அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label திருநாவுக்கரசு நாயனார். Show all posts
Showing posts with label திருநாவுக்கரசு நாயனார். Show all posts

Tuesday, April 17, 2012

அப்பர் குருபூசைத்தினம் இன்று - சித்திரைச்சதயம்

தனி ஒருவராக நின்று சமண சமய அரசுடன் எதிர்த்த திருநாவுக்கரசு நாயனாரின் சரித்திரத்தை இன்றைய அவரது குருபூசைத் தினத்தில் எமது பிரச்சனைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் போல இருநதது.

ஏனெனில் எமது பல பிரச்சனைகள் போல அவரும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டவர். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் எனத் துணிந்து நின்று போராடி இறைவனருளால் வெற்றியும் கண்டவர்.


எங்களுடைய போராட்டம் பற்றி கருத்துத் தெரிவிக்க தற்போது விரும்பாத நிலையில் - தற்போது சில காலமாக நடைபெற்ற - நடைபெறும் சில நிகழ்வுகளை மாத்திரம் குறிப்பிட்டுச் சொல்வது நியாயமாக இருக்கும்.
1. வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கௌதம புத்தபெருமானுடைய சிலைகள் பற்றியது.
2. யுத்தம் நடைபெற்று 3 வருடமாகியும் - இன்றும் முகாம்களில் அல்லது தற்காலிக இடங்களில் மக்கள் அல்லல்படும் அதே சமயத்தில் சில வேண்டத்தகாத நிகழ்வுகள்.
3. யாழ். பொது நூலகத்தில் இயங்கும் கணினிப்பிரிவில் மாற்றம் செய்ய முற்படும் ஆளுனரின் நடவடிக்கை.
4. வேகமாகச் சென்று தம் உயிரை மாய்த்துக் கொள்ளும் இளைஞர்கள்.
5. படித்த இரு ஆங்கில சகோதர ஆசிரியைகளின் தற்கொலை.
6. இரவு நேரங்களில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்கள்.