அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, September 20, 2009

இரத்தினபுரி கஹவத்த தலுகலை ஹவுப்பைத் தோட்டம் ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்பு


இவ்வாலயப் புனரமைப்புக்காக 1995-6-23இல் அச்சிடப்பட்ட வேண்டுகோளின் பிரதி இன்றுவரை என்னுடன் இருக்கிறது என்றால் நான் அந்த ஆலயத்துடன் எவ்வளவு தொடர்புபட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் உணரமுடியும். இவ்வாயலத்தில் நானே பல தடவைகள் பூசை செய்திருக்கிறேன். இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஆத்மகணானந்த மகாராஜ் வருகைதந்ததைப் பற்றியும் அவருக்கு எழுதிய கடிதங்கள் பற்றியும் ஏற்கனவே ஒரு பதிவிட்டிருக்கிறேன். இவ்வாலயம் இன்றுவரை கட்டிமுடிக்கப்படாமல் அரைகுறையாகவே இருக்கிறது. இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போதே எனது ஆருயிர் நண்பன் சிவா பாஸ்கரராவ் அவர்களுடன் தொலைபேசியில் பல மாதங்களுக்குப்பிறகு பேசினேன்.
கோவிலை முற்றுமுழுதாக்கும் வேலைகளுக்கு நான் என்னால் முடிந்ததை மீண்டும் செய்ய வேண்டிய நிலையில் இப் பதிவை இடுகிறேன்.

No comments: