அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, October 15, 2008

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 10

குண்டுபட்டும் திடுக்கடைந்து குலுங்கிடாமல்
கொள்கைதரும் ராமஜெபம் ஒன்றே கூறி
கொண்டமன சாந்திநிலை குலைந்திடாமல்
கோணலுற்ற வாய்வெறுத்துக் குளறிடாமல்
அண்டைஅயல் துணைதேடி அலண்டிடாமல்
அமைதியுடன் பரமபதம் அடைந்தார்காந்தி
கண்டதுண்டோ கேட்டதுண்டோ கதைதானுண்டோ?

காடுமலை குகைகளிலே தவங்கள் செய்து
காலன்வர வஞ்சாத கதைகள் உண்டு
மேடைகளில் உயிர்கொடுப்பேன் என்று சொல்லும்
மெலுக்கான வாய்வீரர் வெகுபேருண்டு
நாடுகெடும் மதவெறியை மாற்றவேண்டி
குண்டுபட்டே நான்சாக வேண்டும்என்று
ஈடுசொல்லமுடியாத தியாகம் செய்ய
இப்படியார் காந்தியைப்போல் உயிரைஈந்தோர்.

No comments: