

சிறு வயதினிலே எமது ஊரிலுள்ள தேவாலயத்தின் நத்தார் கரோல் நிகழ்வுகளில் பங்குபற்றியபோது பாடிய சில வரிகள் இன்றைக்கும் ஞாபகத்திலிருக்கிறது!
பாலகன் பிறந்தார்! யேசு பாலகன் பிறந்தார்!
தீர்க்க வசன வார்த்தையின்படி பாலகன் பிறந்தார்!
எத்தனை புத்திரர் உதித்தார்! உதித்தார்!
புதுமை ஈதென்ன பாரீரோ! பாரீரோ!
சபரிமலை யாத்திரையில் ஒரு பாடலில்
எல்லா மதமும் ஒன்றே என்கிற சமத்துவமே நீயப்பா
கல்லாத மனம் கனிய வைக்கிற கற்பகமே நீயப்பா!
ஏழைகள் தோழனே! அரண்மனைக் காரனே!
இனமத பேதமற்ற இறைவா சரணம்!
வாபரின் நண்பனே! வன்புலிவீரனே!
கருணையின் வடிவான ஐயா சரணம்!
என்ற வரிகள் வருகிறது!
ஏன் -எதற்கு - என்ன - சொல்ல வருகிறேன் என்று புரிந்தவர்கள் உணர்வார்கள்!
