அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, September 15, 2009

சமயத்திற்காக.........பகுதி - 1.

1983 ஓகஸ்ட்டில் உயர்தரப் பரீட்சை எடுத்த பிறகு ஊரில் இருந்து பொதுவேலைகள் செய்த வேளையில் - சைவமஞ்சரி கையெழுத்துப்பிரதியை எழுதி இந்து இளைஞர் மன்ற நூலகத்தில் வைத்தோம். இதில் மாணவர்களுக்கான வினாவிடை மற்றும் குறுக்கெழுத்துப் போட்டிகளை நடத்தி மன்றத்தின் விழாக்களில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வந்தோம். இப்பணிகளில் என்னுடன் உதவியாயிருந்த சமய மன்ற அங்கத்தவர்களுக்கும், இளைஞர் மன்ற அங்கத்தவர்களுக்கும் எனது 25 ஆண்டுகள் கடந்த நிலையில் எனது நன்றிகளை நினைவுபடுத்தி தெரிவிக்கும்போது மனநிறைவு தானாக வருகிறது.

ஒரு சில முன் பக்கப் பிரதிகள் மாத்திரம் என்னிடம் இருக்கிறது - அதை இப்பதிவில் இணைத்துள்ளேன்.


No comments: