அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, June 17, 2009

யாழ்ப்பாணத்து அரசர் சங்கிலிய மாமன்னர் பெருமானின் வம்சம் நெதர்லாந்தில் வாசம் - அவர்களது இணையத்தளம் தெரிவிக்கிறது! - எனக்கு இது ஒரு புதிய செய்தி


4 நாட்களுக்கு முன் கடந்த சனிக்கிழமை 13.06.2009இல் இச்சம்பவம் நடந்தது.

நான் அடிக்கடி எமது கட்சித் தலைவர்களைப் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு இருப்பேன்.


தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற காலத்தில் இரும்பு மனிதர் டாக்டர் இ.எம்.வி. நாகநாதன் அவர்களது சரித்திரத்தை சற்றுப் பார்வையிட எனது வழமையான தேடலில் நான் அதிகமாகப் பார்க்கும் விக்கிபேடியாவுக்குள் நுழைந்து தேடியபோது அவரது கட்டுரையின் இறுதியில்
References

Source: The Royal Family of Jaffna website,

http://www.jaffnaroyalfamily.org/elangai.php

என்று இருந்தது.


இதற்குள் போய்ப் பார்த்தபோதுதான் யாழ்ப்பாண அரசர் பரம்பரையின் வம்சம் இன்றும் வாழும் செய்தி எனக்குத் தெரிந்தது. உடனேயே அவர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினேன். மறுநாள் 14ந் திகதி லண்டனிலுள்ள திரு. மார்க் வத்சன் அவர்களுடன் பேசினேன். பின்னர் நெதர்லாந்தில் உள்ள ராசதானி நிலையத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அலுவலகர் ஒருவர் பேசினார். அரச குடும்பத்தினர் வெளியே சென்றிருப்பதாகவும் மாலையில் தொடர்பு கொள்ளும்படியும் சொன்னார். இது கடந்த 14 - ஞாயிறு நடைபெற்ற நிகழ்வு. சில வேலைப் பளு காரணமாக அன்று தொடர்புகொள்ள முடியாமல் போனது. நேற்று 16 செவ்வாய்க்கிழமை இரவு 9.19 மணியளவில் இளவரசர் மேன்மைதங்கிய ரெமிஜியஸ் ஜெரி கனகராஜா அவர்கள் என்னுடைய தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு என்னுடன் பேசினார். இது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவமாகும்.

No comments: