Showing posts with label மு. சிவசிதம்பரம். Show all posts
Showing posts with label மு. சிவசிதம்பரம். Show all posts
Wednesday, June 5, 2013
அமரர்கள் மு.சிவசிதம்பரம், சி. நமசிவாயம் ஆகியோரின் நினைவு
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
கூட்டணி,
தலைவர்கள்,
நினைவுகள்,
மு. சிவசிதம்பரம்
ஆனி 5 - இலங்கைத் தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத சில சம்பவங்கள்!
Security was tightened when parliament considered watering down the Sinhala-only language law in 1956
ஈழத் தமிழர் வரலாற்றில் ஆனி 5 என்ற நாள் மறக்கமுடியாத சில வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டிருக்கிறது.
1956இல் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம்
1974 இல் பொன் சிவகுமாரனின் மறைவு
1998 இல் சின்னத்தம்பி நமசிவாயம் JP அவர்களின் மறைவு(த.வி.கூ. யாழ்ப்பாணக்கிளை உபதலைவர், வரத்தகர் சங்கத் தலைவர்)
2002 இல் தலைவர் சிவசிதம்பரம் அவர்களின் மறைவு
நாம் எமது வரலாறுகளை ஆவணப்படுத்தாமல் இருப்பதனால் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளைக்கூட மீள நினைவுபடுத்தாமல் தவறு இழைக்கின்றோம். வரலாறுகளை நினைவு கூருவதன்மூலமே எமது வருங்காலச் சந்ததியினருக்கு அவற்றை விட்டுச் செல்ல முடியும்.
கடந்த 1.6.2013ல் நூலகம் எரிக்கப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவடைந்த நாள். யாழ்ப்பாணத்தில் அதுகுறித்த ஒரு நிகழ்வும் இடம்பெறவில்லை. மாநகர சபைக் கூட்டத்தில் வேறெதுக்கோ எல்லாம் அடிபாடும் சண்டையும்தான் நடந்தது. நூலகத்தை நினைவுபடுத்த யாரும் இல்லை. நான் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்யப் போனால் அதற்கும் ஆணையாளரிடம் - முதல்வரிடம் அனுமதி பெற வேண்டியிருந்தமையால் அது நிறைவேறவில்லை.
கடந்த 1.6.2013ல் நூலகம் எரிக்கப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவடைந்த நாள். யாழ்ப்பாணத்தில் அதுகுறித்த ஒரு நிகழ்வும் இடம்பெறவில்லை. மாநகர சபைக் கூட்டத்தில் வேறெதுக்கோ எல்லாம் அடிபாடும் சண்டையும்தான் நடந்தது. நூலகத்தை நினைவுபடுத்த யாரும் இல்லை. நான் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்யப் போனால் அதற்கும் ஆணையாளரிடம் - முதல்வரிடம் அனுமதி பெற வேண்டியிருந்தமையால் அது நிறைவேறவில்லை.
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
கூட்டணி,
நினைவுகள்,
மு. சிவசிதம்பரம்,
வரலாறு
Tuesday, August 19, 2008
காந்திவழியில் போராடிய மாபெரும் தலைவர் உடுப்பிட்டி சிவா
எனக்கு அரசியல் வழிகாட்டிய ஆசான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அமரர் மு. சிவசிதம்பரம் அவர்களை விழித்து 16.12.2001ல் ஞாயிறு தினக்குரலின் 10ம் பக்கத்தில் வெளியான சிவாவுக்கு ஒரு மடல் என்ற சத்யனின் கடிதத்துக்கு 21.12.2001ல் நான் எழுதிய பதில் இன்றுவரை பிரசுரிக்கப்படாத நிலையில் அக்கடிதத்தையே இங்கு சமர்ப்பிக்கின்றேன். கடந்த 20.07.2008 அவரது 85வது பிறந்த தினம் செய்தி பிந்தியமைக்கு மன்னிக்கவும்
செய்தி ஆசிரியர் - தினக்குரல் - கொழும்பு.
அன்புடையீர் - கடந்த ஞாயிறு சிவாவுக்கு ஒரு மடல் என்ற சத்யனின் கடிதம் சார்பாக, அவரது உதவியாளன் என்ற வகையிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் விசுவாசமான தொண்டன் என்ற வகையிலும் இப்பதில் கடிதத்தை எழுதுகின்றேன். தர்மப்படி பிரசுரிப்பீர்கள் என நம்புகின்றேன்.
எதையும் குறிப்பிட்டு எழுதவேண்டிய தேவை எனக்கு இருப்பதாக இல்லை. ஏனெனில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் தான் தொடர்ந்தும் தலைவராக இருக்கின்றார். இது மக்கள் குறிப்பாக வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவருக்கும் தெளிவாக - அறிவுபூர்வமாகத் தெரியும். கடந்த வருடம் பொதுத்தேர்தலின்போது மட்டுமல்ல, சகலதேர்தல்களிலும் ஏன் முக்கிய விடயமான தற்போதைய நான்கு கட்சி கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட முன்பும் - பின்னரும் எமது சிரேஷ்ட துணைத் தலைவர், செயலாளர் நாயகம் ஆகியோர் இந்தியா சென்று தலைவர் அவர்களின் ஆலோசனைகளைப்; பெற்றுவந்தமை நீங்கள் அறியாதிருக்கலாம். ஆனால் எமது கட்சியினர் மற்றும் பலருக்கு இது தெரி;ந்த ஒரு விடயம். கடந்த தேர்தலின்போதும், அதற்குமுன்னரும் தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு கேட்டு விடுத்த செய்திகளையும்(ஒலிப்பதிவுநாடா, துண்டுப்பிரசுரம்) நாம் மறந்துவிடலாகாது. இம்முறை வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகள் காலம்காலமாக பாதுகாக்கப்படக்கூடிய ஆவணங்களில் ஒன்றாகும். ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுந்தமான முறையில் ஒரு தலைவரைப்பற்றி விமர்சனம் செய்கையில் அவரது கடந்தகால செயற்பாடுகளையும் எடுத்து நோக்குவது சிறப்பாக இருக்கும். 1956ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பருத்தித்துறையில் போட்டியிட்டு தோல்வியடைந்த திரு. மு.சிவசிதம்பரம் அவர்கள் சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் மற்றும் அரசுக்கு எதிரான வேலைநிறுத்த எதிர்ப்புப் போராட்டங்;களில் கட்சிவேறுபாடின்றி ஆதரவு அளித்துவந்தார். 1960 மாhர்ச் தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் 7365 வாக்குகளைப் பெற்றுத் தெரிவானார். பின் 1960 ஜூலையில் அதே உடுப்பிட்டித் தொகுதியில் 9080 வாக்குகளைப் பெற்று மீண்டும் தெரிவானார். 1965ல் 12009 வாக்குகளைப்பெற்றுத் தெரிவாகிய சிவசிதம்பரம் அவர்கள் 1970ல் 11662 வாக்குகளைப் பெற்று தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட ஜெயக்கொடி அவர்களினால் தோற்கடிக்கப்பட்டார். 1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்பினை எதிர்த்து தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கியவேளையில் அதன் இணைச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார். 1977ல் நல்லூரில் 29858வாக்குகளைப் பெற்று (28137 வாக்கு வித்தியாசத்தில் - இலங்கையில் தனிஉறுப்பினர் தொகுதியில் அதிகூடியது) வெற்றிபெற்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரானார். 1989ல் யாழ் மாவட்டத்தில் 8359 வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார். 1989ல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று மயிரிழையில் தப்பி சிகிச்சைபெற்ற வேளையிலும்கூட தமக்குக் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்காது விட்டவர். 1994ல் வன்னியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னரும் கட்சிப் பணிகளில் தீவிரமாகப் பங்குகொண்டவர். 1998ல் சுகவீனமுற்றபோது இந்தியாவுக்குச் சென்று தனது குடும்பத்தவர்களுடன் இருந்து கட்சியின் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதை நான் குறிப்பிட்டேயாகவேண்டும்.
கடந்த 5.12.2001ல் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்னரே தேசியப்பட்டியலில் முதலிடம் வழங்கப்பட்ட எமது தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களை எந்தவித ஆட்சேபனையுமின்றி 4 கட்சிகளும் ஏற்றுக்கொண்டபின்னரே தங்கள் பத்திரிகை உட்பட அனைத்துப் பத்திரிகைகளும் செய்தியைப் பிரசுரித்தன. இந்த 4 கட்சிகளின் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் எந்தக் குறிக்கோளை எட்ட முற்படுகிறதோ அதுவே அந்த அமைப்பின்மூலம் தெரிவாகியுள்ள 15 உறுப்பினர்களின் கடமையாகும்
1989ல் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களின் மறைவுக்குப்பின் 1990ல் திரு. க.யோகசங்கரியின் மறைவுக்குப்பின் 1994ல் தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகியிருக்கக்கூடிய வேளையிலே அவற்றை ஏற்காது ஒதுக்கிய திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் இன்றும் தமது ஆதரவாளர்களின் வேண்டுகோளைஏற்று தேசியயப்பட்டியலில் இடம்பெற ஒத்துக்கொண்டுள்ளார். அவரது தேவை இன்றைய நிலையில் அவசியமானது. பலரும் எதிர்பார்க்கும் அவரது ஆலோசனைகளை சிதறடிக்க வேண்டாம் என்பதே எனது பணிவாhன வேண்டுகோளாகும்.
நன்றி
அன்புடன் பணியிலுள்ள
தங்க. முகுந்தன்
அவரது நினைவாக இலண்டனில் வெளியிடப்பட்ட முதலாவது ஆண்டு மலரிலிருந்து சில வரிகள்.
சொகுசான வாழ்க்கையைத் தேடாமல் சாதாரணமான ஒரு மனிதராக வாழ்ந்தார்.
தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின் அவரது பணிகளை ஏற்று செயற்பட்ட செயல்வீரர் காசுக்கு ஆசைப்படாத ஒரு மனிதர்
காந்தியைப்போல வாழ்ந்த சட்ட வல்லுனர் - அரசியல் தலைவர் - ஆன்மீகவாதி
செய்தி ஆசிரியர் - தினக்குரல் - கொழும்பு.
அன்புடையீர் - கடந்த ஞாயிறு சிவாவுக்கு ஒரு மடல் என்ற சத்யனின் கடிதம் சார்பாக, அவரது உதவியாளன் என்ற வகையிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் விசுவாசமான தொண்டன் என்ற வகையிலும் இப்பதில் கடிதத்தை எழுதுகின்றேன். தர்மப்படி பிரசுரிப்பீர்கள் என நம்புகின்றேன்.
எதையும் குறிப்பிட்டு எழுதவேண்டிய தேவை எனக்கு இருப்பதாக இல்லை. ஏனெனில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் தான் தொடர்ந்தும் தலைவராக இருக்கின்றார். இது மக்கள் குறிப்பாக வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவருக்கும் தெளிவாக - அறிவுபூர்வமாகத் தெரியும். கடந்த வருடம் பொதுத்தேர்தலின்போது மட்டுமல்ல, சகலதேர்தல்களிலும் ஏன் முக்கிய விடயமான தற்போதைய நான்கு கட்சி கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட முன்பும் - பின்னரும் எமது சிரேஷ்ட துணைத் தலைவர், செயலாளர் நாயகம் ஆகியோர் இந்தியா சென்று தலைவர் அவர்களின் ஆலோசனைகளைப்; பெற்றுவந்தமை நீங்கள் அறியாதிருக்கலாம். ஆனால் எமது கட்சியினர் மற்றும் பலருக்கு இது தெரி;ந்த ஒரு விடயம். கடந்த தேர்தலின்போதும், அதற்குமுன்னரும் தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு கேட்டு விடுத்த செய்திகளையும்(ஒலிப்பதிவுநாடா, துண்டுப்பிரசுரம்) நாம் மறந்துவிடலாகாது. இம்முறை வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகள் காலம்காலமாக பாதுகாக்கப்படக்கூடிய ஆவணங்களில் ஒன்றாகும். ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுந்தமான முறையில் ஒரு தலைவரைப்பற்றி விமர்சனம் செய்கையில் அவரது கடந்தகால செயற்பாடுகளையும் எடுத்து நோக்குவது சிறப்பாக இருக்கும். 1956ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பருத்தித்துறையில் போட்டியிட்டு தோல்வியடைந்த திரு. மு.சிவசிதம்பரம் அவர்கள் சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் மற்றும் அரசுக்கு எதிரான வேலைநிறுத்த எதிர்ப்புப் போராட்டங்;களில் கட்சிவேறுபாடின்றி ஆதரவு அளித்துவந்தார். 1960 மாhர்ச் தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் 7365 வாக்குகளைப் பெற்றுத் தெரிவானார். பின் 1960 ஜூலையில் அதே உடுப்பிட்டித் தொகுதியில் 9080 வாக்குகளைப் பெற்று மீண்டும் தெரிவானார். 1965ல் 12009 வாக்குகளைப்பெற்றுத் தெரிவாகிய சிவசிதம்பரம் அவர்கள் 1970ல் 11662 வாக்குகளைப் பெற்று தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட ஜெயக்கொடி அவர்களினால் தோற்கடிக்கப்பட்டார். 1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்பினை எதிர்த்து தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கியவேளையில் அதன் இணைச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார். 1977ல் நல்லூரில் 29858வாக்குகளைப் பெற்று (28137 வாக்கு வித்தியாசத்தில் - இலங்கையில் தனிஉறுப்பினர் தொகுதியில் அதிகூடியது) வெற்றிபெற்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரானார். 1989ல் யாழ் மாவட்டத்தில் 8359 வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார். 1989ல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று மயிரிழையில் தப்பி சிகிச்சைபெற்ற வேளையிலும்கூட தமக்குக் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்காது விட்டவர். 1994ல் வன்னியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னரும் கட்சிப் பணிகளில் தீவிரமாகப் பங்குகொண்டவர். 1998ல் சுகவீனமுற்றபோது இந்தியாவுக்குச் சென்று தனது குடும்பத்தவர்களுடன் இருந்து கட்சியின் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதை நான் குறிப்பிட்டேயாகவேண்டும்.
கடந்த 5.12.2001ல் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்னரே தேசியப்பட்டியலில் முதலிடம் வழங்கப்பட்ட எமது தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களை எந்தவித ஆட்சேபனையுமின்றி 4 கட்சிகளும் ஏற்றுக்கொண்டபின்னரே தங்கள் பத்திரிகை உட்பட அனைத்துப் பத்திரிகைகளும் செய்தியைப் பிரசுரித்தன. இந்த 4 கட்சிகளின் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் எந்தக் குறிக்கோளை எட்ட முற்படுகிறதோ அதுவே அந்த அமைப்பின்மூலம் தெரிவாகியுள்ள 15 உறுப்பினர்களின் கடமையாகும்
1989ல் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களின் மறைவுக்குப்பின் 1990ல் திரு. க.யோகசங்கரியின் மறைவுக்குப்பின் 1994ல் தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகியிருக்கக்கூடிய வேளையிலே அவற்றை ஏற்காது ஒதுக்கிய திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் இன்றும் தமது ஆதரவாளர்களின் வேண்டுகோளைஏற்று தேசியயப்பட்டியலில் இடம்பெற ஒத்துக்கொண்டுள்ளார். அவரது தேவை இன்றைய நிலையில் அவசியமானது. பலரும் எதிர்பார்க்கும் அவரது ஆலோசனைகளை சிதறடிக்க வேண்டாம் என்பதே எனது பணிவாhன வேண்டுகோளாகும்.
நன்றி
அன்புடன் பணியிலுள்ள
தங்க. முகுந்தன்
அவரது நினைவாக இலண்டனில் வெளியிடப்பட்ட முதலாவது ஆண்டு மலரிலிருந்து சில வரிகள்.
சொகுசான வாழ்க்கையைத் தேடாமல் சாதாரணமான ஒரு மனிதராக வாழ்ந்தார்.
தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின் அவரது பணிகளை ஏற்று செயற்பட்ட செயல்வீரர் காசுக்கு ஆசைப்படாத ஒரு மனிதர்
காந்தியைப்போல வாழ்ந்த சட்ட வல்லுனர் - அரசியல் தலைவர் - ஆன்மீகவாதி
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
TULF,
மு. சிவசிதம்பரம்
Subscribe to:
Comments (Atom)
விரும்பும் பத்திரிகைகள்
மனம் கவர்ந்தவை
கிருத்தியம் வரவேற்கிறது
Powered by IP2Location.com
அவனுடைய உயிர்
- தங்க முகுந்தன்
- என் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.
வகைப்பாடுகள்
- 5ஆந்தர புலமைப்பரிசு
- ACTC
- AMO
- Anandasangaree
- CWC
- Elections
- EPDP
- EPRLF
- EROS
- Great Wall of China
- Hindu Department
- Indo - Ceylon Accoard
- Jaffna Railway Station
- JMC
- LTTE
- PLOTE
- Ramakrishnamission
- Rejectedvotes
- Schwyz
- SLMC
- State Terrorism in Jaffna
- Suresh
- TELO
- TIC
- TNA
- TULF
- TULF - PLOTE - EPRLF
- TULF Canada Branch
- Wikipediya. விக்கிபீடியா
- YMHA Meeting
- அ. தங்கத்துரை
- அ.தங்கத்துரை
- அடிப்படைத் தேவைகள்
- அடிப்படைத் தேவைகள்
- அரசியல்
- அருட்தந்தை தாவீது அடிகள்
- அல்பிரட் துரையப்பா
- அழிவு
- அறநெறி
- அறிக்கை
- அறிவிப்பு
- அனுதாபங்கள்
- அனுபவங்கள்
- அனுபவம்
- அனுராதபுரம் விவேகானந்தா
- ஆலயங்கள்
- ஆன்மிகம்
- இந்தியசுதந்திர தினம்
- இந்தியத் தூதரகம்
- இந்து இளைஞர் மன்றம்
- இந்து சமய ஒற்றுமைப் பேரவை
- இந்து சமய மன்றம்
- இந்து தர்ம வித்யா பீடம்
- இந்துசமயம்
- இயற்கை
- இருக்கிறம்
- இலங்கை
- இலங்கை அரசு
- இலங்கை இந்திய ஒப்பந்தம்
- இறக்குவானை
- இன ஒற்றுமை
- இனப்படுகொலை
- ஈழசுதந்திரன்
- ஈழநாடு
- உதயசூரியன்
- உபதேசங்கள்
- உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்
- ஊடகங்கள்
- எம். என். நம்பியார்
- எம்.எச்.எம். அஷ்ரப்
- எரியும் நினைவுகள்
- என் நண்பர்கள்
- என் விருப்பம்
- என். செல்வராஜா
- ஏ.எச்.எம். அஸ்வர்
- ஐயப்பன்
- ஐயப்பன் பாடல்
- ஒற்றுமை
- கடிதங்கள்
- கட்டுரை
- கண்டி
- கந்தரனுபூதி
- கலைஞர் மு. கருணாநிதி
- கவலை
- கன்னியாகுமரி
- கஹவத்த கோவில்
- காஞ்சிப்பெரியவர்
- கிரிக்கெட்
- கிருத்தியம்
- குடும்பம்
- கூட்டணி
- கூட்டமைப்பு
- கொலை
- சச்சின்
- சந்திப்பு
- சந்திரிகா
- சபரிமலை
- சமய நிறுவனங்கள்
- சமய நெறி
- சிவாஐயா
- சுயசரிதை
- சுவாமி ஆத்மகணானந்த மகாராஜ்
- சுவாமி விவேகானந்தர்
- சுவாமி வேதநிஷ்டானந்த சரஸ்வதி
- சுவிற்சர்லாந்து
- சுவிஸ் அனுபவம்
- சுவிஸ் சந்திப்பு
- சூரிச் முருகன் கோவில்
- செய்திகள்
- சைவ மஞ்சரி
- சொல்வேந்தர் சுகிசிவம்
- சோமீதரன்
- தந்தை செல்வா
- தமிழரசுக் கட்சி
- தமிழர் தகவல்
- தமிழர் திருநாள்
- தமிழ் தோட்டம்
- தமிழ் மொழி உபயோகம்
- தலைவர் அமிர்
- தலைவர்கள்
- திரு. வி. ஆர். வடிவேற்கரசன்
- திருகோணமலை
- திருநாவுக்கரசு நாயனார்
- திருமதி. சரோஜினி யோகேஸ்வரன்
- திருமலை
- திருவாசகம்
- திருவாதிரை
- தினக்குரல்
- தீபாவளி
- துறவி
- தேசியக் கொடி
- தேர்தல்
- தேர்தல் அலசல்
- தேர்தல் முடிவு
- தேவியர் இல்லம்
- தொடர் விளையாட்டு
- நண்பர்கள்
- நத்தார் வாழ்த்துக்கள்
- நம்நாடு
- நல்லூர்
- நல்லைக் குமரன் மலர்
- நவராத்திரி விரதம்
- நற்சிந்தனை
- நன்றி
- நிகழ்வுகள்
- நினைவுகள்
- நீலன் திருச்செல்வம்
- பக்தி
- படுகொலைகள்
- பதிவர் சந்திப்பு
- பறவைகள்
- பனிக்கட்டி மழை
- பனிக்காலம்
- பஜனை
- பிடிச்சது - பிடிக்காதது
- பிடித்த இடங்கள்
- பிடித்தது
- பிதற்றல்
- பிரேமதாசா
- பிறந்த மாதப் பண்புகள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்
- புதுவருடம் (New Year)
- புத்தாண்டு
- பெருந்தலைவர் காமராஜர்
- பேராசிரியர் கா. சிவத்தம்பி
- பொன். சிவபாலன்
- போர். UN.
- பௌத்தம்
- மகாதேவ ஆஷ்ரமம்
- மகாத்மா காந்தி
- மயூரபதி
- மலையகம்
- மறுபிறவி
- மறைக்கப்படும் வரலாறுகள்
- மனிதத்துவம்
- மனிதம்
- மனிதாபிமானம்
- மன்னிப்பு
- மாம்பழத் திருவிழா
- மாவை சேனாதிராஜா
- மு. ஆலாலசுந்தரம்
- மு. சிவசிதம்பரம்
- முதுமொழிகள்
- முஸ்லிம்கள் படுகொலை
- மூதறிஞர் க.சி.குலரத்தினம்
- மூளாய்
- மொழி அழிப்பு
- யாத்திரை
- யாழ் பொது நூலகம்
- யாழ் மாநகர சபை
- யாழ் மாநகர சபை தேர்தல்
- யாழ் முதல்வர்கள்
- யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலை
- யாழ்தேவி
- யாழ்ப்பாண அரசு
- யாழ்ப்பாண மாநகர சபை
- யோகர் சுவாமி
- யோகி
- ரவிராஜ்
- வரலாறு
- வலம்புரி
- வழிகாட்டிகள்
- வாழ்த்துக்கள்
- வி. தர்மலிங்கம்
- வி.எஸ் துரைராஜா
- விசனம்
- விசுவின் மக்கள் அரங்கம்
- விலகல்
- விவேகானந்தா ஆஷ்ரமம்
- வீரகேசரி
- வெ. யோகேஸ்வரன்
- வெளிவராத என் செய்திகள்
- வேண்டுகோள்
- ஜனநாயகம்
- ஜனாதிபதி
- ஜனாதிபதி கலாம்
- ஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்
- ஜி ஜி பொன்னம்பலம்
- ஷெல்டன் ரணராஜா
- ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா
- ஸ்வாமி மதுரானந்த மகராஜ்
- ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்