அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, June 5, 2013

ஆனி 5 - இலங்கைத் தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத சில சம்பவங்கள்!

Security was tightened when parliament considered watering down the Sinhala-only language law in 1956
ஈழத் தமிழர் வரலாற்றில் ஆனி 5 என்ற நாள் மறக்கமுடியாத சில வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டிருக்கிறது.

1956இல் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம்
1974 இல் பொன் சிவகுமாரனின் மறைவு
1998 இல் சின்னத்தம்பி நமசிவாயம் JP அவர்களின் மறைவு(த.வி.கூ. யாழ்ப்பாணக்கிளை உபதலைவர், வரத்தகர் சங்கத் தலைவர்)
2002 இல் தலைவர் சிவசிதம்பரம் அவர்களின் மறைவு
நாம் எமது வரலாறுகளை ஆவணப்படுத்தாமல் இருப்பதனால் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளைக்கூட மீள நினைவுபடுத்தாமல் தவறு இழைக்கின்றோம். வரலாறுகளை நினைவு கூருவதன்மூலமே எமது வருங்காலச் சந்ததியினருக்கு அவற்றை விட்டுச் செல்ல முடியும். கடந்த 1.6.2013ல் நூலகம் எரிக்கப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவடைந்த நாள். யாழ்ப்பாணத்தில் அதுகுறித்த ஒரு நிகழ்வும் இடம்பெறவில்லை. மாநகர சபைக் கூட்டத்தில் வேறெதுக்கோ எல்லாம் அடிபாடும் சண்டையும்தான் நடந்தது. நூலகத்தை நினைவுபடுத்த யாரும் இல்லை. நான் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்யப் போனால் அதற்கும் ஆணையாளரிடம் - முதல்வரிடம் அனுமதி பெற வேண்டியிருந்தமையால் அது நிறைவேறவில்லை.

No comments: