அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label நம்நாடு. Show all posts
Showing posts with label நம்நாடு. Show all posts

Friday, November 27, 2009

இந்து சமுத்திரத்தின் முத்தெனத் திகழும் எம் ஈழத்திருநாட்டை அமைதிப் பூங்காவாக மாற்ற முன்வாருங்கள்!



ஜனாதிபதித் தேர்தல் வருகிறது!
மீண்டும் அதற்கு மக்கள் தயாராகிவருகிறார்கள்!
இம்முறை யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்!
யாராவது ஒருவர் நாம் பிறந்த இந்நாட்டில் பூரண சுதந்திரத்தோடு வாழ வழியமைத்துத் தருவார்களா என நாம் ஆராயவேண்டும்!
எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பிறந்த நாடுதான் என் பொன் நாடு!
அந்த ரீதீயில் யாவரும் சரிசமமாக சுதந்திரமாக அனைத்து உரிமைகளோடும் வாழ எம் நாட்டில் முதல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

வடக்கு கிழக்குடன் ஏனைய பகுதிகளில் வாழும் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி கண்டிப்பாக ஆராயவேண்டும்!

சுவிற்சர்லாந்தின் அரசியலமைப்பு முறையை இளம் அரசியல் ஆர்வம் மிக்கோர் படிக்க வேண்டும் - உலகின் அமைதியான - அழகான நாடெனத் திகழும் இந்நாடு எம் நாட்டை விடச் சிறியது! 4 மொழிகளுக்கு அரச அந்தஸ்து அளித்து ஜனநாயகப் பண்புகளைப் பேணிவரும் நாட்டை உதாரணமாகக் கொண்டு எம்நாட்டையும் அமைதிப் பூங்கவாக மாற்றி - அனைவரும் ஒரு தாய் மக்களென வாழும் நிலையைக் கொண்டு வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.



இன - மத - மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதத்தன்மையுடன் இந்நாட்டை கட்டியெழுப்ப இளையவர்கள் முன்வரவேண்டும்.