எப்போது இனிப் பனி வரும் என அங்கலாய்த்தபடி இருந்தேன். இன்று காலையில் எழுந்து வெளியே பார்த்தால் ஒரே வெள்ளைமயமாக இருந்தது. குதூகலித்துக்கொண்டு சில காட்சிகளை நண்பனொருவனிடமிருந்து பறித்துக்கொண்டுவந்த ஒரு புகைப்படக்கருவியால் பதிவுசெய்தால் என்னுடைய கெட்டகாலம் படங்கள் கணனியில் ஏற்றும்போது நடந்த சிறுதவறால் முழுப்படங்களும் அழிந்துவிட்டன. பிறகும் மனம் தளராமல் சென்று பிடித்தவற்றை பதிவிட்டுள்ளேன். நாளைக்கும் பனி பெய்யுமாம். இன்னும் எனக்குப் பிடித்த சிலவற்றை தரலாம் என்று இருக்கிறேன். நாளைய கால நிலையைப் பொறுத்து என் எண்ணம்.....









1 comment:
இங்கு திரைப்பட பிரபலங்கள் சொன்னது பத்திரிக்கை வாயிலாக படித்தது இப்போது நண்பரான உங்கள் மூலம் படங்கள் பார்த்த போது மகிழ்ச்சியாய் உள்ளது.
Post a Comment