டும் ஏப்ரல் 20ம் திகதி ஒரு தேசிய பத்திரிகை முன் பக்க செய்தியில் தாம் இந்திய முறையை ஆதரிக்கத் தயாரென திரு. சம்பந்தன் அவர்கள் கூறியதாக செய்தி வெளிவந்தது. இச்சந்தர்ப்பத்தில் கூட இத்திட்டம் என்னால் முன்வைக்கப்பட்டதென்றோ அல்லது இத்திட்டத்திற்கு எனது ஆதரவும் உண்டென்றோ அப்பத்திரிகையோ அல்லது சம்பந்தனோ வெளிப்படுத்தவில்லை. ஐனாதிபதியால் ஏற்கனவே இத்திட்டம் வெளிப்பட்டதென மட்டும் திரு.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.
திரு. சம்பந்தன் அவர்களின் இத்தகைய விபாPதப் போக்கே தமிழ்மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு காரணமாகும். இது என்னுடைய திட்டமென முழு உலகமும் அறிந்திருந்தது. இது சம்பந்தமாக ஐனாதிபதி அவர்கள் எதுவித கருத்தும் கூறியதாக நான் அறியவில்லை. அவ்வாறுதான் ஐனாதிபதி அவர்கள் கூறியிருந்தாலும் கூட ஐனாதிபதி தேர்தல் காலத்தில் நான் அவரைக் கேட்டுக் கொண்டதன் நிமித்தமாகவே இருந்திருக்கும். ஐனாதிபதித் தேர்தலின் பின்பே ஐனாதிபதி இதை கூறினார் என்பது திரு சம்பந்தன் அவர்களின் நிலைப்பாடு. திரு. சம்பந்தன் அவர்களின் சுயநலப்போக்கிற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். என்னைப் பொறுத்தவரையில் திரு. சம்பந்தன் மூலமாகவோ வேறு எவர் மூலமாகவோ சிறுபான்மையினருக்கு ஏற்புடைய ஓர் தீர்வைக் காண்பதே பிரதானமானது. புத்தி ஐPவிகள், சுதந்திர எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அச்சு ஊடகவியலாளர்கள் என்மீது வெறுப்புக் கொண்டுள்ளார்களா? அப்படி இருப்பின் அதற்குரிய காரணம் என்ன? நடைபெறும் எதற்கும் தனக்கே புகழ் கிட்ட வேண்டும் என சம்பந்தன் அவர்களும், பத்திரிகைகள் ஏதேனும், தாம் விரும்பும் எவருக்கேனும் புகழ்தேட வேண்டும் என்றும் எண்ணலாம். எனக்கு வேண்டியதெல்லாம் எமது மக்களின் பிரச்சினைக்கு ஓர் தீர்வும், துரோகி என எனக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பட்டம் நீக்கப்பட்டு நிம்மதியாக இறக்க வேண்டும் என்பதே.
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு சிறந்த வழி எனக் கூறியவர்கள் தமது கூற்றை வாபஸ் பெற வேண்டும். சிறந்ததோர் தீர்வை அடைவதற்குப் பதிலாக இத்தகைய சம்பவங்கள் இன்னும் குழப்பத்தை எற்படுத்தும். எவருக்கேனும் என் மீது வெறுப்பு இருப்பின் எனது அரை நூற்றாண்டு கால அரசியலுடன் தமது குரோத மனப்பான்மையை கலக்க விடக் கூடாது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2006 மே 25ம் திகதி வெளியாகிய ஆங்கில தினசரியாகிய டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இந் நாட்டில் இன்றுள்ள மிகச்சிறிய அளவிலுள்ள ஐனநாயக தமிழ் அரசியல் வாதிகளில் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் அவர்களும் ஒருவராவர். எனையோர் கொல்லப்பட்டும், விலைக்கு வாங்கப்பட்டு விடுதலைப் புலிகளால், மௌனிகளாக்கப்பட்டுள்ளனர். வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்கள் மக்களைக் கொல்வதில்லை, எவருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. எவரையும் கொலை செய்யவோ வெறுப்படையவோ தூண்டுவதில்;லை. அவர் பிள்ளைகளைக் கடத்தி ஆயுத பாணிகள் ஆக்குவதில்லை. தம் மக்கள் மீது வரி வசூலிப்பதும் இல்லை. அவர் இன்று ஈடுபட்டுள்ள பணி ஐனநாயக முறையில் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகான சிரமப்பட்டு உழைப்பதே. அவரின் கனவெல்லாம் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுடனும் கிராமவாசிகளுடனும் சுதந்திரமாக நடந்துதிரியவே. யாராவது பல்கலைக்கழக மாணவர்களை அல்லது புத்திஐPவிகளை அல்லது அரசியல் ஆய்வாளர்களை அல்லது சுதந்திரமாக எழுதுவோரை பத்திரிகையாளர்களை எவரையேனும் புண்படுத்தியுள்ளேனா என்று பார்ப்பதற்காக இத் தலையங்கத்தை பல தடவைகள் படித்துப் பார்த்தேன். இவர்கள் தமது எழுத்து மூலமும், பேச்சு மூலமும், பிரச்சார மூலமும் 56 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட என்னைத் தோற்கடிக்க வடகிழக்கே உள்ள தமிழ்மக்களை ஏன் ஈடுபடுத்தினார்கள்?; கிளிநொச்சி தொகுதியில் முதன் முறையாக 1960ம் ஆண்டும,; அதைத் தொடர்ந்து நடந்த பாராளுமன்ற, உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அத்தனையிலும் போட்டிபோட்டுள்ளேன். கிளிநொச்சி (கரைச்சி) கிராம சபையின் தலைவராக 1965ம் ஆண்டும் கிளிநொச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970ம் ஆண்டும,; 1977ம் ஆண்டும் தெரிவு செய்யப்பட்டேன். பாராளுமன்றத்தின் கால எல்லையை பொதுசன வாக்கெடுப்பு மூலம் மேலும் ஆறு ஆண்டுகள் நீடிக்க அரசு எடுத்த முயற்சியை எதிர்த்து திரு. சம்பந்தன் உட்பட பதினாறு பேர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தோம்.
“ஐனநாயக குரலுக்கு செவிசாயுங்கள்” என்ற தலைப்புடன் அப்பத்திரிகையின் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “ஐனநாயக வாதியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. வீரசிங்கம் ஆனந்தசங்கரி மீண்டும் ஓர் கடிதம் வரைந்துள்ளார். இத்தடவை தமிழ்நாடு முதலமைச்சர் கலாநிதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களை இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்திய முறையிலான அதிகாரப் பகிர்வை இலங்கை அமுல்படுத்த அவரின் ஆதரவை கோரியுள்ளார். கட்சிகளின் ஒத்துழைப்போடு இனப்பிரச்pசனைக்கு ஓர் தீர்வுக்கான முயற்சிக்கும் ஐனாதிபதி அவர்களுக்கும் உதவ முயற்சிக்கின்றார்”;.
இலங்கை சுதந்திரம் அடைந்து 2002ம் ஆண்டு மாசி 4ம் திகதி 59வது சுதந்திரதினத்தைக் கொண்டாடிய விழாவில் ஐனாதிபதியாக தெரிவானதன் பின் முதல் அவர் தடவையாக அவ்விழாவில் கலந்து கொண்டார். அவர் தன் உரையில் கூறியதாவது “தமிழ் இஸ்லாமிய மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமையோடு அவர்களின் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புனிதமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். நான் மொராகாகந்த மகா சமுத்திர அங்குரார்ப்பண விழாவில் கூறியதை மீண்டும் வற்புறுத்துகின்றேன். அது என்னவெனில் பயங்கரவாதத்தை ஒழிக்க மிகச்சிறந்த ஆயுதம் அப்பாவி தமிழ்மக்களுக்கு நியாயம் வழங்குவதே, அதற்கு தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்கள் தயாராக உள்ளனர். இரத்தவெறி பிடித்த புலிகளின் கோரிக்கைக்கு இணங்க நாம் தயாராக இல்லை. ஆனால், நியாயமாகவும் நேர்மையாகவும் செயற்படுவதாக இருப்பின் குறைந்த பட்சம் திரு. ஆனந்தசங்கரிஇ டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் கோரிக்கைக்கு இணங்கியாக வேண்டும்”;. ரூபவாகினியிலும் வேறு தொலைக்காட்சிகளிலும் இவ் உரை ஒளிபரப்பப்பட்டது.
மேலும், ஆசிரியர் தலையங்கத்தின் பகுதிகள் சுயவிளக்கம் அளிக்கின்றன. இலங்கை தமிழரசுக்கட்சி – தமிழ்தேசியக் கூட்டமைப்பு இந்த வேளையில் விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறி அவர்களின் முகவர்களாக செயற்பட்டனர். திருவாளர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஐh, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருப்பார்களேயானால் பல்லாயிரக்கனக்கான உயிர்களோடு பலகோடி பெறுமதியான மக்கள் சொத்தும் பொதுச் சொத்தும் காப்பாற்றப்பட்டிருக்கும். இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்மக்களைக் காப்பாற்ற தவறியனவே அன்றி நானல்ல. அப்படியானால் இந்த புத்திஐPவிகளும், அரசியல் ஆய்வாளர்களும,; சுதந்திரமாக எழுதுவோரும், தமிழ்ப்பத்திரிகையின் ஒரு பகுதியினரும் தமிழ் மக்கள,; தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதே ஒரே வழி என, எந்த அடிப்படையில் மக்களை வழி நடத்தினர். கனடாவில் இருந்து செயற்படும் ஓர் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளருடைய ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து தேர்தல் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 5ம் திகதி ஒரு தமிழ் தினசரி வெளியிட்டிருந்தது. அவர்கள் கொடுத்திருந்த தலையங்கம் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரிப்பதே ஒரே வழ,p என ஆலோசனை வழங்கியிருந்தது. இத்தினசரி திட்டமிட்டு என்னைத் தோற்கடிக்கும் நோக்கத்தோடு இவ்வாறு பிரசுரித்தமை பச்சைத் துரோகமான செயலாகும். இது ஏன் நடந்தது? எப்படி நடந்தது? ஓர் தனி மனிதனை வேட்டையாட எடுக்கப்பட்ட முயற்சியின் பின்னணி யார்;? அவர்கள் எதற்காக இதைச் செய்தார்கள் என்பது பெரும் புதிராக உள்ளமையால் விசாரிக்கப்பட வேண்டிய விடயமாகும். கடந்தசில வருடங்களாக அடிக்கடி பல கொடூரமான சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போதேல்லாம் நான் உட்பட மிகச்சிறிய எண்ணிக்கையினரைத் தவிர மற்றனைவரும் மௌனம் சாதித்தனர். இத்தனை சக்திகளும் ஒன்றிணைந்து குறைந்த பட்சம் ஒரு சம்பவத்தையேனும் கண்டித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் பல கோடி பெறுமதியான சொத்துக்களையும் காப்பாற்றியிருக்க முடியும். எல்லா சக்திகளும் ஒன்று சேர்ந்து தமிழருக்கு ஒரு விரோதியை அடையாளம் கண்டுள்ளனர். அது நானே. எல்லா நேரமும் மக்களை ஏமாற்றமுடியாது. விரைவில் ஒரு நாள் இந்த அனர்த்தங்களுக்கு பொறுப்பானவர்கள் தமது செயலுக்காக பெரும் இழப்புக்களை சந்திக்கவேண்டி வரும்;.
குடத்தனை என்ற ஊரில் மண் அள்ளச் சென்ற ஒரு பல்கலைக்கழக மாணவன் உழவு இயந்திரத்துடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டான். அப்போது ஆட்சேபித்தவன் நானே. பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஐPவன் கூல் இன் நியமனம் ஆட்சேபிக்கப்பட்டபோது அதையும் எதிர்த்தவன் நானே. இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் நான் சம்பந்தப்பட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் நான் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் இந்திய முறையிலான ஒரு தீர்விற்கு இலங்கை அரசிற்கு வழங்கிய ஆலோசனைக்கு பெரும் வரவேற்பு உண்டு என குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் தன் முடிவுரையில் குறிப்பிடுவதாவது “தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. ஆனந்தசங்கரி, இந்திய அரசியல்வாதிக்கு பெரும் பொறுப்புணர்வோடு எழுதியுள்ளாரென நாம் கருதுகின்றோம். ஏனெனில், அந்த ஜனநாயகத் தலைவருக்கு தென்னலங்கையிலுள்ள ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகளுடனும் நெருங்கிய உறவுண்டு.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் என்மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார் போல் தோன்றுகின்றது. ஆனால,; என்னைப் பொறுத்தவரையில் எத்தகைய இன்னல்கள் ஏற்பட்டிருந்தபோதும,; எனது கடமையை எனது நாட்டிற்கும,; இந்த நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் செய்துள்ளேன். என்மீது அதிகம் நட்பு பாராட்டாத இன்னுமொரு தமிழ் தினசரி 2009ம் ஆண்டு நவம்பர் 3ம் திகதி தனது தலையங்கத்தில் என்னைப் பாராட்டி உள்ளது. இன்று நான் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும,; விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பு நான் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும் பேதங்கள் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌ;வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தபோதும் நான் மட்டும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்திய முறையிலான தீர்வே சிறந்ததென தொடர்ந்தும் கூறிவருகிறேன் என அப்பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது.
பெரும்பான்மை மக்களை முறைப்படி உரிய உத்தரவாதங்களுடன் அணுகி அவர்களுக்கு ஏதும் ஐயமிருப்பின் அவ் ஐயத்தைப் போக்கக்கூடியதும் அவர்கள் ஏற்கக் கூடியதுமான இந்திய அரசியல் அமைப்பை ஏற்கவைக்குமாறு திரு. சம்பந்தன் அவர்களுக்கு ஆலோசனை கூற விரும்புகிறேன்.
வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி
01-06-2010
A response to Mr. R. Sampanthan’s appeal that the Government and the International Community should accept the verdict of the People of the North and the East.
It is now about two months since the General Election to the Sri Lankan Parliament was held. I am not to comment on the verdict of the people but as far as the election in the North and the East is concerned I have a few observations to make. Mr. R. Sampanthan, the leader of the Ilankai Thamil Arasu Kadchi and its Parliamentary group leader has appealed that the Government and the International Community should accept the verdict given by the People of the North and the East. He also warns that otherwise the Tamil People will be pushed to the state of second – class citizens. This statement is often heard in their circles during the elections only. Why did it occur to Mr. Sampanthan that they may not be acceptable to the Government and the International Community? On the basis of the total votes his ITAK polled, his claim is ridiculous. At the recently held general election his party polled only 65119 votes, which is only 9% of the total polled in the electoral district of Jaffna. Mr. Sampanthan’s party lost its credibility fully at the general election held in 2004, although he was crowing about that his party polled over 90% of the total votes polled in the Jaffna electoral district. Reference to the reports of the various election monitoring teams including those of the European Union and the Commonwealth, will reveal how fraudulently that election was held and how large scale impersonations and violations of election laws took place. Two local teams the PAFFRAL and the CMEV jointly demanded annulling of the elections held and wanted a fresh poll, which the Commissioner of Elections could not undertake without provisions for fresh poll in the election law. It is only under these circumstances that the ITAK won 22 of the 23 Tamil majority seats at the 2004 election. Further more the ITAK used the popular name “Tamil National Alliance” to hood-wink the Tamil voters. With the split in the TULF in February 2004 the TNA either stood dissolved or became non-functional. The ITAK was utilized by the Late Mr. S.P. Thamilchelvan of the LTTE, to form a new alliance by the same name and gave two positions for the Ilankai Thamil Arasu Kadchi, two for TELO, one each for the All Ceylon Tamil Congress and Premachandran’s EPRLF and retained the balance six positions for the LTTE. The ITAK won 22 seats and completed a full term of six years using the name Tamil National Alliance.
With the defeat of the LTTE on 18th of May 2009 the ITAK continued to function as TNA, until Parliament was dissolved in February 2010. The ITAK should have dissolved the TNA when they dropped the LTTE, the ACTC, two members from the TELO and some others from Vanni and Batticaloa, but continued to use that name at the last Parliamentary Election as well. This is the mess the ITAK that calls itself the TNA is now in. The ITAK should be honest enough to give up calling itself TNA without misleading the Tamil People. The most unfortunate thing is that the true history of the TNA had been concealed and the innocent Tamil People are made to believe, knowingly or innocently, by some intellectuals, political analysts, university students, free lance journalists and many such others, that the present TNA is the original TNA formed in 2001, of which I was the President and that the Tamils have no choice other than supporting the TNA at the election.
The cat is now out of the bag. The voters who had been waiting to teach a lesson for those who had let them down during the last six years as Members of Parliament, are thoroughly disappointed that they had been misled once again. The voters now feel that their Members of Parliament not only failed to do their duty to the people, whom they claimed to have represented, but had also failed to save several thousands of their kith and kin and several billions worth of their properties. All those who guided the voters to cast their votes for the ITAK, using the popular name the TNA, should bear the blame for the loss of lives and properties. These 22 representatives kept mum about the compensation the people are entitled to, for the lives and properties lost. When the whole world demanded that the LTTE should not use the innocent civilians as human shields and should release them forthwith, the only organization that should have been more concerned about the people whom they claimed to represent, remained silent. Mr. R. Sampanthan whether as leader of the ITAK or of the Tamil National Alliance has lost his moral right to represent the Tamils of the North and the East. I leave it to the good sense of those people who misdirected the voters to vote for the TNA at the eleventh hour, to decide as to whether the stand they took is justifiable. Mr. Sampanthan too had not failed to thank the media that helped the TNA to win a few seats. But strangely enough joint efforts of all these people could not help the TNA to go beyond 65119 compared to 113873 votes General Sarath Fonseka polled which Mr. Sampanthan claimed as due to his efforts. The most distressing thing is the irresponsible manner in which those who campaigned for the TNA conducted themselves. The so called Intellectuals some University Students, some free-lance journalists and some media persons, all got together and concealed what happened behind the scene during the last lap of the war. In short the fact that some Members of Parliaments of the TNA’s 22, were on jaunts abroad for years together, some for more than half the period of their membership in Parliament, claiming to be lobbying abroad, some others were campaigning in India for the defeat of the Congress Government, some were just marking time without returning to Sri Lanka until the required number of civilians were killed, for the International Community to react positively favoring the LTTE, the mass scale killings of LTTE injured cadre, recruitment of child soldiers even during the last lap of the war, were all concealed from the voters. When some of these matters were brought to the notice of a TNA Member of Parliament based in Mullaitheevu, he seems to have commented that these things cannot be avoided in a war. He was last seen in Vanni distributing water pumps sewing machines etc to the voters.
It is now very obvious that all forces joined together within Sri Lanka and outside to oust me from the political arena. Why should there be an organized campaign to oust me, soliciting the support of Tamils from all walks of life, is a thing I could not understand. What wrong have I done to my country and its people? I have not harmed any body at anytime and served the country and its people with much devotion for more than half a century. It is not for me to say that but I consider my defeat at the poll as a national loss and those responsible for it will have their regrets. Very soon the country as a whole will feel it and the Tamil people will feel left in the lurch like orphans. If the Tamil people had listened to my advice a lot of problems could have been solved. Selfishness of certain leaders did not permit the people to listen to me. On the contrary, abuse had been showered on me in a demeaning manner, far beyond a man’s limit of tolerance. I was honoured with the honorary title of “Traitor” a term used in our country to insult a political opponent.
The idea of finding a solution to the ethnic problem based on the Indian model was first mooted by me. It was during the Presidential Election of 2005 that I appealed to all Presidential Candidates, the two main Candidates in particular, to take the ethnic issue out of the campaign and treat it separately by arriving at a consensus among the candidates after the election. I suggested the Indian model which I found acceptable to very many. I had discussed this matter with His Excellency Mahinda Rajapaksa when he was Prime Minister and later also after he was elected as President. This matter was discussed with many at various levels. Most of those whom I contacted, such as Prime Minister, Ministers, Party Leaders, the Opposition Leader, Religious Dignitaries, like Right Rev. Bishops, Very Venerable Mahanayakas, Leading Citizens of all ethnic groups and many such others. I hardly found any opposition for my proposal. The main reasons for my proposing the Indian model were, first of all it will satisfy those who are allergic to the terms Federal and Unitary. The second reason was to silence the 80 million Tamils across the Palk-Strait, and the third, apart from many others, was the Political setup prevailing in India at that time. The largest democracy in the world with a majority Hindu population had a much respected Muslim as the Head of the State, in-spite of the fact that India had strained feelings with the neighboring Islamic States. Furthermore Sikhs form only 2% of the population. It is the Sikhs who demanded kalistan. It is a much respected Sikh who is now the Prime Minister of India. Apart from these the Tamils, Muslims and the Sinhalese, our religions Hinduism and Buddhism and our culture all came from India. Above all there is an overall and all time guarantee that India will never allow division of the country. Another important factor is that it was Tamil Nadu where the demand for separation started over fifty years back and now ceased. No one talks about separation in Tamil Nadu today.
Six years back there was a general understanding among various ethnic groups, to accept the Indian model perhaps with minor adjustments to suit local conditions. We could have accepted it if only the ITAK took the Initiative and negotiated with the LTTE or persuaded them to accept the Indian model. The ITAK – TNA did nothing then, although they were the proxies of the LTTE. Having missed so many opportunities and after so many thousand innocent lives lost and billions worth of property destroyed Mr. Sampanthan is now talking about the Indian model, that too half heartedly. If the TNA had accepted my proposal then how much of losses for our people could have been avoided. Having remained silent on this issue so long, he openly commented supporting it for the first time at a meeting of the ITAK-TNA at Kalmunai on the 20th of January, in support of the Presidential Candidate General Sarath Fonseka. At that meeting he did not have the courtesy to say that the Indian Model idea was first mooted by me or at least had my support. Once again on the 20th of April a national Tamil daily carried a front page news item under the caption “we are prepared to support a solution based on the Indian model”. Even on this occasion neither that daily nor Mr. Sampanthan did mention it as my proposal or have my support. He only said that this matter had already been referred to by the President. It is this attitude of Mr. Sampanthan that had brought the Tamil Community to this state. The whole world knows that this idea was mine. I do not remember the President ever saying this. Even if the President had said so it is purely due to the request I made to him during the Presidential election. Mr. Sampanthan’s claim is that the President made this reference after he was elected as President. This is one very glaring example of Mr. Sampanthan’s very selfish attitude. As for me I want a solution acceptable to the minorities, whether it comes through Mr. Sampanthan or from anybody else. Let Mr. Sampanthan claim credit for anything and let any media project anyone they want as heroes. All what I want is a solution for our people and the honorable title of “traitor” bestowed on me removed, for me to die peacefully. Those who claimed the TNA as the best bet for the Tamils should withdraw what they had said. Contrary to finding a satisfactory solution, such claims had only messed up the whole thing. Anyone having any personal grudge against me, should not mix it up with my political career which in over half a century old.
Four years back on the 25th of May 2006, ‘Daily News’ carried an editorial and commented as “The TULF leader is among the few democratic Tamil Politicians we have in this country today. Others have been killed bought or their voices stilled by the LTTE. Veerasingam Anandasangaree does not kill people, he does not harm or encourage others to kill or hate people. He does not abduct children and arm them to the teeth or tax his own people. The only thing he does today is to take pains to bring about a solution to the problem the country is faced with, in a democratic manner. He follows the civilized way. He dreams of walking freely in Kilinochchi among school children and his village people’.
I went through this editorial over and over again to see whether there is anything that could have hurt or provoked a University student or an intellectual or a Political analyst or a free lance journalist or the print media to write or speak or campaign against me to the extent of canvassing, almost the entire Tamil Population of the North and the East, to vote against me. I am one who is in politics for over fifty six years and very actively for fifty years having contested the Kilinochchi electorate for the first time in 1960 and every election that followed whether parliamentary or local. I became chairman of the Kilinochchi (Karachchi) Village Council in 1965, Chairman Kilinochchi Town Council in 1968 and got elected to Parliament both in 1970 and 1977 and voluntarily vacated my seat along with sixteen other members of the TULF including Mr. R.Sampanthan protesting against the extension of the term of Parliament by a further period of six years, through a referendum.
The editor who titled the editorial as “Listen to democratic voices” states “Democratic Tamil United Liberation Front (TULF) leader Veerasingham Anandasangaree has written again. This time to the Chief Minister of Tamil Nadu Dr. Kalaignar M.Karunanidhi urging a meeting between them to enlist the latter’s support for promoting the Indian Model of power devolution in Sri Lanka”. The editor further says, “He is trying to help President Mahinda Rajapaksa another consensus builder to bring about an agreement among all parties to find a just solution”.
I hope it will not be irrelevant if I quote a paragraph from a speech the President delivered at the 59th Independence Day ceremony, on the 4th of February 2005, the first after his election as the President. He said “It is our duty to protect the lives and property of the Tamil and Muslim people and bring sanctity to the future world of their children. As I stated at the inauguration of the Moragakanda maha Sumudra. I wish to reemphasis that the most reliable weapons against terrorism is to do justice by the innocent Tamil People. I know that the Sinhala people in the south are ready for this. We are not ready to give into the blood- thirsty demands of the LTTE. However at the minimum we should be reasonable and honest enough to agree with Mr. Anandasangaree or the Hon. Douglas Devananda”. His Excellency’s speech was telecast by Rubavahini and some other TV stations and the whole country was listening to it.
Extracts of the above editorial are self –explanatory. At the time this editorial appeared, the ITAK-TNA was acting as proxies of the LTTE accepting them as sole representatives of the Tamil People. Why did not M/s R. Sampanthan, Mavai Senathirajah and Suresh Premachandran take any action then that would have saved the lives of several thousand innocent people and billions worth of property both Public and Private. If is the ITAK-TNA that had failed to save the Tamils and not me. So on what basis the so called intellectuals, political analysts free lance journalists and a section of the Tamil Media come to the conclusion that the “TNA (ITAK) is the best bet for the Tamils”. A Tamil daily publishing a translation of an article by a renowned Journalist based in Canada, on the 5th of April, just two days before the date of polling, with the caption, “For the Tamils of the North and the East the best choice at the election would be the TNA”. The greatest betrayal on the part of the Tamil daily was to publish it, deliberately aiming at my defeat at the poll. Why did this happen? How did it happen? Who is behind this move to hound a loner, and for what consideration remains a mystery, that needs investigation. Lot of incidents of horrendous nature took place off end on during the last few years. Everyone was silent excepting a very few of whom I had been one. If only all these forces had get together and condemned at-least one incident, thousands of lives and valuable properties could have been saved. All the forces have got together and have identified one common enemy of the Tamils. That is me. The public cannot be fooled all the time and one day soon those responsible for the present crisis will have to pay heavily for the role they played. When a University Student was burnt with his tractor and trailer for removing sand at kudathanai, it was I who had to protest. When Professor Ratnajeevan Hoole’s appointment as vice chancellor of the University of Jaffna was objected to, it was I who had to protest. There were very many such incidents like this.
The editor in his editorial had also brought out the fact that in my letter to the Chief Minister Dr.Karunanithi I had said that my proposal to the government of Sri Lanka to adopt a constitution like the Indian Model, has received very wide support. He concludes his comments by saying “We are of the view that the TULF leader has written to the Indian politician with a great sense of responsibility, because the democratic TULF leader maintains cordial relations with all parties in the South including the JVP and the JHU and other parties such as the SLMC and other Tamil parties”
I do not know whether the Editor had over- expressed his confidence in me. But as far as I am concerned, irrespective of any constrains I had done my duty to my country and its people with devotion and care. Another National daily in its editorial dated 3rd Nov 2009 though not very friendly towards me, complemented me for taking the same stand even today on the ethnic issues that I took several months before the defeat of the LTTE. The TNA has taken different stands at different times while I am sticking to the Indian Model throughout as the ideal solution for the ethnic problem. My advice to Mr. Sampanthan would be to stick to the Indian Model as a solution to our problem that can be easily made acceptable to the majority community if approached carefully with proper guarantees to allay the fears, if they have any.
V.Anandasangaree,
President TULF
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ச,
ஜனாதிபதி,
கொழும்பு.
இனப்பிரச்சினைக்கான தீர்வு.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,
இனப்பிரச்சினைக்கு ஓர் திருப்திகரமான தீர்வு காண்பதற்கு வேண்டிய பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வதை முன்னிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். முதற்கட்டமாக தாங்கள் புதுடில்லிக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தை மக்கள் வரவேற்கின்றார்கள். இத்தனை உயிரிழப்புகள்,சொத்திழப்புகளின் பின் காணப்போகின்ற தீர்வு பல்வேறு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமன்றி, எதிர் காலத்தில் ஏதாவது ஒரு சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் எவரும் தலையிடாது இருக்கக்கூடியதாக அமைய வேண்டும்.
இது சம்பந்தமான எனது நிலைப்பாடு தாங்கள் அறிந்ததே. ஓற்றையாட்சியின் கீழ் ஒரு தீர்வு காணமுடியாதென்ற கருத்தை நான் பல காலமாக கொண்டுள்ளேன். அதற்கு ஒரேயொரு மாற்றீடாக நாட்டுப் பிரிவினைக்கு இடமளிக்காது, அவசியமேற்படின் இந்தியாவின் உத்தரவாதத்துடன் இந்திய அரசியல் முறையிலான ஒரு தீர்வை ஏற்பதே பொருத்தமாக இருக்கும். சர்வகட்சி குழுவினரின் ஆலோசனையை பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தங்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சியில், 2008ம் ஆண்டு தை மாதம் 23ம் திகதி அலரி மாளிகையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கு தருகின்றேன்.
“இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எப்போதும் சமஸ்டி முறைமையே பொருத்தமான தீர்வாக வற்பறுத்தி வந்தமை ஓர் இரகசியமான விடயமல்ல. சமஸ்டி என்ற பதம் சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமையால், சமஸ்டி அடிப்படையிலான தீர்விற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய முறையிலான தீர்வை ஏற்பதாக கூறி வந்துள்ளோம். இந்த விடயத்திலும் வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திலும் எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. வன்முறையை வெறுத்துத் தள்ளி அகிம்சை முறையிலும், நட்புடனும் எமது நாட்டு மக்களை எமது நிலைப்பாட்டிற்கு சம்மதிக்க வைத்து ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தரமான ஒரு தீர்வை காணமுடியாது என்பதையும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அத்துடன் நாடு பிரிந்து விடக்கூடும் என்ற அச்சம் கொண்டவர்களுடைய பயத்தைப் போக்க முயற்சிப்போம். எமது மக்கள் மத்தியில் பிரிவினைப் பற்றிய சிந்தனை முற்றாக அழிக்கப்பட்டு, ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழக்கூடிய தன்மையை ஏற்க வைப்போம்”
நடந்தேறிய தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களுடைய தீர்ப்பை அரசும,; சர்வதேச சமூகமும் ஏற்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு பொருத்தமான பதிலை இத்துடன் இணைத்துள்ளேன். இத்தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65119 ஆகும். இது மொத்த வாக்காளர்களில் 9 வீதத்தினர் மட்டுமே. மேலும், பல்வேறு காரணங்களினால் இடம்பெயர்ந்த மக்கள் முறையாக வாக்களிக்க முடியவில்லை. ஆகவே, தயவு செய்து பாராளுமன்றத்தில் பிரதிநித்துவம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது சம்பந்தமாக சகல தமிழ் கட்சிகளையும் அழைத்து பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இத்துடன் 2008ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி ‘ஐலன்ட’ பத்திரிகையில் வெளியான எனது ஜனவரி 23ஆம் திகதிய உரையை இணைத்துள்ளேன். நன்றி.
அன்புடன்
வீ.ஆனந்தசங்கரி
தலைவர், தமிழர் விடுதலைக்கூட்டணி
01-06-2010
His Excellency Mr.Mahinda Rajapaksa
President of Sri Lanka.
Your Excellency,
Solution to the Ethnic problem
I am happy to note that you are taking the initiative to start negotiations to find a satisfactory solution for the ethnic problem. As a first step your impending visit to New Delhi shortly is very much welcomed by the people. Whatever solution found, after so much of loss of life and property, should be acceptable to all sections of the people and also should be a lasting one, that should not be meddled with, in the future, to the detriment of any group of people.
Your Excellency is very well aware of my views in this matter. I have been always of the view that a solution under a unitary system will never help to find a solution and as the only alternative the Indian model may be adopted, without leaving room for any division of the country, if necessary with guarantees by India. I wish to quote here an extract of my speech delivered on the 23rd of January 2008 at Temple trees, at the handing over ceremony of the APRC proposal by Prof.Tissa Vitharane, to you.
“It is no secret that we had been agitating for a solution based on the federal concept and also offered to accept the Indian Model as the only alternative, if the term federal is allergic to anyone. We have not changed our views in this matter and in the matter of merger of the North and the East. We assure everybody that while spurning violence, we will by non-violent means and in a friendly way, continue to persuade the citizens of our country to agree that no permanent solution can be found under a Unitary System. We will continue to dispel the fears of those who think that the country will be divided. We will take all steps to erase off the minds of our people the idea of separation and to strongly support the concept of a united Sri Lanka”
Annexed please find my response to Mr. Sampanthan’s appeal that the Government and the International community should accept the verdict given by the people of the North and the East, should be accepted. I strongly object to this request since the ITAK (TNA) polled only 65119 votes which is only 9% of the total voters in the electoral district of Jaffna. Furthermore the IDPs could not cast their votes properly due to various reasons. Hence kindly see that all Tamil parties are consulted whether they have representation in Parliament or not.
Also please find annexed a copy of my speech referred to here, as reported in The Island of 25th January 2008.
Thanking you
Your’s Sincerely
V.Anandasangaree
President- TULF
01-06-2010
அரசும் சர்வதேச சமூகமும் வடகிழக்கு மாகாண மக்களுடைய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற திரு. சம்பந்தனின் கோரிக்கைக்கான பதில்:
இலங்கைப் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடந்து ஏறக்குறைய இரண்டு மாதங்களாகி விட்டன. பொதுவாக இத்தேர்தல்; சம்பந்தமான எனது கருத்தை வெளிப்படுத்த விரும்பாத போதும், வடகிழக்கில் நடந்தேறிய தேர்தல் சம்பந்தமான எனது சில கணிப்புக்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நடந்து முடிந்த தேர்தல் சம்பந்தமாக தமிழரசுக் கட்சி தலைவரும், அக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவருமான திரு. இரா.சம்பந்தன் அரசும் சர்வதேச சமூகமும் மக்கள் தீர்ப்பை ஏற்கவேண்டுமென்றும் தவறின் தமிழ் மக்கள் இரண்டாந்தர பிரஜைகளாக கணிக்கப்படுவார்களென்றும் கூறியுள்ளார். இத்தகைய அறிக்கைகள் அவர்களின் மட்டத்தில் தேர்தல் காலங்களில் மட்டும் வருவது வழக்கம.; அரசும் சர்வதேச சமூகமும் தமது தேர்தலை அங்கீகரிக்க மாட்டார்களென்ற பயம் திரு. சம்பந்தன் அவர்களுக்கு ஏற்பட்டதன் காரணமென்ன? இலங்கைத் தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மேற்படி கூற்று கேலிக்குரியதே. கடந்த தேர்தலில் அவரது கட்சி யாழ் தேர்தல் மாவட்டத்தில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65.119 வாக்குகள் மட்டுமே. இது யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 9மூ மட்டுமே. திரு சம்பந்தனுடைய கட்சி 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் 90மூ வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாக அவர் தம்பட்டம் அடித்தாலும் அத்தேர்தலில் முற்று முழுதாக தமது “நாணயத்தை” இழந்து விட்டார். ஐரோப்பிய ஒன்றியம் பொதுநலவாய நாடுகள் உட்பட வருகை தந்திருந்த பல்வேறு தேர்தல் கண்காணிப்புக்குழு அறிக்கையை படித்துப் பார்க்கின்றவர்களுக்கு எவ்வளவு மோசடிகள், ஆள்மாறாட்டங்கள் தேர்தல் சட்ட மீறல்கள் எந்த அளவிற்கு நடந்தேறியுள்ளன என்பது புலனாகும். பவ்றல் மற்றும் ஊ.ஆ.நு.ஏ ஆகிய உள்ளிட்ட உள்நாட்டு தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் இரண்டும் இணைந்து வடகிழக்கில் நடைபெற்ற தேர்தல் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும், அப்பகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் விடப்பட்ட கோரிக்கையை தேர்தல் சட்டத்தில் இடமின்மையால் தேர்தல் ஆணையாளரால் அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட முடியவில்லை. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் தான் இலங்கை தமிழரசுக் கட்சி தமிழரை பெரும்பான்மையாகக் கொண்ட 23 ஸ்தானங்களில் 22 ஸ்தானங்களை கைப்பற்றினர். மேலும் மிகப்பிரபல்யமான தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை து~;ப்பிரயோகம் செய்து வாக்காளர்களை ஏமாற்றியுள்ளனர். 2004ம் ஆண்டு மாசிமாதம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஒன்றில் கலைக்கப்பட்டிருக்க வேண்டும், அன்றேல் செயலிழக்கப்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர்களுள் ஒருவராக செயற்பட்ட சு.ப. தமிழ்ச்செல்வன் அதே பெயரில் தமிழ்தேசிய கூட்டமைப்பை மீண்டும் ஆரம்பித்து இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 2 ஸ்தானங்களையும் ரெலோவிற்கு 2 ஸ்தானங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் நு.P.சு.டு.கு இற்;கும் தலா ஓரு இடத்தையும் கொடுத்து 06 இடங்களை தமக்கு எடுத்துக் கொண்டனர். இலங்கை தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரை மக்களுக்கு காட்டி 22 பாராளுமன்ற ஸ்தானங்களைக் கைப்பற்றி ஆறு ஆண்டு காலங்கள் பாராளுமன்றத்தில் ஆசனத்தில் வீற்றிருந்தனர்.
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் 2010ம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினராகவே தொடர்ந்து செயற்பட்டனர். விடுதலைப்புலி இயக்கத்தினரையும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியிரையும், ரெலோ இயக்கத்தினர் இருவரையும் மற்றும் வன்னி மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த சிலரையும் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்த பின்பும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை கலைக்காது கடந்த தேர்தல் வரையும் அதே பெயரில் செயற்பட்டனர். தொடர்ந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரில் இயங்குகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு இதுவே காரணம். தமிழ் மக்களை தொடர்ந்தும் தப்பாக வழிநடத்தாது இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் மிகக்கண்ணியமான முறையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். துரதிஸ்டவசமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உண்மையான வரலாறு அப்பாவி தமிழ்மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டு விட்டது. தெரிந்தோ, அப்பாவித்தனமாகவோ, சில புத்தி ஜீவிகள் அரசியல் ஆய்வாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள் போன்றோரால் தற்போதைய தமிழ்தேசிய கூட்டமைப்பே 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென நம்பவைத்து தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை தூண்டினர். உண்மையில் இத்தேசிய கூட்டமைப்பானது 2001ம் ஆண்டு எனது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை யாவரும் அறிவர். ஆனால் இப்போது “உண்மை” வெளிப்பட்டு விட்டது. கடந்த ஆறு ஆண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் தமக்குரிய கடமைகளைச் செய்யாதபடியினால் கடும் ஏமாற்றத்துடன் அவர்களுக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டவென காத்திருந்த மக்கள,; பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு வேண்டிய கடமைகளைச் செய்யத்தவறியது மட்டுமன்றி அவர்களது பல்லாயிரக்கணக்கான உறவினர்களையும் பலகோடி பெறுமதிமிக்க சொத்துக்களையும் பாதுகாக்க தவறிவிட்டனர் என்பதையும் உணருகின்றனர். செல்வாக்குமிக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வழிகாட்டியவர்களே இப்பேரழிவுகளுக்கும், சொத்துக்களின் இழப்புக்களுக்கும் பொறுப்பாளியாவார்கள். இழந்த உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பெற்றுத்தர வேண்டிய நட்ட ஈட்டை பெற்றுத்தருவதில் இவ் 22 பிரதிநிதிகளும் ஏன் மௌனம் சாதித்தனர். அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தக் கூடாதெனவும் அவர்களை விடுவிக்கும் படி சர்வதேசமே வேண்டி நின்ற போதும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும,; அவர்கள் மீது மிக மிக அக்கறை காட்டவேண்டிய இவர்கள் மௌனம் சாதித்தனர். திரு. சம்பந்தன் அவர்கள் தமிழரசுக்கட்சி தலைவராகவோ அன்றேல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகவோ இருந்தும், வடகிழக்கு மாகாண தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக தன்மையை இழந்து விட்டார். கடைசி நேரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கும் படி தப்பாக வழிகாட்டியவர்கள் தமது செயற்பாட்டை நியாயப்படுத்துவார்களா? திரு.சம்பந்தன் அவர்கள் கூட தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சில ஆசனங்களை வெல்ல வைத்தமைக்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், இவர்கள் அனைவரினதும் ஒன்றிணைந்த முயற்சியால் 65119 வாக்குகளுக்கு மேல்; பெற்றுக்கொள்ள முடியவில்லை. திரு. சம்பந்தன் அவர்கள் கூறியது போல தாம் சரத் பொன் சேகாவிற்கு பெற்றுக் கொடுத்த 113873 வாக்குகளோடு ஒப்பிடுகையில் சில உண்மைகள் தெரியவருகின்றன. கடும் வேதனைக்குரிய விடயமென்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பொறுப்பற்ற முறையில் பிரச்சாரம் செய்தவர்கள் நடந்து கொண்ட முறையே. புத்தி ஜீவிகள் எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் எனவும் சுதந்திர ஊடகவியாலாளர்கள் எனவும் கூறிக்கொண்டவர்கள் சில ஊடகவியலாளர்களுடன் இணைந்து யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் திரைமறைவில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தாது மறைத்துவிட்டனர். சுருங்கக் கூறின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் உல்லாசப் பயணத்திலும் சிலர் தமது பராளுமன்ற பதவிக்காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை இனப்பிரச்சினைகளை தெரியப்படுத்துவதாக எனக் கூறிக்கொண்டு சிலர் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்ச்சியுற வைப்பதில் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டும,; இன்னும் சிலர் சர்வதேச சமூகத்தை விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக இயங்க வைக்க போதியளவு அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கள் ஏற்படும் வரை காலத்தையும் செலவிட்டனர். காயமுற்ற விடுதலைப் புலி போராளிகளின் மரணங்கள், இறுதிக்கட்டப் போரின் போதும், சிறுவர்களைப் போராளிகளாக பலவந்தமாக சேர்க்கப்பட்டதையும் மக்களுக்கு முற்றுமுழுதாக மறைத்து விட்டனர். முல்லைத்தீவில் குடியிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு இவ்விடயங்கள கொண்டு வரப்பட்டபோதும் யுத்த காலத்தில் இப்பேர்பட்ட இழப்புக்கள் தவிர்க்க முடியாதென்று கூறியுள்ளார். இறுதியாக வன்னியில் அவர் நீரிறைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள் போன்றவற்றை வாக்காளர்களுக்கு வழங்கினார் என அறியப்படுகின்றது.
இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் சகல சக்திகளும் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் இருந்து என்னை ஓரங்கட்ட மாபெரும் முயற்சி செய்தனர் என்பதை யாரும் மறுத்திட முடியாது. பல்வேறு துறைகளிலும் உள்ள தமிழர்களின் ஒத்துழைப்பை கொண்டு திட்டமிட்டு என்னை ஏன் ஓரங்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர் என்பதைத்தான் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன தீங்கு செய்தேன்?; நான் எவருக்கும் எப்போதும் எந்த தீங்கும் செய்யாது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக சேவையாற்றி வந்தேன். நான் சொல்லக் கூடாத விடயமாக இருந்தாலும,; தேர்தலில் எனக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு தேசிய இழப்பு மட்டுமன்றி, இதற்கு பொறுப்பானவர்களும்; விரைவில் முழுநாடும் மக்களும் உணர்வதோடு மட்டுமன்றி தமிழ் மக்கள் கைவிடப்பட்ட அநாதைகள் என்பதையும் உணர்வார்கள். எனது அறிவுரைகளுக்கு தமிழ்மக்கள் செவிசாய்த்திருந்தால் பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்கும் சில சுயநலமிக்க தலைவர்கள் என் அறிவுரைகளுக்கு செவிசாய்க்கவோ, அதற்கேற்ப செயற்படவோ விரும்பவில்லை. மாறாக ஒரு மனிதனின் பொறுமையின் எல்லைக்கப்பால் சென்று விமர்சனங்களையும், வீண்பழிகளையும் என் மீது வாரி இறைத்தனர். எம் நாட்டில் அரசியல் விரோதிகளை அவமதிக்கும் ‘துரோகி’ என்ற சிறப்புப்பட்டத்தையும் தந்து மகிழ்ந்தனர்.
இனப்பிரச்சினைத் தீர்விற்கு இந்திய அரசியல் முறைக்கொத்த ஒரு தீர்வை முதன்முதலாக முன்மொழிந்ததும் முன்வைத்ததும் நானே. 2002ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் குறிப்பாக மிகமுக்கியமான இரு வேட்பாளர்களிடம,; தேர்தல் பிரசாரத்தின் போது இனப்பிரச்சினையை முன்வைக்காது தேர்தல் முடிந்த பி;;ன்னர் எல்லா வேட்பாளர்களும் இணைந்து இனப்பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கலாம் என ஆலோசனை வழங்கியிருந்தேன். பலராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதான இந்திய அரசியல் முறையை நான் முன்வைத்தேன். இது சம்பந்தமாக மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்~ அவர்கள் பிரதமராக இருந்தபோதும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் இது பற்றி பேசியுள்ளேன். அதுமட்டுமன்றி பலமட்டங்களிலும் உள்ள பலருடனும் இது பற்றி பேசினேன். நான் தொடர்பு கொண்டவர்களுள் பிரதம மந்திரி,; அமைச்சர்கள், கட்சித்தலைவர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள், சமயப்பெரியவர்கள், வணக்கத்திற்குரிய ஆண்டகைகள், மகா நாயக்கர்கள், பல்வேறு இனப்பிரமுகர்கள் போன்ற பலரும் அடங்குவர். என் ஆலோசனைக்கு எவ்வித எதிர்ப்பும் நான் எதிர்கொள்ளவில்லை. இந்திய அரசின் முறையை நான் முன்வைத்தமைக்கு முதற்காரணம் ‘சம~;டி’ ‘ஒற்றை ஆட்சி’ ஆகிய சொற் பிரயோகங்களை விரும்பாதவர்களை திருப்திப்படுத்தும.; இரண்டாவதாக பாக்கு நீரினைக்கு அப்பால் உள்ள 80000000 தமிழர்களை அமைதிப்படுத்தும். இன்னும் பலவற்றில் மூன்றாவதாக அன்று இந்தியாவில் அமைந்திருந்த இந்த அமைப்பு முறையாகும்.
பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட மிகப் பெரிய ஐனநாயக நாடான இந்தியாவில் அயல் நாடுகளான இஸ்லாமிய நாடுகளுடன் முரண்பாடு இருந்த போதும் மிக மதிக்கப்படுகின்ற ஓர் இஸ்லாமியர் அந்நாட்டின் ஐனாதிபதியாக விளங்கினார். இந்தியாவின் மக்கள் தொகையில் சீக்கியமக்கள் 2வீதமாக இருந்தும் சீக்கியர்களில் சிலர் காலிஸ்தான் நாட்டுப் பிரிவினையை கோரியிருந்தும் இன்று பிரதமராக இருப்பவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஒரு சீக்கியராவார். தவிரவும் தமிழர்இ இஸ்லாமியர் சிங்களவர் எமது மதங்களான பௌத்தமும் இந்து மதமும் எமது கலாச்சாரம,; பண்பாடு அத்தனையும் இந்தியாவில் இருந்து இங்கு வந்தவையே. எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டுப் பிரிவினையை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது. இன்னும் ஒரு முக்கிய விடயம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பிரிவினை கோரிய தமிழ் நாட்டில் அக் கோ~ம் நிறுத்தப்பட்டு இன்று பிரிவினை பற்றி பேசுவதை ஒட்டு மொத்தமாக எல்லோரும் நிறுத்தி விட்டனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டின் சூழ்நிலைக்கேற்ப சில மாற்றங்களோடு இந்திய முறையிலான அரசியலமைப்பை பல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாயிருந்தது. ஆனால், இலங்கை தமிழரசுக்கட்சி மட்டும் பொறுப்பேற்று விடுதலைப்புலிகளுடன் பேசியோ அல்லது அவர்களை இணங்கவோ வைத்திருந்தால் அந்தத்தீர்வை ஏற்றுக்கொள்ளக்கூடிய பொன்னான வாய்ப்பு கிட்டியிருக்கும். இலங்கை தமிழரசுக்கட்சியும் தமிழ்தேசியகூட்டமைப்பும் விடுதலைப்புலிகளின் முகவர்களாக செயற்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல சந்தர்ப்பங்களை இழந்தபின் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் கோடிக்கணக்கில் சொத்துக்களும் அழிக்கப்பட்ட பின்பு இந்திய அமைப்பு முறைபற்றி பேசுகிறார் திரு. சம்பந்தன் அவர்கள், அதுவும் கூட அரை மனதாக. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனது ஆலோசனையை எற்றிருந்தால் எமது மக்களின் பல்வேறு இழப்புக்களை தவிர்த்திருக்கலாம். இதுவரை காலமாக மௌனமாக இருந்துவிட்டு, ஐனவரி மாதம் 20ம் திகதி கல்முனையில் nஐனரல் பொன்சேகாவை ஐனாதிபதி தேர்தலில் ஆதரிக்கும் கூட்டத்தில் இவ் ஆலோசனை முதற்தடவையாக முன்வைத்தது. இத்திட்டம் என்னாலேயே முன்வைக்கப்பட்டதென்றோ அத்திட்டத்திற்கு எனது ஆதரவு உண்டென்றோ கூறவில்லை. மீண்டும் ஏப்ரல் 20ம் திகதி ஒரு தேசிய பத்திரிகை முன் பக்க செய்தியில் தாம் இந்திய முறையை ஆதரிக்கத் தயாரென திரு. சம்பந்தன் அவர்கள் கூறியதாக செய்தி வெளிவந்தது. இச்சந்தர்ப்பத்தில் கூட இத்திட்டம் என்னால் முன்வைக்கப்பட்டதென்றோ அல்லது இத்திட்டத்திற்கு எனது ஆதரவும் உண்டென்றோ அப்பத்திரிகையோ அல்லது சம்பந்தனோ வெளிப்படுத்தவில்லை. ஐனாதிபதியால் ஏற்கனவே இத்திட்டம் வெளிப்பட்டதென மட்டும் திரு.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.
திரு. சம்பந்தன் அவர்களின் இத்தகைய விபாPதப் போக்கே தமிழ்மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு காரணமாகும். இது என்னுடைய திட்டமென முழு உலகமும் அறிந்திருந்தது. இது சம்பந்தமாக ஐனாதிபதி அவர்கள் எதுவித கருத்தும் கூறியதாக நான் அறியவில்லை. அவ்வாறுதான் ஐனாதிபதி அவர்கள் கூறியிருந்தாலும் கூட ஐனாதிபதி தேர்தல் காலத்தில் நான் அவரைக் கேட்டுக் கொண்டதன் நிமித்தமாகவே இருந்திருக்கும். ஐனாதிபதித் தேர்தலின் பின்பே ஐனாதிபதி இதை கூறினார் என்பது திரு சம்பந்தன் அவர்களின் நிலைப்பாடு. திரு. சம்பந்தன் அவர்களின் சுயநலப்போக்கிற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். என்னைப் பொறுத்தவரையில் திரு. சம்பந்தன் மூலமாகவோ வேறு எவர் மூலமாகவோ சிறுபான்மையினருக்கு ஏற்புடைய ஓர் தீர்வைக் காண்பதே பிரதானமானது. புத்தி ஐPவிகள், சுதந்திர எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அச்சு ஊடகவியலாளர்கள் என்மீது வெறுப்புக் கொண்டுள்ளார்களா? அப்படி இருப்பின் அதற்குரிய காரணம் என்ன? நடைபெறும் எதற்கும் தனக்கே புகழ் கிட்ட வேண்டும் என சம்பந்தன் அவர்களும், பத்திரிகைகள் ஏதேனும், தாம் விரும்பும் எவருக்கேனும் புகழ்தேட வேண்டும் என்றும் எண்ணலாம். எனக்கு வேண்டியதெல்லாம் எமது மக்களின் பிரச்சினைக்கு ஓர் தீர்வும், துரோகி என எனக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பட்டம் நீக்கப்பட்டு நிம்மதியாக இறக்க வேண்டும் என்பதே.
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு சிறந்த வழி எனக் கூறியவர்கள் தமது கூற்றை வாபஸ் பெற வேண்டும். சிறந்ததோர் தீர்வை அடைவதற்குப் பதிலாக இத்தகைய சம்பவங்கள் இன்னும் குழப்பத்தை எற்படுத்தும். எவருக்கேனும் என் மீது வெறுப்பு இருப்பின் எனது அரை நூற்றாண்டு கால அரசியலுடன் தமது குரோத மனப்பான்மையை கலக்க விடக் கூடாது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2006 மே 25ம் திகதி வெளியாகிய ஆங்கில தினசரியாகிய டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இந் நாட்டில் இன்றுள்ள மிகச்சிறிய அளவிலுள்ள ஐனநாயக தமிழ் அரசியல் வாதிகளில் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் அவர்களும் ஒருவராவர். எனையோர் கொல்லப்பட்டும், விலைக்கு வாங்கப்பட்டு விடுதலைப் புலிகளால், மௌனிகளாக்கப்பட்டுள்ளனர். வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்கள் மக்களைக் கொல்வதில்லை, எவருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. எவரையும் கொலை செய்யவோ வெறுப்படையவோ தூண்டுவதில்;லை. அவர் பிள்ளைகளைக் கடத்தி ஆயுத பாணிகள் ஆக்குவதில்லை. தம் மக்கள் மீது வரி வசூலிப்பதும் இல்லை. அவர் இன்று ஈடுபட்டுள்ள பணி ஐனநாயக முறையில் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகான சிரமப்பட்டு உழைப்பதே. அவரின் கனவெல்லாம் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுடனும் கிராமவாசிகளுடனும் சுதந்திரமாக நடந்துதிரியவே. யாராவது பல்கலைக்கழக மாணவர்களை அல்லது புத்திஐPவிகளை அல்லது அரசியல் ஆய்வாளர்களை அல்லது சுதந்திரமாக எழுதுவோரை பத்திரிகையாளர்களை எவரையேனும் புண்படுத்தியுள்ளேனா என்று பார்ப்பதற்காக இத் தலையங்கத்தை பல தடவைகள் படித்துப் பார்த்தேன். இவர்கள் தமது எழுத்து மூலமும், பேச்சு மூலமும், பிரச்சார மூலமும் 56 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட என்னைத் தோற்கடிக்க வடகிழக்கே உள்ள தமிழ்மக்களை ஏன் ஈடுபடுத்தினார்கள்?; கிளிநொச்சி தொகுதியில் முதன் முறையாக 1960ம் ஆண்டும,; அதைத் தொடர்ந்து நடந்த பாராளுமன்ற, உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அத்தனையிலும் போட்டிபோட்டுள்ளேன். கிளிநொச்சி (கரைச்சி) கிராம சபையின் தலைவராக 1965ம் ஆண்டும் கிளிநொச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970ம் ஆண்டும,; 1977ம் ஆண்டும் தெரிவு செய்யப்பட்டேன். பாராளுமன்றத்தின் கால எல்லையை பொதுசன வாக்கெடுப்பு மூலம் மேலும் ஆறு ஆண்டுகள் நீடிக்க அரசு எடுத்த முயற்சியை எதிர்த்து திரு. சம்பந்தன் உட்பட பதினாறு பேர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தோம்.
“ஐனநாயக குரலுக்கு செவிசாயுங்கள்” என்ற தலைப்புடன் அப்பத்திரிகையின் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “ஐனநாயக வாதியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. வீரசிங்கம் ஆனந்தசங்கரி மீண்டும் ஓர் கடிதம் வரைந்துள்ளார். இத்தடவை தமிழ்நாடு முதலமைச்சர் கலாநிதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களை இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்திய முறையிலான அதிகாரப் பகிர்வை இலங்கை அமுல்படுத்த அவரின் ஆதரவை கோரியுள்ளார். கட்சிகளின் ஒத்துழைப்போடு இனப்பிரச்pசனைக்கு ஓர் தீர்வுக்கான முயற்சிக்கும் ஐனாதிபதி அவர்களுக்கும் உதவ முயற்சிக்கின்றார்”;.
இலங்கை சுதந்திரம் அடைந்து 2002ம் ஆண்டு மாசி 4ம் திகதி 59வது சுதந்திரதினத்தைக் கொண்டாடிய விழாவில் ஐனாதிபதியாக தெரிவானதன் பின் முதல் அவர் தடவையாக அவ்விழாவில் கலந்து கொண்டார். அவர் தன் உரையில் கூறியதாவது “தமிழ் இஸ்லாமிய மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமையோடு அவர்களின் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புனிதமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். நான் மொராகாகந்த மகா சமுத்திர அங்குரார்ப்பண விழாவில் கூறியதை மீண்டும் வற்புறுத்துகின்றேன். அது என்னவெனில் பயங்கரவாதத்தை ஒழிக்க மிகச்சிறந்த ஆயுதம் அப்பாவி தமிழ்மக்களுக்கு நியாயம் வழங்குவதே, அதற்கு தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்கள் தயாராக உள்ளனர். இரத்தவெறி பிடித்த புலிகளின் கோரிக்கைக்கு இணங்க நாம் தயாராக இல்லை. ஆனால், நியாயமாகவும் நேர்மையாகவும் செயற்படுவதாக இருப்பின் குறைந்த பட்சம் திரு. ஆனந்தசங்கரிஇ டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் கோரிக்கைக்கு இணங்கியாக வேண்டும்”;. ரூபவாகினியிலும் வேறு தொலைக்காட்சிகளிலும் இவ் உரை ஒளிபரப்பப்பட்டது.
மேலும், ஆசிரியர் தலையங்கத்தின் பகுதிகள் சுயவிளக்கம் அளிக்கின்றன. இலங்கை தமிழரசுக்கட்சி – தமிழ்தேசியக் கூட்டமைப்பு இந்த வேளையில் விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறி அவர்களின் முகவர்களாக செயற்பட்டனர். திருவாளர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஐh, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருப்பார்களேயானால் பல்லாயிரக்கனக்கான உயிர்களோடு பலகோடி பெறுமதியான மக்கள் சொத்தும் பொதுச் சொத்தும் காப்பாற்றப்பட்டிருக்கும். இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்மக்களைக் காப்பாற்ற தவறியனவே அன்றி நானல்ல. அப்படியானால் இந்த புத்திஐPவிகளும், அரசியல் ஆய்வாளர்களும,; சுதந்திரமாக எழுதுவோரும், தமிழ்ப்பத்திரிகையின் ஒரு பகுதியினரும் தமிழ் மக்கள,; தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதே ஒரே வழி என, எந்த அடிப்படையில் மக்களை வழி நடத்தினர். கனடாவில் இருந்து செயற்படும் ஓர் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளருடைய ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து தேர்தல் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 5ம் திகதி ஒரு தமிழ் தினசரி வெளியிட்டிருந்தது. அவர்கள் கொடுத்திருந்த தலையங்கம் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரிப்பதே ஒரே வழ,p என ஆலோசனை வழங்கியிருந்தது. இத்தினசரி திட்டமிட்டு என்னைத் தோற்கடிக்கும் நோக்கத்தோடு இவ்வாறு பிரசுரித்தமை பச்சைத் துரோகமான செயலாகும். இது ஏன் நடந்தது? எப்படி நடந்தது? ஓர் தனி மனிதனை வேட்டையாட எடுக்கப்பட்ட முயற்சியின் பின்னணி யார்;? அவர்கள் எதற்காக இதைச் செய்தார்கள் என்பது பெரும் புதிராக உள்ளமையால் விசாரிக்கப்பட வேண்டிய விடயமாகும். கடந்தசில வருடங்களாக அடிக்கடி பல கொடூரமான சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போதேல்லாம் நான் உட்பட மிகச்சிறிய எண்ணிக்கையினரைத் தவிர மற்றனைவரும் மௌனம் சாதித்தனர். இத்தனை சக்திகளும் ஒன்றிணைந்து குறைந்த பட்சம் ஒரு சம்பவத்தையேனும் கண்டித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் பல கோடி பெறுமதியான சொத்துக்களையும் காப்பாற்றியிருக்க முடியும். எல்லா சக்திகளும் ஒன்று சேர்ந்து தமிழருக்கு ஒரு விரோதியை அடையாளம் கண்டுள்ளனர். அது நானே. எல்லா நேரமும் மக்களை ஏமாற்றமுடியாது. விரைவில் ஒரு நாள் இந்த அனர்த்தங்களுக்கு பொறுப்பானவர்கள் தமது செயலுக்காக பெரும் இழப்புக்களை சந்திக்கவேண்டி வரும்;.
குடத்தனை என்ற ஊரில் மண் அள்ளச் சென்ற ஒரு பல்கலைக்கழக மாணவன் உழவு இயந்திரத்துடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டான். அப்போது ஆட்சேபித்தவன் நானே. பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஐPவன் கூல் இன் நியமனம் ஆட்சேபிக்கப்பட்டபோது அதையும் எதிர்த்தவன் நானே. இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் நான் சம்பந்தப்பட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் நான் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் இந்திய முறையிலான ஒரு தீர்விற்கு இலங்கை அரசிற்கு வழங்கிய ஆலோசனைக்கு பெரும் வரவேற்பு உண்டு என குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் தன் முடிவுரையில் குறிப்பிடுவதாவது “தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. ஆனந்தசங்கரி, இந்திய அரசியல்வாதிக்கு பெரும் பொறுப்புணர்வோடு எழுதியுள்ளாரென நாம் கருதுகின்றோம். ஏனெனில், அந்த ஜனநாயகத் தலைவருக்கு தென்னலங்கையிலுள்ள ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகளுடனும் நெருங்கிய உறவுண்டு.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் என்மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார் போல் தோன்றுகின்றது. ஆனால,; என்னைப் பொறுத்தவரையில் எத்தகைய இன்னல்கள் ஏற்பட்டிருந்தபோதும,; எனது கடமையை எனது நாட்டிற்கும,; இந்த நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் செய்துள்ளேன். என்மீது அதிகம் நட்பு பாராட்டாத இன்னுமொரு தமிழ் தினசரி 2009ம் ஆண்டு நவம்பர் 3ம் திகதி தனது தலையங்கத்தில் என்னைப் பாராட்டி உள்ளது. இன்று நான் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும,; விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பு நான் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும் பேதங்கள் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌ;வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தபோதும் நான் மட்டும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்திய முறையிலான தீர்வே சிறந்ததென தொடர்ந்தும் கூறிவருகிறேன் என அப்பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது.
பெரும்பான்மை மக்களை முறைப்படி உரிய உத்தரவாதங்களுடன் அணுகி அவர்களுக்கு ஏதும் ஐயமிருப்பின் அவ் ஐயத்தைப் போக்கக்கூடியதும் அவர்கள் ஏற்கக் கூடியதுமான இந்திய அரசியல் அமைப்பை ஏற்கவைக்குமாறு திரு. சம்பந்தன் அவர்களுக்கு ஆலோசனை கூற விரும்புகிறேன்.
வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி
01-06-2010
A response to Mr. R. Sampanthan’s appeal that the Government and the International Community should accept the verdict of the People of the North and the East.
It is now about two months since the General Election to the Sri Lankan Parliament was held. I am not to comment on the verdict of the people but as far as the election in the North and the East is concerned I have a few observations to make. Mr. R. Sampanthan, the leader of the Ilankai Thamil Arasu Kadchi and its Parliamentary group leader has appealed that the Government and the International Community should accept the verdict given by the People of the North and the East. He also warns that otherwise the Tamil People will be pushed to the state of second – class citizens. This statement is often heard in their circles during the elections only. Why did it occur to Mr. Sampanthan that they may not be acceptable to the Government and the International Community? On the basis of the total votes his ITAK polled, his claim is ridiculous. At the recently held general election his party polled only 65119 votes, which is only 9% of the total polled in the electoral district of Jaffna. Mr. Sampanthan’s party lost its credibility fully at the general election held in 2004, although he was crowing about that his party polled over 90% of the total votes polled in the Jaffna electoral district. Reference to the reports of the various election monitoring teams including those of the European Union and the Commonwealth, will reveal how fraudulently that election was held and how large scale impersonations and violations of election laws took place. Two local teams the PAFFRAL and the CMEV jointly demanded annulling of the elections held and wanted a fresh poll, which the Commissioner of Elections could not undertake without provisions for fresh poll in the election law. It is only under these circumstances that the ITAK won 22 of the 23 Tamil majority seats at the 2004 election. Further more the ITAK used the popular name “Tamil National Alliance” to hood-wink the Tamil voters. With the split in the TULF in February 2004 the TNA either stood dissolved or became non-functional. The ITAK was utilized by the Late Mr. S.P. Thamilchelvan of the LTTE, to form a new alliance by the same name and gave two positions for the Ilankai Thamil Arasu Kadchi, two for TELO, one each for the All Ceylon Tamil Congress and Premachandran’s EPRLF and retained the balance six positions for the LTTE. The ITAK won 22 seats and completed a full term of six years using the name Tamil National Alliance.
With the defeat of the LTTE on 18th of May 2009 the ITAK continued to function as TNA, until Parliament was dissolved in February 2010. The ITAK should have dissolved the TNA when they dropped the LTTE, the ACTC, two members from the TELO and some others from Vanni and Batticaloa, but continued to use that name at the last Parliamentary Election as well. This is the mess the ITAK that calls itself the TNA is now in. The ITAK should be honest enough to give up calling itself TNA without misleading the Tamil People. The most unfortunate thing is that the true history of the TNA had been concealed and the innocent Tamil People are made to believe, knowingly or innocently, by some intellectuals, political analysts, university students, free lance journalists and many such others, that the present TNA is the original TNA formed in 2001, of which I was the President and that the Tamils have no choice other than supporting the TNA at the election.
The cat is now out of the bag. The voters who had been waiting to teach a lesson for those who had let them down during the last six years as Members of Parliament, are thoroughly disappointed that they had been misled once again. The voters now feel that their Members of Parliament not only failed to do their duty to the people, whom they claimed to have represented, but had also failed to save several thousands of their kith and kin and several billions worth of their properties. All those who guided the voters to cast their votes for the ITAK, using the popular name the TNA, should bear the blame for the loss of lives and properties. These 22 representatives kept mum about the compensation the people are entitled to, for the lives and properties lost. When the whole world demanded that the LTTE should not use the innocent civilians as human shields and should release them forthwith, the only organization that should have been more concerned about the people whom they claimed to represent, remained silent. Mr. R. Sampanthan whether as leader of the ITAK or of the Tamil National Alliance has lost his moral right to represent the Tamils of the North and the East. I leave it to the good sense of those people who misdirected the voters to vote for the TNA at the eleventh hour, to decide as to whether the stand they took is justifiable. Mr. Sampanthan too had not failed to thank the media that helped the TNA to win a few seats. But strangely enough joint efforts of all these people could not help the TNA to go beyond 65119 compared to 113873 votes General Sarath Fonseka polled which Mr. Sampanthan claimed as due to his efforts. The most distressing thing is the irresponsible manner in which those who campaigned for the TNA conducted themselves. The so called Intellectuals some University Students, some free-lance journalists and some media persons, all got together and concealed what happened behind the scene during the last lap of the war. In short the fact that some Members of Parliaments of the TNA’s 22, were on jaunts abroad for years together, some for more than half the period of their membership in Parliament, claiming to be lobbying abroad, some others were campaigning in India for the defeat of the Congress Government, some were just marking time without returning to Sri Lanka until the required number of civilians were killed, for the International Community to react positively favoring the LTTE, the mass scale killings of LTTE injured cadre, recruitment of child soldiers even during the last lap of the war, were all concealed from the voters. When some of these matters were brought to the notice of a TNA Member of Parliament based in Mullaitheevu, he seems to have commented that these things cannot be avoided in a war. He was last seen in Vanni distributing water pumps sewing machines etc to the voters.
It is now very obvious that all forces joined together within Sri Lanka and outside to oust me from the political arena. Why should there be an organized campaign to oust me, soliciting the support of Tamils from all walks of life, is a thing I could not understand. What wrong have I done to my country and its people? I have not harmed any body at anytime and served the country and its people with much devotion for more than half a century. It is not for me to say that but I consider my defeat at the poll as a national loss and those responsible for it will have their regrets. Very soon the country as a whole will feel it and the Tamil people will feel left in the lurch like orphans. If the Tamil people had listened to my advice a lot of problems could have been solved. Selfishness of certain leaders did not permit the people to listen to me. On the contrary, abuse had been showered on me in a demeaning manner, far beyond a man’s limit of tolerance. I was honoured with the honorary title of “Traitor” a term used in our country to insult a political opponent.
The idea of finding a solution to the ethnic problem based on the Indian model was first mooted by me. It was during the Presidential Election of 2005 that I appealed to all Presidential Candidates, the two main Candidates in particular, to take the ethnic issue out of the campaign and treat it separately by arriving at a consensus among the candidates after the election. I suggested the Indian model which I found acceptable to very many. I had discussed this matter with His Excellency Mahinda Rajapaksa when he was Prime Minister and later also after he was elected as President. This matter was discussed with many at various levels. Most of those whom I contacted, such as Prime Minister, Ministers, Party Leaders, the Opposition Leader, Religious Dignitaries, like Right Rev. Bishops, Very Venerable Mahanayakas, Leading Citizens of all ethnic groups and many such others. I hardly found any opposition for my proposal. The main reasons for my proposing the Indian model were, first of all it will satisfy those who are allergic to the terms Federal and Unitary. The second reason was to silence the 80 million Tamils across the Palk-Strait, and the third, apart from many others, was the Political setup prevailing in India at that time. The largest democracy in the world with a majority Hindu population had a much respected Muslim as the Head of the State, in-spite of the fact that India had strained feelings with the neighboring Islamic States. Furthermore Sikhs form only 2% of the population. It is the Sikhs who demanded kalistan. It is a much respected Sikh who is now the Prime Minister of India. Apart from these the Tamils, Muslims and the Sinhalese, our religions Hinduism and Buddhism and our culture all came from India. Above all there is an overall and all time guarantee that India will never allow division of the country. Another important factor is that it was Tamil Nadu where the demand for separation started over fifty years back and now ceased. No one talks about separation in Tamil Nadu today.
Six years back there was a general understanding among various ethnic groups, to accept the Indian model perhaps with minor adjustments to suit local conditions. We could have accepted it if only the ITAK took the Initiative and negotiated with the LTTE or persuaded them to accept the Indian model. The ITAK – TNA did nothing then, although they were the proxies of the LTTE. Having missed so many opportunities and after so many thousand innocent lives lost and billions worth of property destroyed Mr. Sampanthan is now talking about the Indian model, that too half heartedly. If the TNA had accepted my proposal then how much of losses for our people could have been avoided. Having remained silent on this issue so long, he openly commented supporting it for the first time at a meeting of the ITAK-TNA at Kalmunai on the 20th of January, in support of the Presidential Candidate General Sarath Fonseka. At that meeting he did not have the courtesy to say that the Indian Model idea was first mooted by me or at least had my support. Once again on the 20th of April a national Tamil daily carried a front page news item under the caption “we are prepared to support a solution based on the Indian model”. Even on this occasion neither that daily nor Mr. Sampanthan did mention it as my proposal or have my support. He only said that this matter had already been referred to by the President. It is this attitude of Mr. Sampanthan that had brought the Tamil Community to this state. The whole world knows that this idea was mine. I do not remember the President ever saying this. Even if the President had said so it is purely due to the request I made to him during the Presidential election. Mr. Sampanthan’s claim is that the President made this reference after he was elected as President. This is one very glaring example of Mr. Sampanthan’s very selfish attitude. As for me I want a solution acceptable to the minorities, whether it comes through Mr. Sampanthan or from anybody else. Let Mr. Sampanthan claim credit for anything and let any media project anyone they want as heroes. All what I want is a solution for our people and the honorable title of “traitor” bestowed on me removed, for me to die peacefully. Those who claimed the TNA as the best bet for the Tamils should withdraw what they had said. Contrary to finding a satisfactory solution, such claims had only messed up the whole thing. Anyone having any personal grudge against me, should not mix it up with my political career which in over half a century old.
Four years back on the 25th of May 2006, ‘Daily News’ carried an editorial and commented as “The TULF leader is among the few democratic Tamil Politicians we have in this country today. Others have been killed bought or their voices stilled by the LTTE. Veerasingam Anandasangaree does not kill people, he does not harm or encourage others to kill or hate people. He does not abduct children and arm them to the teeth or tax his own people. The only thing he does today is to take pains to bring about a solution to the problem the country is faced with, in a democratic manner. He follows the civilized way. He dreams of walking freely in Kilinochchi among school children and his village people’.
I went through this editorial over and over again to see whether there is anything that could have hurt or provoked a University student or an intellectual or a Political analyst or a free lance journalist or the print media to write or speak or campaign against me to the extent of canvassing, almost the entire Tamil Population of the North and the East, to vote against me. I am one who is in politics for over fifty six years and very actively for fifty years having contested the Kilinochchi electorate for the first time in 1960 and every election that followed whether parliamentary or local. I became chairman of the Kilinochchi (Karachchi) Village Council in 1965, Chairman Kilinochchi Town Council in 1968 and got elected to Parliament both in 1970 and 1977 and voluntarily vacated my seat along with sixteen other members of the TULF including Mr. R.Sampanthan protesting against the extension of the term of Parliament by a further period of six years, through a referendum.
The editor who titled the editorial as “Listen to democratic voices” states “Democratic Tamil United Liberation Front (TULF) leader Veerasingham Anandasangaree has written again. This time to the Chief Minister of Tamil Nadu Dr. Kalaignar M.Karunanidhi urging a meeting between them to enlist the latter’s support for promoting the Indian Model of power devolution in Sri Lanka”. The editor further says, “He is trying to help President Mahinda Rajapaksa another consensus builder to bring about an agreement among all parties to find a just solution”.
I hope it will not be irrelevant if I quote a paragraph from a speech the President delivered at the 59th Independence Day ceremony, on the 4th of February 2005, the first after his election as the President. He said “It is our duty to protect the lives and property of the Tamil and Muslim people and bring sanctity to the future world of their children. As I stated at the inauguration of the Moragakanda maha Sumudra. I wish to reemphasis that the most reliable weapons against terrorism is to do justice by the innocent Tamil People. I know that the Sinhala people in the south are ready for this. We are not ready to give into the blood- thirsty demands of the LTTE. However at the minimum we should be reasonable and honest enough to agree with Mr. Anandasangaree or the Hon. Douglas Devananda”. His Excellency’s speech was telecast by Rubavahini and some other TV stations and the whole country was listening to it.
Extracts of the above editorial are self –explanatory. At the time this editorial appeared, the ITAK-TNA was acting as proxies of the LTTE accepting them as sole representatives of the Tamil People. Why did not M/s R. Sampanthan, Mavai Senathirajah and Suresh Premachandran take any action then that would have saved the lives of several thousand innocent people and billions worth of property both Public and Private. If is the ITAK-TNA that had failed to save the Tamils and not me. So on what basis the so called intellectuals, political analysts free lance journalists and a section of the Tamil Media come to the conclusion that the “TNA (ITAK) is the best bet for the Tamils”. A Tamil daily publishing a translation of an article by a renowned Journalist based in Canada, on the 5th of April, just two days before the date of polling, with the caption, “For the Tamils of the North and the East the best choice at the election would be the TNA”. The greatest betrayal on the part of the Tamil daily was to publish it, deliberately aiming at my defeat at the poll. Why did this happen? How did it happen? Who is behind this move to hound a loner, and for what consideration remains a mystery, that needs investigation. Lot of incidents of horrendous nature took place off end on during the last few years. Everyone was silent excepting a very few of whom I had been one. If only all these forces had get together and condemned at-least one incident, thousands of lives and valuable properties could have been saved. All the forces have got together and have identified one common enemy of the Tamils. That is me. The public cannot be fooled all the time and one day soon those responsible for the present crisis will have to pay heavily for the role they played. When a University Student was burnt with his tractor and trailer for removing sand at kudathanai, it was I who had to protest. When Professor Ratnajeevan Hoole’s appointment as vice chancellor of the University of Jaffna was objected to, it was I who had to protest. There were very many such incidents like this.
The editor in his editorial had also brought out the fact that in my letter to the Chief Minister Dr.Karunanithi I had said that my proposal to the government of Sri Lanka to adopt a constitution like the Indian Model, has received very wide support. He concludes his comments by saying “We are of the view that the TULF leader has written to the Indian politician with a great sense of responsibility, because the democratic TULF leader maintains cordial relations with all parties in the South including the JVP and the JHU and other parties such as the SLMC and other Tamil parties”
I do not know whether the Editor had over- expressed his confidence in me. But as far as I am concerned, irrespective of any constrains I had done my duty to my country and its people with devotion and care. Another National daily in its editorial dated 3rd Nov 2009 though not very friendly towards me, complemented me for taking the same stand even today on the ethnic issues that I took several months before the defeat of the LTTE. The TNA has taken different stands at different times while I am sticking to the Indian Model throughout as the ideal solution for the ethnic problem. My advice to Mr. Sampanthan would be to stick to the Indian Model as a solution to our problem that can be easily made acceptable to the majority community if approached carefully with proper guarantees to allay the fears, if they have any.
V.Anandasangaree,
President TULF
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
Anandasangaree,
TULF
Subscribe to:
Posts (Atom)
