அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label தலைவர்கள். Show all posts
Showing posts with label தலைவர்கள். Show all posts

Wednesday, June 5, 2013

அமரர்கள் மு.சிவசிதம்பரம், சி. நமசிவாயம் ஆகியோரின் நினைவு


தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம், கூட்டணியின் யாழ்ப்பாணக்கிளை உபதலைவரும், யாழ்ப்பாண வரத்தகர் சங்கத் தலைவருமாகிய சின்னத்தம்பி நமசிவாயம் JP ஆகியோரின் நினைவு தினமான ஆனி 5ஆம் நாளான இன்று கூட்டணியின் தலைமைக் காரியாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையில் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் ஆதரவாளர்களும் மறைந்த தலைவர்களை நினைவுகூர்ந்து தமது அஞ்சலிகளைத் தெரிவித்தனர்.


Thursday, July 14, 2011

அமரர்கள் அமிர் - யோகேஸ் நினைவு தினம்!

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களான அமரர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் 22ஆவது நினைவு தினம் 13.07.2011 இல் யாழ்ப்பாணம் தமிழர் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்தில் நடைபெற்றது. கடந்த கால நினைவுகளைப் பகிர சில புகைப்படங்கள்!

(விரைவில் மேலதிக தகவல்களை இணைக்கவுள்ளேன் - பொறுத்திருக்கவும்!)












Thursday, September 2, 2010

அமரர்கள் வி. தர்மலிங்கம் மு. ஆலாலசுந்தரம் ஆகியோரின் நினைவு தினம் இன்று!



1985.9.2இல் படுகொலைசெய்யப்பட்ட அமரர் வி. தர்மலிங்கம் அவர்களுடைய நினைவுத் தூபி

எமது அலுவலகத்தில் அஞ்சலி

Thursday, July 29, 2010

கலாநிதி நீலனின் மறைவு தினம் இன்று


இந்திய இலங்கை ஒப்பந்தம்(1987) கைச் சாத்தான திகதியிலேயே(29th July) கலாநிதி நீலன் திருச் செல்வம் அவர்களும் படுகொலை(1999) செய்யப்பட்டார்.என்னால் என்றும் மறக்க முடியாத தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுள் இவரும் ஒருவர்! இன்றைய நாளில் அவரை நினைவுகூருவதில் பெருமையும் மனநிறைவுமடைகின்றேன்!

Tuesday, July 20, 2010

மறைந்த கூட்டணித் தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களின் பிறந்த நாள் நினைவு இன்று!



Wednesday, July 14, 2010

இன்று யாழில் நடைபெற்ற கூட்டணித் தலைவர்களின் நினைவஞ்சலி







தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர்நாயகமும், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களினதும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு.வெ.யோகேஸ்வரன் அவர்களினதும் 21வது நினைவு தினம் இன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ்.மாவட்டத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரை கூட்டணியின் முன்னால் உடுவில் கிராமசபை தலைவர் ச.முத்துலிங்கம் கூட்டணியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான திரு. த.பூலோகரட்ணம் ஆகியோர் ஏற்றினர். அமரர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலத்தப்பட்டது.

தொடர்ந்து நினைவுரைகள் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர் செ.முத்துலிங்கம், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் செ. விஜயரத்தினம், ச.முத்துலிங்கம், திருஞானசம்பந்தர் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்த நன்றியுரையினை தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகச்செயலாளர் த.கஜன் நிகழ்த்தினார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tuesday, July 13, 2010

இன்று அமரர்கள் அமிர் யோகேஸ் நினைவுதினம்!


Sunday, July 4, 2010

நாளை ஆடி 5 - தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் அ. தங்கத்துரையின் 13ஆவது நினைவுதினம்!

தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், த.வி. கூட்டணியின் அமைப்பு நிர்வாகச் செயலாளரும், திருகோணமலை சிவானந்த தபோவன சிறுவர் இல்லத்தைப் பரிபாலிக்கும் நாகரத்தினம்பிள்ளை தங்கம்மாள் நம்பிக்கை நிதியத்தின் பிரதான நம்பிக்கைப் பொறுப்பாளரும் - பொருளாளருமான மறைந்த அருணாசலம் தங்கத்துரை பா.உ அவர்களும் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. இராஜேஸ்வரி தனபாலசிங்கம், நாமகள் கல்லூரி அதிபர் திரு. சி. ஜோசப், கொழும்பு அதிபர் கா. சீவரத்தினம், பொறியியலாளர் திரு. வெ. ரட்ணராஜா சமூகசேவகர் பெ.சி. கணேசலிங்கம் ஆகிய அறுவரும் 05.07.1997 சனிக்கிழமை மாலையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புதிய 3 மாடிக்கட்டடத் திறப்புவிழா முடிவுற்ற பின்னர் இடம் பெற்ற குண்டுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் எனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாதது!

Thursday, March 11, 2010

தலைவர்களின் ஒன்றுபட்ட நிகழ்வுகளில் சில........

பலருக்கு பல விடயங்கள் தெரியாதமையினால் நடந்த சில சரித்திர உண்மைகளை ஆதாரத்துடன் இணைக்கவேண்டி இருக்கிறது. ஒன்று (ACTC) - இரண்டானது (ACTC, ITAK(FP)) - பின்னர் ஒன்றாகி (TULF) - அதன் பின் பலவாகி - பின்னும் ஒன்றாகி (TNA) - இப்போ சிதறியுள்ளது!

ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வா, மு. திருச்செல்வம் ஆகியோர்


EPRLF பத்மநாபா, TELO சிறீசபாரத்தினம், EROS வே. பாலகுமாரன், LTTE பிரபாகரன்




திம்பு மாநாட்டில் EPRLF, EROS, LTTE, PLOTE, TELO & TULF


1988 - அரசியல் கட்சியாக பதிவு செய்த நேரத்தில் மாத்தையா, பிரபாகரன், யோகி

கருணாவுடன் பிரபாகரன்

2001 இல்















2009இல்