
வீரகேசரிச் செய்தி

இந்தச் செய்தியைக் கண்ணுற்றதும் பதுளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்மருக்கும் தேசியப்பட்டியலில் உள்ள 7 தமிழ் உறுப்பினர்கள் (1. ஆர் யோகராஜன் 2. பி.பி.இராதாகிருஸ்ணன் 3. வி. புத்திரசிகாமணி 4. கே. துரைரட்ணசிங்கம் 5. ஆர் சந்திரசேகர் 6. எஸ் சதாசிவம் 7. லக்ஸமன் கதிர்காமர்) மற்றும் மலையக அரசியற் கட்சித் தலைவர்களான அமைச்சர்கள் கௌரவ ஆறுமுகம் தொண்டமான், பெ. சந்திரசேகரன் ஆகியோர் உட்பட மொத்தம் 17 பேருக்கு இக்கடிதத்தின் பிரதிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் அனுப்பப்பட்டன.







