அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Monday, February 22, 2010

வலம்புரிக்கு பத்து வயது - வாழ்த்துக்கள்!

யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை தனது 10ஆவது வயதை முடித்து 11ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறது. 11ஆவது வயதில் இணையத்தையும் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி!

Sunday, September 13, 2009

யாழ்தேவி திரட்டிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!


யாழ்தேவிக்காரர்களே! என்னுடைய பதிவுகளை இனி நான் ஆறுதலாக இடலாம் தானே! தினமும் இடவேண்டும் என்ற நிபந்தனை இன்றுடன் முடிந்தவிட்டதுதானே!

அப்பாடா!!!

யாழ்தேவி திரட்டியினர் கடந்த ஒரு வாரம் நட்சத்திரப் பதிவர் என்ற நாமத்தை இட்டார்கள் - அதனால் நான் பட்டபாடு - அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். ஏனோ தெரியவில்லை - இப்போது எதையாவது எழுதுவது என்றாலும் - கணினியின் முன்பிருக்கச் சென்றாலும் கொஞ்சம் அலுப்பு வருகிறது. கையில் ஏற்பட்ட காயத்தின் வலி சிறிது இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை எல்லாவற்றிலும் ஒரு விரக்திநிலை! எழுதவேண்டியவை நிறைய இருக்கிறது! பதிவிலிட மட்டுமல்ல. இங்கு டொச் மொழி படிக்க - வேண்டிய வீட்டுவேலை - இங்குள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாக செய்யவேண்டியவை. இங்கு அடுத்தவாரங்களில் நடைபெற இருக்கின்ற சில நிகழ்வுகளுக்கான ஆயத்தங்களைத் தயார்படுத்த வேண்டிய வேலைகள் என்று கனக்கச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாய்வாலை நிமிர்த்த முடியாது - உலகத்தைத் திருத்த முடியாது

உன்னைத் திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்திவிடும் என்று சுவாமி சிவானந்தர் சொல்கிறார்.

உலகம் எப்பவும் அழுக்குத்தான். அதைத் துப்பரவு செய்ய முடியாது - இதை யோக சுவாமிகள் மிகவும் சிறப்பாகச் சொல்லியிருகிறார். யேசு வந்தார் - புத்தர் வந்தார் - உலகின் அழுக்கைத் தோய்த்துப் பார்த்தார்கள் - கொஞ்ச நேரம் வெள்ளையாக இருக்கும் பின்னர் பழையபடி அழுக்கு நிறைந்து விடும் - இவர்கள் சோப்புக் கட்டிகள் போல தேய்ந்து காணாமற் போனதுதான் மிச்சம்! என்று.

அண்மையில் இடம்பெற்ற இலங்கைப் பதிவர் சந்திப்பில் நானும் சிறிது ஆர்வம் எடுத்தேன். நல்லது நடக்கும்போதும் ஏதாவது புதிய நிகழ்வுகள் இடம்பெறும் போதும் என் ஆவல் அந்தப்பக்கம் செல்லும். இலங்கைப் பதிவர் சந்திப்பு நடந்த அன்றே பலருடன் தொடர்பு கொண்டேன். சந்திப்பைப் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசித்தேன். நான் ஒரு இடுகை இடலாமென்றால் நேரம் என்னை விட்டுத் தொலைதூரம் சென்றுவிட்டது. ஒரு சில புதிய இலங்கைப் பதிவர்களுடன் தொடர்பு கொண்டேன். ஏனையவர்களுடன் இனித்தான் தொடர்பு கொள்ள வேண்டும்.

சந்திப்பு நடைபெற்ற அன்றே வந்தியத்தேவனுடன் தொடர்பு கொண்டபோது அவர் எப்பவோ ஒரு நாள்(12, 13 October, 1990களில்) நாம் நடத்திய இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிய கருத்தரங்கு நிகழ்வுகளையும் - மலையகத்தில் செய்த சமயப் பணிகள் பற்றியும் பதிவிடுமாறு வேண்டினார். நானும் ஒரு சில பத்திரிகைச் செய்திகளை வரும்போது மறவாமல் எடுத்து வந்ததால் அதைப் பதிவிடலாம் என்ற நினைத்தாலும் நேரம்தான் கிடைக்கமாட்டேன் என்கிறது.(கூடிய விரைவில் எழுகிறேன் - வந்தியத்தேவரே!)

கரூரில் நடைபெற்ற விசுவின் மக்கள் அரங்கத்தில் (Nov 17) ஒரு இளைஞன் (அ. இராமமூர்த்தி) சொல்கிறான் - ஐயா இன்னும் சொல்லப்போனால் எனக்கு இந்த 24 மணிநேரமும் பத்தலிங்க ஐயா! என்று சொல்வதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

இலங்கையில் பல பதிவர்கள் இருக்கையில் யாழ்தேவி திரட்டியினரும் என்னை ஓர் நட்சத்திரப் பதிவராக 8ஆவது இடத்தில் வைத்தமைக்கும் நான் அவர்களை நன்றியோடு நினைவு கூறித்தான் ஆக வேண்டும். ஏற்கனவே சுபாங்கனின் ஐந்தறைப்பெட்டி - சாயினியின் Sketch- மருதமூரானின் மருதமூரான் - த. ஜீவராஜின் ஜீவநதி - அமுதனின் அமுதனின் பக்கங்கள் - ஈழவனின் களத்துமேடு - சுதாவின் ஹரன் - என்ற 7 நட்சத்திரப்பதிவர்கள் அலங்கரித்த இடத்தை எட்டிப்பிடிக்க வைத்த இறைவனுக்கும் நன்றிகள்!

நட்சத்திரப் பதிவராக இருந்த இந்த ஒருவார காலத்தில் பதிவுகளுக்கு - முக்கியமாக யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவரானமைக்கு வாழ்த்துத் தெரிவித்து - இடுகையிட்ட சிலருக்கு நான் எந்த மறுமொழியும் இடவில்லை - காரணம் அவர்களுக்கு ஒரு பதிவிலியே மறுமொழி இடுவதுதான் சிறப்பு என்று கருதி இன்றுவரை பொறுத்திருந்தேன். அதற்காக அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

குறிப்பாக இதில் சில பெயரிலிகளும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்! தேவைகளை மாத்திரம் பயன்படுத்தி விட்டு மீதி அனைத்தையும் கிடப்பில் போட்டுவிட்டேன். அதற்காக அந்த வெளிக்காட்ட மறுப்போர் என்னை மன்னிப்பார்களாக!

முதலாவதாக ஈழவன் - இன்றுவரை எங்கிருக்கிறார் - அவர் எப்படிப் பட்டவர் என்ற - முகம் தெரியாத நண்பருக்கு எனது மனம்நிறைந்த நன்றிகள்.

இரண்டாவதாக யோ வாய்ஸ் (யோகா) - இவரை இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின் தொடர்பு கொண்டு - தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அவருக்கும் எனது நன்றிகள்.

மூன்றாவதாக வன்னிசிங்கம் - அவரது இடுகையை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமானதென நினைக்கிறேன் - காரணம் ஒருவராதல் என் எழுத்தை மெச்சி ஒரு சான்றிதழ் தந்திருக்கிறாரல்லவா! அது என் எழுத்துக்கு ஒரு பரிசு கிடைத்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சில எழுத்துக்கள் வெளியே கொண்டுவரப்பட்டே ஆகவேண்டும்.வாசிக்கப்பட்டே ஆகவேண்டும்.அந்தவகைப்பதிவுகள் உங்களுடையவை. எதையும் பட்டுப்பட்டென வெளிப்படையாக சொல்லும் உண்மையான பதிவுகள் பகிரப்படவேண்டும்.நன்றி யாழ்தேவி.நட்சத்திரப்பதிவரானதற்கு வாழ்த்துக்கள் தங்க முகுந்தன்

நான்காவதாக ஆதிரை - அவருடனும் நான் இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறேன். அவருக்கும் எனது நன்றிகள்!

ஐந்தாவதாக மருதமூரான் - இவரையும் பதிவர் சந்திப்பின் பின்னர் தொடர்பு கொண்டு பேசியிருந்தேன். அவர்களுடைய வீரவிளையாட்டே எனது நட்சத்திரப் பதிவர்! பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் இவருக்கு என் மனம்நிறைந்த நன்றிகள்!( கோபிக்க வேண்டாம் சும்மா ஒரு பகிடிக்காக இதைக் குறிப்பிட்டேன்! சரியா!)

ஆறாவதாக ஈழவன் திரும்பவும்
நட்சத்திரப் பதிவரானால் போதுமா, தினமும் தவறாமல் பதிவு இட வேண்டும், எங்கே இன்று எதையும் காணவில்லையே, என்ன முகுந்தன் வேலையாக இருக்கின்றீர்களோ! இலங்கையருக்கான திரட்டியென "யாழ்தேவி" இருப்பதால் தானே நட்சேத்திரப் பதிவரெனும் மகுடமெல்லாம் எங்களுக்கு! ஆகவே யாழ்தேவி இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வாழ்த்துவோம்! என்று பதிவிட்டார் - நானும் எனது யாழ்தேவி அனுபவத்தை எழுதலாம் என்று அதை எழுதினேன்.

ஏழாவதாக தேவதாசன் dilshaad - அவருக்கும் எனது நன்றிகள்!
அடுத்ததாக கனககோபி - அவருக்கும் எனது நன்றிகள்!
எல்லாவற்றுக்கும் மேலாக என்னை பதிவிட இந்த உலகுக்குள் கொண்டுவந்த தள்ளிய மேடை - புதிய மலையகம் புகழ் நிர்ஷனுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

மீண்டும் பதிவுகளை கிரமமாக எழுத எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்த யாழ்தேவி திரட்டியினருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்!

Sunday, July 19, 2009

யாழ்தேவிக்கு வாழ்த்துக்கள்

இன்றைய தினக்குரல் பத்திரிகை யாழ்தேவி இணையத் தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கும் கிருத்தியத்தின் பதிவை யாழ்தேவி ஏற்றமைக்கும் எமது மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

நன்றி - தினக்குரல்

Wednesday, April 15, 2009

3 வது ஆண்டில் காலடி பதிக்கும் தமிழ்வெளிக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!!!

இணையத்தள வரலாற்றில் சிறப்பான பணியை வழங்கும் தமிழ்வெளி தனது 3 வது ஆண்டில் காலடி பதிக்கும் நிகழ்வு ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. பல பதிவர்களை ஒன்றுதிரட்டி எழுத்துப் பணிக்கு உரிய இடம் கொடுத்து வருவதை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது. வாசகர்களிலும் பதிவர்களிலும் ஒருவனாக அவர்களது பணியை வாழ்த்துவதில் மனநிறைவடைகிறேன்!!!

தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!!!
ஓங்கட்டும் தமிழர் குரல்!!!
வாழ்க தமிழ்வெளி!!!
வளர்க தமிழ்த்தொண்டு!!!

Monday, October 27, 2008

தீபாவளி நல் வாழ்த்துக்கள்


நாட்டில் நிலவும் அனைத்து அநீதிகளும் அகன்று
தமிழர்களின் வாழ்வில் நிரந்தரமானதும் கௌரவமானதுமான
ஒரு அமைதியான நிரந்தரத் தீர்வு ஏற்பட
எல்லாம் வல்ல பரம்பொருளை இன்றைய நாளில் பணிந்து வேண்டி
கிருத்தியத்தின் வாசகர்களுக்கும் ஏனைய வலையுலக பதிவு வாசகர்களுக்கும்
எனது அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.