அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Thursday, May 1, 2014

“எமது இயக்கத்திற்கு ஆத்மபலம் தேவை அதற்காகவே உண்ணாவிரதம்” - கூட்டணித் தலைவர் சிவா


(ஈழநாடு 8.7.1981 புதன்கிழமை 5ஆம்பக்கச் செய்தி)

மன்னாரில் இன்று நடைபெறும் உண்ணாவிரதம் 5வது உண்ணாவிரதமாகும். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் நடைபெற்ற உண்ணாவிரதங்களை விட மன்னாரில் நடைபெறும் உண்ணாவிரதம் 2 அம்சங்களால் சிறந்து விளங்குகின்றது. ஒன்று, அதிகளவு வணக்கத்திற்குரிய குருமார்களும், சங்கைக்குரிய சகோதரிகளும் கலந்து கொண்டது. இரண்டாவது இவ்வுண்ணாவிரதத்தில்தான் அதிகளவு இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.

இவ்வாறு திருக்கேதீஸ்வரம் மாந்தைச் சந்தியில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவரும், நல்லூர் எம்.பி.யுமான திரு. எம். சிவசிதம்பரம் கூறினார்.

மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்தும் வாகனங்களிலும் சைக்கிள்களிலும் சுமார் 1500 பேர்வருகை தந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். கைக்குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை ஏணைகட்டி, தங்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள் இருக்கவென 200 அடிநீளம் 200 அடி அகலமான பந்தலை எள்ளுப்பிட்டி தமிழர் விடுதலைக் கூட்டணி இளைஞர்கள் அமைத்திருந்தனர்.

உண்ணாவிரதத்தை மாந்தைச் சந்தியிலிருந்து பொலிசார் கண்காணித்தனர்.

தொடர்ந்து உரையாற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவரும், நல்லூர் எம்.பி.யுமான திரு. எம். சிவசிதம்பரம் கூறியதாவது “எமது இயக்கத்திற்கு ஆத்மபலம் தேவை. அதற்காக நாம் உண்ணாவிரதங்களை எல்லாத்தேர்தல் தொகுதியிலும் நடத்தி வருகின்றோம்.

“எரிக்கப்பட்ட யாழ் பொது நூலகத்தை ஈடுசெய்ய முடியாது. இந்த நூல் நிலையத்தில் முதல்முதல் தமிழில் அச்சிடப்பட்ட பைபிள் இருந்தது. இப் பைபிளை கோடி மூபா கொடுத்தாலும் வாங்க முடியாது. யாழ்ப்பாண சரித்திரத்தைப்பற்றி 4 நூல்கள் இருந்தன. இவை எல்லாம் எரிக்கப்பட்டன. நூல்நிலையத்திலுள்ள நூல்களையெல்லாம் குடித்தவெறி முடியுமட்டும் எரித்தார்கள்! எதையும் நாம் மறப்போம். ஆனால் நூல் நிலையத்தை எரித்ததை மட்டும் மறக்க மாட்டோம்.”

“தமிழ் மக்கள் அறிவைப் போற்றுபவர்கள். அறிவை வணங்குபவர்கள். நாம் கல்விக்காக எதையும் செய்வோம். நூல் நிலையம் எரிக்கப்பட்டது பொலிசாரினால் செய்யப்படவில்லை. திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளது.”

“1970ஆம் ஆண்டு கூடுதலான தமிழ் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள் என்று அவர்களின் கல்வியை வளரவிடாது செய்ய தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. தமிழர்கள் பல்கலைக் கழகம் செல்லக்கூடாது என்று எண்ணிய அமைச்சர் சிறில் மத்தியூ மீண்டும் தரப்படுத்தலை அமுல் செய்தார். வறுமையாலும், வசதியில்லாததாலும், பல மாணவர்கள் யாழ் நூல்நிலையத்திற்குச் சென்று அறிவைப் பெற்றனர். இதனை அழிக்கவெனவே திட்டமிட்டு யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்டது” என்றார்.

மன்னார் எம். பி. திரு. பி.எஸ். சூசைதாசன் கூறியதாவது – “ஆயுதபலத்தைவிட ஆத்மபலமே மேலானது. ஆதனால்தான் இறைவனை வேண்டி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளோம். எமது குறைகளை இறைவனிடம் முறையிட்டு எம் போராட்டத்தை ஆரம்பிப்போம்.

வேலியே பயிரை மேய்வது போல எமது நாட்டைப் பாதுகாப்பவர்களே யாழ் நூலகத்தை எரித்தனர். எமது கல்விவளம், வியாபாரவளம், அரசியல் சுதந்திரம், குடியிருப்பு வீடுகள் எல்லாம் அழிக்கப்பட்டன. யாழ்ப்பாண எம்.பி.யின் வீடும் எரிக்கப்பட்டது. அவரும் அவரது மனைவியும் மயிரிழையில் உயிர்தப்பினர். இவற்றை எல்லாம் ஊருக்கும் உலகிற்கும் எடுத்துக் காட்டவே உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

திருமலை எம்.பி. திரு. இரா. சம்பந்தன் தமதுரையில் கூறியதாவது – யாழ் நூல் நிலையத்தில் எரியாத புத்தகங்களை எரியும் புத்தகங்களுடன் சேர்த்து எரித்தனர். எமது கட்சியின் தலைமையகம் எரிக்கப்பட்டது. “ஈழநாடு” தினப்பதிப்பு நிலையம் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாண எம்.பி.யின் வீடு எரிக்கப்பட்டது. பல கடைகள் எரிக்கப்பட்டன. பல இளைஞர்கள் காரணமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டனர். எமது கட்சித் தலைவரின் வீட்டின் விறாந்தையில் படுத்திருந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

யாழ்நகரில் இடம்பெற்ற சம்பவங்கள் அறியாமல் நடந்தது என அரசு கூறுகிறது. ஒரு நாள் நடந்திருந்தால் அரசு சொல்வதை நாம்ஏற்கலாம். ஆனால் தொடர்ந்து 6 நாட்கள் அட்டூழியம் நடந்துள்ளது. ஆதலால் அரசு சொல்வதை எம்மால் நம்பமுடியாது. இச்சம்பவங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இந்த ஆட்சியாளர் எப்படி செயற்படுகிறார்களோ அப்படியே காவல் படையினரும் செயல்படுகின்றனர்.

பட்டிருப்பு எம்.பி. திரு. பூ. கணேசலிங்கம் தமதுரையில் - அண்மையில் நடந்த அட்டூழியங்கள் வவுனியா, திருமலை, அம்பாறை போன்ற தமிழீழ எல்லைகளில்தான் நடக்கும். யாழ்ப்பாணமும், மட்டக்களப்பும் தான் தமிழருக்குப் பாதுகாப்பான இடம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் இப்போது எமது பாதுகாப்பான இடத்திலேயே தமிழ் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு இந்த அரசு பாதுகாப்பளிக்க மாட்டாது. ஆதலால் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கோப்பாய் எம்.பி. திரு. ஆலாலசுந்தரம் தமதுரையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சம்பவங்களைப் போல் பல வருடங்களுக்கு முன்பும் தமிழருக்கு இன்னல்கள் விளைவிக்கப்பட்டன. இதைப் போல் வேறு இடங்களிலும் நடைபெறலாம் என்றார்.

Monday, April 28, 2014

தந்தை செல்வா சமாதியில்!

நேற்று முன்தினம் நடைபெற்ற செல்வா நினைவுப் பேருரை சம்பந்தமான செய்திகள் எதுவுமே இதுவரை வெளிவரவில்லை! என்ன உலகமடா இது!

படங்களைப் பதிவிடுவதில் சில சிக்கல்கள் இருப்பதால் மேலதிக படங்களை இணைக்க முடியவில்லை! மன்னிக்கவும்!

Thursday, December 19, 2013

1999இல் சபரிமலையில் நிகழ்ந்த அனர்த்தம் பற்றிய என் கருத்து!



(இக்கட்டுரை 1999 பெப்ரவரி மாதத்தில் எழுதப்பட்டது. வேலைப்பளு காரணமாக இதனை நான் கட்டுரையாக குறிப்பிட்ட தினகரன் பத்திரிகைக்கு அனுப்பவில்லை! ஆனால் தற்போது எனது மனத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்தில் எடுத்து இதனைப் பதிவிடுகிறேன்! தயவுசெய்து யாரும் மனம் நோக வேண்டாம்! ஏனக்குத் தோன்றுவதை நான் செய்வதற்கு எனக்கு உரிமை உள்ளது என்ற நிலைப்பாட்டில் இதனைப் பதிவிடுகிறேன்.)

"இந்தியா செல்லும் இந்து யாத்திரிகர்களின் நலன்காக்க இந்து கலாசாரத் திணைக்களம் ஏன் முன்வருவதில்லை?" என்றும், “சபரிமலை அனர்த்தத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வோம்” என்றும் தலைப்பிட்டு 07.02.1999 தினகரன் வாரமஞ்சரியிலும், அதற்குப் பதிலளிக்கத்தக்க முறையில் 'இந்து யாத்திரிகர்களும் இந்து கலாசாரத் திணைக்களமும்' "வளமும் அதிகாரமும் இருந்தால் செய்து காட்டுவோம்" என்று 14.02.1999 தினகரன் வாரமஞ்சரியிலும் வெளியான கட்டுரைகளுக்கு ஒரு விதத்தில் பதிலளிக்க வேண்டிய ரீதியிலேயே இக்கட்டுரையை எழுத விரும்புகின்றேன். இதனால் எவருக்கேனும் மனத்தாங்கல் ஏற்படுமாயின், அதற்காக ஐயனிடத்தில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற போது நானும் பம்பைக் கரையிலே மகர ஜோதியைப் பார்த்தவன். இன்று வரை சரியான செய்தி கிடைக்கவுமில்லை. எமக்கு அது பற்றி தெரிய வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படவில்லை என்றே வெளிப்படையாக உண்மையைக் கூற வேண்டும். குறிப்பிட்ட பகுதியிலே வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். தெளிவாக மகர ஜோதியைப் பார்ப்பதற்கு இந்தப் பகுதியில் கூட்டம் கூடுவது சர்வசாதாரணமானதே. ஆனாலும் இம்முறை அளவுக்கதிகமான பக்தர்கள் கூடியிருந்தமையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களது சோதனை நடவடிக்கை. மற்றும் பல்வேறுபட்ட காரணங்களின் நிமித்தம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலில் ஒரு உண்மையை நான் கூறவேண்டும். நான் சபரிமலை யாத்திரை மேற்கொண்டாலும் சரி. கூட்டமாகக் குழுவாக மேற்கொண்டாலும் சரி. யாத்திரிரை மேற்கொள்ள மாலை அணியும் போது எமது மனங்களிலே ஏற்படும் திடமான ஒரு நம்பிக்கையும், லட்சியமும் - நாம் சபரிமலை சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் கலியுக வரதனுக்கு நெய் அபிஷேகம் செய்வித்து அவன் திவ்ய தரிசனக் காட்சியைக் காணவேண்டும் என்பதுடன் மகர சங்கிராந்தியில் அன்று தோன்றும் ஜோதியையும் விளக்கையும் தரிசிக்க வேண்டும் என்பதே. இக்காட்சியைக் கண்டபின்பே நாம் எமது ஏனைய குடும்ப அல்லது தனிப்பட்ட விடயங்களைச் செய்ய முற்படுவோம். மேலும் யாத்திரை புறப்படும் வேளையில் சுவாமியே சரணம் என்று சொல்லித்தான் புறப்படவேண்டுமே அன்றி போய்வருகின்றேன் என்று கூறல் ஆகாது. நாம் இந்து சமயத்தவர்கள். சனாதன தர்மத்தின்படி, எமது பிறவிக் கோட்பாடுகளின்படி, நாம் செய்த வினைகளுக்கேற்ற முறையில் எமக்குப் பிறவிகள் உண்டு என்பதும், மரணம் என்பது என்றோ ஒருநாள் நிச்சயம் உண்டு என்பதும், அது எப்போது என்பதை நிர்ணயம் செய்பவன் தர்மவான் என்று சொல்லப்படும் யமனுடைய கடமை என்பதும் அறிந்த விடயம்.


சபரிமலைப் புனித யாத்திரை செய்கின்ற ஓர் சுவாமி தேவவியோகம் அடைந்தால் அந்த ஆத்மா நிச்சயம் ஐயனுடைய பரிப+ரண அருளுக்குப் பாத்திரமாகி பேரின்பப் பெருவாழ்வு அடையும் என்பது முடிந்த முடிபு. கடந்த வருடம் (1997-1998இல்)எமது குழுவினருடன் யாத்திரை செய்த இலட்சுமணண் சுவாமி கரிமலையில் தேகவியோகம் ஆகியதை நாம் நினைவு கூர வேண்டும். அவருக்கு மயக்கம் ஏற்பட்ட போது எமது குழுவில் இருந்த ஓரிரு சுவாமிகளும் வெளிநாட்டு சுவாமி ஒருவருமே அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்தனர். எனினும் அவரது உயிர் பிரிந்த பின்பும் கூட அவரது உடலை எப்படியாகிலும் இலங்கைக்கு எடுத்துவர வேண்டும் என்ற ஆதங்கத்துடன் பெரும் பிரயத்தனம் செய்து அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தொண்டர்களின் உதவியுடன் அவரது உடலை பம்பையில் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு வந்து பின்னர் இலங்கைக்குக் கொண்டுவர முடிந்தது. அவரது பூதவுடலைக் கொண்டு வர முடிந்தமைக்காக காரணம் அவருக்கு அருகில் அந்த நேரத்தில் எமது குழுவினர் இருந்தமையால்தான். இல்லாவிட்டால் அவரது உடலை அருகே பள்ளத்தில் தள்ளி விட்டிருப்பார்கள். இது ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் “எம்மவர்களில் பலர் மாலை அணிந்திருக்கும் போது சில விடயங்களைத் தவிர்ப்பதும் அவை தீட்டு ‘குற்றம்’ எனக் கருதுவதும் மனிதாபிமான அடிப்படையில் தவறாகும்” என்பது எனது கருத்து. இறைவன் கருணை வடிவானவன். சபரிமலை யாத்திரையின் போது ஏழை, பண்காரன், பெரியவன் சிறியவன், உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்ற எண்ணம் எல்லாம் மறையப் பெற்று நாம் அனைவரும் ஒரு குலம் என்ற ஒற்றுமை வலுப்பெறுகின்றது. மக்கள் அனைவரும் ஒரு குலம். இறைவன் அனைவருக்கும் பொதுவானவனே. அவனது சந்நிதியில் அனைவரும் சமமே. அதுவே உண்மையான ஜீவாத்மா, பரமாத்மா சங்கமம். அதுவே தத்வமஸி எனும் மகா வாக்கியத்தின் பொருளுமாகும்!


ரிஷி அவர்களின் கட்டுரையின் ஆரம்பத்திலேயே “பக்தர்களில் 52 பேர் தத்தமது வீடுகளுக்கு உயிருடன் திரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். வருடாவருடம் சபரிமலையில் பலர் மாரடைப்பினாலும் நெரிசலில் சிக்குண்டும் சரணமடைந்திருப்பினும் இம்முறை குறிப்பிட்ட அனர்த்தத்தால் பலர் சரணமடைந்துள்ளனர். இதற்கான காரணத்தை நாம் விரிவாக ஆராய வேண்டும்.

பிரார்த்தனை என்பது வீண்போவதில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு எமது பிரார்த்தனைகள் பக்தி ப+ர்வமாக அமைகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு பலன்களையும் நாம் எதிர்பார்க்க முடியும். உதாரணமாக எனது அனுபவத்தில் நான் கண்ட அனுபவங்களையும் பெற்ற பேறுகளையும் கண்டிப்பாக சொல்லியே தீர வேண்டும்.

முதலில் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டுமாயின் இலங்கை பக்தர்களுக்குக் கடவுச்சீட:டும், இந்தியா செல்வதற்கான அனுமதியும் “விசா”வும், குறிப்பிட்ட தினத்தில் யாத்திரை மேற்கொள்ள விமானப் பயணச் சீட்டும் அவசியம். இம்மூன்றையும் சரிவரப் பெற்றபின்னர் தான் இந்தியா சென்று எமது யாத்திரையைத் தொடர முடியும். கார்த்திகை முதலாம் நாள் மாலையணிந்த சபரிமலை யாத்திரையைத் தொடங்குவதே பண்டைய நெறிமுறை. அதற்கேற்ற வகையிலேயே ஸ்ரீஐயப்ப சன்னிதானமும் கார்த்திகை முதலாம் நாளில் இருந்து மண்டலப் பூர்த்தி வரை “41 நாட்கள்” ஆலயம் திறந்திருக்கும். அதன் பின் மகரஜோதி தரிசனத்திற்காக ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 20 நாட்களுக்கு 20ஆம் திகதிவரை திறந்திருக்கும்.

எனக்குக் கரிமலை இறக்கத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை நான் முக்கியமாக குறிப்பிட்டே ஆக வேண்டும். ஐயனின் திருவருளுக்கும் எனது பற்றற்ற வாழ்க்கைக்கும் இது உதாரணமாகும். ஸ்ரீபம்பா விக்னேஸ்வரா சத்தியாலாயா குழுவினரால் நடாத்தப்படுகின்ற அன்னதானத்தில் நானும் பங்குகொண்டு அடியார்களுக்கு உணவு பரிமாறுவதில் உதவ சீக்கிரமாக நடந்து சென்று உதவ வேண்டும் என்ற ஆதங்கப்பட்டு முன்பு இரு தடவைகள் பங்கேற்றது போலு இம்முறையும் வழக்கத்திற்கு மாறாக ஒரே நாளில் எருமேலியில் இருந்து பம்பைக்குச் செல்ல முடிவு செய்து இன்னோர் பழமலை சுவாமியுடன் யாத்திரையைத் தொடர்ந்தேன். முதல் தடவை நாம் எருமேலியில் இருந்து ஆரம்பித்து அழுதையிலும் கரியிலம்pதோட்டிலும் தங்கியே பம்பையை அடைந்தோம். இரண்டாவது முறை அழுதையில் தங்கி கரியிலந்தோட்டில் தங்காது பெரியாணை வட்டத்தில் மழையில் நனைந்து பம்பையை அடைந்து அன்றிரவு முழுவதும் நல்ல காய்ச்சலினால் அவதிப்பட்டு அடுத்தநாள் ஊசி மருந்து எடுத்ததன் மூலம் சுகமாகி முதன் முதல் அன்னதானத்தில் பங்கு கொண்டு பணிசெய்தேன். கடந்த தடவை எவ்வித தடங்கலுமின்றி அழுதையில் தங்கி கரிவலந்தோட்டில் சக்தி ப+சைக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்துதவி செய்தபின் பம்பையை அடைந்து அன்னதானத்தில் பங்கு கொண்டேன். இம்முறை அழுதையிலும் தங்காது புறப்பட்டு முக்குளித் தாவளத்தில் அம்மன் கோவிலில் வைத்து என்னுடன் கூடவே வந்த பழமலை சுவாமியைவிட்டுப் பிரிந்து அவரைத் தேடிக் காணாமல் எனது யாத்திரையைத் தொடரவும் மழை ஆரம்பிக்கவும் ஒரு தாவளத்தில் தங்கினேன். மழையையும் பொருட்படுத்தாமல் பலர் தமது யாத்திரையைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். நானும் தொடர ஆயத்தமான வேளையில் இரண்டு ஐயப்ப சேவா தொண்டர்கள் பெரிய தடியொன்றில் வேட்டியை மடித்துக் கட்டி “ஏணை போல” ஒருவரைத் தூக்கிச் செல்ல ஒரு வயதுபோன அம்மா சுவாமி தொடர்ந்து கண்ணீர் வடித்துச் செல்வதைக் கண்டு அங்கேயே தங்கிச் செல்ல முடிவு செய்தேன். பதினைந்து ரூபா தங்குவதற்கு வாடகை கொடுத்து விரிப்பு எடுத்தேன். அதிகாலை நான்கு மணிகெல்லாம் சரியாக யாத்திரையைத் தொடர்ந்து கரிவலந்தோடு தாண்டி கரிமலை ஏற்றமும் ஏறி பின் இறக்கத்தை அடைந்தேன். மழை பெய்திருந்த காரணத்தாலும் அந்த இறக்கம் மிகவும் ஆபத்தானதாக இருந்தமையாலும் மிகவும் அவதானத்துடன் மிக மெதுவாக இறங்கிச் சென்ற வேளையில் ஓரிடத்தில் கூட்டம் அதிகமாகி ஒவ்வொருவராக இறங்க கவனமாக நடந்து கொண்டிருந்த வேளையில் என்பின்னால் சரக் சரக் என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்ப்பதும் பின்பு கவனமாக இறங்குவதிலும் அவதானமாயிருந்தேன். பலர் இடிபட்டுக் கொண்டிருந்தார்கள். எனது சோல்னாப் பையை சரிசெய்து கொண்டு இறக்கத்தில் இறங்கி “இந்த வேளையில் நாம் எமது இரு கைகளாலும் இருமுடி சரிந்து விழாவண்ணம் பிடித்துக் கொண்டு கண்களைப் பாதையில் நிலைப்படுத்தி சரணம் விழித்துக் கொண்டு சமனிலையைப் பேணிபடி நடந்து செல்வோம். பெரியாணை வட்டம் தாண்டியப pன் சிறியாணை வட்டத்தில் வத்தகைப் பழத்தின் நீர் குடிப்பதற்காக இருமுடியை இறக்கி வைக்க எனது சோல்நாப் பையைக் கழற்றிய போது தாவளத்தில் இருந்த ஒரு மணிகண்ட சுவாமி எனது சோல்னாப் பையை யாரோ வெட்டியிருக்கிறார்கள் என்று கூறவும் அப்போதுதான் என்னிடம் குருசுவாமி தந்த ரூபா 10,000 இருப்பது ஞாபகத்துக்கு வந்தது. அவசரம் அவசரமாக இருமுடியை இறக்கி வைத்துவிட்டு சோல்னாப்பையைப் பார்த்தபோது பம்பா கணபதிக்கு அடிக்க வேண்டிய தேங்காயும் கற்ப+ரமும் முன்பாகத் தெரிந்தது. கைப்பையின் உள்ளே பத்திரமாக நூறு ரூபாத் தாள்கள் கட்டாக குருசுவாமி தந்த பணம் அப்படியே இருந்தது. பின்னர் அந்த சுவாமியின் கூற்றுப்படி தலையிலேயே வேட்டி ஒன்றினுள் சோல்னாப் பையை வைத்து அதன்மீது இருமுடியை வைத்து பம்பை நதிக்கரையை அடைந்த போது ஒருநாளும் இல்லாதவாறு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. கன்னிமூலகணபதிக்கு முன்பாக இருந்த படிக்கட்டினால் மாத்திரமே பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அதிலும் சந்தேகத்திற்கு இடமான பக்தர்களின் சோல்னாப் பைகள் சோதனையிடப்பட்டன. விமான நிலையத்தில் இருப்பது போல பம்பா கணபதி ஆலய சுற்றுவட்டத்தில் சோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அதனூடாகவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இது நடந்தது 13.01.1999 புதன்கிழமை. ஒருசில முக்கிய பிரமுகர்களுக்காக (“V.I.P”) வருகின்ற அத்தனை அடியார்களையும் சோதனையிடுவது ஒரு முறையான செயல் அல்ல. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்கள் ஒன்றுடனொன்று தொடர்புபடுத்திப் பார்க்கும்போது அனர்த்தத்துக்கு போதுமான காரணங்கள் பல கிடைக்கும்.

எமது யாத்திரைக் குழு மகர சங்கிராந்தி தினத்தன்று பம்பையில் தங்கி - ஜோதி பார்த்த மறுதினம் அன்னதானம் - பம்பா சக்தி மற்றும் பம்பா விளக்கு நிறைவு செய்து அடுத்த நாள் அதிகாலையிலேயே சுவாமி தரிசனத்திற்காக சபரிமலை சென்று நெய்யபிஷேகம் செய்வித்து அதன்பின் அலங்கார ரூபத்திலிருக்கும் ஐயனைத் தரிசித்து இரவு பம்பைக்கு வந்து புறப்படுவது வழக்கம்.


ஜோதி பார்த்தவுடனேயே பலர் மலைக்குச் செல்வதற்கும், பலர் வீடு திரும்புவதற்கும் ஆயத்தமாகி நெருக்கியடித்துக் கொள்ளுவது வழமை. மழைபெய்திருந்த காரணத்தாலும், தற்காலிகமாக வெட்டிச் சமப்படுத்திய மணற்திட்டிகள் கூட்டத்தின் பாரத்தால் சரிந்து கீழே இருந்தவர்கள் மீது விழுந்தமையாலேயே மூச்சுத் திணறி இப்பரிதாபகரமான நிகழ்வு நிகழ்ந்தது. மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படும் என்ற செய்தியுடன் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பினும் இன்றுவரை சரியான காரணத்தை எவரும் அறிவிக்க வில்லை. இந்தச் சம்பவத்திற்கும் இங்கு நம்நாட்டில் உள்ள இந்துக் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும் முடிச்சுப் போடுவதுதான் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆலயம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகப் பூசைகள் இன்றிப் பூட்டப்பட்டு இருக்கின்றது. இங்கு நடைபெறும் மார்கழிமாத இராமர் பஜனைப் பிரச்சினையால் இந்த ஆலயம் இந்நிலைக்க ஆளாகியது. ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் தான் நான் சபரிமலைக்குக் கொண்டுபோகும் தேங்காயை பூசையில் வைத்து எடுத்துச் செல்வது வழக்கம். கடந்த வருடத்திற்கு முன்னரே 1997 இல் சபரிமலை யாத்திரையை நிறைவு செய்து கொண்டு திரும்பிய பின் இந்த ஆலயத்தில் வைத்தே எனது பிரசாதத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஓடோடிச் சென்ற போது ஆலயம் பூட்டப்பட்டு இருந்தது. அதன்பின் கடந்த வருடமும் நான் உள்ளுராட்சித் தேர்தல் முடித்துக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வந்தபின் சென்றேன். அப்போதும் ஆலயம் பூட்டப்பட்டிருந்தது. கடந்த 16.04.1998 அன்று இவ்வலயத்தில் தீவிபத்து ஒன்று நடந்ததைச் சுட்டிக்காட்டி செயலாளருக்கு அவ்வாலயத்தின் அறங்காவலர் “தலைவர்” எழுதிய பிரதி இந்தத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தும் இதுவரை எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுத்தாகத் தெரியவில்லை. குறிப்பிட்ட ஆலயத்தின் அனுசரணையோடு நடைபெறும் அறநெறிப் பாடசாலையின் போசகராக நான் முன்னர் இருந்தேன். 23.10.1994 இல் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்டத்தில் இந்து சமயப் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த 7 அறநெறிப் பாடசாலைகள் பங்குபற்றாமல் பகிஸ்கரித்த காரணத்தால் அப்போட்டிகள் விசாரணையின் பின்னர் 5.03.1993 இல் மீண்டும் நடாத்தப்பட்டது. அதற்கான பரிசில்கள் இன்றுவரை வழங்கப்படவில்லை. இந்த வரைவிலக்கணத்தில் ஒழுங்காக இங்குள்ள கடமைகளைச் செய்ய முடியாத திணைக்களம் எவ்வாறு சபரிமலை யாத்திரையில் சம்பந்தப்பட்டு தீர்வுகாணப் போகின்றது. எனது மனக் கவலை யாதெனில் கடந்த 3 வருடங்களாக இந்த ஆலயத்தின் சுற்றுவீதியில் உள்ள மரங்களில் இருந்து பெற்ற தேங்காய்களையே ஒவ்வொரு தடவையும் நான் யாத்திரையின் போது நெய் நிரப்பி இருமுடியில் சுமந்து செல்வேன். இம்முறை மாலையிட்ட பின் இந்த ஆலயத்தை வந்து திறந்து பார்க்கவுமில்லை. இங்கு தேங்காய் பூசையில் வைக்கவுமில்லை. இந்தக் குறையும் இப்படிப்பட்ட அனர்த்தத்திற்குக் காரணம் ஆகுமா என்ற வினா என் மனதில் எழுகின்றது. கந்த 14.09.1992 சிவராத்திரி தினத்தன்று குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குச் சென்ற என்னை ஒரு ஆசிரியர் (எனது நெருங்கிய நண்பரும் கூட) சபரிமலை குறித்தும் இவ்வாலயம் குறித்தும் என்னைக் கேட்ட சில கேள்விகள் குற்றம் சுமத்துவது போல உள்ளுர என்னை உறுத்துகின்றது. குறிப்பிட்ட இந்த ஆலயத்தில் மிகச் சிறப்பாகப் பல தடவைகள் நவராத்திரி விழாவைச் சிறப்பாக நடாத்தி வந்தோம். கடந்த வருடம் நவராத்திரி நடக்கவுமில்லை. என்னை அழைக்கவுமில்லை. நானும் போகவுமில்லை. இங்குள்ள மக்கள் செய்கின்ற குறைகளால் அங்கு அனர்த்தம் ஏற்பட்டிருக்குமா என்றும் ஒரு வினா எழும்புகின்றது. காரணம் இங்கு மலையகத்தில் வாழுபவர்களுக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது.

குறிப்பிட்ட கட்டுரையில் பிஸ்னஸ் ஆகக் கருதுவோர் என்ற ஒரு சொல் இருக்கின்றது. உண்மைதான். சில பக்தர்கள் விமான நிலையத்தில் தீர்வையற்ற வியாபார நிலையங்களில் மதுபானப் போத்தல்களை எடுத்துச் செல்வதும் இங்கிருந்து போவோர் பலர் தமது பயணப் பொதிகளில் கராம்பு, ஏலம் போன்றவற்றை எடுத்துச் செல்வதும் சர்வசாதாரணமே. ஆனால் எமது யாத்திரைக் குழுவில் இப்படியான தேவையற்ற செயல்களை நாம் அனுமதிப்பதில்லை. ஆனால் பல குழுவினர் சுங்கப்பகுதியில் இதனால் பலமணிநேரம் தாமதப்படுவதை என் கண்களால் நேரடியாகப் பார்த்திருக்கின்றேன்.

Wednesday, June 12, 2013

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 10)

ஆவணப்படுத்தலுக்கு சில முக்கிய பத்திரிகைச் செய்திகளை இணைக்கலாம் எனக் கருதியமையால் அவற்றை இங்கு சேர்த்துள்ளேன்.

16.06.1981 வீரகேசரி “யாழ் பொதுநூலகத்தை எரித்தது காட்டுமிராண்டிச் செயல் - வாசுதேவநாணயக்கார - கூட்டணி எம்பிக்களின் பகிஷ்கரிப்புக்கு ஆதரவு

17.06.1981 ஈழநாடு தாவீது அடிகள் மற்றும் நால்வர் ஆத்மசாந்திக்கு அஞ்சலி அச்சுவேலி தம்பாலையைச் சேர்ந்த பாலசோதி, கோப்பாய் பயிர்ச்செய்கை உத்தியோகத்தர் பரமேஸ்வரன், நீர்வேலி சலவைத் தொழிலாளி கணபதிப்பிள்ளை சண்முகம், தெல்லிப்பழை கோவிந்தசாமி சண்முகராஜா

17.06.1981 தினபதி யாழ் கொலை,கொள்ளை, தீவைப்பு சம்பவங்களுக்கு மாநகராளுமன்றம் பலத்த கண்டனம் உறுப்பினர்கள் ஆவேசமான உரை - தினபதிப்படங்களுக்கு நன்றி – தலையங்கத்துக்குப் பாராட்டு

22.06.1981 தமிழ்த் தேசிய இனத்தைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது ஆயுதப்படையினர் வாபஸ் பெறவேண்டும் - தமிழ்க் காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்

24.06.1981 வீரகேசரி எங்களைக் கண்டதும் பொலிசார் மதில் ஏறிக் குதித்து அப்பால் சென்றனர் - யாழ் பொதுநூல்நிலையக் காவலாளி பொலிஸ் விசாரணையில் தகவல்

6.7.1981 வீரகேசரி அணுகுண்டைவிட ஆத்மீக சக்திக்கு அதிகவலிமை உண்டு - வவுனியா உண்ணாவிரதத்தில் சாவகச்சேரி எம்.பி.

8.7.1981 வீரகேசரி யாழ் நூலக எரிப்பு பற்றி எனக்கும் கவலை உண்டு. ஆனால் கண்டிக்கும் நிலையில் இல்லை. அமைச்சர் என்பதால் அரசின் முடிவகளுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன் என்கிறார் “தேவா”

12.7.1981 யாழ் நூலக புனரமைப்பு நிதிக்கு தாராளமாக உதவுங்கள் - மகாநாயக்க தேரோக்கள், இதிமேற்றிராணிமார் மற்றும் பிரமுகர்கள் வேண்டுகோள்

14.7.1981 ஈழநாடு யாழ் வன்செயல்கள் குவைத் நாட்டுப் பத்திரிகை வெளியிட்ட செய்தி

17.7.1981 தினகரன் யாழ் வன்செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் - கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா

12.10.1981 ஈழநாடு ஈழத்தமிழருக்கு எப்படி உதவலாம் என்பதுபற்றி முடிவு செய்ய அனைத்துக்கட்சி மகாநாடு தமிழக முதல்வர் கூட்டுகிறார் யாழ் நூலகத்துக்கு நூல்கள் வழங்க எம்.ஜி.ஆர் ஏற்பாடு.

15.10.1981 யாழ் மக்களின் கவலையில் நானும் பங்கெடுக்கின்றேன் - யாழ்நகரில் ஆரியரத்னா

8.11.1981 பொதுசனநூலகத்துக்கு 1 1/2 லட்சம் ரூபா நூல்கள் யாழ் கிறீஸ்தவ ஐக்கிய சங்கம் வழங்கும்.

13.12.1981 ஈழநாடு யாழ் பொதுசன நூலக புனரமைப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றும் நாளையும் வீடுகளில் நிதி திரட்டுவர்

21.12.1981 ஈழநாடு யாழ் பொது சன நூலகநிதி - பல்கலைக்கழக மாணவர்கள் ரூ 193,965 சேர்த்தனர்

23.12.1981 வீரகேசரி யாழ் நூலக கட்டிட நிதிக்கு வரிவிலக்குக் கோருகிறார் சூசை

20.1.1981 ஈழநாடு யாழ் நூல் நிலைய புனரமைப்புக்கு நிதி திரட்டும் பணியில் தொழில் பிரமுகர்கள் குழு!

24.2.1982 ஈழநாடு நூலகத்துக்கு வைக்கப்பட்ட தீ தமிழினத்துக்கு ஏற்பட்ட சவால்! இதனைக்கட்டி எழுப்புவது தமிழினத்தின் தூய கடமை - நூலக வார ஆரம்பத்தில் அமிர்

25.02.1982 வீரகேசரி யாழ் பொது நூலகத்தை கட்டிமுடித்து மீண்டும் பூத்துக் குலுங்க வைப்பது தமிழரின் தலையாய கடமை - கொடிதின ஆரம்ப விழாவில் தலைவர் அமிர் கோரிக்கை

25.2.1982 தினபதி யாழ் நூலகவாரத்தையொட்டி வியாழக்கிழமையன்று நூலக கொடி தினம் அனுட்டிக்கப்பட்டது. யாழ் முதல்வர் திரு.இராசா விசுவநாதன் முதலாவது கொடியை எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கத்துக்கு அணிவித்து கொடி விற்பனை தினத்தை ஆரம்பித்து வைத்தபோது எடுக்கப்பட்ட படம்.

3.6.1982 வீரகேசரி தமிழனைத் தமிழனே அழித்துக் கொள்ள வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். யாழ் உண்ணாவிரதத்தில் அமிர் - சரியான தலைமையின்றி தவறான பாதையில் செல்லாதீர்

தினபதி 3.6.1982 யாழ் பொது நூல்நிலையம் எரிக்கப்பட்ட ஓராண்டுப் பூiர்த்தியை முன்னிட்டு நூல்நிலையத்தின் முன்னால் நேற்றுக் கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்து துக்கம் அனுட்டித்தனர். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட யாழ் எம்.பி. திரு. வெ. யோகேஸ்வரன், திரு. நீலன் திருச்செல்வம், மன்னார் எம்.பி திரு. பி.எஸ் சூசைதாசன் , கோப்பாய் எம்.பி. திரு. எம். ஆலாலசுந்தரன் ஆகியோரை முதலாவது படத்தில் காண்க. செல்வா நினைவாலத்தின் முன்னால் தமிழ் ஈழ விடுதலை அணியினரும் மாணவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களில் ஒரு பகுதியினர் இரண்டாவது படத்தில் காணப்படுகின்றனர்.

2.6.1982 தமிழனைத் தமிழன் அழிக்கும் நிலை எமக்குள் நிகழ வேண்டாம் உண்ணாவிரதத்தில் அமிர் கோரிக்கை

Monday, May 6, 2013

வெள்ளவத்தை வாகனவிபத்தில் இரு பெண்பிள்ளைகள் உயிரிழப்பு - 5.5.2013


சுவிசிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த திரு. திருமதி ஜவீன் ஜெயந்தி தம்பதியினரின் பிள்ளைகள் ஜனன், ஜனனி இருவருடன் எமது இலங்கைப் பதிவரும் வைத்தியருமான பாலவாசகனின் சகோதரியும் வாகனவிபத்தில் சிக்கி பாலவாசகனின் சகோதரியும் ஜனனியும் அகாலமரணமடைந்து விட்டதாகவும் ஜனன் கொழும்பு ஆதார வைத்தியசாலையில்­­ அவசர சிகிச்சைப்பிரிவ­­ில் அனுமதிக்கப்ட்டு­­ள்ளதாகவும் அறிந்துள்ளேன். நேற்றிரவு (05.05.2013) வெள்ளவத்தையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

Saturday, March 5, 2011

சூரிச் முருகன் கோவிலில் சிவராத்திரி!

























Monday, October 4, 2010

கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் திறந்துவைப்பு!

செய்தி - 03.10.2010

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகம் கடந்த02.10.2010 சனிக்கிழமை மாலை 4.00மணிக்கு தந்தை செல்வாவின் புதல்வர் திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். தலைவர் திரு. வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.








மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) உதய சூரியன் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் தந்தை செல்வாவின் திருவுருவச் சிலையினை மட்டக்களப்பைச் சேர்ந்த திரு மருதநாயகம் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார். பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகத்தை திரு செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் நாடா வெட்டி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய பலரும் கட்சியின் முக்கிய பொறுப்பை சந்திரகாசன் அவர்கள் ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் திரு. சந்திரகாசன் அவர்களை கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு சகல தமிழ்க் கட்சிகளும் ஒரு அமைப்பின் கீழ் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது எனக் குறிப்பட்டார். சகல தமிழ்க்கட்சிகளும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஒரே அமைப்பாக இயங்க முன்வரவேண்டும் எனவும், அதற்குத் தடையாக எனது கட்சியின் தலைமைப்பதவி இருக்கும் என எவராவது கருதினால் நான் எனது தலைவர் பதவியையும் இராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் எனவும் கூறினார். எனவே மக்களின் நலன் கருதி தான் எந்த தியாகத்தையும், செய்தாவது தமிழ்க்கட்சிகளின் ஒன்றிணைவிற்கு ஒத்தாசை நல்குவேன் எனவும் குறிப்பிட்டார்.

எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும் முகமாக இறுதியாக உரையாற்ற வந்த திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆயுட்கால உறுப்பினர் எனவும் எந்த சந்தர்ப்பத்திலும் வேறு கட்சிக்குப் போகவேண்டிய அவசியமில்லை எனவும் சரியான நேரத்தில் நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் உறுதிபடக்கூறினார். தற்போது தமிழகத்தில் தங்கியிருக்கும் எமது உறவுகளின் நலன்களில் முழுநேரமும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற படியால் நேரமின்மையே இதற்குக் காரணம் எனவும் கூறினார். அதுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியை வழி நடத்த வேண்டிய பொறுப்பு திரு ஆனந்தசங்கரிக்கு உண்டு எனவும் ஏனைய மத, இன தலைவர்களாலும், சர்வதேச தலைவர்களாலும் நன்கு மதிக்கப்படுகின்ற தலைவர் ஆனந்தசங்கரி எனவும், இவ்வாறான தலைவர்தான் இப்போதைய சூழ்நிலையில் மக்களுக்குத் தேவை எனவும் குறிப்பிட்டார். ஏனோ தொரியவில்லை நல்ல தலைவர்களைத்தான் அடுத்தவர்கள் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள் எனவும் மக்களும் அதை எளிதில் நம்பி மோசம் போய்விடுகிறார்கள் எனவும் இந் நிலை மாறி நல்லவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க மக்கள் முன்வர வேண்டும், எனவும் விசனத்துடன் குறிப்பிட்டார். ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதி திரு வீ.ஆனந்தசங்கரி என அவர் மேலும் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இறுதியாக திரு. ஏகாம்பரம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவிற்கு வந்தது.


ஊடகச் செயலாளர் - த.கஜன்

Saturday, June 5, 2010

அமிர் குடும்பத்தினரின் இலங்கை விஜயம்

மறைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் - முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் அ. அமிர்தலிங்கம் அவர்களின் மனைவியார் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இளைய மகன் வைத்திய கலாநிதி அமிர்தலிங்கம் பகீரதன் அவர்களும் கடந்த வாரம் இலங்கைக்குச் சென்றிருந்தனர். பிபிசி வானொலியின் ஆவணத் தயாரிப்புக்காக அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளுக்கு - ஊடகங்கள் வழமைபோல தமது கற்பனையில் செய்திகளை தயாரித்து வழங்கியிருந்தன. அமரர் அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றிய இந்த ஆவணத் திரட்டலில் அரசு யாழ்ப்பாணத்திற்கு அனுமதி வழங்காத நிலையில் கொழும்பில் தங்கியிருந்து ஒரு சில தலைவர்களைச் சந்தித்துவிட்டு உடனடியாகவே அவர்கள் நாடு(இங்கிலாந்து) திரும்பினர்.

(இரா. சம்பந்தன் மாவை சேனாதிராசா ஆகியோருடன்)

பேசுவதற்கு வருகிறோம் என்று சொல்லி விருந்தாளிகளாக வந்து உபசார நேரத்தில் துப்பாக்கியால் சுட்டபோது அமிர்தலிங்கம் அவர்களும் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரன் அவர்களும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். தலைவர் சிவசிதம்பரம் காயங்களுடன் தப்பித்தார். விருந்தாளிகளாக வந்த மூன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் காவற் கடமையில் நின்றிருந்த பொலிசார் சுட்டுக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.

அமரர் அமிர்தலிங்கம் அவர்களுடைய வரலாற்றுப் பதிவில் கொலையாளிகளைத் தப்பிக்கவிடாது சுட்டுக்கொன்ற முக்கிய கடமையைச் செய்த பொலிஸ் சார்ஜன்ட் நிசங்க அவர்களை பிபிசி நிருபரும் நேரடியாகச் சென்று நடந்த விடயங்களைப் பதிவு செய்திருக்கிறார். இதை பத்திரிகைகள் வழமைபோல சிண்டுமுடிக்கும் விளையாட்டாக செய்திப்பரிமாற்றம் செய்துள்ளன.

இந்த விஜயத்தின் பின்னர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

பத்திரிகைச் செய்தி

பல ஆண்டுகளின் பின் இலங்கை வந்த நான், மக்கள் துன்ப துயரங்களுக்கு மத்தியிலும் போர்ச்சூழல் இல்லாமல் இருப்பதையிட்டு நிம்மதியடைகிறேன். அதேநேரத்தில் இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், முக்கியமாக வன்னிப் பிரதேச மக்கள் தகுந்த முறையில் மீளக்குடியமர்த்தப்படவும், அவர்தம் வாழ்வு புனரமைக்கப்படவும் வேண்டிய அத்தியாவசியத்தையும் அறிந்து கொண்டேன. நான் யாழ்ப்பாணம் செல்ல முடியாத நிலையிலிருந்த போதும் பலரையும் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் மூலம் எம்மக்களின் தற்போதைய உணர்வுகளையும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

இன்றைய காலகட்டத்தில் மக்களின் புனர்வாழ்வுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியிருந்தாலும் எம் மக்களின் அடிப்படை அரசியல், அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டியது மிக அவசியமானது. 50ம் ஆண்டுகளிலிருந்து தந்தை செல்வாவும், எனது கணவரும் மன்னெடுத்த அரசியல் உரிமைப் போராட்டம் இன்னமும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாகவே உள்ளது. இதை இன்றைய அரசாங்கம் கவனத்தில் கொண்டு சர்வதேசம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்னெடுத்து அமுல் நடத்தவேண்டுமென ஜனாதிபதி அவர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோளாகும்.

நன்றி

Press Release

Impressions and expectations of Mrs. M Amirthalingam (widow of late Mr. A Amirthalingam)

After a long time, I returned to Sri Lanka . I could see our people were more relaxed and were living without any difficulties and in an environment reasonably conducive to survive. At the same time our people who have been affected by the conflict have to be resettled in a habitable environment. I understood the need for their redress and re-establish the old life style. In spite the fact I could not go to Jaffna , I was able to meet knowledgeable and informed people and understood and discussed their feelings, desire and the keenness for their renewal of the economic activities and lifestyle.

In today’s situation, resettlement of our people is of paramount importance. At the same time, their long term political expectations should be met.

In 1950s, our renowned leader, late SJV Chelvanayakam and my husband initiated and fought for the political rights of Tamil people. The problems existed then persist even today. The present government’s priority should be to understand the variety of problems and settle those in a manner acceptable to the Tamils and the international community. This is the request from the depth of my heart to President Mahinda Rajapaksa and I earnestly hope he will deal with these problems and establish long term peace and tranquillity in Sri Lanka .

Mrs.M.Amirthalingam

Note to Editors:

Mrs. Amirthalingam and her younger son, Dr. Baheerathan Amirthalingam have been on a short visit to Sri Lanka to take part in a BBC World Service Radio Documentary. While Mrs. Amirthalingam has visited Sri Lanka before, it is the first time Dr. Baheerathan visited the Country after the assassination of his father, late Mr. A. Amirthalingam



நிசங்க அவர்களுடன் அமிர்தலிங்கம் அவர்கள்