அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, June 6, 2013

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 6)

2. யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு – என். செல்வராஜா அவர்களால் தொகுக்கப்பட்ட நூலில்

பக்கம் 92ல் இரண்டாவது பந்தியில் 4வது வரியில் "31.05.1981 அன்று இரவு சிங்களக்காடையர் கும்பலினால்" என்றும்,

பக்கம் 100ல் மூன்றாவது பந்தியில் "1981 யூன்மாத முதல் நாளின் விடிகாலவேளை மே 31ஆம் திகதியின் நள்ளிரவில்" என்றும்,

102ம் பக்கத்தில் கட்டுரையின் முதல் வரியிலே “யாழ் பொது நூலகம் 31.05.1981 அன்று இரவு" என்றும்,

106ல் கடைசிப்பந்தியில் 2ஆவது வரியில் "அறிவுப்பெட்டகம் இக்காடையர்களால் 1981மே மாதம் 31ம் திகதி தீமூட்டி எரிக்கப்பட்டது" என்றும்

இருப்பவை தவறானவையாகும்.


3. யாழ்ப்பாண நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது - வி.எஸ் துரைராஜா அவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களில் பல விபரமான நூலக கட்டிட வரைபடங்கள், சேதமுற்ற நூல்நிலையம், மற்றும் மாநகர சபைக் கட்டிடங்கள், புதிய நூலகத்தின தோற்றம் என்பவற்றுடன் கொழும்பில் நடைபெற்ற நூலக வார கொடித்தினம் சம்பந்தமான புகைப்படங்களை மிகவும் அருமையாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார். பக்கங்கள் 18, 21இல் அழகான மாநகர சபையினதும் சுப்பிரமணியம் பூங்காவினதும் படங்கள் அழகுற அச்சிடப்பட்டுள்ளன.

28ஆம் பக்கத்தில் "சிறுவர் பிரிவு – 1976 நவம்பர் 3ஆம் தேதி இந்தப் பிரிவு திறந்து வைக்கப்பட்டது" என்றுள்ளது. 29ஆம் பக்கத்தில் “அறிவுப் பொக்கிசம் சாம்பலாக்கப்பட்டது” என்ற தலையங்கத்தின்கீழ் மூன்றாவது பந்தியில் “ஜுன் 1ஆம் தேதியன்று சுமார் காலை 10.00 மணியளவில் இந்த மனிதர்கள் நூலகக் கட்டடத்துக்குள் புகுந்து அங்கிருந்த தளவாடங்களையெல்லாம் நிர்மூலமாக்கினார்கள். இதன் பிறகு விலைமதிப்பற்ற புத்தகங்கள், புராதன கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய ஆவணங்கள், ஓலைச் சுவடிகள் எல்லாவற்றையும் தீக்கிரையாக்கினார்கள். ஒருசில நிமிடங்களுள் கட்டடமும் தீப்பற்றி எரிந்தது" என்றுள்ளது. 50ஆம் பக்கத்திலுள்ள ஒரு படத்தில் "யாழ் மாநகராதிபதி விசுவநாதன் முதலாவது கொடியை கொழும்பு மாநகராதிபதி சிறிசேனா குரேவின் சட்டையில் அணிவிக்கிறார்...." என்றுள்ளது. 52ஆம் பக்கத்தில் “1982 பெப்ரவரி 7ம் திகதி நகரபிதா இராஜா விசுவநாதன் அவர்கள் சம்பிரதாய முறைப்படி அடிக்கல்நாட்டி நிர்மாண வேலைகள் ஆரம்பமாயின.…..நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித்தலைவருமான அமிர்தலிங்கம் அவர்களால் வைதிகமுறைப்படி 1984ம் ஆண்டு யூன் மாதம் நாலாம் திகதி கட்டடம் திறந்து வைக்கப்பட்டது" என்றுள்ளது. 67ஆம் பக்கத்தில் "2002ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புனரமைப்புப் பணிகள் முற்றுப் பெற்றன" என்றுள்ளது. 88ஆம் பக்கத்தில் “பல அரசியல் சர்ச்சைகளின் பின்னர் 1981ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட யாழ் நூலகம் 22.2.2004ஆம் திகதி மீளவும் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது” என்று ஆரம்பிக்கும் “புத்துயிர் பெற்ற யாழ். நூலகம்” – தனபாலசிங்கம் - யாழ் நூலக நூலகவியலாளர் கட்டுரையுள்ளது.

No comments: