அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, September 15, 2009

கார்த்திக் சுபராஜ் அவர்களின் இனியொரு பதிவில் என்னுடைய இடுகை!

காட்சிப்பிழை – ஈழப்பிரச்சனையைத் தொட்டுச்செல்லும் 4நிமிடங்களும் 51 செக்கன்கள் கொண்ட அந்தக் குறும்படத்தைப் பார்த்ததும் உடனேயே (23.07.2009இல்) இட்ட இடுகையை ஒரு பதிவுக்காக இங்கு பதிவிலிடுகிறேன்.

எனக்கு இதைப் பார்த்தவுடன் பழைய ஞாபகங்கள் பல உருண்டோடின. அதில் ஒன்று இந்திய அமைதி காக்கும்படையுடன் விடுதலைப் புலிகள் யுத்தத்தை மேற்கொண்ட 10.10.1987 புரட்டாசிச்சனி மதியம்.
நல்லை ஆதீனத் தொண்டர் அணியினராகிய நாம் வண்ணார்பண்ணைப் பெருமாள் கோவிலில் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியம் 1.00 மணியளவில் குண்டுச் சத்தங்கள் கேட்டன. கோவில் மூடப்பட்ட பின் அப்போது நான் தங்கியிருந்த கந்தர்மடம் பழம் றோட் பிள்ளையார் கோவில் ஐயா வீட்டிற்குப் போய் சற்று நேரத்தில் எனது நண்பன் ஒருவன் வந்து வாடா நிறைய சனம் காயப்பட்டுக் கிடக்காம். உதவ வேணும் என்று சொல்ல அவனுடன் யாழ்ப்பாண நகருக்குப் போனேன். குண்டுகள் வந்து விழுந்தபடி இருந்தது. என் கண்முன்னாலேயே ஒரு இளைஞன் குண்டடிபட்டு விழுந்தான். சைக்கிளில் விழுந்து கிடந்த சுபாஸ் ஹோட்டலுக்கு முன்பாக இருந்த பிள்ளையார் கோவிலுக்கு நானும் எனது நண்பனும் ஓடிப் போனோம். நாங்கள் எங்கள் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு ராணித் தியேட்டர் பக்கத்திலிருந்து அவருக்குப் பக்கத்தில் செல்லவும் அடுத்த குண்டு அதே இடத்தில். அந்த இடம் ஒரே புகை மண்டலமாயிருந்தது. காதுக்குள் கிண் என்ற சத்தம் மாத்திரம் – அந்த இளைஞனின் உடல் சிதறியிருந்தது. எனக்கு சற்று நேரத்தின்பின்னர்தான் என்னுடம்பில் ஏதோ செய்வதுபோல இருந்தது. பார்த்தால் எனக்கு ஒன்பது இடங்களில் ஷெல் துண்டுகள் – உடனேயே கத்தினேன் – ஐயோ! என்னைக் காப்பாற்றுங்கள் என்று!

இதை எழுதியதற்கு கார்த்தி எழுதிய பதில் - Hi thanga mukunthan..Your experience is really painful.Endru adangum nam thuyar?????

No comments: