அரசியலுக்கு மிகச் சிறப்பாக வழிமுறை சொல்லிக் கொடுத்திருக்கிறார் திருவள்ளுவர்!
செங்கோன்மை
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள் 541)
குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.
கொடுங்கோன்மை
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.(குறள் 551)
குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.
நம்நாட்டில் நடந்துமுடிந்த அல்லது நடக்கின்ற அனைத்து அநீதிகளுக்கும் இந்த இரண்டு குறள்களும் மிகத்தெளிவாகப் பொருள்சொல்கின்றன!
சிங்களப் பெரும்பான்மை அரசும் சரி தமிழர்களுக்கான அரசை நடத்தியவர்களும் சரி குடிமக்கள்மீது காட்டிய பெருந்தன்மையை எல்லோரும் அறிவார்கள்! இதில் இன - மத வேறுபாடின்றி அனைவருமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்!
யாழ்ப்பாணத்துத் தமிழர்களைக் காட்டிலும் - மட்டக்களப்பு - வன்னித் தமிழரைக் காட்டிலும் - மலையகம் தெற்குப் பகுதிகளில் வாழும் தமிழர்களும்! தெற்கிலும் மலையக கிராமப் புறங்களிலும் ஏன் கொழும்பில் சேரிப் புறங்களில் ஆற்றோரங்களில் வாழும் பெரும்பான்மைச் சிங்களவர்களும் யாழ்ப்பாணப் பகுதிகளிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களுமாக ஒரு சாரார் எந்த நீதியுமின்றி இன்றும் வாழ்கிறார்களே!
நீதி - நியாயம் பற்றி நான் எழுதினால் பலருக்கு கோபம் வரும்! ஆனால் அறம் செய விரும்பு என இளைய காலத்தில் படித்த வரிகளை நான் யாருக்காகவும் மாற்ற முடியாது! அது என்னுடன் கூடவே என்னுயிருள்ளவரை தொடரும்!
ஒரு சமயம் வடக்கு பகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்டபோது மௌனமாயிருந்த சமூகத்திற்கு கடந்த வருடம் நடந்த கொடிய யுத்தத்தின்போது உலக நாடுகளும் மௌனம் சாதித்ததும் தர்மத்துக்கு நாம் தலைவணங்காத பழிதான்! சரி மறுபுறம் நாட்டு மக்களை அரக்கத்தனமாக கொன்றொழித்த அரசு ஒரு வருட காலத்தில் இயற்கைப் பேரழிவால் கதிகலங்கி நிற்கிறது!
தர்மம் சரணம் கச்சாமி என்கிற பௌத்த போதனையும்சரி - அறம் செய விரும்பு என்கிற தமிழ் மூதாட்டியின் கருத்தும் சரி போற்றப்படவேண்டியவர்களால் கைக்கொள்ளப்படாதபோது உலக நீதிக்கு அமைவாக இறையும் இயற்கையும் பழிசெய்தவர்களை கண்டித்தே தீரும் இதுதான் நடக்கிறது! அரசும் ஆட்சி புரிபவர்களும் இதை அலட்சியப்படுத்தினாலும் - தர்ம போதனைகளை அறிந்த பாமர மக்களாவது இனிமேலாவது மனச்சாட்சிப்படி நடக்க வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோளாகும்!
(குறளுக்கும் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பொருளுக்கும் www.thirukkural.com இணையத்திற்கு நன்றிகள்)
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Saturday, May 22, 2010
Wednesday, March 17, 2010
மூன்றில் இரண்டு பங்கு பெறுவது இலகுவானதா?
ஒரு காலத்தில் 5 இலிங்கங்கள் உயர்பதவிகளில் இருந்தது ஞாபகமிருக்கிறதோ தெரியவில்லை! சட்ட மா அதிபராக – பொலிஸ் மா அதிபராக தமிழர்கள் இருந்த காலமும் மலையேறிவிட்டது! பொதுவாக இன்றைக்கு சாதாரண பதவிகளில்கூட தமிழர்கள் மிகச் சொற்ப வீதமாகவே இருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் கைப்பற்றலுக்கு முன் முத்துக்குமாரிலிருந்து முருகதாசன் வரையில் தம் உயிரைத் தியாகம் செய்தவர்களின் செயலும் வீணானதுதான் மிச்சம். புலம்பெயர் சமூகம் ஆர்ப்பரித்த போராட்டங்களும் எங்கே போனதென்று தெரியாமல் - ஒரு பாரிய இன அழிப்பை, புலிகளை அழிப்பதாகச் சொல்லி - சர்வ சாதாரணமாக செய்துவிட்டு இப்போது 3இல் 2 பங்கு பெரும்பான்மை பெறுவதில் முனைப்புக் காட்டும் அரசுக்கு எதிராக தற்போதுதான் ஐக்கிய நாடுகள் சபை ஒரு நிபுணர்குழுவை நியமிக்க (அதுவும் முடிவல்ல) ஆலோசிக்கிறது. இதுவரை மௌனம் காத்த சர்வதேச சமூகம் இனி எம்மீது அக்கறை கொள்ளும் என்று நாம் எண்ணுவது பெரும் மடைத்தனம். இருக்கும் எஞ்சிய மக்களையாவது இனிமேல் ஒருவித பாதிப்புக்கும் உள்ளாக்காமல் உருப்படியான செயற்திட்டங்களை தீட்டுவதுதான் இன்றைய அவசியமான தீர்மானமாக இருக்கிறது. இதை தமிழ்க் கட்சிகள் உருப்படியாகச் செய்ய வேண்டும்.
புலம்பெயர் சமூகம் சும்மா கொக்கரிக்காமல் அமைதியாக இருந்தாலே இப்போதைக்கு நல்லது.செய்த ஆர்ப்பாட்டங்கள் போரை நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால் எதையும் சாதித்திருக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்கூட எல்லா அழிவையும் கணக்கெடுக்க வந்ததுபோல 23இல் முகாம்களைப் போய் வேடிக்கை பார்த்தார். அவர் அப்படி வந்ததுக்கு வராமல் விட்டிருக்கலாம். மே 23ல் வந்தவர் மார்ச் நிபுணர்குழு அமைக்க ஆலோசிக்கிறார் என்றால் எவ்வளவு காலதாமதம் - அதற்கும் அணிசேரா அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறதாம்.
ஐக்கிய தேசியக் கட்சி 1977இல் அமோக ஆதரவுடன் அன்றைய தொகுதித் தேர்தல் முறையில் 168 மொத்தத் தேர்தல் தொகுதிகளில் 140ல் வெற்றிபெற்றது. 18 தொகுதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் 8 தொகுதிகளில் சுதந்திரக் கட்சியும் நுவரெலிய மஸ்கெலியா தொகுதியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொண்டமான் அவர்களும் கொழும்பு மத்தியில் சுயேட்சையாகப்(எந்தக் கட்சி எனத் தெரியவில்லை) போட்டியிட்ட எம் ஜாபிர் ஏ. காதர் அவர்களும் வெற்றிபெற்றனர். 1972இல் சுதந்திரக் கட்சி தலைமையிலான கட்சிகளினால் தயாரித்த அரசியல் சாசனத்தை 1977இல் தன்னாதிக்க முறையில் ஜனாதிபதி ஆட்சிக்கு மாற்றி அமைத்து ஏறக்குறைய 17 ஆண்டுகள் சொகுசான ஆட்சியைக் கையாண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு 1994இன் பின் ஜனாதிபதி ஆசனம் கைக்கெட்டவில்லை. 1994இலிருந்த 2010 வரையில்லாமல் 2016வரை ஜனாதிபதியாயிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தைவிட(17) அதிக காலம்(26) கைப்பற்றிய பெருமை மக்கள் ஆணைபெற்ற தற்போதைய அரசுக்கிருக்கிறது. இந்த சமயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் தொகுதி முறையை ஏற்படுத்தப் போவதாக இப்போது தெரிவித்தாலும் ஆட்சியில் ஏறிய பின் என்ன செய்வார்களோ அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு 3இல் 2 பங்கு முதலில் பெற வேண்டும். கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் பொது சன மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் இடையிலான வித்தியாசம் அதிகமானதாக இல்லை. எனவே தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமூலம் 3இல் 2பங்கு பெறத் தக்கதான சாத்தியமில்லை. இரண்டு அணிகளுக்குள்ளும் கிடைத்த வாக்குகள் இந்தத் தேர்தலில் பிளவுபடப் போகிறது. வடக்கு - கிழக்கிலும் மலையகத்திலும் இது தமிழ் முஸ்லிம் கட்சிகளிடமும் ஏனைய இடங்களில் சில பெரும்பான்மைக் கட்சிகளிடமும் பிரிகின்ற வாக்குகளை கணக்குப் பார்த்தால் அரசு சொல்வதைப் போல 3இல் 2 பங்கு பெறுவது என்பது வெகு சுலபமானதல்ல. அத்துடன் இம்முறை தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாமல் தனித்துப் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சிங்களவர்களுக்குள்ளும் - ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா குறித்து பிரச்சனைகள் அதிகரித்திருப்பதும் - அவர்களது கலவரங்களை அடக்க கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல்கள், கைதுகள் இடம்பெறுவதை நோக்கும்போது எல்லாமே கேள்விக்குறிதான்.
நிலைமைகள் மேலும் இறுகும் பட்சத்தில் முன்னர் ஏற்பட்டதுபோல சிறுபான்மைக் கட்சிகளின் உதவியை நாட வேண்டிய இக்கட்டான நிலை வரலாம். எல்லாவற்றுக்கும் விடை இன்னும் 3 வாரங்களில் கிடைத்துவிடும்தானே!
முள்ளிவாய்க்கால் கைப்பற்றலுக்கு முன் முத்துக்குமாரிலிருந்து முருகதாசன் வரையில் தம் உயிரைத் தியாகம் செய்தவர்களின் செயலும் வீணானதுதான் மிச்சம். புலம்பெயர் சமூகம் ஆர்ப்பரித்த போராட்டங்களும் எங்கே போனதென்று தெரியாமல் - ஒரு பாரிய இன அழிப்பை, புலிகளை அழிப்பதாகச் சொல்லி - சர்வ சாதாரணமாக செய்துவிட்டு இப்போது 3இல் 2 பங்கு பெரும்பான்மை பெறுவதில் முனைப்புக் காட்டும் அரசுக்கு எதிராக தற்போதுதான் ஐக்கிய நாடுகள் சபை ஒரு நிபுணர்குழுவை நியமிக்க (அதுவும் முடிவல்ல) ஆலோசிக்கிறது. இதுவரை மௌனம் காத்த சர்வதேச சமூகம் இனி எம்மீது அக்கறை கொள்ளும் என்று நாம் எண்ணுவது பெரும் மடைத்தனம். இருக்கும் எஞ்சிய மக்களையாவது இனிமேல் ஒருவித பாதிப்புக்கும் உள்ளாக்காமல் உருப்படியான செயற்திட்டங்களை தீட்டுவதுதான் இன்றைய அவசியமான தீர்மானமாக இருக்கிறது. இதை தமிழ்க் கட்சிகள் உருப்படியாகச் செய்ய வேண்டும்.
புலம்பெயர் சமூகம் சும்மா கொக்கரிக்காமல் அமைதியாக இருந்தாலே இப்போதைக்கு நல்லது.செய்த ஆர்ப்பாட்டங்கள் போரை நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால் எதையும் சாதித்திருக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்கூட எல்லா அழிவையும் கணக்கெடுக்க வந்ததுபோல 23இல் முகாம்களைப் போய் வேடிக்கை பார்த்தார். அவர் அப்படி வந்ததுக்கு வராமல் விட்டிருக்கலாம். மே 23ல் வந்தவர் மார்ச் நிபுணர்குழு அமைக்க ஆலோசிக்கிறார் என்றால் எவ்வளவு காலதாமதம் - அதற்கும் அணிசேரா அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறதாம்.
ஐக்கிய தேசியக் கட்சி 1977இல் அமோக ஆதரவுடன் அன்றைய தொகுதித் தேர்தல் முறையில் 168 மொத்தத் தேர்தல் தொகுதிகளில் 140ல் வெற்றிபெற்றது. 18 தொகுதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் 8 தொகுதிகளில் சுதந்திரக் கட்சியும் நுவரெலிய மஸ்கெலியா தொகுதியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொண்டமான் அவர்களும் கொழும்பு மத்தியில் சுயேட்சையாகப்(எந்தக் கட்சி எனத் தெரியவில்லை) போட்டியிட்ட எம் ஜாபிர் ஏ. காதர் அவர்களும் வெற்றிபெற்றனர். 1972இல் சுதந்திரக் கட்சி தலைமையிலான கட்சிகளினால் தயாரித்த அரசியல் சாசனத்தை 1977இல் தன்னாதிக்க முறையில் ஜனாதிபதி ஆட்சிக்கு மாற்றி அமைத்து ஏறக்குறைய 17 ஆண்டுகள் சொகுசான ஆட்சியைக் கையாண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு 1994இன் பின் ஜனாதிபதி ஆசனம் கைக்கெட்டவில்லை. 1994இலிருந்த 2010 வரையில்லாமல் 2016வரை ஜனாதிபதியாயிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தைவிட(17) அதிக காலம்(26) கைப்பற்றிய பெருமை மக்கள் ஆணைபெற்ற தற்போதைய அரசுக்கிருக்கிறது. இந்த சமயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் தொகுதி முறையை ஏற்படுத்தப் போவதாக இப்போது தெரிவித்தாலும் ஆட்சியில் ஏறிய பின் என்ன செய்வார்களோ அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு 3இல் 2 பங்கு முதலில் பெற வேண்டும். கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் பொது சன மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் இடையிலான வித்தியாசம் அதிகமானதாக இல்லை. எனவே தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமூலம் 3இல் 2பங்கு பெறத் தக்கதான சாத்தியமில்லை. இரண்டு அணிகளுக்குள்ளும் கிடைத்த வாக்குகள் இந்தத் தேர்தலில் பிளவுபடப் போகிறது. வடக்கு - கிழக்கிலும் மலையகத்திலும் இது தமிழ் முஸ்லிம் கட்சிகளிடமும் ஏனைய இடங்களில் சில பெரும்பான்மைக் கட்சிகளிடமும் பிரிகின்ற வாக்குகளை கணக்குப் பார்த்தால் அரசு சொல்வதைப் போல 3இல் 2 பங்கு பெறுவது என்பது வெகு சுலபமானதல்ல. அத்துடன் இம்முறை தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாமல் தனித்துப் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சிங்களவர்களுக்குள்ளும் - ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா குறித்து பிரச்சனைகள் அதிகரித்திருப்பதும் - அவர்களது கலவரங்களை அடக்க கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல்கள், கைதுகள் இடம்பெறுவதை நோக்கும்போது எல்லாமே கேள்விக்குறிதான்.
நிலைமைகள் மேலும் இறுகும் பட்சத்தில் முன்னர் ஏற்பட்டதுபோல சிறுபான்மைக் கட்சிகளின் உதவியை நாட வேண்டிய இக்கட்டான நிலை வரலாம். எல்லாவற்றுக்கும் விடை இன்னும் 3 வாரங்களில் கிடைத்துவிடும்தானே!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அரசியல்,
தேர்தல் அலசல்
Monday, November 23, 2009
சந்திப்பும் கலந்துரையாடலும் ஈழத் தமிழ் பேசும் மக்களுக்கு ஏதேனும் விமோசனத்தைத் தருமா?

நேற்றுடன்(22) கடந்த 4 நாட்கள்(19-11-2009 தொடங்கியது) நடைபெற்ற தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின் கருத்தரங்கு முடிவுற்றது!
நண்பரொருவருடைய புண்ணியத்தினால் நேரடியாக குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று கலந்துரையாடலின் இறுதியில் பங்குபற்றிய அத்தனை தலைவர்களையும் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது!
ஏதோ! நடப்பவை - நடக்க இருப்பவை - அப்பாவிப் பொது மக்களுக்கு - நல்லதாக - அமைய பிரார்த்தனைகள்!
Saturday, November 21, 2009
சுவிசில் இன்று 3ஆம் நாளாகவும் ..... ஏதோ பேசுகிறார்கள்!....... என்னமோ நடக்குது!.......... நாமறியோம்!



பேசினார் ... பேசினார்கள் ......சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் இதுக்கொரு குறையுமில்லை!
ஜீ.ஜீ 50க்கு 50!

தந்தை செல்வா வடக்கு கிழக்கு இணைந்த மாநிலம்! பேசினார் - பண்டாவுடன் - டட்லியுடன் - சிறிமாவோவின் அரசுடன்!
பின்னர் சர்வகட்சி மாநாடு - திம்பு - பூட்டான் -பெங்களுர் - நோர்வே ஒஸ்லோ -சுவிஸ்!
தமக்குள் பேசினார்கள் - வெவ்வேறு அரசுகளுடன் பேசினார்கள் - மத்தியஸ்த்துடன் பேசினார்கள்....






பேசியபிறகு தனித்தனியே சென்றார்கள் .... பிறகும் சேர்ந்து பேசினார்கள்....
மற்றவர்கள் பேசியதைக் கொச்சைபடுத்திவிட்டு தாம் மட்டும் ஏகப் பிரதிநிதிகள்!
தம்முடன் மட்டும் பேசவேண்டும் என்ற ஆணை! சரி - பேசினார்கள்!
பேசியவர்களை இன்று காணோம்!
பேசியவர்களைக் கொன்றும் தீர்த்தார்கள்! யார் யாரெனப் பட்டியல் போடத் தேவையில்லை!
இப்போது புதியதொரு திருப்பம்!கண்கெட்ட பின்பு ....ஏதோ ஒரு நமஸ்காரம்!
அரை இலட்சம் மக்களுக்குமேல் மாண்டொழிந்து போன பின்னர்.....
3 இலட்சம் மக்களுக்குமேல் நாதியற்றுப் போனபின்னர்......
ஏனைய அனைவரும் இன்று பேச வருகிறார்கள்! என்னப்பா உலகம்! உருண்டைதானே! திரும்பி திரும்பி அதே சுற்றில்!
யோகர் சொன்னார் - சுத்திச் சுத்திச் சுப்பற்ற கொல்லை எண்டு!
ஏதெனும் கதைச்சு சனத்துக்கு ஒரு முடிவைச் சொல்லுங்கப்பா!
மேல இருக்கிறவன் ஒருநாளும் வரமாட்டான்! அவன் வருவதற்கு எத்தனையோ பேர் எத்தனையோ சொன்னாங்க!
அறம் செய விரும்பு!
இணக்கம் அறிந்து இணங்கு!
கூடிப் பிரியேல்
கொள்ளை விரும்பேல்!
போர்த் தொழில் புரியேல்!
மூர்க்கரோடு இணங்கேல்!
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்!
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்!
இன்னும் நிறையக் கிடக்கு எழுதிக் கொண்டே போகலாம்
எல்லாம் படிச்சு முடிக்க முதல் மழை வந்து அழிக்கப்போகுது!
அதுக்கு முதல் ஏதாவது செய்யலாமே!.........யோசிக்க கொஞ்சம் நேரம் வேணும்!
அது சரி இப்ப எங்க பேசீனம்! என்ன பேசீனம்! தெரியுமோ?
உவங்கள் சொல்லுற மாதிரி சூரிச்சில இல்லையாம்! எங்கேயோ கன்டோன் துர்க்காவாம்!
இதுவும் கோரமான வடிவம்போல இருக்கோ!
எங்கயோ டீசன்கோபனாம்!(Diessenhofen)
சுவிற்சர்லாந்தின் பிரசித்தி பெற்ற நதிகளில் ஒன்றான றைன்(Rhein) நதிக்கரை ஓரத்திலமைந்த எழில்கொஞ்சும் அமைதியான இடமொன்றில்!
விரிவான செய்திகளுக்கு!
http://www.tamilnewsnetwork.com/tamilnewsnetwork.com/post/2009/11/19/Tamil-Muslim-political-parties-find-their-table-in-Zurich.aspx
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=30642
http://srilankawatch.com/index.php?option=com_content&task=view&id=393&Itemid=2
http://www.lankatimes.com/fullstory.php?id=22940
http://beta.thehindu.com/news/international/article52467.ece
Thursday, July 23, 2009
இலங்கையரில் எத்தனைபேருக்கு இது தெரியும்? 2 தடவைகளுக்கு மேல் மாற்றஞ் செய்யப்பட்ட தேசியக்கொடி!



இலங்கை சுதந்திரமடைந்தது 4-2-1948ல். அப்போது நாட்டின் தேசியக் கொடி கண்டி அரசனின் சிங்கக்கொடி. சிறுபான்மையினத்தவர்களின் பெரும்போராட்ட எதிர்ப்புக்களின் பின்னர் 1952இல் மாற்றப்பட்ட கொடியும் 1972ல் சிறு மாற்றத்திற்குள்ளானது! எத்தனைபேருக்கு இது தெரியும்? இதனால்தான் பலரும் இன்றுவரை இக்கொடியை ஒட்டுக்கொடி என்பதுடன் ஏற்றுக்கொள்ளவும் மறுத்து வருகிறார்கள்.
இது போல நிறைய விசயங்கள் இருக்கு! அப்பப்ப தர முயற்சிக்கிறேன். சரியா!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அரசியல்,
இலங்கை,
தேசியக் கொடி
Sunday, July 12, 2009
நாளை 13-07-2009 ஈழத் தமிழரின் ஒப்பற்ற தலைவர் அமரத்துவமடைந்த அ. அமிர்தலிங்கம் அவர்களின் 20ஆவது நினைவு தினம்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அன்றைய செயலாளர் நாயகமும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அ.அமிர்தலிங்கம் அவர்களும், முன்னைநாள் யாழ் யாழ்ப்பாணத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. வி. யோகேஸ்வரன் அவர்களும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 20ஆவது நினைவு தினத்தில் அவர்களுடைய அப்பழுக்கற்ற பொதுச் சேவையையும் - மனிதாபிமான நடவடிக்கைகளையும் மனித நேயமுடைய நாம் மீட்டுப் பார்ப்பது இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் அவசியமானதாகவும் ஒரு பாடமானதாகவும் அமைகிறது!

ஈழத்தமிழ்ப் பேசும் மக்கள் வரலாற்றில் மட்டுமல்ல அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவரை நயவஞ்சமாகப் பேச்சுக்கு வருகிறோம் என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தபொழுதே சுட்டுக்கொன்ற பாவமும் பழியும் தான் மக்களின் அவல வாழ்க்கைக்கு காரணம் என்று நான் சொல்வதில் எவ்வளவு பேர் இதை ஏற்றுக் கொள்வார்களோ? நானறியேன்.
தனியான தமது பாதுகாப்பில் கவனம் செலுத்திய அவர்களால் பொதுமக்களைக் காப்பாற்ற முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. அறிவிருந்திருந்தால் தாம் மட்டும் சண்டையிட்டிருக்கலாம். ஆனால் பொதுமக்களையும் தம்முடன் சேர்த்து பயணக் கைதிகளாக அம்மக்களை வருத்தியது ஒருபோதும் மன்னிக்கப்பட முடியாத குற்றமென்றே என் மனம் பகருகிறது. இந்நிலையில் மக்களின் நலனில் மாத்திரம் எப்போதும் அக்கறைகொண்டிருந்த தலைவர்களின் நினைவும் இவர்களின் பாதகமான செயல்களும் இன்றைய நிலையில் மீட்டுப்பகார்க்க வேண்டியதான ஒரு கட்டாயமாகிறது. இதே மாதம் நினைவுபடுத்தப்படவுள்ள (எதிர்வரும் 29இல்) கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களால் எழுதப்பட்ட Political Diary என்ற கட்டுரையை இன்றைய நினைவில் நான் சமர்ப்பிக்கின்றேன்.
Political Diary – Dr. Neelan Tiruchelvam
Mr. Appapillai Amirthalingam’s tragic assassination represents the end of an era in the Political history of the Tamil speaking people. Amirthalingam assumed the mantle of the political leadership on the demise of the late Mr. S J V Chelvanayagam, who was his political mentor, Spiritual and intellectual guru. He was the natural successor of Mr, Chelvanayagam, because of his extraordinary talent as a party organizer and as a brilliant speaker.
As an orator he had few equals within the Parliamentary arena, both in Tamil and in English. Susan Ram writing in the Frontline, recently pointed out that there was hardly a word that was out of place when he spoke he had an exceptional command of the language, and the ability to marshal complex details, and to present his arguments with clarity. The speech that he delivered at the inauguration of the new parliamentary complex at the Sri Jayewardanapura was brilliant in its delivery and content. Mr. Thondaman remarked to me that the entire House was spellbound by the sheer force of his eloquence.
Amirthalingam displayed extraordinary energy as a political campaigner and a party organizer. He could address a dozen meetings, going in to the late hours of the night and yet retain the vibrancy of his voice. There was a chemistry between him and his audience. He was able to electrify his listeners with his eloquence, and he was in turn catalyzed and energized by their enthusiasm.
He had an extraordinary memory unparalleled in the political history of this country. He could remember events, personalities, incidents spanning more than 4 decades, and recall every detail with accuracy.
Since party records have been destroyed, he remained a vital link with the past the embodiment of the collective memory of the community.
He was kind, generous and accessible even to the humblest. He dedicated his life to politics, mastering every aspect of the political process. His parliamentary career during the last 6 months required him to play a role which is diametrically different from that he had played earlier. He was the sole arena. Mr. Anura Bandaranayake, former Leader of the Opposition once remarked to me that Tamil parliamentarians during the period 1977 to 1983 had more talent, intellectual capacity and debating ability than the UNP and SLFP combined.
It was generous tribute by someone who fundamentally disagreed with the politics of the TULF, the burden of upholding this parliamentary tradition fell squarely on the shoulders of Amirthalingam. He had to discharge this function at a time when the Tamil public opinion seemed so deeply divided on the fundamental issues which affected the community. He was listened to attentively by both sides of the House, as an elder statesman, a brilliant parliamentarian. No tribute to Mr. Amirthalingam could be complete without reference to the close and intimate relationship between him and his wife Mangayarkarasi. This was a political partnership similer to the partnership between Sydney and Beatrice. Web, the Fabian Socialists of the United Kingdom. She was in the midst of every political struggle, and election campaign, and was interested for months at Panagoda. Amirthalingam and Mangayarkarasi were inseparable and complimented each other in every respect. She was as effective as an orator, an indefatigable campaigner. I vividly recall that in the immediate aftermath of July 1983, I had to stay with them at their Moolai residence and discuss a statement that had to be prepared on the July events. After we had drafted the statement Mr. and Mrs. Amirthalingam preceded hand-in-hand to the garden of their house for their usual evening walk – a practice they continued for years. It was a image of marital harmony, and togetherness that is deeply etched in my memory.
His voice has been stilled. Even hundreds of tapes of his speeches over the years were unfortunately destroyed, A community which does not value its unique and rich history, cannot preserve its identity. The murder of Amirthalingam culminates a process of ethnic fratricide – now entering the phase of self-destruction of the Tamil community.
Mr. Vettivelu Yogeswaran was a politician with enormous personal charm. As a parliamentarian he set public standards which others found impossible to emulate. Whenever his constituents come to Colombo, he would personally accompany them to Governments departments, arrange for them to have a bath at Sravasthi, and provide them with a dinner parcel for their return journey to Jaffna. There was no request however trivial that he did not respond to with utmost concern. His charisma was an unique one. He had such a pleasant and attractive disposition, that in 1977 he was the symbol of the rising aspirations of a new generation.
One of the important tasks performed by Yogeswaran, during the period 1977 to 1983 was to meet foreign journalists and to brief them on the ethnic conflict. He did this with great skill. He entertained them generously at his personal account, and developed enduring friendships. One such person was Mark Tully of the BBC, perhaps the most influential and best known foreign journalist in the whole of South Asia. Mark held Yogeswaran in high esteem and never failed to contact him during his visits to Sri Lanka. While in India, Yogeswaran also forged a strong link with every shade of political opinion in India. He had no life other than of Politics and of service to his community. He cared for his people deeply and in this regard, was ably assisted by his wife. She was devoted to him and attended to his every need during the difficult days of his recent heart aliment.
Yogeswaran lost his home, his vehicle, his Parliamentary seat and ultimately his life, for a cause which he believed was larger and more important than that of a single individual.
இது அ. அமிர்தலிங்கம் அவர்களின் பவள விழா நினைவாக வெளியிடப்பட்ட வரலாற்றின் மனிதன் என்ற நூலிலிருந்த பெறப்பட்டது.
என்னால் 10ஆவது ஆண்டு நினைவில் எழுதப்பட்ட ஒரு பத்திரிகைச் செய்தியையும் பதிவுக்காக இங்கு இணைக்கின்றேன்.
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அரசியல்,
தலைவர் அமிர்,
தலைவர்கள்,
வரலாறு
அமிரின் மரணமும் ஒரு வரலாறு - இந்து உதவி ஆசிரியர் திரு. ஆர் நடராஜன்
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அரசியல்,
செய்திகள்,
தலைவர் அமிர்,
வரலாறு
Sunday, June 21, 2009
யாழ் மாநகர சபை வரலாற்றின் சில நினைவுகள்!
மாநகர சபை உறுப்பினராக இருந்தபோது(1998 - 2003) இடம்பெற்ற சில முக்கிய நிகழ்வுகள் - என்னால் அல்லது நாம் சிலர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.















நன்றி - உதயன், வீரகேசரி, தினக்குரல், தினகரன்















நன்றி - உதயன், வீரகேசரி, தினக்குரல், தினகரன்
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அரசியல்,
நினைவுகள்,
யாழ் மாநகர சபை
Saturday, June 20, 2009
எனது (சில) கடிதங்களுக்கான பதில்கள்
எனது (சில) கடிதங்களுக்கான பதில்கள் என்ற இத்தொகுப்பில் என்னால் பல வருடங்களுக்கு முன்னர் மனிதாபிமான அடிப்படையில் எழுதப்பட்ட பலவற்றுக்கு பதில் கிடைக்காவிட்டாலும் ஒரு சிலகடிதங்களுக்கு வந்த பதில்களை இங்கு நான் - ஆவணப்படுத்துவதற்காகவும் தகவலுக்காகவும் பதிவிடுகிறேன்.
அனுராதபுரம் விவோகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் நான் 1975 தொடக்கம் 1977 இனக்கலவரம் வரை படித்தேன். அந்தப் பாடசாலையை அருகிலிருந்த சாஹிராக் கல்லூரியுடன் இணைக்க எடுத்த முயற்சிகளுக்கு என்னால் பழைய மாணவன் என்ற முறையில் முடிந்தவரை அன்று அதிபராயிருந்த ஜனாப் ஜெ. ஜூனைட் அவர்களுடன் இணைந்து தனியாக இயங்க என்னால் முடிந்ததைச் செய்தேன். இப்பொழுதும் மிகக் குறைந்தளவு மாணவர்களுடன் தனித்து இயங்கும் இப்பாடசாலையின் நிலை மிகவும் சோதனையில்தான் உள்ளது.




சித்தன்கேணியில் நடைபெற்ற விமானத்தாக்குதல்பற்றி எழுதியது.


யாழ்ப்பாணம் செல்லும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சகைள் பற்றியது


அனுராதபுரம் விவோகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் நான் 1975 தொடக்கம் 1977 இனக்கலவரம் வரை படித்தேன். அந்தப் பாடசாலையை அருகிலிருந்த சாஹிராக் கல்லூரியுடன் இணைக்க எடுத்த முயற்சிகளுக்கு என்னால் பழைய மாணவன் என்ற முறையில் முடிந்தவரை அன்று அதிபராயிருந்த ஜனாப் ஜெ. ஜூனைட் அவர்களுடன் இணைந்து தனியாக இயங்க என்னால் முடிந்ததைச் செய்தேன். இப்பொழுதும் மிகக் குறைந்தளவு மாணவர்களுடன் தனித்து இயங்கும் இப்பாடசாலையின் நிலை மிகவும் சோதனையில்தான் உள்ளது.




சித்தன்கேணியில் நடைபெற்ற விமானத்தாக்குதல்பற்றி எழுதியது.


யாழ்ப்பாணம் செல்லும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சகைள் பற்றியது


அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அரசியல்,
அனுராதபுரம் விவேகானந்தா,
கடிதங்கள்
Tuesday, June 16, 2009
நியாயமான ரீதியில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டுமானால் முஸ்லீம்களை முதலில் குடியமர்த்துவதே - முதற்பணி!
நியாயமான ரீதியில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டிய கட்டாயக் கடமை இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லீம்களை குடியமர்த்துவதே! அதன்பின்னரே ஏனைய மீள்குடியேற்றங்கள்! யார் இதனை ஏற்கப் போகின்றார்கள்?
நான் நியாயமாகச் சிந்திப்பவன். எமது கட்சியின் பெருந்தலைவர் அமரர் திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் தன்னுடைய இறுதிக் காலத்திலும்சரி - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டிலும் சரி சொன்ன வாக்கிறகு அமையவே எனது இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றேன். 1990களில் துரத்தப்பட்ட யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான முஸ்லிம் அப்பாவிப் பொதுமக்களையும் ஏனைய வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களையும் மீளக் குடியமர்த்துவதன் மூலமே தமிழினத்திற்கு ஏற்பட்ட பாவமும் பழியும் நீங்கும் - அதன் பின்னரே ஏகப் பிரதிநிதிகளின் குடிமக்களை மீளக் குடியமர்த்த வேண்டும். இதனை நான் பல நாட்களாகவே தெரிவித்துவருகின்றேன். தெரிந்தோ தெரியாமலோ – விரும்பியோ விரும்பாமலோ நாம் இத்தனை நாட்களாகச் செய்த பாவத்தின் சுமைகளை பூரணமாகத் துடைத்தெறிய வேண்டுமாயிருந்தால் இந்த நியாயமான கோரிக்கையைச் செயற்படுத்துவதன் மூலம்தான் ஒரு இயல்பான சு10ழலை உருவாக்கமுடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்பெற்றவுடனேயே திரு. இமாம் அவர்களுக்கும் இதுபற்றிய ஒரு கடிதத்தை நான் எழுதியிருந்ததையும் அவருடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியவன் என்ற வகையிலும் இதைத் தெரிவிக்கவேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது.
காத்தான்குடியில் தொழுகையிலிருந்தபோதும் - மக்காவிலிருந்து திரும்பிவந்த யாத்திரிகள் மீதும் தாக்கதல்களை மேற்கொண்டு கொன்றொழித்தமையை நான் வன்மையாகக் கண்டித்து வெளியிட்ட பத்திரிகைச் செய்திகளை ஏனோ நம்தமிழ்ப் பத்திரிகைகள் பிரசுரிக்காமல் மறைத்தன. காலத்தின் தேவைகருதி எனது பதிவிலுள்ள அவற்றை மீண்டும் இப்பதிவில் சேர்க்க விரும்புகிறேன். ஒருசில கட்டுரையாளர்கள் இன்று வீணான குற்றச் சாட்டுக்களை அப்பாவித் தமிழ்மக்கள்மீது சுமத்துவது அநாகரீகமான செயலாகும். தமிழ் மக்கள் சாப்பிடுவதற்கு மாத்திரமே வாய் திறக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில்தான் இப்போதும் இருக்கிறார்கள். அரச அச்சுறுத்தல்கள் ஒருபுறம் - ஆயுதம் தரித்த நம்மவர்களின் கெடுபிடிகள் மறுபுறமென அவர்களின் நிலை மத்தளத்தின் நிலையைவிட மோசமானது. மத்தளமாவது இருபக்கம் தான் தட்டமுடியும். ஆனால் தமிழ்மக்கள் மீது பலமுனைகளில் தட்டுதல்கள் - குட்டுதல்கள் - சுரண்டுதல்கள் போன்ற பலவகையான கொடுமைகள் இன்றும் சு10ழ்ந்துள்ள நிலையில் - அவர்களால் பேசக் கூடத் திராணியற்ற நிலையில் தம்மை முதலில் ஆசுவாசப் படுத்திய பின்னர் அவர்கள் தம் நிலை குறித்து விளக்கமளிப்பார்கள் என்ற நம்பிக்கை – அவர்களில் ஒருவன் என்ற நிலையில் இருக்கும் என்னால் திடமாக குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.
குட்டக்குட்ட குனிகிறவனும் மடையன் - குட்டுகிறவனும் மடையன் என்ற பழமொழியை நினைவுபடுத்தி இக்குறிப்பை முடிக்கின்றேன்.
-------------
கலியுகத்தில் அன்பும் சமாதானமும் நிலைக்குமா?
கலியுகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமா? என்ற வினா இன்று அனைவரது சிந்தனையிலும் உதிக்கும் ஒரு எண்ணமாக இருப்பினும் - சாத்தியப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டள்ளது.
எதிரில் வருபவனைச் சந்தேகிக்கும் இன்றைய சூழ்நிலையில் தனிப்பட்ட ஒவ்வொருவரும் சமாதானத்தை விரும்புபவர்களா? என்றால் அதற்கு சரியான விடை பெற முடியாது. காரணம் விலங்கினத்தைக் காட்டிலும் மனிதன் கீழ்நிலையில் இருப்பதே.
கடந்த காலங்களில் உலகளாவிய ரீதியில் சரி, இலங்கையில் சரி, பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டு வருவதை நாம் காணத் தக்கதாக இருக்கிறது. ஒன்றுபட்டிருந்த சமூகங்கள் பிளவுபடுகின்றன. சாதாரண குடிசையிலிருந்து வளர்ந்த நாடுகள் வரை உலகம் முழுவதும் ஒற்றுமையின்மை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையில் சுதந்திரமடைந்த பின்னர் தமிழர் சிங்களவர் பிரச்சனைதான் தோன்றியது. அதன் பின்னர் இன்று தமிழர்கள் ஒற்றமையின்றி - முஸ்லிம்கள் - யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டக்களப்புத் தமிழர்கள் மலைநாட்டுத் தமிழர்கள் என்று பலவகையில் பிரிந்து பட்டு நிற்கிறார்கள்.
அரசியல் நெறி மிகவும் புனிதமான மக்கள் சேவை என்பதை மகாத்மா காந்தி காட்டியுள்ளார். எனினும் எமது நாட்டில் பெரும்பான்மை அரசியற்கட்சிகளின் குறுகிய எண்ணமும் மக்களை சமநோக்காக எண்ணாது விட்ட செயலும் இன்று இந்நாட்டில் பூதாகரமாக வளர்ந்துவிட்ட பிரச்சனைகளுக்கு அடிப்படையான காரணமெனலாம். ஒன்றுபட்டிருந்த தமிழர்களும் முஸ்லிம்களும் இன்ற தனித்து இயங்க விரும்புவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையின் பின் மலையகத் தமிழர்கள் - வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் மத்தியில் விரிசல் காணப்படுகிறது. வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தமது சொத்துக்களனைத்தையும் விட்டுவிட்டு அகதிகளாக நாட்டின் இதரபிரதேசங்களில் மிகவும் மோசமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆணவம் இவ்வனைத்துக்கும் காரணம் என்றால் பிழையில்லை. படித்துப் பட்டம் பெற்று வசதிபடைத்த தமிழர்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்கள் அன்று தோட்டக்காட்டான் கள்ளத்தோணி மோட்டுச் சிங்களவன் என்றெல்லாம் பேசி ஏளனம் செய்ததை மறந்தவிடக் கூடாது.
தன் வினை தன்னைச் சுடும் என்ற பட்டினத்தாரின் வாக்குப் பொய்த்தாவிடும்? பூமியிலிருந்து மேலே எறியும் பந்து எப்படி மீண்டும் தரையை அடைகிறதோ அதேபோல வசைபாடி மற்றவர் மனதைப் புண்படுத்தியவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
குறிப்பாக 1983ம் ஆண்டுக்குப் பின்னர் தலைதூக்கத் தொடங்கிய தமிழர் இயக்கங்கள் ஒற்றுமையின்மையை மேலும் வலுப்படுத்த ஏதுவாக அமைந்தன. ஒன்று பிரிந்து இரண்டாகி அது மூன்றாகி பின் அவை தமக்குள் பலவாகி எண்ணற்றவையாக இருக்கின்றன.
உயிர்களைப் படைத்தவனிருக்கத் தக்கதாக பறிப்பதற்குப் பலர் போராடுகின்றார்கள். சிங்கள அரசாங்கத்தின் படைகளாக இருந்தாலும் சரி, தமிழ் இயக்கங்களாக இருந்தாலும் சரி அனைத்துமே தர்மத்தை நீதியை அன்பை சமாதானத்தை இல்லாமல் செய்தன. கௌதம புத்தரின் அகிம்சையைக் கைக்கொள்ள வேண்டிய அரசு அப்பாவி மக்களை அழித்து அவர்களின் உடைமைகளை நாசப்படுத்தியது. அன்பை அடிப்படையாகக் கொண்ட சமயங்களின் போதனை முறைகளை மீறி அனைவருமே பாவச்செயல்களைப் புரிந்தது ஒன்றே இன்று இந்நாட்டில் அப்பாவித் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் கொல்லப்பட ஏதுவாக அமைந்தன.
இவை நிறுத்தப்பட்டு சமாதான எண்ணமும் அன்பும் ஒற்றுமையும் கொண்ட ஒரு சமூகத்தை எவ்வாறு தோற்றுவிக்கலாம் என்ற முயற்சியை நாம் அனைவரும் எமது குறிக்கோளாக எடுத்து தன்னலமற்றுப் பணிபுரிந்தால் நிச்சயம் வெற்றி உண்டாகும்.
இதைத்தான் யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் தமது நற்சிந்தனைப் பாடல்களில் தெரிவித்துள்ளார்.
தன்னைப் போல சகலமும் ஓம்புக
விண்ணைப் பொல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை என்று கூறுகிறார்.
இதனையே கவியோகி சுத்தானந்த பாரதியாரும்
தான் தான் திருந்தச் சமூகந் திருந்தும்
மாந்தரைத் திருத்துமுன் மனதைத் திருத்து எனவும்
உலகைப் படைத்தோன் உலகைத் திருத்துவான்
பலவாறுன்னைப் பார்த்துத் திருத்து எனவும் செப்பியுள்ளார்.
ஆன்றோர் எமக்கருளிய நெறி – மிகமிகப் பயனுள்ளது. ஆணவச் செருக்கால் அழிந்து கொண்டு இருக்கிறோம்.
உண்மை அன்பால் உலகை வென்று ஒற்றுமை ஏற்பட உறுதி கொள்வோம்.
மூளாய் முகுந்தன்.
----------
பௌத்த தர்மம் என்ன சொல்கிறது? அல்லது மனிதாபிமானம் எங்கே?
(இக்கட்டுரை பத்திரிகைச் செய்தியாக 01.08.1990ல் எழுதப்பட்டது. 18 வருடங்களின் பின்னும் இன்று நடக்கும் பிரச்சனைகளுக்கும் இது பொருந்தும் - யாரும் அப்பாவிப் பொதுமக்களைப் பற்றியோ அல்லது அவர்களது உடைமைகளைப் பற்றியோ சிந்திப்பதாகத் தெரியவில்லை.)
பௌத்த சமயம் புத்தபெருமான் என்று மார்தட்டும் எமது இலங்கை அரசுக்கு இந்திய துணைப்பிரதமர் அவர்கள் பௌத்த தர்மத்தை – தத்துவத்தை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டது குறித்து இலங்தையைப் பிறப்பிடமாகவும் தாய்நாடாகவும் கொண்ட நாம் வெட்கமடைகின்றோம். பிணி - மூப்பு - சாக்காடு என்ற 3 காரணங்களினால் தனது அரண்மனை வாழ்க்கையையும் இல்லறத்தையும் துறந்து அன்பையும் தருமத்தையும் அகிம்சையையும் போதித்தார்.
எமது நாட்டில் ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பிரச்சனை சிறிய அளவில் உருவாக்கப்பட்டு தற்போது பூதாகரமான நிலையில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தியதோடு தொடர்ந்தும் அழிவுகளைக் கண்டும் காணாததுபோல இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக இச்செய்தியைத் தெரிவிக்கினறோம்.
இம்சையைக் கண்டும் அதை எதிர்க்க முடியாதிருக்கும் மனித சமூகத்தின் மத்தியில் எத்தனை சமூக சமய அமைப்புக்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் பொது அமைப்பாக இருப்பதன் காரணத்தை நாம் வினவுகின்றோம்.
சமயங்கள் யாவும் உயிர்களிடத்தில் அன்பை வளர்க்கும் பொருட்டே அடிப்படையில் போதனை செய்கின்றன. அகிம்சைக்கு உதாரணபுருஷராகிய அண்ணல் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை நாம் உற்று நோக்க வேண்டும். இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் போராடிய அம் மகாத்மாவை எப்பொழுது ஒரு இந்து சுட்டுக்கொலை செய்தானோ அன்றே இந்துக்களுக்கான பழி ஏற்பட்டு எமது நாட்டிலும் அது தொடர வழிவகை செய்கின்றது. தமிழ் முஸ்லீம்களுக்கிடையே ஒற்றுமை நிலவிய எமது தேசத்தில் இன்று இந்த உறவு கேள்விக்குறியாக இருக்கிறது. காரணம் போராளி இயக்கங்கள் செய்த மனிதாபிமானமற்ற கொலைகளே. எந்த உயிரையும் கொலை செய்வதற்கோ அல்லது துன்புறுத்துவதற்கோ எவருக்கும் அதிகாரம் இல்லை.
எமது நாட்டில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மனிதாபிமானமற்ற முறையில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து நாம் உள்ளுக்குள்ளே குமுறியபடி இருந்தோம். இன்று பொறுத்திருக்க முடியாது எமது எதிர்ப்பைப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
1949ம் ஆண்டு மலையக மக்களுடைய குடியுரிமை பறித்தமை 1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்தமை அதனைத்தொடர்ந்து வந்த சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப்போராட்டம் 1972ல் தரப்படுத்தல் போன்றவை ஆட்சியாளர்களின் தவறான சிந்தனையாலும் போக்காலும் ஏற்படுத்தப்பட்டது எனலாம்.
இவை அனைத்தும் ஒருவகையில் இனப்பிரச்சனைக்கு முக்கிய காரணிகளாக அமையும். 1977ன் பின் நாடளாவிய ரீதியில் இனப்பிரச்சனை ஆரம்பமாகியது. ஏராளமான மக்கள் குறிப்பாக தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள். உயிருடன் எரிக்கப்பட்டார்கள். அகதிகளாக்கப்பட்டார்கள்.
1981ல் யாழ்ப்பாணத்தில் பொது நூல்நிலையம் ஏராளமான கடைகள் வீடுகள் போன்றவை அரச படைகளின் உதவியோடு காட்டுமிராண்டித்தனமானவர்களால் எரிக்கப்பட்டன. கொலைகளும் கொள்ளைகளும் தாராளமாக இடம்பெற்றது. வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் முதன்முதல் பாரிய அளவில் அரச படைகளால் தாக்கப்பட்டதைத்தொடர்ந்து மீண்டும் இன்றுவரை தொடர்ச்சியாக அரச படைகளினாலும் 1985க்குப் பின்னர் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டங்களினாலும் மக்கள் சொல்லொணாத துயரங்களை அனுபவித்து வந்தார்கள். வருகிறார்கள்.
ஒன்றுபட்டிருந்த சமூகம் இன்று சின்னாபின்னமாகி ஒற்றுமையின்றி அல்லல்படுவதை எண்ணி ஏங்குவதைத்தவிர ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நாமிருக்கின்றோம்.
1983, 1984ம் ஆண்டுகளில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்களை வன்மையாகத் தாக்கித் திரிந்தவர்கள் இன்றுவரை பேசிய பேச்சுவார்த்தைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எங்கள் மத்தியில் எத்தனை கட்சிகள் இயக்கங்கள் இன்று இருந்தும் மக்களைக் காக்க எவரும் யுத்தத்தை நிறுத்தும்படி கேட்கவில்லை. தாம் தாம் சுயலாபம் தேடுவதிலேயே காலத்தை ஓட்டுகின்றார்கள்.
யுத்தம் நடைபெறும்பொழுது எத்தனையோ விதிமுறைகள் இருந்தும் அனைத்தையும் மீறிய நிலையில் சண்டை புரிகின்றார்கள். கண்டது உயிரழிவும் உடமை இழப்புக்களுமே அன்றி வேறெதுவும் இல்லை. தாம்தாம் சண்டை செய்தாலும் பரவாயில்லை. அப்பாவிப் பொதுமக்கள் பெரியோர் மதகுருமார்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரும் கொல்லப்படுவது வேதனைக்குரியதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதுமாகும்.
தமிழர்களை அரசபடைகள் வல்வெட்டித்துறை அரியாலை குமுதினிப்படகு போன்றவற்றில் கொலை செய்தபோதும் வெலிக்கடைச் சிறைகளில் தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டபோதும் இவற்றால் கொதித்தெழுந்த எமது உணர்வுகள் இன்று எம்மவர்களாலேயே நடைபெறும் கொலைகளின்போது மௌனமாக்கப்படுவதுகண்டு வேதனையும் வெட்கமும் அடைகின்றோம். காரணம் எம்மிடையே காணப்படும் சுயநலம்.
அப்பாவி முஸ்லிம் மக்கள் தமிழர் போராட்டங்களில் முழுமூச்சாக ஈடுபட்டவர்கள் இன்று யாத்திரை சென்று மீண்டபோது அவர்களில் சிலரும், அவர்களுடைய உறவினர்களும் கொடுமையான முறையில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டமை குறித்து நாம் எமது பூரணமான கடும் எதிர்ப்பை இன்று தெரிவிக்கின்றோம். சிங்களப் பொதுமக்களைக் கொலை செய்தமை யுத்தம் செய்ய முடியாத பலவீனத்தையே காட்டுகிறது. இதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
1974ல் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வருகைதந்தவர்களில் இன்று இலங்கைக்கு விஜயம் செய்த தமிழறிஞர் பெரும்புலவர் பேராசிரியர் டாக்டர் சீ. நயினா முகம்மது அவர்களையும் வேறு சில சிங்கள அறிஞர்களையும் இந்நேரத்தில் நாம் சுட்டிக்காட்ட ஆவலாயுள்ளோம். காரணம் இன்று பிடித்த முயலுக்கு மூன்று கால் எனப்பேசும் சிலர் - வரலாறு தெரியாதவர்கள் - அறிய வேண்டும் என்பதற்காக. 10ம் திகதி ஜனவரி மாதம் 1974ம் ஆண்டு யாழ் முற்ற வெளிமைதானத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் பேராசிரியர் நயினா முகம்மது அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஏற்பட்ட குழப்பத்தில் 9 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதையும் அன்று இச்செயலை மேற்கொண்ட அரச படையின் அட்டூழியத்தையும் கண்ணால் கண்ட ஒரு சாட்சியாக இருக்கும் பேராசிரியரின் இன்றைய வருகையின்போது அன்று ஒன்றுபட்டிருந்து தமிழ் முஸ்லிம்களின் ஒற்றுமையையும் இன்றைய பதட்டநிலையையும் எண்ணி நாம் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அன்று மாநாட்டிற்கு வருவதை எதிர்த்த சிங்கள அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி மாநாட்டில் கலந்துகொள்ள சிங்கள அறிஞர்களும் ஒரு சிலர் வந்து கலந்து கொண்டதையும் பலர் அறியமாட்டார்கள். இவை எமக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும். குறிப்பாக 1987ல் பௌத்த சமயத் தலைவர்களுடன் யாழ் விஜயம் செய்த அமரர் விஜயகுமாரணதுங்க அவர்களுடன் விடுதலைப் புலிகள் நடந்துகொண்ட விதங்கள் இவற்றை நாம் பார்க்கும்பொழுது சந்தர்ப்பவாதம் எனப்படும் பதத்தை இவர்களுக்கும் வழங்கலாம் என்றே நாம் கருத இடமுண்டு.
சகலமக்களும் இன்றைய இக்கால கட்டத்தை மிகவும் நிதானமாக அவதானித்து உற்றுநோக்குவதோடு முன்னைய வரலாறுகளையும் அறிந்து ஒப்பிட்டு மதிப்பீடு செய்யவேண்டும்.
அரசாங்கங்களைப் பொறுத்தவரை இன்று ஜனாதிபதியின் கருத்துப்படி 2000ம் ஆண்டுகளின் பின்னரும் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியும் எனக்கூறியுள்ளார். யூஎன்பி அரசாங்கத்தினால் கடந்த 13 வருடங்கள் அல்லல்பட்ட வாழ்க்கை மேற்கொண்ட அரசின் நடவடிக்கைகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். குறிப்பாக இன்றைய இனப்பிரச்சனையை அன்றே பண்டா செல்வா ஒப்பந்தம் மூலம் தீர்க்க முன்வந்தபோது இதே யுஎன்பி கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஐனாதிபதி திரு. ஜே.ஆர் ஜெயவர்த்தனா தமிழர்களுக்கு பண்டாரநாயக்கா இலங்கையைப் பிரித்துக் கொடுத்துவிட்டார் என்றுகூறி கண்டிக்குப் பாதயாத்திரை செய்ததையும் நினைவுபடுத்த வேண்டும்.
இன்று இதே அரசு இளைஞர்களின் விரக்தி நிலைகுறித்து ஆராய ஒரு விசேட ஆணைக்குழுவை நியமித்து அதன் அறிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னரும் தற்போதைய யுத்தத்தைத் தீவிரப்படுத்துவது ஏன் என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.
எமது முக்கியமான பணிவான வேண்டுகோள் சண்டை நிறுத்தப்படவேண்டும். மக்கள் கொல்லப்படுவதும் உடமைகள் அழிக்கப்படுவதும் நிறுத்தப்படவேண்டும்.
வறுமையால் பட்டினியால் வாடும் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அழிக்கப்பட்ட உடமைகளின் பெறுமானத்திற்கு அமைய நிவாரணம் வழங்கப்படவேண்டும். காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அங்கத்தவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும். மரணமடைந்தவர்களின் விபரங்களை உடனடியாக அவரவர் குடும்பத்தினருக்கு அல்லது உறவினருக்குத் தெரிவிக்க வேண்டும்.
மேற்தரப்பட்ட செய்தியை மனிதாபிமானம் கொண்ட முறையிலும் சகல சமூகங்களையும் சேர்ந்தவர்களோடு இனஒற்றுமை இன்றைய அரசியல் நிலைப்பாடு என்பன பற்றிய கருத்தரங்குகளில் பலரது அபிப்பிராயத்தையும் அறிந்தவர்கள் என்ற முறையிலும் வெளியிடுவதில் ஓரளவு அமைதி அடைகின்றோம்.
வணக்கம்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கான இளைஞர்குழு உறுப்பினரும்
இந்து சமய ஒற்றுமைப்பேரவை அமைப்பாளரும்
-----
07.08.1990
கடந்த சில நாட்களாக அப்பாவி பொதுமக்கள் குறிப்பாக சிங்கள-முஸ்லீம் இன மக்கள் மிகவும் மோசமான முறையில் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டமை குறித்த மிகவும் வேதனை அடைகின்றோம். எந்தத்தவறை அரச சிங்களப் படைகள் அன்று தமிழினத்திற்கு செய்தனவோ அதே செயலை மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், விடுதலைக்காக போராடும் வீரர்கள் என்றும், தமிழர்கள்;தான் புலிகள் - புலிகள் தான் தமிழர்கள் என்று தம்மை தாமே கூறிடும் புலிகள் இன்று இப்படி கீழ்த்தரமாகச் செய்வதன் காரணம் ஏன் எனத்தெரியவில்லை.
தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டங்களில் கூடிய பங்கேற்ற முஸ்லீம் மக்களின் உயிர்களைப்பறிக்க கங்கணம் கட்டிய புலிகளுக்கு விடுதலைவரலாறு தெரியாமல் இருக்கலாம் ஆனால் வரலாறு தெரிந்த அறிஞர்கள் பலர் முஸ்லீம் மக்களாக இருப்பதும், இன்றும் இவர்கள் இப்படியான குரோத மனப்பாங்கை வளர்த்தாலும், தமிழ் மக்களோடு கூடியே வாழவேண்டும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ள முஸ்லீம் சகோதரர்களையும் எம்மால் பகைத்துக் கொள்ளமுடியாது. அந்த எண்ணமும் எம்மத்தியில் எழாது. ஒற்றுமையே பலம் என்று இளவயதில் நாம் படித்த பள்ளிப்பாடங்கள் என்றும் எம் நெஞ்சில் நீங்காது இருக்கின்றது. அதாவது பாடசாலைக்குபோனவர்களுக்கு புரியும்.
மக்காவிற்கு யாத்திரை சென்று மீண்ட முஸ்லீம் யாத்திரிகர்களையும் அவர்களது உறவினர்களையும் கொன்று ஒழித்தவர்கள், தற்பொழுது பள்ளிவாசலுக்குள் நுழைந்து பிராத்தனையில் ஈடுபட்டிருந்தவாகள் மீது துப்பாக்கிபிரயோகம் செய்ய வைத்த மிருகத்தனத்திலும் கொடிய அரக்கச் செயலுக்கு எந்தவிதமான மன்னிப்பும் கிடையவே கிடையாது. மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்காது மரணதண்டனை வழங்கும் புலிகளுக்கு மக்கள் இனிமேலும் ஆதரவு அளிக்கமுடியாது மக்களில் பலரும் இன்று வெளிப்படையாகவே திட்டுகின்றார்கள். மட்டக்களப்பு அகதிகளில் பலர் வெளிப்படையாகவே கூறுகின்றார்கள் - இராணுவத்தினர் தாக்குவதற்கு மூலகாரணம் புலிகள் தான் என்று. மிருகங்களைக் கூட இன்று சர்க்கஸில் பழக்கி எடுத்து மிகவும் செல்லமாக வளக்கப்பட்ட அவை அன்பின் அடிமையாகி பயிற்றப்படுகின்றது. சிலவேளைகளில் எப்படி நடந்து கொள்வேண்டும் என்று பயிற்சியும் கொடுக்கப்படுகின்றது. ஆனால் ஆறாவது அறிவைப்பெற்ற மிக உன்னதமான நிலையில் இருக்கவேண்டிய மனிதன் தன்னைப்போல் மன்னுயிரை நேசிக்கவேண்டிய நிலையில் மற்றவர்களை அழித்து தான் மட்டும் வாழ மனப்பால் குடிக்கின்றான். நீதி என்ற நிலை உள்ள மட்டும் எவரும் கீழ்த்தரமான எண்ணங்களால் முன்னுக்கு வரமுடியாது: தேரினை முல்லைச் செடிக்குத் தந்த பாரி வள்ளலும் கன்றின் உயிருக்காக தன் ஒரே வாரிசை தேர்ச்சில்லில் விட்டு நசித்துக்கொன்ற மனுநீதிச்சோழ மன்னனும் புறாவின் உயிருக்காக தன்னுடைய தொடைச் சதையினை அளித்த சிபிச்சக்கரவர்த்தியும் எமது சிந்தனைகளில் வாழ்க்கையில் வாழ்ந்துவரும்போது புல்லர்களின் செயல்கள் யாவும் பூமியில் நிலைக்க முடியாது.
முஸ்லீம் சமுதாயத்தினருக்கு எமது பணிவான வேண்டுகோள் விடுதலைப்புலிகள் போல இருக்காது மனிதாபிமானம்கொண்ட நீங்கள் மக்கள் நலம்பேண புலிகளுக்கு எதிராகவுள்ள தமிழ்மக்களையும் உங்களுடன் இணைந்து நீதிக்காக குரல் எழுப்ப முன்வரவேண்டும். முஸ்லீம்களை மட்டுமல்ல தமிழ் சிங்கள அப்பாவிப் பொதுமக்கள் அறிஞர்கள் தலைவர்கள் கூட புலிகளால் கொல்லப்பட்டார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் சரியான நீதி வழங்கப்படவில்லை. இவையனைத்தையும் முஸ்லீம் சகோதரர்கள் உணர்ந்து நீண்ட காலம் அன்பில் இணைந்த நாம் இன்று கொடியவர்கள் சிலரால் பிரிக்கப்படவேண்டிய அவர்களுடைய எண்ணத்திற்கு செவிசாய்க்காது ஒற்றுமையாக இந்த சிறிய நாட்டில் அமைதியாக வாழ வேண்டிய ஒழுங்குகளை நாம் கூடி ஆராய்ந்து செயற்படவேண்டும் என சகல முஸ்லீம் சமய சமூக அமைப்புக்களுக்கு பணிவாக வேண்டி கொல்லப்பட்ட முஸ்லீம் சகோதரர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த வேதனையை தெரிவிப்பதோடு கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுவதோடு கொலை செய்வதையும் உடமைகள் நாசமாக்கப்படுவதையும் நிறுத்தும்படி தொடர்ந்து கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தெரிவிப்பதோடு இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் அரசினுடைய இயலாமையையும் கண்டனம் செய்து இவ்வறிக்கையை நிறைவு செய்கின்றோம்.
மனிதன் வாழவே சமயங்கள் வழிகாட்டுகின்றன. அந்த சமயங்களின் பெயரால் சண்டைகள் இருக்குமானால் சமயமே தேவையற்றது.
என்றும் ஒற்றுமைக்காக
இந்து சமய ஒற்றுமைப் பேரவை அமைப்பாளர்
நான் நியாயமாகச் சிந்திப்பவன். எமது கட்சியின் பெருந்தலைவர் அமரர் திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் தன்னுடைய இறுதிக் காலத்திலும்சரி - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டிலும் சரி சொன்ன வாக்கிறகு அமையவே எனது இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றேன். 1990களில் துரத்தப்பட்ட யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான முஸ்லிம் அப்பாவிப் பொதுமக்களையும் ஏனைய வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களையும் மீளக் குடியமர்த்துவதன் மூலமே தமிழினத்திற்கு ஏற்பட்ட பாவமும் பழியும் நீங்கும் - அதன் பின்னரே ஏகப் பிரதிநிதிகளின் குடிமக்களை மீளக் குடியமர்த்த வேண்டும். இதனை நான் பல நாட்களாகவே தெரிவித்துவருகின்றேன். தெரிந்தோ தெரியாமலோ – விரும்பியோ விரும்பாமலோ நாம் இத்தனை நாட்களாகச் செய்த பாவத்தின் சுமைகளை பூரணமாகத் துடைத்தெறிய வேண்டுமாயிருந்தால் இந்த நியாயமான கோரிக்கையைச் செயற்படுத்துவதன் மூலம்தான் ஒரு இயல்பான சு10ழலை உருவாக்கமுடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்பெற்றவுடனேயே திரு. இமாம் அவர்களுக்கும் இதுபற்றிய ஒரு கடிதத்தை நான் எழுதியிருந்ததையும் அவருடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியவன் என்ற வகையிலும் இதைத் தெரிவிக்கவேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது.
காத்தான்குடியில் தொழுகையிலிருந்தபோதும் - மக்காவிலிருந்து திரும்பிவந்த யாத்திரிகள் மீதும் தாக்கதல்களை மேற்கொண்டு கொன்றொழித்தமையை நான் வன்மையாகக் கண்டித்து வெளியிட்ட பத்திரிகைச் செய்திகளை ஏனோ நம்தமிழ்ப் பத்திரிகைகள் பிரசுரிக்காமல் மறைத்தன. காலத்தின் தேவைகருதி எனது பதிவிலுள்ள அவற்றை மீண்டும் இப்பதிவில் சேர்க்க விரும்புகிறேன். ஒருசில கட்டுரையாளர்கள் இன்று வீணான குற்றச் சாட்டுக்களை அப்பாவித் தமிழ்மக்கள்மீது சுமத்துவது அநாகரீகமான செயலாகும். தமிழ் மக்கள் சாப்பிடுவதற்கு மாத்திரமே வாய் திறக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில்தான் இப்போதும் இருக்கிறார்கள். அரச அச்சுறுத்தல்கள் ஒருபுறம் - ஆயுதம் தரித்த நம்மவர்களின் கெடுபிடிகள் மறுபுறமென அவர்களின் நிலை மத்தளத்தின் நிலையைவிட மோசமானது. மத்தளமாவது இருபக்கம் தான் தட்டமுடியும். ஆனால் தமிழ்மக்கள் மீது பலமுனைகளில் தட்டுதல்கள் - குட்டுதல்கள் - சுரண்டுதல்கள் போன்ற பலவகையான கொடுமைகள் இன்றும் சு10ழ்ந்துள்ள நிலையில் - அவர்களால் பேசக் கூடத் திராணியற்ற நிலையில் தம்மை முதலில் ஆசுவாசப் படுத்திய பின்னர் அவர்கள் தம் நிலை குறித்து விளக்கமளிப்பார்கள் என்ற நம்பிக்கை – அவர்களில் ஒருவன் என்ற நிலையில் இருக்கும் என்னால் திடமாக குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.
குட்டக்குட்ட குனிகிறவனும் மடையன் - குட்டுகிறவனும் மடையன் என்ற பழமொழியை நினைவுபடுத்தி இக்குறிப்பை முடிக்கின்றேன்.
-------------
கலியுகத்தில் அன்பும் சமாதானமும் நிலைக்குமா?
கலியுகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமா? என்ற வினா இன்று அனைவரது சிந்தனையிலும் உதிக்கும் ஒரு எண்ணமாக இருப்பினும் - சாத்தியப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டள்ளது.
எதிரில் வருபவனைச் சந்தேகிக்கும் இன்றைய சூழ்நிலையில் தனிப்பட்ட ஒவ்வொருவரும் சமாதானத்தை விரும்புபவர்களா? என்றால் அதற்கு சரியான விடை பெற முடியாது. காரணம் விலங்கினத்தைக் காட்டிலும் மனிதன் கீழ்நிலையில் இருப்பதே.
கடந்த காலங்களில் உலகளாவிய ரீதியில் சரி, இலங்கையில் சரி, பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டு வருவதை நாம் காணத் தக்கதாக இருக்கிறது. ஒன்றுபட்டிருந்த சமூகங்கள் பிளவுபடுகின்றன. சாதாரண குடிசையிலிருந்து வளர்ந்த நாடுகள் வரை உலகம் முழுவதும் ஒற்றுமையின்மை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையில் சுதந்திரமடைந்த பின்னர் தமிழர் சிங்களவர் பிரச்சனைதான் தோன்றியது. அதன் பின்னர் இன்று தமிழர்கள் ஒற்றமையின்றி - முஸ்லிம்கள் - யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டக்களப்புத் தமிழர்கள் மலைநாட்டுத் தமிழர்கள் என்று பலவகையில் பிரிந்து பட்டு நிற்கிறார்கள்.
அரசியல் நெறி மிகவும் புனிதமான மக்கள் சேவை என்பதை மகாத்மா காந்தி காட்டியுள்ளார். எனினும் எமது நாட்டில் பெரும்பான்மை அரசியற்கட்சிகளின் குறுகிய எண்ணமும் மக்களை சமநோக்காக எண்ணாது விட்ட செயலும் இன்று இந்நாட்டில் பூதாகரமாக வளர்ந்துவிட்ட பிரச்சனைகளுக்கு அடிப்படையான காரணமெனலாம். ஒன்றுபட்டிருந்த தமிழர்களும் முஸ்லிம்களும் இன்ற தனித்து இயங்க விரும்புவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையின் பின் மலையகத் தமிழர்கள் - வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் மத்தியில் விரிசல் காணப்படுகிறது. வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தமது சொத்துக்களனைத்தையும் விட்டுவிட்டு அகதிகளாக நாட்டின் இதரபிரதேசங்களில் மிகவும் மோசமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆணவம் இவ்வனைத்துக்கும் காரணம் என்றால் பிழையில்லை. படித்துப் பட்டம் பெற்று வசதிபடைத்த தமிழர்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்கள் அன்று தோட்டக்காட்டான் கள்ளத்தோணி மோட்டுச் சிங்களவன் என்றெல்லாம் பேசி ஏளனம் செய்ததை மறந்தவிடக் கூடாது.
தன் வினை தன்னைச் சுடும் என்ற பட்டினத்தாரின் வாக்குப் பொய்த்தாவிடும்? பூமியிலிருந்து மேலே எறியும் பந்து எப்படி மீண்டும் தரையை அடைகிறதோ அதேபோல வசைபாடி மற்றவர் மனதைப் புண்படுத்தியவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
குறிப்பாக 1983ம் ஆண்டுக்குப் பின்னர் தலைதூக்கத் தொடங்கிய தமிழர் இயக்கங்கள் ஒற்றுமையின்மையை மேலும் வலுப்படுத்த ஏதுவாக அமைந்தன. ஒன்று பிரிந்து இரண்டாகி அது மூன்றாகி பின் அவை தமக்குள் பலவாகி எண்ணற்றவையாக இருக்கின்றன.
உயிர்களைப் படைத்தவனிருக்கத் தக்கதாக பறிப்பதற்குப் பலர் போராடுகின்றார்கள். சிங்கள அரசாங்கத்தின் படைகளாக இருந்தாலும் சரி, தமிழ் இயக்கங்களாக இருந்தாலும் சரி அனைத்துமே தர்மத்தை நீதியை அன்பை சமாதானத்தை இல்லாமல் செய்தன. கௌதம புத்தரின் அகிம்சையைக் கைக்கொள்ள வேண்டிய அரசு அப்பாவி மக்களை அழித்து அவர்களின் உடைமைகளை நாசப்படுத்தியது. அன்பை அடிப்படையாகக் கொண்ட சமயங்களின் போதனை முறைகளை மீறி அனைவருமே பாவச்செயல்களைப் புரிந்தது ஒன்றே இன்று இந்நாட்டில் அப்பாவித் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் கொல்லப்பட ஏதுவாக அமைந்தன.
இவை நிறுத்தப்பட்டு சமாதான எண்ணமும் அன்பும் ஒற்றுமையும் கொண்ட ஒரு சமூகத்தை எவ்வாறு தோற்றுவிக்கலாம் என்ற முயற்சியை நாம் அனைவரும் எமது குறிக்கோளாக எடுத்து தன்னலமற்றுப் பணிபுரிந்தால் நிச்சயம் வெற்றி உண்டாகும்.
இதைத்தான் யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் தமது நற்சிந்தனைப் பாடல்களில் தெரிவித்துள்ளார்.
தன்னைப் போல சகலமும் ஓம்புக
விண்ணைப் பொல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை என்று கூறுகிறார்.
இதனையே கவியோகி சுத்தானந்த பாரதியாரும்
தான் தான் திருந்தச் சமூகந் திருந்தும்
மாந்தரைத் திருத்துமுன் மனதைத் திருத்து எனவும்
உலகைப் படைத்தோன் உலகைத் திருத்துவான்
பலவாறுன்னைப் பார்த்துத் திருத்து எனவும் செப்பியுள்ளார்.
ஆன்றோர் எமக்கருளிய நெறி – மிகமிகப் பயனுள்ளது. ஆணவச் செருக்கால் அழிந்து கொண்டு இருக்கிறோம்.
உண்மை அன்பால் உலகை வென்று ஒற்றுமை ஏற்பட உறுதி கொள்வோம்.
மூளாய் முகுந்தன்.
----------
பௌத்த தர்மம் என்ன சொல்கிறது? அல்லது மனிதாபிமானம் எங்கே?
(இக்கட்டுரை பத்திரிகைச் செய்தியாக 01.08.1990ல் எழுதப்பட்டது. 18 வருடங்களின் பின்னும் இன்று நடக்கும் பிரச்சனைகளுக்கும் இது பொருந்தும் - யாரும் அப்பாவிப் பொதுமக்களைப் பற்றியோ அல்லது அவர்களது உடைமைகளைப் பற்றியோ சிந்திப்பதாகத் தெரியவில்லை.)
பௌத்த சமயம் புத்தபெருமான் என்று மார்தட்டும் எமது இலங்கை அரசுக்கு இந்திய துணைப்பிரதமர் அவர்கள் பௌத்த தர்மத்தை – தத்துவத்தை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டது குறித்து இலங்தையைப் பிறப்பிடமாகவும் தாய்நாடாகவும் கொண்ட நாம் வெட்கமடைகின்றோம். பிணி - மூப்பு - சாக்காடு என்ற 3 காரணங்களினால் தனது அரண்மனை வாழ்க்கையையும் இல்லறத்தையும் துறந்து அன்பையும் தருமத்தையும் அகிம்சையையும் போதித்தார்.
எமது நாட்டில் ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பிரச்சனை சிறிய அளவில் உருவாக்கப்பட்டு தற்போது பூதாகரமான நிலையில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தியதோடு தொடர்ந்தும் அழிவுகளைக் கண்டும் காணாததுபோல இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக இச்செய்தியைத் தெரிவிக்கினறோம்.
இம்சையைக் கண்டும் அதை எதிர்க்க முடியாதிருக்கும் மனித சமூகத்தின் மத்தியில் எத்தனை சமூக சமய அமைப்புக்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் பொது அமைப்பாக இருப்பதன் காரணத்தை நாம் வினவுகின்றோம்.
சமயங்கள் யாவும் உயிர்களிடத்தில் அன்பை வளர்க்கும் பொருட்டே அடிப்படையில் போதனை செய்கின்றன. அகிம்சைக்கு உதாரணபுருஷராகிய அண்ணல் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை நாம் உற்று நோக்க வேண்டும். இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் போராடிய அம் மகாத்மாவை எப்பொழுது ஒரு இந்து சுட்டுக்கொலை செய்தானோ அன்றே இந்துக்களுக்கான பழி ஏற்பட்டு எமது நாட்டிலும் அது தொடர வழிவகை செய்கின்றது. தமிழ் முஸ்லீம்களுக்கிடையே ஒற்றுமை நிலவிய எமது தேசத்தில் இன்று இந்த உறவு கேள்விக்குறியாக இருக்கிறது. காரணம் போராளி இயக்கங்கள் செய்த மனிதாபிமானமற்ற கொலைகளே. எந்த உயிரையும் கொலை செய்வதற்கோ அல்லது துன்புறுத்துவதற்கோ எவருக்கும் அதிகாரம் இல்லை.
எமது நாட்டில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மனிதாபிமானமற்ற முறையில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து நாம் உள்ளுக்குள்ளே குமுறியபடி இருந்தோம். இன்று பொறுத்திருக்க முடியாது எமது எதிர்ப்பைப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
1949ம் ஆண்டு மலையக மக்களுடைய குடியுரிமை பறித்தமை 1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்தமை அதனைத்தொடர்ந்து வந்த சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப்போராட்டம் 1972ல் தரப்படுத்தல் போன்றவை ஆட்சியாளர்களின் தவறான சிந்தனையாலும் போக்காலும் ஏற்படுத்தப்பட்டது எனலாம்.
இவை அனைத்தும் ஒருவகையில் இனப்பிரச்சனைக்கு முக்கிய காரணிகளாக அமையும். 1977ன் பின் நாடளாவிய ரீதியில் இனப்பிரச்சனை ஆரம்பமாகியது. ஏராளமான மக்கள் குறிப்பாக தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள். உயிருடன் எரிக்கப்பட்டார்கள். அகதிகளாக்கப்பட்டார்கள்.
1981ல் யாழ்ப்பாணத்தில் பொது நூல்நிலையம் ஏராளமான கடைகள் வீடுகள் போன்றவை அரச படைகளின் உதவியோடு காட்டுமிராண்டித்தனமானவர்களால் எரிக்கப்பட்டன. கொலைகளும் கொள்ளைகளும் தாராளமாக இடம்பெற்றது. வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் முதன்முதல் பாரிய அளவில் அரச படைகளால் தாக்கப்பட்டதைத்தொடர்ந்து மீண்டும் இன்றுவரை தொடர்ச்சியாக அரச படைகளினாலும் 1985க்குப் பின்னர் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டங்களினாலும் மக்கள் சொல்லொணாத துயரங்களை அனுபவித்து வந்தார்கள். வருகிறார்கள்.
ஒன்றுபட்டிருந்த சமூகம் இன்று சின்னாபின்னமாகி ஒற்றுமையின்றி அல்லல்படுவதை எண்ணி ஏங்குவதைத்தவிர ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நாமிருக்கின்றோம்.
1983, 1984ம் ஆண்டுகளில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்களை வன்மையாகத் தாக்கித் திரிந்தவர்கள் இன்றுவரை பேசிய பேச்சுவார்த்தைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எங்கள் மத்தியில் எத்தனை கட்சிகள் இயக்கங்கள் இன்று இருந்தும் மக்களைக் காக்க எவரும் யுத்தத்தை நிறுத்தும்படி கேட்கவில்லை. தாம் தாம் சுயலாபம் தேடுவதிலேயே காலத்தை ஓட்டுகின்றார்கள்.
யுத்தம் நடைபெறும்பொழுது எத்தனையோ விதிமுறைகள் இருந்தும் அனைத்தையும் மீறிய நிலையில் சண்டை புரிகின்றார்கள். கண்டது உயிரழிவும் உடமை இழப்புக்களுமே அன்றி வேறெதுவும் இல்லை. தாம்தாம் சண்டை செய்தாலும் பரவாயில்லை. அப்பாவிப் பொதுமக்கள் பெரியோர் மதகுருமார்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரும் கொல்லப்படுவது வேதனைக்குரியதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதுமாகும்.
தமிழர்களை அரசபடைகள் வல்வெட்டித்துறை அரியாலை குமுதினிப்படகு போன்றவற்றில் கொலை செய்தபோதும் வெலிக்கடைச் சிறைகளில் தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டபோதும் இவற்றால் கொதித்தெழுந்த எமது உணர்வுகள் இன்று எம்மவர்களாலேயே நடைபெறும் கொலைகளின்போது மௌனமாக்கப்படுவதுகண்டு வேதனையும் வெட்கமும் அடைகின்றோம். காரணம் எம்மிடையே காணப்படும் சுயநலம்.
அப்பாவி முஸ்லிம் மக்கள் தமிழர் போராட்டங்களில் முழுமூச்சாக ஈடுபட்டவர்கள் இன்று யாத்திரை சென்று மீண்டபோது அவர்களில் சிலரும், அவர்களுடைய உறவினர்களும் கொடுமையான முறையில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டமை குறித்து நாம் எமது பூரணமான கடும் எதிர்ப்பை இன்று தெரிவிக்கின்றோம். சிங்களப் பொதுமக்களைக் கொலை செய்தமை யுத்தம் செய்ய முடியாத பலவீனத்தையே காட்டுகிறது. இதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
1974ல் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வருகைதந்தவர்களில் இன்று இலங்கைக்கு விஜயம் செய்த தமிழறிஞர் பெரும்புலவர் பேராசிரியர் டாக்டர் சீ. நயினா முகம்மது அவர்களையும் வேறு சில சிங்கள அறிஞர்களையும் இந்நேரத்தில் நாம் சுட்டிக்காட்ட ஆவலாயுள்ளோம். காரணம் இன்று பிடித்த முயலுக்கு மூன்று கால் எனப்பேசும் சிலர் - வரலாறு தெரியாதவர்கள் - அறிய வேண்டும் என்பதற்காக. 10ம் திகதி ஜனவரி மாதம் 1974ம் ஆண்டு யாழ் முற்ற வெளிமைதானத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் பேராசிரியர் நயினா முகம்மது அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஏற்பட்ட குழப்பத்தில் 9 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதையும் அன்று இச்செயலை மேற்கொண்ட அரச படையின் அட்டூழியத்தையும் கண்ணால் கண்ட ஒரு சாட்சியாக இருக்கும் பேராசிரியரின் இன்றைய வருகையின்போது அன்று ஒன்றுபட்டிருந்து தமிழ் முஸ்லிம்களின் ஒற்றுமையையும் இன்றைய பதட்டநிலையையும் எண்ணி நாம் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அன்று மாநாட்டிற்கு வருவதை எதிர்த்த சிங்கள அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி மாநாட்டில் கலந்துகொள்ள சிங்கள அறிஞர்களும் ஒரு சிலர் வந்து கலந்து கொண்டதையும் பலர் அறியமாட்டார்கள். இவை எமக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும். குறிப்பாக 1987ல் பௌத்த சமயத் தலைவர்களுடன் யாழ் விஜயம் செய்த அமரர் விஜயகுமாரணதுங்க அவர்களுடன் விடுதலைப் புலிகள் நடந்துகொண்ட விதங்கள் இவற்றை நாம் பார்க்கும்பொழுது சந்தர்ப்பவாதம் எனப்படும் பதத்தை இவர்களுக்கும் வழங்கலாம் என்றே நாம் கருத இடமுண்டு.
சகலமக்களும் இன்றைய இக்கால கட்டத்தை மிகவும் நிதானமாக அவதானித்து உற்றுநோக்குவதோடு முன்னைய வரலாறுகளையும் அறிந்து ஒப்பிட்டு மதிப்பீடு செய்யவேண்டும்.
அரசாங்கங்களைப் பொறுத்தவரை இன்று ஜனாதிபதியின் கருத்துப்படி 2000ம் ஆண்டுகளின் பின்னரும் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியும் எனக்கூறியுள்ளார். யூஎன்பி அரசாங்கத்தினால் கடந்த 13 வருடங்கள் அல்லல்பட்ட வாழ்க்கை மேற்கொண்ட அரசின் நடவடிக்கைகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். குறிப்பாக இன்றைய இனப்பிரச்சனையை அன்றே பண்டா செல்வா ஒப்பந்தம் மூலம் தீர்க்க முன்வந்தபோது இதே யுஎன்பி கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஐனாதிபதி திரு. ஜே.ஆர் ஜெயவர்த்தனா தமிழர்களுக்கு பண்டாரநாயக்கா இலங்கையைப் பிரித்துக் கொடுத்துவிட்டார் என்றுகூறி கண்டிக்குப் பாதயாத்திரை செய்ததையும் நினைவுபடுத்த வேண்டும்.
இன்று இதே அரசு இளைஞர்களின் விரக்தி நிலைகுறித்து ஆராய ஒரு விசேட ஆணைக்குழுவை நியமித்து அதன் அறிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னரும் தற்போதைய யுத்தத்தைத் தீவிரப்படுத்துவது ஏன் என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.
எமது முக்கியமான பணிவான வேண்டுகோள் சண்டை நிறுத்தப்படவேண்டும். மக்கள் கொல்லப்படுவதும் உடமைகள் அழிக்கப்படுவதும் நிறுத்தப்படவேண்டும்.
வறுமையால் பட்டினியால் வாடும் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அழிக்கப்பட்ட உடமைகளின் பெறுமானத்திற்கு அமைய நிவாரணம் வழங்கப்படவேண்டும். காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அங்கத்தவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும். மரணமடைந்தவர்களின் விபரங்களை உடனடியாக அவரவர் குடும்பத்தினருக்கு அல்லது உறவினருக்குத் தெரிவிக்க வேண்டும்.
மேற்தரப்பட்ட செய்தியை மனிதாபிமானம் கொண்ட முறையிலும் சகல சமூகங்களையும் சேர்ந்தவர்களோடு இனஒற்றுமை இன்றைய அரசியல் நிலைப்பாடு என்பன பற்றிய கருத்தரங்குகளில் பலரது அபிப்பிராயத்தையும் அறிந்தவர்கள் என்ற முறையிலும் வெளியிடுவதில் ஓரளவு அமைதி அடைகின்றோம்.
வணக்கம்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கான இளைஞர்குழு உறுப்பினரும்
இந்து சமய ஒற்றுமைப்பேரவை அமைப்பாளரும்
-----
07.08.1990
கடந்த சில நாட்களாக அப்பாவி பொதுமக்கள் குறிப்பாக சிங்கள-முஸ்லீம் இன மக்கள் மிகவும் மோசமான முறையில் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டமை குறித்த மிகவும் வேதனை அடைகின்றோம். எந்தத்தவறை அரச சிங்களப் படைகள் அன்று தமிழினத்திற்கு செய்தனவோ அதே செயலை மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், விடுதலைக்காக போராடும் வீரர்கள் என்றும், தமிழர்கள்;தான் புலிகள் - புலிகள் தான் தமிழர்கள் என்று தம்மை தாமே கூறிடும் புலிகள் இன்று இப்படி கீழ்த்தரமாகச் செய்வதன் காரணம் ஏன் எனத்தெரியவில்லை.
தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டங்களில் கூடிய பங்கேற்ற முஸ்லீம் மக்களின் உயிர்களைப்பறிக்க கங்கணம் கட்டிய புலிகளுக்கு விடுதலைவரலாறு தெரியாமல் இருக்கலாம் ஆனால் வரலாறு தெரிந்த அறிஞர்கள் பலர் முஸ்லீம் மக்களாக இருப்பதும், இன்றும் இவர்கள் இப்படியான குரோத மனப்பாங்கை வளர்த்தாலும், தமிழ் மக்களோடு கூடியே வாழவேண்டும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ள முஸ்லீம் சகோதரர்களையும் எம்மால் பகைத்துக் கொள்ளமுடியாது. அந்த எண்ணமும் எம்மத்தியில் எழாது. ஒற்றுமையே பலம் என்று இளவயதில் நாம் படித்த பள்ளிப்பாடங்கள் என்றும் எம் நெஞ்சில் நீங்காது இருக்கின்றது. அதாவது பாடசாலைக்குபோனவர்களுக்கு புரியும்.
மக்காவிற்கு யாத்திரை சென்று மீண்ட முஸ்லீம் யாத்திரிகர்களையும் அவர்களது உறவினர்களையும் கொன்று ஒழித்தவர்கள், தற்பொழுது பள்ளிவாசலுக்குள் நுழைந்து பிராத்தனையில் ஈடுபட்டிருந்தவாகள் மீது துப்பாக்கிபிரயோகம் செய்ய வைத்த மிருகத்தனத்திலும் கொடிய அரக்கச் செயலுக்கு எந்தவிதமான மன்னிப்பும் கிடையவே கிடையாது. மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்காது மரணதண்டனை வழங்கும் புலிகளுக்கு மக்கள் இனிமேலும் ஆதரவு அளிக்கமுடியாது மக்களில் பலரும் இன்று வெளிப்படையாகவே திட்டுகின்றார்கள். மட்டக்களப்பு அகதிகளில் பலர் வெளிப்படையாகவே கூறுகின்றார்கள் - இராணுவத்தினர் தாக்குவதற்கு மூலகாரணம் புலிகள் தான் என்று. மிருகங்களைக் கூட இன்று சர்க்கஸில் பழக்கி எடுத்து மிகவும் செல்லமாக வளக்கப்பட்ட அவை அன்பின் அடிமையாகி பயிற்றப்படுகின்றது. சிலவேளைகளில் எப்படி நடந்து கொள்வேண்டும் என்று பயிற்சியும் கொடுக்கப்படுகின்றது. ஆனால் ஆறாவது அறிவைப்பெற்ற மிக உன்னதமான நிலையில் இருக்கவேண்டிய மனிதன் தன்னைப்போல் மன்னுயிரை நேசிக்கவேண்டிய நிலையில் மற்றவர்களை அழித்து தான் மட்டும் வாழ மனப்பால் குடிக்கின்றான். நீதி என்ற நிலை உள்ள மட்டும் எவரும் கீழ்த்தரமான எண்ணங்களால் முன்னுக்கு வரமுடியாது: தேரினை முல்லைச் செடிக்குத் தந்த பாரி வள்ளலும் கன்றின் உயிருக்காக தன் ஒரே வாரிசை தேர்ச்சில்லில் விட்டு நசித்துக்கொன்ற மனுநீதிச்சோழ மன்னனும் புறாவின் உயிருக்காக தன்னுடைய தொடைச் சதையினை அளித்த சிபிச்சக்கரவர்த்தியும் எமது சிந்தனைகளில் வாழ்க்கையில் வாழ்ந்துவரும்போது புல்லர்களின் செயல்கள் யாவும் பூமியில் நிலைக்க முடியாது.
முஸ்லீம் சமுதாயத்தினருக்கு எமது பணிவான வேண்டுகோள் விடுதலைப்புலிகள் போல இருக்காது மனிதாபிமானம்கொண்ட நீங்கள் மக்கள் நலம்பேண புலிகளுக்கு எதிராகவுள்ள தமிழ்மக்களையும் உங்களுடன் இணைந்து நீதிக்காக குரல் எழுப்ப முன்வரவேண்டும். முஸ்லீம்களை மட்டுமல்ல தமிழ் சிங்கள அப்பாவிப் பொதுமக்கள் அறிஞர்கள் தலைவர்கள் கூட புலிகளால் கொல்லப்பட்டார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் சரியான நீதி வழங்கப்படவில்லை. இவையனைத்தையும் முஸ்லீம் சகோதரர்கள் உணர்ந்து நீண்ட காலம் அன்பில் இணைந்த நாம் இன்று கொடியவர்கள் சிலரால் பிரிக்கப்படவேண்டிய அவர்களுடைய எண்ணத்திற்கு செவிசாய்க்காது ஒற்றுமையாக இந்த சிறிய நாட்டில் அமைதியாக வாழ வேண்டிய ஒழுங்குகளை நாம் கூடி ஆராய்ந்து செயற்படவேண்டும் என சகல முஸ்லீம் சமய சமூக அமைப்புக்களுக்கு பணிவாக வேண்டி கொல்லப்பட்ட முஸ்லீம் சகோதரர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த வேதனையை தெரிவிப்பதோடு கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுவதோடு கொலை செய்வதையும் உடமைகள் நாசமாக்கப்படுவதையும் நிறுத்தும்படி தொடர்ந்து கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தெரிவிப்பதோடு இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் அரசினுடைய இயலாமையையும் கண்டனம் செய்து இவ்வறிக்கையை நிறைவு செய்கின்றோம்.
மனிதன் வாழவே சமயங்கள் வழிகாட்டுகின்றன. அந்த சமயங்களின் பெயரால் சண்டைகள் இருக்குமானால் சமயமே தேவையற்றது.
என்றும் ஒற்றுமைக்காக
இந்து சமய ஒற்றுமைப் பேரவை அமைப்பாளர்
Friday, June 5, 2009
இன்று ஜூன் 5 மறைந்த தலைவர் உடுப்பிட்டிச் சிங்கம் மு. சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம்
ஆனி 5 ஈழத் தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத சில வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டிருக்கிறது.
1956இல் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம்
1974 இல் பொன் சிவகுமாரனின் மறைவு
2002 இல் தலைவர் சிவசிதம்பரம் அவர்களின் மறைவு






1956இல் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம்
1974 இல் பொன் சிவகுமாரனின் மறைவு
2002 இல் தலைவர் சிவசிதம்பரம் அவர்களின் மறைவு






அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அரசியல்,
தலைவர்கள்,
வழிகாட்டிகள்
Subscribe to:
Posts (Atom)

