அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label யாழ்ப்பாண அரசு. Show all posts
Showing posts with label யாழ்ப்பாண அரசு. Show all posts

Wednesday, August 3, 2011

மிகத் துரிதமாகப் புனரமைக்கப்பட்ட சங்கிலி மன்னனின் உருவச்சிலை இன்று திறந்துவைக்கப்பட்டது!

யாழ் மாநகர சபையால் மிகத் துரிதமாகப் புனரமைக்கப்பட்ட சங்கிலி மன்னனின் உருவச்சிலை இன்று 03.08.2011 புதன்கிழமை காலை 7.15மணியளவில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது!
மங்கள வாத்திய சகிதம் அழைத்துவரப்பட்ட விருந்தினர்கள் மங்கல விளக்கேற்றி வைபவத்தை ஆரம்பித்து வைத்தனர்.யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி வரவேற்பு நடனத்தையும் வழங்கினர். உருவச் சிலையைத் திரைநீக்கம் செய்து மலர்மாலை சாற்றிய கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பின்னர் சிலையின் கீழிருந்த நினைவுப் பெயர் நடுகல்லையும் திறந்து வைத்தார்.
நிகழ்வுக்குத் தலைமைதாங்கிய மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்களின் உரையைத் தொடர்ந்து உயிரோவியமாக குறுகிய காலத்தில் உருவச்சிலையை மிகவும் அற்புதமாக வடித்த கலைஞர்கள் கௌரவிக்கப் பட்டனர். திரு.கலிகைப் பெருமாள் புருசோத்தமன்(ஸ்தபதி), திரு.கே.முரளிதரன்(சிற்பி), திரு.டி.கஜேந்திரன்(சிற்பி), திரு.ஜீ.முத்துக்கிருஸ்ணன்(சிற்பி), திரு.கே.கோபி(சிற்பி), திரு.பாஸ்கரன் ஆச்சாரியார் (ஸ்தபதி), திரு. பா.கஜேந்திரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் நினைவுரையாற்றினார்.

பிரதம விருந்தினர் உரையில் அமைச்சர் - இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான நாளாகும். யாழ்ப்பாணத்தில் சங்கிலிய மன்னனின் உயிரோவியச் சிலை மட்டுமன்றி மந்திரிமனை, நுழைவாயில், ஜமுனாரி தேக்கம் என்பனவும் தமிழர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் விரைவில் புனரமைக்கப்படுமெனவும், தலைவர்கள் சமயப் பெரியார்கள் சமூகத்தின் முன்னோடிகள் ஆகியோரின் சிலைகளும் யாழ்.மாநகர எல்லைக்குற்பட்ட பகுதிகளில் நிறுவப்படுமெனவும் மந்திரி மனையில் கலைக்கூடமொன்றை நிறுவி அதனூடாக கலை நுணுக்கங்களை வெளிக்கொணரும் கலைச்சேவை செய்யப்படவுள்ளதுடன் பண்பாடுகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் சமயத் தலைவர்களுட்பட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ் பல்கலைக்கழகத் துணை வேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம், ஈபிடிபியின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ முருகேசு சந்திரகுமார், கௌரவ. சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), மாநகரசபை ஆணையாளர் திரு.மு.செ.சரவணபவ ஆகியோருட்பட மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், யாழ். செயலக அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முக்கிய குறிப்பு -

wait - not finish

Saturday, June 20, 2009

மண்மூடும் சுவடுகள் - இன்றைய உதயன் பத்திரிகைச் செய்தி!

புதர் மண்டிப் போயிருக்கும் நல்லூர் மந்திரி மனையின் புகைப்படத்துடன் இன்று உதயனில் வெளியாகிய கட்டுரையை இணைக்கின்றேன்.


இக்கட்டுரையைப் பார்த்தவுடன் நான் உதயன் பத்திரிகை நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு - பின் அதை எழுதிய திரு. ந. சத்தியபாலன் அவர்களுடனும் பேசிவிட்டுத்தான் இப்பதிவை எழுதுகிறேன்.

திருமதி சரோஜினி யோகேஸ்வரனின் அகால மறைவின்பின் பலர் கொலைமிரட்டல்களுக்கு அஞ்சி பதவிகளைத் துறந்தசமயத்தில், கொழும்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் சட்டத்தரணியுமான திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் முன்னிலையில் 22.06.1998இல் யாழ்ப்பாண மாநகர சபையின் நியமனஅங்கத்தவனாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டேன். திரு. நடராஜா இரவிராஜ்(பிரதி முதல்வராக), திரு. கதிர்காமர் சின்னத்துரை,திரு. சண்முகராஜா அரவிந்தன், திரு. எஸ். எஸ். கணேந்திரன் ஆகியோரும் அன்றே கொழும்பு அலுவலகத்தில் பதவிப் பிரமாணம் செய்தனர்.

18.09.2002இல் நடந்த மாநகர சபையின் கூட்டத்தில் நான் மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி என்பவைபற்றிப் பேசிய விடயங்களை தினக்குரல் பத்திரிகை பிரசுரித்ததையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்.


நன்றி - உதயன் மற்றும் தினக்குரல் பத்திரிகைகளுக்கு!

பல முக்கிய நினைவுகளும், கட்டுரைகளும், செய்திகளும் எனது பதிவில் வெளிவரும்.

என்றும் மறவாதவன்
தங்கு. முகுந்தன்.

Wednesday, June 17, 2009

யாழ்ப்பாணத்து அரசர் சங்கிலிய மாமன்னர் பெருமானின் வம்சம் நெதர்லாந்தில் வாசம் - அவர்களது இணையத்தளம் தெரிவிக்கிறது! - எனக்கு இது ஒரு புதிய செய்தி


4 நாட்களுக்கு முன் கடந்த சனிக்கிழமை 13.06.2009இல் இச்சம்பவம் நடந்தது.

நான் அடிக்கடி எமது கட்சித் தலைவர்களைப் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு இருப்பேன்.


தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற காலத்தில் இரும்பு மனிதர் டாக்டர் இ.எம்.வி. நாகநாதன் அவர்களது சரித்திரத்தை சற்றுப் பார்வையிட எனது வழமையான தேடலில் நான் அதிகமாகப் பார்க்கும் விக்கிபேடியாவுக்குள் நுழைந்து தேடியபோது அவரது கட்டுரையின் இறுதியில்
References

Source: The Royal Family of Jaffna website,

http://www.jaffnaroyalfamily.org/elangai.php

என்று இருந்தது.


இதற்குள் போய்ப் பார்த்தபோதுதான் யாழ்ப்பாண அரசர் பரம்பரையின் வம்சம் இன்றும் வாழும் செய்தி எனக்குத் தெரிந்தது. உடனேயே அவர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினேன். மறுநாள் 14ந் திகதி லண்டனிலுள்ள திரு. மார்க் வத்சன் அவர்களுடன் பேசினேன். பின்னர் நெதர்லாந்தில் உள்ள ராசதானி நிலையத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அலுவலகர் ஒருவர் பேசினார். அரச குடும்பத்தினர் வெளியே சென்றிருப்பதாகவும் மாலையில் தொடர்பு கொள்ளும்படியும் சொன்னார். இது கடந்த 14 - ஞாயிறு நடைபெற்ற நிகழ்வு. சில வேலைப் பளு காரணமாக அன்று தொடர்புகொள்ள முடியாமல் போனது. நேற்று 16 செவ்வாய்க்கிழமை இரவு 9.19 மணியளவில் இளவரசர் மேன்மைதங்கிய ரெமிஜியஸ் ஜெரி கனகராஜா அவர்கள் என்னுடைய தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு என்னுடன் பேசினார். இது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவமாகும்.