அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, October 4, 2008

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 3

புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாய் எண்ணி
காந்தியைப்போல் பொதுநோக்கும் பொறுமைவேண்டும்
மகிழ்ச்சியிலே மதிமயங்கித் தடுமாறாமல்
காந்தியைப்போல் மனசடக்கப் பயிலவேண்டும்
வெகுட்சிதனை வேரோடு களைந்து நீக்க
காந்தியைப்போல் விரதங்கள் பழகவேண்டும்
நிகழ்ச்சிகளைக் காந்தியைப்போல் நிறுத்துப் பார்த்து
நேர்மையுடன் குற்றமெல்லாம் நீக்க வேண்டும்.

வருகின்ற யாவர்க்கும் எளியனாக
காந்தியைப்போல் வரவேற்கும் வழக்கம்வேண்டும்
தருகின்ற சந்தேகம் எதுவானாலும்
காந்தியைப்போல் தணிவாகத் தர்க்கம்செய்து
திரிகின்ற மயக்கத்தைத் தீர்த்துவைத்து
திடமறிந்த வழிகாட்டும் தெளிவுவேண்டும்
புரிகின்ற புத்திமதி எதுசொன்னாலும்
புண்ணின்றிக் காந்தியைப்போல் புகட்டவேண்டும்.

No comments: