அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label பனிக்காலம். Show all posts
Showing posts with label பனிக்காலம். Show all posts

Sunday, March 7, 2010

இரு வாரங்களின் பின் திடீரெனப் பெய்த பனிக் காட்சிகள் சில!

சுவிற்சர்லாந்தின் பருவ காலம் 4. இலைதுளிர்காலம் பங்குனி - வைகாசி. கோடை ஆனி - ஆவணி. இலையுதிர்காலம் புரட்டாதி - கார்த்திகை. பனிகாலம் மார்கழி - மாசி. காலமும் சிலவேளை முந்திப்பிந்திவரும். இம்முறை எதிர்பார்த்ததைவிட பனி அள்ளிக் கொட்டியதால் இருப்பில் வைத்திருந்த உப்பு நிறைவடைந்து பக்கத்தில் இத்தாலியில் வாங்கியிருக்கிறது சுவிஸ அரசு. இங்கு கடல் இல்லாதபடியால் உப்பின் விலை சற்று அதிகம். என்ன 95றாப்பன். எமது நாட்டுப் பணத்தில் அண்ணளவாக 100ரூபா. இங்கு பனிக்காக வீசும் உப்பு செயற்கையாகச் செய்யப்படுவது. பனி கொட்ட ஆரம்பித்ததும் கரைப்பதற்கு அதை வீசுவதும் - பனியை அள்ளுவதும் கடினமான வேலை - இங்கு இவர்களுக்கு இது பழகிவிட்டது.

எப்போது இனிப் பனி வரும் என அங்கலாய்த்தபடி இருந்தேன். இன்று காலையில் எழுந்து வெளியே பார்த்தால் ஒரே வெள்ளைமயமாக இருந்தது. குதூகலித்துக்கொண்டு சில காட்சிகளை நண்பனொருவனிடமிருந்து பறித்துக்கொண்டுவந்த ஒரு புகைப்படக்கருவியால் பதிவுசெய்தால் என்னுடைய கெட்டகாலம் படங்கள் கணனியில் ஏற்றும்போது நடந்த சிறுதவறால் முழுப்படங்களும் அழிந்துவிட்டன. பிறகும் மனம் தளராமல் சென்று பிடித்தவற்றை பதிவிட்டுள்ளேன். நாளைக்கும் பனி பெய்யுமாம். இன்னும் எனக்குப் பிடித்த சிலவற்றை தரலாம் என்று இருக்கிறேன். நாளைய கால நிலையைப் பொறுத்து என் எண்ணம்.....







Sunday, November 15, 2009

சில புகைப்படங்கள்!












Sunday, November 8, 2009

பனிக் காலத்தின் எழிலான தோற்றம்!




























இயற்கையின் எழில் - பனிக்காலம் - என் முதல் அனுபவ நினைவுகள்!





பனியைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். படங்களில் பார்த்திருக்கிறேன். பனிகொட்டும்போது அனுபவித்த அந்தக் கணத்தில்வரும் இதமான சுகங்கள் ஒருபோதும் மறக்க முடியாதவையே! 3ஆவது தடவை பனியை எதிர்கொள்ள நான் ஆவலோடு தயாராகிக் கொண்டிருக்கிறேன்!
2007 November மாதத்தில் ஒரு நாள். அன்று பிற்பகல் 2மணியிலிருந்து டொச் பாடம் நடந்து கொண்டிருந்தது – வெளியே யன்னலினூடாக பார்த்தேன் - நித்தியகல்யாணிப்பூவின் இதழ்களை யாரோ மேலிருந்து வீசுவதுபோல ஒரு பிரமை! பஞ்சு பறந்து சிந்துவதுபோல வெள்ளை நிற மலர்மாரி! தேவர்கள் பூமாரி பொழிவதை நேரில் கண்டேன்! மிக அற்புதமான காட்சி! வீழ்ந்த அந்த பனிப்பூக்களைக் காணவில்லை! வகுப்பு முடிந்ததும் அறைக்குள் சென்று என் பாடப் புத்தகங்களை வைத்துவிட்டு வெளியே சென்றால் அரை அடிக்கும் மேல் பனிபடந்திருந்தது! நானும் சில நண்பர்களும் ஓடிப் பிடித்து சறுக்கி விளையாடி விழுந்தெழும்பினோம். மரங்களிலும் வீடுகளின்மேலும் பட்டைபட்டையாக பனி விழுந்துகொண்டிருந்தது!

வெளியே செல்வதானால் ஒரு 5 கிலோ கிராம் நிறையுடைய அதிகப்படியான உடைகளை நாம் உடுத்துத்தான் வெளியேறவேண்டும். இதற்காக குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் செலவிட்டு உடையணிய வேண்டும்.

எதிர்வரும் மாதத்திலிருந்து இயற்கையை ரசிக்கும் எனக்கு ஒரே கொண்டாட்டம்தான்!