Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts
Thursday, May 1, 2014
“எமது இயக்கத்திற்கு ஆத்மபலம் தேவை அதற்காகவே உண்ணாவிரதம்” - கூட்டணித் தலைவர் சிவா
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
சிவாஐயா,
செய்திகள்,
யாழ் பொது நூலகம்
Monday, April 28, 2014
தந்தை செல்வா சமாதியில்!
நேற்று முன்தினம் நடைபெற்ற செல்வா நினைவுப் பேருரை சம்பந்தமான செய்திகள் எதுவுமே இதுவரை வெளிவரவில்லை! என்ன உலகமடா இது!
படங்களைப் பதிவிடுவதில் சில சிக்கல்கள் இருப்பதால் மேலதிக படங்களை இணைக்க முடியவில்லை! மன்னிக்கவும்!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
செய்திகள்,
தந்தை செல்வா
Thursday, December 19, 2013
1999இல் சபரிமலையில் நிகழ்ந்த அனர்த்தம் பற்றிய என் கருத்து!



அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
சபரிமலை,
சுவிஸ் அனுபவம்,
செய்திகள்
Wednesday, June 12, 2013
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 10)
ஆவணப்படுத்தலுக்கு சில முக்கிய பத்திரிகைச் செய்திகளை இணைக்கலாம் எனக் கருதியமையால் அவற்றை இங்கு சேர்த்துள்ளேன்.
16.06.1981 வீரகேசரி “யாழ் பொதுநூலகத்தை எரித்தது காட்டுமிராண்டிச் செயல் - வாசுதேவநாணயக்கார - கூட்டணி எம்பிக்களின் பகிஷ்கரிப்புக்கு ஆதரவு
17.06.1981 ஈழநாடு தாவீது அடிகள் மற்றும் நால்வர் ஆத்மசாந்திக்கு அஞ்சலி அச்சுவேலி தம்பாலையைச் சேர்ந்த பாலசோதி,
கோப்பாய் பயிர்ச்செய்கை உத்தியோகத்தர் பரமேஸ்வரன்,
நீர்வேலி சலவைத் தொழிலாளி கணபதிப்பிள்ளை சண்முகம்,
தெல்லிப்பழை கோவிந்தசாமி சண்முகராஜா
17.06.1981 தினபதி யாழ் கொலை,கொள்ளை, தீவைப்பு சம்பவங்களுக்கு மாநகராளுமன்றம் பலத்த கண்டனம் உறுப்பினர்கள் ஆவேசமான உரை -
தினபதிப்படங்களுக்கு நன்றி – தலையங்கத்துக்குப் பாராட்டு
22.06.1981 தமிழ்த் தேசிய இனத்தைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது ஆயுதப்படையினர் வாபஸ் பெறவேண்டும் - தமிழ்க் காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்
24.06.1981 வீரகேசரி எங்களைக் கண்டதும் பொலிசார் மதில் ஏறிக் குதித்து அப்பால் சென்றனர் - யாழ் பொதுநூல்நிலையக் காவலாளி பொலிஸ் விசாரணையில் தகவல்
6.7.1981 வீரகேசரி அணுகுண்டைவிட ஆத்மீக சக்திக்கு அதிகவலிமை உண்டு - வவுனியா உண்ணாவிரதத்தில் சாவகச்சேரி எம்.பி.
8.7.1981 வீரகேசரி யாழ் நூலக எரிப்பு பற்றி எனக்கும் கவலை உண்டு. ஆனால் கண்டிக்கும் நிலையில் இல்லை. அமைச்சர் என்பதால் அரசின் முடிவகளுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன் என்கிறார் “தேவா”
12.7.1981 யாழ் நூலக புனரமைப்பு நிதிக்கு தாராளமாக உதவுங்கள் - மகாநாயக்க தேரோக்கள், இதிமேற்றிராணிமார் மற்றும் பிரமுகர்கள் வேண்டுகோள்
14.7.1981 ஈழநாடு யாழ் வன்செயல்கள் குவைத் நாட்டுப் பத்திரிகை வெளியிட்ட செய்தி
17.7.1981 தினகரன் யாழ் வன்செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் - கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா
12.10.1981 ஈழநாடு ஈழத்தமிழருக்கு எப்படி உதவலாம் என்பதுபற்றி முடிவு செய்ய அனைத்துக்கட்சி மகாநாடு தமிழக முதல்வர் கூட்டுகிறார் யாழ் நூலகத்துக்கு நூல்கள் வழங்க எம்.ஜி.ஆர் ஏற்பாடு.
15.10.1981 யாழ் மக்களின் கவலையில் நானும் பங்கெடுக்கின்றேன் - யாழ்நகரில் ஆரியரத்னா
8.11.1981 பொதுசனநூலகத்துக்கு 1 1/2 லட்சம் ரூபா நூல்கள் யாழ் கிறீஸ்தவ ஐக்கிய சங்கம் வழங்கும்.
13.12.1981 ஈழநாடு யாழ் பொதுசன நூலக புனரமைப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றும் நாளையும் வீடுகளில் நிதி திரட்டுவர்
21.12.1981 ஈழநாடு யாழ் பொது சன நூலகநிதி - பல்கலைக்கழக மாணவர்கள் ரூ 193,965 சேர்த்தனர்
23.12.1981 வீரகேசரி யாழ் நூலக கட்டிட நிதிக்கு வரிவிலக்குக் கோருகிறார் சூசை
20.1.1981 ஈழநாடு யாழ் நூல் நிலைய புனரமைப்புக்கு நிதி திரட்டும் பணியில் தொழில் பிரமுகர்கள் குழு!
24.2.1982 ஈழநாடு நூலகத்துக்கு வைக்கப்பட்ட தீ தமிழினத்துக்கு ஏற்பட்ட சவால்! இதனைக்கட்டி எழுப்புவது தமிழினத்தின் தூய கடமை - நூலக வார ஆரம்பத்தில் அமிர்
25.02.1982 வீரகேசரி யாழ் பொது நூலகத்தை கட்டிமுடித்து மீண்டும் பூத்துக் குலுங்க வைப்பது தமிழரின் தலையாய கடமை - கொடிதின ஆரம்ப விழாவில் தலைவர் அமிர் கோரிக்கை
25.2.1982 தினபதி யாழ் நூலகவாரத்தையொட்டி வியாழக்கிழமையன்று நூலக கொடி தினம் அனுட்டிக்கப்பட்டது. யாழ் முதல்வர் திரு.இராசா விசுவநாதன் முதலாவது கொடியை எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கத்துக்கு அணிவித்து கொடி விற்பனை தினத்தை ஆரம்பித்து வைத்தபோது எடுக்கப்பட்ட படம்.
3.6.1982 வீரகேசரி தமிழனைத் தமிழனே அழித்துக் கொள்ள வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். யாழ் உண்ணாவிரதத்தில் அமிர் - சரியான தலைமையின்றி தவறான பாதையில் செல்லாதீர்
தினபதி 3.6.1982 யாழ் பொது நூல்நிலையம் எரிக்கப்பட்ட ஓராண்டுப் பூiர்த்தியை முன்னிட்டு நூல்நிலையத்தின் முன்னால் நேற்றுக் கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்து துக்கம் அனுட்டித்தனர். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட யாழ் எம்.பி. திரு. வெ. யோகேஸ்வரன், திரு. நீலன் திருச்செல்வம், மன்னார் எம்.பி திரு. பி.எஸ் சூசைதாசன் , கோப்பாய் எம்.பி. திரு. எம். ஆலாலசுந்தரன் ஆகியோரை முதலாவது படத்தில் காண்க. செல்வா நினைவாலத்தின் முன்னால் தமிழ் ஈழ விடுதலை அணியினரும் மாணவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களில் ஒரு பகுதியினர் இரண்டாவது படத்தில் காணப்படுகின்றனர்.
2.6.1982 தமிழனைத் தமிழன் அழிக்கும் நிலை எமக்குள் நிகழ வேண்டாம் உண்ணாவிரதத்தில் அமிர் கோரிக்கை
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
செய்திகள்,
யாழ் பொது நூலகம்
Monday, May 6, 2013
வெள்ளவத்தை வாகனவிபத்தில் இரு பெண்பிள்ளைகள் உயிரிழப்பு - 5.5.2013

அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
சுவிஸ் அனுபவம்,
செய்திகள்
Saturday, March 5, 2011
சூரிச் முருகன் கோவிலில் சிவராத்திரி!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
சூரிச் முருகன் கோவில்,
செய்திகள்
Monday, October 4, 2010
கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் திறந்துவைப்பு!
செய்தி - 03.10.2010
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகம் கடந்த02.10.2010 சனிக்கிழமை மாலை 4.00மணிக்கு தந்தை செல்வாவின் புதல்வர் திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். தலைவர் திரு. வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) உதய சூரியன் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் தந்தை செல்வாவின் திருவுருவச் சிலையினை மட்டக்களப்பைச் சேர்ந்த திரு மருதநாயகம் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார். பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகத்தை திரு செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் நாடா வெட்டி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய பலரும் கட்சியின் முக்கிய பொறுப்பை சந்திரகாசன் அவர்கள் ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் திரு. சந்திரகாசன் அவர்களை கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு சகல தமிழ்க் கட்சிகளும் ஒரு அமைப்பின் கீழ் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது எனக் குறிப்பட்டார். சகல தமிழ்க்கட்சிகளும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஒரே அமைப்பாக இயங்க முன்வரவேண்டும் எனவும், அதற்குத் தடையாக எனது கட்சியின் தலைமைப்பதவி இருக்கும் என எவராவது கருதினால் நான் எனது தலைவர் பதவியையும் இராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் எனவும் கூறினார். எனவே மக்களின் நலன் கருதி தான் எந்த தியாகத்தையும், செய்தாவது தமிழ்க்கட்சிகளின் ஒன்றிணைவிற்கு ஒத்தாசை நல்குவேன் எனவும் குறிப்பிட்டார்.
எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும் முகமாக இறுதியாக உரையாற்ற வந்த திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆயுட்கால உறுப்பினர் எனவும் எந்த சந்தர்ப்பத்திலும் வேறு கட்சிக்குப் போகவேண்டிய அவசியமில்லை எனவும் சரியான நேரத்தில் நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் உறுதிபடக்கூறினார். தற்போது தமிழகத்தில் தங்கியிருக்கும் எமது உறவுகளின் நலன்களில் முழுநேரமும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற படியால் நேரமின்மையே இதற்குக் காரணம் எனவும் கூறினார். அதுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியை வழி நடத்த வேண்டிய பொறுப்பு திரு ஆனந்தசங்கரிக்கு உண்டு எனவும் ஏனைய மத, இன தலைவர்களாலும், சர்வதேச தலைவர்களாலும் நன்கு மதிக்கப்படுகின்ற தலைவர் ஆனந்தசங்கரி எனவும், இவ்வாறான தலைவர்தான் இப்போதைய சூழ்நிலையில் மக்களுக்குத் தேவை எனவும் குறிப்பிட்டார். ஏனோ தொரியவில்லை நல்ல தலைவர்களைத்தான் அடுத்தவர்கள் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள் எனவும் மக்களும் அதை எளிதில் நம்பி மோசம் போய்விடுகிறார்கள் எனவும் இந் நிலை மாறி நல்லவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க மக்கள் முன்வர வேண்டும், எனவும் விசனத்துடன் குறிப்பிட்டார். ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதி திரு வீ.ஆனந்தசங்கரி என அவர் மேலும் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இறுதியாக திரு. ஏகாம்பரம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவிற்கு வந்தது.
ஊடகச் செயலாளர் - த.கஜன்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகம் கடந்த02.10.2010 சனிக்கிழமை மாலை 4.00மணிக்கு தந்தை செல்வாவின் புதல்வர் திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். தலைவர் திரு. வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) உதய சூரியன் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் தந்தை செல்வாவின் திருவுருவச் சிலையினை மட்டக்களப்பைச் சேர்ந்த திரு மருதநாயகம் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார். பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகத்தை திரு செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் நாடா வெட்டி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய பலரும் கட்சியின் முக்கிய பொறுப்பை சந்திரகாசன் அவர்கள் ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் திரு. சந்திரகாசன் அவர்களை கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு சகல தமிழ்க் கட்சிகளும் ஒரு அமைப்பின் கீழ் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது எனக் குறிப்பட்டார். சகல தமிழ்க்கட்சிகளும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஒரே அமைப்பாக இயங்க முன்வரவேண்டும் எனவும், அதற்குத் தடையாக எனது கட்சியின் தலைமைப்பதவி இருக்கும் என எவராவது கருதினால் நான் எனது தலைவர் பதவியையும் இராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் எனவும் கூறினார். எனவே மக்களின் நலன் கருதி தான் எந்த தியாகத்தையும், செய்தாவது தமிழ்க்கட்சிகளின் ஒன்றிணைவிற்கு ஒத்தாசை நல்குவேன் எனவும் குறிப்பிட்டார்.
எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும் முகமாக இறுதியாக உரையாற்ற வந்த திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆயுட்கால உறுப்பினர் எனவும் எந்த சந்தர்ப்பத்திலும் வேறு கட்சிக்குப் போகவேண்டிய அவசியமில்லை எனவும் சரியான நேரத்தில் நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் உறுதிபடக்கூறினார். தற்போது தமிழகத்தில் தங்கியிருக்கும் எமது உறவுகளின் நலன்களில் முழுநேரமும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற படியால் நேரமின்மையே இதற்குக் காரணம் எனவும் கூறினார். அதுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியை வழி நடத்த வேண்டிய பொறுப்பு திரு ஆனந்தசங்கரிக்கு உண்டு எனவும் ஏனைய மத, இன தலைவர்களாலும், சர்வதேச தலைவர்களாலும் நன்கு மதிக்கப்படுகின்ற தலைவர் ஆனந்தசங்கரி எனவும், இவ்வாறான தலைவர்தான் இப்போதைய சூழ்நிலையில் மக்களுக்குத் தேவை எனவும் குறிப்பிட்டார். ஏனோ தொரியவில்லை நல்ல தலைவர்களைத்தான் அடுத்தவர்கள் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள் எனவும் மக்களும் அதை எளிதில் நம்பி மோசம் போய்விடுகிறார்கள் எனவும் இந் நிலை மாறி நல்லவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க மக்கள் முன்வர வேண்டும், எனவும் விசனத்துடன் குறிப்பிட்டார். ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதி திரு வீ.ஆனந்தசங்கரி என அவர் மேலும் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இறுதியாக திரு. ஏகாம்பரம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவிற்கு வந்தது.
ஊடகச் செயலாளர் - த.கஜன்
Saturday, June 5, 2010
அமிர் குடும்பத்தினரின் இலங்கை விஜயம்
மறைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் - முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் அ. அமிர்தலிங்கம் அவர்களின் மனைவியார் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இளைய மகன் வைத்திய கலாநிதி அமிர்தலிங்கம் பகீரதன் அவர்களும் கடந்த வாரம் இலங்கைக்குச் சென்றிருந்தனர். பிபிசி வானொலியின் ஆவணத் தயாரிப்புக்காக அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளுக்கு - ஊடகங்கள் வழமைபோல தமது கற்பனையில் செய்திகளை தயாரித்து வழங்கியிருந்தன. அமரர் அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றிய இந்த ஆவணத் திரட்டலில் அரசு யாழ்ப்பாணத்திற்கு அனுமதி வழங்காத நிலையில் கொழும்பில் தங்கியிருந்து ஒரு சில தலைவர்களைச் சந்தித்துவிட்டு உடனடியாகவே அவர்கள் நாடு(இங்கிலாந்து) திரும்பினர்.
(இரா. சம்பந்தன் மாவை சேனாதிராசா ஆகியோருடன்)
பேசுவதற்கு வருகிறோம் என்று சொல்லி விருந்தாளிகளாக வந்து உபசார நேரத்தில் துப்பாக்கியால் சுட்டபோது அமிர்தலிங்கம் அவர்களும் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரன் அவர்களும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். தலைவர் சிவசிதம்பரம் காயங்களுடன் தப்பித்தார். விருந்தாளிகளாக வந்த மூன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் காவற் கடமையில் நின்றிருந்த பொலிசார் சுட்டுக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.
அமரர் அமிர்தலிங்கம் அவர்களுடைய வரலாற்றுப் பதிவில் கொலையாளிகளைத் தப்பிக்கவிடாது சுட்டுக்கொன்ற முக்கிய கடமையைச் செய்த பொலிஸ் சார்ஜன்ட் நிசங்க அவர்களை பிபிசி நிருபரும் நேரடியாகச் சென்று நடந்த விடயங்களைப் பதிவு செய்திருக்கிறார். இதை பத்திரிகைகள் வழமைபோல சிண்டுமுடிக்கும் விளையாட்டாக செய்திப்பரிமாற்றம் செய்துள்ளன.
இந்த விஜயத்தின் பின்னர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
பத்திரிகைச் செய்தி
பல ஆண்டுகளின் பின் இலங்கை வந்த நான், மக்கள் துன்ப துயரங்களுக்கு மத்தியிலும் போர்ச்சூழல் இல்லாமல் இருப்பதையிட்டு நிம்மதியடைகிறேன். அதேநேரத்தில் இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், முக்கியமாக வன்னிப் பிரதேச மக்கள் தகுந்த முறையில் மீளக்குடியமர்த்தப்படவும், அவர்தம் வாழ்வு புனரமைக்கப்படவும் வேண்டிய அத்தியாவசியத்தையும் அறிந்து கொண்டேன. நான் யாழ்ப்பாணம் செல்ல முடியாத நிலையிலிருந்த போதும் பலரையும் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் மூலம் எம்மக்களின் தற்போதைய உணர்வுகளையும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
இன்றைய காலகட்டத்தில் மக்களின் புனர்வாழ்வுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியிருந்தாலும் எம் மக்களின் அடிப்படை அரசியல், அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டியது மிக அவசியமானது. 50ம் ஆண்டுகளிலிருந்து தந்தை செல்வாவும், எனது கணவரும் மன்னெடுத்த அரசியல் உரிமைப் போராட்டம் இன்னமும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாகவே உள்ளது. இதை இன்றைய அரசாங்கம் கவனத்தில் கொண்டு சர்வதேசம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்னெடுத்து அமுல் நடத்தவேண்டுமென ஜனாதிபதி அவர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோளாகும்.
நன்றி
Press Release
Impressions and expectations of Mrs. M Amirthalingam (widow of late Mr. A Amirthalingam)
After a long time, I returned to Sri Lanka . I could see our people were more relaxed and were living without any difficulties and in an environment reasonably conducive to survive. At the same time our people who have been affected by the conflict have to be resettled in a habitable environment. I understood the need for their redress and re-establish the old life style. In spite the fact I could not go to Jaffna , I was able to meet knowledgeable and informed people and understood and discussed their feelings, desire and the keenness for their renewal of the economic activities and lifestyle.
In today’s situation, resettlement of our people is of paramount importance. At the same time, their long term political expectations should be met.
In 1950s, our renowned leader, late SJV Chelvanayakam and my husband initiated and fought for the political rights of Tamil people. The problems existed then persist even today. The present government’s priority should be to understand the variety of problems and settle those in a manner acceptable to the Tamils and the international community. This is the request from the depth of my heart to President Mahinda Rajapaksa and I earnestly hope he will deal with these problems and establish long term peace and tranquillity in Sri Lanka .
Mrs.M.Amirthalingam
Note to Editors:
Mrs. Amirthalingam and her younger son, Dr. Baheerathan Amirthalingam have been on a short visit to Sri Lanka to take part in a BBC World Service Radio Documentary. While Mrs. Amirthalingam has visited Sri Lanka before, it is the first time Dr. Baheerathan visited the Country after the assassination of his father, late Mr. A. Amirthalingam


நிசங்க அவர்களுடன் அமிர்தலிங்கம் அவர்கள்
(இரா. சம்பந்தன் மாவை சேனாதிராசா ஆகியோருடன்) பேசுவதற்கு வருகிறோம் என்று சொல்லி விருந்தாளிகளாக வந்து உபசார நேரத்தில் துப்பாக்கியால் சுட்டபோது அமிர்தலிங்கம் அவர்களும் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரன் அவர்களும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். தலைவர் சிவசிதம்பரம் காயங்களுடன் தப்பித்தார். விருந்தாளிகளாக வந்த மூன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் காவற் கடமையில் நின்றிருந்த பொலிசார் சுட்டுக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.
அமரர் அமிர்தலிங்கம் அவர்களுடைய வரலாற்றுப் பதிவில் கொலையாளிகளைத் தப்பிக்கவிடாது சுட்டுக்கொன்ற முக்கிய கடமையைச் செய்த பொலிஸ் சார்ஜன்ட் நிசங்க அவர்களை பிபிசி நிருபரும் நேரடியாகச் சென்று நடந்த விடயங்களைப் பதிவு செய்திருக்கிறார். இதை பத்திரிகைகள் வழமைபோல சிண்டுமுடிக்கும் விளையாட்டாக செய்திப்பரிமாற்றம் செய்துள்ளன.
இந்த விஜயத்தின் பின்னர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
பத்திரிகைச் செய்தி
பல ஆண்டுகளின் பின் இலங்கை வந்த நான், மக்கள் துன்ப துயரங்களுக்கு மத்தியிலும் போர்ச்சூழல் இல்லாமல் இருப்பதையிட்டு நிம்மதியடைகிறேன். அதேநேரத்தில் இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், முக்கியமாக வன்னிப் பிரதேச மக்கள் தகுந்த முறையில் மீளக்குடியமர்த்தப்படவும், அவர்தம் வாழ்வு புனரமைக்கப்படவும் வேண்டிய அத்தியாவசியத்தையும் அறிந்து கொண்டேன. நான் யாழ்ப்பாணம் செல்ல முடியாத நிலையிலிருந்த போதும் பலரையும் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் மூலம் எம்மக்களின் தற்போதைய உணர்வுகளையும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
இன்றைய காலகட்டத்தில் மக்களின் புனர்வாழ்வுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியிருந்தாலும் எம் மக்களின் அடிப்படை அரசியல், அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டியது மிக அவசியமானது. 50ம் ஆண்டுகளிலிருந்து தந்தை செல்வாவும், எனது கணவரும் மன்னெடுத்த அரசியல் உரிமைப் போராட்டம் இன்னமும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாகவே உள்ளது. இதை இன்றைய அரசாங்கம் கவனத்தில் கொண்டு சர்வதேசம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்னெடுத்து அமுல் நடத்தவேண்டுமென ஜனாதிபதி அவர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோளாகும்.
நன்றி
Press Release
Impressions and expectations of Mrs. M Amirthalingam (widow of late Mr. A Amirthalingam)
After a long time, I returned to Sri Lanka . I could see our people were more relaxed and were living without any difficulties and in an environment reasonably conducive to survive. At the same time our people who have been affected by the conflict have to be resettled in a habitable environment. I understood the need for their redress and re-establish the old life style. In spite the fact I could not go to Jaffna , I was able to meet knowledgeable and informed people and understood and discussed their feelings, desire and the keenness for their renewal of the economic activities and lifestyle.
In today’s situation, resettlement of our people is of paramount importance. At the same time, their long term political expectations should be met.
In 1950s, our renowned leader, late SJV Chelvanayakam and my husband initiated and fought for the political rights of Tamil people. The problems existed then persist even today. The present government’s priority should be to understand the variety of problems and settle those in a manner acceptable to the Tamils and the international community. This is the request from the depth of my heart to President Mahinda Rajapaksa and I earnestly hope he will deal with these problems and establish long term peace and tranquillity in Sri Lanka .
Mrs.M.Amirthalingam
Note to Editors:
Mrs. Amirthalingam and her younger son, Dr. Baheerathan Amirthalingam have been on a short visit to Sri Lanka to take part in a BBC World Service Radio Documentary. While Mrs. Amirthalingam has visited Sri Lanka before, it is the first time Dr. Baheerathan visited the Country after the assassination of his father, late Mr. A. Amirthalingam


நிசங்க அவர்களுடன் அமிர்தலிங்கம் அவர்கள்
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
செய்திகள்,
தலைவர் அமிர்
Subscribe to:
Posts (Atom)





























