அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, June 9, 2013

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 8)

6. "State Terrorism" in Jaffna - V. Yogeswaran Member of Parliambet for Jaffna

நாச்சிமார் கோவிலடியில் மே 31 இரவு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காவலுக்கு நின்ற நான்கு பொலிசாரில் இரண்டு பொலிசார் சுடப்பட்டதன் பின்னர் கலவரங்கள் ஆரம்பமாகியது.அன்றிரவு யாழ்ப்பாணமத்திலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகமும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வெ. யோகேஸ்வரன் அவர்களின் இல்லமும் எரிக்கப்பட்டன.இப்புத்தகம் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒருவரின் சாட்சியம். அது முக்கியமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.மொத்தம் 12 பக்கங்களை உள்ளடக்கியது அவரது கடிதம்.

7. ஒரு வரலாற்றுக் குற்றம் - NON

சுவிற்சர்லாந்தில் நான் இருந்த காலப்பகுதியில் எனது கரங்களுக்கு கிடைத்த இப்புத்தகத்தில் முழுவதுமே பிழையான தகவல்கள் - அவர்கள் தாமாகவே கற்பனை செய்து எழுதியுள்ளார்கள் போலத் தெரிகிறது. இதை நான் பின்பு விபரிக்கின்றேன்.

No comments: