அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, June 20, 2009

மண்மூடும் சுவடுகள் - இன்றைய உதயன் பத்திரிகைச் செய்தி!

புதர் மண்டிப் போயிருக்கும் நல்லூர் மந்திரி மனையின் புகைப்படத்துடன் இன்று உதயனில் வெளியாகிய கட்டுரையை இணைக்கின்றேன்.


இக்கட்டுரையைப் பார்த்தவுடன் நான் உதயன் பத்திரிகை நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு - பின் அதை எழுதிய திரு. ந. சத்தியபாலன் அவர்களுடனும் பேசிவிட்டுத்தான் இப்பதிவை எழுதுகிறேன்.

திருமதி சரோஜினி யோகேஸ்வரனின் அகால மறைவின்பின் பலர் கொலைமிரட்டல்களுக்கு அஞ்சி பதவிகளைத் துறந்தசமயத்தில், கொழும்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் சட்டத்தரணியுமான திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் முன்னிலையில் 22.06.1998இல் யாழ்ப்பாண மாநகர சபையின் நியமனஅங்கத்தவனாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டேன். திரு. நடராஜா இரவிராஜ்(பிரதி முதல்வராக), திரு. கதிர்காமர் சின்னத்துரை,திரு. சண்முகராஜா அரவிந்தன், திரு. எஸ். எஸ். கணேந்திரன் ஆகியோரும் அன்றே கொழும்பு அலுவலகத்தில் பதவிப் பிரமாணம் செய்தனர்.

18.09.2002இல் நடந்த மாநகர சபையின் கூட்டத்தில் நான் மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி என்பவைபற்றிப் பேசிய விடயங்களை தினக்குரல் பத்திரிகை பிரசுரித்ததையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்.


நன்றி - உதயன் மற்றும் தினக்குரல் பத்திரிகைகளுக்கு!

பல முக்கிய நினைவுகளும், கட்டுரைகளும், செய்திகளும் எனது பதிவில் வெளிவரும்.

என்றும் மறவாதவன்
தங்கு. முகுந்தன்.

No comments: