அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label இலங்கை அரசு. Show all posts
Showing posts with label இலங்கை அரசு. Show all posts

Tuesday, July 28, 2009

கௌதமபுத்தருடைய கொள்கைகளை சரிவரப் புரிந்து கொள்ளாத - அவருடைய போதனைகளை தமது நாட்டின் சமயம் என்னும் ஓர் பைத்தியக்கார அரசு - இலங்கை!




இது ஒரு பௌத்த நாடு என்று மார்தட்டும் இலங்கை அரசு பௌத்தம் என்கிற வழியை அது ஒரு சமயமல்ல - பின்பற்றிய மகான் கைக்கொண்ட அகிம்சை - பற்றற்றிருத்தல் என்ற இரு கோட்பாடுகளுக்கும் அப்பாலே தன்வழியில் பைத்தியக்காரத் தனமாக நடைபோடுகிறது!
வானுயர அம் மகானுடைய சிலைகளை வைத்து மற்றவர்களை(வெளிநாட்டினரை) கவர்ச்சி பண்ணுவதற்குத்தான் இந்த உபாயம் - மற்றபடி அவர்களிடத்தில் துளியளவேனும் பஞ்சீலமோ! அஷ்ட சீலமோ! தசசீலமோ என்ன என்று தெரியாமல் சும்மா காவியை உடுத்துக் கொண்டு சகல சௌபாக்கியங்களையும் அனுபவித்துவருவதுதான் இவர்களது செய்கை! இவர்களை தலைக்குமேல் வைத்துக் கொண்டாடுகிறது பாவம் ஏதுமறியாத மாக்கள் கூட்டம்! ஒரு சில துறவிகள் மௌனமாக காடுகளிலும் மக்கள் அதிகமாக இல்லாத பகுதிகளிலும் இருப்பதும் குறிப்பிடத் தக்கது!