
4 நாட்களுக்கு முன் கடந்த சனிக்கிழமை 13.06.2009இல் இச்சம்பவம் நடந்தது.
நான் அடிக்கடி எமது கட்சித் தலைவர்களைப் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு இருப்பேன்.


தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற காலத்தில் இரும்பு மனிதர் டாக்டர் இ.எம்.வி. நாகநாதன் அவர்களது சரித்திரத்தை சற்றுப் பார்வையிட எனது வழமையான தேடலில் நான் அதிகமாகப் பார்க்கும் விக்கிபேடியாவுக்குள் நுழைந்து தேடியபோது அவரது கட்டுரையின் இறுதியில்
References
Source: The Royal Family of Jaffna website,
http://www.jaffnaroyalfamily.org/elangai.php
என்று இருந்தது.


இதற்குள் போய்ப் பார்த்தபோதுதான் யாழ்ப்பாண அரசர் பரம்பரையின் வம்சம் இன்றும் வாழும் செய்தி எனக்குத் தெரிந்தது. உடனேயே அவர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினேன். மறுநாள் 14ந் திகதி லண்டனிலுள்ள திரு. மார்க் வத்சன் அவர்களுடன் பேசினேன். பின்னர் நெதர்லாந்தில் உள்ள ராசதானி நிலையத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அலுவலகர் ஒருவர் பேசினார். அரச குடும்பத்தினர் வெளியே சென்றிருப்பதாகவும் மாலையில் தொடர்பு கொள்ளும்படியும் சொன்னார்.

No comments:
Post a Comment