அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label சொல்வேந்தர் சுகிசிவம். Show all posts
Showing posts with label சொல்வேந்தர் சுகிசிவம். Show all posts

Saturday, March 27, 2010

சொல்வேந்தர் சுகிசிவம் கருத்து - உண்மைகளை ஏற்காதோர் பழியுரை!

சன்தொலைக்காட்சியில் - தமிழ் மாலை -இந்த நாள் இனிய நாள் நிகழ்வில் இலங்கைத் தமிழர்படும் இன்னல்கள் குறித்து கருத்துத் தெரிவித்த சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களை - தமிழ் மன்னன் எல்லாளனின் பெயர் கொண்ட ஒரு பதிவர் தனது இணையத்தளத்தில் அறிவற்ற தனமாக விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இந்து கலாசார அலுவல்கள் அமைச்சராக பி.பி.தேவராஜ் அவர்கள் பணிபுரிந்த காலப்பகுதியிலிருந்து சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களும் வேறும் பலரும் இலங்கைக்கு விஜயம் செய்து தமது அறிவு சார்ந்த ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்பி வருவது யாவரும் அறிந்ததே! அவர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்குள்ள உண்மை நிலைகளைக் கண்டறிந்தபின் வெளியிட்ட இத்தகவல்கள் அனைத்தும் உண்மையே!

மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வெளியேறவிடாமல்(Pass கொடுக்காமல்) தங்களுடன் வைத்திருந்து - கொன்றொழித்தபிறகு பல ஏகப் பிரதிநிதிகள் தம் உயிரைக் காப்பாற்ற - ஒளித்து - ஓடி இன்று பல நாடுகளிலும் தஞ்சமடைந்துள்ள நிலையில், வாழும் மக்களுக்காக நியாயமான - நடைமுறைக்கு ஏற்ற கருத்துச் சொன்ன சொல்வேந்தரின் கருத்துக்கு - ஆட்டையும் ஓநாயையும் முன்னிறுத்துவது தங்களின் மிருகத்தனத்தையே (இனம் இனத்தைச் சாரும் என்பதுபோல) ஒப்புவிக்கிறது போலாகிறது.

யாராவது எமக்கு நியாயமான கருத்துக்களைச் சொன்னால் எங்களில் சிலர்(உங்களைப் போன்றோர்) அதை ஏற்க முடியாத நிலையிலல்லவா இருக்கிறோம்.

வெளிநாடுகளில் பல இன,மத,நிற,மொழி வேறுபாடுகொண்ட - மனிதர்களோடு வாழும் நீங்கள் - சராசரி மனிதராக - உண்மைத் தமிழுணர்வுள்ளவராக - வாழ முதலில் முயற்சி செய்யுங்கள்!