அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, November 21, 2009

சுவிசில் இன்று 3ஆம் நாளாகவும் ..... ஏதோ பேசுகிறார்கள்!....... என்னமோ நடக்குது!.......... நாமறியோம்!





பேசினார் ... பேசினார்கள் ......சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் இதுக்கொரு குறையுமில்லை!

ஜீ.ஜீ 50க்கு 50!
தந்தை செல்வா வடக்கு கிழக்கு இணைந்த மாநிலம்!

பேசினார் - பண்டாவுடன் - டட்லியுடன் - சிறிமாவோவின் அரசுடன்!

பின்னர் சர்வகட்சி மாநாடு - திம்பு - பூட்டான் -பெங்களுர் - நோர்வே ஒஸ்லோ -சுவிஸ்!


தமக்குள் பேசினார்கள் - வெவ்வேறு அரசுகளுடன் பேசினார்கள் - மத்தியஸ்த்துடன் பேசினார்கள்....












பேசியபிறகு தனித்தனியே சென்றார்கள் .... பிறகும் சேர்ந்து பேசினார்கள்....

மற்றவர்கள் பேசியதைக் கொச்சைபடுத்திவிட்டு தாம் மட்டும் ஏகப் பிரதிநிதிகள்!

தம்முடன் மட்டும் பேசவேண்டும் என்ற ஆணை! சரி - பேசினார்கள்!

பேசியவர்களை இன்று காணோம்!
பேசியவர்களைக் கொன்றும் தீர்த்தார்கள்! யார் யாரெனப் பட்டியல் போடத் தேவையில்லை!


இப்போது புதியதொரு திருப்பம்!

கண்கெட்ட பின்பு ....ஏதோ ஒரு நமஸ்காரம்!

அரை இலட்சம் மக்களுக்குமேல் மாண்டொழிந்து போன பின்னர்.....

3 இலட்சம் மக்களுக்குமேல் நாதியற்றுப் போனபின்னர்......

ஏனைய அனைவரும் இன்று பேச வருகிறார்கள்! என்னப்பா உலகம்! உருண்டைதானே! திரும்பி திரும்பி அதே சுற்றில்!

யோகர் சொன்னார் - சுத்திச் சுத்திச் சுப்பற்ற கொல்லை எண்டு!

ஏதெனும் கதைச்சு சனத்துக்கு ஒரு முடிவைச் சொல்லுங்கப்பா!
மேல இருக்கிறவன் ஒருநாளும் வரமாட்டான்! அவன் வருவதற்கு எத்தனையோ பேர் எத்தனையோ சொன்னாங்க!


அறம் செய விரும்பு!

இணக்கம் அறிந்து இணங்கு!

கூடிப் பிரியேல்

கொள்ளை விரும்பேல்!

போர்த் தொழில் புரியேல்!

மூர்க்கரோடு இணங்கேல்!

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்!

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்!

இன்னும் நிறையக் கிடக்கு எழுதிக் கொண்டே போகலாம்
எல்லாம் படிச்சு முடிக்க முதல் மழை வந்து அழிக்கப்போகுது!
அதுக்கு முதல் ஏதாவது செய்யலாமே!.........யோசிக்க கொஞ்சம் நேரம் வேணும்!

அது சரி இப்ப எங்க பேசீனம்! என்ன பேசீனம்! தெரியுமோ?
உவங்கள் சொல்லுற மாதிரி சூரிச்சில இல்லையாம்! எங்கேயோ கன்டோன் துர்க்காவாம்!
இதுவும் கோரமான வடிவம்போல இருக்கோ!
எங்கயோ டீசன்கோபனாம்!(Diessenhofen)

சுவிற்சர்லாந்தின் பிரசித்தி பெற்ற நதிகளில் ஒன்றான றைன்(Rhein) நதிக்கரை ஓரத்திலமைந்த எழில்கொஞ்சும் அமைதியான இடமொன்றில்!

விரிவான செய்திகளுக்கு!

http://www.tamilnewsnetwork.com/tamilnewsnetwork.com/post/2009/11/19/Tamil-Muslim-political-parties-find-their-table-in-Zurich.aspx

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=30642

http://srilankawatch.com/index.php?option=com_content&task=view&id=393&Itemid=2

http://www.lankatimes.com/fullstory.php?id=22940

http://beta.thehindu.com/news/international/article52467.ece

No comments: