அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, June 8, 2013

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 7)

4.சோமீதரனின் எரியும் நினைவுகள் ஆவணப்படம் - ('Burning Memories'- A Video documentary by Someetharan)

ஊடகவியலாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான சிறீதரன் சோமீதரன் மிகச் சிரமப்பட்டு இந்த ஆவணப்படத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இதுபற்றிய விபரங்களை அவர்தனது காற்றோடு பதிவிலும், கானாபிரபா தனது மடத்துவாசல் பிள்ளையாரடி பதிவில் - எரியும் நினைவுகள் உருவான கதை என்ற சோமிதரனின் பேட்டியிலும் விபரமாகப் பார்க்கலாம்.காலச்சுவடு சஞ்சிகையிலும் இதுபற்றிய விபரமான கட்டுரைகள் இருக்கின்றன.இவற்றைவிட பல பத்திரிகைகள் உள்ளூரிலும், வெளியூரிலும் ஆதாரமாக உண்மையைக் கூறியிருக்கின்றன (இவற்றை விரிவாகப் பார்க்க http://www.madathuvaasal.com/2008_06_01_archive.html, http://somee.blogspot.com, http://www.kalachuvadu.com இணையத் தளங்களுக்குச் சென்று பார்க்கலாம்)

இப்போது எனது குறிப்புக்கு வருகிறேன்.பல தடவைகள் மிக உன்னிப்பாக கவனித்தே இக்குறிப்பு எழுதப்படுகிறது. காரணம் எமக்கு - தமிழர்களுக்கிருக்கும் ஒரே ஆவணம் தற்போது இதுதான். சம்பந்தப்பட்டவர்கள் பலரையும் சந்தித்து அவர்களிடமிருந்து நேரடிச் சாட்சியங்களைப் பெற்றிருப்பது மிகப் போற்றுதலுக்குரிய விடயமாகும். மிக அருமையாகப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களை ஆவணப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களுள் மிகமுக்கியமானவை

1. 31.1981 என ஆங்கிலத்தில் பதிவாகி இருக்கும் தடயத்தை மாற்றுதல். ஆணையாளர் திரு. சிவஞானம் விபரமாக ஜுன் 1 இரவு எனக் குறிப்பிடுகிறார்.

2. அடிக்கல் நாட்டப்பட்ட விடயம் வரும்போது 2 அடிக்கல் சம்பந்தமான கற்கள் அங்கே பதியப்பட்டுள்ளது. மொத்தம் 5. அவை பதியப்பட வேண்டும்.

3. பேட்டியில் அல்லது விளக்கமளிக்கும் சாட்சிகளாக நடந்த சம்பவங்களைச் சொல்பவர்கள் திகதி நேரம் என்பனவற்றைச் சொல்ல இடமளித்திருக்க வேண்டும். இருவருடைய செவ்வியில் இது இல்லை.

4. ஆவணப்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றதைக் குறிப்பிடும்போது அமிர்தலிங்கம் - எதிர்க்கட்சித் தலைவர் என்று இருக்கிறது. அவரது படம் காட்டப்படவில்லை. ஆவணப்படுத்தலில் முக்கியமானது குறிப்பிடப்படும் நபரை யாரென உறுதிசெய்யவேண்டும். இதற்கு ஒரு உதாரணமாக கடந்த ஒரு வாரத்தினுள் ஒரு செய்தியில் (தினக்குரல்) இரா. துரைரத்தினம் யார் - துரைரட்ணசிங்கம் எம்.பி யாரென தெரியாமல் படத்தைப் பிரசுரித்திருந்தது.

5. பத்திரிகைச் செய்திகள் தெளிவாக திகதி எந்தப் பத்திரிகை என்பவை விளங்கவில்லை. மங்கலாக உள்ளது.

இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்ட பின் 2009 may - June (சரியான திகதி தெரியவில்லை) இறுதிப்பகுதியில் நான் சோமிதரனுடன் தொடர்புகொண்டு இதனுடைய பிரதியைப் பெற முயற்சிசெய்தேன். முடியவில்லை. youtubeஇலிருந்து தரைவிறக்கம் செய்தே இந்த விபரங்களைப் பதிவிடுகிறேன்.இன்றுவரை அது என்கைகளுக்கு வரவில்லை. குறித்த ஆவணப்படத்தின் பிரதி கைக்குக் கிடைத்ததும் திருத்தங்கள் மேலும் இடப்படலாம்.


5. Wikipediya
- எவரும் தொகுக்கக்கூடிய கலைக்களஞ்சியம் என்ற மகுட வாசகத்தைக் கொண்ட விக்கிபீடியாவினையே தேடல்களுக்காக நான் முதலில் பயன்படுத்துகிறேன். 285 மொழிகளில் செயற்படும் பன்மொழி இணையக் களஞ்சியத்திலும் யாழ்ப்பாண நூலகம் பற்றிய தொகுப்பில் எரிக்கப்பட்டது மே 31 என்றே ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கிறது.

The burning of the Jaffna library (Tamil: யாழ் பொது நூலகம் எரிப்பு, Yāḻ potu nūlakam erippu) was an important event in the Sri Lankan civil war. An organized mob of Sinhalese origin went on a rampage on the nights of May 31 to June 1, 1981, burning the Jaffna public library. It was one of the most violent examples of ethnic biblioclasm of the 20th century.Term[›] At the time of its destruction, the library was one of the biggest in Asia, containing over 97,000 books and manuscripts.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.

No comments: