

நல்லூர்த் திருவிழாவின்போது திவ்ய ஜீவன சங்கத்தின் சிறுவர்களால் பாடப்படும் கந்தரனுபூதிப் பஜனையையும் திருவிழாக் காலங்களில் 1984, 1985, 1986ஆம் ஆண்டுகளில் ரசித்து மகிழ்ந்தவன். அருணகிரிநாதர் பாடிய கந்தரனுபூதிப் பாடல்கள் 51 என வழமையாக எல்லாரும் சொல்லப்பட்டு வந்ததையே நானும் இதுவரை பின்பற்றியிருந்தேன். ஆனால் அதில் 101 பாடல்கள் இருப்பதை அறிந்தபின் இதை மற்றவர்களும் அறிய வேண்டும் என்பதற்காக கந்தர் அனுபூதி (http://kantharanupoothy.blogspot.com/)என்ற புதியதொரு வலைத்தளத்தில் ஏனைய 50 பாடல்களையும் பதிவிட முடிவுசெய்திருக்கிறேன். நல்லூர்த் திருவிழா நடைபெறும் இக்கால கட்டத்தில் இப்பணியை ஆரம்பிப்பதில் பெரும் மனநிறைவடைகிறேன்.
1 comment:
யாழ்ப்பாணத்தின் குரலின் வாழ்த்துக்கள்.
Post a Comment