அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label Anandasangaree. Show all posts
Showing posts with label Anandasangaree. Show all posts

Thursday, June 6, 2013

மாவை சேனாதிராஜா அவர்களுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடிதம்!

கடந்த இரண்டு தினங்கள் வீரசேகரியில் பிரசுரமான கடிதம் திடீரென இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.

09.05.2013

அன்புள்ள தம்பி சேனாதிராஜா,

அண்மைக் காலத்தில் நீர் என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி பேசுவதும், பத்திரிகைகளில் எழுதுவதும் எனக்கு மிக்க கவலையை தருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக உமது விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் விட்டமைக்கு ஒரே ஒரு காரணம் உங்கள் கூட்டு இனப்பிரச்சினை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு என் தலையீடு முட்டுக்கட்டையாக அமையக்கூடாது என்பதற்காகவே. அன்றேல் நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மறுப்பு கூற முடியும். என்னைப் பொறுத்த வரையில் உங்களது செயற்பாடுகள் எதுவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதவையே. எதுவித கருத்தும் வெளியிடாது பொறுத்திருந்தேன். எது எப்படியானாலும் இனி எதையும் பொறுக்க நான் தயாரில்லை. உம்மைப் போன்றவர்களின் செயற்பாட்டால் துரோகி என்ற பட்டத்தைச் சுமக்கின்றேன். உண்மைகளை மறைக்க முடியாது. அவை வெளிவந்தால் தான் மக்கள் மத்தியில் தெளிவு ஏற்படும். ஓர் ஆயுதக்குழு பற்றிய என் கருத்துக்கள், உங்களின் தந்திரத்தால் உங்களுக்கே சாதகமாக அமைந்தது. உங்களுக்கு அதிஸ்டமாகவும் அமைந்தது. விளைவு எம் மக்களுக்கு என் சேவை கிட்டாமல் போனதே.

நீங்கள் என்னைப் பற்றி நன்றி அறிதலுடன் சிந்திக்கத் தவறிய பல விடயங்களில் சிலவற்றையேனும் ஞாபகமூட்ட வேண்டுமென என் உள்ளம் குமுறுகிறது. ஆனால் என் பெருந்தன்மை அதைத் தடுக்கிறது. உங்களுக்கு 06.11.2003 தேதியிட்டு எழுதிய கடிதம் கையிலிருந்தால் ஒரு தடவை அதைப் படியுங்கள். அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் பெரும் அரசியல் தலைவர். இனத்துக்காகத் தன் உயிரைப் பலி கொடுத்தவர். இன்று வரை என்னால் அவரின் இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை. ஆனால் அவர் அமரத்துவம் அடைந்த ப+த உடலின் சாம்பல் சூடு ஆற முன்பு அவர் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியையும் உமக்கே தர வேண்டுமென நீர் கேட்டது ஞாபகம் இருக்கா? விக்கிரமாதித்தன் கதையில் வரும் சம்பவம் போல் இவ்வளவு தைரியம் உமக்கு எப்படி வந்தது என நாம் ஆச்சரியப்பட்டோம். அக்காலத்தில் நீர் கட்சியின் ஓர் ஊழியனாகவே இருந்தீர்.

தற்போது உம்முடன் செயற்படுபவர்கள் பலருக்கு என்னைப் பற்றித் தெரியாது. தெரிந்திருந்தால், என்னைப் பற்றி விமர்சிக்கும் உமது நண்பர்கள், சின்னச்சின்ன தம்பிமார்களுக்கும் அதற்குரிய தகுதி இல்லை என்பதை உணர்வர். எனது அரசியல் அவர்களது, உமது வயதிலும் பார்க்கக் கூடியதாக இருக்கும் என நான் நம்புகிறேன். பொய், புரட்டு, களவு, சதி, ஏமாற்று, கழுத்தறுப்பு, முதுகில் குத்துவது, இலஞ்சம் ஆகியவற்றுக்கு நான் அப்பாற்பட்டவன். நீதியாகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் அரசியலில் தீவிரமாக 53 ஆண்டுகளும், அதற்கப்பால் 7 ஆண்டுகளும் மொத்தமாக 60 ஆண்டு அனுபவம் உள்ளவன் நான். என் சேவை எம் மக்களுக்கு இல்லாமற் செய்த பெருமை உம்முடையதே. பொய் மூட்டைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் மக்கள் மத்தியில் என்னை ஓர் துரோகியாகக் காட்டின. மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம். அன்று நான் சொன்னவை எவ்வளவு நியாயமாக இருந்தாலும் என்னை திட்டித் தீர்த்தீர்கள். இன்று உங்களுக்குள்ளேயே குளம்புகிறீர்கள். இவற்றை மக்களுக்கு எடுத்து விளம்ப மாட்டீர்களா? அண்மையில் கூட ஒரு பிஞ்சு, உமது வாரிசு, விளாசித் தள்ளுகிறார் என்னைப் பற்றி. கொஞ்சம் அவருக்கு சொல்லக் கூடாதா? உமது முன்னேற்றத்துக்கு நான் என்றும் முட்டுக் கட்டை போட்டவன் அல்ல. உமக்காக எத்தனை விட்டுக் கொடுப்புக்களைச் செய்துள்ளேன் என்பதை எனது அரசியல் வாழ்விலிருந்து நீர் பட்டுணர்ந்திருப்பீர்.

தமிழர் ஐக்கிய முன்னணி உருவாகியது, தமிழரசுக் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்தே. இருசாராரும் சமமாக பதவிகளைப் பகிர்ந்து கொண்டோம். நானும் நண்பன் ஆலாலசுந்தரமும் பிரச்சார செயலர்கள். அமிர்தலிங்கம், சிவா ஆகிய இருவரும் செயலாளர்கள். கதிரவேற்பிள்ளை, திருநாவுக்கரசு பின்னர் தருமர் தனாதிகாரிகள் த.வி.கூ உருவாகிய போது நீர் தடுப்புக் காவிலில் இருந்தீர். நீர் தமிழரசு கட்சிக்கு முறை தவறி உயிர் கொடுக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி தான் செயற்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேல் உண்மையை மறைத்து, ஸ்தாபகராலேயே மூடி வைக்கப்பட்ட தமிழரசுக் கட்சியை, அவர் 1977 இல் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின், முறையற்ற விதத்தில் புத்துயிர் கொடுத்து மக்களை தப்பான வழியில் கொண்டு சென்றது யார்? 1977 இல் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை 26 ஆண்டுகள், தமிழ் அரசுக் கட்சி இயங்கியதா? எந்த ஆண்டு நடைபெற்ற மகாநாட்டில் நீங்கள் செயலாளராக தெரிவானீர்கள்? முற்று முழுதாக தந்தை செல்வாவை ஏன் அவமதிக்கின்றீர்கள். இல்லாத ஒன்றை ஏன் இருப்பதாகக் கூறி மக்களையும் வெளிநாட்டுத் தூதுவர்களையும் ஏமாற்றுகிறீர்கள்.

தந்தை செல்வாவால் 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, அவரின் இறுதி மூச்சு இருக்கும் வரை மட்டுமன்றி, தொடர்ந்து இன்று வரை, அதாவது 40 ஆண்டுகளுக்கு மேல் இயங்குவது தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். ஆனால் தமிழரசுக் கட்சியோ, தந்தைசெல்வாவின் மரணத்தின் பின், அதாவது 1977க்கு பின்னர் வெறும் செயலாளர் பதவியை எடுப்பதற்காக, அதற்கு 2004ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 25 ஆண்டுகளில் யார் யார் எவ்வெப்போது எந்தெந்தப் பதவியை வகித்தனர் என்பதைக் கூற முடியுமா?

முழுப் ப+சணிக்காயைச் சோற்றுக்குள்ளே புதைப்பது போல் அண்மையில் பின்வருமாறு கூறியுள்ளீர்கள். “ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பை நாங்கள் அமைத்திருந்த போது அதில் அங்கம் வகித்த ஓர் கட்சியினால் உயர் நீதிமன்றம் வரை சென்று தேர்தல்களில் சின்னம் கட்சி என்பன முடக்கப்பட்டிருந்தன” என்று. இது உண்மை இல்லையே. செய்யாத ஒரு குற்றத்திற்குப் பொய்யாக என்மீது ஓர் நம்பிக்கை இல்லாத தீர்மானம், புலிகளின் கட்டளைக்கமைய, கொண்டு வந்ததும் நான் கலந்து கொள்ள முடியாத ஓர் இடத்தில், அம்பாறையில் தலைவர் என்ற முறையில் என் அனுமதி பெறாமல், பொதுச்சபை கூட்டம் ஒழுங்கு செய்ததை ஆட்சேபித்து அதன் காரணமாகவே கோட்டுக்கு செல்ல வேண்டிவந்ததென கூற ஏன் பயப்படுகிறீர்கள்?

“இதே நிலைமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டால்” என்று பயப்படுகிறீர்களாமே இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா? தமிழர் ஐக்கிய முன்னணியோ, தமிழர் விடுதலை கூட்டணியோ உருவாகும் போது அதை உருவாக்கியவர்களில் ஒருவன் நான் அல்லவா நீர் அதில் சம்பந்தப்படவே இல்லையே. கடந்த 10ஆண்டுகளாக உமது விடயத்தில் நான் கடைப்பிடித்த மௌனம் உம்மைப்பெரும் உத்தமராகவும் கொள்கைப் பற்றுள்ளவனாகவும் உலகுக்கு எடுத்துக் காட்டுவதுகூட எனக்கு கவலையில்லை. ஆனால் என்னை மட்டம் தட்டி உலகுக்குக்காட்டி குறுக்கு வழியில் நீர் உயர முனைவதே எனக்கு வேதனை அழிக்கிறது. உமது திறமையாலும் தியாகத்தாலும் நீர் உயர்வதை நான் மனதார பாராட்டுவேன்.

தனது கடந்த காலத்தையும் ஏறிவந்த படிகளையும் ஒருவன் மறந்து செயற்படுவானேயானால் அவன் மானிடப்பிறவி எடுத்ததில் அர்த்தமில்லை. நான் கடந்தகாலத்தையோ ஏறிவந்த படிகளையோ என்றும் மறப்பதில்லை. மறக்கப்போவதுமில்லை. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு என் வீட்டுக்கு கல் வீசுவது உமக்கே கஷ்டமானதாக முடியும். இப்போது அது தான் நடக்கிறது. எனது கல்லறையில் சாம்ராஜ்யம் அமைக்க முயல்வது நல்லதுக்கல்ல. எனக்கு சமாதிகட்ட நீர் முனைவது எனக்கல்ல. எம் இனத்துக்குத்தான். இது நீர் செய்யும் பெரும் வரலாற்றுத் துரோகமாகும்.

எனது அரசியல் பாரம்பரியம்பற்றி நீர் அறிந்திருக்க நியாயமில்லை. தந்தைசெல்வாவை 1947ஆம் ஆண்டு முதல்முதல் புத்தூர் கிராமசபை மைதானத்தில் கண்டு அவரின் பேச்சைக்கேட்டு மகிழ்ந்தவன் நான். அப்போது நீர் சிறு குழந்தையாக இருந்திருப்பீர். கோப்பாய் தொகுதி வேட்பாளர் திரு.தம்பியப்பா அமரத்துவம் அடைந்த நாளும் அன்று தான். 1949ஆம் ஆண்டு தொட்டு தந்தைசெல்வா என்னாலும், எனது குடும்பத்தவராலும் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தவர். மாற்றுக்கட்சியில் நான் செயற்பட்டகாலத்திலும் அவருக்குரிய மதிப்பையும் மரியாதையும் நான் கொடுத்தே வந்துள்ளேன். தந்தை செல்வாவுடன் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தவர்களில் நான் மட்டும் தான் இன்று உயிருடன் இருக்கின்றேன். பாராளுமன்றத்தில் தந்தை. செல்வாக்குப்பின் இருந்த ஆசனத்திலேயே நான் இருந்தேன்.

தினமும் இரவு 8.00 மணிக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கும் வேளையில் என்னையும் தன்னுடன் தனது வாகனத்தில் அழைத்துக்கொண்டு தன் வீட்டையும் தாண்டிச்சென்று எனது நண்பன் திரு.தா.திருநாவுக்கரசு அவர்களின் வீட்டில் விட்டுவிட்டே தனது வீட்டுக்கு திரும்புவார். இப்படிப்பல நாட்கள் தொடர்ந்தன. ஒரு சமயம் நான் கிளிநொச்சி கரைச்சி கிராமசபைத் தலைவராக இருந்தவேளை எனது தலைவர் பதவியைப்பறிக்க சிலர் முற்பட்ட போது அதை தடுத்து நிறுத்தியவரும் தந்தை செல்வாவே. மனச்சாட்சிக்கு கட்டுப்பட்ட பெரியவரின் செயலால் அன்றைய உள்ளுராட்சி அமைச்சராயிருந்த திரு.மு.திருச்செல்வம் அவர்கள் (கலாநிதி நீலனின் தந்தை) ஒரு தடவையேனும் தனது அமைச்சர் பதவிக் காலத்தில் கிளிநொச்சிக்கு வரப்போக இந்த ஒரு சிலர் ஒருபோதும் விடவில்லை. அன்றும் உம்மைப்போன்ற சிலர் தழிழரசுக் கட்சியில் இருந்திருக்கிறார்கள்.

1970ல் சும்மா கை கட்டிக்கொண்டிருந்து கிளிநொச்சித் தொகுதியில் நான் வெற்றி பெறவில்லை. கால்கள் கொப்பளிக்க கால்நடையாக நடந்து சென்று வென்றவன். எனது வெற்றிக்குச் சவாலாக பல தமிழரசுகட்சித் தலைவர்கள் தந்தைசெல்வா. அமிர் போன்றோர் வந்து தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்தார்கள். 700 சதுரமைல் விஸ்தீரணம் கொண்ட கிளிநொச்சித் தொகுதியில் என் கால்கள் படாத வீடு கிடையாது. கிளாலி தொடக்கம் மாங்குளம் ஊடாக துணுக்காய் ஆலங்குளம் வரை ஏறக்குறைய 100 கிலோமீற்றரும், பரந்தன் தொடங்கி முழங்காவில் வரை 50 கிலோமீற்றரும் கால்நடையாக நடந்து சென்றே அத்தொகுதியை வென்றெடுத்தேன். கிளிநொச்சி மக்கள் இன்றும் சான்றுபகர்வார்கள். இலங்கையில் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் நான் பட்ட கஸ்டம் அனுபவிக்கவில்லை. அவ்வாறு பெறப்பட்ட பதவி என்பதால் தான் கர்வம் அடையாது அப்பதவியின் பெறுமதியை உணர்ந்து செயற்பட்டேன்.

1972ல் பாராளுமன்றத்தில் ( அரசியல் நிர்ணய சபையில்) புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டவேளை அதைக் கண்டித்து உரையாற்றியது மட்டுமல்ல அதை எதிர்த்து வாக்களித்த ஒரேயொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினன் நான் மட்டுமே. நான் அன்று பிரதிநிதித்துவப்படுத்திய அகில இலங்கைத் தழிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து தெரிவாகிய ஏனைய இருவரும் அரசுடன் சேர்ந்து ஆதரவாக வாக்களித்தும். தமிழரசுக்கட்சியினர் அரசியல் நிர்ணயசபையைப் பகிஷ்கரித்ததும் அனைவரும் அறிந்ததே. எனது இச்செயலால் பெரியவர் தந்தைசெல்வா உட்பட தமிழரசுக்கட்சி உறுப்பினர்களினதும் அன்றைய எனது கட்சித் தலைவரும், ஸ்தாபகருமாகிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களினதும் பாராட்டைப் பெற்றவன் நான்.

1972.05.14 தமிழர் கூட்டணியை உருவாக்கினோம். இக்கூட்டணியில் நான் என்னை இணைத்துக்கொண்டவனல்ல. கூட்டணியை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். நானும் எனது நண்பன் மு.ஆலாலசுந்தரமும் இணைப்பிரச்சாரச் செயலாளர்களாகத் தெரிவானோம். அந்தவேளை திருவாளர்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், தா.சிவசிதம்பரம் ஆகியோர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்திருந்தார்கள். குடியரசு தினத்திற்கு முதல்நாள் இரவு அல்லது ஓரிரு தினங்களுக்கு முன்னர் சரியாக ஞாபகமில்லை பல இளைஞர்களுடன் எனது மைத்துனர் ஜெயசீலன் உட்பட உம்மையும் கைதுசெய்து தடுப்புக்காவலில் இருந்த உமக்கு வெளியில் நடந்தவைபற்றி அதிகம் தெரிந்திருக்கமுடியாது. தெரிந்திருந்தால் இன்று என்னை முழுமூச்சாக ஆதரித்திருப்பதுடன், அர்த்தமற்ற நியாயமற்ற உண்மைக்குப்புறம்பான குற்றச்சாட்டுகளை நம்மவர் சிலர் வைக்கும் போது அவற்றைக் கண்டித்தும் இருப்பீர். அதற்குப் பதிலாக எனது உயிருக்கு உலை வைக்கும் பெரும் பணியில் அல்லவா நீர் ஈடுபட்டிருந்தீர். நீர் என் சார்பாக பேசவில்லை என நான் கவலைப்படவில்லை. ஆனால் எதுவித பலனையும் எதிர்பாராமல் புண்ணியத்திற்கு உழும் பன்றியை பல்லுக்குப் பதம் பார்ப்பதில் நீர் அல்லவா முன்னின்று செயற்படுகின்றீர்.

உம்மைப்போன்று ஏறக்குறைய 50 இளைஞர்கள் குடியரசு தினத்தை பகிஷ்கரிக்கத் தூண்டியதால் பொலிசாரர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்த அதேவேளை சகல தழிழரசுப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், ஏனைய திருவாளர்கள் அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், தா.சிவசிதம்பரம் ஆகியோருடன் நானும் இன்னும் பல தொண்டர்களும் இணைந்து பல்வேறு சட்டமறுப்பு நடவடிக்கைகளிலும், பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டோம்.

அப்படியான ஒரு சட்டமறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சித் தொண்டர்களும் நானும், என்னுடன் காலம் சென்ற ஜயம்பிள்ளை திருஞானம், லண்டன் பா.வை.ஜெயபாலன், ஜேர்மனி சுந்தரசாமி கண்ணன், இந்தியா ஞானப்பிரகாசம் ஞானராசா, வன்னேரிக்குளம் துரைராசசிங்கம் ஆகியோரும் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு யாழ். கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டோம். மறுநாள் காலை சிறைக்கைதிகளின் உடையில் பலாலி விமானநிலையத்தில் எனக்காக தயாராயிருந்த விசேட விமானத்தில் கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். பலாலி விமானநிலையத்தில் கொழும்பு செல்லவிருந்த பயணிகளும், திருச்சிக்கு செல்லவிருந்தவர்களும் மற்றும் அவர்களை வரவேற்கவும், வழியனுப்பவும் வந்திருந்த பலரும் பார்த்துக்கொண்டிருக்க நான் விமானத்தில் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். வெலிக்கடைச்சிறையில் நான் அடைக்கப்பட்டேன். தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சிகளின் வரலாற்றில் சிறைக்கைதி உடையணிந்து மக்கள் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் நான் மட்டுமே! என்னுடன் கைதான ஏனைய 6 இளைஞர்களும் இவ்வாறே சிறைக்கைதி உடையணிந்தே சிறை வைக்கப்பட்டிருந்தனர். திட்டமிட்டு என்னை அவமதிக்க அரசு செய்த செயல் இன்றைய இளம் தலைமுறைக்குத் தெரிந்திருக்கும். உமக்கும் இது தெரியாமலிருக்க நியாயமில்லை.

சிறைவாசம் முடிந்து கொழும்பில் விடுதலை செய்யப்பட்ட என்னை மாலை அணிவித்து வரவேற்ற தந்தை செல்வாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்ததை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை. அதேநேரம் யாழ்.கோட்டையில் விடுதலையாகிய இளைஞர்களை வரவேற்றகச்சென்ற அமிர் தம்பதியினருக்கு என்னநடந்தது என்பதையும் நான் குறிப்பிட வேண்டும். திருமதி.அமிர்தலிங்கம் காரினுள் இருக்க சில பொலிசார்கள் காரின் மேலே நின்று தூஷண வார்த்தைகளைப் பேசி பைலா நடனம் ஆடியதும், அமிர்தலிங்கம் அவர்களின் பிடரியில் யாரோ ஒருவன் அடித்ததும் இப்பொழுது நினைக்கும் பொழுதும் எனது கண்கள் பனிக்கின்றன. இது மட்டுமல்ல எத்தனையோ தடவைகள் அவர் அவமரியாதைப்பட்டதும், தாக்குதலுக்குள்ளானதும் உமக்கு தெரியாததல்ல. இன்று நீர் தமிழரசுக்கட்சியை மீளப்புதுப்பித்து தமிழர் விடுதலைக் கூட்டணியை கருவறுப்பதன் மூலம் அவருக்குச் செய்யும் துரோகத்தை எண்ணி நான் வேதனைப்படுகின்றேன். கடந்த 10ஆண்டுகளில் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை ஒரு தடவையேனும் உச்சரித்தீரா. அவர் எப்படி இறந்தார் என்பதையேனும் சொல்லியிருக்கிறீரா? அக்கொலையை கண்டித்திருக்கிறீரா?

அமிர் அவர்களின் வாரிசு போல, எடுத்ததெற்கெல்லாம் தந்தையையும், அமிரையும் சாட்சிக்கு கூப்பிடும் உமக்கு இச் சம்பவம் பற்றிப் படிக்கும் போது உள்மனம் உறுத்தவில்லையா? இந்தத் தியாகச் செம்மலுடன் எனது இறுதியான பயணம் கொழும்பில் இருந்து சென்றதே. அவரை விட்டுப்பிரியும் போது இனி அவரை உயிருடன் சந்திக்கமாட்டேன் என்பதை நான் உணரவில்லை. அவர் கூறிய இறுதி வார்த்தைகள் இன்றும் என் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அன்போடு என்னை அழைத்து “சங்கரி எம்மில் சிலருக்கு என்ன காத்திருக்கிறது என்று தெரியும். என்ன செய்வது? நாம் அதற்கு முகம் கொடுத்துத்தானே ஆகவேண்டும்” என்று கூறிவிட்;டு என்னை அண்ணா மேம்பாலத்திற்கு அண்மையில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தார் என்பதை அன்று நான் உணர்ந்திருந்தால் நிழல்போல அவரைத் தொடர்ந்திருப்பேன் அல்லவா? உம்மைத் தனது நிழல் என்று தானே அவர் எண்ணியிருந்தார். அதற்கமைய நீர் நடந்தீரா? நடக்கின்றீரா?

தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட்ட பின் ஒரு சந்தர்ப்பத்தில் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் கடும் சுகவீனமுற்றிருந்தபோது பலகாலம் பிரச்சாரத்தில் ஈடுபடாது ஏனைய கட்சிப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே காலத்தில் திரு.தா.சிவசிதம்பரம், அன்றைய வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் திரு.எக்ஸ்.எம்.செல்லத்தம்பு அவர்களுடன் முரண்பட்டுக்கொண்டு பிரச்சார வேலைகளுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். அந்த நாட்களில் தமிழர் கூட்டணியின் கூட்டமென்றால் நான் மேடையில் அமர்ந்தால் தான் அது கூட்டணிக் கூட்டமாயிருக்கும். அல்லது அக்கூட்டங்கள் தமிழரசுக் கட்சிக் கூட்டமாகவே மக்கள் பார்வைக்குத் தெரியும். காரணம் எத்தனை பேச்சாளர்கள் இருந்தாலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது இருந்தால் தான் கூட்டம் கலகலப்பாக இருக்கும். அந்தக் காலத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நான் மட்டுமே என்பதை மறந்துவிடவேண்டாம். கூட்டணி என்னால் தான் வளர்ந்தது என்று கூறவரவில்லை. இருகட்சிகளையும் சேர்த்த பிரமுகர்கள், தொண்டர்கள் அனைவரும் தம் பங்களிப்பை செய்தனர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. சட்ட மறுப்பு, பிரசாரக்கூட்டம், கிராம யாத்திரை என்று எந்த நிகழ்விலும் நான் கலந்து கொள்ளாது விடுவதில்லை. நெடுந்தீவு தொடக்கம் பொத்துவில் உகந்தைவரை எனது வாகனத்துடன் சமூகமளிப்பதை பெருமையாக என்னைப் பாராட்டி தன் மனைவிக்கும், கூடியிருக்கும் தொண்டர்களுக்கும் அமிர் அவர்கள் கூறுவது இந்தக்கணத்திலும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

அரசியல் கட்சிக்குள் உட்ப+சல் இல்லாத கட்சி எங்கும் கிடையாது. அமரர் அமிர்தலிங்கம் அவர்களுடன் பதவிப்போட்டியில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் போட்டியிடமுன்வந்ததும், தந்தை செல்வாவின் தலையீட்டால் அவை தடைப்பட்டதும் அனைவரும் அறிந்தவிடயம். அதேபோல நீர் பதவிக்கு என்னுடன் போட்டியிட்டதில் தவறில்லை. ஆனால் எதற்கும் ஓர் வழிமுறையுண்டு. பதவி கிடைத்தால் கட்சியை அழிக்க உடைக்க முயல்வது நீர் அடிக்கடி பெயர் குறிப்பிட்டுப் பேசும் தவைவர்களுக்குச் செய்யும் படுதுரோகமாக இன்று உமக்குத் தெரியவில்லையா?

நம் கட்சிக்குள் நடந்த சில கசப்பான சம்பவங்களைக் குறிப்பிடுவது அழகல்ல. இருப்பினும் உம்மைப்போன்ற சிலரின் விபரீதப் போக்கால் சிலவிடயங்களைப் பற்றிக் குறிப்பிட்டேயாகவேண்டும். 1977ம் ஆண்டுத் தேர்தலில் கூட்டணி அமோக வெற்றியீட்டிய வேளையில், அன்றைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கவேண்டிய ஒரு சந்தர்ப்பம் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கிடைத்தது. அந்தத்தருணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற பேச்சுக்கே இடமின்றி, பழைய காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த நாங்கள் நால்வரும், தமிழருசுக்கட்சியைச் சார்ந்த சிலரும் அமரர் அமிர் அவர்களையே விரும்பினோம். ஏனெனில் அவர் செய்த தியாகங்கள், இரவு பகல பாராது குடும்பமாக தன்னை அர்ப்பணித்து மக்களுக்காகச் செயற்பட்டவர் கட்சியிக்காக உழைத்தவர் என்ற காரணத்தால் தான். ஆனால் உம்மைப்போன்ற பாராளுமன்ற உறுப்பினர் சிலர் அன்றும் இருந்திருக்கிறார்கள். சரித்திரம் திரும்புகிறது என்பார்களே! அது இது தானா? திரு.மு.சிவசிதம்பரம் அவர்களை எதிர்க்கட்சித்தலைவராகப் பிரோரிக்க நடந்துகொண்டிருந்த சதியை அறிந்த திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் தானே முதலில் எழுந்து அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை எதிர்க்கட்சித் தவைவராக முன்மொழிந்து அவர் பெருந்தன்மையாக நடந்து கொண்டதை நீர் அறிந்திருக்காமல் இருக்கமுடியாது. அமிர் அவர்கள் தனது இறுதி நாட்களில் அடிக்கடி கூறும் ஓர்விடயம் திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் இன்றுகூடச் சான்று பகர்வார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்த உறுப்பினர்களின் விசுவாசம்பற்றி.

நீர் சிறையிலிருந்தவேளை அங்கு நடந்த விடயங்கள் குறித்து எந்த மேடையிலும் எடுத்துக்கூற நான் தவறவில்லை. ஆனால் உம்மைப் போல பல இளைஞர்களும் அரச தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டிருக்கிறார்கள். கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். உம்மையும், காசி ஆனந்தத்தையும் வண்ணை ஆனந்தத்தையும் அரசியலில் வளர்த்தெடுத்தது நாங்கள் தான். உமக்குச் செய்யவேண்டியதற்கு அதிகமாகவே எமது கட்சி செய்துள்ளது. எதுவித பலனையும் பெறாத எத்தனையோ இளைஞர்கள் அன்று இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். பல இடங்களில் இளைஞர் பேரவைக் கிளைகளை அமைத்தோம். எனது கிளிநொச்சித் தொகுதியில் மட்டும் 28 கிளைகள் இருந்தன. இளைஞர் பேரவைக் கிளைகளின் ஒன்றியத்தின் தலைவராக நீர் வாக்கொடுப்பு மூலம் என்றும் தெரிவுசெய்யப்படவில்லை. எப்போதும் அமிர்தலிங்கம் அவர்களின் நியமனத்தால்தான் உமக்குத் தலைவர் பதவி கிடைத்தது. அன்றெல்லாம் நீர் தேர்தல் மூலம் பதவிக்கு வரவேண்டும் எதிர்நோக்க வேண்டும் என்று எண்ணவில்லை. இவையெல்லாவற்றையும் மறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உடைத்தெறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளீர். இன்று உமக்கும், கட்சியில் வேறுசிலருக்கும் உள்ள நெருக்குதல் எனக்குத் தெரியாததல்ல. தமிழரசுக் கிளையையோ, கூட்டணிக்கிளையோ இன்று அமைக்கும் பட்சத்தில் யார் யார் அங்கத்தவர்கள் ஆவார்கள், எப்படிப்பட்டவர்கள் முக்கிய பதவியைக் கைப்பற்றுவார்கள் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? உமக்கு வேண்டியதெல்லாம் தலைமையில் மாற்றம். அதை முறைப்படி செய்திருக்கலாம். அகில இலங்கைத் காங்கிரஸ் கட்சி பிரிந்து சென்று தனித்து இயங்கலாம் என்றால் தமிழரசுக் கட்சி ஏன் தனித்து இயக்க முடியாது என்ற உமது வாதத்தை சிலர் முன்வைக்கின்றனர் என்பதை அறிந்து அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. வரலாறு தெரியாதவர்களுக்கு வரலாற்றை எடுத்துக் கூறவேண்டிய கடமைப்பாடு எனக்குண்டு.

1970ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்களின் பெருந்தலைவர்கள் குறிப்பாக திருவாளர்கள் ஜீ.ஜீ. பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் ஆகியோர் தோல்வியைத் தழுவிக் கொண்டார்கள். அன்றைய இக்கட்டான கட்டத்தில் புதிய அரசு அரசியல் சாசனம் உருவாக்க அரசியல் நிர்ணயசபையை அமைத்து செயற்பட்ட போது இப்பெரியார்களின் தோல்வி ஈடுசெய்ய முடியாது என உணர்ந்த தந்தை அவர்கள் தமிழ் கட்சிகள் ஒருசில சொற்ப வாக்குவித்தியாசத்தில் ஒருவரையொருவர் வெற்றிபெற்ற நிலையில் இனியும் நாம் பிரிந்து நின்றால் அழிந்துவிடுவோம் எனக்கூறி தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வேண்டினார். அன்றைய அரசின் சவாலுக்கு பெரியவருக்குப் புலப்பட்ட ஒரேவழி ஒற்றுமை தான். தனது அரசியல் பேதங்களை மறந்து வீடுதேடிவந்த தந்தையை ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் வரவேற்று, அவருடைய முயற்சிக்கு முழு ஆதரவு தருவதாகக் கூறி தன் கட்சித் தொண்டர்கள் அத்தனைபேரும் முழு ஒத்துழைப்புத் தருவார்கள் என்றும் உறுதியளித்தார். அன்றுதொட்டு இருகட்சிகளும் இணைந்தே செயற்பட்டன. பிரச்சாரக் கூட்டங்கள், குழுக்கூட்டங்கள் ஆகியவற்றில் காங்கிரஸின் செயலாளர் தா.சங்கரப்பிள்ளை, பிரபல வழக்கறிஞர் எஸ.ஆர். கனகநாயகம், முன்னாள் மேயர்.இராசா.விஸ்வநாதன், தனாதிகாரி தா.திருநாவுக்கரசு போன்றோர் தவறாது கலந்து கொண்டனர். இவையெல்லாம் நீர் தடுப்புக்காவலில் இருந்தகாலத்தில் நடந்தவை. தலைவர் ஜீ.ஜீ மட்டும் பிறிதொருநாளில் சேர்வதாக உறுதியளித்தார். வட்டுக்கோட்டை மாநாட்டில் 1976ல் தழிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கூட்டுத் தலைவர்களாக தந்தைசெல்வா, தலைவர் ஜீ.ஜீ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌ.தொண்டமான் ஆகியோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர். இறக்கும் வரை, தான் அப்பதவியை துறந்ததாக ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் தெரிவிக்கவில்லை. இது கூடவா உமக்கு மறந்து போய்விட்டது. கூட்டுச்சேருவது பற்றி நீர் தெரிவித்த கருத்து உமக்கு வேடிக்கையாக தெரியவில்லையா? ஒரு சமயம் நான் இந்தியா போயிருந்தபொழுது தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களை தனது வழக்கொன்றில் ஆஜராகுமாறு கலைஞர் மு.கருணாநிதி என்னைக் கேட்டுகொண்டபோது, பலர் கேட்டு மறுத்தும் என் வேண்டுகோளை ஏற்று, ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவ்வழக்கில் ஆஜராகி ஒரு சதமேனும் ஊதியமாகப்பெறாது, வழக்கை வென்றும் கொடுத்தார் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். வேண்டுமானால் கலைஞரிடமும் அல்லது தமிழ்நாடு சட்டசபை முன்னாள் உறுப்பினர்களிடமும் கேட்டு அறியலாம். வெற்றிகரமாக வழக்கை முடித்துக்கொண்டு சென்னையிலிருந்து மலேசியா சென்று நாடு திரும்பியதும் தீவிரமாக செயற்படுவதாக உறுதியளித்துச் சென்ற தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் ப+தவுடலைத்தான் நானும், அன்னாரின் புதல்வர் குமார்.பொன்னம்பலம் அவர்களும், ஏனைய கட்சிப்பிரமுகர்களான தா.திருநாவுக்கரசு, கு.மோதிலால் நேரு, முன்னாள் பா.உ. சிவாஜிலிங்கம் அவர்களின் மாமனார் போன்றவர்களுடன் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் பொறுப்பேற்றோம். கூட்டணியுடன் இணைந்து தீவிரமாக உழைப்பதாக உறுதியளித்திருந்த ஜீ.ஜீ அவர்கள் என்னை மட்டுமல்ல, தமிழினத்தையே கலங்கவிட்டு விண்ணகம் சென்றார். சென்றவர் தந்தை செல்வாவையும் விரைவாக அழைத்துச் சென்றுவிட்டார். மறைந்த இரு தலைவர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்திலிருந்தே தமது இறுதி யாத்திரையை முடித்துக்கொண்டனர். இவ் இரு தலைவர்களின் இறுதிக்கிரியைகளும் அமரர் அமிர்தலிங்கத்தின் தலைமையிலேயே நடந்தது ஞாபகம் இருக்கா?

அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேரவில்லை என்று கூறுபவர்கள் இன்றும் இருப்பின் அவர்களுக்கு இன்னும் ஓர் சம்பவத்தை ஞாபகமூட்ட விரும்புகின்றேன். தலைவர் ஜீ.ஜீயைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் அவர் வேறு எந்த வழக்கறிஞர்களுக்கு கீழேயும் என்றும் தொழில் புரியவில்லை. எந்த வழக்குகளிலும் சரி முதன்மை வழக்கறிஞராகவே தோன்றுவார். அவரது வரலாற்றில் ஒரேயோரு சந்தர்ப்பத்தில் மட்டும்தான் வேறு ஒரு வழக்கறிஞருக்குக் கீழ் ஆஜரானார். அந்தவழக்குத் தான் திருவாளர்கள் அ.அமிர்தலிங்கம், வி.தருமலிங்கம் கா.பொ.இரத்தினம், வி.என்.நவரத்தினம் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட ட்ரயல் அட் பார் வழக்கு. தந்தை செல்வா அவர்கள் முதன்மை வழக்கறிஞராக கடமையேற்க, ஜீ.ஜீ அவர்கள் இரண்டாவது வழக்கறிஞராக ஆஜரானார். தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட முன்பு 70ஆம் ஆண்டில் தழிழ்க்காங்கிரஸ், தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் பெற்ற வாக்குகள் விவரத்தையும், 1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட்ட பின்பு அதே தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் வாக்குகள் விவரத்தையும் குறிப்பிடுகிறேன்.

1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி 18 ஸ்தானங்களைப்பெற்று அமோக வெற்றியீட்டியவேளை 1970 ஆம் ஆண்டு இவ்விரு கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குவித்தியாசங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் கூட்டணியில் தழிழ்க் காங்கிரசும், தமிழரசுக் கட்சியும் சங்கமமானது உண்மையா? இல்லையா? என்பது புரியும்.

1977ஆம் ஆண்டுத் தேர்தலில் திரு.குமார் பொன்னம்பலம் அவர்கள் யாழ்ப்பாணத் தொகுதியை தனக்குத் தரும்படி அடம்பிடித்தார். வட்டுக் கோட்டைத் தொகுதி அவருக்கு வழங்கப்பட அதை ஏற்கமறுத்து யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 6960 வாக்குகளை மட்டும் பெற்றார். தமிழர் விடுதலைக்கூட்டணியில் களமிறங்கிய திரு.வெ.யோகேஸ்வரன் அவர்கள் பெற்ற வாக்குகள் 16251. தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக 1970ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற திரு. மாட்டின் அவர்கள் பெற்ற வாக்குகள் 8,848 ஏறக்குறைய இருமடங்கு.

அகில இலங்கை தழிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் ஜீ.ஜீ அவாகள் தன்கட்சியை இயங்க விடாது முடக்கி வைத்திருந்தார். 1972க்குப் பின் அக்கட்சி இயங்கவில்லை. ஆனால் அவர் இறந்த பின் அவரது மகனான திரு.குமார் பொன்னம்பலம் அவர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோற்றதன் பின், தமிழர் மத்தியில் ஏற்பட்ட ஒற்றுமையை எவ்வாறு குழப்பலாம் என அன்றைய பிரதமரான திரு.ஜே.ஆர்.ஜெயவர்த்தனா திட்டமிட்டுக்கொண்டிருந்த வேளை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை மீளப்பதிவு செய்ய அவரின் உதவியை நாடினர். தமிழ்க் காங்கிரஸ் கட்சி மீளப் பதியப்படக் கூடாது என ஆட்சேபித்து எம்மால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தோற்றுப்போன விடயமும் நீர் அறியாததல்ல.

இதேபோன்றதோர் நிலை தமிழரசுக்கட்சிக்கும் வந்துவிடக்கூடாது என்பதை அறிந்திருந்த அமிர்தலிங்கம் அவர்கள் யாராவது கூட்டணிக்கும், தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்துவிடக்கூடாதென்பதற்காகவே தமிழரசுக் கட்சியைப் பதிவு செய்து வைத்திருந்தாரேயன்றி அதை யாரும் மீள இயக்கவைப்பதற்கல்ல. தந்தை செல்வா தான் உருவாக்கிய தமிழரசுக்கட்சி என்ற வீட்டினைப் ப+ட்டி அதன் திறப்பை திரு.அமிர்தலிங்கம் அவர்களிடம் பத்திரப்படுத்தி வைத்திருக்குமாறு கூறினாரேயன்றி அதை திறக்கும் அதிகாரத்தை யாரும் அபகரிக்க உடந்தையாக இருப்பதற்கல்ல. இக்கட்சியின் செயலாளர் நாயகம் நீர் என வெட்கமின்றிக் கூறுகின்றீர். உம்மை அவ்வாறு தெரிவுசெய்தவர்கள் யார்? என்ன நோக்கத்துடன் தமிழரசு கட்சி பதியப்பட்டிருந்ததோ அதற்கு விரோதமாக செயற்படுவது, அடிக்கடி தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்தவன். அமரரின் காலடியில் அரசியல் கற்றவன் என்று தம்பட்டம் அடிக்கும் நீர், இப்பெரும் தலைவர்களுக்குச் செய்யும் பெருந்துரோகமாகத் தெரியவில்லையா? நீர் செய்த மற்றுமோர் மோசடி பற்றிக் கூற வேண்டும். தந்தை செல்வா அறங்காவல் குழுவை உருவாக்கியது அன்றைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தந்தையின் சகோதரர் திரு.ஏர்ணஸ்ட் வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களும் ஆவார். நாம் அறங்காவலராக நியமித்தது தந்தை செல்வாவின் தீவிர ஆதரவாளர்கள் என்ற வகையில் பேராசிரியர் கு.நேசையா, பெரியவரின் ஒருபுத்திரனாகிய திரு.சந்திரகாசன், மாவட்ட சபைத் தலைவர் திரு.சு.நடராசா ஆகியோருடன் தமிழர் வீடுதலைக் கூட்டணியின் தலைவர், செயலாளர் நாயகம், தனதிகாரி ஆகிய திருவாளர்கள் மு.சிவசிதம்பரம், அ.அமிர்தலிங்கம், சி.கதிரவேற்பிள்ளை ஆகிய ஆறுபேரையும் தான் அவ்வுறுதியை எழுதியவர் வழக்கறிஞரும், பிரசித்த நொத்தாரிசுமாகிய திரு.சி.வி.விவேகானந்தன் அவர்கள். காலவோட்டத்தில் அறங்காவலர்களில் பலர் இறந்திருந்தும் இருவர் மட்டும் அன்று எஞ்சியிருந்தனர். அவர்கள் திரு.மு.சிவசிதம்பரம் அவர்களும் திரு.சந்திரகாசன் அவர்களுமே. அந்த இருவருக்கும் தெரியாமல், கூறாமல் பாதுகாப்பு நிதியத்தை உருவாக்கியவர்களில் அன்றிருந்த திருவாளர்கள் கா.பொ.இரத்தினம், இரா.சம்பந்தன், பி.சூசைதாசன், ஆகியோருடன் என்னையும் சேர்த்து ஒதுக்கிவிட்டு எவருக்கும் தெரியாமல் கூறாமல் உமது இஷ்டப்படி புதிய அறங்காவலர்சபையை நியமித்து உம்மையும் அதில் இணைத்துக்கொண்டீர். இதுபெரும் அரசியல் அயோக்கியத்தனமல்லவா? அதி.வணக்கத்திற்குரிய பிதாவையும் இப்பட்டியலில் உள்ளடக்கியதால் அவரின் கௌரவத்திற்கும் மதிப்பளித்தே அதுசம்பந்தமான நடவடிக்கை எதுவும் எடுக்காது தவிர்த்தோம். முன்பு வடக்கு கிழக்கு இணைந்த உறுப்பினர்கள் இருந்த அக்குழுவில் கிழக்கு மாகாணத்தில் இருந்து யார் புதிய குழுவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிய விரும்புகின்றேன். உமது இவ்வாறான செயல்களால் தந்தை செல்வா அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு மட்டும் உரியவரா? என்ற வினா தோன்றியுள்ளது. இப்படிப்பட்ட செயல்களை நீர் யாரிடம் கற்றுக்கொண்டீர்? அண்மையில் திரு.இரா.சம்பந்தனையும் இணைத்துக்கொண்டதாக அறிகின்றேன்.

அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுமலர் வெளியீட்டுக்கு உமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் 7பேர் அன்று இருந்தும் நானும் தம்பி இரவிராஜ் ஆகிய இருவருமே கலந்து கொண்டோம். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரில் தம்பி சிவாஜிலிங்கம் கலந்து கொண்டார். நீர் அதிமுக்கிய வேலையாக இந்தியா சென்றதாக அறிந்தேன். திரும்பி வந்தபோதும் சரி தமிழரசுக்கட்சியைப் புனரமைப்பது பற்றி அப்போது இங்கு இருந்த திருமதி.மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களிடமாவது ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். ஏனெனில் தனது கணவரோடு கட்சியின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தது மட்டுமல்ல, தந்தை தனது வாரிசு எனப் பிரகடனப் படுத்தியிருந்த ஒரு பெரியவரின் மனைவி என்ற காரணத்தால், நான் அவரை இலண்டனில், சந்தித்தபோது உமது இத்துரோகச் செயலை வன்மையாகக் கண்டித்தார்.

அமிர் அவர்கள் இறந்தபின்பு, நானும் நீரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சூசைதாசன் கலாநிதி நீலன் திருச்செல்வம் ஆகியோர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சூட்டுக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திரு.மு.சிவசிதம்பரம் அவர்களைப் பார்க்கப்போனோம். அவர் முன்பு நீர் கூறினீர், இனி ஒரு இளைஞன்தான் பாராளுமன்றம் போக வேண்டும் என்று. எங்களுக்குச் சிரிப்புத்தான் வந்தது. இருப்பினும் உமது ஆசையை நிறைவேற்றுவது என நான் தீர்மானித்தேன். அன்று இருந்த இளைஞர் நீர் மட்டும்தானா? அல்லது அமரர் அமிரின் இடத்திற்குத் தேசியப்பட்டியலின் பிரகாரம் தகுதியான வேறு உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லையா? அப்பதவிக்கு எத்தனைபேர் கண்வைத்திருந்தார்கள் என்பது உமக்கும் தெரியாததா? 1983ஆம் ஆண்டுக்குப்பின் கட்சி மாநாடு நடாத்தப்படாத நிலையிலும் அமரர் அமிர்தலிங்கம் அவர்களது இடத்திற்கு ஒருவரை நியமிக்கவென ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள மத்திய குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினால் ஆபத்து என்ற நிலையில் தம்பி சிவபாலன் நேரில் சென்று உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறி உறுப்பினர்களை வரவழைத்ததையும் இக்கடிதத்தில் நினைவுபடுத்தி இவ்வளவு காலமும் மறைத்து வைத்திருந்த சில இரகசியங்களையும் உமது செயலால் அம்பலப்படுத்த வேண்டிருப்பதையிட்டு மிகவும் மனவருத்தமடைகின்றேன். நிகழ்ச்சி நிரலில்கூட இவ்விடயம் குறிப்பிடப்படாத நிலையில் புதிய நியமனம் சம்பந்தமாக எதுவித தீர்மானமும் எடுக்கப்படக் கூடாது என ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதும் உமக்கு ஞபாகமிருக்கும். இருந்தும் உம்மை நாம் தெரிவுசெய்தோம். உமது பெயரைச் சிபார்சுசெய்தபோது மீளப்பரிசீலிக்க வேண்டும் என ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தபோது அதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்பதும் உமக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. இந்நிலையில் நியமனத்தைத் தாமதப்படுத்தி இதற்கென இடம்பெறும் கூட்டத்தில் இதனை ஆராய்ந்து முடிவு செய்வதாக அன்றைய சூழலில் அக்கூட்டம் பிற்போடப்பட்டு பின்னர் குறித்தநாளின் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் குறிக்கப்பட்டால் மேலும் பல எதிர்ப்புக்கள் வரும் எனக்கருதி நான் எவ்வாறு உம்மைப் பாராளுமன்ற உறுப்பினராக்க அர்ப்பணித்தேன் என்பது பலருக்குத் தெரியாவிட்டாலும் உமக்கு நன்றாக நினைவில் இருக்கும். இதற்கு மேல் இன்னுமொருவிடயத்தைக் கூறினால் சிலவேளைகளில் உமக்கு இன்று அது அவமானமாயிருக்கும். நீர் விரும்பிய பதவி கிடைக்காவிட்டால் உமது உடமைகளையும் எடுத்துக்கொண்டு நீர் கட்சியிலிருந்து வெளியேற ஆயத்தமாயிருந்ததையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். அன்று ஏனையோரைப் போன்று நானும் செயற்பட்டிருந்தால் இன்று உம்மால் எனக்கு இன்றைய நிலமையும் ஏற்பட்டிருக்காது. இதையே வளர்த்த கிடாய் மார்பில் பாய்வது என்று சொல்வதோ என நினைக்கின்றேன். திருமதி.மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களிடம் அமிரின் ப+தவுடல் அக்கினியுடன் சங்கமமாகி அவரது சாம்பல் சூடு தணிவதற்கு முன்னரேயே அமரரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும், அவர் வகித்த கட்சி;ச் செயலாளர் நாயகம் பதவியையும் உமக்குத் தரவேண்டி அவரிடமிருந்து சிபாரிசுக்கடிதம் பெற்றதையும் நீர் மறந்திருக்கமாட்டீர். இது விடயமாக நீர் என்னுடன் பேசியதும், நான் உமக்களித்த பதில் ஏதாவது ஒரு பதவியைத்தான் உம்மால் கோரமுடியும் என்பதும் பலருக்குத் தெரியாது. இதை நீர் மறக்கவோ, மறைக்கவோ முடியாது. முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவிருந்த நானும், இரா.சம்பந்தன், கலாநிதி.நீலன் திருச்செல்வம் ஆகியோரும் 1989 தேர்தலில் போட்டியிட்ட பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எதுவித எதிர்ப்புமின்றி அமரரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அன்றைய மத்திய செயற்குழு உறுப்பினர்களுடன் உமக்கு அளித்ததையும், எமது பெருந்தன்மையையும் மறந்துவிடவேண்டாம். பாராளுமன்ற உறுப்பினராக நீரும், செயலாளராக கலாநிதி நீலனும் தெரிவுசெய்த ஒரேயொரு குற்றத்திற்காக திரு.சு.நடேசு அவர்களுக்கும், திரு.செல்வராசா அவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை நீர் மறந்துவிட்டீரா? இவர்களை நீர் அதன்பின் சந்தித்துப்பேசினீரா, இப்படியான பெறுமதி கொண்ட நிகழ்வுகளையெல்லாம் எவ்வாறு இலகுவில் உம்மால் மறக்க முடிகிறது.

எமது கட்சி என்றும் பணவசதி படைத்த கட்சியாக இருக்கவில்லை. வேறுபல கட்சிகளின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் பெறும் வேதனத்திலிருந்து ஒரு பகுதி பணத்தையும் வழங்கப்படும் வாகனத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதியையும், வேறு பல வசதி வாய்ப்புக்களையும் கட்சியின் வளர்ச்சிக்;காக வழங்கப்பட்டு வந்த நிலையில் நாம் உமக்கு வழங்கிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் மூலம் - இரு ஊழியர்களையும், போட்டோகொப்பி இயந்திரம் ஒன்றும், தட்டச்சு இயந்திரம் மற்றும் தொலைபேசி ஆகியவை தவிர வேறு எதனையும் கட்சிக்காக நீர் கொடுக்கவில்லை. ஆனால் பக்ஸ் இயந்திரத்தை 35000.00 ரூபாவுக்கு கட்சிக்கே விற்று அந்தப் பணத்தைப் பெற்றக்கொண்டீர். இப்பதவி மூலம் கிடைக்கும் ஏனையவற்றை அனுபவிக்கும்போது கூட உமது மனச்சாட்சி உறுத்தவில்லை. ஏனைய கட்சிகளின் இவ்வாறான செயற்பாடுகள் ஒழுங்கு முறையாக இருந்தாலும் எமது கட்சியில் மட்டும் இது விதிவிலக்காக இன்றும் இருப்பது துரதிஷ்டமே.

1993ல் விசேட கூட்டத்தினை நடத்தி கூட்டணியின் புதிய தெரிவு இடம்பெற்றதையும் நீர் மறந்திருக்க முடியாது. 1994ல் இடம்பெற்ற தேர்தலில் அம்பாறை மாவட்ட வேட்பாளராக நின்று நீர் தோல்வியுற்ற நிலையில், இரண்டு வாகனங்களில் அம்பாறை ஆதரவாளர்களை ஏற்றி வந்து ஏற்கனவே தேசியப்பட்டியலில் இடம்பெற்றிருந்த கலாநிதி. நீலன் திருச்செல்வத்தின் பெயரை நீக்கி உமது பெயரை இடுமாறு ஆதரவாளர்களைக் கொண்டே வற்புறுத்தியதும், அதற்கு சிவா ஐயா உட்பட அனைவரும் மறுப்புத் தெரிவித்ததும் ஞாபகமிருக்கும் என நினைக்கின்றேன். கஷ்டமான சூழ்நிலையாலும் கட்சி நிதிநிலை இக்கட்டான போதும் சிவா ஐயாவின் சிபார்சின் பேரில் மாதாந்தம் உமது செலவுக்கும், சிராவஸ்தியைவிட்டு வெளியேறிய பின்னர் தங்கியிருந்த அறை வாடகைக்கும் கட்சி நிதியிலிருந்து மீண்டும் பா.உ ஆக நியமிக்கப்படும்வரை பெற்றுக்கொண்டதையும் மறந்திருக்க முடியாது. கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களின் மரணத்தின் பின்பு அந்த இடத்திற்கு மீண்டும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக எனது சிபார்சில் நியமிக்கப்பட்டிருந்தும் நீர் அப்போதுபொதுச் சபையைக் கூட்டும்படியும் மாநாட்டை நடத்தும்படியும் எவரிடமும் கேட்கவில்லை. அன்று எனது சிபார்சினை ஏற்று, என்னுடன் தீர்மானித்தவர்கள் திருவாளர் இரா.சம்பந்தன், ஜோசப் பராராஜசிங்கம், பொ.செல்வராசா, கி.துரைராசசிங்கம். எஸ்.ரி.ஆர் ஆகியோர் மட்டுமே. இந்த விடயத்தில் எனது பெருந்தன்மையை நேரடியாகவே கண்டிருப்பீர். இந்தியாவிலிருந்த தலைவர் சிவாவிடமும் இது பற்றித் தெரிவித்த போது அவர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்.

1983ல் இந்தியாவில் நாம் தங்கியிருந்த காலத்திலும் 2000ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் வரை கட்சி மூலமாகப் பெற்ற வருவாய் உமக்கு ஒழுங்காகவே கிடைத்து வந்தது. 1983 - 1989 வரை அமிர் அவர்கள் மரணிக்கும் வரைக்கும் உமக்கு மாதாமாதம் கட்சி வேதனம் தந்தது. கலாநிதி நீலன் அவர்களின் இடத்திற்கு உம்மைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்ததன் பேரில் மூன்று உத்தியோகத்தர்கள், போட்டோக்கொப்பி இயந்திரம் ஒன்றும் வழங்கப்பட்டன. வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டினை விற்ற நிலையில் அதன் மூலம் பெறப்பட்ட பெருந் தொகைபணத்தில் யாரும் பங்கு கேட்டார்களா? அல்லது நீராகவேனும் உணர்ந்து கட்சிக்குச் சிறுதொகையேனும் கொடுக்கத் துணிந்தீரா? அல்லது அப்படி ஓரு எண்ணம் இருப்பதையாவது வெளிப்படுத்தினீரா? இல்லையே! எல்லாவற்றையும் முழுமையாக அமுக்கிக்கொண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி தந்த பதவியினை வியாபாரமாக்கிய ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் நீர்தான் என்பதைமறுக்க முடியுமா? வாகனங்களால் மாத்திரம் உமக்கு வந்த வரவு ஏறக்குறைய 50 லட்சம் ரூபா வரும். இதை என்னால் நிரூபிக்க முடியும். இது 2004ம் ஆண்டு வரை அதன் பின்?

இவ்வாறான சூழ்நிலைகளில் உமது இன்றைய போக்கிற்கு காரணம் என்ன? சில சம்பவங்களை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. 2000ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளராக உம்மையே நியமிக்கும்படி நீர் நடவடிக்கைக் குழுவிற்கு மனுச் செய்தபோது, அக்குழு அதனை நிராகரித்தது. உமது மன உழைச்சலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்நிலையில் என்னால் அல்லது எனது அனுசரணையுடன் கிடைத்த சகல வாய்ப்பு வசதிகளையும் மறந்த நிலையில் அண்மைக் காலமாக உமது நடவக்கைகளை கண்டும், பார்த்தும், படித்தும் என்னையே நான் கோபித்துக் கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? இத்தனை துரோகங்களும் 2004 இற்கு முன்பு அதற்குப் பிந்திய துரோகங்கள் ஒன்றா இரண்டா? மீண்டும் நினைவுபடுத்த விரும்புவது யாதெனில், நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேரவில்லை. நானும் ஒன்றுபட்டு உருவாக்கிய கட்சிதான் தமிழர் விடுதலை கூட்டணி. உருவாக்குவதற்கும் சேர்த்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களில் நான் மட்டுமே கூட்டணியின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவன் என்ற பெருமையைப் பெற்றுக்கொள்ளக் கூடியவன். வயதில், அனுபவத்தில், முதிர்ச்சியில் நான் உம்டைவிட பெரியவன் என்பதை நீர் எப்படியாகிலும் ஒப்புக்கொண்டேயாக வேண்டும். இந்நிலையில் 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் முதன்மை வேட்பாளராக வருவதற்கு முயற்சித்திருக்கக் கூடாது. இது சிறுபிள்ளை ஆசையென எண்ணி விட்டுவிடலாம். ஆனால் அத்தேர்தலில் மூலைமுடுக்கெல்லாம் சென்று பலரிடம் உமக்காக மட்டுமே வாக்களிக்கும்படி கேட்டதாகவும் பழைய இளைஞர் பேரவையினரைச் சந்தித்து உமக்காக வேலை செய்யுமாறு கேட்டதும் எனக்குத் தெரியும். ஆனால் பிரச்சார மேடையில் தம்பி சேனாதிராசா, என நான் விளித்துப் பேசும்போது நீர் உரையாற்ற எழும்பும் சந்தர்ப்பங்களில் என் பெயரை மட்டும் விளித்து உரையாற்றியதை நான் உமது புத்தி அவ்வளவுதான் என பொறுத்துக்கொண்டாலும், பலர் உமது சிறுமைத்தனத்தை என் முன்னாலேயே விமர்சிக்கக் கேட்டு வெட்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.

2001ஆண்டு தேர்தலில் நீர் மிகவும் சின்னத்தனமாக நடந்துகொண்டீர். தலைவன் என்ற நிலையில் எனக்கிருக்கும் பொறுப்பு உமக்கு இருக்காதுதான். ஆனால் கூட்டுப்பொறுப்பானவர்கள் என்ற தோரணையில் ஒத்திசைவாக நடந்திருக்க வேண்டும். இன்றைய நிலைமையில் எமக்குச் சாதகமாக வரவேண்டும் என்பதற்காக சில செயற்பாடுகள் தவிர்க்கப்படவேண்டியதும் அவசியமானதாகும். ஒரு காலம் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்பட்டவர்கள் இன்று அந்நிலைமையில் இருந்து தம்மை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளனர் என்பது எனது அனுபவம். ஏனெனில் நான் அடிப்படை இடதுசாரிக்கொள்கைப்பற்றுக் கொண்டவன்.

என்னுடன் பழகிய பலருக்கு நன்கு தெரியும். 2000 ஆண்டுத் தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்றவரைப் புறந்தள்ளி உமக்குச் சாதகமான வேட்பாளரை உட்புகுத்தியதால் பலரின் மனக்குரோதங்களையும், ஐயப்பாட்டினையும் தோற்றுவித்தீர். இது துரோகமல்லவா? நீரும் எம்முடன் இருந்தாலும் பல நல்லவற்றையும் எண்ணங்களையும் காலத்திற்கேற்ப செயற்படுத்த முடியாதவராகவே காணப்பட்டீர். இதனால் சில முரண்பாடுகள் தோன்றக் காரணமாக இருந்து. சமூக குரோதங்களையும், சமயக் குரோதங்களையும் இத்தனையாயிரம் உயிரிழப்புக்களின் பின்பும் பழைய குருடியின் நிலைக்குப் போவது வெட்கமானதாகத் தெரியவில்லையா?

உமக்கு ஞாபகமிருக்கும் என நினைக்கின்றேன். நீர் ஒரு வேட்பாளரின் பெயரினை சிபார்சு செய்திருந்தீர். 2000 ஆம் ஆண்டு தேர்தலின் போது அவரை மன்றாடி நாம் கேட்டோம். எங்கள் பட்டியலில் பெயரிடவா என்று. அன்று திரும்பிக்கூடப் பாராமல் என்னை விட்டால் போதும் என்று ஓடியவர். திருமதி யோகேஸ்வரன் இறந்துகிடக்க கிட்டவும் வராமல் எட்டத்தில் நின்றவர். மற்றவர் 2000ம் ஆண்டு தேர்தலில் கண்ணால்கூடக் காணாதவர். இக்கட்டான கட்டங்களில் கட்சியின் நன்மைக்காக தங்களையே தியாகம் செய்யத் துணிந்த பலரை ஓரங்கட்டி சுயநல அரசியல் நடத்தும் நிலைமைக்கல்லவா உமது செயற்பாடுகள் காரணமாயிருந்தன. தம்பி! பாலை மறந்தாலும் பால் வார்த்த பானையை மறக்கக்கூடாது. 1994, 2000 தேர்தல்களை ஒருகணம் நினைத்துப் பார்த்தால் அன்று எங்களுக்குக் கைகொடுக்க மக்கள், கட்சி அபிமானிகள் சகலரும் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்து எமக்கு வாக்களித்தார்கள் என்று. எங்கள் கட்சி தலைநிமிர முடிந்ததே யாரால்? நிச்சயமாக நானோ நீரோ உரிமை கோர முடியாது. எங்களின் துணிவு, அதை மீறிய கட்சித்தொண்டர்களின் துணிவு, மக்களின் பலம், அவர்களின் ஆதரவு ஆகியவையே! இவையே கட்சியை மீண்டும் துளிர்விடச் செய்தது என்பதை தினமும் நான் நன்றியுடன் நினைக்கின்றேன். ஆதலால் தயவு செய்து துளிரைக் கருக்கிவிட வேண்டாம்.

கடந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி உறுப்பினர்களும் தெரிவாகி சகலரும் ஒன்றுகூடுதவற்கு முன்பே தன்னிச்சையாக ஒரு முடிவெடுத்து யாழ்ப்பாண மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக் கிளை பாராளுமன்றக் குழுத் தலைவராக திரு.இரா.சம்பந்தன் தெரிவானதற்கும், தேசியப் பட்டியல் உறுப்பினராக திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் நியமிக்கப்பட்டமைக்கும் நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியதாக செய்தி வெளியிடப்பட்டதே! இது உண்மையில்லை. பொய் என்பது மட்டுமல்ல பெரும் மோசடியும் கூட. அதேநேரம் இதை நிறைவேற்ற உடந்தையாக இருந்தது மட்டுமல்லாது சில உட்கட்சிப் ப+சல்கள் எழவும் காரணமாக வழிவகுத்த சில சூத்திரதாரிகளே இன்றைய உமது தமிழரசுக் கட்சி அமைப்பாளர்களாக பெயர் குறித்துரைக்கப்பட்டுள்ளனர். இதனை மறுக்க முடியுமா?உமக்கு ஒன்று தெரியவேண்டும்.

பாராளுமன்ற சம்பிரதாயப்படி மிகப் பழைய உறுப்பினர் ஒருவர்தான் பாராளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்படுவார். இச்சம்பிரதாயம் எமது கட்சியில் மீறப்படுவதற்கு தெரிந்தோ தெரியாமலோ நீரும் உடந்தையாக இருந்துள்ளீர். அப்படி அல்ல நீரே காரணமாக இருந்திருக்கிறீர். 1998ல் உமக்கு ஞாபகம் இருக்கும் என எண்ணுகின்றேன். யாழ் மாநகர சபைத் தேர்தல் பற்றிய அறிவித்தல் வெளியான சந்தர்ப்பம் அது. அத் தேர்தலில் எமது கட்சி போட்டியிடுவதே எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு சாதகமானதெனக் கருதி உம்மிடத்தில் கருத்துக்கேட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்த நீர் தேர்தலில் போட்டியிடக் கூடிய சூழல்; இங்கில்லை என்று அறிக்கையும் அனுப்பினீர். ஆனால் போட்டியிடாவிட்டால் யாழ்ப்பாணம் என்றுமே எமக்கு இனி இல்லை என்றாகிவிடும் எனக் கருதிய சிலர் எப்படியும் எங்களைத் தேர்தலில் போட்டியிடுமாறு தூண்டியதோடு பலர் தமது உயிரையும் மதியாது போட்டியிடவும் துணிந்தனர். இந்நிலையில் உம்மைத் தலைமை வேட்பாளராக போட்டியிடச் சம்மதமா எனக் கேட்டபொழுத நீர் மறுத்துவிட்டீர். இத்தருணத்தில் திருமதி.சரோஜினி யோகேஸ்வரன் விருப்பம் தெரிவிக்க அவரை முதன்மை வேட்பாளராக நியமிப்பதற்காக தம்பி சிவபாலன் தம்பதிகளுடன் முகுந்தனையும் திருமதி யோகேஸ்வரனையும் யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தோம். அவர்களுக்கு நீர் எதுவிதமான உதவிகளோ, ஒத்தாசையோ வழங்காததுடன் கட்சியின் உறுப்பினர்களைக் கூட அறிமுகம் செய்து வைக்கவில்லை. இதனால் திருமதி யோகேஸ்வரன் அவர்கள் எவ்வாறு மனம்நொந்து கொண்டார் என்பதும், அங்கிருந்த விடுதியை விட்டு வெளியே பயங்கரமான சூழ்நிலையிலும் தனது சொந்த வீட்டிற்குச் செல்வதுதான் சரியானதெனத் தீர்மானித்து உம்முடைய ஒத்துழைப்புக் கிடைக்காததன் காரணமே என்பதை பலரும் ஏற்றுக்கொள்வர்.

இவ்வாறான சூழ்நிலையில் அவர்களை நீர் பாதுகாப்பீர் என்று நாம் நம்பியிருந்த நிலைமையில் எவருக்கும் சொல்லாது நீர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்திருந்தீர். இது ஒரு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் செய்யும் கட்சி விசுவாசமாக ஏற்றுக்கொள்ள முடியுமா? இருந்தாலும் பல இடர்களுக்கு மத்தியில் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந் நியமனப் பத்திரம் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்த போது எமது வேட்பாளர்களின் மனங்களும் நிலைமையும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஒரு தடவை சிந்தித்துப் பார்த்தால் தெரியும். அவமானப்பட்டும் வேதனைப்பட்டும் மீண்டும் கொழும்பு திரும்பிய திருமதி யோகேஸ்வரன், சிவபாலன், முகுந்தன் ஆகியோர் நடந்தவற்றைக் கவலையுடன் தெரிவித்தனர். நிதி நிலைமை கட்சியில் எப்படி என்பது பலருக்குத் தெரியாதிருந்தாலும் உமக்குத் தெரியும். ஆனாலும் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டது கட்சிக்கு ஏற்பட்ட அவமானம் எனக் கருதிய நான் இதனை எதிர்த்து கலாநிதி நீலனின் முழு ஒத்துழைப்புடன் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்து, வழக்கில் வெற்றியும் பெற்றோம். அதன் பிரகாரம் எமது நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நானும் திருமதி.யோகேஸ்வரன், தம்பிகள் சிவபாலன், இரவிராஜ், அரவிந்தன், முகுந்தன் ஆகியோருடன் யாழ்ப்பாணம் சென்று குமரன் விடுதியில் தங்கியிருந்து தேர்தல் பிரச்சாரத்தை இறுதி 4 அல்து 5 நாட்கள் நடத்தினோம். இச்சந்தர்ப்பத்தில் இந்தியா சென்று நீர் எமது கட்சிக்கு ஆதரவான நிலைமை தேன்றியுள்ளத்தைத் தெரிந்து கொண்டு, நீரும் யாழ்ப்பாணம் வந்து தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவினீர். தேர்தல் முடிவுகள் வெளியாகி எங்களின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதன் பின்பு இத்தேர்தலில் உம்மைப் போட்டியிட வைக்காதது எனது குறையென நீர் குறைபட்டுக்கொண்டதாக செய்திகள் கசிந்தன. நான் உம்மை தலைமை வேட்பாளராக பெயரிடவா என்று கேட்டதும் அதற்கு நீர் மறுத்ததும் மெய். இதனையாவது நீர் ஏற்றுக்கொள்வீர் என நம்புகிறேன்.

இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையில் பாரம்பரியமும், பலவரலாறுகளைக் கொண்டதும் பல தியாகங்களைச் செய்த தியாகச் செம்மல்களால் கட்டி வளர்த்தெடுத்த எம் கட்சியினை ஆட்டம் காண வைத்தது உமக்கு தர்மமாகப்படுகிறதா? பிரிந்து நின்ற தமிழ்க் கட்சிகள் ஏன் ஒன்றிணைந்தன? ஒன்றிணைந்ததன் வெற்றியும், ஆட்சியாளர்களை திகிலடையச் செய்ததும் வரலாறாக இருந்து இன்று அவைகள் சரித்திரமாகி தீர்வின் வாசலில் நிமிர்ந்து நிற்கும் நிலையில், மீண்டும் பல தமிழ்க் கட்சிகளாக கூறுபோடுவதும், அதற்கான முயற்சியும், முன்னெடுப்பும், முடுக்கிவிடுவதும் மறைந்த தமிழ்த் தலைவர்களுக்கும், மக்களுக்கும் நீர் செய்யும் மாபெரும் மன்னிக்க முடியாத குற்றமென்பதும் தெரியவில்லையா? பெரும் துரோகம் இல்லையா?

தம்பி! தலையிடிக்கு தலையணை மாற்றுவது தீர்வல்ல. ஏன் தலையிடி வந்தது என்று கண்டு அதற்குப் பரிகாரம் காண்பதே சிறப்பு. குழம்பாமலும், குழப்பாமலும் நிதானமாக நின்று நேர்மையாக அரசியல் நடத்துவது தான் முறை. அதனை விடுத்து தானும் குழம்பி இருப்பவரையும் குழும்பி அரசியல் லாபம் பெற முற்படுவது அழகல்ல. தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. இதில் இரண்டாவது விடயத்தில் தான் மிகக் கவனமாக காய்நகர்த்துவதாக நீர் எண்ணுகின்றீர். ஆப்பிழுத் குரங்கின் கதை உமக்குத் தெரியாததல்ல. அவ்வாறான ஓரு நிலைமை உமக்கு வந்துவிடுமே என நான் வருந்துகின்றேன். இப்படியான சந்தர்ப்பத்தில் எவருமே துணைக்கு வரார். கண்ணிருந்தும் பாராது, காதிருந்தும் கேளாது, வாயிருந்தும் பேசாது மகாத்மாவின் மந்திகளாகவே நீர் துணைக்குக் கூப்பிடுவோர் இருப்பர். இது உமக்குத் தேவைதானா? தற்காலிகமாக நீர் சில பதவிகளை அனுபவிக்கலாம். நான் தாழ்ந்து போகலாம். ஆனால் என்றோ ஒருநாள் என்னை உலகம் போற்றும். அது உறுதி. ஆனால் அந்த நேரம் நான் இருக்கமாட்டேன்.

முன்பு ஒரு நாள் உதயன் பத்திரிகையில் பேட்டியொன்றில் உயர் பாதுகாப்பு வலயங்கள் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலில் கூறப்பட்ட உமது கருத்துக்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனையிறவு மீட்சிப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் மும்மரமாக தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் அதற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் பேசியது மட்டுமல்லாமல் ஆனையிறவை மீளவும் ஸ்ரீலங்கா அரசு கைப்பற்றுவது கனவில் கூடப் பலிக்காது எனத் துணிந்து கூறியவன் நான் ஒருவன் மட்டுமே. நீர் உட்பட பலர் அன்று பாராளுமன்றத்திலிருந்த போதும் நான் ஒருவனே பல விடயங்கள் குறித்துப் பேசியிருக்கின்றேன். அப்படியிருக்கும் நிலையில் மீண்டும் ஆனையிறவினை ஸ்ரீலங்கா அரச படைகளிடம் போவதை நான் ஏற்றுக்கொள்வேன் என எண்ணுவது முட்டாள் தனமானதாகும். அந்த முகாம் இருந்த காலத்தில் உம்மைவிட துன்பப்பட்டவனும், பாதிக்கப்பட்டவனும் நான் என்பதும், அன்றைய எனது கிளிநொச்சித் தொகுதி மக்களும் ஏனைய பயணிகளும் என்பதும் உமக்குத் தெரியாமல் போகலாம்.

இது விடயமாக நடந்ததென்ன? இதற்கான காரண கர்த்தா யார், தற்போதுள்ள அரச படைகள் வெளியேறி 1991ஆம் ஆண்டில் எங்கெங்கு நிலைகொண்டிருந்தார்களோ அந்த முகாம்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை திரு.அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் ஜப்பானிய விசேட தூதுவர் கௌரவ யசூசி ஆகாஷி முன்னிலையில் வைத்த வேளையில் திரு.விநாயகமூர்த்தி அவர்களைப் பார்த்து, அப்படியானால் ஆனையிறவைக் கேட்பார்கள் கொடுக்க முடியுமா? என்று கேட்டேன். இது பொல்லுக்கொடுத்து அடிவாங்கும் செயலல்லவா! உங்களின் கருத்துப்படி 1991ஆம் ஆண்டு இருந்த இடங்களுக்குப் படைகள் போகவேண்டும் எனக் கோருவது மீண்டும் அரச படைகளை ஆனையிறவு முகாமிற்குப் போகவைக்கும் முயற்சியாகவல்லவா இருக்கும். பல ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பலிகொண்டு பறித்தெடுத்த முகாமை மீளவும் அரச படைகளிடம் தாரை வார்ப்பது சரியானதா? இப்படித்தான் நான் திரு.விநாயகமூர்த்தியிடம் கேட்டிருக்கவேண்டும். ஆனால் அதனை புரிந்துகொண்ட விநாயகமூர்த்தி தனது புத்திசாதுரியமற்ற கோரிக்கையின் தாக்கத்தினை சமாளிப்பதற்காக என்மீது வீணான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார். தற்போது பல தடவை தான் அப்படியாருக்கும் கூறவில்லை என நண்பர் வினாயகமூர்த்தி கூறிவிட்டார். அவரோ அல்லது நீரோ அல்லது இருவரும் சேர்ந்தோ பகிரங்கமாக அறிக்கை விட்டு எனக்கு ஏற்பட்ட அபகீர்த்தியை போக்குவீர்களா? இந்தப் பொய்யான கூற்றே என்னை 2004 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திட்டமிட்டு தோற்கடிக்க உதவியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இப்படிப் பல நூறுபக்கங்களில் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். எம்மவர் சிலரின் துரோகச் செயலால் மனமுடைந்திருப்பவன் நானே. அமிர் காலமானதன் பின்பு நான் கட்சிக்காற்றியதொண்டு முன்னையதிலும் பார்க்கப் பலமடங்காகும். இதை உணராது செயற்படுவர்களில் நீர் முன்னணியில் நிற்பது வேதனைக்குரியதாகும். அமிர் அவர்களின் இறப்பால் பெரிதும் இலாபம் அடைந்தவர் நீர் மட்டுமே. அவர் பெயரை உச்சரிக்க தயங்குபவரும் நீரே.

நீர் இளைஞனாக இருந்தகாலம் தொட்டே அரசியலில் உம்மை வளர்க்க முயற்சித்திருந்தேனே தவிர, உமக்கு என்றும் கடுகளவேனும் துரோகம் செய்ய நான் நினைத்தவனல்ல. ஆனால் அன்று தொட்டு இன்றுவரை என்னை நீர் விரோதியாகவே கணித்து செயற்படுகின்றீர். எது எப்படியிருப்பினும் தம் உதிரத்தை சிந்தி பல தியாகங்களைச் செய்து உருவாக்கி கட்டிக்காத்து எம்மிடம் கையளிக்கப்பட்ட எமது தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியை காக்க வேண்டிய முக்கிய கடமை எனக்குண்டு. இதே கடமைப்பாடு உமக்கும் உண்டென உணர்ந்து என்னுடன் ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பு உமக்கும் உண்டு. எனது இறுதி மூச்சிருக்கும் வரை இப்பொறுப்பை உணர்ந்து செயற்பட்டே வருவேன். எமது கட்சிக்காக எனது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேன் என உறுதியளித்து இக்கடிதத்தை நிறைவு செய்கின்றேன். நீதி நியாயம் உமக்கு விளங்குவதாக தெரியவில்லை. இக்கருத்துக்களை வலியுறுத்தி பல கடிதங்கள் முன்பும் எழுதியுள்ளேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு சம்பந்தமாக நீர் பேசியும் எழுதியும் வரும் கருத்துக்களுக்கு இதை பதிலாக ஏற்றுக்கொள்ளவும். இன்றேனும் உமது தவறை உணர்ந்து நீர் பயப்படுவதற்கு யாரும் இல்லாத பட்சத்தில், தந்தை செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்டு இறுதிவரை அவரே தலைமை தாங்கிய தமிழர் விடுதலைக்கூட்டணியை காப்பாற்ற முன்வருவீரேயானால், கட்சியின் மிகப்பெரிய பொறுப்புகளில் ஒன்றை தரத்தயாராகவுள்ளேன். இவ்வழைப்பு திரு.இரா.சம்பந்தன் உட்பட கட்சியின் சகல முன்னைய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் சேர்த்து விடப்படும் பணிவான வேண்டுகோளாகும். தந்தை செல்வா நாமம் நீடூழி வாழ்க!

வணக்கம் அன்புடன், என்றும் கட்சிப்பணியிலுள்ள

வீ.ஆனந்தசங்கரி, செயலாளர் நாயகம் தமிழர் விடுதலைக் கூட்டணி

Wednesday, June 15, 2011

அகவை 78ல் ஆனந்தசங்கரி (2011-06-15)


எனது மாணவப்பருவம் தொட்டு எனது மதிப்பிற்குரிய தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களை நன்கு அறிவேன். நான் சிறுவனாக இருந்த காலத்தில் அவர் கிளிநொச்சியில் ஆற்றிய சேவைகள் பற்றி பலர் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்.

இயற்கையிலேயே அநீதிக்கு எதிராகப் போராடும் சுபாவம் கொண்டவர் ஆனந்தசங்கரி அவர்கள். அவர் கிளிநொச்சியில் கால்பதித்த காலம் கிளிநொச்சியின் விவசாய நிலப்பரப்புக்களில் அனேகம் பெரும் கமக்காரர்களுக்கு சொந்தமானதாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில் புதிதாக குடியேற்றவாசிகளுக்கு காணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. அப்போது இரணைமடு குளத்து நீரை பெரும் கமக்காரர்கள் மட்டுமே பெருமளவில் பயன்படுத்திவந்தனர். இதனால் சிறு விவசாயிகளும் குடியேற்ற வாசிகளும் தண்ணீருக்கு பெரும் கஸ்டப்பட்டனர். இதையுணர்ந்த ஆனந்தசங்கரியவர்கள், அனைத்துத்தரப்பினருடனும் கலந்துரையாடி சிறு விவசாயிகளுடனும், குடியேற்ற வாசிகளுடனும் இணைந்து போராடி அதன் விளைவாக அனைத்துத்தரப்பினருக்கும் கூடிய தண்ணீரைப் பெறும் வாய்ப்பு உருவானது. இது இவரது அயரா முயற்சியினால் உருவானது எனின் அது மிகையாகாது.

கிராமசபை தலைவராக, பட்டினசபை தலைவராக பின்னர் 1970ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக்கிய சில பெருமை அவரை ஆக்கிய பெருமை கிளிநொச்சி மண்ணையும்> மண்சார்ந்த மக்களையுமே சாரும். அதனால் அவர் எப்போதும் தான் வளர்ந்த, தன்னால் வளர்க்கப்பட்ட கிளிநொச்சி மண்ணையும், மண்சார்ந்த மக்களையும் எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வார்.

1972ம் ஆண்டு தந்தை செல்வா, சட்ட மேதை அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மற்றும் மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஆகியோர் அரும்பாடுபட்டு உருவாக்கிய “தமிழர் விடுதலைக் கூட்டணி”யில் சட்ட மேதை ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ்க் காங்கிரஸில் இருந்து இணைந்து கொண்ட ஒரேயோரு பாராளுமன்ற உறுப்பினர் திரு.வீ.ஆனந்தசங்கரியவர்களே. அன்று தொட்டு இன்று வரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கைகளை விட்டுக் கொடுக்காது கட்சியை காப்பாற்றி வருகின்றார். முப்பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட அந்த ஒற்றுமைக்கு கிடைத்த பரிசுதான் 1977ம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கையின் வரலாற்றிலே முதலும் கடைசியுமாக இரண்டாவது பெரிய கட்சியாக தேர்தலில் வெற்றியீட்டி பிரதான எதிர்க்கட்சியாகி அதன் தலைவராக அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார். இது தமிழ் தலைவர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த பலமாகும். இந்த ஒற்றுமையை அதன் பின்னர் வந்த தலைவர்கள் கட்டிக்காக்க தவறியமையே, இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலைக்கு காரணமாகும்.

1970 தொடக்கம் 1983 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலம்தான் கிளிநொச்சியின் பொற்காலம் எனலாம். ஆனந்தசங்கரி அவர்கள் கிளிநொச்சி தொகுதியை கல்வியில் முன்னேற்றம் அடைந்த ஒரு பிரதேசமாக ஆக்குவதற்காக அரும்பாடுபட்டார். அதன் காரணமாக எமது மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமானால் அதனைத் தனிமாவட்டமாக்கினால் தான் அது சாத்தியமாகும் என்பதனைப் புரிந்து கொண்டு> பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கிளிநொச்சியை தனி மாவட்டமாக்கினார். இன்று வைத்தியர்கள்> பொறியியலாளர்கள்> பட்டதாரிகள் மற்றும் சட்டத்துறை வல்லுனர்கள் என பலர் உருவாகியுள்ளனர். இதற்கு காரணமானவர் தலைவர் ஆனந்தசங்கரி அவர்களே. அவர்கள் அனைவரும் ஆனந்தசங்கரி அவர்களை நன்றியுடன் நினைவு கூற வேண்டும். 1983ம் ஆண்டு அன்றைய அரசு பாராளுமனறத் தேர்தலை நடத்தாது மேலும் ஆறு வருடங்களுக்கு பாராளுமன்றத்தை நீடித்த போது இது ஐனநாயகத்திற்கு விரோதமான போக்கு என்று கூறி தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஐpனமா செய்தனர். இல்லாவிட்டால் 1989 வரை இவர்களே பாராளுமன்ற உறுப்பினாகளாக இருந்திருப்பார்கள். இதன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகப் பெரிய ஐனநாயகக் கட்சி என்பதனை உலகிற்கு பறைசாற்றியது. பாராளுமன்ற பதவியை துச்சமென தூக்கியெறிந்த தமிழர் விடுதலைக் சுட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஆனந்தசங்கரியும் ஒருவர். அன்றிலிருந்து இன்று வரை பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் ஆசைப்படாமல் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடாத்தி செல்கின்றார்.


தமிழ் மக்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் அவல நிலை வந்து விடக்கூடாது என்பதற்காக யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினருக்கும் எவ்வளவோ ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். எவருடைய காதிலும் அன்று இவர் கூறிய அறிவுரைகள் ஏறவில்லை. அதன் விளைவு தமிழ்மக்கள் இழக்கக்கூடாதவற்றையெல்லாம் இழந்து விட்டு இன்று எம்மை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கதிகலங்கி நிற்கின்றார்கள். யார் தவறு செய்தாலும் அதை நேருக்கு நேர் நின்று சுட்டிக்காட்டுவதில் அவருக்கு நிகர் அவரே என்று சொல்லலாம். அதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். ஐனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்திருந்த சர்வகட்சி தலைவர்கள் மகாநாட்டிற்கு நானும் ஒரு தடைவ சென்றிருந்தேன். அப்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் மும்மூரமாக நடந்து கொண்டிருந்த நேரம் இன்னும் 85,000 பேர் தான் அங்கு சிக்குண்டிருக்கின்றார்கள். 55,000 பேர் வெளியே வந்துவிட்டனர் என ஐனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டிய போது இல்லை மூன்று இலட்சம் பேர் இன்னும் அங்கே இருக்கின்றார்கள் என ஆனந்தசங்கரி அவர்கள் புள்ளிவிபரத்துடன் எடுத்துக்கூறினார். யாரும் அதனை நம்பவில்லை. அமைச்சாகளும் ஐனாதிபதி அவர்களின் கூற்றையே நியாயப்படுத்தினார்கள். ஆனந்தசங்கரி அவர்கள் சொல்வது சரியான கணிப்புத்தான் என எவரும் சொல்ல முன்வரவில்லை. தனியாகவே இதனை அவர் வாதிட்டுக்கொண்டிருந்தார். ஏனைய கட்சித்தலைவர்களும் இதனை பார்த்துக்கொண்டிருந்தனர்.

பின்னர் நடந்த ஒரு கூட்டத்தில் கௌரவ அமைச்சர் பசில் ராஐபக்ச அவர்கள், ஆனந்தசங்கரி மட்டும் தான் மூன்று இலட்சம் மக்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினார். நாங்கள் வெறும் 1-1/2 இலட்சம் மக்களுக்கான தேவைகளையே பூர்த்தி செய்து வைத்திருந்தோம் என அரசாங்கத்தின் தவறை ஒத்துக்கொண்டார். அமைச்சர் அவ்வாறு கூறும் போது ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கிளிநொச்சி நகரத்தை இராணுவம் கைப்பற்றிய பின்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் தயவு செய்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என கேட்டிருந்தார். அவரும் அதற்கு செவிசாயக்கவில்லை. அதேபோல் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இனிமேல் யுத்தம் என்ற பெயரில் எந்த ஒரு அப்பாவி உயிரும் கொல்லப்படக்கூடாது என்று கேட்டிருந்தார். ஐனாதிபதி அவர்களும் செவிவாய்க்கவில்லை. அவரும் இன்று ஐ.நா சபையில் பேர்க்குற்றவாளியாக நிற்கின்றார். அவர் சொல்ல வேண்டியவற்றை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியவர்களுக்குச் சொன்னார். எவரது செவிக்கும் ஏறவில்லை.

பல்வேறு நாடுகளில் இலகுவாக குடியேறக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தம் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு பதவிகள் உள்நாட்டிலேயே தேடிவந்த போது எதையும் ஏற்காது கிறிநொச்சி மண்ணிலேயே தனது உயிர் பிரியவேண்டும்மென்ற பிடிவாதத்தோடு எதுவித பலனையும் எதிர்பாராது தன் தொண்டை தொடர்ந்து செய்துவரும், இப்படி துணிச்சலாக செயற்பட்டு, தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரு தலைவரை பாராளுமன்றம் அனுப்பாமல் போனது எமது மக்களின் தூர்பாக்கியமே. எது எப்படியோ இன்றும் அவர் தனது கடமையை சரிவர செயது கொண்டிருக்கின்றார். அந்தத் தலைவனின் அருகில் இருந்து அரசியல் பணி செய்வதை நான் பெரும் பேறாக எண்ணுகின்றேன். அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன். இந்தப் பிறந்த தினம் பூரணை நாளில் வருவது இன்னும் அவரின் தூய்மைக்கு ஒரு சிறப்பான அம்சமாகும்.

இரா. சங்கையா
யாழ் மாநகர சபை உறுப்பினர்.

Tuesday, April 12, 2011

Leave the people alone during the New Year celebration!

Major General Mahinda Hathurusingh
Cmmander
Security Forces Headquarters
Jaffna

Dear General,

I hope I need no introduction to you. I had lived as a citizen of this country throughout the period since independence. I am now 78 years old and have completed more than half a century in politics and had served for more than 17 years as a Parliamentarian. For your information I do not mix up politics with administration. You may perhaps be aware how appreciative I had been of the humanitarian services rendered by the forces for the IDPs who were in distress. I know how soldiers and police, of the opposite sex nursed the disabled, the sick, the elders and the pregnant ladies. I am also aware how these ladies cared for the kids and played with them making them to forget the hard times they had before coming to the camps. The expatriate Tamils too are full of praise for them. The forces have done their job and it is now time for them to rest.

I need not tell you how the people of the North and the East have suffered for well over 30 years under a special type of military rule. They have had enough on the worst side, such as humiliation, embarrassment, threat, intimidation etc. Now they don’t want to see these again. They have become so allergic that, some women who had very bitter experience run away hysterically on the sight of a gun.

What had been done is now being undone. The people here in the North and the East do not want to see the sight of a gun or army personnel in uniform. They have undergone the worst in their life. They lost all their belongings and even two years after, is still living in primitive type of houses compared with the comfortable houses in which they lived for several years. Men had lost their wives and wive their husbands. Some lost their children and some others have their children in detention, many of whom had hardly committed any offence. Many had lost their breadwinners. Children idle at home without going to school or for work.

In a situation like this celebrating the New Year is far beyond their thinking. They can’t think of enjoying life. May be small children get attracted in thamashas. But the family as a whole is not interested in rejoicing or merrymaking. They want to be left alone. There is yet time for them to come back to normal life. Please instruct your officers to leave the people alone without compulsorily recruiting them to take part in various sports activities. Please give the people especially the youths some more time to forget all what had happened and also till their kith and kin return home or their fate is known. Kindly instruct the Kachchery and sports clubs etc to leave the people alone during the New Year celebration. Let them first get rid of their bitter memories before enjoying life. I strongly urge the people of the Jaffna Peninsula to feel for the people of vanni, most of whom have been reduced to the position of paupers.

Thanking You,

Yours Sincerely

V.Andasangaree
President - Tamil United Liberation Front
11.04.2011.

புதுவருடக் கொண்டாட்டங்களில் பங்குபற்றுமாறு மக்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!

மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க,
கட்டளை அதிகாரி,
பலாலி.

அன்புள்ள ஜெனரல்,

உங்களுக்கு என்னை நான் அறிமுகப்படுத்த தேவையில்லை என நினைக்கின்றேன். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த நாட்டு பிரஜையாக நான் வாழ்ந்திருக்கின்றேன். எனக்கு தற்போது 78 வயதாகி அரைநு}ற்றாண்டுக்கு மேல் அரசியலில் ஈடுபாடுகொண்டு 17 ஆண்டுகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன். நான் அரசியலையும் நிர்வாகத்தையும் கலந்து பேசுபவன் அல்ல என்பதை தாங்கள் அறிய வேண்டும். இடம்பெயர்ந்து துன்பத்தில் வாழ்ந்த மக்களுக்கு எத்தகைய மனிதாபிமான சேவையை இராணுவத்தினர் ஆற்றியுள்ளனர் என்பதை நான் மிகவும் பாராட்டியிருக்கின்றேன். இராணுவத்தையும் பொலிஸையும் சேர்ந்த பெண் அதிகாரிகள் அங்கவீனர்கள், கடும் நோயாளிகள், முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்களை எவ்வாறு பராமரித்தனர் என்பதை நான் அறிவேன். அண்மைகாலத்தில் தங்களுக்கு நடந்ததை பிள்ளைகள் மறக்கக்கூடிய வகையில் எவ்வாறு பெண் அதிகாரிகள் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என்பதையும் நான் அறிவேன். இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் கூட இவர்களை வெகுவாக பாராட்டியுள்ளனர். படையினர் தமது கடமையை திறமையாக செய்துள்ளனர். தற்போது அவர்கள் ஓய்வெடுக்க வேண்டிய நேரம்.

வடகிழக்கு மக்கள் ஒரு ரக இராணுவத்தை ஒத்த ஆட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேல் கஷ்டப்பட்டார்கள் என்பதை நான் தங்களுக்கு கூறத்தேவையில்லை. அவர்கள் போதியளவு அவமானம், சங்கடம், அச்சுறுத்தல். மிரட்டல் ஆகியவற்றுக்கு ஆளாகியிருந்;தனர். இந்த நிலைமை மீண்டும் திரும்புவதை மக்கள் விரும்பவில்லை. இச் சம்பவங்கள் அவர்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளமையால் குறிப்பாக பெண்கள் ஒரு துப்பாக்கியை கண்டதும் பைத்தியம் பிடித்தவர்கள் போல் கடந்த காலத்தை நினைத்து மிரண்டு ஓடுகின்றனர்.

நடந்து முடிந்த நல்ல சம்பவங்கள் தற்போது இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன. வடகிழக்கில் வாழ்கின்ற மக்கள் ஒரு துப்பாக்கியையோ, சீருடை அணிந்த இராணுவத்தினரையோ காண விரும்புகின்றார்கள் இல்லை. அவ்வளவுது}ரம் மிக மோசமாக அவர்கள் கடந்த காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். அவர்கள் தமது உடமைகள் அத்தனையையும் இழந்துள்ளனர். யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகிய பின்னரும் முன்பு வசதியாக வாழ்ந்த வீடுகள் போலன்றி ஆதிகால மனிதர்களின் வீடுகளையொத்த வீடுகளில் வாழ்கின்றனர். ஆண்கள் தனது மனைவியரையும், மனைவியர் தமது கனவரையும் இழந்துள்ளனர். சிலர் தமது பிள்ளைகளை இழந்தும், வேறு சிலர் தம் பிள்ளைகளை தடுப்பு முகாமிலும் எதுவித குற்றமும் புரியாமலே தடுத்து வைக்கப்பட்டுள்ளதை பாhக்கின்றனர். பலர் குடும்பத் தலைவரை இழந்துள்ளனர். பிள்ளைகள் பலர் பாடசாலைக்கோ, வேறு வேலைக்கோ போக முடிவதில்லை.

இவ்வாறான சு10ழ்நிலையில் இம் மக்கள் புதுவருடத்தை கொண்டாடுவது அவர்களுடைய கற்பனைக்கு எட்டாத விடயமாகும். அவர்கள் தமது வாழ்வில் சந்தோஷம் பற்றி நினைக்க முடியாமல் உள்ளனர். சிறு பிள்ளைகள் சில தமாஷாக்களால் கவரப்படலாம். ஆனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாகவும், குது}கலமாகவும் இருக்கக்கூடிய நிலைமை இல்லை. அவர்கள் தனிமையில் விடப்படுவதையே விரும்புகின்றனர். அவர்கள் இயல:பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு இன்னமும் காலம் உண்டு. பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளில் பலவந்தமாக இவர்களை சேர்ப்பதை தவிர்க்குமாறு தயவ செய்து தங்கள் அதிகாரிகளுக்கு கட்டளையிடுங்கள். மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு கடந்தகாலத்தில் நடந்ததை மறக்க அவர்களின் உற்றார் உறவினர்கள் திரும்பி வரும்வரை அன்றேல் அவர்களுக்கு என்னகதி ஏற்பட்டது என்பதை தெரியும் வரை கால அவகாசம் வழங்குங்கள். தயவு செய்து கச்சேரிக்கும், விளையாட்டு கழகங்களுக்கும் புதுவருட கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு மக்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாமென அறிவுறுத்தவும்.

வாழ்க்கையை கொண்டாடுவதற்கு முன்பு அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான நினைவுகளை மறக்க அவகாசம் கொடுங்கள். பெருமளவில் ஓட்டாண்டியாக்கப்பட்ட வன்னி மக்களுக்காக அனுதாபப்படுங்கள் என யாழ் குடாநாட்டு மக்களை விநயமாக கேட்டுக்கொள்கிறேன்.

வீ. ஆனந்தசங்கரி,
தலைவர் - தமிழர் விடுலைக் கூட்டணி.
11.04.2011.

Monday, January 3, 2011

ஆனந்த சங்கரி ஐயாவிற்கு அன்பான ஒரு அறிவு மடல்.....க. சிவராசா.


முக்கியமான விடயங்களுக்கு முக்கியமான தலைவர்களுக்கு மடல் எழுதும் எனக்கே ஒரு மடலா? யார் அதை எழுதுவது? அப்படி எனக்குத் தெரியாத எண்ணத்தை எழுதப் போகிறார்கள்? என்று ஐயா நினைப்பது எமக்குப் புரிகிறது. உண்மையில் உங்களுக்கு மடல் எழுத இனியொருவர் பிறந்துதான் வரவேண்டும். ஆனாலும் இந்தச் சிறியோனின் இந்தச் சிறிய மடலை அரசியலில் ஊறித்திளைத்த மூத்தவர் நீங்கள் வாசிக்கத்தான் வேண்டும்.

தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகளால் இந்த நிலை வரும் என்பதை நீங்கள் பலதடவைகள் தெரிவித்த போது உங்களைப் பார்த்து ஏளனச் சிரிப்புச் சிரித்துவிட்டு வன்னி சென்று வாங்கிக் கட்டிக் கொண்டு, விழுந்தவன் மீசையில் மண் படாதது போன்று கொழும்பு வந்து நடமாடிய நமது தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் நீங்கள் ஒரு தீர்க்கதரிசியானவர்.

புலிகளிடம் நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் போன்று எவரும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அது உண்மை. அதனால்தான் தமிழ் மக்களுக்கான உங்களது எச்சரிக்கையை நீங்கள் வலுவாக துணிச்சலுடன் விட்டிருந்தீர்கள். அன்று புலிகளுக்கு வால் பிடித்துவந்த அனைவரும் இன்று நீங்கள் அன்று சொன்னவற்றை நிச்சயம் இரை மீட்டிப் பார்ப்பர்.

புலிகளுக்கும், அதன் மறைந்த தலைவருக்கும் அன்று நீங்கள் துணிந்து எழுதிய மடல்கள் பலரை வியப்பில் இன்று ஆழ்த்துகின்றது. தமிழ் மக்களை பகடைக் காய்களாக எண்ணி புலிகள் இஷ்டம்போன போக்கில் நடந்து கொண்ட விதம் இன்று தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்கிவிட்டது. அரசாங்கத்தின் ஆதரவுக் கரம் மட்டுமே அம் மக்களுக்கு ஒரு தெம்பைத் தருகின்றது.

நீங்கள் குறிப்பிட்டது போன்று புலிகள் உண்மையான இதய சுத்தியுடன் ஏதோ ஒரு அரசாங்கத்துடனாவது பேசியிருந்தால் இன்று அவர்களும் அழிந்திருக்கமாட்டார்கள். அவர்களால் தமிழ் மக்களும் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள். உங்களது தீர்க்கதரிசனமான யதார்த்தத்தை எவரும் புரிந்து கொள்ளவில்லை.

வயதாகிவிட்டது, யாருக்கோ வக்காளத்து வாங்குகிறார், தமிழினத் துரோகி என்றுகூட வாய் கூசாமல் விமர்சித்தவர்கள் இன்று வாயடைத்துப் போய் கூனிக் குறுகி நிற்கிறார்கள். அதுதான் சொல்வது, சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்று. அது எவ்வளவு தூரம் உண்மையாகிவிட்டது. புலிகளுக்கு உரமூட்டி வளர்த்து இறுதியில் அவர்களுடன் சேர்த்து அப்பாவி மக்களையும் இன்னலுக்குள்ளாக்கியவர்கள் இன்றும் திருந்துவதாக இல்லை.

ஐயா, உங்களது அரசியல் அனுபவம் முதுமையானால் ஒன்றும் குறைந்துவிடாது. இன்றும் அரசியலில் நீங்கள் துடிப்பான இளைஞனே. இன்றுள்ள பல அரசியல்வாதிகள் உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன. அரைகுறை அரசியல் அறிவை வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் தமிழில் கூட உரையாற்றத் தடுமாறும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு நீங்கள் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து ஞானத்தை ஊட்ட வேண்டும். அரசாங்கத்தின் குறைகளை மட்டும் கூறுவதையே அரசியல் என்று பல அரசியல்வாதிகள் இன்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளுடன் இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த முனைந்த போது, பல நல்ல விடயங்களை நீங்கள் முன்வைத்தீர்கள். எப்படியாவது இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் கண்டு தமிழ்பேசும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்த முனைந்தீர்கள். ஆனால் புலிகள் கேட்டால்தானே. மாவிலாற்றில் சண்டித்தனம், மணலாற்றில் ஆயுதம் இறக்குதல் என்று அரசாங்கத்தை வெறுப்பூட்டியது. புலிகளை அழிப்பது என்பது அரசுக்கு தவிர்க்க முடியாது போனது.

தாங்கள் இன்று புலிகள் அழிக்கப்பட்ட நிலையிலும் அரசாங்கத்தின் நல்ல விடயங்களை பாராட்டுவதுடன், குறைகள் காணப்பட்டால் தயக்கமின்றிச் சுட்டிக் காட்டுவதும் எவரையும் கவரும் ஒன்றாகும். தாங்கள் ஒரு அரசியலில் முதிர்ந்த ஒரு ஞானி என்பதால், தமிழ் மக்களது தீர்வு விடயத்தில் ஜனாதிபதி கூட உங்களது கருத்துக்களை உள்வாங்கிச் செயற்படுவதில் பின்நிற்கமாட்டார். பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி உங்களது கருத்துக்களுக்கு இடமளித்துச் செயற்பட்டுள்ளார்.

இத்தகைய அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல்வாதியான நீங்கள் இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்தே வருகின்aர்கள் என்பது தங்களது அறிக்கைகள் மூலமாகத் தெளிவாகிறது. ஆனால் அரசாங்கத்தின் மீது வெறுமனே குற்றச்சாட்டுக்களை மட்டுமே முன்வைக்கும் தமிழ்க் கட்சிகளுக்கு மத்தியில் நீங்கள் முற்றிலும் வித்தியாசமானவர். நல்லதை நல்லது என்று சொல்லும் பக்குவம் எல்லோருக்கும் வராது. ஆனால் அது உங்களுக்கு நிறையவே உள்ளது.

உங்களது முதிர்ந்த வார்த்தையைக் கேட்காது தமிழ் மக்களை இன்று நட்டாற்றில் கைவிட்டுச் சென்றுள்ள புலிகள் இன்னமும் மக்களை நிம்மதியாக வாழ விடுவதாக இல்லை. இன்று அக்கரைகளில் நின்று நடுக்கடலுக்கு வா என்று அழைப்பது போன்று புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து இங்குள்ள மக்களை குழப்பி வருகின்றனர்.

இறுதி யுத்தத்தில் மக்கள் கஷ்டப்பட்டாலும், இன்று அவர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் சுகமாக வாழ்ந்து வருகின்றார்கள். குறைகள் சில இருந்தாலும், அம்மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கம் அந்தளவிற்கு அவர்களை நன்றாகக் கவனித்து வருகின்றது. சுதந்திரமாக, நிம்மதியாக வாழ்வதையே இந்தப் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புகின்றனர். அவர்களில் தொண்ணூற்று ஒன்பது சதவீதமானோர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை, உதவிகளை வரவேற்றுள்ளனர்.

இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. அதனை அரசு வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது. வெளியாரது தலையீடுகள் மற்றும் வற்புறுத்தல்கள் இல்லாது சம்பந்தப்பட்ட மக்களது பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு இறுதித் தீர்வினைப் பெறுவதில் அரசாங்கம் முனைப்பாகவும், தீவிரமாகவும் உள்ளது.

எனவே காலத்தைக் கடத்துவதில் அர்த்த மில்லை. முன்னர் தீர்வு விடயத்தில் காலங் கடத்தி இழுத்தடிக்கிறது என அரசாங்கத்தைக் குறை கூறுவது பலரது அரசியலாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு. நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா என்பது போல அர சாங்கம் தயாராக உள்ளது. தமிழ் கட்சிகள்தான் ஒரு நிலைப்பாட்டுக்கு வரமுடியாது இழுத் தடிக்கிறது போலத் தோன்றுகிறது.

இதில் தங்களது பங்களிப்பு என்னவென்றால், தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்தி அவர்களுக்கிடையே ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, தங்களது முதுமையான அனுபவம் மூலமாக அவர்களை ஒற்றுமைப்பட வைப்பதே. இதில் நான் பெரியவன், எனக்குப் பிறகுதான் நீ, நீ ஆட்களைச் சுட்ட கட்சி என்று வாதிடுவதால் பலனில்லை. அரசாங்கத்தின் குறிப்பாக ஜனாதிபதியின் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ்க் கட்சிகள் ஒருமித்த கருத்தை முன்வைக்க வேண்டும். அதற்கு நீங்கள் வழிவகை செய்ய வேண்டும்.

லண்டனில் ஜனாதிபதிக்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திலுள்ள சிலர் அபகீர்த்தியை ஏற்படுத்த முனைந்த போதும், அவர் நாடு திரும்பிய பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தமிழ் மக்களது தீர்வு தொடர்பாக லண்டன் மாநாட்டில் தெரிவிக்க இருந்தேன். அவர்களுக்கு அதில் நாட்டமில்லை போலும், என்னைப் பேசவிடாது தடுத்துவிட்டனர் என மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

எனவே இனியும் அவ்வாறானதோர் தரக்குறைவான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது, மக்களது விடிவுக்காக ஒன்றுபட்டு, இந்த அரசாங்கத்தின் மூலமாக ஒரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள எல்லோரையும் ஒன்றிணையுங்கள். நீங்கள் சொன்னால் கேட்கும் நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். எனவே அந்தத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் இவர்களும் கேட்கத்தானே வேண்டும். அதற்கான அனுபவமும், ஆற்றலும், அறிவும், சக்தியும், முதிர்வும் தங்களிடம் மட்டுமே உள்ளதால் இந்த மடலைத் தங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

நன்றி: தினகரன்

Saturday, July 10, 2010

கிளிநெச்சி மந்திரிசபை கூட்டமும் இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சனைகளும் - வீ. ஆனந்தசங்கரி

2010-07-07

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு,

அன்புடையீர்

கிளிநெச்சி மந்திரிசபை கூட்டமும்
இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சனைகளும்



கிளிநெச்சியில் மந்திரிசபை கூட்டம் கூட்டுவதென்ற உங்கள் தீர்மானத்தை நான் வரவேற்கின்றேன். ஆனால் அதை அவசரமாக செய்கின்றீர்கள் என தோன்றுகின்றது. என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தால் கொஞ்சம் தாமதிக்குமாறு கூறியிருப்பேன்.

கிளிநெச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும். அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகளும் சொத்தழிவுகளும் மிகப்பெரியதாகும். இம் மாவட்டங்களில் மக்கள் தமக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னம் மீளவில்லை. சிலர் இன்றும் தாம் இழந்த உறவுகளைத் தேடி அலைகின்றனர். இச் சூழ் நிலையில் அமைச்சர்கள் அடிக்கடி திறப்பு விழாக்கள் செய்வதும் கேளிக்கை விழாக்களில் கலந்து கொள்வதும் மக்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது. மேலும் முன்னைய நிர்வாகத்தின் தாளத்துக்கு ஆடியவர்கள் சிலரும் அரசு ஒதுக்கீடு செய்த பணத்தில் வேலை எதுவும் நடைபெறமலே முழுப்பணத்தையும் முன்னாள் நிர்வாகத்துக்கு கொடுத்தவர்களும் தான் இன்று அரசுக்கு ஆலோசனை வழங்குகின்றார்கள். இடம் பெயர்ந்தோர் மீளக்குடியேறி ஒரு வருடத்தின் பிpன்னரும் கூட மக்கள் சீரான முறையில் மீளக்குடியேறவில்லை. இப்போது பெரிய மரங்களின் நிழலிலும், ஆதிகால குடிசைகள் போன்றவற்றிலும் தம் காலத்தை கழிக்கின்றனர். அவர்கள் அனேகரின் வீடுகளுக்கு கூரை, கதவு, யன்னல் முதலியன கிடையாது. அரசு கொடுக்கும் சொற்ப தகடுகள், சீமெந்து, இதனுடன் தர்பலின் கூடாரத் துண்டுகளை வைத்து அவர்கள் என்னத்தைச் செய்யமுடியும்?

நீங்கள் முயற்சி எடுத்து ஒரு தடவை கிளிநொச்சி மாவட்டமாகிய கிளிநொச்சி தொகுதியை சுற்றி வருவதோடு அமைச்சர்களை கிராமப்புறங்களுக்குச் சென்று அங்குள்ள கள நிலைமைகள், மக்களின் வாழ்க்கை முறை அவர்கள் எதிர் நோக்கும் தேவைகள் பற்றி ஆய்வு செய்து பாரபட்சமற்ற ஒரு அறிக்கை தருமாறு பணிப்பீர்களேயானால் அதை மிகவும் பாராட்டுவேன். கிளிநொச்சித் தொகுதியை மாவட்டமாக்கி அத் தொகுதியை 13 ஆண்டுகளுக்கு மேல் பிரதிநிதித்துவப்படுத்திய என்னுடன், நீங்கள் உட்பட யாரும் தொகுதியின் நலம், அபிவிருத்தி, மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள் உட்பட எதையும் கலந்துரையாடவில்லை. பல்வேறு விடயங்களில் எனது ஆலோசனை பெறப்பட்டிருந்தால் ஏழை மக்களின் பல கோடி பணத்தைக்க காப்பாற்றியிருக்க முடியும்.

நான் கிளிநொச்சியில் மக்களுக்கு அரை நுற்றாண்டுக்கு மேல் சேவை செய்துள்ளேன். தொடர்ந்து இறக்கும் வரை என் பணியை தொடர விரும்புகின்றேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட 1970ம் ஆண்டு தொடக்கம் வாடகைக்கு குடியிருந்த வீடு திரு. தம்பிப்பிள்ளை என்பவருக்கு சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் அவர் ஆற்றிய சேவையின் காரணமாக நன்கொடையாக வழங்கப்பட்டது. அக்காணியை அவர் தனது மகளுக்கு நன்கொடையாக வழங்கி இருந்தார். அவர் இருக்கும் போதே இக்காணியின் மூன்று சிறு துண்டுகள் வேறு மூவருக்கு விற்க்கப்பட்டுள்ளது. மீதிக்காணி கூட சொந்தக்காரர் தனது மகளுக்குச் சீதனமாக வழங்கியுள்ளதாக அறிகின்றேன். வட இலங்கைப் போக்குவரத்துச்சபை பலாத்காரமாகவே இக்காணியை பிடீத்து வைத்துள்ளது. வீட்டின் முற்பகுதியை என்னிடம் கையளிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் கட்டளை பிறப்பித்திருந்தாலும் வட இலங்கை போக்குவரத்துச்சபை இன்று வரை அதைச் செயல்படுத்தவில்லை. வட இலங்கை போக்குவரத்துச் சபையின் இப்போக்கை எவரும் பாராட்டமாட்டார்கள். தயவு செய்து இவ்வீட்டை நான் இருக்கக் கூடியதாக தலையிட்டு பெற்றுத்தரவும். தாங்கள் கிளிநெச்சியில் அமைச்சர் கூட்டம் நடத்த வருகின்ற போது இதற்கு ஒரு தீர்வைப் பெற்று தருவீர்கள் என நம்புகின்றேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

CABINET MEETING AT KILINOCHCHI AND THE PROBLEMS THE IDPs FACE THERE - V. Anandasangaree

2010-07-07

His Excellency Mahinda Rajapaksa
President of Sri Lanka
Temple Trees
Colombo

Your Excellency,

CABINET MEETING AT KILINOCHCHI
AND THE PROBLEMS THE IDPs FACE THERE


While welcoming your decision to hold the next Cabinet meeting in Kilinochchi, I wish to point out that you are doing it in haste. If I had been consulted I would have advised you to wait for some more time.

You are aware that Kilinochchi and the Mullaithevu districts are the worst affected. Loss of life and property were in abundance. The people of Kilinochchi and Mullaithevu have not yet got over the shock they received. Some are still looking for their dear ones. In this situation Ministers going there over and over again and having opening ceremonies and Thamasas are irritating them. Furthermore they feel that some, who danced to the tune of the previous administration and passed on most of the Government allocations to them without any work done, is now advising the Government. Even after more than one year people have not yet properly settled in their respective homes, and are roughing out under huge trees and in primitive type of temporary cottages. Most of their houses are without roofs, doors and windows. What can they do with a few tin sheets, some cement and a couple of tarpaulin sheets.

if you will take the trouble to go round the Kilinochchi district which is also the electorate of Kilinochchi and instruct the Ministers to go into the interior and on their return give an unbiased report of the situation prevailing there, problems the people have and what their immediate wants are, I will very much appreciate it.

The man who had the Kilinochchi District created and represented it for 13 years has not been consulted by anybody, including you, on any matter relating to the welfare of Kilinochchi, its developments and resettlement of the IDPs. By obtaining my advice on various matters the Government could have saved several crores of rupees of poor people’s money.

I served the people of Kilinochchi for more than half a century. I want to serve them till I die. The house that I occupied on rent since my election as MP in 1970 belonged to one Mr. Thambipillai. He was Sir. Ponnablam Ramanathan’s secretary and got this property as a gift from him. Mr. Thambipillai dowried it to his daughter and that daughter in turn dowried it to her daughter. Small portions of this land had been sold by Mr. Thambipillai’s daughter when Mr.Thambipillai was alive.

The NRTB is occupying the land by force inspite of their minister’s directive to hand over the main house to me. I want you to intervene in this matter, since this attitude of the NRTB will not be appreciate by anybody. Kindly attend to this matter when you are in Kilinochchi for the cabinet meeting.

Thanking You.
Yours Sincerely,

V. Anandasangaree,
President
Tamil United Liberation Front

Friday, July 2, 2010

OPENING AN ARMY CAMP AT MULLAITHEVU AND CONSTRUCTION OF HOUSES FOR THE ARMY ARE ILL-TIMED

PRESS RELEASE - 2010-07-02

I am frankly of the opinion that the opening of an Army Camp at Mullaithevu as a fore-runner and the decision of the Government to build permanent houses for the Army are ill-timed, counterproductive and will very soon prove disastrous. I am not that foolish as to stir up a hornet’s nest by protesting against these moves. Whatever I do and say are always with patriotic feelings. My sincere advice is that the Government should forthwith stop opening any more new camps in Vanni, close down the one already opened and also abandon the idea of constructing permanent houses in the North and the East for the use of the Army. The Government should understand and appreciate my thinking and give credibility to my suggestions.

We had an army that fought well and defeated the LTTE. We had a good set of civilians who gave full corporation to the forces to defeat the LTTE, which started as a liberation movement and later turned out to be one causing destruction of life and property, without rhyme or reason. The whole country suffered. I need not elaborate the extent of damage the people in the North and the East suffered and the hardships they underwent. They do not want a similar situation to arise again in the future. They, on their own will take up the challenge in the event of any attempt for revival. They lived for over quarter of a century under the subjugation of the LTTE which was possible only because of the LTTE possessing sophisticated arms. We now have in our midst the man who purchased the arms for the LTTE to keep us not only under their subjugation but also made us to live in constant fear and tension. We have a friendly army now and we are happy about it. But they may have in their midst a few black sheep as well. In any case we the people of Sri Lanka want peace and absolute peace only. We don’t want to see arms in anybody’s possession. We lost over two hundred thousand lives due to the arms. Let they be Sinhalese Tamils Muslims or any of other ethnic group and also be Tigers or Soldiers or Civilians, all the lives lost are those of Sri Lankan Citizens.

Let all of say with one voice that we do not want military rule or military settlements amidst civilians. We want civil administration and do not want to see even a toy pistol in the toy shops. We are fed up with Gun culture and we civilians will not allow anyone to possess arms if only the Government will give the lead by withdrawing all arms in the country and the army barracked.

I strongly plead with the Government to concede to my request and help the people to live peacefully. All other matters can be sorted out once normalcy is restored and people feel free from all types of dominations. Otherwise all the efforts taken so far and all the sacrifices made by all section of the people will go waste. The people have already started murmuring about matters that they don’t have the guts to comment on, openly. Their regret is that there is no room to show even passive resistant on matters they do not agree. I very strongly emphasis that if these moves are not abandoned the Government can’t boast of bringing peace to a section of the people who had under gone immense hardships for a long time. I am voicing the sentiments of the people.

V.Anandasangaree,
President
Tamil United Liberation Front

முல்லைத்தீவில் முன்னோடியாக இராணுவமுகாம் அமைப்பதும் வடக்கு கிழக்கில் இராணுவத்தினருக்கு வீடுகள் அமைப்பதும் இன்று உசிதமான செயல் அல்ல - வீ.ஆனந்தசங்கரி

ஊடக அறிக்கை - 2010-07-02


முல்லைத்தீவில் முன்னோடியாக ஒரு இராணுவ முகாம் அமைப்பதையும், இராணுவத்தினருக்கு வடக்குகிழக்கில் நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுப்பதாக அரசு எடுத்த முடிவையும் இன்றைய சூழ்நிலைக்கு ஒவ்வாதெனவும், எதிர்பார்த்த விளைவை கொடுக்காதெனவும், விரைவில் ஓர் அனர்த்தத்திற்கு வழிகோலும் எனவும் வெளிப்படையாக எனது கருத்தை தெரிவிக்க விரும்புகின்றேன். இந்த முடிவை புத்திசாதுரியமற்ற முறையில் நான் ஆட்சேபித்து குளவி கூட்டுக்கு கல்லெறிந்தவன் போன்ற நிலைக்கு ஆளாகமாட்டேன். நான் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் தேசப்பற்றுடனேயே நோக்குவேன். அரசு உடனடியாக இவ்விரு நடவடிக்கைகளையும் நிறுத்தி ஏற்கனவே திறக்கப்பட்ட இராணுவ முகாமை மூடி புதிதாக இராணுவமுகாம் எதையும் திறக்க வேண்டாம் எனவும் ஆலோசனை கூறுகின்றேன். அரசாங்கம் எனது கருத்தை பாராட்டி எனது ஆலோசனைக்கு மதிப்புக்கொடுக்கவேண்டும்.

விடுதலைப் புலிகளோடு போராடி வெற்றி கண்ட நல்ல ஒரு இராணுவம் இருந்தது. விடுதலை இயக்கமாக ஆரம்பித்து பின் காலப்போக்கில் மக்களுக்கும்இ மக்களின் சொத்துக்களுக்கும் பெரும் இழப்புகளை உருவாக்கிய இயக்கத்தை தோற்கடிக்க பொதுமக்களும் பெருமளவில் உதவினர். முழுநாடும் சொல்லமுடியாத துயரை அனுபவித்தது. வடக்கு கிழக்கு மக்கள் அடைந்த இழப்புக்கள் பட்ட கஷ்டங்கள் பற்றி நான் விபரிக்க முன் வரவில்லை. எதிர்காலத்தில் இதேபோன்ற ஒரு நிலை மீண்டும் உருவாகுவதை அவர்கள் விரும்பவில்லை. எவரேனும் அதைப்புதுப்பிக்க முயற்சித்தால் அந்தச் சவாலை அவர்கள் எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். விடுதலைப் புலிகளிடம் சிறந்த ஆயுதங்கள் இருந்தமையினாலேயே அவர்களால் மக்களை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடிந்தது மட்டுமல்ல நிரந்தரப் பயப்பீதியுடன் வாழவைக்க முடிந்தது. நட்புறவுடன் பழகக்கூடிய இராணுவம் அமைந்துள்ளமை எமக்கு மகிழ்ச்pயைத் தருகின்றது. ஆனால் அவர்கள் மத்தியிலும் சில கறுப்பாடுகள் கலந்திருக்கக்கூடும். எது எப்படி இருப்பினும் இலங்கையராகிய நாம் வேண்டுவது வெறும் அமைதி மட்டுமல்ல பூரணமான அமைதியான வாழ்க்கையே. எவரின் கையிலும் ஆயுதம் இருப்பதை நாம் விரும்பவில்லை. தமிழர்இ சிங்களவர்இ இஸ்லாமியர்இ மற்றும் வேறு இனத்தவர்இ புலிகள்இ போர்வீரர்கள்இ பொதுமக்கள் ஆகியோர் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட் உயிர்களை நாம் இழந்துள்ளோம். ஆனால் அவர்கள் அனைவரும் நம் நாட்டு பிரஜைகளே.

ஆகவே நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இராணுவ ஆட்சியோ பொதுமக்கள் மத்தியில் இராணுவ குடியிருப்புகளோ வேண்டாம் என ஒரே குரலில் கூறுவோம். நாம் வேண்டுவது இராணுவ தலையீடற்ற சிவில் நிர்வாகமே. பொம்மைக் கடைகளிலும் விளையாட்டுத்துப்பாக்கிகள் கூட விற்பதனை நாம் வெறுக்கின்றோம். எமக்கு துப்பாக்கிக் கலாச்சாரம் வெறுத்துவிட்டது. அரசு மட்டும் முன்னின்று நாட்டில் உள்ள ஆயுதங்களை மீளப்பெறுவதோடு இராணுவத்தின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தி முகாம்களிலேயே தங்க வைக்குமானால் பொதுமக்களாகிய நாங்கள் வேறு எவரிடமும் ஆயுதம் இல்லாது பார்த்துக்கொள்ளுவோம்.

இறுதியாக அரசு எனது வேண்டுகோளை செவிமடுத்து மக்களை அமைதியாக வாழ விட வேண்டும் என மிகவும் மன்றாட்டமாக வேண்டுகின்றேன். மக்கள் எதுவித மேலாதிக்கமும் இன்றி சுகந்திரமாக நடமாட தொடங்கும்போது ஏனைய விடயங்களை பற்றி ஆலோசிக்கலாம். அப்படிச் செய்யத்தவறினால் இவ்வளவு காலமும் எடுத்த முயற்ச்சிகள் பல்வேறு பிரிவு மக்கள் செய்த தியாகங்கள் அத்தனையும் விழலுக்கிறைத்த நீராகிவிடும். தமக்கு இஷ்டம் இல்லாத விடயங்கள் பற்றி நேரடியாக தெரிவிக்கும் தைரியமின்றி மக்கள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் கவலைகள் எல்லாம் எதுவித கருத்துக்களையும் சாத்வீகமான முறையில் எடுத்துக் கூற கூடிய நிலை இன்று நாட்டில் இல்லையே என்பதே. நான் உறுதியாக கூறிக்கொள்ள விரும்புவது என்னவேன்றால் அரசாங்கம் அவ்வறான நடவடிக்கைகளை கைவிடாது விட்டால் நாட்டின் ஒருபகுதி மக்களுக்கு அமைதியை கொண்டுவந்ததாக தம்பட்டம் அடிக்க முடியாது. நான் தெரிவிப்பது மக்களின் குரலே.


வீ.ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

Saturday, June 26, 2010

மீண்டும் ஒரு தடவை எவரேனும் எம் மீது சவாரி செய்ய அனுமதிக்கக்கூடாது - வீ. ஆனந்தசங்கரி

ஊடக அறிக்கை

2010-06-25

அரசுக்கு உதவ முன் வந்துள்ள முன்னை நாள் இயக்கப் போராளிகளின் ஆதரவாளர்களும் புத்திஜீவிகளும் யார்?

யுத்தம் முடிந்த பின் நாட்டின் புனர்நிர்மாணம், மீளக்கட்டியெழுப்புதல் போன்றவகைகளுக்கு அரசுக்கு உதவ முன்னைநாள் போராளிகளின் அனுதாபிகள், புத்திஜீவிகள் முன்வந்துள்ளதாகிய செய்தி, வெறும் கேலிக் கூத்தாகும். யார் இந்த கே.பி என அழைக்கப்படும் பத்மநாதன் என்பவர்? அவருக்குரிய நன்மதிப்பு தராதரம் என்ன? பிற நாடுகளில் இருந்து தூதுக் குழுவாக வருகை தந்து அரச உயர் அதிகாரிகளுடன் பேசி நாட்டின் புனர்வாழ்வு மீள் கட்டுமானப் பணிகளுக்கு உதவ வந்துள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்?. சர்வதேச அரங்கில் பிரசித்தி பெற்ற பெயர் போன பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்ட கே.பி.யின் தலைமையில் இக் குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும், வெளிவிகார அமைச்சரையும் சந்தித்துள்ளது என்ற செய்தி எனக்கு பெரும் ஆச்சரியமாகவும்,அனேகமாக முழு இலங்கையருக்கு அதிர்ச்சியும் தந்துள்ளது.

திரு.பிரபாகரன் மரணித்த உடன் அவரின் வாரிசாக உரிமை கோரிக்கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் எனக் கூறிக்கொண்ட திரு. கே.பி அவர்கள் அதிகாரிகளிடம் தானாக சரணடையவில்லை. மிக்க தந்திரமான முறையில் அவர்கள், கைது செய்யப்படாதிருந்தால் இன்று அவர் கடந்த காலத்தில் திரு. பிரபாகரன் யார் யாருக்கு அச்சுறுத்தலாக இருந்தாரோ அத்தனைபேருக்கும் இவர் அச்சுறுத்தலாக இருந்திருப்பர். இப்போது கூட அவர் எதிர் காலத்தில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. அரசுக்கு அதன் புனர்நிர்மாண மீள் கட்டுமாண பணிகளுக்கு அரச உயர் அதிகாரிகளை சந்தித்து உதவ முன்வந்துள்ள தூதுக் குழுவில் இடம் பெற்றுள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்? சரிபிழைகளை ஆராய்ந்து அறிவை வளர்ப்பவரே புத்திஜீவியாவார். ஆனால் இந்த புத்திஜீவிகள் என்ன செய்தார்கள். சரிபிழைகளை ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கிறதா?

சிறிய அபிப்பிராய பேதங்களுக்கு நாம் இடம் கொடுக்கப்படாது. பல கஸ்டங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த சமாதானத்தை நிலைக்கச் செய்ய வேண்டும் என்று திரு. கே.பி.யோ அன்றி அவரின் அணியில் உள்ள வேறுயாருமோ எமக்கு கூறுவது கேலிக்கிடமாகும்.

இலங்கையராகிய நாங்கள் இந்த புத்திஜீவிகள் யார் என்பதனையும் வெளிநாட்டில் வாழும் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைக்கு உதவுபவர்கள், நாட்டின் கள நிலையை விளங்கிக் கொள்ள தொடங்கிவிட்டார்கள் என்று உத்தரவாதம் தருவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது.

இவர்களுக்கு இதுவரை காலமும் களநிலை பற்றி விளங்காமல் போனது கவலைக்குரியதே. மீண்டும் ஒரு தடவை எவரேனும் எம் மீது சவாரி செய்ய அனுமதிக்கக்கூடாது. இத்தகைய எவருடனும் அரசு எத்தகைய தொடர்பு வைத்திருப்பதை ஆட்சேபிக்கும் உரிமை எனக்குண்டு. இவர்களுடன் நாம் உறவு வைத்திருப்பதை பார்த்து உலக நாடுகள் நகைக்கும் என்பதோடு, இந்நாட்டு மக்கள் ஒருவர் இருவருக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே துரோகம் செய்ததாக கருதப்படும். நம் நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான். நாம் ஏறக்குறைய இரண்டு லட்சம் உயிர்களை இழந்துள்ளோம். அவற்றில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள், ஆயிரக்கணக்கான படை வீரர்கள் பலாத்காரமாக விடுதலைப்புலிகளுடன் இணைக்கப்பட்ட போராளிகள் பலர் அடங்குவர். ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் விதவைகளாக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானவர்கள் அனாதைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டும் 42000 விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். எத்தனையோபேர் தமது பார்வைகளையும், கால் கைகளையும் இழந்துள்ளனர். இரு கால்களையும் இரு கைகளையும் இழந்தவர்கள், ஒரு காலால் நடப்பவர்கள், தவழ்ந்து திரிகின்றவர்கள் இவ்வாறு பலர். இந்த அப்பாவிகள் அனைவரும் எஞ்சியுள்ள நாட்களை இப்படித்தான் செலவிட வேண்டும் என்பது விதி. எத்தனை ஆயிரம் மாணவர்கள் தம் கல்வியை இழந்துள்ளனர். இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டு உயிரற்ற சடலங்களாக கண்டபோது அனுபவித்த கவலைகள் பற்றி இப் புத்திஜீவிகள் அறிவார்களா? ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு அல்லது தமக்கு மிகவும் விருப்புடைய ஒரு உறவை இழந்திருந்தால் மட்டும்தான் இந்த வேதனையை உணர முடியும். எத்தனை குடும்பங்கள் முழு உறவினரையும், சில குடும்பங்கள் உறவுகள் சிலரையும் இழந்துள்ளனர். பல கோடி பெறுமதியான தனியார் பொது சொத்துக்கள் அழிக்ககப்பட்டுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுயில் முழுமையான ஒரு வீடும் இல்லை. வவுனியா, மன்னார், யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிக்கும் இதே கதிதான். கிழக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்து இரண்டு ஆண்டுகளின் பின்பும் எமது மக்கள் கூடாரங்களில் தான் வாழுகின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள கிராமங்களுக்குள் சென்று அக்கிராமங்கள் எவ்வாறு சீரழிக்கப்பட்டுள்ளன என்றும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகளையும் அரசு பார்வையிட வேண்டும். முல்லைத்தீவு, கிளிநெச்சி மக்கள் முற்றாகவும் மன்னார், வவுனியா பகுதியில் உள்ள மக்களில் பெரும் பகுதியும் வீட்டுக்கூரை யன்னல் கதவு உட்பட எதுவும் இல்லை. உண்மையாக நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்பதை உணருகின்றேன். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டதை விட அதிகமாகும். இப்புத்திஜீவிகள் எங்கிருந்து வந்தார்களோ சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இவர்களை நாடுகடத்தி தரும்படி இலங்கையரசு கோரிக்கை விடவேண்டும். இதுவரை எந்த ஒரு நாடும் விடுதலைப்புலிகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் அண்மையில் தடைகளை நீடித்துள்ளன.

இத்தகைய நபர்களே, நாம் இழந்த அத்தனை இழப்புக்கும் சம பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்களை உபசரிப்பது மறைமுகமாக அவர்களின் தடைகளை நீக்குவதற்குச் சமமாகும். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட விடுதலைப்புலிகளின் கடும் போக்காளர்களை இராணுவம் உபசரிக்கும் போது, தடுப்புக்காவலில் உள்ள 10000 பேரில் பெரும் பகுதியினர் விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக சேர்க்கப்பட்டிருப்பதனால் அவர்களை ஏன் தொடர்ந்தும் தடுப்புக்காவலிலும் சிறையிலும் அரசு வைத்திருக்கின்றது என்று கேட்கின்றார்கள். இத்தகைய நபர்கள் தான் பின்னணியில் இருந்து எமக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கும் பொருள் இழப்புகளுக்கும் பொறுப்பாக இருந்திருக்கின்றார்கள். ஆகவே அரசு வீடு முற்றாகவும் பகுதியாகவும் இழந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். இரண்டாவதாக உயிர் இழப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஏனைய இழப்புகளுக்கும் முழு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அரசு மேலும் தாமதிக்காது மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புகளின் பெறுமதியை கணக்கிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். குண்டு வெடிப்பு, தற்கொலைத் தாக்ககுதல், கண்ணிவெடி போன்றவற்றிற்கு பலியாகிய நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சேர்ந்தவர்களுக்கு முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். நாட்டின் பிற பகுதியில் இருந்து 500 ரூபாயுடன் வெளியேற்றப்பட் இஸ்லாமிய மக்கள் முழு சொத்தையும் இழந்தமையால் முழு நட்ட ஈட்டுடன் மீள குடியமர்த்தப்பட வேண்டும். அன்று தொட்டு இன்று வரையும் இவர்களில் அனேகர் மிக வறுமைப்பட்டு வாழ்கின்றார்கள்.

இந்த நபர்களின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட அரசுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொள்ள வேண்டும். இவர்கள் எல்லோரும் இலட்சியத்துடன் செயறட்படாது சுயநலத்துடன் செயற்படுகிறார்கள் என்பது தெரியாமல் கண்மூடிதனமாக விடுதலைப் புலிகளை ஆதரித்த நபர்களின் தற்போதய கருத்து இதுவாகும். பல ஆண்டுகள் அமைதியான தூக்கம் இன்றி சுதந்திரமான முறையில் வீதியில் நடமாட முடியாது, கருத்துக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு சிலரைப் போல் வாழ்ந்தவன் நான்.

இதுபலவிதத்தாலும் பாதிக்கப்ட்ட ஒரு தனி மனிதனின் உணர்ச்சிமிக்க உள்ளக் குமுறலின் வெளிப்பாடாகும். கிளிநொச்சியில் வாழுகின்ற உரிமை மறுக்கப்பட்டது உட்பட. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் குறிப்பாக வட-கிழக்கு வாழ் மக்களின் கருத்துக்களினைத்தான் நான் பிரதிபலிக்கின்றேன். நான் செய்வது தவறு என யாரும் கருதினால் நான் அவர்களிடம் அதற்கு மன்னிப்புக்கோரி, ஒத்த கருத்துள்ளவர்களை எனது பணி தொடர ஆதரவு நலகுமாறு வேண்டுகிறேன்.



வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

WHO ARE THE INTELLECTUALS AND EX-MILITANT SYMPATHIZERS WANTING TO ASSIST THE GOVERNMENT - Sangaree

2010-06-25

It is real mockery for the Government to seek or accept the offer of assistance of Tamil intellectuals and ex-militant sympathizers for post-conflict rehabilitation and reconstruction activities. Who is this K.P alias Pathmanathan?. What are his credentials? Who are these so called intellectuals who came from abroad on a delegation to meet top officials of the Government and offered to assist in the rehabilitation and reconstruction activities in the country. The news that this team of so called intellectuals headed by the notorious terrorist Mr. KP of international fame had met the Defense Secretary and the Minister of Foreign Affairs, come to me not merely as a surprise but also as a great shock to almost all Sri Lankans

Mr. KP is the person who claimed to be the head of the LTTE succeeding Mr. V.Prabaharan on his demise, never surrendered to the authorities on his own. If he was not arrested tactfully today he would have been a threat to everybody who faced threat from Mr. Prabaharan in the past. In-fact even now there is no guarantee that he won’t be a potential threat to the country and its people. Who are these unidentified intellectuals who have come on a delegation to meet top Government Officials and offer assistance to the Government for rehabilitation and reconstruction. An intellectual is a person who has the power of reasoning and acquiring knowledge. But what did these intellectuals do? Did they have any power to reason out things.

It is ridiculous for K.P or any one in his team to tell us that there should not be room for petty differences and that all must work towards stabilizing the hard earned peace. We Sri Lankans wish to know the identities of these so called intellectuals and also want to know from them as to what credibility they have to give an undertaking that several tiger activists, living abroad, have now begun to understand the ground realities. It is a pity that they did not understand the ground realities all these days. Let no one take us for a ride once again. I have every right to protest to the Government not to have anything to do with anyone of them. The whole world will laugh at us if we entertain them and it will amount to betrayal of our people, not one or two but the entire country. Every one of our people in this country had been a victim in one way or the other. We lost over two hundred thousand lives, that include several thousand innocent civilians, thousands of service personnel, and the LTTE combatants, most of whom were conscripted. More than one hundred and fifty thousand had been widowed and several thousand had been orphaned or had become destitute persons. In the East alone there are 42,000 widows. How many had lost their eyesight and limbs. There are many without both their legs, without both hands, some move about on one leg and many crawl about. All these innocent ones are destined to suffer for the rest of their lives. How many thousand students had been deprived of their education. Surely these intellectuals should know to what extent the parents would have suffered when their school going children were conscripted and brought back home dead. One should have become a victim under one of these categories or must have lost a dear one to feel the pain. How many families have lost all the members of the family, parts in some others. How many billions and billions worth of property both public and private had been destroyed. Hardly one person has his house in tact in Kilinochchi and Mullaithevu, Vavuniya and Manner and to some extent Jaffna also suffered a lot. The East still have people who live in tents even after two years of their displacement. The Government should send them to the interior villages of Mullaithevu and Kilinochchi to see for themselves, how devastated Vanni is and the destruction caused. The people of Mullaithevu, Kilinochchi and parts of Vavuniya and Mannar have nothing left in their homes including roofs, windows and doors of their houses.

I honestly feel that I am betrayed and the others who had suffered for quarter of a century will feel more. The Government should have asked the respective Governments from where they came for their extradition. So far not a single country has lifted its ban on the LTTE. India and U.S has renewed their ban on the LTTE. The act of entertaining these people who are equally responsible for all the losses the country and the people have suffered will amount to tacit lifting of the ban on the LTTE. The supporters of the LTTE now ask if these hard core elements are being entertained by the Forces, why should the Government keep ten thousand of our children, most of whom are innocent, in rehabilitation camps and in jails.

These are the type of people who, from behind the scene, directing operations and caused the loss of thousands of innocent lives and destruction of several billions worth of public and private property and hundreds of thousand houses of innocent people. As a first priority the Government should use this money to give full compensation for the houses destroyed totally or damaged. As the second priority compensation should be given for the other losses, loss of lives in particular. The Government must now without further delay start assessing the loss everyone had suffered due to the foolish act of these people. Those who died in Bomb-blasts, suicide attacks and land-mines spread all over the country, should be fully compensated. All the Muslims who were sent out of the North by the LTTE left behind everything and were allowed to take only Rs. 500 each. All these families had been living in poverty all these days. Assistance of all Governments should be sought to cease all funds, these people have all over the world. There are views of the people who quite innocently and blindly supported the LTTE, little knowing that these people were not genuinely fighting for a cause but only for personal gains. I am one who for several years did not sleep peacefully, did not have the freedom to walk on the streets or to express my views which had been blacked out, although it is the same with many like me.

This is an emotional outburst of one who had been victimized, in several ways including the right to live in Kilinochchi. I am reflecting the views of hundreds of thousands of people from all parts of Sri Lanka, the people of the North and the East in particular. If anyone feel that I am wrong, I apologize to them. Those who agree with me can give me their support to take my mission forward.

Thanking You.
Yours Sincerely,

V. Anandasangaree,
President
Tamil United Liberation Front

Monday, June 21, 2010

வன்னிமக்களின் உணர்வுகளை யாழ் மக்கள புரிந்து கொள்ள வேண்டும் - ஆனந்தசங்கரி

19.06.2010
பத்திரிகைச் செய்தி


யூன் மாதம் 22ம் திகதி தெடக்கம் 17 நாட்கள் நீடிக்கக் கூடியதாக மக்கள் களரி நாடகக் குழுவினர் நாடகக் கலைவிழா ஒன்றை ஆரம்பிக்க இருப்பது எனக்கு பெரும் ஆச்சரியத்தை தருகின்றது. தம் உறவினர் இறந்த சோகமும் பல சொத்துக்களை இழந்த கவலையிலும் மூழ்கியிருக்கும் வன்னி மக்கள் தமக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து மீள முன்பு யாழ் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபடுவது வருந்தத்தக்க விடயமாகும். குழு அங்கதினர் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ள இவ்வேளை இதுபற்றி அவர்களுக்கு கூறியமைக்கு அவர்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். ஒரு தடவை உறுப்பினர்கள் வன்னிக்குச் சென்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உளள வீதிகளுக்கூடாகச் சென்று அங்கே ஏற்பட்டுள்ள பெரு அழிவுகளையும், இடம் பெயர்ந்து மீள் குடியமர்ந்த மக்கள் ஒருவருடத்தின் பின்பும் எத்தகைய பரிதாப நிலையில் இருக்கின்றனர் என்பதையும் பார்க்கவேண்டும். அவர்கள் மீளக் குடியமர்ந்தவர்களாகத் தெரியவில்லை. மீண்டும் இடம் பெயர்ந்தவர்களாகவே தெரிகின்றனர்.

வன்னி மக்களின் முகத்தில் ஒரு புன்சிரிப்பையும் காணமுடியாது. கடந்த வருடம் வீட்டை விட்டு தம் குடும்ப அங்கத்தவர்கள் சுமக்கக் கூடிய பொருட்களோடு சென்றவர்கள் இன்றுவரை ஒரு நாளேனும் நிம்மதியாக உறங்கியதில்லை. தம் வீடுகளுக்கு அவர்கள் வந்து பார்த்த போது வீடுகள் தரை மட்டமாகவும் சில பெரிய அளவில் தகர்க்கப்பட்டும் சில வீடுகள் கூரை இன்றி யன்னல்கள் இன்றியும் உள்ளன. அவர்களின் வீடுகளில் எந்த ஒரு பொருளும் இருக்கவில்லை.

சொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஒட்டாண்டியாக வாழும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் மத்தியில் யாழ் மக்களுக்கு தம்மீது அனுதாபம் இல்லை என்று எண்ணம் பரவியுள்ளது. பலர் தமது உறவுகளை இழந்தும், சில குடும்பங்கள் முற்றாக அழிந்துமுள்ளன. சிலரை மக்கள் இன்னும் தேடிக் கொண்டுமிருக்கின்றனர். இரு கால்களையும் இரு கைகளையும் இழந்தவாகள் தம் வீடுகளை எவ்வாறு கட்டுவோம் என ஏக்கம் ஒரு புறம், புலி உறுப்பினாகள் என பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தம் பிள்ளைகளைப் பற்றி கவலை அவர்களுக்கு. இக்கட்த்தில் தான் அங்கு சென்று அவர்களுக்கு உதவ வேண்டும். இடிபாடுகள் நிறைந்த அவர்களின் கிணறுகளை சுத்தம் செய்து அவர்களின் உறைவிடம் திருத்த உதவ வேண்டும்.

இன்று அவர்களின் வீடுகளை கட்டுவோமா என்ற பயம். கட்டடப் பொருட்கள் உதவியாக கொடுத்தாலும் கட்ட முடியுமா என்ற பயம் அவர்களுக்கு. முழு அளவிலான நட்ட ஈடு பெறத்தகுதியுடையவர்கள். அரசோ சர்வதேச சமூகமோ அத்தனை நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. வெறும் விவசாயிகளுக்கு உதவியை மட்டுமே கொடுப்பதாகவே அரசு முன்வருகிறது, இந்த நிகழ்சியை நடத்துவதா, விடுவதா என்கின்ற விடயமாக முடிவை எடுக்க வேண்டியவர்கள் நாடகக் குழுவினர்ரே. நான் ஒரு நாடக கூத்து இரசிகன். இந்த விடயத்தில் வன்னி மக்களின் உணர்வுகளை யாழ் மக்களுக்கு உணரவைப்பேன். இதற்கு முன்பும் சில சங்கீத நிகழ்சிகள் நடந்துள்ளன. ஆனால் அவை அனைத்துமே வேறு நிறுவனங்களால் நடத்தப்பட்டவை. இந்த விடயத்தில் பொருத்தமான ஆலோசனையை பொருத்தமான நேரத்தில் வழங்கப்படாமை வருத்தத்திற்குரியதே. இவ்விடத்தில் இளைளுர்கள் மற்றும் மக்களும் ஒரு தீர்வை எடுக்கலாம். எந்த முடிவும் நல்ல முடிவாக தெரியவேண்டியது அவர்களே. இந்நிகழ்வில் பங்குபற்றுவோருக்கு எனது கருத்து பாதித்திருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி